Tuesday, June 5, 2012

1-3 பாலியல் விருப்பங்கள் & பரிகாரங்கள்


அண்ணே வணக்கம்ணே !
12+12 பாலியல் விருப்பங்கள் தொடரில் 3 விதமான செனேரியோவை கொடுத்திருந்தம். இந்த செனேரியோக்கள்ள வாழ்ந்துக்கிட்டிருக்கிறவு இன்னா மேரி பரிகாரங்களை செய்துக்கலாம்னு இன்னைக்கு பார்த்துரலாம். நாளையிலருந்து 4 , 5 , 6 ன்னு 12+12 வரை பார்ப்போம்.

மொதல்ல கொடுத்த 3 வகையான செனேரியோல எந்த பிரச்சினையும் இல்லாம வண்டி ஓடிக்கிட்டிருந்தா அவிக எந்த பரிகாரமும் செய்ய தேவையில்லை. பிரச்சினை உள்ளவுக மட்டும் பரிகாரம் செய்தே ஆகனும்.
இத்தீனி நாள் நம்ம ப்ளாகை/சைட்டை ஃபாலோ பண்ணாதவுக வசதிக்காக மேற்படி 3 செனேரியோவை இங்கே மறுபடி தரேன்.

1.சுகமான கற்பனைகள் - நல்ல ரசனை - கலைகள்ள ஈடுபாடு -பெண்களுடன் இரண்டற கலக்கும் மென்மை/பெண்மை உ.ம் ரெசிப்பி பத்தி கூட டிஸ்கஸ் பண்ணுவாய்ங்க. டிப்ஸ் கொடுப்பாய்ங்க. இவிகளை பொருத்தவரை வீடு,வாகனம்லாம் அனுபோகத்துல இருக்கும். (சொந்தம்னு அடிச்சு சொல்லவரலை -எவனுதோ இவிக தங்களோடதை போல அனுபவிக்கறாபல் ஒரு அமைப்பு.

பிரச்சினை:
கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் இடைவெளி கியாரண்டி இதை சீரணிச்சுக்கிட்டா நோ ப்ராப்ஸ் இல்லின்னா பிரச்சினைதேன்.

பரிகாரம்:

1.சாயந்திரம் போடப்போற பதிவை பத்தி காலையில ரோசிச்சா புண்ணியம் உண்டு. அட்லீஸ்ட் வேலை கிடைச்சு,அது பர்மனன்டாகி , தரகர் கிட்டே ஜாதகம் கொடுத்துட்டு வந்து பொஞ்சாதிய பத்தி கற்பனை பண்ணா புண்ணியம் உண்டு. அதை விட்டுட்டு "ஆலு லேது ச்சூலு லேது கொடுக்கு பேரு சோமலிங்கம்"னுட்டு கற்பனை குதிரையை விரட்டக்கூடாது. ( ஆலு=மனைவி ; ச்சூலு = கர்பம் ; கொடுக்கு =மகன் ) பொஞ்சாதியும் இல்லை -அவள் கர்பமாவும் இல்லை. பிள்ளை பேரு சோமலிங்கம்னு கற்பனை பண்றது வீண் தானே.

முதலிரவு அறைக்குள்ள நுழையறதுக்கு முந்தி கற்பனை செய்தா விந்தும் முந்தும் ( சூப்பர் எதுகை மோனைப்பா) அப்பாறம் இல்லாத பொல்லாத இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். இழந்த சக்தி வைத்தியர்கள் இதெல்லாம் தேவையா?

கற்பனைக்கு கர்த்தா நாம. அதனால கற்பனை பழைய தமிழ்படம் மாதிரி ஸ்மூத் கோயிங்கா இருக்கும். ஆனால் லைஃப் ? இதுக்கு கர்த்தா நம்ம கருமம். டப்பிங் தெலுங்கு படம் மாதிரி கத்தி,குத்து,ரத்தம்லாம் இருக்கும்.

நல்லதை நினைக்கும் போதே கெட்டதையும் நினைச்சு பாலன்ஸ் பண்ணிக்கிரனும். அதுலயும் இந்த கில்மா மேட்டர்ல அசலான வேலைய செய்ய வேண்டியது வேற டிப்பார்ட்மென்ட். கற்பனைக்கு கேந்திரம் மூளை.

காமம் தலைக்கேறின்னு சொல்வாய்ங்க. அப்படி ஏறிட்டா "கிளிச்சுரலாம்"ங்கற மாதிரி ஒரு ஐடியா வரும். மேட்டர் இன்னாடான்னா காமம் தலைக்கு ஏறக்கூடாது. ( ஐ மீன் அது குறித்த எண்ணங்கள் ,கற்பனைகள்) அப்டி ஏறிருச்சுன்னா பெர்ஃபார்மென்ஸ்ல பல்பு வாங்கிர வேண்டியதுதான்.

இந்த பாய்ண்டையெல்லாம் நோட் பண்ணிக்கிட்டு அடக்கி வாசிக்கனும். கற்பனைய தூண்டக்கூடிய உப்பு,காரம்,புளிப்பு, தனிமை , மசாலா ,ஸ்வீட்ஸ், ஸ்ன்ட், நொறுக்கு தீனி ,பட்டை ,லவங்கம் முதற்கொண்டு நம்ம சைட்டு உட்பட எல்லாத்தையும் தவிர்க்கனும்.

லைஃப் ஸ்டைலை மாத்திக்கிடனும். கடுமையான் உடல் உழைப்பு , ஆழ்ந்த தூக்கத்தை தரும். ஆழ்ந்த தூக்கத்துல கனவு வராது.

பாடியில ஜெனரேட் ஆகக்கூடிய எனர்ஜியை எங்கேஜ் பண்ணிரனும்.உபரியா உள்ள எனர்ஜி நிச்சயமா செக்ஸ் பவராத்தான் வெளிப்படும். இந்த புரிதல் தான் முழு முதல் பரிகாரம்.

நல்ல ரசனை - கலைகள்ள ஈடுபாடு :

ரசனைன்னு சிம்பிளா ஒரே ஒரு வார்த்தை.ஆனால் வாழ்க்கைக்கான அருத்தமே இதுல அடங்கிருது. ரசனை இல்லாதவன் மன்ச ஜன்மமே கிடையாது.

நம்ம ஃப்ரெண்டு ஒருத்தரு கீறாரு . நல்ல உயர்தர சைவ உணவகத்துக்குத்தான் போவாரு. இட்லி தோசை இத்யாதிக்கு என்னெல்லாம் சைட் டிஷ் இருக்கோ எல்லாத்தையும் கேட்டு வாங்குவாரு. ரெண்டு மூனு வாய் தனித்தனியா தொட்டு சாப்பிடுவாரு. அப்பாறம் என்ன பண்ணுவாருன்னா எல்லா சைட் டிஷ்ஷையும் ப்ளேட்ல கவுத்து பிசைஞ்சு ( சாரி .. ரெம்ப குமட்டுதோ?)

ஒரு செருப்பு வாங்க நூறு ஜோடியையாவது பார்த்துருவாரு. ஐ நூறு,ஆயிரத்துக்கு குறைச்சு எடுக்கவே மாட்டாரு, வயசு 55 இதுவரைக்கு கண்ணாலமாகல்லை.

இன்னொரு ஃப்ரெண்டு . 1987 ல திடீர்னு அப்பா செத்துப்போக 007 ஜீ.ஓ படி அவர் வேலைய இவருக்கு கொடுத்தாய்ங்க. அப்பாவோட பாண்ட் சட்டை எல்லாத்தையும் அள்ளிட்டு போயி ஆல்ட்டர் பண்ணி அதையே 3 வருசம் போட்டாரு.

அதையாவது ஒரு ரீஜனா போடுவாரு -களட்டி வைப்பாருன்னா ஊஹூம்.பாண்டோடயே தூங்கிருவாரு. தூங்கி எந்திரிச்சு அப்டியே ஆஃபீஸ் வந்துருவாரு.

மொதல் கல்யாணம் 35 வயசுல நடந்தது. ரெண்டு வருசத்துல பொஞ்சாதி செத்துப்போச்சு. போன வருசம் செகண்ட் மேரேஜ்.

ஒரு அய்யரு வீடு. கோவில்ல பூஜைல்லாம் கூட செய்துக்கிட்டிருந்தாய்ங்க. ஃப்ரீயா வர்ர வேட்டி,துண்டையெல்லாம் கடையில வித்துருவாரு போல. அவர் கட்டியிருக்கிற வேட்டி துண்டை பீத்துணியை கூட வச்சு விளையாடற நாய் குட்டி. கூட சீண்டாது. அம்மாம் அழுக்கு. அவிக வீட்டுக்குள்ள காலை வச்சு எடுக்கிறதுக்குள்ள நம்ம பாதங்களோட அடையாளம் கிருஷ்ண ஜெயந்தி கணக்கா பதிஞ்சுரும். அம்மாம் தூசு.

பிள்ளை குட்டி கிடையாது. வெள்ளையோ வெள்ளையா ஒரு பெண்ணை தத்து எடுத்து வளர்த்தாய்ங்க. அதுவும் கண்ணாலம் கட்டிக்கிட்டு பூட்ச்சி. திரும்பி பார்க்கலை. அய்யரும் போய் சேர்ந்துட்டாரு. அய்யரம்மா தனிமரமா நிக்காய்ங்க.

இதையெல்லாம் படிச்சுட்டு ஓஹோ.. ரசனையோட வாழ்ந்தாதான் கண்ணாலம்,கில்மா, பிள்ளை குட்டில்லாம் அமையுமோன்னு ஒரு முடிவுக்கு வந்துராதிங்க.

இதே ரசனை ஓவரா போனாலும் சுக்கிர பலம்லாம் அதுக்கே செலவாகி கண்ணாலம்,கில்மால்லாம் கானல் நீரா போயிரும். சாக்கிரதை .

வசதியான வீடு இருக்கு. ஏஜ் பார் ஆயிட்டே இருக்கு. கண்ணாலம் அமையலியா? ஒரு பத்து ரூபா ஸ்டாம்ப் பேப்பர் வாங்கி உங்க வீட்டை லட்சுமிக்கு எழுதிவச்சுர்ரதாவும் வாழ் நாள் முழுக்க பிரதி மாதம் 1 முதல் 5 ஆம் தேதிக்குள்ள ரூ.108 லோக்கல் பெருமாள் கோவில் உண்டியில செலுத்திர்ரதாவும் கமிட் பண்ணிக்கங்க.

இதுல நீங்க ரூ.108 போடறது ஸ்தூலமான சமாசாரம் இது முக்கியம் கிடையாது. வாடகை வீட்ல இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் உங்க மனசுல இருக்கனும். அதான் முக்கியம். வாகன மேட்டர்லயும் இதே ஃபார்முலாவ யூஸ் பண்ணுங்க.

படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்களை அவாய்ட் பண்ணிருங்க. சீக்கிரமே தூங்கப்போயி விடியல் 4 அ 4.30 க்கெல்லாம் எந்திரிச்சுருங்க. நடனம், சங்கீதம் மாதிரி ப்ரோக்ராம்ஸுக்கு காசு கொடுத்து டிக்கெட் வாங்கி போய் பாருங்க

தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாக்களை நீங்க அவாய்ட் பண்ணுங்க. ஃப்ரெண்ட்ஸ் கேட்டா வாங்கி கொடுங்க.

ஏசி இருந்தா அதை அப்பப்போ ஆஃப் பண்ணிருங்க. பயணம்னு கிளம்பினா ஸ்லீப்பர், சூப்பர் டீலக்ஸ் இத்யாதியை அவாய்ட் பண்ணுங்க.

வீட்டுக்கு தென்கிழக்குத்திசையில பள்ளம், வீட்டுல உபயோகிக்கிற தண்ணீர் வெளிய போறது இத்யாதி இருந்தா மாத்துங்க.

நட்பு ,உறவு வட்டத்தில் விசேஷங்களுக்கு வெள்ளிச்சாமான்களை ப்ரசன்ட் பண்ணுங்க. நீங்க பெண்ணா இருக்கும் பட்சத்துல ப்யூட்டிபார்லரை கட்டாயம் அவாய்ட் பண்ணுங்க.

குறிப்பு: 3 செனேரியோவுக்கும் பரிகாரம் கொடுத்துரலாம்னு பார்த்தேன். ஊஹூம்.. வேலைக்காகலை . நாளைக்கு பார்ப்போம்.

சீ யு..