Wednesday, March 3, 2010

"உனக்கு 22 எனக்கு 32" தொடர் கதை

மாயாவோட ஃபிசிக்கை கிண்டலடிக்க மேலே ஏறி உட்கார்ந்து இன்னம் ஒரு வார்த்தை சொன்னா கொன்னுர்ரன்னா. நான் விடாம இட்லி பாப்பா ,பிந்து கோஷுன்னு கூவ என் உதட்டை பிடிச்சு நறுக்குனு கடிச்சுட்டா.

நான் வலிய பொறுத்துக்கிட்டு " ஆம்பளை பொம்பளை மேலுக்கு என்னா செய்துக்கிட்டிருந்தாலும் உள்ளூற ‍'அதைத்தான் ' செய்றாங்கன்னேன். சப்த நாடியும் ஒடுங்கி போய் படுத்துக்கிட்டா.

மறு நாள் அப்போலோல  ஓனர் சம்சாரத்தை பார்த்துக்க அவிக உறவுக்காரவுக  யாருமே இல்லை. மாயா நான் பார்த்துக்கறேன்னா. நாலு நாள் கழிச்சு போய் பேஷண்டையும் மாயாவையும் பிக்கப் பண்ணிக்கிட்டு வந்தேன். அப்பா "ஏண்டா அந்த பொண்ணை பத்தி உன் ஓனர் ஆகா ஓகோங்கறார்..பேசாம நம்ம வீட்ல வந்து இருந்துர சொல்லேன். தெரு ரூமை ஒழிச்சு கொடுத்துரலாம்னார்மக்கள் அன்புக்கு எத்தனை ஏங்கிபோயிருக்காங்க பாரு .. ஓனர் வைஃபை 4 நாள் பார்த்துக்கிட்டதுக்கு இத்தனை ரெஸ்பான்ஸான்னு கண்ணீர் விட்டா

இனி இந்த அத்யாயத்து கதை 

"தத் ..என்ன நீ எதுக்கெடுத்தாலும் கண்ணீரா?"
"அது... அது..கண்கள் எழுதற கவிதை கண்ணா.."
"யப்பா ..புல்லரிக்குது கவிதையா? சரி உன் சாமான் செட்டையெல்லாம் பர்மனென்டா பேக் பண்ணிரு. அப்பா உனக்காகவே மிக்சி,கிரைண்டர்,லொட்டு,லொசுக்குன்னு வாங்கி குவிச்சிருக்காரு. வேணம்னா டிவி, ஹேர் ட்ரையர் மாதிரி சமாச்சாரங்களை அங்கயும் யூஸ் பண்ணிக்கலாம்."
"இது உத்தரவா..வேண்டு கோளா"
" நிலவரம் தாயி.. டெசிஷன் ஈஸ் யுவர்ஸ்"
 ஆட்களை வச்சு மாயா ரூம்ல இருந்த சாமான் செட்.ஃபேன், ட்யூப்லைட்டையெல்லாம் பேக் பண்ணி எங்க  வீட்ல கொண்டு  சேர்க்கறதுக்குள்ள சுருக்குன்னு  வெயில் அடிக்க ஆரம்பிச்சுருச்சு.  பள பளன்னு   ஆயில் பெயிண்ட் என்ன .. வால் பேப்பர் என்ன.. சின்னதா சாமி அலமாரி என்ன.. மாயா சின்னபொண்ணு மாதிரி கை கொட்டி சிரிச்சா.. "
" எல்லாம் ஓகே தான். ஆனால் நான் தான் உன் ரூம்ல நுழைய முடியாது"
"ஏன்?"
" இதென்ன நேரு ஸ்ட்ரீட்ல இருக்கிற உன் ரூமுன்னு நினைச்சயா.. ரிங்க் மாஸ்டர் மாதிரி எங்கப்பா. .கழுகு மாதிரி எங்க பாட்டி. கெட் டு கெதர் ப்ரோக்ராமெல்லாத்தயும் மறந்துர வேண்டியதுதான்."
"அய்யய்யோ என்னடா சொல்றே உங்கப்பா ரொம்ப லிபரல் அது இதுன்னு சொன்னே.."
"சொன்னேன் தான் அதுக்குனு பட்டவர்த்தனமா கண்ட நேரத்துல உன் ரூமுக்குள்ள நான் நுழைய முடியுமா என்ன?"
"சரி மாடில இருக்கிற உன் ரூமுக்கு  நானே  வந்துர்ரன்"
"இது பெட்டரா தோணுது..ஆனா திருட்டுத்தனமாதான் வரவேண்டியிருக்கும். முதல்ல நான் வெளிய போறாப்ல பாவ்லா காட்டனும். அப்புறம் திருட்டுத்தனமா மாடிக்கு போகனும்.. தலைவலிடா சாமி"
"சாரி முகேஷ் இந்த கோணத்துல நான் யோசிக்கவே இல்லை.. நீயாவது முன் கூட்டி சொல்லியிருக்கலாம்"
"சரி ஓஞ்சு போவட்டும்.. இப்போ என் வீட்ல இருக்கிற கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தறேன்.உன் மூளைல ஒரு ஓரமா போட்டுவச்சிக்கிட்டா இங்க லைஃப்  ஸ்மூத் கோயிங்கா இருக்கும்"
"சரி சொல்லு"
"முதல்ல எங்கப்பா .."ன்னு ஆரம்பிச்சேன்.கும்முன்னு மூக்குப்பொடி வாசனை .." என்னடா என்னை பத்தி ஏதோ ஓடுது.. இல்லாததையும் பொல்லாததயும் சொல்லி அந்த பொண்ணை பயமுறுத்திராத.

"தபாரும்மா மாயா.. எனக்கு இன்னைக்கு 60 வயசு.. இன்னைக்கும் தினசரி ஷேவ் பண்ணிக்கிறேன். குளிக்கிறேன்.ஒரு மணி   நேரம் பூஜை பண்ணறேன் பேண்ட் ஷர்ட் தான் போடறேன். மார்க்கெட் போறேன். டிவில ந்யூஸ் ஃபாலோ பண்றேன். பேப்பர் படிக்கிறேன். லைப்ரரி போறேன். மதியம் தூங்கறேன். சாயந்திரம் வாக் போறேன். நாலு ஃப்ரெண்ட்ஸை பார்க்கிறேன்.  ராத்திரில ரொம்ப நேரம் படிப்பேன். என்னோட மைனஸ் பாயிண்ட் என்னடான்னா எதிராளி இன்டரஸ்ட்டடா இல்லையானு கவனிக்காம உயர்ந்த விஷயங்களை பேசிக்கிட்டே போவேன்..யாராவது கிளறிவிட்டா பாஸ்டுக்கு போயிருவன் அவ்ளதாம்மா..  நான் தண்ணி போடமாட்டேன். போடறவனை குறைச்சுக்கனுவன் , நான் பெருமைக்கு பன்னி மேய்க்கமாட்டேன். மேய்க்கிறவனை வேணான்டா கெட்டுப்போயிருவன்னு உஷார் பண்ணுவேன்..மத்தபடி என்னால யாருக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது.  நான் எப்படி இருக்கேனோ அதே மாதிரி பிறரும் இருக்கனும்னு நினைக்கிறது தப்பா"

அப்பா பேசி முடிச்சிட்டு ஃபினிஷிங்க் டச் கொடுக்கிற உத்தேசத்துல "ஜாஸ்தி பேசிட்டேன் போல உனக்கு போரடிச்சா போரடிக்குது அங்கிள்னு சொல்லிடலாம் உனக்கு  அந்த ரைட் இருக்கு ஓகேவா .. இந்த போடுகால ரொம்ப நம்பாதே இவன் காலேஜ்ல படிக்கிறப்ப நான்  ஹோட்டலுக்கு போனா முதலல் பாக்கெட்லபணமிருக்கான்னு பார்த்துக்கிட்டுதான் உள்ளாற போவேன்"ன்னு சொல்லி நிறுத்தினார்.

சஸ்பென்ஸ் தாங்காம மாயா "ஏன் அங்கிள்?"னு கேட்டாள். அதுக்கு அப்பா தன் முகத்தை பரிதாபமா வச்சுக்கிட்டு , "இந்த கம்னாட்டிதான் என் பாக்கெட்டை எப்பவோ  காலி பண்ணிட்டிருப்பானே "ன்னாரு  மாயாவுக்கு ஒரே சிரிப்பு..

 "இப்ப எப்படி அங்கிள்?இப்பவும் காலி பண்ணிர்ராரா?"

  "இவன்  வானம் மாதிரிம்மா ..பேஞ்சா பேஞ்சு கெடுப்பான் ..காஞ்சா காஞ்சு கெடுப்பான்.. இவன் பணம் கொடுத்தா நான் வாங்கறதில்லேனு திருட்டு தனமா என் பாக்கெட்ல ஐ நூறும் ஆயிரமும் வச்சிருவான். ஒரு நாள் அப்படித்தான் ஒரு குடிகார ஃப்ரெண்ட் தண்ணி போட கடன் கேட்டான்.. நான் டேய் என் கிட்டே பொடி வாங்க ஒரு பத்து ரூபாதாண்டா இருக்குனு எடுத்து காட்டறேன்..பார்த்தா கூடவே ஒரு ஐ நூறு ரூபா நேட்டு வருது.. தலையெழுத்தேன்னு சில்லறை மாத்தி அவனுக்கு பத்து ரூபா கொடுத்துட்டு வந்தேன் இவன் கொடுத்து தான் எனக்கு நிறையனும்னு ஒன்னுமில்லம்மா ஏதோ நான் படிச்ச பத்தாங்கிளாஸ் படிப்புக்கு கவர்ன்மென்ட் வேலை கிடைச்சது. கிடைச்ச சம்பளம் எனக்கு போதுமானதா இருந்தது. மத்தவங்க மாதிரி நான் கிம்பளத்துக்கு கை  நீட்டல.. எனக்கு அமைஞ்ச மனைவியும் சிக்கனமா குடும்பம் நடத்தினா சுத்தமான  கையோட வெளிய வந்தேன்.. என்னடான்னா எப்ப மனைவி தேவையோ அப்ப மனைவி இல்லாம போயிட்டா.சரி அவ விதி முடிஞ்சு போச்சு போய் சேர்ந்துட்டா ..பாழாப்போன கடவுள்  அட்லீஸ்ட் ஒருபெண் குழந்தைய கொடுத்திருந்தா அதை பார்த்து மனச ஆத்தியிருப்பேன்.. சரி போகுது போ அதான் நீ வந்திருக்கயே " இப்படி பேசிக்கிட்டே இருந்தவரு  ..இரும்மா ஒரு நிமிஷம் வந்துர்ரன்னிட்டு உள்ளார போனவரு கை நிறைய நெஞ்சு வரைக்கு  பட்டுப்புடவைகளை கொண்டு வந்தவரு "இதெல்லாம் என் வைஃப் கட்டின புடவைங்க. இது மாதிரி இன்னும் நாலு வரிசை இருக்கு..   நாலு மருமகளுக்கு 4 போட்டம். இது உனக்கு ஏதோ வெள்ளிக்கிழமை, அமாவாசை ,கிருத்திகை,பண்டிகை நாள்ள கட்டி கிழி"ன்னாரு..

மாயா " அங்கிள்.. இதெல்லாம் எதுக்கு அங்கிள்.. நீங்க ஏதோ உங்க மனைவி ஞாபகமா வச்சிருக்கிங்க..இதையெல்லாம் எனக்கு கொடுத்துட்டா எப்படி ?"ன்னு பதறினாள்.

அப்பா, " யம்மாடி நீ ஏன் இப்படி பதர்ரே..என் மனைவி செத்து 3 வருஷமாச்சா அவளை பத்தின ஞாபகமெல்லாம் மெல்ல மங்கிக்கிட்டு வருதும்மா.. எதுனா அசவுகரியம் ஏற்பட்டாதான் அவ ஞாபகமே வருது அட்லீஸ்ட் இந்த புடவைய நீ கட்டி நடக்கறப்பயாச்சும் மங்கி போன நினைவுகள் லேசா தீட்டப்படட்டுமேங்கற சுய நலத்துலதான் கொடுக்கிறேன்..வாங்கிக்கம்மா"ன்னிட்டு  உள்ள போனார்.

" நான் கொஞ்ச நேரத்துல பாட்டிய ரைட் பண்ணி கூட்டிக்கிட்டு வருவாரு பாரு. பாட்டிக்கு நீ இங்கே குடிவர்ரதுல விருப்பமில்லே. வீட்டு நிர்வாகத்தையெல்லாம் கிழவிதான் பார்க்குது. பயங்கர ஊழல் . செலவை அதிகரிச்சு காட்டி பணம் ஒதுக்கி எங்க அத்தைக்கு ஏறப்போடும். நீ வந்துட்டா மோனோப்பலியா இருக்க முடியாதேன்னு  கிழவிக்கு காண்டு."

நான் சொன்னமாதிரியே அப்பா பாட்டிய சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்தார். " நான் சொன்னேனே மாயான்னு இவுங்கதான்... என் ஃப்ரெண்ட் டூர் பஸ் ஓனர் பரமசிவம் இருக்கானே அவன் கம்பெனிலதானே நம்ம முகேஷும் வேலை பார்க்கிறான். இவுங்களும் பரமசிவம் ட்ராவல் ஆஃபீஸ்ல தான் வேலை பார்க்கிறாங்க. பாவம் நீ தனியா இருக்கிறப்ப எவனாச்சும் வந்து மண்டைல போட்டு காது,கழுத்துல இருக்கிறத உருவிக்கிட்டு போயிட்டா இன்னா பண்றது அதுக்குதான் இவங்களை நம்ம வீட்லயே வச்சுர்ரதுன்னு ஏற்பாடு பண்ணேன்" பாட்டி முகத்தில் உங்க தில்லாலங்கடி பேச்செல்லாம் எனக்கு தெரியாதாங்கற ஃபீலிங்க் ..அப்பா மாயா பக்கம் திரும்பி அப்பா சரியில்லாம எங்கம்மா தான் இட்லி சுட்டு என்னை ஆளாக்கினாங்கன்னு பல தடவ சொல்லியிருக்கேனே.. இவிங்கதான் என் அம்மா பேரு லட்சுமி"ன்னாரு.

பாட்டி ஏற இறங்க மாயாவ பார்த்து " ஏண்டியம்மா நீ பாட்டுக்கு குளிச்சு முழுகி வேலைக்கு போயிரப்போற..நீ எனக்கு காவலா? நல்லாதான் உடறாங்க பாரு பீலா .. நீ ஒன்னும் எனக்கு காவலா இருக்க தேவையில்லே.. என் காவல் உனக்கு தேவையில்லேனு சொல்லிராதே.. யாரும் கை நீட்டி சொல்லிராதமாதிரி ஒழுங்கு மரியாதையா நடந்துக்கனும் புரியுதா.. சாப்பாடு எப்படி நீயே ஆக்கிக்குவயா .. இல்லே ஓட்டலா?" பாட்டி பேச பேச அப்பா கைய பிசைய ஆரம்பிச்சுட்டாரு. மாயா மூஞ்சி சிறுத்து போச்சு..

நான்" ஏ கெய்வீ... அவிங்க ஒன்னும் சோத்துக்கில்லாம வரலை.. ஆக்கத்தெரியாதவுகளுமில்லே.. விட்டா உனக்கும் சேர்த்து ஆக்கி போட்ருவாங்க..அப்புறம் உனக்கு தான் இம்சை.. உன் செல்ல பொண்ணுக்கு ஒன்னத்தயும் ஏறப்போட முடியாது"ன்னு சீறினேன்.

பாட்டிக்கு ரேங்கிக்கிச்சு.." பொண்ணா பொறப்பெடுத்து "ன்னு ஒப்பாரி ஆரம்பிக்க நான் முறைச்சு பார்த்தேன். அப்பாவ பார்த்து "டேய் ..சுந்தரேசா.. உங்கப்பன் கூட தான் மாரடிச்சேன்னா இப்ப இவன் கூடவும் மாரடிக்க வேண்டியதாயிருக்கே..அந்த படுபாவிதான் உன் வயித்துல இப்படி பொறந்தானா என்னா தெரியலயேடா..அவன் முறைக்கிறத பார்ரா உங்கப்பன் கூட இப்படி முறைச்சதில்ல.. எக்கேடும் கெட்டுப்போங்க ..அப்பனும் புள்ளையும் சேர்ந்து கூத்தடிக்கனும்னு முடிவு பண்ணியிருக்கிங்க ..இதெல்லாம் எங்கதான் போய் முடியப்போவுதோ பார்க்கத்தானே போறேன்னு " பேசிக்கிட்டே உள்ள போயிருச்சு.

அப்பா , "மாயா  நீ தப்பா எடுத்துக்காதே.. வயசாக வயசாக தங்களோட முக்கியத்துவம் போயிருமோனு பயம் வந்துரும். அதனால சின்ன மாற்றத்தை கூட கடுமையா எதிர்க்கிற சைல்டிஷ் பிஹேவியர் வந்துரும்.. எங்கம்மா பாவம் ரொம்ப நல்லவங்க பேச்சுத்தான் இப்படி .. கொஞ்ச நாள் போவட்டும் நீயே பாட்டி பாட்டினு உயிரை விடுவே.."ன்னிட்டு லைப்ரரிக்கு கிளம்பி போனார்.