Showing posts with label பொம்பள. Show all posts
Showing posts with label பொம்பள. Show all posts

Friday, June 8, 2012

பொம்பளைய நம்பலாமா: 2


//ஹெல்த்தியா உள்ள 45 வயசு காரன் கையில இருக்கிற வாக்கிங் ஸ்டிக் கணக்கா தாய்குலத்தோட டீலிங் வச்சுக்கிட்டா நோ ப்ராப்ஸ்.//

இது நேத்து நாம விட்ட பஞ்ச். இப்படி டீலிங் வச்சுக்க முடியாதவுக லைஃப் பிக்சரை நேத்து சொல்லியிருந்தம்.

இவிகளுக்கு என்ன தான் பரிகாரம்?

எந்த பிரச்சினைக்கும் தீர்வு ஜஸ்ட் சின்ன புரிதல்தான். சீனம்,சீனா,சைனா இப்படி எந்த பேர்ல குறிப்பிட்டாலும் ஒரே நாட்டை தான் குறிப்பிடறோம்.

அங்கன கிடைக்கிற களி மண்ணை சைனா க்ளேன்னு சொல்றோம். நம்ம ஒக்காபிலரியில சைனா டிஷ் அ பீங்கான்.

இந்த மெட்டீரியல்ல சிரிக்கும் புத்தர் சிலையும் கிடைக்குது , கப் அண்ட் சாஸரும் கிடைக்குது , கக்கா போறதுக்கான டபுள்யூ சியும் கிடைக்குது.

புத்தர் சிலைக்கு பூ போட்டு வணங்கறோம்.கப் அண்ட் சாசர்ல டீயோ காஃபியோ சாப்பிடறோம். இன்னொரு சமாசாரத்தை அல்ப சங்கியைக்கு உபயோகிக்கிறோம்.

பீங்கான்ல செய்த புத்தர் சிலையை வணங்கறதால அதே மெட்டீரியல்ல செய்த கப் அண்ட் சாஸர்ல டீ சாப்பிடமாட்டேன். அல்ப்ப சங்கியைக்கு ஒதுங்கமாட்டேன்னா அது பை. தனம்.

இதே விதத்துல தாய்,சகோதிரி , நண்பி ,லவ்வர், பொஞ்சாதி எல்லாரும் ஒரே ஜாதி தான்.ஆனால் அவிகவிகளை எப்படி டீலிங் பண்ணிக்கனுமோ அப்டி பண்ணிக்கனும். குழப்பிக்க படாது.

அதே போல பெண் வாழ்க்கையில ஒரு பார்ட். (முக்கியமான பார்ட்டுன்னு வேணம்னா வச்சுக்கலாம்) அதை விட்டுப்போட்டு எட்டாத காய் பார்த்து கொட்டாவி விடறதெல்லாம் வெட்டி.

அந்த பெண்ணே கூட தனக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறவனை சிலகாலம் பிரமிப்பா பார்க்கலாமே தவிர அவளோட காதலை பெற - அவளோட வாழ அது ஒன்னே தகுதி கிடையாது.

ஒவ்வொரு மன்ச ஜென்மமும் சேற்றில் முளைத்த செந்தாமரைதான். ச்சொம்மா ஜூம் போட்டு தாமரையை மட்டும் பார்த்துக்கிட்டிருந்துட்டு திடீர்னு சேற்றை பார்த்தா லவ் எல்லாம் ஓடிப்போயிரும்.

அதனால எதிராளிய பார்க்கும் போதே அப்பப்போ மிட் ஷாட், லாங் ஷாட்டுன்னு பார்த்துக்கிட்டிருக்கனும். இல்லின்னா மிரண்டு போயிருவம்.

பெண் என்பவள் இரண்டு விதமாக இருக்கிறாள். ஒன்று அவளது உடல் ரீதியான பலவீனம் தந்த குறுக்கு புத்தி, வியூகங்கள், பாதுகாப்பற்ற தன்மை இதெல்லாம் சேர்ந்து தயாரித்த தற்போதைய பெண்.

மற்றொரு பெண் ஒவ்வொரு பெண்ணிலும் அவளது மன ஆழத்தில் இருக்கிறாள். அவள் சில மில்லி கிராம் அன்புக்கு ஏங்கியபடி, அது கிடைத்தால் ஆதிசக்தியாகி அந்த அன்பை செலுத்தியவனுடைய குடும்பம்,வம்சம்,ஏன் அவன் ஊர்,உலகத்தையே காத்து ரட்சிக்கக்கூடிய இயற்கையின் பிரதி நிதியான பெண்ணும் இருக்கிறாள். -(இது சீரியஸ்)

கண்ணாலத்துக்கு மிந்திதான் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு கேரக்டர். கண்ணாலத்துக்கு அப்பாறம் அவள் ஜஸ்ட் மனைவி " ஏன் லேட்டு " " இந்த சம்மருக்குன்னா ஊட்டி உண்டா இல்லியா" " ஊர்ல இருக்கிறவனுக்கெல்லாம் ஓடி ஓடி செய்விங்க என் தம்பின்னா மட்டும் இளக்காரம்"

மைண்டு ஒரு குட்டி பின்னாடி ஓடுதுங்கற ஃபீலிங் வந்த ஒடனே இந்த தத்துவம்லாம் ஞா வராது. சின்ன வயசுல காட்லிவர் ஆயில் சாப்டிருந்தா ஞா வரும் .தப்பிச்சுக்கலாம் (இது காமெடி)

ஒரு பொருளை பெறும் தகுதி தனக்கிருக்குங்கற நம்பிக்கை இருந்தாலே அந்த பொருள் மேல ஆர்வம் குறைஞ்சுரும்.

அதை பெறும் தகுதி தனக்கில்லையோ -எவனாச்சும் முந்திக்குவானோ - எவனாச்சும் அடிச்சுக்கிட்டு போயிருவானோங்கற பீதியிருக்கும் போது தான் ரெஸ்ட்லெஸ்னெஸ் வந்துரும். பரபரப்பு,பதைப்பு வந்துரும்.

அப்பாறம் தத்துவம் கித்துவம்லாம் சைடு வாங்கிரும். மூளை டார்ஜான் வைரஸ் புகுந்த கம்ப்யூட்டர் மாதிரி ஆயிரும்.

உங்க ஃபோட்டோவை வச்சு பூஜை பண்றாங்கற ஒரே காரணத்துக்காவ நீங்க விரும்பாத பெண்ணை உங்களால லவ்வ முடியுமா? ரோசிங்க. நம்ம மாதிரிதானே தாய்க்குலமும்.

இப்பல்லாம் இந்த குட்டிங்க எந்த மாதிரி பயலுவளை விரும்பறாய்ங்கன்னு சர்வேல்லாம் வருது. அதையெல்லாம் படிச்சு குவாலிஃபைடாகி அப்பாறம் லவ்வறதுதேன் அல்லாருக்கும் சேஃப்டி.

எங்க காலத்துலல்லாம் ஹையர் சைக்கிள்ள ஹேண்டில் பார்லருந்து ரெண்டு கைய தூக்கிட்டு வந்தாலே குட்டிங்க செம பார்க்கும். விளுந்தா செம சில்லறை கிடைக்கும்.

இன்னைக்கு லட்ச ரூவா பைக்ல டெத் ரேஸ்ல போயிட்டிருந்தா கூட "பாவம்.. இன்ஷியூர் பண்ணானோ இல்லியோ"ங்கற கமெண்ட் தான் கிடைக்கும். தவறினா சங்குதேன்.

சத்தியம் அந்த முனைலயும் நஹி இந்த முனையிலயும் நஹி அது மையத்துல இருக்கு. பெண்ணை வெறுக்கவும் தேவையில்லை. பூஜை பண்ணவும் தேவையில்லை. சக மனுச சன்மமா ட்ரீட் பண்ணா போதும்.

ஒரு பெண் உங்க வாழ்க்கைய ஸ்வர்கமாக்கவும் போறதில்லை - நரகமாக்க போறதுமில்லை. சாதிக்கிறவன் பொஞ்சாதி நச்சரிப்பை மீறித்தான் சாதிக்கிறான். வாழ்க்கையில தோத்துப்போறவன் கலைவாணியே பெண்ணுரு கொண்டு பொஞ்சாதியா வந்தாலும் தோத்துத்தான் போவான்.

இந்த பொம்பளை மேட்டரை ஃப்ரீயா உட்டுட்டு நார்மலா இருக்க ட்ரை பண்ணனும்.

உடலில் நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. இவை ஒவ்வொரு ரசாயனத்தை சுரந்து ரத்தத்தில் கலக்கின்றன.

இவை சுரந்து கலக்கும் ரசாயனங்களுக்கும் கோழைத்தனம், வீரம், சுய நலம், தியாகம் ,காமம், காதல் இத்யாதி குணங்களுக்கும் தொடர்பு உள்ளது.

மேற்சொன்ன நாளமில்லா சுரப்பிகளுக்கெல்லாம் தலைவன் ஹைப்போதலாமஸ். இதன் கட்டளைப்படி இதர சுரப்பிகள் வேலை செய்கின்றன.(ரசாயனங்களை சுரக்கின்றன) ரசாயனங்களுக்கேற்ற குணம் ஏற்படுகிறது.

மேற்சொன்ன நாளமில்லா சுரப்பிகளை,அவற்றின் சுரப்புகளை யெல்லாம் கட்டுப்படுத்தும் தலைவனான ஹைப்போதலாமசை கட்டுப்படுத்துவது எது தெரியுமா? நமது எண்ணம் . இந்த எண்ணங்களை நம் ஜாதகத்திலான சந்திரனின் இருப்பு கட்டுப்படுத்துது.. ( மறுபடி மொதல்லருந்தா...ஆஆஆஆஆஆஆஆஆ)

வேணாம் பாஸ் நாளைக்கே பார்ப்போம்..

Thursday, June 7, 2012

பொம்பளைய நம்பலாமா?


//வேணா மச்சான் வேணா இந்த பொண்ணுங்க காதலே//ங்கற இன்றைய திரைப்பாடல்லருந்து

//ஆலகால விஷத்தை நம்பலாம், கோலமாமத யாணையை நம்பலாம்,
கொல்லவரும் வேங்கைபுலியை நம்பலாம். காலன்விடும் தூதையும் நம்பலாம்.
சேலைகட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று திகைப்பார்தாமே, //ங்கற சித்தர் பாடல் வரை தாய்க்குலத்துக்கு ஆன்டியாவே இருக்கே . இன்னாபா மேட்டருனு கேப்பிக,

(சப்ஜெக்ட் தாவலை தலை! நம்ம தொடர்பதிவோட லைன் அப்பை விட்டு டைவர்ட் ஆகலை பாஸு.. ச்சொம்மா போற போக்குல டச் பண்றேன் தட்ஸால்)

எங்கயோ கேட்டது/படிச்சது.

ஹெல்த்தியா உள்ள 45 வயசு காரன் கையில இருக்கிற வாக்கிங் ஸ்டிக் கணக்கா தாய்குலத்தோட டீலிங் வச்சுக்கிட்டா நோ ப்ராப்ஸ்.

அதை விட்டுட்டு தாத்தா கையில உள்ள கைத்தடி கணக்கா ரெம்ப ஊனி நடந்தா மூஞ்சி பல்லு பேர்ந்துரும். பொம்பளைய நம்பாதேன்னவுகள்ளாம் முட்டாள் "பெண் இயற்கையின் பிரதி - நிதி - பிரதிநிதி" ன்னு சொன்ன நாந்தேன் க்ளெவருன்னு நான் சொல்லமாட்டேன்.

இந்த ஒலகத்துல எல்லா நிஜமும் நிஜமில்லை. எல்லா பொய்யும் பொய்யில்லை. எந்த நிஜமும் 100 சதம் நிஜமில்லை . எல்லா பொய்யும் 100 சதம் பொய்யுமில்லை.

எல்லா நிஜமும் 24 மணி நேரமும் நிஜமா இருக்கிறதில்லை. எல்லா பொய்யும் 24 மணி நேரமும் பொய்யா இருக்கிறதில்லை.

இங்கன எல்லாமே மாறும் .ஆளை பொருத்து , நேரத்தை பொருத்து . டீலிங்கை பொருத்து மாறும்.மாறிக்கிட்டே இருக்கும்.

சகோதிரிகள் உள்ள ஆண், சகோதரர்கள் உள்ள பெண் இவிக லைஃப் பிக்சரை பார்க்கலாம். சகோதிரின்னா ஆரு? தாயின் பிரதி.

ஒவ்வொரு ஆண் குழந்தையும் தாய் மீது மையல் கொள்ளும்னு சைக்காலஜி சொல்லுது. ( அப்பனை போட்டுதள்ளிர்ர ரேஞ்சுக்கு போயிட்டா அது ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் - மனோவியாதி) சகோதிரி தாயின் பிரதி.

சகோதிரிகளிடை வளரும் ஆண் குழந்தை விவரம் தெரியறதுக்கு மிந்தி வெள்ளந்தியா ஒன்னு மண்ணா கிடக்கும். டீன் ஏஜ்ல ஒரு மிரட்சி வரும். நெருங்கலாமா கூடாதா?

இந்த மிரட்சி எல்லா பெண்கள் விஷயத்துலயும் பரவிருச்சுன்னா நாஸ்தி.. கான்ஷியஸ் மைண்ட்ல "கூடவே கூடாது"ங்கற கான்செப்ட் இருக்கும். சப் கான்ஷியஸா " வேணும்"ங்கற கான்செப்ட் இருக்கும். நிலத்துல புதை படும் நிலக்கரி அழுத்தம் காரணமா வைரமா மாறலாம். ஆனால் மனசுக்குள்ள அழுத்தப்பட்ட உணர்வு காஷ்மோரா மாதிரி . 12 வருசத்துக்கப்பாறம் பீறிட்டு கிளம்பலாம்.

மேலும் சகோதிரிகளோடு வளரும் ஆண்குழந்தை கொஞ்சம் பயந்த சுபாவமா ஃபிமிலிஷ் ஆ இருக்க வாய்ப்பிருக்கு. (என்விரான்மென்ட்) .

அதுலயும் சுருட்டை முடி,அழகான கண்கள்னு வடிவேலு சொல்றாப்ல சூப்பர் ஃபிகரா இருக்கிற சகோதிரிகள் இடையில் வளர்ர ஆண்குழந்தை பயந்த சுபாவமா வளர வாய்ப்பிருக்கு.

ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா பால்யத்துல ரெம்ப துணிச்சலா இருக்கிறதும் - டீன் ஏஜ்ல பயந்த சுபாவமா மாறுவதும் உண்டு.

பயம் செயல்படுவதை தடுக்கும். சிந்தனையை வளர்க்கும் . அது ஆக்கப்பூர்வமானதா இருந்தா நோ ப்ராப்ளம். இதர ஃபேக்டர்ஸ் சரியில்லின்னா அது பகல் கனவா மாறும்.

ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா செய்த அட்வென்சர்ஸ் - அந்த குழந்தைய சூடு கண்ட பூனையா மாத்தலாம். ஆனால் இயற்கை விதிகளின் படி பூனை பால் குடிச்சே தீரனும். ( பால்னா இங்கன நான் சொல்றது வள்ளுவர் சொன்ன 3 ஆவது பால்) . இதனால மன அழுத்தம், கான்ட்ராடிக்சன் இத்யாதி இத்யாதில்லாம் டெவலப் ஆகும்.

நினைவெல்லாம் நித்யாங்கற மாதிரி சப் கான்ஷியஸ் முழுக்க பிட்டு படமா ஓடும்.. அதனால ஒரு கில்ட்டி. தன் மேல தனக்கே நம்பிக்கையில்லாத நிலை.

அதனால கில்மாவுக்கு வாய்ப்பே இல்லாத வயசு, முறை உள்ளவுகளோட மட்டும் பழகலாம். அப்படி பழகும்போது உள்ளாற அழுத்தப்பட்ட காஷ்மோரா கிளம்பிருச்சுன்னா நாறிரும்.

இங்கே இன்னொரு பாய்ண்டை சொல்லனும். இறைக்கிற கேணி தான் ஊறும்ங்கறது லாஜிக்.ஆனால் இருக்கிற தண்ணி வயலுக்கு பாய்ஞ்சா தேன் கிணறு தன் கப்பாசிட்டிக்கு ஊறும்.

ஐ மீன் ஒரு ஆண் செக்ஸ் குறித்த நேரிடை கருத்துக்களுடன் "செயல்படுவதற்கான" வாய்ப்புகளுடன் இருக்கும் போது அவனோட பாடி கரீட்டா ஒர்க் அவுட் பண்ணி வைக்கும்.

எதிரிடையான கருத்துக்கள் இருந்தாலோ - செயல்படுவதற்கான உந்துதலோ -ஊக்கமோ இல்லாம இருந்தாலோ விந்து உற்பத்தியே குறைஞ்சு போயிரும்.

இதுல இன்னொரு லாஜிக். பால் பாத்திரம் நிரம்பி இருந்து -அதை காய்ச்ச ஆரம்பிச்சா நேரம் பிடிக்கும். இதுவே அதுல ஒரு ஸ்பூன் பால் மட்டும் இருக்குன்னு வைங்க. என்னாவும்?

படக்குனு காய்ஞ்சி , பொங்கி ,தீஞ்சுரும். இதெல்லாம் - இந்த சிக்கல் எல்லாம் அவிக உள் மனசுக்கு தெரியாட்டாலும் - பாடிக்கு தெரியும்.

மனசை உருவாக்கிறது இயற்கையிலருந்து விலகி ஓடிக்கிட்டிருக்கிற சமூகம். பாடியை உருவாக்கிறது ஆதி நாட்கள்ளருந்து அதே தாது உப்புக்கள்,விட்டமின்ஸ்,கார்போ ஹைட்ரேட், ப்ரொட்டீன்ஸ் தான், இதனால மனசை விட பாடிக்கு இயற்கையோட நல்ல ஒத்திசைவு இருக்கும்.

எதிர்காலத்துல இருக்கவே போறதில்லைங்கற "அலார்ம்" ஒலிச்சிட்டே இருக்க இவன் என்ன பண்ணுவான்? "காஞ்ச மாடு கம்பங்கொல்லை மேஞ்ச மாதிரி " செக்குக்கும் சிவலிங்கத்தும் வித்யாசம் தெரியாத மாடு மாதிரி .. போய்க்கிட்டிருப்பான்

இப்படியா கொத்த பார்ட்டிங்க தான் பொம்பளைய தாத்தா கைத்தடியா உபயோகிச்சுக்கிட்டு - இந்திரியம் தீர்ந்து சுந்தரியும் பேய் போல ஆகிர .. பதிவின் ஆரம்பத்துல சொன்ன தத்துவம்லாம் சொல்லிக்கிட்டு கிடப்பாய்ங்க. இது 12+12 பாலியல் விருப்பத்துல லைஃப் பிக்சர் நெம்பர்: 3

(இது பவர்கட் நேரம் மீதியை நாளைக்கு பார்க்கலாம்)