Wednesday, March 17, 2010

உனக்கு 22 எனக்கு 32 தொடர்கதை

மெட்ராஸ் போய் சேர ராத்திரி எட்டாயிருச்சு. ஸ்ரீதர் எங்களை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார்.

"வாப்பா முகேஷ்! வாங்கம்மா வணக்கம்..கல்யாண சேதியே தெரியாது..பி.ஆர் இங்கயே இருப்பான் . கடைய பார்த்துப்பான். திடீர்னு அவன் கூப்டான் போயிருந்தா ஒரு லட்சம் பண்ணியிருப்பேன். அம்பாதாயிரம் கிடைச்சிருக்கும்னு புலம்புவான். எல்லாம் நெம்பர் டூ பிசினஸ்தான். அராக்,சேண்டல் இப்படி ஒன்னில்லை. ஆனா பட்டுனு ஒரு பத்தாயிரம் கைக்கு வந்தபாடா இல்லை. நீங்க இருந்திங்கனு வைங்க. அவிகள விட்டுட்டு போக வேண்டியதுதானேனு கேட்கலாமில்லையா.. அதுக்குதான் வரச்சொன்னேன்"னாரு

பி.ஆரும் "ஆமா இவனை மாதிரி அன்னாடங்காச்சி கணக்கா இந்த கவுச்சி வாசனைல விழுந்து கிடந்தா அவ்ளாதான். நானும் ரெண்டு பொண்ணுகளை பெத்துவச்சிருக்கேன்ல ..ஏதாச்சும் துணிஞ்சி பண்ணாதான் வேலைக்காகும்"னு விட்டுக்கொடுக்காம பேசினார்.

ரெஃப்ரஷ் ஆகி ஹோட்டல் குரு போய் லைட்டா டிஃபன் சாப்பிட்டோம். திரும்பி வரப்ப   ஸ்ரீதர் "என்னப்பா இன்னம் புதுமாப்பிள்ளையா.. பழசாயிட்டயா கொஞ்ச நேரம் கீழே பேசவாச்சும் டைம் இருக்குமா ? மாடிக்கு ஓடனுமா?"ன்னார். நான், "ஒருபத்து நிமிசம் டைம் கொடுத்தா உடனே வந்துர்ரன்"னேன்.

"என்ன தம்மா.. அதேதோ கீழேயே போடேன். கவுச்சி நாத்தமாச்சும் குறையும்"னாரு

"..அப்படியில்லை நீங்க எங்கண்ணன் ஃப்ரெண்டு" னு நான் தயங்க.." அட போப்பா ! உன் அண்ணனை பார்த்து பத்து வருஷம் ஆகுது. ஆமா எங்க இருக்கான்னு கேட்டுக்கிட்டே சிகரட் பேக்கட்டை எடுத்து நீட்டினார். நான் ஒன்ன எடுத்து பத்த வச்சிக்கிட்டேன். மாயா " நீ வா வெட்டறேன்"னு சைகை காட்ட உதட்டை சுழிச்சு அட போடின்னு சைகை காட்டினேன்.

மாயா மாடிக்கு போய்ட்டா.. ஸ்ரீதர் கட்டிங் செக்சன் , கோழி அடைக்கிற கூண்டு கொடவுன் எல்லாத்தயும் தாண்டி ஒரு ரூமுக்கு கூட்டி போனார்.பேங்க் மாதிரி க்ளாஸ் டோர் போட்டு குஷாலா இருந்தது . புருசன் பெண்டாட்டி படுக்கிற மாதிரி ரெட்டை கட்டில்.
மூனு பேரும் உட்கார்ந்தோம். பி.ஆர் ரிமோட்டை கையில் எடுத்துட்டார்.

 ஸ்ரீதர் "பார்த்தயா முகேஷு.. ஏதாச்சும் எண்ணம் விசனமிருக்கா பாரு. அவனுக்கும் எனக்கும் ஒரே வயசுதான். இந்த வயசுல தினசரி ஷேவ் பண்றான். குளிக்கிறான். அதுவும் ஒரு டேங்கை காலி பண்ணாதான் திருப்தி. அட ஃபேர் அண்ட் லவ்லி போடறான்யா. பத்து காசு வருமானம் கிடையாது.பெண்டாட்டி கொடுத்தாதான் காசு. காலேஜ் பையன் மாதிரி ஒரு டூவீலர் வாங்கி வச்சிருக்கான். பன்னெண்டு மணிக்கு முந்தி புறப்படமாட்டான். எங்கடா போறேன்னா பிசினஸ்.  என்னமோ அவனவன் வாங்கி வந்த வரம். என்னை பாரு.. காலைல நாலு மணிக்கு எந்திரிக்கனும் . ராத்திரி 8 வரை வியாபாரம் இருக்கும். ஒரு கிலோ அரை கிலோனு போகும். எட்டரைக்கு குளிச்சா குளிச்ச மாதிரி இல்லேன்னா அது கூட இல்லே.

நான் எங்க  அப்பா அம்மா சொன்னபடி அவங்க பத்து தரம் வடிகட்டி செலக்ட் பண்ண பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என்ன ஆச்சு? தலை பிரசவத்துக்குனு தாய் வீட்டுக்கு போனவ திரும்பவே இல்லை.டைவோர்ஸ் வாங்கிக்கிட்டு திருப்பதில இருக்கா. ஏதோ முத குழந்தை ஆணா பிறந்து பையன் வளர்ந்து பெரியவனாகி சுய விருப்பத்துல சம்மர் ஹாலிடேஸுக்கு வந்து போறான். எனக்கும் 55 வயசாயிருச்சு. இன்னும் அஞ்சு வருஷமோ பத்து வருஷமோ? இதுவே பி.ஆர் இருக்கான். க்ளாஸ் மெட்டை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டான். இவன் பெஞ்ச் கார்ல கூட்டி போனப்ப  அந்த பொண்ணு எப்படி இருந்ததோ இன்னைக்கு பேசஞ்சர்ல கூட்டிப்போறப்பவும் அப்படியே இருக்கு. இவனும் ஒன் ஸ்டேஷனுங்கறான், டூ ஸ்டேஷனுங்கறான். மச்சினிய பதம் பார்க்கிறான். இருந்தாலும் அவங்களுக்கிடையில அந்த அட்டாச்மென்ட் மாத்திரம் குறையல. பத்து ரூபா சொந்தமா சம்பாதிக்காம என் கூடதான் இருக்கான். இப்பவும் சொந்தக்காரங்க கல்யாணம்,காட்சின்னா பெங்களூர்லருந்து வந்து மொய்பணம் கொடுத்து புருஷன் பேர்ல எழுதிட்டு இவனுக்கு செலவுக்கு பணம் குடுத்துட்டு போறா. அவளுக்கும் ஏறக்குறைய எங்க வயசுதான் .இவன் மொக்கையானப்ப ஏறி உட்கார்ந்த தையல் மிஷின் இன்னைக்கும் அவளை விடலை. இப்ப ரெடி மேட் கார்மென்ட்ஸ் ஓனர்தான். இன்னைக்கும்  தையல் மிஷின்ல உட்கார்ந்து கூலிக்காரி மாதிரி தைக்கிறா. ரெண்டு பொண்ணு ,ஒரு பையனை வளர்த்துஆளாக்கி இன்னும் 3 மாசத்துல பொண்ணுக்கு கல்யாணம் பண்ணப்போறா..

நானும் இவனும் ஒரே க்ளாஸு. ஒரே வயசு. இவன் லைஃப் அப்படி . என் லைஃப் இப்படி. எனக்கு இவனுக்கு கிடைச்ச மாதிரி ஒரு பெண்டாட்டி கிடைச்சிருந்தா என் லைஃபாவது நல்லாருந்திருக்கும். எனக்கு கிடைச்ச மாதிரி ஒரு பெண்டாட்டி இவனுக்கு கிடைச்சிருந்தா இவன் மயிரு ஒன்னாச்சுனு வாழ்ந்துட்டிருப்பான்"

ஸ்ரீதர் பேசறத கேட்டுக்கிட்டிருந்த நான் "இல்ல சார்.. நீங்க நினைக்கிறது தப்பு. உங்க லைஃப் அவருக்கு கிடைச்சிருந்தா நொறுங்கி போயிருப்பார். அவர் இப்படி எண்ணம் விசனம் இல்லாம இருக்க காரணமே அவங்க வைஃப்தான். அவங்க கரெக்டா இல்லாம இருந்திருந்தா அவரும் உங்கள மாதிரி பொறுப்பா மாறியிருப்பார். உங்களுக்கு அவரோட லைஃப் கிடைச்சிருந்தா கில்ட்டில தற்கொலை பண்ணியிருப்பிங்க. இட் ஈஸ் யுவர் கப் ஆஃப் டீ.. கடவுள் .. அறிவாளி சார்"னேன்

ஒரு செகண்ட் யோசிச்சிட்டு "ஹும்.. நீ சொல்றதும் கரெக்டோ என்னவோ.. சரி சரி நீ போய் படுத்துக்க. விடியகாலம்  நான் புறப்பட்டுர்ரேன். காலைல ஒரு பத்து மணிக்கு வந்து பி .ஆரை ரிலீவ் பண்ணா போதும் .. ஓகேவா குட் நைட்மா"ன்னாரு

பி ஆர் ரிமோட்டை ஸ்ரீதர் கிட்டே கொடுத்துட்டு வந்து " என்ன முகேஷ் ! என்னை பத்தி கம்ப்ளெயிண்டா.. இவன் சரியான மடிசஞ்சி. நான் சம்பாதிச்சேன் .வசதியானேன். பெண்டாடிய பெஞ்ச் கார்ல கூட்டிட்டு சுத்தினேன். இன்னைக்கு  வசதியில்லே பேசஞ்சர்ல போறேன். நாளைக்கு வசதி  வந்தா மறுபடி பெஞ்ச்.  இவன் ச்சும்மா பூச்சி பூச்சின்னிட்டு இருந்தான். பெண்டாட்டியா சிட்டி டைப். அவள் கழண்டுகிட்டா. அட போனா போறா உடனே இன்னொரு பொண்ணை சேர்த்துக்கிட வேணா .. ஊஹும் இவனுக்கு போறாது.. இவன் லைஃப் இவ்ளதான். " சரி சரி டைம் பத்தாகுது  நீ போய் கொண்டாடு. புது பெண்டாட்டி சாபம் பொல்லாததுப்பா.. காலைல ஒரு பத்து மணிக்கு எந்திரிச்சுருவ இல்லியா"ன்னாரு.

மாடிக்கு வந்தேன். மாயா  ட்ரஸ் மாத்திக்கிட்டு நைட்டில கவுந்து படுத்துக்கிட்டு கன்னத்துக்கு கைய முட்டு கொடுத்து  டிவில கார்ட்டூன் பார்த்துக்கிட்டிருந்தா.  நான்  வந்ததை பார்த்துட்டு எழுந்து

 "என்ன எல்லாம் பேசியாச்சா.. அண்ணன் ஃப்ரெண்டுங்கறே அப்புறம் அவர்கிட்டே சிகரட் வாங்கறே..அவர் என்ன நினைப்பாரு?"  அவள்

"அது சரி போப்பா புது பெண்டாட்டி கோச்சுக்கபோறானு அனுப்பினாரு அப்ப என்ன நினைச்சிருப்பாரு. "

"ஏய் நீ கலர் குடுக்கிறே... நிஜமா அப்படி சொன்னாரா.. சத்தியமா எங்க அடிச்சி சொல்லட்டும்.. இங்க இங்க இங்க.."

"அன்யோ.. நீ என்னை கத்த வைக்கிறே..நிஜமாவே நான் சத்தம் போட்டுருவேன்"

"அட அரை டிக்கட்டு.. முக்கியமான நேரத்துல எங்கனா சத்தம் போட்டுர போற உன் மானம் தான் போகும்"

"அதென்ன முக்கியமான நேரம்? "

அவ காதுல போய் சமாச்சாரத்த சொன்னேன். "ஏய்.. ரொம்ப வலிக்குமா?"ன்னா.

"நீ இப்படியே  பிடிச்சி வச்ச பிள்ளையார் மாதிரி  உணர்ச்சியே இல்லாம, ப்ரொட்டஸ்ட் பண்ணிக்கிட்டு   இருந்தா எல்லாமே ரிஜிட் ஆயிரும், லூப்ரிகேட் ஆகாது வலிச்சாலும் வலிக்கலாம்.."

"அய்யய்யோ வலிக்காம இருக்கனும்னா என்ன பண்ணனும்?"

"அதுக்கு முன்னாடி  நான் என்ன பண்ணாலும் நீ தடை சொல்ல கூடாது"

"ஆங்.. அது எப்படி ? எனக்கு கூசுமே.. ரொம்ப கூசினா கடிச்சுருவன்"

மேலுக்கு இப்படி வாத்சாயன தனமாக பேசினாலும் மாயாவ பார்த்தா ஸ்னேகம், இரக்கம், நன்றி, அவளோடவே இப்படியே இருந்துரனும் இத்யாதி உணர்ச்சிகள் அலை மோதுதே தவிர ஒரு வித தயக்கம் இருந்துக்கிட்டே இருந்தது. இருந்தாலும் இத்தனை வயசுக்கு தூறலோ ,சாரலோ கூட பார்க்காத ஒரு தகிப்பையும் அவள் பார்வையிலயும், உடல்லயும் உணர ஊசிய பார்த்ததுமே அலற ஆரம்பிச்சுட்ட குழந்தைய சில்ட்ரன் ஸ்பெஷலிஸ்ட் ரைம் இத்யாதி சொல்லி ஏமாத்தி நறுக்குனு ஏத்தின மாதிரி இல்லாம  சிம்ல வச்சி பாலை கொதிக்க வச்ச மாதிரி விஸ்தாரமா  வியூகம் வகுத்து முன்னேறினேன். நாக்கு,மூக்கு,உதடு எல்லாத்துக்கும்  ஓவர் டைம் கொடுத்து மாயாவோட உடலின் ஒவ்வொரு சதுர மி.மீட்டரையும் அறிமுகம் செய்துக்கிட்டேன். பல்லு பதிய கடிகள் வாங்கினாலும் விடாம காரியத்தை முடிச்சு  முத்தங்களால மூச்சு திணற வச்சேன்.  நான் எந்திரிச்சி வர்ரப்ப உடம்பை மூடிக்க அவகாசம் போதாம முகத்தை கையால மூடிக்கிட்டா. "சீ.......என்  நைட்டிய குடுரா"னு முனக டிவி மேல கிடந்த நைட்டிய அவள் மேல எறிஞ்சுட்டு பாத்ரூம் போனேன்.  வந்து ஒரு சிகரட்டை பத்த வச்சிக்கிட்டேன். இப்போ மாயாவோட டர்ன்.  தலைக்கு குளிச்சுட்டு வந்தா.

"நான் இது மெட்ராசு ஒரேவாட்டியா காலைல குளிச்சிருக்கலாம்ல.. ஒரு ராத்திரிக்கு எத்தனை தடவை குளிப்பியாம்"னு கலாய்ச்சேன். " சீ நீ ரொம்ப மோசம்"னா." த பார்ரா தாய் குலம் கொடுக்கிற சர்ட்டிஃபிகேட்டை. போவட்டும் இதான் டாக்டர் பட்டம் மாதிரி.. வச்சுக்கிறேன். என்னா இதுவே போதுமா இன்னம் கொஞ்சம் வேணமா" வேகமா வந்த மாயா என் வாயை பொத்தி " அன்யோ.. நீ தயவு செய்து பேசாம இருக்கியா.. எனக்கு அப்படியே உடம்பெல்லாம் கூசுது"ன்னா.

"இந்த பி.ஆர் எல்லாம் ரசனை கெட்ட ஜென்மம். பின்னே  இதுக்கு முன்னாடி சென்னை வந்தப்ப " ஹும்.. கோழி முத்தலா தெரியுது.ன்னுவாரா.. பரவாயில்லே கண்ணு நின்னு விளையாடறே"ன்னு சொல்ல மறுபடி வாயை பொத்தி "ராஸ்கல்  இன்னொரு  தடவை பேசினே காதே இருக்காது"ன்னு சீறினா. நானு " ஒரு பையன  வாய் பேசாம இருக்கச்செய்ய இன்னும் உத்தமாமான வழியெல்லாம் இருக்கு செல்லம்"னேன்.