Saturday, March 13, 2010

நித்யானந்தாவுக்கு மர்ம சாவு நிச்சயம்


17/3/2010 தேதியிட்ட தேவி வார இதழ்ல ஸ்வாமி நித்யானந்தாவின் பிறந்த தேதி இத்யாதிய பார்த்து ஆஸ்ட்ரோ லோகாடாட்.காம் உபயத்துல கிடைச்ச சாஃப்ட் வேரை யூஸ் பண்ணி ஜாதகம் கணிச்சித்தான் சொல்றேன் "நித்யானந்தாவுக்கு மர்ம சாவு நிச்சயம்
" ஏன்? எப்போ? எப்படி? இந்த கேள்விக்கெல்லாம் பதிலா இந்த பதிவை போடறேன். அதுக்கு முன்னாடி இங்கே அழுத்தி உனக்கு 32 எனக்கு 22 தொடரோட லேட்டஸ்ட் அத்யாயத்தயும் படிச்சுருங்கண்ணா. ( சப் டைட்டில் 32க்கும், 22க்கும் முதலிரவு )

நம்ம குஜிலி சாமியார் பிறந்ததும் ஜாதகம் கணிக்க சொன்னாங்களாம். அதை கணிச்ச குடும்ப ஜோசியர் சொன்னதாக தேவி பிரசுரிச்சிருக்கிற விவரம் கீழே:

"நட்சத்திரங்களும் கோள்களும் வழக்கமற்று வித்யாசமாகவும், தனித்துவம் வாய்ந்ததாகவும் அமைந்திருக்கிறது. இது போன்ற ஜாதகம் அமைந்திருப்பதை முதல் முறையாக இப்போதுதான் பார்க்கின்றேன்"

என் கருத்து:
சனி தான் ஒரே ராசில ரொம்ப நாள் தங்கற கிரகம் (ரெண்டரை வருசம்)அவர் கூட 30 வருடத்துக்கொருதரம் தானிருந்த அதே ராசிக்கு வந்துர்ரார். மத்த கிரகமெல்லாம் சனியை விட குறைவான காலம் தான் அதே ராசில இருப்பாய்ங்க. (ராகு கேது ஒன்னரை வருசம்,குரு 1 வருசம், செவ்வாய் ஒன்னரை மாசம் இப்படி) ஆக முப்பது வருசத்துக்கொருதரம் அதே கிரக நிலை வர வாய்ப்பிருக்கு . இது ஒரு பாயிண்டுன்னா இந்தியாவுல (மட்டும்) நிமிஷத்துக்கு 4 குழந்தை பிறக்குது. 120 நிமிசத்துக்கு (சுமார்) ஒரே லக்னம் தான்,ஒரே ஜாதகம்தான் . ஆக 120 x4 =480 குழந்தை ஒரே லக்னத்துல ஒரே ஜாதகத்துல பிறக்குது அப்புறம் என்னா மயிருக்கு அந்த ஜோசியர் இந்த டயலாக் அடிச்சாரோ புரியல.

(பகுத்தறிவாளர்கள் ஜோதிடர்களை குடைய அருமையான கேள்வி இது 120 x4 =480 குழந்தை ஒரே லக்னத்துல ஒரே ஜாதகத்துல பிறக்குது.ஆனால் அதுல ஒரே ஒரு ஜாதகர்தான் சூப்பர் ஸ்டாராகிறார். மத்த 479 பேர் என்ன ஆனாங்கன்னு கேளுங்கய்யா.. என்னை கேட்டா பதில் சொல்ல நான் தயார்)

"இந்த குழந்தை பிற்காலத்தில் ஒரு ராஜ சன்னியாசி ஆகிவிடுவார்"

"இந்த ஜாதகத்தை கணித்ததற்கு நான் மிகுந்த ஆசீர்வதிக்கப்பட்டிருக்கவேண்டும். இந்த ஜோதிட துறையில் தனியாக,புதிதாக இனி நான் அடைய வேண்டியது என்று ஒன்றுமில்லை. இதன் பின் நான் வேறு எந்த ஜாதகத்தையும் பார்க்கப்போவதில்லை"

உண்மையிலயே மேற்படி கு.ஜோ. ஜாதகம் பார்க்கிறத நிறுத்திட்டாராம்.

இந்த ஜல் ஜக் கட்டுரைய வெளியிட்டிருக்கிற தேவி அநியாயத்துக்கு நித்யானந்தாவுக்கு வக்காலத்து வாங்கியிருக்கு.

( ஆனா பாருங்க ரெண்டு பெட்டி செய்தில பத்திரிகை தர்மத்தையும் பின்பற்றியிருக்கு. வாழ்க! வளர்க!! ஒரே வருத்தம் என்னடான்னா மேற்படி ஜல் ஜக் கட்டுரை கீழே ADVTன்னு பொடி எழுத்துலபோட்டிருக்கலாம். இல்லே எழுதினவரோட பேரை போட்டு அந்த காலத்து இதயம் பேசுகிறது ஸ்டைல்ல .............கருத்து நம் கருத்தல்லன்னு போட்டிருக்கலாம். அட தெலுங்கு பத்திரிக்கைங்க மாதிரி ஸ்பான்ஸர்ட் ஃபீச்சர்னு போட்டு தொலைச்சிருக்கலாம். பாவம் அவிகளுக்கு என்ன ஒரு இக்கட்டோ)

வெளியான வில்லங்க வீடியோவுல இருக்கிறது டூப்ளிக்கேட் நித்யானு சொல்லி, ஏற்கெனவே வயிறெரிஞ்சி கிடக்கிற நித்யாவோட அப்பாவ இன்னம் கொஞ்சம் வயிறெரிய வச்சிருக்காங்க.

எனக்கு புரியாத சில விஷயங்களை சொல்ட்டு ஜாதக பலனுக்கு வந்துர்ரண்ணா..

1.சிலர் என்ன மேற்படி கும்தலக்கடி ஆட்டம் போட்ட சாமியாரே ரஞ்சிதாவோட நான் அஜால் குஜாலா இருந்தது என்னோட பர்சனல் இஷ்யூங்கறாரு. இது சரிதானா?
என் பதில்:
கண்ணா! நீ பப்ளிக் ஃபிகர் . உன் வாழ்க்கைல பர்சனல்ங்கறதே கிடையாது. நீ சம்சாரியா இருந்து உன் பெண்டாட்டியோட படுத்துக்கிட்டா அது உன் பர்சனல் மேட்டர். . மச்சினியோட படுத்துக்கிட்டா..

நீ ஆரஞ்சு துணியயோ, வெள்ளை துணியையோ , பச்சைத்துணியயோ தனிதனியா கோவணமா கட்டிக்கிட்டா அது உன் பர்சனல் . மூனு கலரையும் சேர்த்து கட்டிக்கிட்டா லாடம் கட்டிருவாங்க.

நீ தனிமனிதனா இருந்திருந்தா ஓகே
சரி வெளிச்சத்துக்கு வராத சன்னியாசா இருந்திருந்தாலும் ஓகே
அட அதுவும் ஒழிஞ்சு போவட்டும் உன் உபதேசங்கள் ஓஷோ கணக்கா இருந்திருந்தாலும் சரி சாமி சொல்றதத்தான் செய்தாருனு விட்டிருக்கலாம்.

நீ பிரபலன். காவி கட்டின சன்னியாசி. புலனடக்கத்தை உபதேசிச்ச பரம ஹம்சன். இந்த மூனு பாயிண்டும் சேர்ந்துதான் நீ மூனு கலர்ல கோவணம் கட்டிக்கிட்ட கதையா பத்தி எரியுது.

2.சாமியோட அஜால் குஜால் வேலைகளை வீடியோ எடுத்து வெளியிட்டவுங்களுக்கு ஏதோ ஹிடன் அஜெண்டா இருந்தது.
அடங்கொக்கா மக்கா! அஜெண்டா இருந்ததா முண்டா பனியன் இருந்ததாங்கறதெல்லாம் எங்களுக்கு தேவையில்லாத விஷயம், நீ ஏன் நைனா அந்த கலீஜு வேலை செய்தே.. நாங்க மட்டும் நீ சொல்றத வாய்ல விரல் போட்டு கேட்டுக்கிட்டு ஈர கோவணத்த இழுத்துக்கட்டிக்கிட்டு மன நோயாளிகளாகி மறுபடி மறுபடி உங்கள மாதிரி டுபாக்கூர் சாமிங்க கிட்டே தொங்கனும். நீ மட்டும் க்ளையண்டுகளுக்கு ஃபிசியோ தெரஃபி கொடுப்பே

3.அவிக எல்லாம் ஆய் பசங்க.
ஒரு காலத்துல கார்ப்பரேசன் குழாய்கள்ள தண்ணீ வரும்.அங்கே ரெண்டு லோலாயி நடுவுல தகராறு வந்துட்டா இப்படித்தான் பேசுவாக

4.சாமிக்கு மஸ்தா சத்ராதிங்க இருந்தாங்க இது அவிக சதி.
அட காண்டு ! உனக்கு சத்ராதிங்க இருக்கிறப்பயே நீ இந்தா மாதிரி குஷி பண்ணியிருக்கே அவிகளும் இல்லன்னா இன்னம் என்னெல்லாம் பண்ணியிருப்பே

சரிங்கண்ணா நம்ம நித்யா ஜாதகத்தை ஒரு ஓட்டு ஓட்டிருவம். அதை ஒரு ஜோசியர் பார்த்ததாவும், நெக்குருகி போய் ஜாதகம் பார்க்கிறதயே விட்டுட்டதாவும் தேவி வார இதழ்ல சொல்லியிருக்காங்க. எனக்கு தெரிஞ்சு அது கப்ஸாவாதான் இருக்கனும். ஏண்டான்னா நித்யா ஜாதகம் டுபாக்கூர் ஜாதகம், ஃப்ராடு ஜாதகம், ஊரை ஏமாத்தற ஜாதகம்னு சொல்ல பெரிஸ்ஸா ஒன்னும் பாண்டித்யம் கூட தேவையில்லை.

இப்ப ஜாதகத்துல கிரக நிலைய பார்ப்போம்:
கன்னிராசி,கன்னி லக்னம். இது ராசி சக்கரத்துல 6 ஆவது ராசிங்கறதால (மத்த கிரக அமைப்பு எப்படி இருந்தாலும் சரி ) இவிக வாழ் நாள் முழுக்க சத்ரு,ரோகம்,ருண வாதைகளோட தான் வாழ்ந்து சாகனும். நம்ம நித்யா ஜாதகத்துல மாந்தியும் குளிகனும் லக்னத்துலயே கூடாரம் அடிச்சி உட்கார்ந்திருக்காங்க. இவிகளும் சனி,ராகு எட்ஸெட்ரா மாதிரி பாவ கிரகங்கள் தான். 3,6,10,11 தவிர எந்த ராசில உட்கார்ந்தா அந்த ராசி காலி. கேரளாவுல சூனியம் வைக்கனும்னா இவிக எந்த ராசில இருக்காங்க, அது உடம்புல எந்த பார்ட்டை காட்டுதுன்னு பார்த்து சூனியம் வைப்பாங்களாம்.

சாமிக்கு யாரும் சூனியம் வைக்க தாவலை. அவருக்கு அவரே வச்சுக்குவார். லக்னம்ங்கறது ஜாதகனை காட்டற இடம். லக்னம் ராசி ஒன்றேயானதால சந்திரன் லக்னத்துலயே உட்கார்ந்தார்.இதனால இந்த ஜாதகர் மேல சந்திர ஆதிக்கம் அதிகமாகுது. சந்திரன் மனோகாரகன். கற்பனைகளை சிறகடிச்சு பறக்க வைப்பவர். இவருக்கு 27 மனைவிகள்னு சொன்னது ஒரு உருவகம். சந்திர ஆதிக்கம் கொண்டவர்கள் அடிக்கடி சோடி மாத்திருவாங்கங்கறது இதுக்கு உண்மையான அர்த்தம்.

லக்னாதிபதியான புதன் மாரக ஸ்தானமான 3 ஆவது பாவத்துல உட்கார்ந்தார்.இவருக்கு ஜீவனாதிபத்யமும் அமைஞ்சதால தான் சாமி லாட்ஜு வைத்தியர் மாதிரி ஊர் ஊரா சுத்திக்கிட்டு கிடந்தார்.

லக்னத்துக்கு 4 ஆவது இடத்துல சுக்கிரன், சூரியன் சேர்ந்திருக்காங்க. நாலுங்கறது வீட்டை காட்டற இடம்,. வீடு ஓய்வெடுக்கிற இடம். இங்கே உலகத்தையே எழுப்பிவிடற சூரியன் உட்கார்ந்ததால சாமியார் ஓய்வு நேரத்துல கூட "விழிப்பா" வேலை பார்த்திருக்கார். சூரியனுக்கு விரயாதிபத்யம் இருக்கு. விரய பாவம் தான் உடலுறவை காட்டற பாவம். சுக்கிரன் சிற்றின்பத்துக்கு காரகர். இந்த இரண்டு பேரும் சேர்ந்து 4 ல உட்கார்ந்ததால சாமி ஆசாமியாகிட்டார்.


முக்கியமான விஷயம் என்னடான்னா ராகு லக்னத்துலயும்,கேது ஏழிலயும் நின்னு ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கறாங்க. சாதாரணமா இந்த கிரக அமைப்புல பிறக்கறவங்க ஒன்னு ஒல்லி பீச்சானா நாக்கு பூச்சி மாதிரி இருப்பாங்க. இல்லன்னா ஊளை சதையோட இருப்பாங்க. நம்ம நித்யாவோட சின்ன வயசு படங்களை பாருங்க அப்டியே கொத்தவரங்கா மாதிரிதான் இருப்பார். அப்புறம் பாதாம் ,பிஸ்தானு சாப்பிட்டு உடம்பை ச்சுமாரா தேத்திட்டாரு போல. இந்த சர்ப்பதோஷம் பத்தி ஒரு ஆராய்ச்சி கட்டுரையே நம்ம ப்ளாக்ல இருக்கு தேடி பிடிங்க..படிங்க.

ராகுவுக்கு முக்கியமான காரகத்துவம் என்னடான்னா பச்சையா சொன்னா ஃப்ராட் பண்றது. ஒரு விஷயத்தை பத்தி ஒன்னுமே தெரியாத பெரிய பிடுங்கி மாதிரி ரீல் விட்டு எதிராளிய கவுக்கறது.

அறிமுகமில்லாத, சந்தேகாஸ்பதமான நபர்களுடன் கூட்டு வியாபாரம், இதர மதத்தவர், இதர மொழியினர், லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி ,வெளி நாடுகளுடன் தொடர்பு, இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலைவிஷ பூச்சிகள், மெடிக்கல் ரியாக்ஷன், ஃபுட் பாய்சன், அன் வாரண்டட் மோஷன் , சதா வாமிட்டிங்க் சென்ஸேஷன், உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள், உடலுறவில் விந்து ஸ்கலிதமான பிறகும் சோடியை பிரியாது படுத்துக்கிடக்கவேண்டும் என்ற எண்ணம், சதி, இப்படி ராகுவுக்குரிய காரகத்வம் இன்னும் நிறைய இருக்கு

ராகு ஜாதகத்துல நல்ல இடத்துல இருந்தா இத்தனை இழவுலயிருந்தும் ரிலீஃப் கிடைக்கும். லாபமும் நடக்கும். ஆனால் பாருங்க நம்ம நித்யாவிஷயத்துல ராகு,கேது சர்ப்பதோஷத்தை தரக்கூடிய நிலையில் இருக்கிறதால மேற்சொன்ன விஷயங்கள் எல்லாமே ஆப்பு வைக்கிறதாவே இருக்கும். ஆனால் எவனொருத்தன் எந்த ஃபீல்டுல நாயடி படனும்னு இருக்கோ அவனுக்கு அந்த ஃபீல்டில லாஜிக்கே இல்லாத பேராதரவு கிடைக்கும். ரெண்டு வருசத்துல, ரெண்டு படத்துல காணாம போற கேஸுக்கெல்லாம் ஆரம்பத்துல ஓகோன்னு நடக்க இதான் காரணம்.

சன்னியாசிகளை ,தியானம், யோகம்,தத்துவம், வேதாந்தம் மாதிரி விஷயங்களை எல்லாம் காட்டற கிரகம் கேது. இவரு 7 ல உட்கார்ந்து, லக்னத்தை பார்ததால ஆரம்பத்துல சன்னியாசிகளோட தொடர்பு ஏற்பட்டிருக்கு. மனோகாரகனான சந்திரன் லக்னத்துல சூரியனோட ஒளிய வாங்கி பிரகாசிக்கிற சந்திரன் மாதிரி லேசா வெளிச்சம் வந்திருக்கும். ஆனால் கூடவே இருக்கிற ராகுன்னா என்ன? ஜஸ்ட் நிழல் வெளிச்சத்தை நிழல் மூடிருச்சுங்கண்ணா..

இதுவே ஒரு ஜாதகத்தை ஒழிச்சு கட்ட போதும் . இதில்லாம குரு பத்துல இருக்காரு. ராசிபலன் புஸ்தவம் படிக்கிறவங்க கூட சொல்லிருவாங்க. பத்தில் குருவந்தால் பதவி பறிபோகும். 8/11க்கு அதிபதியான செவ்வாய் 11ல நின்னதால செவ்வாய் காரகத்துவம் வகிக்கிற போலீஸ் டிப்பார்ட்மென்ட்டால ஆப்பு நிச்சயம். டின் கட்ட போறாங்க.

இந்த ஜாதகத்துல இத்தனை மைனஸ் பாயிண்ட் இருந்தாலும் இவர் ..........எப்படி பெட்ரோலா எரிஞ்சதுன்னு பார்த்தா 5/6 க்கு அதிபதியான சனி 12ல இருக்கார்.(சனி நீச கிரகம். 12ங்கறது பலான வேலைகளை காட்டற இடம் கூட்டிகழிச்சு பலன் சொல்லுங்கண்ணா) 5ங்கறது புத்திய காட்டற இடம். அந்த இடத்துக்கதிபதி விரயத்துல உட்கார்ந்தா என்னாகும்? புத்தியெல்லாம் பலான சமாச்சாரமே நிறைஞ்சுரும்.

மனிதனுக்கு முன்னேற்றத்தை தர்ரது பலான எண்ணம் தான். ஸ்கூல் டேஸ்ல எல்லா பையனும் நல்லா படிக்கிறான். ஏன்னா பொண்ணுங்கல்லாம் நல்லா படிக்கிற பையனைதான் விரும்பும். டீன் ஏஜ் வரும்போது நிறைய பேர் தடுமார்ரான். ஏன்னா அப்ப பொண்ணுங்க டூவீலர் வச்சிருக்கானா, ஐநூறு,ஆயிரம்னு வேட்டு விடறானான்னு மாத்திரமே பார்க்குதுங்க

எல்லாரும் வீடு கட்ட துடிக்கிறான். எதுக்கு? கண்ட நேரத்துல கட்டிக்கிட்டு படுத்துக்கலாம்னுதான். பணம்,அதிகாரம்,கல்வி எதை பெறவும் தூண்டுகோலா இருக்கிறது செக்ஸ்தான்.

இன்னைக்கு எல்லாப்பயலும் தலையால தண்ணிகுடிச்சு,லஞ்சம் வாங்கி ,திருடி,ஏமாத்தி , ஏன் கூட்டிக்கொடுத்து கூட பணம் சம்பாதிக்கிறான். ஏன்? ஆண்மை நிறைஞ்சவன் கட்டாந்தரை உடலுறவை கூட சொர்கமாக்கிர்ரான். இன்னைக்கு அந்த கெப்பாசிட்டி இல்லாததால டபுள் காட், ஏ.சி, குர்ல் ஆன் மெத்தை எல்லாம் தேவைப்படுது. நிறைய பொம்பள தாளி எப்படியும் உன்னால "அதான்" முடியல இதையாச்சும் கொண்டான்னிட்டு இந்த பணம் எப்படி வந்ததுன்னு கேள்வியே கேட்கிறதில்லை.

நம்ம நித்யா லைஃப்ல நடந்தது கூட இதான். பார்ட்டிக்கு புத்தி பூரா சாந்தி முகூர்த்தமே இருந்ததால எதை செய்தா நமக்கு சாந்தி முகூர்த்தம் நடக்கும்னு பார்ட்டி தவிச்சிருக்கும். சாந்தி சாந்தின்னு கலர்ல படம் காட்டினாதான் இது சாத்தியம்னு சப்கான்ஷியஸ்ல பதிவாயிட்டிருக்கும்.

எண்ணம் போல் மனம், மனம் போல் வாழ்வுன்னு தூள் கிளப்பிட்டார். ராசியா கன்னி. கோசாரத்துல 2009 செப்டம்பர் 16 ஆம் தேதி சனி கன்னிக்கு வந்து சேர்ந்தார். அதுக்கு முன்னாடி ஏறக்குறைய 3 வருசம் விரயத்துல இருந்தார். ( இவர் பிறந்தப்போ இருந்த அதே ஸ்தானம்) அந்த 3 வருசத்துல புத்தி மொத்தமும் பலான சமாச்சாரம் நிறைஞ்சி போக வேலைக்காரி, கால் போனவ, கை போனவன்னு குருட்டு கோழிகளை கூட குர்மா வச்சி சாப்பிட்டுருப்பார்.மேற்படி விரய சனி ஜன்மத்துக்கு வந்ததும் (அவர் நண்பர்களை காட்டற 7 ஆவது இடத்தை பார்ப்பார்) கூட்டு களவாணிக மத்தில தகராறு வந்திருக்கும். கோசார குருவா சத்ரு,ரோக ருண ஸ்தானத்துல நிக்கிறார்.

வெறுமனே கோசாரப்படி பார்த்தா கூட மே க்குள்ள நம்ம நித்யா களி சாப்பிடறது சத்தியம். அதுக்கப்புறம் கோசார குரு 7க்கு வராரே வெளிய வந்துருவாரான்னு கேட்கறிங்க.. அது தசா புக்திகளை பொருத்து சொல்லவேண்டிய விஷயம். அதையும் ஒரு ஓட்டு ஓட்டிருவம்

31/Jul/1978 30/Jul/1988 இது ஸ்வாமிகளுக்கு (?) சந்திர தசை நடந்த காலம்.
30/Jul/1988 30/Jul/1995 இங்கே செவ்வாய் தசை.
30/Jul/1995 29/Jul/2013 இது ராகுதசை நடந்த காலம். ராகுதசை மொத்தம் 18 . இந்த தசை ரெண்டு விதமா பலன் தரும். முதல் பாதி அதாவது 9 வருசம் தூக்குச்சின்னா அடுத்த 9 டப்பா டான்ஸ் ஆடிரும். நம்ம சாமி வண்டவாளம் தண்டவாளம் ஏற ஆரம்பிச்சது 2004 ஜூலை 30க்கப்புறம்மா இருக்கும். அங்கே யிருந்து பரமபதத்துல பாம்பு வாய்ல விழுந்த கதைதான்.

16/Feb/2007 முதல் பார்ட்டிக்கு ராகு தசைல சிற்றின்பங்கள் மீது ஆர்வத்த தூண்டக்கூடிய சுக்கிரனுடைய புக்தி ஆரம்பமாகி 16/Feb/2010 வரை நடந்தது. சுக்கிரன் பலான விஷயங்களுக்கு காரக்த்துவம் வகிக்கிற விரயாதிபதியோட சேர்ந்து ஓய்வை காட்டற 4 ஆவது இடத்துல உட்கார்ந்ததால ஓய்வு நேரத்துல சாமி ஆசாமியாகி ஆட்டம் போட்டார்.

இப்போ 16/Feb/2010 முதல் சூரிய புக்தி ஆரம்பமாச்சு.கன்னியா லக்னத்துக்கு சூரியன் பலான விஷயங்களுக்கு காரக்த்துவம் வகிக்கிற விரயாதிபதி, சிற்றின்ப காரகனான சுக்கிரனுடன் சேர்ந்து இருக்கார்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.

சாதாரணமாவே சுக்கிரதசை,சுக்கிர புக்திவரும் போது மனிதன் சிற்றின்பத்தில் மூழ்கிவிடுகிறான். அதை யடுத்து வரும் சூரிய தசை அல்லது சூரிய புக்தி ஜாதகன் கண்டு கொண்டிருந்த சிருங்கார கனவிலிருந்து தட்டி எழுப்ப ஒரு ஷாக் கொடுக்கிறது. ஏனென்றால் சூரியன் ஆத்மகாரகன் என்பதே.
ஏற்கெனவே சொல்லியிருக்கேன் சூரியன் உலகத்தை தட்டி எழுப்பறவன்னு. ஸோ சூரியதசை நடக்கிற 12/Jan/2011 வரை ஸ்வாமிகள் தூங்கவே முடியாது. ராஜ கிரகமான சூரியன் மற்றொரு ராஜ கிரகமான (பத்தில் இருந்து பதவியை பறித்த) குருவை பார்க்கிறார். அதனால கவர்மெட்டு சாப்பாடு கியாரண்டி. இந்த சூரிய புக்திலயே சப் பீரியட்ஸ் வரும் . அதை அந்தரங்கள்னு சொல்வோம்.தசா நாதனான ராகுவுக்கு கடும் பகை கிரகமான சூரியனுடியய புக்தில சூரியனுக்கு கடும் தோஷத்தை தரக்கூடிய ராகு, கேது அந்தரங்களில் சதி காரணமாக சந்தேகாஸ்பத மரணம், அல்லது விஷ பிரயோகம், தலைமறைவாவது. பாம்பு இத்யாதி விஷ ஜந்துக்கள் கடித்து சாவது, வெளி நாட்டில் மர்மமான முறையில் சாவது, ஃபுட் பாய்சனிங்க் அ மெடிக்கல் ரியாக்ஷனில் சாவது கூட நடக்கலாம். இதே பதிவில் நான் குறிப்பிட்டுள்ள ராகு,கேது காரகத்வம் வகிக்கும் அம்சங்களில் ஏதேனும் ஒரு வகையில் மரணம் அ தலைமறைவாவது உறுதி. (தலை மறைவானாலும் எங்க சப்ஜெக்ட் படி அவன் பூட்ட கணக்குதான் தலை)
பி.கு: தேவியில் கொடுத்திருந்த பிறப்பு விவரங்கள் சரியென்றால் நான் கணித்த ஜாதகமும், இப்பதிவில் கொடுத்துள்ள பலன் களும் சரியே. இந்த பலன் நடப்பது உறுதி. அப்படி நடக்கும்போது அன்னிக்கே சொன்னேனேன்னு அலட்ட மாட்டேன். கடியாரம் கட்டியிருக்கறவன் நேரத்த கரெக்டா சொன்னா அது அவன் திறமையில்லை . கடிகாரத்த கண்டு பிடிச்சவன் திறமை. அதே மாதிரி ஒருத்தன் எதிர்காலத்த கணிச்சி சொல்லி அது கரெக்டா நடந்தா அது அவன் திறமையில்லிங்கோ.. ஜோதிஷ்ய சாஸ்திரத்த வடிவமைச்ச ரிஷிகள் ,மகரிஷிகளோட திறமை.

ஓகே உடு ஜூட்.