Saturday, January 19, 2008

எனக்கொரு தாய் இருக்கின்றாள்


"எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்" இது வெறும் திரைப்பட பாடல் வரியல்ல. என் அனுபவமும் கூட. நான் ஒரு ஜோதிடனாகவும் இருப்பதால் எந்த ஜன்மத்தில் செய்த ,எந்த பாவம் துரத்துகிறது என்று அறிந்து அந்த கர்மங்களை தொலைத்துவிடுமத்தனை அறிவை (ஆக்சுவலாக ஞானம் என்று சொல்ல வேண்டும்/அவையடக்கம் கருதி அறிவு என்றேன்) தந்தது யார் அவள் தான்.

மனிதனுக்கு செல்லுக்கு போட்டாலே அவன் லைனில் கிடைப்பது கஷ்டம்,கிடைத்தாலும் கேட்டதை கொடுப்பது அதைவிட கஷ்டம். ஆனால் என் அனுபவத்தில் தெய்வத்தை நம்பி முறையிட்டால் நிச்சயம் அது நிறைவேறுகிறது. தெய்வம் நம் பேச்சை கேட்கிறது, நம்மோடு பேசுகிறது. அதனுடன் பேச வேண்டிய மொழிதான் வேறு, அது பேசும் மொழியும் வேறுதான்.


ஓம் சக்தி