Sunday, March 4, 2012

ஜாதகம் எப்டி இருந்தாலும் ஆண்மை இழப்பு


அண்ணே வணக்கம்ணே !
இதென்னடா டகுலா கீதுன்னு பேஜாராயிராதிங்க. அல்லா வீட்லயும் ப்ராண்டட் ஆட்டா தான் வாங்கறாய்ங்க. ஆனால் அல்லார் வீட்லயும் சப்பாத்தி ஒரே மாதிரியாவா கீது. நீங்க உபயோகிக்கிற எண்ணெய், ஸ்டவ், வைக்கிற ஃப்ளேம் , போடற உப்பு,அதனோட அளவு இப்படி எத்தனையோ சமாசாரம் சப்பாத்திய சப்பையாக்கிருது. அதை போலவே தான் ஜாதகமும். எந்த ஜாதகத்துல பிறந்தாலும் ஆண்மை இழப்புக்கு வழி இருக்கு.

ஒரு காலேஜ் குட்டிகளுக்கு ஒரு குட்டி பதம்ங்கறாப்ல லக்னாதிபதியோட நிலையை மட்டும் இன்னைக்கு பார்ப்போம்.

1-1
லக்னாதிபதி லக்னத்துலயே இருந்தா../ உச்சம் பெற்றால்:

மன்சனுக்கு சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துரும். தாளி "அஞ்சு மினட்டுக்காக" என்ன இவளுகளை கெஞ்சிக்கிறதுன்னு ஹோமோவா மாறலாம்/ சுய இன்பத்துக்கு அடிமையாகலாம்.

1-2
லக்னாதிபதி ரெண்டுல இருந்தா வெறுமனே பேசியே ஓய்ஞ்சு போயிரலாம்

1-3
லக்னாதிபதி 3 ல இருந்தா ப்ரதர்ஸ் /சிஸ்டர்ஸுக்கு அதிக முக்கியத்வம் கொடுத்து அவிகளை பிரியனுமேங்கறதுக்காவ திருமணத்தை தள்ளி போடலாம். பருவத்தே பயிர் செய்யாத காரணத்தால ஆண்மை இழப்பு ஏற்படலாம்.

1-4
லக்னாதிபதி 4 ல இருந்தால் பலான பரீட்சையில செயிச்ச பிற்காடுதேன் கண்ணாலம்/ டாக்டர் பட்டம் வாங்கினபிறவுதேன் கில்மான்னு திருமணத்தை தள்ளி போடலாம். அம்மா மேல அதீத பாசம் வச்சு வர்ரவ கொடுமை பண்ணா என்ன பண்றதுன்னு தள்ளி போடலாம்.

கச்சாமுச்சான்னு வாகனசுகத்தை அனுபவிக்கலாம்/ கண்ணாலத்துக்கு மிந்தியே ஊடு கட்டி கடனாளி ஆகி கடனை நினைச்சு நினைச்சே ஆண்மை இழப்புக்கு ஆளாகலாம்.

வாகன சுகத்தால இல்லற சுகம் எப்டி பாதிக்கப்படும்?

மனித உடலின் சராசரி உஷ்ண நிலை 98.4 டிகிரி. இதுல உயிரணு உயிர் வாழமுடியாதுனுதான் இயற்கை விதைகள் உடலுக்கு வெளிய விட்டிருக்கு.பாடி டெம்பரேச்சர் அதிகமா இருக்கிறப்ப இன்னம் கொஞ்சம் கீழே இறங்கி சூட்டை குறைக்கற ஏற்பாடும் இருக்குது.

ஆண்கள் 24 மணி நேரம் டென்டெக்ஸ் போட்டு/ஜீன் போட்டு விதைகளை அழுத்தி வைக்கிறதால விந்துல உயரணுக்களோட கவுண்ட் குறைஞ்சி போயிருது. இதுல தாளி விழிச்சிருக்கிற நேரம்லாம் வண்டி வாகனத்துல சுத்திக்கிட்டிருந்தா என்ன ஆகும்? இதான் கணக்கு.

1-5
லக்னாதிபதி அஞ்சுல இருந்தா சதா சர்வ காலம் தன்னை பற்றியே யோசிச்சுக்கிட்டு கனவுலகுல சஞ்சாரம். ஆகாய கோட்டை கட்டிக்கிட்டு அதுலயே வாசம். இப்டி இருந்தா என்ன ஆகும்? இவரோட உலகமே வேறயா இருக்கும்.

இங்கன யதார்த்தமா உள்ள உலகம் இவிகளை நெக்லெக்ட் பண்ணிரும். கண்ணாலமாவது கருமாதியாவது.மூச்.

1-6
லக்னாதிபதி 6 லருந்தா கோர்ட்டு,போலீஸ் ஸ்டேஷன், ஆஸ்பத்திரின்னு அலையவே நேரம் சரியா பூடும். அந்த சூழல்ல கூட சிலர் "கற்பழிப்பு/கில்மான்னு" போறாய்ங்கன்னா அவிகல்லாம் தெய்வங்க.

1-7
லக்னாதிபதி 7 லருந்தா சதா சர்வ காலம் தன் மனைவி/அவளுடனான கில்மா பற்றியே யோசிச்சுக்கிட்டு கிடப்பாய்ங்க.

இப்படி கீறவனை பொஞ்சாதியே " வேலை வெட்டி எதுனா இருந்தா பாரு - நாலு இடம் சுத்திட்டு வா.. வெறுப்பா கீது"ன்னிருவா.

கண்ணாலத்துக்கு மிந்தி கனவுகள் அதிகமா இருக்கிறதால யதார்த்தம் என்னதான் பாசிட்டிவா அமைஞ்சாலும் கனவை போல இருக்காதே.

1-8

லக்னாதிபதி எட்டுல இருந்தா என்னாகும்? லக்னாதிபதின்னா ஜாதகர். எட்டாமிடம்னா இன உறுப்பு. கூட்டி களிச்சு பாருங்க . ரெண்டு பக்கமும் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தி மாதிரி சக்தி விரயம் பண்ணி அசலான நேரத்துல இழந்த சக்தி வைத்தியர்களை தேடி ஓடவேண்டி வந்துரும். மேலும் எட்டுன்னா மரணம். ஜாதகர் முகத்துல பிணக்களை வரனும். அதுக்கு அவர் பல தாட்டி சாகனும். சாக தில்லில்லாதவுக சரணடையறது செக்ஸ்ல தானே.

(லக்னாதிபதி மத்த பாவங்கள்ள இருந்தா ஆண்மை இழப்பு /திருமண தாமதம் எப்டி ஏற்படும்.அதுக்கு என்ன ரெமிடின்னு அடுத்த பதிவுல பார்ப்போம்)

உடுங்க ஜூட்