Monday, January 28, 2008

கோலியாத்துகளும் தாவீதாகிய நானும்

எனக்கென்று எதிரிகள் எவருமில்லை. எவன் மனைவியோடும் எனக்கு தொடர்பில்லை. என் மனைவிக்கு என்னை சமாளிப்பதே (பேச்சை சொல்றேங்க) பெரும்பாடாகி ஆண்கள் என்றாலே இப்படித்தானிருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்து விட்டிருப்பாள். பெண்கள் என்றால் இப்படித்தானிருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்து விட்ட நானோ, என் மனைவியோ வேலி தாண்டும் வாய்ப்பே இல்லை. எனவே தான் சொல்கிறேன். எவனோடும் எனக்கு தனிப்பட்ட விரோதம் கிடையாது. ஆனால் மக்களை அநாவசியமாக,அகாரணமாய்,சுரண்டி ,அவர்களது உயிர்,உணவு,உடை, இருப்பிடங்களை கூட பறித்து ஆட்டம் போடும் நர ரூப அரக்கர்களை கண்டால் மட்டும் என்னுள் விரோத பாவம் எகிறுகிறது. இதை விரோத பாவம் என்று கூட சொல்ல முடியாது ஒரு வித இர்ரிடேஷன். இதனால் மக்கள் விரோதிகளை என் விரோதிகளாக எண்ணி கொதிக்கிறேன்.

என் விரோதிகள் எல்லாம் ரொம்ப பெரிய மனிதர்கள். கன்ஷி ராம் சொன்னது போல் மணி,மீடியா,மாஃபியா பலம் கொண்டவர்கள்.

நான் சோற்றுக்கே அல்லாடும் பிழைக்க தெரியாதவன். என்றோ காலாவதியாகிப் போன தரும நியாயங்களை நம்பி அவர்களுடன் போராடி வருகிறேன். தம்ம பதா சொல்வது போல் கு.ப. அவர்களுடன் கூட்டுறவை, அவர்களை அங்கீகரிப்பதை தவிர்த்து வருகிறேன்.

என் படைப்புகள் யாவுக்கும் இந்த உணர்ச்சிதான் அடிப்படை. என்னதான் பலவீனனாய் இருந்தாலும் என் மக்களுக்காக , அவர்கள் என் பேச்சை,என் எழுத்தை செவிமடுக்க வேண்டும் என்ற ஒரேகாரணத்துக்காக லைம் லைட்டின் கீழ் வர நான் செய்யும் முயற்சிகள் சமீப காலமாய் ரொம்பவே சூடு பிடித்ததோடு,வெற்றியும் கண்டுவருவதை கூறத்தான் வேண்டும்.

ஒரே நாளில் இரண்டு கோணங்களில் என்னை நான் மக்களிடை கொண்டு செல்ல முயன்ற நாள் ஜனவரி 26. என் மக‌ள் பொறுப்பேற்று நடத்தி வரும் இண்டியன் பொலிடிகல் க்ளோசப் மாதமிருமுறை இதழில் சித்தூர்.முன்னாள் எம்.எல்.ஏ.சி.கே.பாபுவுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள் தெரிவித்து அவர‌து ஆதரவாளர்கள் கொடுத்த விளம்பரங்கள் பிரசுரமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இத‌ற்கு அடியேன் தான் எடிட்ட‌ன்.


அடுத்து அதே தின‌ம் நான் எழுதி சித்தூர்.ப‌ஜார் தெருவில் உள்ள‌ ஸ்ரீ கிருஷ்ணா ஜ்வெல்ல‌ர்ஸ் வெளியிட்ட‌ மினி ஜோதிட‌ பூமியின் 3000 பிர‌திக‌ள் நாளித‌ழ்க‌ள் மூல‌ம் ம‌க்க‌ளை சென்ற‌டைந்துள்ள‌ன‌. வ‌ர‌வேற்பும் ப‌ல‌மாக‌வே இருந்த‌து. இது தொட‌ர‌ வேண்டும் என்று வாழ்த்துங்க‌ள். என‌து ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌ம் ஆள்வோர் பார்வைக்கு செல்ல‌ வேண்டுமானால் இது போன்ற‌ கிம்மிக்குக‌ள் தேவைதான் என்ப‌து என் முடிவான‌ முடிவு.

இவையாவும் ம‌க்க‌ள் விரோதிக‌ளான‌ கோலியாத்துக‌ளின் மீது க‌ல்லெறிய‌ நான் த‌யாரிக்கும் க‌வ‌ண்க‌ள்.