Showing posts with label லக்னம். Show all posts
Showing posts with label லக்னம். Show all posts

Thursday, November 17, 2011

ராசியா? லக்னமா?


ஜாதகத்தை அனலைஸ் பண்ணும்போது,தசாபுக்திகளுக்கான பலனை கணிக்கும்போது லக்னத்தையும்,கோசார பலனை கணிக்கும்போது ராசியையும் பேஸ் பண்ணிக்கனுங்கறது அடிப்படை விதி. அதே சமயம் ராசியாதிபதி,லக்னாதிபதி ரெண்டு பேர்ல ஆரு பலம்மா இருக்காய்ங்கனு பார்த்து ஒர்க் அவுட் பண்ணனும்னுல்லாம் நேத்து சொல்லியிருந்தேன்.

ஒரு வேளை ராசியாதிபதி -லக்னாதிபதி ரெண்டு பேரும் பலம்மா இருந்தா ஆரை பேஸ் பண்றதுன்னு சிண்டை பிச்சுக்கனும் -அனுபவத்தை வச்சுத்தேன் டிசைட் பண்ணனும்னு சொல்லியிருந்தேன். இந்த மேட்டர்ல மொத பேஷண்ட் நாமதேன்.

நம்முது கடகலக்னம்,சிம்மராசி. லக்னாதிபதியான சந்திரனும் -ராசியாதிபதியான சூரியனும் பரிவர்த்தனம் அடைஞ்சிருக்காய்ங்களா.. ஒவ்வொரு சனி பெயர்ச்சி,குரு பெயர்ச்சிக்கும் அது அனுகூலமா பிரதிகூலமான்னு சிண்டை பிச்சுக்கறதே வேலை.

ராசிய வச்சு பார்த்தா 3 ல சனி வேலை செய்யனும். லக்னத்தை வச்சுப்பார்த்தா 4 ல சனி வேலை செய்யனும். சமீபத்திய அனுபவங்களை வச்சுப்பார்த்தா ரெண்டுமே வேலை செய்யறது.

3-ல் சனி:

தினத்தந்தியில 2007 ஏப்ரல்ல சேர்ந்ததுலருந்தே வீட்டு நிர்வாகம் மொத்தத்தையும் மகளுக்கு கொடுத்து விட்டாச்சு. அதனால கொஞ்சம் பொளச்சம். தினசரி தாதா மாமூல் கணக்கா காலை 30 மாலை 30 வாங்கி அதை மட்டும் அழிக்கிறது. அப்படியும் ரெண்டு தாட்டி பல்லு கட்டி மொக்கை. இப்பம் 3 ஆவது.

போன மாசம் (2-ல் சனி இருக்கிறச்ச) பொஞ்சாதியும் மகளும் ஏதோ கண்ணாலத்துக்கு போனாய்ங்க.மறு நாள் திரும்பிர்ரதா திட்டம். நமக்குன்னு பாப்பா ரூ.100 வச்சுட்டு போனாள். தாளி எதையாச்சும் உருப்படியா பண்ணா என்னன்னு வண்டியோட சைலன்ஸரை க்ளீன் பண்ண விட்டேன். அந்த பிக்காலி நம்ம தொப்பைய,முகத்துல தேஜஸை பார்த்து பார்ட்டி தாங்கும்டான்னுட்டு ஆயில் மாத்தினேன், ஸ்விட்சை மாத்தினேன்னு ரூ.300 க்கு பில்லை தீட்டி விட்டுட்டான். பல நாளைக்கப்பாறம் கை மாத்து வாங்கி சமாளிக்கவேண்டியதாயிருச்சு.

இதுவே சனிப்பெயர்ச்சிக்கப்பாறம் இதே போல ஒரு சந்தர்ப்பம் வந்தப்ப 400 ரூ வரை சர்ப்லஸ் பட்ஜெட்ல இருந்தம். பரவால்லடா மாப்ளே ராசிக்கு 3 ல சனி வேலை செய்றாருன்னு நிமிர்ந்தம். நம்ம பங்காளி ஜா.ராவுக்கு ஏதோ வேலை கிடைச்சுட்டாப்ல இருக்கு. பாவம் நேரமில்லை போல .வீக் எண்ட்ல மட்டும் கமெண்ட் போடறாரு

4-ல் சனி:
இந்த ஊட்டுக்கு பாடிகைக்கு வந்து 1 வருசமாகுது. வந்த நாளே ஊட்டுக்காரவுகளுக்கு நாம போட்ட கண்டிஷன் தனி மீட்டர் போட்டுரனுங்கறது.ப்ரீச் ஆஃப் அக்ரிமெண்ட். சரி ஒளிஞ்சு போவட்டும்னு நாமளே ரூ.2000 கொடுத்தம் ஏறப்போட்டு போட்டுருன்னுட்டம். இதுவரை ஒரு ம..ரும் நடக்கலை. இன்னைக்கு புதுசா தண்ணி விடமுடியாதுன்னுட்டாய்ங்க ( இதுக்கு அடிஷ்னல் சார்ஜு ரூ.300) .வண்டில சைலன்சர் ரெண்டு தாட்டி க்ராக்.கழட்டி -வெல்ட் பண்ணி மாட்டியிருக்கம். வீடு,வாகனம்லாம் நாலாவது இடம்தானே.

நம்ம ப்ளாகையும் ,சைட்டையும் (விதியில்லாம) பார்க்கிற சோதிடப்புலிகாள்! நீங்களே சொல்லுங்க. நமக்கு சனி 3 ல வேலை பார்க்கிறாரா? 4 ல வேலை பார்க்கிறாரா?

Friday, October 14, 2011

மல்ட்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டரும் ஜோதிடமும் « Anubavajothidam.com


அண்ணே வணக்கம்ணே !
சத்ரு ரோக ருண உபாதைகள் இல்லாத பார்ட்டி உலகத்துலயே கிடையாது. இன்னம் சொல்லப்போனா இந்த உபாதைகள் இல்லாத நாடே கிடையாது. இந்த உபாதைகளை தவிர்க்க ஒரு அயனான பரிகாரத்தை தரத்தேன் இந்த பதிவு.

"ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா"னு எழுதி வச்சாரு கண்ணதாசன். இதையே சைக்காலஜி டெக்னிக்கலா மல்ட்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்னு சொல்லுது.

லக்னத்துல அ ஏழுல கச்சா முச்சான்னு கிரகங்கள் இருக்கிறது , அல்லது லக்னாதிபதி கெட்ட சகவாசம் பண்றது, மனோ காரகனான சந்திரன் சகட்டுமேனிக்கு கிரகங்களோட சேர்ந்திருக்கிறது இப்படியா கொத்த கிரக நிலைகள்ள பிறந்தவுக இந்த மன நோய்க்கு ஆளாக வாய்ப்பிருக்கு.

நம்ம ஜாதகத்துல லக்னத்துல சூரியன்,புதன், உச்ச குருன்னு 3 கிரகங்கள். இதுல லக்னாதிபதி+ மனோகாரகனான சந்திரனோட சுக்ர சேர்க்கை.

ஒரு வகையில (ஐ மீன் ஒரு கோணத்துல) பார்த்தா முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் நமக்குள்ளே இருக்கிறதா பீத்திக்கலாம்.

சூரியன் -சிவா - அழித்தல் , புதன் -விஷ்ணு -காத்தல் , குரு -பிரம்மா -படைத்தல் . ஆனால் இன்னொரு கோணத்துல பார்த்தா புதன் விரயாதிபதி , குரு ரோகாதிபதி.

சந்திர சுக்கிர சேர்க்கையிலும் ரெண்டு கோணமிருக்கு. சந்திரன் -மனம் , சுக்கிரன் -கலை ( இதையே சந்திரன்னா மனசு - சுக்கிரன்னா கில்மான்னும் அனலைஸ் பண்ணலாம்)

இதை நெகட்டிவா பார்த்தா சுக்கிரன் பாதாகாதிபதி ( நம்ம கடகலக்னத்துக்கு) . இதனாலதேன் இருக்கிறதுலயே வெள்ளை சாம்பார் தனமான ஜோதிட "கலையை" கூட நம்ம ஆசனத்துக்கு கடப்பாறை கொண்டுவர்ர ரேஞ்சுல வெளிப்படுத்திக்கிட்டிருக்கோம்.

இல்லாட்டி அய்யரு ஊஞ்சல்ல உட்கார்ந்திருந்தாரு -அய்யரம்மா காஃபி கொண்டு வந்து கொடுத்தாய்ங்கனு ஆரம்பிச்சு எழுதிக்கிட்டிருந்திருந்தா கல்கியிலயே தொடர்கதை எழுத வாய்ப்பு கிடைச்சிருக்கலாம்.

சின்ன வயசுல நாம ரெம்ப சென்சிட்டிவ். "ஏண்டா பல் தேய்க்காம இட்லி சாப்பிட்டே இதைவிட ஜா.ரா மாதிரி பார்ட்டிங்க போட்ட கமெண்டுகளை படிக்கலாமே" னு அண்ணன் சொன்னதை தாங்கமுடியாம "உங்க சங்காத்தமே வேணாம்னு வீட்டை விட்டே வெளியேறிட்ட கேஸு.

கூச்சம் சாஸ்தி. ஒரு தாட்டி திருப்பதிக்கு போனேன். அண்ணனோட அறையில தான் ஹால்ட். சாயந்திரம் அங்கன இருந்த சொந்தக்காரவுக வீட்டுக்கு போனோம். போறச்ச கல்லா இருந்த குடல் கலக்க ஆரம்பிச்சது . நான் ரூமுக்கு போறேன்னேன். அண்ணன் ஒத்துக்கிடலை.

சொந்தக்காரவுக வீட்டுக்கு போயி போலாம். வாடான்னுட்டான். நான் ங்கோத்தா தேவையே இல்லை. விட்டுரு .ரூம்லயே பார்த்துக்கறேன்னுட்டன். ஆனால் அங்கன போனதும்..

"டே வெள்ளை! ஏதோ வேலையிருக்குன்னியே.. போகனுமா.. போறதாருந்தா போ.. போடா"னு லந்து பண்ண ஆரம்பிச்சிட்டான். பத்து நாளு தங்க போன நாம மறு நாளே பிச்சுக்கிட்டு சித்தூர் வந்துட்டம்.

இதான் நம்ம கேரக்டர். இந்த அழகுல டீன் ஏஜ் பிரச்சினைகளை எல்லாம் ஆருகிட்ட டிஸ்கஸ் பண்றதாம். அப்பத்தேன் திருச்சில இருந்து நம்ம நண்பன் சம்மர் லீவுக்கு வந்திருந்தான். ( கொல்ட்டி -சாம்பார் மேட்டர் சொல்லி நொந்த அதே நண்பன்) அவன் தான் கில்மா மேட்டர்ல அதுவரைக்கும் நமக்கு இருந்த தயக்கம்,கூச்சம், போலித்தனம் எல்லாத்தையும் ஒழிச்சு கட்டினான்.

ஆனால் அந்த ரேஞ்சுக்கு டிஸ்கஸ் பண்ண இங்கன ஆள் கிடையாது. அதனால டிஸ்கஸ் பண்ணி தெளிவு பெற ஒரு கவுண்டர் பார்ட் தேவைப்பட்டது. அப்பம் சுஜாதாவோட கணேஷ் வசந்த் ரெம்ப பிரபலம். நமக்கும் சுஜாதா மேல ஒரு அபிமானம் இருந்தது. உபரியா நாம ரஜினி ரசிகன் வேற ( அந்த காலத்துல)

சுஜாதாவோட வசந்த், நம்ம திருச்சி நண்பன், ரஜினி காந்த் + நாம எப்படில்லாம் இருக்கனும்னு நினைக்கிறோமோ அந்த அம்சங்கள் எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி முகேஷ்னு ஒரு கேரக்டரை உருவாக்கினோம்.

நாம எழுதற கதைகள் நம்ம கேரக்டர் வந்தா அதுக்கு நிச்சயம் முகேஷ்ங்கற பேருதான். 1991 ல கலப்பு திருமணம் - வேலையின்மை -ஏழ்மை - நாயடில்லாம் நல்லாவே பக்குவப்படுத்த கொஞ்சம் இறங்கி வந்து "அழகு"ங்கற கேரக்டரா மாறினோம்.

முகேஷ் ஹீரோயிக் கேரக்டர். அழகு கொஞ்சம் போல மோரல்ஸ் -லட்சியம்லாம் உள்ள சாமனியன். ஓஷோவை படிக்க ஆரம்பிச்ச பிற்காடுதான் முருகேசனை இந்த முருகேசன் டோட்டலா அங்கீகரிக்க முடிஞ்சது.

இதையெல்லாம் எவனும் சொல்லிக்க மாட்டான். ஆனால் நாம சொல்லிக்குவம்.ஏன்னா நமக்குள்ள எந்த ஹிடன் அஜெண்டாவும் கிடையாது. நேரிடை ஜன நாயகத்துல ஜனாதிபதியாகனும்ங்கற மேட்டரையே உடைச்சாச்சு. இனி மறைக்க என்ன இருக்கு?

அரசியல்ங்கற சர்க்கசை பார்த்து பார்த்து சர்க்கஸ் வீரர்களை எல்லாம் அட்மைர் பண்ண ஆசாமி நாம. நம்ம கேரக்டர் பஃபூன் கேரக்டரா கூட இருக்கட்டும். இன்னைக்கு நாம பார்த்து அட்மைர் பண்ண சர்க்கஸ் வீரர்கள் ஆருமில்லை.

நோ ஐ.சி ( இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்) . ஒரு கை பார்த்துர்ரதே சரி. நாம ஜனாதிபதி ஆகிறோமோ இல்லையோ. மனசை நெல்லா சூப்பர் ரின் போட்டு வெளுத்தாச்சு.

ஒதகாத மேட்டரையெல்லாம் போட்டு அடைச்சு நம்ம எழுத்தும் பேச்சும் மலச்சிக்கல் காரனோட அபான வாயு மாதிரி நாற கூடாது. சரி சைக்காலஜி போதும். அஸ்ட்ராலஜி மேட்டர் ஒன்னு சொல்றேன்.

லக்னத்துக்கு ஆறாம் பாவத்துக்கும் தொடர்பு ஏற்பட்டா கடன் ,நோய், வழக்கு இத்யாதி தொல்லைகள் வரும். எந்த காரியத்தை எடுத்தாலும் வாயிதா, தடை.

இதுக்கு நான் ஒரு சில பரிகாரம் சொல்றது வழக்கம்.

1.ஒரே சப்ஜெக்டை எடுத்துக்கங்க. அதுக்கு பாசிட்டிவா ஒரு பக்கம் - நெகட்டிவா ஒரு பக்கம் எழுதுங்க.

உ.ம் வரதட்சிணை நல்லது /வரதட்சிணை கெட்டது.

2.பத்திரிக்கைகள்ள ஆசிரியருக்கு கடிதம்னு ஒரு பகுதி இருக்கும். அதுக்கு ஏதாவது ஒரு புனைப்பெயர்ல உங்க துறை - பகுதியின் பிரச்சினைகளை எழுதி அனுப்புங்க. அந்த புனைப்பெயருக்கு சொந்தம் கொண்டாடாதிங்க.

3.எந்த ஒரு நல்ல வேலையானாலும் சொந்த காசுல செய்யாதிங்க. கடன் வாங்கி செய்ங்க.


உஸ் அப்பாடா.. சைக்காலஜி அஸ்ட்ராலஜி ரெண்டையும் மிக்ஸ் பண்ணி ஒரு பதிவு போட்டாச்சு. தமிழ் மணத்துல வெறுமனே சோசியத்தை பத்தி எழுதினா இது செல்ஃப் ப்ரமோஷன் போஸ்டுன்னு ரிமூவ் பண்ணிர்ராய்ங்க தலை.