Showing posts with label தொழில். Show all posts
Showing posts with label தொழில். Show all posts

Thursday, February 13, 2014

தொழிலில் வெற்றி



அண்ணே வணக்கம்ணே !
ஜோதிடத்தை காலத்துக்கேத்தாப்ல அப்ளை பண்ணனும்ங்கறது நம்ம பாலிசி. சமீப காலமா இந்த பாலிசியை அப்ளை பண்ணி சில பதிவுகள் போட்டுக்கிட்டு வர்ரன்.
தொழில்னா இதுல விற்பனையும் ஒரு அங்கம். இன்னைக்கு விக்கிறவன் சாஸ்தி.வாங்கறவன் ரெம்ப கம்மி. ப்ரொடக்சன் ஒரு மலைன்னா சேல்ஸ் அதைவிட பெரிய மலையா இருக்கு.அதை ஏறமுடியாம அவனவன்  நாக்கு தள்ளி கிடக்கான்.
மொதல்ல சோதிடத்துக்கு சம்பந்தமில்லாத மேட்டரை சொல்லி விட்டுர்ரன். ஃபர்ஸ் அஃப் ஆல் நம்ம சரக்குல ஒர்த் இருந்து விலையும் நாணயமா இருக்கோனம். இது ரெண்டுமே இல்லாமலும் சிலருக்கு ஒர்க் அவுட் ஆகுது இல்லேங்கல. அவிகளை ஆத்தா பார்த்துக்குவா.
இந்த பதிவே சரக்குலயும் ஒர்த் இருந்து விலையும் நாணயமா இருந்தும் மூவ்மென்ட் இல்லை,சேல்ஸ் இல்லைன்னு தவிக்கிறவுகளுக்காகத்தேன்.
எச்சரிக்கை:
ரெண்டு பாரா படிச்சதுமே இதை ஏற்கெனவே படிச்ச மாதிரி இருக்கேன்னு நீங்க நினைச்சா அது கரெக்ட். நேத்திக்கு இந்த பதிவை அனுபவஜோதிடம் டாட் காம்ல போட்டம். அது என்ன இழவெடுத்துருச்சோ தெரியலை. சைட் ஈஸ் சஸ்பெண்டட்னு வருது.
அங்கன படிக்காதவுக படிச்சு பயன்பெறனுமேன்னு இந்த புதிய தலைப்புல - நிர்வாண உண்மைகள் ப்ளாக்ல இதைபோஸ்ட் பண்றேன். 
ஏற்கெனவே படிச்சவுக விலகிருங்க. மத்தவுக தொடரலாம்.
மொத பாய்ண்ட் நீங்களே ப்ரொடக்சன் நீங்களே சேல்ஸான்னு தெரியனும். ஜஸ்ட் சேல்ஸுதான்னா ரெம்ப சிம்பிள் ..உங்க ஜாதகத்துல லக்னாதிபதி விரயத்துல இருக்கறதோ அல்லது விரயாதிபதியோட சகவாசம் பண்றதோ இருந்தா மோதும் மெறிச்சிக்கலாம். குறைஞ்ச பட்சம்  உங்க சேல்ஸ் மேனேஜர்/கொடவுன் இன்சார்ஜ் ஆச்சும் இந்த மாதிரி ஜாதகத்துல அமைஞ்சா சூப்பரு.
என்ன ஒரு கண்டிஷனுன்னா க்ரெடி பேஸ்ட் சேல்ஸ் கூடாது. ப்ரொடக்சனும் நீங்களேன்னா மேற்படி கிரக  அமைப்பு செம  நாஸ்தியாக்கிரும். அது வேற ஸ்கூல்.
அடுத்து ஸ்டாக் வைக்கிற இடம். இது உங்க கொடவுன்லயே தென் கிழக்கு மூலை எதுன்னு பார்த்து அங்கன வைக்கனும். அதே போல அங்கன வைக்கிற சாமி படம்லாம் கொஞ்சம் டிஃப்ரன்டா இருக்கனும். உ.ம் நிக்கிற லட்சுமி,குழலூதும் கண்ணன்,தியானத்துல உள்ள ஈஸ்வரன். (இதெல்லாம் வீட்ல வைக்கவே கூடாது)
உங்க ப்ராடக்ட் எதுன்னு பார்க்கனும். அதுக்கு எந்த கிரகம் காரகம்னு பார்க்கனும். அந்த கிரகம் உங்களுக்கு அனுகூலமா பார்க்கனும் அது ரெம்ப முக்கியம். அதே நேரத்துல அவரு உங்க ஜாதகத்துல சூப்பர் மோஸ்ட் பலத்தோடவும் இருக்கக்கூடாது.
உ.ம் உங்க ஜாதகத்துல செவ் உச்சம்.  நீங்க பட்டாசு ஸ்டாக் வச்சிருக்கிங்கனு வைங்க. சரக்கு லேசுல மூவ் ஆகாது. வேற ஒரு ஜாதகருக்கு செவ் நீசம்.அவரும் இதே வேலைய செய்றாருன்னு வைங்க பிச்சுக்கிட்டு போகும் (என்ன ஒரு வில்லங்கம்னா படக்குனு தீ விபத்து கூட நடக்கும்)
ஏன்னா எந்த கிரகம் அட் மோஸ் பவர்டா இருக்கோ அந்த காரகம் உள்ள பொருட்கள் உங்களை விட்டு போகாது.
அதே நேரத்துல எந்த கிரகம் ஏற்கெனவே உங்க லைஃப்ல விளையாடிருச்சோ அந்த கிரக காரகம் கொண்ட பொருள் கூட லாபம் தரும்.
உ.ம் ஏற்கெனவே நீங்க பயங்கர தீவிபத்துல சிக்கி பிழைச்சவருன்னு வைங்க அப்பம் பட்டாசு தொழில் ஒர்க் அவுட் ஆகும்.
ஜோதிடம் 360 மொத பதிப்பு வெளியிடும் போது ஸ்கின் ப்ராப்ளம் இல்லை.அதனால குடிசை தொழில் கணக்கா டூ கலர் ரேப்பரோட போட்டம். இப்பம் ஸ்கின் ப்ராப்ளம் லந்து பண்ணிக்கிட்டிருக்கிறதால தூளான ப்ரொஃபெஷ்னல் எக்சலன்சியோட வந்திருக்கு.
விற்பனைக்கு எந்தெந்த கிரகம் எப்டில்லாம் உதவும்னு பார்த்துரலாம். இந்த கிரகங்கள் உங்க ஜாதகத்துல பல்பு வாங்கி சரக்கு முடங்கி கிடக்கா? அதுக்கெல்லாம் பரிகாரம் இருக்கும் அடுத்த பதிவுல சொல்றேன்.
1.சூரியன்:
மார்க்கெட் லீடராக்குவார். விளம்பரம்- ஃபீல்ட் கேன்வாஸ்,ஃபீல்ட் எம்ப்ளாயிஸ் அமைய உதவுவாரு. அப்பா காலத்து உற்பத்தியில புதிய இன்னிங்ஸ் துவக்க செய்வாரு. கிராமப்புற,புற நகர்
2.சந்திரன்:
உங்க உற்சாகம் உங்கள் சேல்ஸ் ரெப்ஸை தொத்திக்கும்.அவிக உற்சாகம் டீலரை தொத்தும். லாஜிக்கே இல்லாம மக்கள் மத்தியில ஒரு  குட் வில்லை ஏற்படுத்துவாரு. உதாரணமா நான் "நந்தி ப்ராண்ட்" தீப்பெட்டிகள் உபயோகிச்சப்போ ஃபுல் பந்தாவா இருந்தன். வைட் பியர் உபயோகிக்கும் போதும் பரவால்லை. பிறவு செம நாஸ்தி.இடையில லட்சுமி ப்ராண்ட் கிடைச்சது உச்சம். கொஞ்ச காலம் முன்னே கூட யானை ப்ராண்ட் .சூப்பரு. இப்படி ஏதோ ஒரு சென்டிமென்டல் காஸ் உங்க சரக்கோட விற்பனைய தூக்கிவிடும். ஆனால் காரணமே இல்லாம ஒரு 14 நாள் சரக்கு தூங்கவும் செய்யலாம்.
3.செவ்வாய்:
போட்டி உற்பத்தியாளர்களை முடக்கி உங்களை முன்னணிக்கு கொண்டு வருவாரு.
4.ராகு:
மார்க்கெட்ல ஏற்படக்கூடிய எதிர்பாரா திருப்பங்கள் உங்களுக்கு சாதகமா அமையும்.
5.குரு:
அரசு ஆதரவு,அரசு கடன்,அரசியல் ஈடுபாடு காரணமா சேல்ஸ் பிச்சிக்கும்
6.சனி:
தொழிலாளர்கள் சைட்ல கிடைக்கிற ஆதரவு விலைய குறைக்க உதவலாம். லேபர் ஏரியா,ஸ்லம் ஏரியாவுல பிச்சுக்கும்
7.புதன்:
சரியான டீலர்/ஏஜெண்டுகள் கிடைப்பாய்ங்க. மீடியா ஒத்துழைப்பு நெல்லா இருக்கும் ஆடிட்டர் வழியில ஒரு நல்ல திருப்பமே கூட ஏற்படலாம்.
8.கேது:
ஒரு புதிய தொழில் நுட்பத்துல இறக்கும். கொஞ்ச காலம் அவதிப்பட்டாலும் நிக்கலாம். நின்னு காட்டலாம்.உசந்தும் காட்டலாம்.
9.சுக்கிரன்:
பெண்கள் ஆதரவு கிடைக்கும். அப்பர் மிடில் க்ளாஸ், ஹை க்ளாஸோட ஆதரவும் கிடைக்கும்.
சரி இந்த கிரகங்களோட பலம் இல்லின்னா என்ன செய்றது பாஸ்? இதானே உங்க கேள்வி?அடுத்த பதிவுல க்ளியர் பண்றேன்.
பை தி பை  எக்கச்சக்கமா இன்வெஸ்ட் பண்ணிட்டு ப்ரிண்ட் ஆகி வந்த புக்ஸை கூரியர்ல அனுப்பக்கூட வசதியில்லாம முடங்கி கிடக்கேன் நாம பப்ளிஷ் பண்ணியிருக்கிற 4 புக்ஸையும் வாங்கி ஆதரிங்க பாஸூ..

மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
swamy7867@gmail.com

Saturday, October 6, 2012

பட்டையை கிளப்பும் புதிய தொழில் வாய்ப்புகள்

அண்ணே வணக்கம்ணே !

மக்கள் சந்தை டாட் காம் - தொழிற்களம் வலை தளத்தில் பணம் பணம் பணம் தொடர்பதிவு போட்டுக்கிட்டிருக்கோம் .( ஹி ஹி நாலஞ்சு நாளா  நோ அப்டேஷன்  )

அதுல மாறி வரும் குடும்ப, சமூக ,  அரசியல்,பொருளாதார  நிலவரங்களை உத்து கவனிச்சா புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறியலாம்னு போற போக்குல குறிப்பிட்டிருந்தேன்.

ஊருக்குத்தான் உபதேசமா  நீ கவனிக்கலியான்னு கேப்பிக.கவனிச்சேன். கவனிச்சதுல புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறிஞ்சிருக்கேன். அதுல சிலதை நாமே துவக்கி செய்யலாம்னும் திட்டம் இருக்கு.

அந்த பட்டியலை இங்கே தரேன். கூடவே எந்த தொழில் எந்த கிரக காரகம்னும் குறிப்பிட்டிருக்கேன். உங்க ஜாதகத்துல குறிப்பிட்ட கிரகம் பெட்டர் பொசிஷன்ல இருந்தா நீங்களும் கலக்கலாம்.

ஓகேவா உடுங்க ஜூட்டு..


Tuesday, August 2, 2011

தொழில்,உத்யோகம்:ஆண் பெண் வித்யாசம்


அண்ணே வணக்கம்ணே !
ஆண் பெண் வித்யாசங்கள்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு அடிச்சு பிடிச்சு 9 பாவம் முடிச்சு இப்பம் பத்தாம் பாவத்துக்கு வந்திருக்கம். இது ஜாதகரோட தொழில்,உத்யோகம் இத்யாதிய காட்டும் பாவம். இந்த பாவத்தை பொருத்தவரை ஆண் பெண்ணுக்கு இடையில் என்ன வித்யாசம்னு பார்ப்போம்.

ஜாதகத்துல 9 ஆம் பாவத்தை தர்மஸ்தானம் -10 ஆம் பாவத்தை கர்மஸ்தானம்னு சொல்வாய்ங்க. இந்த ரெண்டு பாவாதிபதிகளும் சம்பந்தப்படறதை தர்ம கர்மாதிபதி யோகம்னு சொல்றாய்ங்க. தொழில்ல முழு ஈடுபாட்டை காட்டறவன் செய்யும் தொழிலே தெய்வம்னு இருந்துருவான்.இதனால கோவில் குளம் தானம் தருமம் இத்யாதி மேல எல்லாம் அவனுக்கு ஈர்ப்பு இருக்காது. ( இந்த நிலை 10 ஆம் பாவம் பலம் பெற்றா கிடைக்கும்)

அதே போல 9 ஆமிடம் பர்ஃபெக்டா இருந்தா அப்பா குண சீலரா இருப்பாரு.இவன் தந்தை சொல்மிக்க மந்திரமில்லைனு இருப்பான். புராணம்,இதிகாசம் இத்யாதிகளை படிச்சு அவற்றின் சாரத்தை பிடிச்சுருவான். இதன் விளைவாக "வியாபாரம் த்ரோஹ சிந்தஹா"னு தோனிரும்.அதனால் தொழில்ல ஆர்வமிருக்காது.

இவிக ரெண்டு பேரும் ( தர்ம கர்மாதிபதிகள்) சம்பந்தப்படும்போது தொழிலை தர்மமா செய்வான். தர்மத்தை தொழிலா செய்வான். ஆக ரெண்டுமே தூளாயிரும். ஆனா ஒன்னுங்ணா நான் உழைக்கிறேன், சாண்டல் சோப்பா தேயறேன் (ஓடாங்கறது பழைய பிரயோகமாச்சே) வேர்வை சிந்தறேன்.ஏ.சிலருந்து மூக்கடைப்பு வந்து நான் பட்ட அவதி எனக்கு தெரியும் - இந்த மாதிரியெல்லாம் நாம பில்டப் கொடுத்தாலும் தாளி பைசான்னு வந்தா அதன் பின்னாடியே அந்த கருமமும் இலவச இணைப்பா வந்துரும், அதனாலதேன் பத்தாமிடத்தை கர்மஸ்தானம் - கேந்திரஸ்தானம் -இங்கன பாவியிருந்தாலும் பரவால்லை -பாம்பு இருந்தாலும் பரவால்லைன்னு ரிலாக்சேஷன் கொடுத்திருக்காய்ங்க.


இதெல்லாம் ஆணை பொருத்தவரை ஓகே. பெண்? மொதல்ல ஹவுஸ் வைஃபை பார்ப்போம். அவிக காலையில கண் விழிச்சதுல இருந்து கட்டில்ல/பாய்ல கட்டைய சாய்க்கிற வரை / இவ்ள எதுக்கு புருசங்காரன் சுரண்டினா அவன் பக்கம் திரும்பறது வரை தனக்காகவே - தனக்காக மட்டுமே செய்றது ஒரு மசுரும் கிடையாது.

எல்லாமே ஆத்துக்காரருக்காக /அவரோட ப்ரஸ்டிஜை காப்பாத்தறதுக்காகத்தேன். இது எப்படி கருமம் ஆகும்? காஃபி,டிஃபன்,சோறு,ராத்திரி டிஃபன் எதை சமைச்சாலும் தங்களுக்காகவே (மட்டும்) சமைக்கிறாய்ங்களா? இல்லையே. கழுவி,மெழுகி,அரைச்சி இப்படி எதை செய்தாலும் அது தனக்காக மட்டும் செய்யப்படற வேலை இல்லை. இது எப்படி கருமம் ஆகும்?

ஆணா கணவனை பாருங்க. அவன் செய்ற தொழில்/உத்யோகம் எல்லாமே முதற்கண் தனக்காக - தன் ஈகோ சேட்டிஸ்ஃபேக்சனுக்காக - ஐடென்டிட்டிக்காக - உத்யோகம் புருசலட்சணம்னு மேனேஜர் ஓட்டல் ரூம்ல ஸ்டெனோவோட கெட்ட காரியம் செய்துக்கிட்டிருந்தா இவன் ரிசப்ஷன்ல உட்கார்ந்து லாப்டாப்ல லெட்டர் ட்ராஃப்ட் பண்றானே எதுக்காக தனக்காக.

அந்த வேலை வெட்டி உத்யோகம் இல்லின்னா தன்னை கால் காசுக்கு மதிக்கமாட்டாய்ங்கனு அலறி புடைச்சு செய்யறான். இதனால அவனுக்கு கர்மஸ்தானமாவே ஒர்க் ஆகிற ஜீவனஸ்தானம்.. ஹவுஸ் வைஃப் விஷயத்துல மட்டும் தர்மஸ்தானமா ஒர்க் அவுட் ஆகுது.

ஆண் தொழில் செய்தா கர்மம் கூடுது (ஏன்னா அவன் தன் சுய நலத்துக்காக செய்யறான்) பெண் தொழில் செய்தா அவளோட பூர்வ கருமங்கள் குறையுது.ஒழியுது.

ஒரு விவாகரத்து வழக்குல மனைவி ஹவுஸ் வைஃப்ங்கறதுக்காக அவளுக்கு எந்த நஷ்ட ஈடும் கொடுக்க மாட்டேன்னு ஒரு புருசன் வக்கீல் மூலம் வாதம் செய்தப்ப ஜட்ஜு . ( ஹை கோர்ட்டுலயா சுப்ரீம் கோர்ட்டுலயா ஞா இல்லை) . கொய்யால ஒரு ஹவுஸ் வைஃப் செய்ற சர்வீஸுக்கு மார்க்கெட் ரேட் படி கேல்குலேட் பண்ணி கொடுரா நஷ்ட ஈடுன்னு தீர்ப்பு கொடுத்தாராம்.

கொத்தடிமை ஒழிப்பு சட்டம்னு அலப்பறை பண்றாய்ங்களே மொதல்ல அதை இல்லத்தரசிகள் விஷயத்துல அப்ளை பண்ணச்சொல்லுங்க.

ஷீர்டி சாயிபாபா வாழ்க்கையில ஒரு சம்பவம் நடக்குது. திடீர்னு ரெண்டு பேரை கூப்டு ஒரு ஏணியை தூக்கிக்கிட்டு அங்கிட்டு வா இங்கிட்டு போன்னு லொள்ளு பண்ணிட்டு தலா ரூபா கொடுக்கிறாரு. பக்தாள் " என்ன பாபா இதுல்லாம்"னு கேட்டப்போ சொல்றார். வேலை செய்தவனுக்கு அவனோட வியர்வை உலர்ரதுக்கு மிந்தி கூலி கொடுத்துரனும். இதை உபதேசிக்கத்தேன்னாராம்.

ஆனால் மனைவிங்கற கூலிக்கு நாம தர்ர கூலி என்ன? "சனியனே.. காபியா இது பூனை மூத்திரம் மாதிரி இருக்கு" "ஏண்டி! காஃபியை கொண்டாந்து வச்சயே சொல்லவேணா அறிவில்லை உனக்கு. சிகரட் முடிஞ்சு போச்சு. காஃபி ஆறிப்போச்சு"

ஒரு வேலைய - நம்ம வேலைய இன்னொரு ஆளை வச்சு செய்தாலே கருமம் கூடும். அவன் செய்த வேலைக்கு உரிய கூலி கொடுக்கலின்னா அது இரட்டிப்பாகும். தாளி கூலியும் கொடுக்காம உடையலும் விட்டா ?

இப்படி ஒரு இல்லத்தரசியின் ஜாதகத்திலான பத்தாம் பாவம் /அதிலான கிரகங்கள்/அதற்கு அதிபதியான கிரகம்/அதை பார்க்கு கிரகங்கள் எல்லாம் அவளுடைய கருமத்தை பொக்கி முக்தியை கொடுக்குது. ஆனால் ஆணின் ஜாதகத்திலான பத்தாம் பாவம் /அதிலான கிரகங்கள்/அதற்கு அதிபதியான கிரகம் /அதை பார்க்கும் கிரகங்கள் எல்லாம் அவனுடைய கருமத்தை கூட்டுகிறது.

சரி வேலைக்கு போற பெண்களோட நிலை என்ன? அவிக கைச்செலவுக்காகவோ -கால் செலவுக்காகவோ வேலைக்கு போனா அது அவிக கருமத்தை கூட்டவே செய்யும். ஆனால் பட்டா தாய்குலத்தை கேட்டா நூத்துக்கு 99.9%.. அப்பா போகச்சொன்னாரு அவர் கன்டின்யூ பண்ணச்சொன்னாருன்னுதேன் சொல்றாய்ங்க.


வருமான வரி ரெய்டுல மாட்டி வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்ததா கேசை போட்டு மாட்டினவன் "இதெல்லாம் என் பொஞ்சாதி சம்பாரிச்சது'ன்னு சொல்லிர்ரான். கடன் காரன் வெட்ட வரேன்னா பொஞ்சாதியை விட்டு வாய்தா வாங்கறான். ஆஃபீசர் லீவு தரமாட்டேன்னா பொஞ்சாதியை விட்டு சொல்லச்சொல்றவன்லாம் இருக்கான்.

ஆக பெண்ணை ஆண் ஒரு மல்ட்டி ஸ்பானர் மாதிரி உபயோகிக்கிறான். அரசியல் வாதிங்க தப்பான முடிவுகளா எடுத்துட்டு -சரியான சமயத்துல சரியான முடிவை எடுக்காம கோட்டைவிட்டுட்டு -பிரச்சினை முத்திப்போய் கலவரம் நடந்தா உடனே ராணுவத்தை கூப்டுர்ராய்ங்க.

ஒரு கட்டட்த்துல ராணுவம் ங்கோத்தா நாம இல்லாம இவனுகளால ஆட்சியே பண்ணமுடியாது - அதுக்கு இவனுக என்ன பஞ்சாயத்து.. நாமே ஆண்டா என்னன்னு ரோசிக்க ஆரம்பிச்சுட்டா கஷ்டம். இங்கே ராணுவத்தோட இடத்துல பெண்களை வச்சு ரோச்சு பாருங்க. அவிக ரோசிக்க ஆரம்பிச்சா ரெம்ப கஷ்டம் இப்பமே ஆரம்பிச்சிட்டாய்ங்க.