Showing posts with label ஜாதகபலன். Show all posts
Showing posts with label ஜாதகபலன். Show all posts

Tuesday, October 18, 2011

ராஜபக்சே ஜாதக பலன் : ஒரு 360 டிகிரி பார்வை


அண்ணே ! வணக்கம்ணே .. இதான் கடேசி பதிவா என்ன தெரியலை. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஜாதக பலனை ஆடியோ ஃபைலா போட்டிருக்கேன். நமக்கு கிடைச்ச பர்த் டீட்டெயில்ஸ் கரீட்டா இருந்தா பலனும் கரிட்டா இருக்கும். ( 18, நவம்பர் ,1945 ,விடியல் 3.45 , பிறந்த ஊரு: Matara )

ஆடியோவை கேட்டுட்டு லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு ராட்டினம் ஏத்தினாலும் பரவால்லை ஸ்டேஷன்ல உள்ள பார்ட்டிகளுக்கு சொசியம் கீசியம் சொல்லி தப்பிக்கலாம். இலங்கைக்கு பார்சல் பண்ணிக்கினு பூட்டா தான் படா பேஜாரா பூடும்.ஆனா அம்மா கீறாய்ங்க. கு.பட்சம் முருகேசனை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக்கூடாதுன்னு ஒரு தீர்மானமாச்சும் போடுவாய்ங்க.

ரெம்ப நாளைக்கப்பாறம் ஆடியோ பதிவு போட்டிருக்கேன். காரணம் பவர் கட். பொறுமையா கேட்டு உங்க கருத்தை தெரிவிங்க.

வழக்கம்போல கீழ்காணும் ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி திருவாளர் ராஜ பக்சேவுடைய ஜாதக பலனை கேளுங்க.

Tuesday, February 1, 2011

12ஆம் பாவமும் பலான மேட்டரும்: 2

12 ஆம் பாவம் நீங்க செலவழிக்கும் விதம், தூக்கம்,செக்ஸ், மோட்சம் இத்யாதிய காட்டற இடம்ங்கறது ஞா இருக்கும்னு நினைக்கிறேன். கடந்த பதிவுல செக்ஸுக்கும்,செலவழிக்கும் முறைக்கும் உள்ள தொடர்பு பத்தி பொதுவா  பார்த்தோம்.

மரணத்தோட போராட செலவழிக்கிறிங்களா? அல்லது மரணத்தோட நிழல்களோட போராட செலவழிக்கிறிங்களாங்கறத பொருத்து செக்ஸுவல் பிஹேவியர் மாறும்னு கடந்த பதிவுல  சொல்லியிருந்தேன்.

கிரக நிலை:
ஏற்கெனவே  6ஆம் பாவம் பத்தின பதிவுல சொன்னதா ஞா இருந்தாலும் ரிப்பீட்டு (புதிய வரவுகளுக்காக) . 6,8,12 ல்லாம் துஸ்தானங்கள். இந்த பாவங்கள் காலியாயிருந்தா பெஸ்ட். மேற்படி துஸ்தானாதிபதிகளே துஸ்தானங்கள்ள இடம்  மாறி நின்னா பெட்டரு. உதாரணமா:

6ஆமிடத்துல எட்டாமிடத்து அதிபதி, 8ஆமிடத்துல 12 ஆமிடத்து அதிபதி, 12 மிடத்துல ஆறாமிடத்து அதிபதி. இவிக பரிவர்த்தனமும் ஆகக்கூடாது. அவர் ராசியில இவரு கூடாது. ஆட்சி பெறவும் கூடாது.

இந்த இடம் சுபபலமா இருந்தா மரணத்தோடவே மோத ஆரம்பிச்சுருவிங்க.(உங்க பணம்,உழைப்பு எல்லாம் இந்த ப்ராஜக்டுக்கு திருப்பி விடப்படும்)

உயிர் வாழ்தலின் அடையாளம் இருத்தல், வளர்தல், பெருகுதல், பரவுதல்,படைத்தல் . இதுல ஏதாவது ஒரு ஐட்டத்துல உங்க மைண்ட் ஃபிக்ஸ் ஆயிட்டா போதும் நீங்க மரணத்தோட மோத ஆரம்பிச்சுட்டிங்கனு அர்த்தம்.

சிலகாலம் செக்ஸ் உங்களை கவரலாம். உறவின் சமயத்தை நீட்டிக்க பெரிதும் விரும்புவிங்க. பலர் சக்ஸஸும் ஆகலாம். ஆனா நாளடைவுல இருத்தல், வளர்தல், பெருகுதல், பரவுதல்,படைத்தல் ஆகிய அம்சங்களின் மீதான உங்க கவர்ச்சி உங்க பாலியல் ஆர்வத்தை குறைச்சுரும்.இருத்தல், வளர்தல், பெருகுதல், பரவுதல்,படைத்தல் தன் உச்சத்துல இருக்கும்போது உங்க ஈகோ காணாம போயிருது. இந்த படைப்போட தொடர்பு கொண்டுர்ரிங்க.  ஒட்டு மொத்த மனித இனமே உங்களுக்கு உறவாயிருது . ஷார்ட்டா சொன்னா உங்க லைஃப்   ஆன்மீக பாதையில தறிகெட்டு  ஓட ஆரம்பிச்சுரும்

இந்த 12 ஆம் இடம் மேற்சொன்ன நிபந்தனைகளுக்கு மாறா தீயபலன் தரக்கூடிய வகையில இருந்தா மரணத்தோட நிழல்களோட மோத ஆரம்பிச்சுருவிங்க. ( இருட்டு -தனிமை-ஏழ்மை இத்யாதி). (உங்க பணம்,உழைப்பு எல்லாம் இந்த ப்ராஜக்டுக்கு திருப்பி விடப்படும்) இதுக்கு எவ்ள பணமிருந்தாலும் போதாது. நிழல் யுத்தத்துல வெற்றி கிடைக்க வாய்ப்பே இல்லை.அதனால தோத்துட்டதாவே நினைச்சு மறுபடி மறுபடி போராடிக்கிட்டே இருப்பிங்க.

பணம் சம்பாதிக்கனும்னா மக்களோட கொல்லும் இச்சையை நீங்க நிறைவேத்தனும். ( ஈகோவை விட்டுரனும்) . இது கொல்லும் வெறியா மாறும். அதை செக்சுல நிறைவேத்திக்க ட்ரை பண்ணுவிங்க.

ஓரளவு சம்பாதிச்சுட்டா அப்பாறம் நீங்க கொல்ல ஆரம்பிச்சுருவிங்க. இதுக்கு பணம் தேவை. பெரும்பணம். ( முகேஷ் அம்பானி வீடு கட்டினது இன்னாத்துக்கு தெரீமா .. நம்மையெல்லாம் சைக்கலாஜிக்கலா கொல்லத்தான் )  அந்த பணத்தை பெரிய அளவுல சம்பாதிக்க உங்களை நீங்க கொன்னுக்கனும். ( ஐ மீன் உங்களுக்குள்ளே இருக்கக்கூடிய மனிதத்தை,கருணையை )

மனிதனோட பேசிக்கல் இன்ஸ்டிங்க்ட்ஸான கொல்லும்,கொல்லப்படும் இச்சைகள் ரெண்டும் பணத்தின் மூலமாவே நிறைவேறிர்ரதால ஒரு ஸ்டேஜுக்கு அப்பாறம் செக்ஸை விட பணத்துலயே ஆர்காசம் கிடைக்க ஆரம்பிச்சிரும்.சோகம் என்னடான்னா பொருளாதார ரீதியில உசர உசர சிகரத்துல தான் தனிமை அதிகமா உணரப்படும்.  மறுபடி செக்ஸ் பேட்டைப்பக்கம் ஒதுங்குவிங்க  நடுவயசுல மறுபடியும்  செக்ஸ் உங்களை கவரும். நீங்க அதை தாண்டிவர முடியாம அதுலயே தேங்கிப்போயிருவிங்க.


தூக்கம் Vs செக்ஸ்:

தூங்கிப்போயிட்டா செக்ஸ் கிடையாது. செக்ஸ் வேணம்னா தூங்கமுடியாது. ஆனால் ஒழுங்கா தூங்கி எழுந்தா மைண்டுங்கற கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் பண்ண பிறவு அது லோட் ஆக   டைம் பிடிக்கும். அதனால உச்சத்தை தள்ளிப்போடலாம். அதுவே தள்ளிப்போகும். ஆழ்ந்த செக்ஸுக்கு பிறகு ஆழ்ந்த தூக்கம் வரும்.

செக்ஸும் -மோட்சமும்:

இதை அடுத்த பதிவுல பார்ப்போம். உடு ஜூட்..

12 ஆம் பாவமும் பலான மேட்டரும்

நீங்க செலவழிக்கும் விதம், தூக்கம்,செக்ஸ், மோட்சம் இத்யாதிய காட்டற இடம் 12 ஆம் பாவம். மொதல்ல இந்த 4 ஐட்டத்துக்கும் உள்ள பரஸ்பர தொடர்பு என்னன்னு பார்த்துருவம்.

செலவழிக்கும் விதம் Vs தூக்கம்:
மறுபடி மறுபடி சொல்றேனு நினைக்காதிங்க (  நவீன மனிதனின் மறதி எனக்கு தெரியும்ல) மன்சங்க இன்னா பண்ணாலும் அதும் பின்னாடி இருக்கிற ரெண்டே ஆசை 1.கொல்லுதல் 2.கொல்லப்படுதல். பணத்தை வச்சிக்கினு இன்னா பண்றோம்னு ரோசிச்சிங்களா?

இருட்டு ,கல்லாமை, தனிமை,பாதுகாப்பின்மை,வாரிசின்மை இதையெல்லாம் மனித மனம்  மரணத்துக்கு சமமா  பார்க்குது. அதனால தான் பணத்தை உயிரா மதிக்கிறோம். உயிரை பணயம் வச்சு பணம் சம்பாதிக்கிறோம். உயிரா மதிக்க வேண்டிய தன்மானத்தை பலி கொடுத்து சம்பாதிக்கிறோம்.

சம்பாதிச்ச பணத்தை வச்சு இருட்டை விரட்டறோம் (கரண்ட் பில் கட்டறோம்),தனிமைய தவிர்க்கிறோம்,  அறிவை விருத்தி பண்றோம்( ஸ்கூல் போறோம், ட்யூஷன் போறோம் -இதெல்லாம் டூ இன் ஒன் ப்ராஸசுங்கோ),வேலை வாய்ப்பு தேடறோம் ( பணத்துக்காக ) ,கண்ணாலம் கட்டறோம் (செக்ஸுக்காக) குழந்தை பெத்துக்கறோம் ( நம்மோட மறுபதிப்பை விட்டுட்டு போக)

இப்படி நை நைன்னு சொல்றதை விட சிம்பிளா சொன்னா பணத்தை வச்சுக்கிட்டு மரணத்தோட நிழல்களோட யுத்தம் பண்றோம். நீங்க பணம் செலவழிக்கிறதெல்லாம் மரணத்தை ஏதோ ஒரு விதத்துல எதிர்க்கத்தான். இன்னா ஒரு தமாசுன்னா நிஜத்தை விட்டுட்டு நிழலோட ஃபைட் பண்றோம்.

சர்தான்பா இது அல்லாருக்கும் பொருந்தாதே. சில பேரு கரண்ட் பில் கட்டாமயே ,கனெக்சன் கட்டானாலும்  ரீ  கனெக்சன் வாங்காமயெ இருட்லயே வாழ்ந்துர்ராய்ங்களே, படிக்காதவன் நிலை என்ன? தண்டத்தீனிங்க நிலை என்ன? கண்ணாலம் கட்டாதவன் நிலை என்ன? குழந்தை பெத்துக்காம தள்ளிப்போடறவன் நிலை என்னனு கேப்பிக.

சொல்றேன். இவிகளுக்கு ரெண்டு சான்ஸ் இருக்கு ஒன்னு மரணத்தோடயே ஃபைட் பண்ணிக்கிட்டிருக்கலாம் (நிஜத்தோட) அ தாளி அந்த மரணம் என்ன என்னை தேடிவர்ரது நானே தேடிப்போறேன் அதைங்கற நினைப்புல இருக்கலாம் ( ஐ மீன் சப்கான்ஷியஸா)

ஆக நீங்க செலவழிக்கிற விதம் ரெண்டா இருக்கலாம்

ஒன்னு:

மரணத்தோட நிழல்களோட மோதறது  அல்லது மரணத்தை ஒத்திப்போடறது. (க்ளைமேக்ஸ்ல தான் புரியும் உங்க முயற்சிகள் உங்களை  நிஜமான மரணத்தை நோக்கியே உங்களை செலுத்தியிருக்கிறதை

ரெண்டு:
மரணத்தை அதனோட எந்த வடிவத்துலயும் எதிர்கொள்ள ப்ரிப்பேர் ஆயிர்ரது. ஏழ்மை ,இருட்டு,தனிமை,நிராகரிப்பு ..இப்படி எந்த வடிவத்துல வந்தாலும் தப்பியோட பார்க்காம முழுக்க ஃபேஸ் பண்றது விட்டா அனுபவிக்கிறது.

தற்கொலை எண்ணங்களோடு  மோதறது .( கணக்கு வழக்கில்லாத தீனி, தூக்கம் ,செக்ஸ், இல்லீகல் அண்ட் இம்மாரல் எர்னிங்ஸ் எல்லாமே தற்கொலை எண்ணங்களோட வெளிப்பாடுதேன்.

இந்த ரெண்டு கேட்டகிரில நீங்க எந்த பக்கம்னு பார்த்துக்கனும்.

நீங்க மொதல் கேட்டகிரியா இருந்தா  மரணத்தோட நிழல்கள்,உருவகங்களுக்கெல்லாம் அஞ்சி நடுங்கி கை கால் உதறி கச்சாமுச்சானு சம்பாதிக்கதுடிப்பிங்க. சம்பாதிப்பிங்க. தாளி "இத்தீனி சாவு செத்து சம்பாதிச்சது செலவழிக்கத்தானே"ன்னு செலவழிக்க ஆரம்பிச்சிருவிங்க.

உங்களோட கொல்லும்,கொல்லப்படும் இச்சை ரெண்டுமே பண விஷயத்துலயே ஒர்க் அவுட் ஆயிர்ரதால செக்ஸ் மேட்டர்ல ஈடுபாடு போக போககுறைஞ்சுரும்.

இதுவே செகண்ட் கேட்டகிரியா இருந்தா இருட்டுக்கு அஞ்சமாட்டிங்க (இருட்ல தான் செக்ஸ் பீறிட்டு கிளம்பும்)  தனிமைக்கு அஞ்ச மாட்டிங்க. . நிராகரிப்புக்கு அஞ்ச மாட்டிங்க இப்படி மரணத்தோட எந்த நிழலுக்கும் அஞ்சாம மரணத்தையே எதிர்கொள்ள ப்ரிப்பேர் ஆயிருவிங்க. வீரிய ஸ்கலிதத்தின் போதான அந்த குட்டி மரணம் உங்களை பெரிதும் கவரும்.

( சமிக்கனும்.. இது ஏதோ துக்கடா சப்ஜெக்டு ஒரு சாப்டர்ல அடிச்சு விட்டுரலாம்னு நினைச்சேன்.. ஊஹூம் இது பெண்டை நிமிர்த்திரும் போல இருக்கு - எனவே...................

தொ..............ட...................ரும்

Thursday, January 27, 2011

ஒன்பதாம் பாவமும் -கில்மாவும்

நேத்து ராசிச்சக்கரத்தை வெட்டி படுக்க போட்டு நிமிர்த்தி பக்கத்துல ஒரு மனிதனோட படத்தையும் வச்சுப்பார்க்க சொன்னேன். இந்த வகையில பார்த்தா 9 ஆம் பாவம் முழங்காலை காட்டுது. முழங்காலுக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்? படங்களை பாருங்க..(ஹி ஹி.. மேட்டர் இத்தோட முடிஞ்சுராதுங்கன்னா)



அப்பா: அப்பா சொத்து:அப்பாவழி உறவு:சேமிப்பு: தூரதேச தொடர்புகள்:தீர்த்தயாத்திரை: இப்படி பல விஷயங்களை காட்டற பாவம் 9 ஆம் பாவம். இதை தர்மஸ்தானம்/பித்ரு பாக்யஸ்தானம்னெல்லாம் சொல்வாய்ங்க. இது கோணஸ்தானம். இங்கன சுபர்கள் இருந்தா சூப்பர். இங்கன சுபர்கள்,சுபபலமா இருந்தா அப்பாங்கிறவர் எப்படி இருப்பாருனு சொல்லிர்ரன்.



"ஏன் நைனா! ஏதோ கண்ணாலத்துக்கு மிந்திதான் ராத்திரி வீடு திரும்ப பத்து பதினொன்னு ஆச்சு. இப்ப கண்ணாலமாகி ஒரு உசுரு உனக்காக காத்துக்கினு கீதுனு தெரியாது.. ராத்திரி எட்டுக்கெல்லாம் ஊட்டை வந்து சேரப்பாருப்பா ...இன்னாது ஓவர் டைமா? நைனா! கடவுள் புண்ணியத்துல சொத்து சுகமிருக்கு, அப்பன் நானும் ஏதோ கொஞ்சம் சம்பாதிச்சு வச்சிருக்கேன். ஏதோ உத்யோகம் புருச லட்சணம்னு வேலைக்கு போனமா வந்தமான்னு இல்லாமா ..எதுக்குப்பா இதெல்லாம். கால் கடுதாசிய வீசியெறி.. நான் சின்னதா ஒரு வியாபாரம் வச்சுத்தரேன். காத்தால 9 மணிக்கு போனமா மதியம் வீட்டுக்கு வந்து சாப்டு கொஞ்ச நாழி தூங்கனமா அஞ்சுமணி வாக்குல போனமா ராத்திரி 9க்கெல்லாம் வந்தமான்னு இருக்கனும்பா"


ஓகே கோணஸ்தானமா இங்கே பாபகிரகம் இருக்குதுனு வைங்க ஐ மீன் கேந்திராதிபதிகள் ஆராவது.


"இன்னாடா டைம் இன்னா ஆவுது பார்த்தியா பத்து ஆகுது. ஒரு ஆம்பளை இன்னம் ஊடு திரும்பலைன்னா ஒரு பொம்பளை இன்னா நினைக்கும். சின்ன ஊடு வச்சிக்கினு கீறானு நினைச்சுட்டா .. அட அவன் அப்பனுக்கு ஃபோனை போட்டு புலம்பினா.. நான் பழைய படி அரிவாளை தூக்கனுமா இன்னா தெரிலை. இன்னையோட இதெல்லாம் ஸ்டாப்பு.. ஒழுங்கு மரியாதையா நாளைலருந்து ஏழு எட்டுக்கெல்லாம் ஊட்டை வந்து சேர்ர வழியப்பாரு. இல்லைன்னா மருவாதி இருக்காது"


இந்த மாதிரி ஒரு அப்பன் இருந்தா தாளி ஊர்ல காம்ப்ளெக்ஸ் இருக்குமே தவிர மைண்ட்ல காம்ப்ளெக்ஸ் இருக்குமா ? ஊஹூம். கில்மாவுல விளையாட இதைவிட பெட்டர் என்விரான்மென்ட் என்ன வேணும்.

இதுவே 9 ஆமிடத்துல 6,8,12 அதிபதி யாராவது மாட்டினா என்ன ஆகும்?

ஆறுக்கதிபதி மாட்டினா அப்பன் பேஷண்ட்/கடன் காரன்/கோர்ட்டு கேஸுனு அலைஞ்சிக்கிட்டிருப்பான். அவனுக்கு பிறந்த நீங்க வேற எப்படி இருப்பிங்க? விரையென்று போட்டால் சுரையொன்று முளைக்குமா என்ன? எட்டுக்கதிபதி மாட்டினா அப்பன் காலி அ அண்டர் கிரவுண்ட் அ அவரோட குத்துப்பழி கொலைப்பழி. 12க்கு அதிபதி மாட்டினா தாத்தா சொத்தெல்லாம் அப்பா ரெஜிம்லயே காலி. இந்த மாதிரி சிச்சுவேஷன்ல உங்க ஜீன்ஸ் எப்படி இருக்கும்? உங்க கேரக்டர் எப்படி இருக்கும்? உங்க எக்கனாமிக்கல் கண்டிஷன் எப்படியிருக்கும்? உங்க ஹெல்த் எப்படி இருக்கும்? உங்க முழங்கால் எப்படி இருக்கும்?

9ங்கறது பித்ருஸ்தானம், சூரியன் பித்ருகாரகன். சூரியந்தேன் எலும்புக்கெல்லாம் இன் சார்ஜு.இவர் தேன் கால்ஷியத்தை பாடி க்ராஸ்ப் பண்ணிக்க உதவுற பார்ட்டி. 9ஆம்பாவம்+ சூரியன் ரெண்டு பேரும் கெட்டாய்ங்கனு வைங்க பேக் கிரவுண்ட் காலி. கைய ஊனி கரணம் போடவேண்டியதுதான்.கூனி குறுகி காரியத்தை முடிக்கனும். இப்படி குனிஞ்சு குனிஞ்சு முதுகெலும்பே பிரச்சினை கொடுக்க ஆரம்பிச்சுரும்னா முழங்காலை பத்தி தனியே சொல்லனுமா என்ன?


நான் வெறும் அப்பாவ பத்தி மட்டும் தேன் அனலைஸ் பண்ணேன். மத்த ஐட்டத்தையெல்லாம் நீங்களே ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்க. அப்பாறம் முருகேசு ஜல்லியடிக்கிறாருப்பான்னிருவாய்ங்க.

நாளைக்ககு பத்தாம் பாவத்தை பத்தி பீராஞ்சுருவம். படம் தானே கீழே ஒரு மேட்டர் இருக்கு அதை படிச்சுருங்க அதுக்கு கீழே படம்..


ஆமாங்கண்ணா ஆனந்த விகடன்ல நம்ம இனத்தை (வலைப்பதிவர்கள் -ப்ளாகர்ஸ்) வாரு வாரு்னு வாரியிருக்காய்ங்களே.. அதைஎல்லாம் கிழிச்சு ஒரு பதிவ போட்டிருக்கேனே ..உங்க கருத்தை தெரிவிச்சுட்டிங்களா?


என்ன? இல்லியா.. இது நம்ம வீட்டு கல்யாணம் பாஸு.. இந்த பதிவுக்கு எத்தீனி கமெண்ட் விழுதோ அத்தீனி டிகிரி ஜுரம் விகடனுக்கு வரும். மத்த பத்திரிக்கைக்காரனுக்கும் பரவும். இல்லாட்டி நம்ம தன்மானத்தை சீண்டி கிட்டே கிடப்பாய்ங்க. தூசு விழறப்பயே தட்டி விட்டுரனும். இல்லாட்டி தூண் விழும். என்ன பதிவுக்கான லிங்கா? இதோ இங்கன அழுத்துங்க





Wednesday, January 26, 2011

எட்டாம் பாவமும் இன உறுப்பும்

இந்த தலைப்புல  1 முதல் 7 பாவங்களை அனலைஸ் பண்ணியாச்சு. இன்னைக்கு எட்டாம் பாவம்.இது  ஜாதகரோட ஆயுள்,கொலை,தற்கொலை விருப்பம், விபத்துகள்,செயிலுக்கு போறதை ,ஐபி போடறதை காட்டற இடம். இதுக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக. சொல்றேன். படத்துல உள்ள ராசி சக்கரத்தை பாருங்க. 12 டப்பா இருக்கு.இதை இதை அப்படியே ரைட் டாப்ல ஒரு டப்பாவை விட்டுட்டு கட் பண்ணி படுக்கப்போடுங்க. படுக்கப்போட்டதை அப்படியே நிமிர்த்துங்க. பக்கத்துல ஒரு மனிதனை நிற்க வைங்க. 12 டப்பாக்களுக்கு நேர மனிதனோட எந்த அங்கம் வருது பாருங்க. இந்த கணக்குல பார்த்தா எட்டாம் பாவம் "பலான" பார்ட்டை காட்டும்.

இன்னாங்கடா இது ஒரே பாவம் லுல்லாவையும் காட்டுது, ஆயுளையும் காட்டுது. இது ரெண்டுத்துக்கும் இன்னா சம்பந்தம்னு  ஒரு வேளை கில்மாவால அல்பாயுசாயிருவமோ? பொட்டுன்னு போயிருவமோனு டர்ராயிராதிங்க.

காந்தியோட மூணு குரங்கு பொம்மைகளுக்கு ஃபோஸ் கொடுத்த கமல் நாலாவதா ஒரு ஃபோசை சேர்த்தாரு. ஞா இருக்கா?

வள்ளுவர் "யாகாவாராயினும் நா காக்க"ன்னாரு. ( நா - நாக்கு) நாக்கை மட்டுமே இல்லிங்கண்ணா எல்லாத்தையும் காக்க வேண்டியதுதான். சிலருக்கு செல்ஃப் கண்ட்ரோல் பை பர்த் வந்துருது. அல்லாரும் அப்டமன் கார்ட் போட்டுக்கிட்டா வெளிய வராய்ங்க.யாருக்கு எட்டாமிடம் வீக்கோ அவிகளுக்கு மட்டும் பல்பு பெருசாயிருது.

நாக்கை விடுங்க .அது ஸ்தூலமான வஸ்து . வள்ளுவர் கூட "தீயினாற்சுட்டபுண் உள்ளாறும். ஆறாதே நாவினாற்சுட்ட வடு"ன்னு சொல்லி வச்சாரு. ஜஸ்ட் பார்வைய எடுத்துக்கங்க.

நீங்க விஜய் மாதிரி யூத்தான ஃபிசிக். ஒரு ஆன்டிய கேஷுவலா பார்க்கிறிங்க. என்னடா.. அபுதாபில இருக்கிற நம்ம கசின் மாதிரியிருக்கேன்னு கூட பார்த்திருக்கலாம். ஒரு வேளை அந்த ஆன்டியோட செக்ஸ் லைஃப்ல எதுனா பிரச்சினை இருந்து, புருசங்காரனுக்கு தன் கப்பாசிட்டில சந்தேகம் இருந்து, அதுவே சந்தேக புத்தியாகி புகைஞ்சுக்கிட்டு கிடக்குனு வைங்க.

ஆன்டி ஒரு அரை செகண்ட் யோசிப்பா. இந்த பையன் பார்க்கிறதை ஆத்துக்காரரு பார்த்துட்டா வம்பு நாமளே முந்திக்கிட்டு சொல்லிருவம்னு " என்னங்க ..அந்த பனியன் போட்ட பையன்  குறு குறுன்னு பார்த்துக்கிட்டிருக்கானு என்னனு விஜாரிங்க" ன்னிட்டா மேட்டர் ஓவர்.

ஆக எல்லா பார்ர்ட்டையும் போல ஜனனேந்திரியத்தையும் காக்கவேண்டிய அவசியம் இருக்கு. காக்க காக்கன்னா அஜால் குஜால் வேலையில இறங்காம இருக்கிறதே இல்லை. சுத்தம்,சுகாதாரம்,காண்டம் எல்லாமே வருது.

பெண்குட்டிகள் மேட்டர்ல (மலையாள பாஷைங்கோ) இது ரெம்ப முக்கியம்.(பேட் உபயோகிக்கிறது - அல்ப சங்கியைக்கு பிறகு கழுவறது - கால் கழுவறச்ச கீழ் நோக்கி கழுவறது -உபயம்: ஆ.வி.ல ஞானி சார்.

ஒரு பையன் ரெம்ப உத்தமன். குளிக்கிறச்ச சாஸ்திரப்படி இடது கையால கூட தொட மாட்டான். ( எட்டாம்பு படிக்கிற சமயம் நடந்தசம்பவம் இது)

திடீர்னு கின்னஸ் சாதனைக்கு போல ஒரு வாரமா  தொடர்ந்து கிட்டார் வாசிக்க ஆரம்பிச்சான். "தத் என்னடா இது"ன்னா  பயங்கர நமைச்சல் வலி வீக்கம்னான். படக்குனு டாக்டர்(?) பண்டரிக்கிட்ட கூட்டிப்போனோம். அவர் தோரகா பண்ணி உறிச்சு (பிரசவ அலறல்) வென்னீர்ல அலம்ப சொன்னாரு.


இப்படி காக்க காக்கன்னா 108 மேட்டர் இருக்கு. கில்மா கூடாதுங்கறது மட்டும் பாதுகாப்பு முறை கிடையாது. அணை நிரம்பினா ஒன்னு சானலை திறந்துவிடனும். இல்லாட்டி அதுவே வழிஞ்சுரும். தெலுகு கங்கா கால்வாய்ல கண்டவன் பைப் போட்டு உறிஞ்சிர மாதிரி உறிஞ்சினா சென்னைக்கு குடி  நீர் வந்து சேராதில்லை.

மேலும் இன்னொரு உபகதை. ஒரு பழைய தோஸ்த். எதிர் வீட்டு பெண்ணை பிக் அப் பண்ண என்ன செய்தான் தெரியுமா? அவனோடது ஓவர் சைஸாம். விடியல்ல அந்த பொண்ணு மாடிக்கு வர்ர நேரமா பார்த்து தூக்கத்துல போல கண்காட்சி ஏற்பாடு பண்ணுவானாம். காக்கா கொத்தி விதைய எடுத்துட்டு போயிட்டா என்னடா பண்ணுவேன்ன பிறவுதான் அடங்கினான்.

மேலும் ஐ.பி போடறது, சிறை ,கொலை தற்கொலைக்கெல்லாம் இவனோட ஜனனேந்திரியம் காரணமாகிற சம்பவங்கள் நிறைய இருக்கு.

ஐ.பி: (மஞ்ச கடுதாசிங்கோ)

ஒரு எலக்ட்ரிக்கல் வைர் மேன். அவனுக்கு கண்ணாலமாகி பொஞ்சாதி,புள்ளை குட்டி எல்லாம் இருக்கு. வயசு முப்பது சில்லறை.  கோ டெனன்டோட மகள் ஒருத்தியோட படிப்பை ( மாசத்துக்கு சில ஆயிரம் ரூபாதேன்) ஸ்பான்சர் பண்ணாரு. அஞ்சு வருசம்.  நல்ல எண்ணத்தோட பண்ணினா தனக்கு மிஞ்சி தர்மங்கற சூத்திரமெல்லாம் ஃபாலோ பண்ணியிருப்பாரு. "கெட்ட' எண்ணத்தோட பண்ண ஆரம்பிச்சு அந்த குட்டியும் "வடை"உனக்குத்தேன்னு சொல்லி (இவர் ஜொள்ளி) சொல்லியே (இவர் ஜொள்ளி ஜொள்ளியே) அஞ்சு வருசம் ஓடிப்போச்சு.

நம்மாளு ஆட்டை தூக்கி மாட்ல போட்டு மாட்டை தூக்கி ஆட்ல போட்டு (வடை நமக்குத்தேங்கற நம்பகத்துல)  அஞ்சு வ்ருசத்தை ஓட்டிட்டாரு. செக்சுவல் எதிர்பார்ப்புகளோட கமர்ஷியல் எதிர்பார்ப்புகளும் இருந்தது.

வடைய காக்கா தூக்கிட்டு போயிருச்சு. நம்மாளு மஞ்ச கடிதாசி கொடுத்துட்டு  ..வரை தாடி வளர்த்துக்கிட்டிருக்காரு.

சிறை:

ஒரு சகோதர பத்திரிக்கையாளர் ( ரெஃபர் டு: பாண்டவர் & கௌரவர்)  ரெண்டு பொஞ்சாதி. தினசரி எப்படியாச்சும் ரூ ஆயிரம் பண்ணிருவாரு. (இத்தனைக்கும் பத்திரிக்கை நிர்வாகம் தர வேண்டிய சம்பள மேட்டர்  லேபர் கமிஷன் டேபிள்ள பெண்டிங்)   ராயலா ஓடிக்கிட்டிருந்தது. ஒரு சமயம் ஏதோ அசந்தர்ப்பமா? இவரோட ஆதாயம் இவரோட லாலா -மசாலாவுக்கே போதலியா தெரியலை. பெரிய வீட்டுக்கு அரிசி மூட்டை அனுப்பலை. தாளி அந்த மாராஜி இவன் மேல டவுரி அட்ராசிட்டி  கேஸை கொடுத்துருச்சு. பார்ட்டி கம்பி எண்ண வேண்டியதாயிருச்சு.

கொலை,தற்கொலைல்லாம் பேட்டைக்கு எட்டு  நடந்திருக்கும் . ஒரு தாட்டி கொசுவர்த்தி சுருளை உங்க முன்னாடி வச்சு சுத்திப்பாருங்க.

இதான் கில்மாவுக்கு எட்டாமிடத்துக்கும் உள்ள லிங்க். இந்த இடம் காலியாயிருக்கிறது பெஸ்ட். இதனோட அதிபதி கூட 6 அ 12 ஆமிடத்துல நின்னாதான் சேஃப். அப்படி ஏதேனும் கிரகமிருந்தா அது பாபகிரகமா இருந்தா பெட்டர். (பாபர்கள் ஆயுளை கொடுத்து இம்சை +நோயையும் கொடுப்பாய்ங்க. ஸ்டேஷனுக்கே போனாலும் லாக்கப் டெத் நடக்காது - சிறைக்கு கூட்டிப்போறச்ச என்கவுண்டர் நடக்காது .ஒரு மாதிரியா  சமாளிச்சுரலாம்)

ஆனாஇங்கன சுபர்கள் இருந்தா  ரெம்ப லொள்ளு பண்ணமாட்டாய்ங்க.ஆனா திடீர் மரணத்துக்கு  வாய்ப்புண்டு.கில்மாவை பொருத்தவரை இங்கன சுக்கிரன் இருந்தா நல்லதுன்னு ஒரு விதி. எட்டுங்கறது மரணத்தை காட்டுது. சுக்கிரன் கில்மாவுக்குரிய கிரகம். ஆக இந்த அமைப்புல பிறந்தா தெலுங்கு பழமொழி சொல்றாப்ல ( எத்தய்தே துன்னி சாவாலா -மொகவாடைதே ....சாவாலா)  கதை சுபமா ச்சீ சுகம்மா முடியும்.

ஆனால் ஜாதகர் சுக்கிரனோட இதர காரகங்கள்ள ( வீடு வாகனம்) இறங்கிட்டா ஆட்டோ மெட்டிக்கா பேட்டரி வீக் ஆயிரும்.

ஆனால் இந்த அஷ்டம சுக்கிரன் ரிஷப,துலா லக்னத்துக்கு மாட்டினா ஷாமியானாமேல ப்ரேக் டான்ஸ் ஆடின கதையாயிரும்.

இங்கன லக்னாதிபதி மாட்டினா அதீத சுய இன்பங்கள்/ விந்து ஊறுமுன் புணர்ந்து காஞ்ச கருவாடாயிர்ரது/தற்கொலை நடக்கலாம்

இங்கன தனபாவாதிபதி மாட்டினா பிச்சையெடுக்கனும், வீட்டுக்காரி விரட்டிவிட்டுருவா.( இப்படி ஒரு கேஸு இன்னைக்கும் ஒரு  புதையல்  மேட்டரா மந்திரவாதிகளை விரட்டிக்கிட்டிருக்கு), கண் டப்ஸ். ஊமையாகலாம்

சோதராதிபதி இங்கே மாட்டினா சவுண்ட் பாக்ஸ் அவுட். உடன் பிறப்புகளுக்கு டிக்கெட்.அ அவிகளால இவருக்கு டிக்கெட், விபத்து

மாத்ருபாவாதிபதி மாட்டினா: தாய்,வீடு,வாகனம்,கல்வி காலி. ஹார்ட் ட்ரபுள் வரலாம்

புத்ராதிபர் மாட்டினா: மலடாகலாம் . வாரிசுகள் உயிரிழக்கலாம். பெருத்த அவமானம்

ரோகாதிபர் மாட்டினா: சத்ரு ஜயம்,ரோக நிவர்த்தி, ருண விமுக்தி, விவகார ஜெயம்

களத்ராதிபர் மாட்டினா: மனைவிக்கு மரணம், மனைவியால் மரணம், அ மனைவியை கொல்லலாம்

அஷ்டமாதிபர் இருந்தா ( தன் பாவத்துல பாவாதிபதி ஆட்சி பெறுவது)  அதிக வேதனையில்லாத தற்கொலை. அ தன் சொத்தை தானே அழிச்சுர்ரது

பாக்யாதிபதி நின்னா: அப்பாவுக்கு டிக்கெட். அவர் சொத்தெல்லாம் காலி. கண்டம் விட்டு கண்டம் போகையில (தூரபிரயாணத்துல) கண்டம்

ஜீவனாதிபதி நின்னா: நெத்தி வேர்வை நிலத்துல ஒழுக வேலை செய்தா பிரச்சினையில்லை. ஏசி ரூம்ல இருந்தா என்னடா சத்தம்னு வெளிய வந்தா உத்தரம் சரிஞ்சு சாவு

லாபாதிபதி:அண்ணன் அக்கா காலி. அ அவிகளால ஜாதகர் காலி. எல்லாத்துலயும் நஷ்டம்

விரயாதிபதி: கஞ்சனாவார்." தேனிலவே போனாலு தனியாய் தானே போவா(னே)ரே" ரேஞ்சு

சரிங்கண்ணா நாளைக்கு மாமனார்,அப்பா,அவிக வழி சொத்து,  தூரதேச சம்பாத்தியம், சேமிப்பு, பக்தி பரவசங்கள், தீர்த்தயாத்திரைகள்,முழங்கால் எல்லாத்தயும் காட்டற 9 ஆமிடத்துக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்னு பார்ப்போம்..

உடு ஜூட்

Thursday, January 20, 2011

பிரபாகரன் உயிருடன் : நக்கீரன் ; அன்றே சொன்ன கவிதை07

பிரபாகரன் உயிருடன்? : அன்றே சொன்ன கவிதை07

ஜோதிஷ அடிப்படையில் பார்த்தால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சாக வாய்ப்பில்லை. உயிருடன் தான் இருக்கவேண்டும். 2010 நவம்பர் 26 க்கு பிறகு தம் சாகசப்பயணத்தை துவக்குவார் என்று என் பதிவுகள்ள சொல்லியிருந்தேன். 

இப்போ பிரபாகரன் குறித்த தகவல்கள் சாகசப்பயணம் துவக்கியிருக்கு. முதல்ல லேட்டஸ்டை அதிகாலைல  பிடிக்க படிக்க இங்கே  அழுத்துங்க (உபயம்: நக்கீரன்)

இப்போ கவிதை07ல் நான் எழுதிய பதிவுகளை ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்க.



பிரபாகரன் பிழைக்க வாய்ப்பே இல்லை ( தலைப்புதான் பாஸ் நெகட்டிவ்)


பிரபாகரன் சாகவில்லை


நவம்பர்26க்கு பிறகு பிரபாகரன் சாகசப்பயணம்


பிரபாகரனும் நானும் (ஹி ஹி.. ஜாதகரீதியிலான ஒப்பீடுங்கோ)


எச்சரிக்கை:
ஜோதிடம் பொய்த்தால் அது ஜோதிடத்தின் பெருமை
அது பொய்த்தால் சொன்ன ஜோதிடனின் சிறுமை

Sunday, January 16, 2011

உடலுறவு விருப்பமும் கிரக நிலையும் (தொடருக்குள் தொடர்)

இந்த தலைப்புல லக்னம்,தனபாவம்,சகோதர பாவம் வரை பார்த்தோம். இப்ப நாலாவது இடமான சுக பாவத்தை பார்ப்போம். சுகம்னா ஜஸ்ட் கில்மா மட்டுமில்லிங்கோ. தாய் தாய் வழி உறவு, வீடு , நில புலம்,  வாகனம் ,கல்வி,இதயம் எல்லாத்தையும் காட்டற இடம் இது. இதுக்கும் கில்மாவுக்கும் என்ன தொடர்புனு கேப்பிக சொல்றேன்.


தாய்:
ஒரு பையன் வளர்ந்த பிறவு  கண்ட குட்டிகள் பின்னாடி அலையறான். எதுக்கு? அவன் தன் தாயை தேடறான். அவன் இந்த பூமிக்கு வந்ததும் பார்த்த முதல் பெண் தாய். அவள் தான் இவனுக்கு  எல்லாமா இருந்தா. இவன் கொஞ்சம்போல வளர்ந்ததும் "தத்.. எருமை மாதிரி மேல விழாதடா"ங்கறாள் . இவன் உள்ளுக்குள்ள சுருங்கிப்போறான். அம்மா சுகத்தை அவன் அடி மனசு தேடுது.அந்த தேடல் தான் இவனோட அலையலுக்கு காரணம்.

தாய்வழி உறவு:
சாதாரணமா அப்பா வழி  உறவுக்காரவுக (சித்தப்பா,பெரியப்பா) அப்பாவை போட்டியா நினைச்சிருப்பாய்ங்க. அப்பாவோட நிழலான உங்களையும் போட்டியா நினைக்க வாய்ப்பிருக்கு அ தங்கள் வாரிசுகளோட நிலையோட உங்க நிலையை கம்பேர் பண்ணிக்கவும் வாய்ப்பிருக்கு. ( ஆனால் ஒன்னு ஒம்பதாமிடம் பர்ஃபெக்டா இருந்தா இந்த பிரச்சினைகள் வராது தலை ..டோன்ட் ஒர்ரி)

ஆனா சித்தி,பெரியம்மா  கேசெல்லாம் இப்படி இல்லை. உங்க மேல பாசத்தை பொழிய வாய்ப்பிருக்கு. சொத்து தகராறு ,பங்கு தகராறுல்லாம் இருக்காதில்லையா அதுனால.

வீடு:
கண்ணாலத்துக்கு பையனை தேடும்போது சனம் விஜாரிக்கிற மொத பாய்ண்டு சொந்த வீடு இருக்குதா? சொந்த வீடுங்கறது பலவகையில வசதி. கெட்டாலும் வசதிதான். வெறும் தண்ணிய குடிச்சுட்டு படுத்துக்கிடக்கலாம். எடுப்பு சோறு கொண்டாந்து திங்கலாம். நேரம் நல்லாருந்து க்ளிக் ஆனாலும் சடை நாய் வளர்க்க தடை இத்யாதி லொள்ளெல்லாம் இருக்காதுல்ல. வேலைக்கு ஆப்பு வந்துருச்சுன்னா வீட்டோட தொழில் செய்யலாம். இதெல்லாம் தாம்பத்ய வாழ்வுக்கு ப்ளஸ் பாய்ண்டுதானே.

வாகனம்:
"பையன் கார் மெய்ன்டெய்ன் பண்றான் தெரியுமில்லை"ங்கற பாய்ண்டு ப்ளஸ்தானே. மேலும் விக்கிற விலைவாசில (முக்கியமா பெட்ரோல்,டீசல் ) வாகனம் வச்சிருக்கிறவனுக்கு பக்காவா ப்ளான் பண்ற கப்பாசிட்டி வந்துரும். (ரூட் மேப்புங்கண்ணா) மேலும் வாகனத்தை மெயின்டெய்ன்பண்றது பொஞ்சாதிய மெயின்டெய்ன் பண்ற மாதிரி. வாகனத்தை பக்காவா மெயின்டெய்ன் பண்றவன் பொஞ்சாதியை கூட கரீட்டா வச்சிக்குவான்னு ஒரு கணக்கு. வாகனம் காலம்,தூரத்தை செயிக்க உதவற சமாசாரம்.சிட்டி பஸ்ல நாறிப்போயி வர்ரவன் பொஞ்சாதி மேல எரிஞ்சுதான் விழுவான். மேலும் பந்த்,ஊர்வலம் இத்யாதி காரணமா எப்ப வீடு வந்து சேருவான்னே தெரியாது. இந்த நிலைல கில்மாவுல எங்கருந்து புகுந்து விளையாடறது?

கல்வி:
இதைப்பத்தியும் சொல்லனுமா என்ன? படிச்சா (சரியான படிப்பா -  வெறுமனே கதை பண்ணாம - நெஜமாலுமே படிச்சிருந்தா) வேலை நிச்சயம்.கடந்த பத்துவருஷத்துல சிவில் இஞ்சினீரிங் பண்ணவுகள்ள 80% டுபாகூருங்கன்னு ஒரு கணக்கு.  வேலை கிடைச்சா பைசா புரளும், மல்லிகை பூ,அல்வாவுக்கெல்லாம் சில்லறை வேணும்ல

இதயம்:
இதான் பம்பிங் ஸ்டேசன். ரத்தத்தை ஒழுங்கா பம்ப் பண்ண இதயம் வலிமையா இருக்கனும். அப்பத்தான் சவுண்ட் பாடி. அப்பத்தான் சவுண்ட் மைண்ட்.அப்பத்தான் கில்மாவோ கில்மா. மேலும் இது ஸ்தூலமான இதயத்தை மட்டும் காட்டலிங்கண்ணா உங்க மனசையும் காட்டுது.பொஞ்சாதிக்கு பெட்ல மட்டும் இடம் கொடுத்தா அது விபச்சாரம். மனசுலயும் இடம் கொடுத்தாதான் அது சம்சாரம். அப்பத்தான் கில்மா மீட்டர் எகிறும். ஆன்மீகத்தையும் டச் பண்ணிரலாம்.

சரிங்கண்ணா. இந்த இடத்துல எந்த கிரகமிருந்தா நல்லது , எது இருந்தா நல்லதில்லைனு ஒரு க்ளான்ஸ் பார்ப்போம்.

இது கேந்திரஸ்தானம். இங்கன கோணஸ்தானாதிபதிகள் இருந்தா ஸ்ரேஷ்டம். கேந்திராதிபதியே இருந்தாலும் நாட் பேட். 6,8,12 அதிபதிகள் இருந்தா நாசம். மத்தவுக இருந்தாலும் பரவால்லை.

கேந்திரஸ்தானங்கள்:
லக்னம் முதலா லக்னத்தையும் சேர்த்து க்ளாக் வைஸா எண்ணும்போது 4,7,10 ஆமிடங்கள் தான் கேந்திர ஸ்தானங்கள்.

கோண ஸ்தானங்கள்:
லக்னம் முதலா லக்னத்தையும் சேர்த்து க்ளாக் வைஸா எண்ணும்போது 5,9 ஆவதா வர்ர இடங்கள் தான் கோண  ஸ்தானங்கள்.

சுபர்கள் இருந்தா ஸ்ரேஷ்டம். பாவிகள் இருந்தாலும் பரவால்லைனு ஒரு விதி. இதென்னடா அநியாயம் பாவகிரகமிருந்தா மேற்சொன்ன  தாய் தாய் வழி உறவு, வீடு , நில புலம்,  வாகனம் ,கல்வி,இதயம்லாம் அடி வாங்கிருமேனு பதறாதிங்க.

மேற்சொன்ன எல்லா ஐட்டமும் அடிவாங்கிராதுங்கோ. எதுனா ஒன்னு ரெண்டு பிடுங்கிக்கும் தட்ஸால்.  நான் ஏற்கெனவே சொன்னாப்ல 4ங்கறது சுகஸ்தானம். சுகங்கள் வளர்ச்சியை தடுக்கும்,ஆயுளை குறைக்கும். டூ மச் ஈஸ் ஆல்வேஸ் டேஞ்சர் ரெம்ப சுகம்மா வாழ்ந்துட்டா அப்பால கஷ்டம் வரும்போது நாறிருவம்.

மேலும் அரைகுடம் தான் தளும்புங்கற மாதிரி மேற்படி சுகங்கள்ள ஒன்னு ரெண்டு பத்தாக்குறையா இருந்தாதான் வளரனும்,சம்பாதிக்கனும்ங்கற துடிப்பே வரும். ரெம்ப துடிச்சா இதய நோய் வந்துரும் ( 4: இதயத்தை காட்டுமிடம்).

சரிங்கண்ணா அடுத்த பதிவுல கில்மாவுல விளையாடனும்னா புத்தி,புத்திர ,பூர்வ புண்ணியஸ்தானமா அஞ்சாவதுஇடம் எப்படி இருக்கனும்னு பார்ப்போம்.

Wednesday, January 6, 2010

ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மேலதிக தகவல்கள்

என் கவிதை 07 வலைப்பூவிலான என் பதிவுகளை படித்து இன்ஸ்பைர் ஆகி தனிப்பட்ட ஜோதிட ஆலோசனை பெற இந்த பக்கம் வந்திருக்கும் தங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்!

நான் வெறுமனே ஜோதிடனா இருந்தா ஷார்ட்டா ஒரு கட்டண அட்டவணை போட்டுட்டு முடிச்சுரலாம். பேசிக்கலா நான் ஹ்யுமேனிஸ்ட். மனிதகுலத்து மேல உள்ள கருணையாலதான் எழுத்தாளனானேன். உங்களை எஜுக்கேட் பண்ணி ஜோதிஷம்ங்கற பொக்கிஷத்தை முழுக்க முழுக்க கொள்ளையடிக்க ரூட் போட்டு கொடுக்கிறதுதான் என் உத்தேசம். அதனால பொறுமையா இந்த நாலு வரியை படிச்சுருங்க.

ஜோதிடம் ... ஆன்மீக பயணத்தில் முதல் படி!


ஆன்மீகத்தை இலக்காய் கொண்டதே உண்மையான ஜோதிடம்

ஆமாங்க ஜோதிஷத்துல உங்க உடல் நலம், வருமானம், உங்களை சேர்ந்தவுங்களோட லைஃப்,அவிகனால உங்களுக்கு லாபமா நஷ்டமா ? படிப்பு,தொழில்,வேலை,உத்யோகம்,காதல்,கல்யாணம் ,பிள்ளை பேறு இப்படி லௌகீகமான கேள்விகளுக்கு மட்டும் தான் பதில் கிடைக்கும்னு எல்லாரும் நினைக்கிறாய்ங்க.

ஆனால் உங்க ஜாதக சக்கரத்தை வச்சி உங்க முன் பிறவி, அடுத்த பிறவி, கடந்தபிறவியிலான உங்க ஆன்மீக முயற்சிகள்,அதுக்கு தடையா இருந்த அம்சங்களை பத்தியெல்லாம் சப்ஜாடா தெரிஞ்சிக்கிடலாம்.


தெரிஞ்சுக்கிட்டு லௌகீக வாழ்க்கைல மட்டுமில்லை ஆன்மீக வாழ்விலும் சக்ஸஸ் ஆக ஜோதிஷம் உதவுது.


லௌகீகம் எல்.கே.ஜின்னா ஆன்மீகம் டாக்டரேட் மாதிரி. டாக்டரேட் வாங்கனும்னா னுலும் மொதல்ல நீங்க எல்.கே.ஜி படிச்சாகனும். இந்த கணக்குப்படி நீங்க லௌகீகமாவும் ஜெயிச்சாகனும்.


என் பதிவுகளை படித்துநான் ஒரு தொழில்முறை ஜோதிட ஆலோசகன் , ஆராய்ச்சியாளன் என்ற விஷயங்களை ஏற்கெனவே கிரகிச்சிருப்பிங்க.


என்னோட ஜோதிட ஆலோசனையை நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கீழ் காணும் ஏதேனும் முறையில் ஆலோசனை கட்டணத்தை அனுப்பிவிட்டு, மெயில் மூலம் தங்களது அஃபிஷியல் நேம் (வித் இனிஷியல்) , பிறந்த தேதி ,மாதம், வருடம், நேரம்( நள்ளிரவா இருந்தா விடிஞ்சா என்ன தேதி என்ன கிழமைங்கறதை விவரமா குறிப்பிடுங்க) ,அப்படியே நீங்க பிறந்த ஊர் (அருகில் உள்ள பெரிய நகரம்) ஆகியவிவரங்களை அனுப்புங்க.



தங்களுக்கான பலன் மற்றும் தோஷங்களை குறைக்கும் நவீன பரிகாரங்கள் ரிச் டெக்ஸ் ஃபார்மெட் ஃபைலாகவும், நீங்கள் சிறப்பாக குறிப்பிட்டு கோரினால் ஆடியோ ஃபைலாகவும் மெயில் மூலம் அனுப்பப்படும். ஆடியோ ஃபைல் எனில்

ஒரே தவணையில் 24 மணி நேரத்தில் அனுப்பப்படும். டெக்ஸ்ட் ஃபைல் எனில் மூன்று நாட்கள் தொடர்ந்து தவணைகளில் அனுப்பப்படும்.


பிறப்பு விவரங்களை தெரிவிக்க வேண்டிய இமெயில் முகவரி :

swamy7867@gmail.com

s_murugesan_67@yahoo.com


ஆலோசனை கட்டணம்:

தனியொருவருக்கு பொதுப்பலன் (100 கேபி வரை) + 10 கேள்விகளுக்கான ப‌திலுக்கு ரூ. 250 /-மட்டும்

ஃபேமிலி பேக்: தம்பதி மற்றும் ஒரு வாரிசுக்கு ரூ.500/-மட்டும்

கட்டணத்தை செலுத்த வேண்டியஅக்கவுண்ட் விவரம்:

Name: Sundaresan Murugan A/C No: 30333022274

Name of the Bank : State Bank of India

Branch Name: GREAMSPET Branch Code: 7083

IFSC Code: SBIN0007083

Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP

Pincode: 517002

Swift Code: N/A RTGS : YES

கட்டணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்து விட்டு / அக்கவுண்டில் பணம் கட்டிவிட்டு அதன் விவரத்தை ஒரு மெயில் மூலம் தெரிவித்தால் நல்லது. பர்த் டீட்டெயில்ஸ் ஒரு மெயிலில், கட்டணம் செலுத்திய விவரம் ஒரு மெயிலில் அனுப்பாது ஒரே மெயிலில் அனுப்பினால் நல்லது.

எம்.ஓ அனுப்புவோர்:

எஸ்.முருகேசன் ( S.MURUGESAN ) என்ற பெயருக்கு # 17-210,Kummara st, சித்தூர் ஆ.பி 517001 , என்ற விலாசத்துக்கு அனுப்பலாம்

வெளி நாட்டு அன்பர்கள் மட்டும் எம்.ஓ அனுப்ப முயற்சி பண்ணாதிங்க. ( அது வந்து சேர அரை மாசம் ஆகுங்கண்ணா)

எம்.ஓ கூப்பனில் (ப்ளேஸ் ஃபார் கம்யூனிகேஷன்) பர்த் டீட்டெயில்ஸ், தங்கள் இமெயில் முகவரியை குறிப்பிட்டால் மிக நல்லது.


என்னை பார்க்க வராதீக
வெறுமனே பேச வந்தா பரவால்லிங்கண்ணா சோசியம் பார்த்துக்கிட்டு அப்படியே பேசிட்டு போகலாம்னு வந்துராதீக. ஏன்னா அதுக்கு பல காரணம் இருக்கு. நஷ்டம் உங்களுக்குத்தேன்.
நேரில் வந்து சந்திப்பதால் உங்களுக்கு நிறைய நஷ்டங்கள். போக்குவரத்து செலவு, களைப்பு, பிரயாண நேரம், என் எளிய தோற்றம், பின்னணி ஆகியன‌ என் பேச்சின் நம்பகத்தன்மையை குறைக்கலாம். மேலும் நேரில் எனும்போது வாயா வார்த்தையாதான் பலன் சொல்ல முடியும். அப்போ பெரிசா கமிட்மென்ட் வராது. த்ரூ மெயில் அனுப்ப வேண்டி வரும்போது அது ரிக்கார்ட் ஆயிருது. ஸோ ஒரு கமிட்மென்டும் வரும். உங்களுக்கு ஃப்ர்தர் ரெஃபரன்ஸுக்கும் உதவும்.

நேரில் சொல்லும் பலன் காற்றோடு போய் விடும். மேலும் அந்த நேரத்து என் மூட் கூட பலனின் தரத்தை குறைக்கலாம். த்ரூ மெயில் என்றால் எனக்கு எப்போ மூட் இருக்கிறதே அப்போது மட்டும் தட்டச்சினால் போதும். மூன்று தினங்களில் . வேண்டுமானால் ஒன்று செய்யலாம். நீங்க ஃபீஸ் ட்ரான்ஸ்ஃபர் பண்ணுங்க . நான் பலனை அனுப்பிர்ரன். அதுக்கப்புறமும் உங்களுக்கு நேரிடையா வந்து சந்திக்கனும்னு இருந்தா வாங்க. நோ ஃபீஸ்.

உறுதி மொழி:
தாங்கள் கட்டணமாக தரும் தொகைகள் சர்வ நிச்சய‌மாக எனது ஜோதிட ஆராய்ச்சிக்கும்,அதன் முடிவுகளை அனுபவ ஜோதிடம் ப்ளாகில்பிரசுரிக்கவும்,
நாட்டு முன்னேற்றத்துக்காக நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்ட பிரச்சாரத்துக்கும் மட்டுமே செலவிடப்படும்

மெயில் அ கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டிய விவரங்கள்:




1.பெயர்:

2. டேட், டைம் ஆஃப் பர்த்( நள்ளிரவு நேரமானால் விடிந்தால் என்ன தேதி,கிழமை :

3.ப்ளேஸ் ஆஃப் பர்த்(சின்ன ஊரானால் பக்கத்தில் உள்ள பெரிய ஊர், மாவட்டம் :

4.கட்டணம் செலுத்தியுள்ள முறை,விவரம்:

5.கட்டண விவரம்(தொகை) :

6.பலன் அனுப்பவேண்டிய முறை:

7.பலன் அனுப்ப வேண்டிய மொழி:

8.முக்கியமான 10 கேள்விகள்:

9.சிறப்பாக தாங்கள் கூறவிரும்புவது:





இப்ப‌டிக்கு,
சித்தூர்.எஸ்.முருகேச‌ன் (எ) முருக‌ன்