Wednesday, August 19, 2009

"மணி சீக்ரெட்ஸ்" செமினார் பேச்சு


எனது வலைப்பூவை தொடர்ந்து படிப்பவர்களுக்கு இது புது செய்தியாக இல்லாமல் இருக்கலாம். புதியவர்களுக்காக சில வரிகள் எழுதி பின் செமினாரிலான எனது பேச்சின் சுருக்கத்தை கீழே தருகிறேன்.

சித்தூர் வேலூர் சாலையில் உள்ள ஜில்லா பரிசத் மீட்டிங் ஹாலில் பாசிட்டிவ் திங்கர்ஸ் க்ளப் மற்றும் சித்தூர் கிருஷ்ணா ஜ்வெல்லர்ஸ் சார்பில் மணி சீக்ரெட்ஸ் (பணம் பற்றிய மர்மங்கள் ) என்ற தலைப்பில் கடந்த ஞா. கிழமை செமினார் நடந்தது. இதில் பிரபல மனோதத்துவ நிபுணர் சுதாகர் ரெட்டி அவர்களும் கலந்து கொண்டு பேசினார்

அவரையடுத்து மணீ சீக்ரெட்ஸ் பற்றி அடியேன் உரையாற்றினேன். அதன் சுருக்கம் வருமாறு:
இன்று பல கோடி உடல்களில் தனித்திருக்கும் உயிர்களுக்கெல்லாம் மூலம் முதலில் தோன்றிய அமீபாவின் உயிர் தான் மூலம். ஒரே உயிர் ஒரே உடல் என்று வாழ்ந்த போது
இன் செக்யூரிட்டி,போட்டி, லட்சியம்,ஒப்பீடு ஏதும் கிடையாது. ஒரு செல் அங்க ஜீவியான அமீபா கொழுத்து இரண்டாக பிரிந்தது. ஒரு செல் தன்னை தானே காப்பி செய்து கொண்டு மற்றொரு செல்லாக வடிவெடுத்தது. இந்த காப்பியிங்கில் நடந்த எரர் காரணமாக புதிய ஜீவ ராசிகள் வந்தன. குரங்கு வந்தது. குரங்கிலிருந்து மனிதன் வந்தான்.

ஆனால் அன்று ஒரே உயிராக ,ஒரே உடலில் வாழ்ந்த நினைவுகள் இன் செக்யூரிட்டி,போட்டி, லட்சியம்,ஒப்பீடு ஏதுமற்ற ஞாபகங்கள் உயிர்களை தூண்டுகின்றன. ஒரே உயிராக மீண்டும் மாறிட தவிக்கச்செய்கின்றன. இந்த தவிப்பின் காரணமாகத்தான் மனிதனின் எந்த செயலுக்கு பின்னாடியும் கொல்லு அ கொல்லப்படும் இச்சை ஒன்றே இருக்கிறது. இதை மனோதத்துவ இயலும் அங்கீகரிக்கிறது

மனிதன் குகை,காட்டு வாழ்வில் கொல்வதையும்,கொல்லப்படுவதையும் எவ்வித முகமூடியும் இன்றி நேரிடையாக செய்ய முடிந்தது. சஞ்சார வாசம் முடிந்து ஸ்திரவாசம் துவங்கியபோது குழு,குழு தலைவன் விதிகள் ஏற்பட்ட காரணத்தால் அவனால் சுதந்திரமாக கொல்லவோ கொல்லப்படவோ முடியவில்லை. இதற்கு மாற்றாக செக்ஸை ஏற்றான். செக்ஸில் வீரியம் ஸ்கலிதமாகும்போது குட்டி மரணம் சம்பவிக்கிறது. இது சாகும் இச்சையை நிறைவேற்றியது. ஆனால் ஸ்திர வாழ்வின் காரணமாக சொத்து (பதப்படுத்தப்பட்ட விளை நிலம்)ஏற்பட்டது. அது தன் வாரிசுக்கே கிடைக்க வேண்டும் என்று ஆண் நினைத்தான். மேலும் செக்ஸில் பெண்ணின் பலம் அவனுக்கு தெரிந்து போனது.( ஒரே இரவில் பலமுறை உச்சம் அடையும் சக்தி, யோனியில் ஆணுறுப்பு நுழைக்கப்பட்ட பின் 7 முறை அசைக்கப்பட்டாலே இவன் நாக் அவுட் . அவளுக்கோ 23 முறை தேவைப்பட்டது. மேலும் இவன் குழந்தைக்கு யார் தந்தை என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்)

அவள் யோனியை பூட்ட முடியாத குறைக்கு பெண்ணையே பூட்டி வைக்க ஆரம்பித்து விட்டான். அவளை அடிமையாக்கினான். அடிமையோடு அவனுக்கு எப்படி உண்மையான இணைப்பு ஏற்படும் அவளை ஆஷ் ட்ரேவாகவும், யூரினல்ஸாகவும், வெறும் துளையாகவும் பாவித்தான்..எனவே இவன் சாக /உடலை உதிர்க்க/ ஓருயிராய் மாற மாற்று ஏற்பாடு தேவைப்பட்டது.

அதற்குள்ளாக கூடுதல் விளைபொருட்களால் பண்டமாற்று, அதிலான சிக்கலை தவிர்க்க தங்க நாணயம் குறைந்த தொகைகளிலான லாவா தேவிக்கு வெள்ளி நாணயம் ,செம்பு நாணயம் இன்று ஊதினால் பறந்து விடும் வண்ண காகிதங்கள் எல்லாம் வந்தன. மனிதன் செக்ஸுக்கு மாற்றாக பணத்தை ஏற்றுக்கொண்டான். ஏன் என்றால் செக்ஸில் என்னென்ன சாத்தியமோ பணத்தாலும் அவையனைத்தும் சாத்தியமே . மேலும் செக்ஸும் கிடைக்கும்.

ஆக எவனும் பணத்தை பணமாக பார்க்காமல் .. தன் உயிரையும், பிறர் உயிரையும் பறித்து உடல்களை உதிர்த்து மீண்டும் மனித குலத்தை ஓருயிர் ஓருடலாக மாற்றும் என்று பாவிக்கிறான்.

ஆனால் உயிர்கள் பிரிந்தாலும், உடல்கள் வேறானாலும் கண்ணுக்கு தெரியாத ஒரு கயிறு எல்லோரையும் இணைக்கிறது. இதை அகந்தை உணர மறுக்கிறது.

மேலும் மனிதன் பணத்தை கொண்டு மரணத்தின் நிழல்களோடு நிழல் யுத்தம் செய்கிறான். தனிமை,ஏழ்மை, இருட்டு, அறியாமை, நிராகரிப்பு ,முதுமை அனைத்தையும் மரணத்தோடு முடிச்சு போட்டு யோசிக்கிறான். பணத்தை கொண்டு அவற்றை வெல்ல நினைக்கிறான். இதனால் தான் ஒவ்வொரு வாழ்வும் தோல்வியில் முடிகிறது.

பணம் லட்சியம் நோக்கிய பயணத்துக்கு ஒரு எரிபொருள் மாத்திரமே. வாழ்வின் வெற்றிக்கு தேவையான ஒரு கருவி மாத்திரமே. ஆனால் மனிதனோ மேற்சொன்ன கற்பனைகளால், கற்பனை பயங்களால் அகந்தையால் வாழ் நாள் மொத்தத்தையும் வீணாக்கிக்கொள்கிறான்.
உலக உயிர்களிடையே உள்ள இணைப்பை தன் அகந்தை காரணமாய் உணர மறுக்கும் மனிதன் தன் உடல்களை உதிர்த்தேனும் மீண்டும் இணைய துடிப்பது வேடிக்கை. தான் போரிட வேண்டிய மரணத்துடன் மோதாது மரணத்தின் நிழல்களோடு யுத்தம் செய்து மரணப்படுகுழி நோக்கி விரைவது பை. தனம்.

எனவே பணத்தை பணமாக பாருங்கள் . உங்கள் உடல்,மனம்,புத்தி, மனைவி,குடும்பம், நண்பர்களை உங்கள் பொருளீட்டலுக்கு ஆதரவாக துணையாக மாற்றிக்கொள்ள முடிந்தால் சுராங்கனி கா ஸேக்கு தான். (பெரும் பணம் ஈட்டலாம்)