Showing posts with label பரிகாரங்கள். Show all posts
Showing posts with label பரிகாரங்கள். Show all posts

Saturday, May 26, 2012

படுக்கையறை பிரச்சினைகள்: 2


அண்ணே வணக்கம்ணே !
நம்ம ஹிட்ஸ் 1000+ ஆ இருந்தது 800+க்கு வந்துருச்சு. இன்னாடா மேட்டருன்னா ஒரு நாள் கூத்துக்கு மீசைய வச்ச கணக்கா கூகுல் ஆட்சென்சுக்காவ இருந்த தமிழ்பதிவையெல்லாம் ட்ராஃப்டா மார்க் பண்ணி அனுபவஜோதிடம் டாட் காமை இங்கிலீஷ் தளமாக்கி சீன் போட்டோம். டெம்ப்ரரி அப்ரூவல் என்னமோ கிடைச்சது.ஆனால் மறு நாளே டிஸ் அப்ரூவ் பண்ணிட்டாய்ங்க.

இந்த கூத்துல 200 ஹிட்ஸ் குறைஞ்சு போச்சு. சைட்டு தமிழாயிட்ட மேட்டர் சனத்துக்கு தெரிஞ்சு அவிக திரும்பிவர நாள் பிடிக்கும். இந்த மேட்டர் எப்டி நடந்ததுன்னு ஜோதிட ரீதியா பார்த்தா லக்னத்துக்கு அஞ்சுல ராகு -11 ல கேது. அஞ்சுல ராகு இருந்ததால குறுக்கு வழி மேல கவர்ச்சி. 11 ல கேது இருந்ததால ஞானோதயம்.

ஆனால் ஜூன் 14 ஆம் தேதி பாப்பாவுக்கு கண்ணாலங்கற இந்த சிச்சுவேஷன்ல இது வரபிரசாதம் தான். அஞ்சுல ராகு இருந்தா வாரிசுக்கு ஹார்ம் நடக்கனும். அது இப்படி சின்ன புத்திகுழப்பம் - நிராசையோட போயிருச்சு.

இதனாலத்தேன் ப்ராப்ளம் பேஸ்ட் சொல்யூஷன்ஸ்ல கில்மா பிரச்சினைகளுக்கு ஒரு நாள் முன் கூட்டியே வந்தோம். இதுக்கு மிந்தியே ஒரு எபிசோட் கொடுத்திருக்கனும். தாவிட்டம். ( ஆளில்லாத டீக்கடையில ஆருக்கு டீ ஆத்தறேன்னு கேட்டுர்ராய்ங்கண்ணா)

அது இன்னா மேட்டருன்னா நல்லா போயிக்கினு இருக்கிற லைஃப்ல படக்குன்னு தர்கமே இல்லாம சடன் ட்விஸ்ட் வந்து பிச்சை எடுக்கிறது - இனி முப்பது நாளும் பவுர்ணமிடான்னு நெஞ்சை நிமிர்த்தின சமயம் இடி இறங்கிர்ரது.

முதலிரவு தினம் - பால் தம்ளரோட பொஞ்சாதி வருவான்னு காத்திருக்கிறச்ச மாமியார் வர்ரது ( அடச்சே.. என்ன ஒரு உதாரணம் ) போலீஸுன்னு திருத்திக்கங்க.

உலக சுற்று பயணத்துக்கு புறப்படற சமயம் வாயால வவுத்தால போறது - "என் பேரு படையப்பா -இள வட்ட நடையப்பா - என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா"ன்னு சோலோ பாடற சமயம் உள்ளதெல்லாம் குள்ள நரிப்படைன்னு தெரிய வர்ரது.

பழைய தமிழ் சினிமாவுல கடேசியில சுபம் போடுவாங்களே அந்த மாரி ஒரு சிச்சுவேஷன்ல லாஜிக்கே இல்லாம போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடுன்னு போக வேண்டி வந்துர்ரது

போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,கோர்ட்டு,சுடுகாடு.மறைமுக எதிரிகள், செக்யுலரிசம்னாலே கடுப்பாயிர்ரது - நாட்ல உள்ள பாய்க்கெல்லாம் நாலு சப்பாத்தி கொடுத்து பாக்கிஸ்தானுக்கு அனுப்பிரனும்னு பேசறது.

என்னதான் ஃபாரின் சோப்பு போட்டு 4 தாட்டி மினரல் வாட்டல குளிச்சாலும் புண்கள் வர்ரது.,வெளிநாடு போற மோகத்தால் பெரு நஷ்டத்துக்குள்ளாவது

ஃபுட்பாய்சன்,மெடிக்கல் அலர்ஜி , அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியா திரிய வேண்டி வர்ரது.மனதில் இனம் புரியாத பீதி, மந்திர ஜெபம், யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம்,வீட்டில் விஷபூச்சிகளின் நடமாட்டம்.

இப்படி ஒரு பிக்சர் உங்க லைஃப்ல இருந்தா நீங்க செய்துக்க வேண்டிய பரிகாரங்கள் கீழே:

1.தினசரி 1 மணி நேரம் வாரத்துக்கு ஒரு நாள் காவி உடை கட்டி - வினாயகரை தியானம் பண்ணுங்க

2.மாசம் ஒரு நாள் இரவு கோவில்,சத்திரம் , கோவிலை ஒட்டின லாட்ஜு மாதிரி இடங்கள்ள தங்கிட்டு வாங்க. (போகும் போது எந்த பொருளையும் கொண்டு போகக்கூடாது - ரிட்டர்ன்லயும் எதையும் கொண்டு வரக்கூடாது -பிரசாதம் உட்பட)

3.தர்கா,சர்ச்,குருத்வாரா போங்க ( நீங்க முஸ்லீமா இருந்தா தர்கா போக தேவையில்லை -சீக்கியரா இருந்தா குருத்வாரா தேவையில்லை)

4.டாட்டூ -பச்சை வரைஞ்சுக்க / குத்திக்க வாய்ப்பிருந்தால் பாம்போட வடிவத்தை வரைஞ்சுக்கங்க/ குத்திக்கங்க

5.பெண்கள் பாம்பு வடிவிலான ஸ்டிக்கர் பொட்டை யூஸ் பண்ணலாம்

6. தாழம்பூ ஸ்மெல் வர்ர சென்ட் யூஸ் பண்ணுங்க ( இதை போட்டுக்கிட்டு காடு,கம்மா கரைன்னு போயிராதிங்க)

7.பர்ஸ்,பேக் பாம்பு தோல் நிறத்துல இருந்தா நல்லது.

8.துர்கை ,கணபதியை உங்க லைஃப்ல ஒரு பாகமாக்கிக்கங்க

9.பாம்பு வடிவ மோதிரம் அணியலாம்.

10.Om Gam Ganapathe swaha - Om Dhum durgaayai swaha னுட்டு ஜபிச்சிக்கிட்டே இருங்க

பவர் கட் நேரம் நெருங்கிருச்சு . கீழே தந்திருக்கிற பரிகாரங்களையும் ஒரு லுக் விடுங்க. ரிப்பிட்டேஷன் இருந்தா அவாய்ட் பண்ணிருங்க.

1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் 'ட்ராகன்' (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு 'பெரிசுக்கு' ஒரு 'கட்டிங்' போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.

1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 180 டிகிரியில் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Thursday, November 3, 2011

அல்லாருக்கும் சில்லறை : 2


அண்ணே வணக்கம்ணே !

நேத்து அல்லாருக்கும் சில்லறை புரளாம இருக்கிறதுக்கு காரணங்களை மட்டும் லிஸ்ட் அவுட் பண்ணி சூ காட்டி விட்டுட்டன். அந்த லிஸ்ட்ல வாஸ்து மேட்டரை கடேசில பார்ப்போம். இன்னைக்கு சாபங்கள்ங்கற சப் ஹெடிங்ல உள்ள சமாசாரங்களையும் (ரிவிஷன்) பரிகாரங்களையும் பார்ப்போம்.


பொருளாதார முடக்கத்துக்கு காரணமாகும் சாபங்கள்:

1.அப்பா ,அம்மா வழி உறவில் ( சித்தப்பா,பெரியப்பா/ சித்தி,பெரியம்மா) அகால மரணம் ( ஐ மீன் 40 வயசுக்குள்ள மரணம்) துர்மரணம் ( ஐ மீன் விபத்து,தற்கொலை,கொலை)

2.உங்களுக்கு முந்தைய தலைமுறை/ உங்கள் தலைமுறையில் அங்கஹீனம் கொண்டவர்கள் பிறப்பது / பெரிய விபத்து/தீ விபத்தில் சிக்குவது /துர்மரணம் அடைவது.

3.உங்கள் தலைமுறை/முந்தைய தலைமுறையில் திருமணத்துக்கு முன்பே இறப்பது/ஒருவருக்கு ஒன்றுக்கு மேல் திருமணங்கள் ,சின்ன வீடு எக்ஸ்ட்ரா

4.உங்கள் தலைமுறை/முந்தைய தலைமுறையில் வாரிசின்றி போவது - பக்கவாதம் போன்ற வியாதிகள் வந்து பிறர்கையை எதிர்பார்த்து வாழ வேண்டி வருவது

5.உங்கள் தலைமுறை/முந்தைய தலைமுறையில் தோல் வியாதிகள் , விரைவாதம்,புத்திகுழப்பம்,பெண்கள் என்றால் அண்டம் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படுவது.

(இந்த பட்டியலை நேத்தே பார்த்திருக்கிங்க ) அப்படி பார்த்த அதே செகண்ட்ல கொய்யால .. போன தலைமுறைல நடந்ததுக்கும் எனக்கும் என்னய்யா சம்பந்தம்னு ஒரு கேள்வி தாது புஷ்டி லேகியம் சாப்பிட பிறகு கிளம்பின ............... மாதிரி கிளம்பியிருக்கும். ( நான் சொல்ல வந்தது கில்மா தாட்டுங்கண்ணா)

இப்பத்து ட்ரெண்டுக்கு உதாரணம் சொல்லனும்னா ஏழாவது அறிவை சொல்லலாம். பல தலைமுறைகளுக்கு பிறகு பிறந்தவனோட ஜீனை தூண்டி என்ரிச் பண்ணினா பல தலைமுறைகளுக்கு மிந்தி செத்துப்போன ஒரு மூதாதையோட டேலன்டை எல்லாம் ரெக்கூப் பண்ணலாம்ங்கறது மேற்படி சினிமாவுல வருது. ( சினிமாவுக்கு போனவுங்கல்லாம் தலைவலிதான் வருதுங்கறாய்ங்க- அது வேற மேட்டர்)

புதுசா ஒரு குழந்தை பிறந்ததும் அத்தை மூக்கு ,அப்பன் மூஞ்சி,ஆத்தா வாயின்னு பட்டியல் போடறாய்ங்க.
போடறாய்ங்களா இல்லியா? அந்த குழந்தை கொஞ்சம் வளர்ந்து கைய காலை திருப்பினா " த பாரேன் அப்படியே எங்கப்பன் மாதிரியே"ங்கறோம். அது எதையாவது தூக்கி வீசினா " த பாரு ..அப்படியே உன் ஆத்தாக்காரியோட கோபம் சிந்தாம சிதறாம வந்து விடிஞ்சிருக்கு"ன்னு பொஞ்சாதி முகவாய் கட்டைய தோள்ள இடிச்சுக்கறா. இடிச்சுக்கறாளா இல்லியா?

ஆக மூதாதையரோட மணம்,குணம்,காரம்லாம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஜீன்கள் வழியா கடத்தப்படுது.

தாத்தாக்கிட்டேருந்து அப்பா, அப்பாக்கிட்டே இருந்து உங்களுக்கு, உங்க கிட்டேருந்து பாப்பாவுக்கு அஞ்சலாகும்னு தான் நினைச்சிருப்பிங்க.அதான் ராங்கு.

டார்வின் இன்னா சொல்றாருன்னா ஒவ்வொரு மனிதன்லயும் - இயற்கையிலான எல்லா புழு,பூச்சி,பறவை,விலங்குகளோட மணம்,குணம்,காரம்லாம் பொதிஞ்சிருக்குங்கறாரு. பாரதியார் கூட ஒவ்வொரு குணம் கொண்ட மனிதனையும் ஒவ்வொரு மிருகத்துக்கு ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுதியிருக்காரு. நெட்ல கிடைச்சா சுட்டு அதனோட சுட்டியை தாங்கண்ணா.. ரெம்ப த்ரில்லிங்கா இருக்கும். அல்லாரும் படிக்கட்டும்.

க்லைஞரோட குடும்ப உறுப்பினர்களை நெட்ல கிளை வாரியா ( நெல்லா கவனிங்க கிளை வாரியா -கிளைங்கறது மரத்துக்கு இருக்கக்கூடிய ஒன்னு) மேப் போட்டு வச்சிருக்காய்ங்க .இதை சமஸ்கிருதம் ,தெலுங்கு மொழிகள்ள வம்ச விருட்சம்னு சொல்வாய்ங்க.

ஒரு ஆறு இருக்கு. அந்த ஆத்துல தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவு நீரை சுத்திகரிக்காம அப்படியே விடறாய்ங்கனு வைங்க., அப்பம் அந்த ஆற்றங்கரையோரமா வளர்ர எல்லா விருட்சமும் (மரமும்) அந்த தண்ணிய உறிஞ்சித்தானே உயிர் வாழும். அந்த மரங்களோட எல்லா கிளைகளும் -உபகிளைகளும் - இலைகளும் அந்த கழிவு நீரால பாதிக்கப்பட்டுத்தானே தீரும்.

இதே இழவுதேன் இந்த தலைமுறைகள் மேட்டர்லயும் ஒர்க் அவுட் ஆகுது. உசரம், கண் ,மூக்கு , நியூமரிக்கல் எபிலிட்டி,ஹேண்டி க்ராஃப்ட் மட்டுமில்லிங்கண்ணா அவிகளோட லைஃப் ஸ்பான், வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களும் அப்படியே பேக் அப் ஆகி , நம்ம லைஃப்லயும் ரிப்பீட்டு. இது ஒரு கோணம்.

இன்னொரு கோணத்துல பார்க்கும் போது நாம இந்த பூமியில் இல்லாத காலமே கடியாதுன்னு ஒரு சித்தாந்தம் சொல்றாய்ங்க. உங்க தாத்தா சகட்டுமேனிக்கு கண்டவளை கை வச்சிருந்தாருனு வைங்க. அதே புத்தி உங்களுக்கும் வருதுன்னு வைங்க. இதை ஜெனடிக் காஸ்னும் சொல்லலாம். அந்த தாத்தாவோட மறுபிறவிதான் நீங்கன்னும் சொல்லலாமில்லையா? புனரபிமரணம் புனரபி ஜனனம்.

ஜியாமிட்ரில ஒரு பாய்ண்ட் வரும். எல்லா படுக்கை கோடுகளும் ஒரு வட்டத்தின் பாகங்களே . நியூட்டன் இன்னா சொல்றாரு "ஃபார் எவ்ரி ஆக்சன் தேர் ஈஸ் என் ஈக்வல் ரியாக்சன்"

முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும்"னு சொல்றாய்ங்க. அது செயல் செய்யப்பட்ட அதே நாளின் பிற்பகல்னு நினைச்சுராதிங்க. கால ஓட்டத்துல பல்லாயிரக்கணக்கான வருடங்களும் ஒரு நாள் மாதிரி தேன்.

இப்பம் ஓரளவாச்சு கன்வின்ஸ் ஆகியிருப்பிங்கனு நினைக்கிறேன். நீங்க கன்வின்ஸ் ஆனாலும் ஆகாட்டாலும் விளைவை சந்திச்சுத்தான் ஆகனும். தாத்தா இன்னைக்கும் நான் தான் முதலமைச்சர்னு நினைச்சுக்கிட்டா ஆச்சா? ஊஹூம். அதே போலதான் இதுவும். நான் சொன்ன மேட்டரெல்லாம் டுபுக்குன்னு நீங்க டிக்ளேர் பண்ணிரலாம். ஆனால் விளைவுகள்?

தாத்தா வேணம்னா இன்னைக்கும் நான் தான் சி.எம்னு நினைச்சுக்கலாம்.ஆனால் மார்ட்டின் நினைக்கமாட்டாரே. திரைக்கதை வசனத்துக்கு ரூ.25 லட்சம் சன்மானம் தரமாட்டாரே. அப்டி நீங்க இந்த விசயம்லாம் பீலான்னு நினைச்சுக்கிட்டாலும் யதார்த்தத்துல இதற்கான பலனை அனுபவிச்சே தீரனும்.

எச்சரிக்கை:
யாருடைய வமிசா வளியில் கீழ்காணும் நிகழ்வுகள் நடந்திருக்கோ அவிகல்லாம் சிரமப்பட்டுத்தான் தீரனும்னுல்ல கோடிகள் குவிக்கவும் கூடும். ஆனால் இந்த சம்பவங்கள் ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்துக்கிட்டே இருக்கும். ( சில கேஸ்ல ஒரு தலைமுறை விட்டு ஒரு தலைமுறை நடக்குங்கோ)

யாருடைய வமிசா வளியில் கீழ்காணும் நிகழ்வுகள் நடந்திருக்கோ அவிகள்ள பலர் இவற்றின் வீரியத்தை உணராம பணம் பணம்னு அலைஞ்சு பறை சாற்றி நாசமா போறதும் உண்டு. ( ஐ மீன் அகால மரணங்கள்/துர்மரணங்களுக்குள்ளாவது)

ஒரு சிலர் குருவருளாலோ, திருவருளாலோ,அப்பா அம்மா ஆசியாலோ, ஜாதகத்திலான இதரகிரகங்களின் பலத்தாலோ ஏழ்மையில் இருப்பார்கள் - வரவுங்கறது தொட்டுக்கோ துடைச்சுக்கோன்னு இருக்கும் .ஆனால் பெரிய இழப்புகள் இருக்காது ( ஐ மீன் அகால மரணங்கள்/துர்மரணங்கள்)

( வேண்டுகோள்: இந்த மேட்டர்லாம் பல தடவை வெரிஃபை பண்ணி, பல நூறு தடவை நேர்ல பார்த்து ,கேட்டு எழுதின மேட்டருதான்.

இருந்தாலும் இந்த பதிவை படித்த உங்கள் வட்டத்தில் இது போன்ற கேஸ்கள் இருந்தால் ஊர்,பேரை குறிப்பிடாம சொல்லுங்க.

ஒரு வேளை உங்க குடுமபம் / உங்க வமிசாவளியில் நடந்திருந்தா எனக்கு தெரிந்தவர்கள் வீட்டில்னு ஆரம்பிச்சு சொல்லலாம்.

நமக்கு தேவை டேட்டா தான். விவரம் கடியாது. இதெல்லாம் எதுக்குன்னா நாளைக்கு நான் தரப்போற பரிகாரங்களை இன்னம் கொஞ்சம் நம்பிக்கையோட சனம் ஃபாலோ பண்ணி ரிலீஃப் பெற வசதியா இருக்கும்)

இப்பம் பதிவின் ஆரம்பத்தில் தந்த அதே அம்சங்களை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு பரிகாரங்களை அடுத்த பதிவில் தருகிறேன்.

பரிகாரங்களை இந்த பதிவிலும் தராம சஸ்பென்ஸ் தொடர்வதற்கு சாரிங்ணா. நாம சொல்ற மேட்டர் மேல மொதல்ல சனத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்தாம மளிகை கடை லிஸ்ட் மாதிரி பரிகாரங்களை அள்ளி விடறது வீண் வேலைங்கண்ணா.

அப்படி செய்தா சொன்ன நமக்கும் புண்ணியமில்லை - படிக்கிற சனத்துக்கும் புண்ணியமில்லை. ஜஸ்ட் 24 ஹவர்ஸ் .. நாளைக்கு ஏ To ஜெட் பரிகாரங்களை ஒரே மூச்சா கொடுத்துர்ரன்.

Wednesday, November 2, 2011

அல்லாருக்கும் சில்லறை புரள டிப்ஸ்

அண்ணே வணக்கம்ணே !

நீங்க எந்த துறையில ,எந்த பிரிவுல செயல்பட்டுக்கிட்டிருந்தாலும் உங்களுக்கு சில்லறை சகட்டு மேனிக்கு புரள சில டிப்ஸ் எல்லாம் தர உத்தேசம்.

பதிவுக்கு போறதுக்கு மிந்தி விளம்பர இடைவேளை கணக்கா நம்ம ப்ளாக்/சைட்ஸோட ஹிட்ஸை காட்டும் படங்களை வச்சிருக்கன். ஜஸ்ட் ஒரு க்லான்ஸ் பார்த்துருங்கண்ணா. ( இம்மாம் பேரு படிக்கிறாய்ங்கன்னா மேட்டர் கீற ஆசாமிதாம்பான்னு ஒரு நம்பிக்கை வரும்ல. அந்த நம்பிக்கையே பலனை அதிகரிக்கும்ல அதுக்குத்தேன்)









உங்களில் சிலருக்கு தொழில் முடக்கம் , கொடுக்கல் வாங்கலில் சிக்கல், வீண் விரயங்கள், நஷ்டம், அரசாங்கத்தால் ,லோக்கல் தாதாக்களால்,போலீஸால் தொல்லைனு இருக்க பல காரணங்கள் இருக்கு. அந்த காரணங்களை கீழே பட்டியல் போடப்போறேன். இந்த அம்சங்கள் உங்க விஷயத்துல எந்த அளவுக்கு இருக்குன்னு நோட் பண்ணி வச்சுக்கங்க. அல்லாத்தையும் பைசல் பண்ணிருவம்ல.



வாஸ்து காரணங்கள்:

1.தெற்கு,மேற்கு திசைகளில் தெரு /பள்ளம்/இந்த திசைகளில் மனை குறைவது

2.கிழக்கு,வடக்கு திசைகளில் மேடு, ( ஐ மீன் கன்ஸ்ட்ரக்சன்)

3.திக்குகள் குறைவது,அளவுக்கு மீறி வளர்வது. (ஈசான்யம் வளரலாம். எவ்ளோ தெரீமா? மிளகாய் விரை அளவுக்குத்தேன் வளரனும்)

4. நைருதியில் ,ஆக்னேயத்தில் பள்ளம் / சாக்கடை நீர் இந்த மூலைகள் வழியே வெளியே செல்வது, இந்த திசைகளில் தலைவாசல் இருப்பது , ஈசான்யத்தில் மேடு /செப்டிக் டாங்க், வாயு மூலையில் பள்ளம், இந்த திசையில் ஷட்டர்/கதவு இருப்பது


சாபங்கள்:

1.அப்பா ,அம்மா வழி உறவில் ( சித்தப்பா,பெரியப்பா/ சித்தி,பெரியம்மா) அகால மரணம் ( ஐ மீன் 40 வயசுக்குள்ள மரணம்) துர்மரணம் ( ஐ மீன் விபத்து,தற்கொலை,கொலை)

2.உங்களுக்கு முந்தைய தலைமுறை/ உங்கள் தலைமுறையில் அங்கஹீனம் கொண்டவர்கள் பிறப்பது / பெரிய விபத்து/தீ விபத்தில் சிக்குவது /துர்மரணம் அடைவது.

3.உங்கள் தலைமுறை/முந்தைய தலைமுறையில் திருமணத்துக்கு முன்பே இறப்பது/ஒருவருக்கு ஒன்றுக்கு மேல் திருமணங்கள் ,சின்ன வீடு எக்ஸ்ட்ரா

4.உங்கள் தலைமுறை/முந்தைய தலைமுறையில் வாரிசின்றி போவது - பக்கவாதம் போன்ற வியாதிகள் வந்து பிறர்கையை எதிர்பார்த்து வாழ வேண்டி வருவது

5.உங்கள் தலைமுறை/முந்தைய தலைமுறையில் தோல் வியாதிகள் , விரைவாதம்,புத்திகுழப்பம்,பெண்கள் என்றால் அண்டம் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படுவது.

தோஷங்கள்:

1.அப்பாவை பிரிவது -அப்பாவுடன் வெட்டுப்பழி -கொலைப்பழி

2.தாயுடன் விரோதம் - தாயை பிரிவது -மன அழுத்தம் - நுரையீரல்/சிறு நீரகம் தொடர்பான வியாதி

3.ரத்தம்,எரிச்சல்,கோபம் தொடர்பான வியாதிகள்

4.ஒல்லி பீச்சான் போல இருப்பது / நீர் உடம்பு -குடி,சூது ஆகியவற்றில் அதிக விருப்பம் -ஷேர் மார்க்கெட்/சட்டவிரோத செயல்களில் ஈடுபாடு

5.இதய படபடப்பு -வயிறு தொடர்பான நோய்கள் , ஞா மறதி , திருமண தாமதம், வாரிசின்மை


இன்ன பிற அறிகுறிகள்:

1.முடிவெடுக்க திணறுவது - எடுப்பார் கை பிள்ளையாக இருப்பது - தூங்கி வழிவது -வர வேண்டியது வர்ரதுக்குள்ளயே ஒத்தைக்கு ரெட்டையா செலவுக்கு திட்டமிடுவது.

2.சோசியரு இப்பம் நேரம் நல்லாருக்குன்னு சொன்ன காலத்துலயே நோய்கள், விரோதங்கள்,வழக்கு வில்லங்கங்கள்.

3.சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிட்டாப்ல சொந்த ஐடியாலயே தானும் கெட்டு தன்னை சேர்ந்தவுகளை ,தன்னை நம்பி வந்தவுகளையும் நாற வச்சுர்ரது.

4.ஊரு,உலகத்தை ,சாதி சனத்தை எதிர்த்து கண்ணாலம் கட்டி பொஞ்சாதியாலயே அவதிப்படறது


உங்க தொழில்,வியாபார,உத்யோக முடக்கத்துக்கும் மேற்படி காரணங்களுக்கும் என்ன சம்பந்தமுன்னு கேப்பிக. சொல்லுவம்ல. அப்படியே முடக்கதை முடக்கவும் அயனான பரிகாரங்கள் அடுத்த பதிவுல.. உடு ஜூட்.