Thursday, June 7, 2012

பொம்பளைய நம்பலாமா?


//வேணா மச்சான் வேணா இந்த பொண்ணுங்க காதலே//ங்கற இன்றைய திரைப்பாடல்லருந்து

//ஆலகால விஷத்தை நம்பலாம், கோலமாமத யாணையை நம்பலாம்,
கொல்லவரும் வேங்கைபுலியை நம்பலாம். காலன்விடும் தூதையும் நம்பலாம்.
சேலைகட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று திகைப்பார்தாமே, //ங்கற சித்தர் பாடல் வரை தாய்க்குலத்துக்கு ஆன்டியாவே இருக்கே . இன்னாபா மேட்டருனு கேப்பிக,

(சப்ஜெக்ட் தாவலை தலை! நம்ம தொடர்பதிவோட லைன் அப்பை விட்டு டைவர்ட் ஆகலை பாஸு.. ச்சொம்மா போற போக்குல டச் பண்றேன் தட்ஸால்)

எங்கயோ கேட்டது/படிச்சது.

ஹெல்த்தியா உள்ள 45 வயசு காரன் கையில இருக்கிற வாக்கிங் ஸ்டிக் கணக்கா தாய்குலத்தோட டீலிங் வச்சுக்கிட்டா நோ ப்ராப்ஸ்.

அதை விட்டுட்டு தாத்தா கையில உள்ள கைத்தடி கணக்கா ரெம்ப ஊனி நடந்தா மூஞ்சி பல்லு பேர்ந்துரும். பொம்பளைய நம்பாதேன்னவுகள்ளாம் முட்டாள் "பெண் இயற்கையின் பிரதி - நிதி - பிரதிநிதி" ன்னு சொன்ன நாந்தேன் க்ளெவருன்னு நான் சொல்லமாட்டேன்.

இந்த ஒலகத்துல எல்லா நிஜமும் நிஜமில்லை. எல்லா பொய்யும் பொய்யில்லை. எந்த நிஜமும் 100 சதம் நிஜமில்லை . எல்லா பொய்யும் 100 சதம் பொய்யுமில்லை.

எல்லா நிஜமும் 24 மணி நேரமும் நிஜமா இருக்கிறதில்லை. எல்லா பொய்யும் 24 மணி நேரமும் பொய்யா இருக்கிறதில்லை.

இங்கன எல்லாமே மாறும் .ஆளை பொருத்து , நேரத்தை பொருத்து . டீலிங்கை பொருத்து மாறும்.மாறிக்கிட்டே இருக்கும்.

சகோதிரிகள் உள்ள ஆண், சகோதரர்கள் உள்ள பெண் இவிக லைஃப் பிக்சரை பார்க்கலாம். சகோதிரின்னா ஆரு? தாயின் பிரதி.

ஒவ்வொரு ஆண் குழந்தையும் தாய் மீது மையல் கொள்ளும்னு சைக்காலஜி சொல்லுது. ( அப்பனை போட்டுதள்ளிர்ர ரேஞ்சுக்கு போயிட்டா அது ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் - மனோவியாதி) சகோதிரி தாயின் பிரதி.

சகோதிரிகளிடை வளரும் ஆண் குழந்தை விவரம் தெரியறதுக்கு மிந்தி வெள்ளந்தியா ஒன்னு மண்ணா கிடக்கும். டீன் ஏஜ்ல ஒரு மிரட்சி வரும். நெருங்கலாமா கூடாதா?

இந்த மிரட்சி எல்லா பெண்கள் விஷயத்துலயும் பரவிருச்சுன்னா நாஸ்தி.. கான்ஷியஸ் மைண்ட்ல "கூடவே கூடாது"ங்கற கான்செப்ட் இருக்கும். சப் கான்ஷியஸா " வேணும்"ங்கற கான்செப்ட் இருக்கும். நிலத்துல புதை படும் நிலக்கரி அழுத்தம் காரணமா வைரமா மாறலாம். ஆனால் மனசுக்குள்ள அழுத்தப்பட்ட உணர்வு காஷ்மோரா மாதிரி . 12 வருசத்துக்கப்பாறம் பீறிட்டு கிளம்பலாம்.

மேலும் சகோதிரிகளோடு வளரும் ஆண்குழந்தை கொஞ்சம் பயந்த சுபாவமா ஃபிமிலிஷ் ஆ இருக்க வாய்ப்பிருக்கு. (என்விரான்மென்ட்) .

அதுலயும் சுருட்டை முடி,அழகான கண்கள்னு வடிவேலு சொல்றாப்ல சூப்பர் ஃபிகரா இருக்கிற சகோதிரிகள் இடையில் வளர்ர ஆண்குழந்தை பயந்த சுபாவமா வளர வாய்ப்பிருக்கு.

ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா பால்யத்துல ரெம்ப துணிச்சலா இருக்கிறதும் - டீன் ஏஜ்ல பயந்த சுபாவமா மாறுவதும் உண்டு.

பயம் செயல்படுவதை தடுக்கும். சிந்தனையை வளர்க்கும் . அது ஆக்கப்பூர்வமானதா இருந்தா நோ ப்ராப்ளம். இதர ஃபேக்டர்ஸ் சரியில்லின்னா அது பகல் கனவா மாறும்.

ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா செய்த அட்வென்சர்ஸ் - அந்த குழந்தைய சூடு கண்ட பூனையா மாத்தலாம். ஆனால் இயற்கை விதிகளின் படி பூனை பால் குடிச்சே தீரனும். ( பால்னா இங்கன நான் சொல்றது வள்ளுவர் சொன்ன 3 ஆவது பால்) . இதனால மன அழுத்தம், கான்ட்ராடிக்சன் இத்யாதி இத்யாதில்லாம் டெவலப் ஆகும்.

நினைவெல்லாம் நித்யாங்கற மாதிரி சப் கான்ஷியஸ் முழுக்க பிட்டு படமா ஓடும்.. அதனால ஒரு கில்ட்டி. தன் மேல தனக்கே நம்பிக்கையில்லாத நிலை.

அதனால கில்மாவுக்கு வாய்ப்பே இல்லாத வயசு, முறை உள்ளவுகளோட மட்டும் பழகலாம். அப்படி பழகும்போது உள்ளாற அழுத்தப்பட்ட காஷ்மோரா கிளம்பிருச்சுன்னா நாறிரும்.

இங்கே இன்னொரு பாய்ண்டை சொல்லனும். இறைக்கிற கேணி தான் ஊறும்ங்கறது லாஜிக்.ஆனால் இருக்கிற தண்ணி வயலுக்கு பாய்ஞ்சா தேன் கிணறு தன் கப்பாசிட்டிக்கு ஊறும்.

ஐ மீன் ஒரு ஆண் செக்ஸ் குறித்த நேரிடை கருத்துக்களுடன் "செயல்படுவதற்கான" வாய்ப்புகளுடன் இருக்கும் போது அவனோட பாடி கரீட்டா ஒர்க் அவுட் பண்ணி வைக்கும்.

எதிரிடையான கருத்துக்கள் இருந்தாலோ - செயல்படுவதற்கான உந்துதலோ -ஊக்கமோ இல்லாம இருந்தாலோ விந்து உற்பத்தியே குறைஞ்சு போயிரும்.

இதுல இன்னொரு லாஜிக். பால் பாத்திரம் நிரம்பி இருந்து -அதை காய்ச்ச ஆரம்பிச்சா நேரம் பிடிக்கும். இதுவே அதுல ஒரு ஸ்பூன் பால் மட்டும் இருக்குன்னு வைங்க. என்னாவும்?

படக்குனு காய்ஞ்சி , பொங்கி ,தீஞ்சுரும். இதெல்லாம் - இந்த சிக்கல் எல்லாம் அவிக உள் மனசுக்கு தெரியாட்டாலும் - பாடிக்கு தெரியும்.

மனசை உருவாக்கிறது இயற்கையிலருந்து விலகி ஓடிக்கிட்டிருக்கிற சமூகம். பாடியை உருவாக்கிறது ஆதி நாட்கள்ளருந்து அதே தாது உப்புக்கள்,விட்டமின்ஸ்,கார்போ ஹைட்ரேட், ப்ரொட்டீன்ஸ் தான், இதனால மனசை விட பாடிக்கு இயற்கையோட நல்ல ஒத்திசைவு இருக்கும்.

எதிர்காலத்துல இருக்கவே போறதில்லைங்கற "அலார்ம்" ஒலிச்சிட்டே இருக்க இவன் என்ன பண்ணுவான்? "காஞ்ச மாடு கம்பங்கொல்லை மேஞ்ச மாதிரி " செக்குக்கும் சிவலிங்கத்தும் வித்யாசம் தெரியாத மாடு மாதிரி .. போய்க்கிட்டிருப்பான்

இப்படியா கொத்த பார்ட்டிங்க தான் பொம்பளைய தாத்தா கைத்தடியா உபயோகிச்சுக்கிட்டு - இந்திரியம் தீர்ந்து சுந்தரியும் பேய் போல ஆகிர .. பதிவின் ஆரம்பத்துல சொன்ன தத்துவம்லாம் சொல்லிக்கிட்டு கிடப்பாய்ங்க. இது 12+12 பாலியல் விருப்பத்துல லைஃப் பிக்சர் நெம்பர்: 3

(இது பவர்கட் நேரம் மீதியை நாளைக்கு பார்க்கலாம்)