Saturday, October 29, 2011

ராசிக்கல் -கில்மா - தற்கொலைகள் : ஒரு எக்ஸ்ரே பார்வை


நேற்று கண்ணாலமானவுகளே ஏன் அதிகமா தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க? பெண்கள் ஏன் உணர்வு பூர்வமான சொந்த பிரச்சினை காரணமா (அதிகபட்சம்) தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க? ஆண்கள் ஏன் சமூகம் ,பொருளாதாரம் தொடர்பான காரணங்களுக்காக (அதிகபட்சம்) தற்கொலை பண்ணிக்கிறாய்ங்கன்னு அடுத்த பதிவுல சொல்றேன்னு சொல்லியிருந்தேன்.

ஆனால் இன்னைக்கு சம்பந்தா சம்பந்தமில்லாம ராசிக்கற்களான்னுட்டு ஃபீல் பண்றவுகளுக்கு ஒரு வார்த்தை. சொல்லப்போற மேட்டர் நெஜமாலுமே நாட்டுக்கு தேவையான மேட்டர். இதை எத்தீனி பேரு அடிஷ்னலா படிச்சா அத்தீனி நன்மைகள் கிடைக்கும்.(1000+)

அதனாலதான் மேற்படி கவர்ச்சி தலைப்பு. தலைப்பு மட்டுமில்லை ராசிக்கற்களை பற்றிய மேட்டரும் தரதா இருக்கேன். மொதல்ல ராசி கற்களை பார்ப்போம். பிற்காடு தற்கொலை மாதிரி சொத்தை மேட்டர்.

வானவில் பத்தி தெரியும். நம்ம கவிஞர்கள் அதை விரயமா ஹீரோவுக்கு அரைஞான் கயிறா , ஹீரோயினுக்கு உள்பாவாடை நாடாவா சகட்டுமேனிக்கு உபயோகிச்சிருக்காய்ங்க. அதெல்லாம் நமக்கு தேவையில்லாத விசயம். விசயத்துக்கு வருவம்.

வானவில்லுல 7 நிறம். ராகு கேது தவிர்த்து பார்த்தா 7 கிரகம். 7 நிறம். இந்த 7 நிறங்களை ஞா வச்சுக்க வெப்கயாரோ என்னமோ சொல்வாய்ங்க.

மேற்படி 7 நிறமும் உருவாகறது சூரிய ஒளியிலருந்துதேன்ங்கறதை சுட்டிக்காட்டவே இந்த பாய்ண்டு. . நீங்க கலைஞர் போட்டிருக்கிற துண்டு மஞ்ச நிறமுன்னு எப்டி கண்டுக்கறிங்கன்னா சூரிய ஒளியில உள்ள 7 நிறங்கள்ள மஞ்சள் நிற ஒளி அந்த மஞ்சத்துண்டு மேல விழறதில்லை.

இந்த லாஜிக் தான் நீங்க உபயோகிக்கிற ஆடை அணிகலன்களின் நிறத்துலயும் வேலை செய்யுது. அது சரி மற்ற ஜோதிடர்கள் ஜாதகத்துல எந்த கிரகம் நல்ல நிலையில் இருக்கோ அந்த கிரகத்தோட நிறம் கொண்ட ஆடை அணிகலனை அதிகம் உபயோகிக்க சொல்றாய்ங்க.

நீங்களோ எந்த கிரகம் சரியில்லையோ அந்த கிரகத்தோட நிறமுள்ள ஆடை அணிகலன்களை தானே அதிகமா உபயோகிக்க சொல்றிங்க ( இது நம்மிடம் ஆன் லைன் ஜோதிட ஆலோசனை பெற்ற பார்ட்டிகளுக்கு மட்டும் தான் தெரியும்)

இந்த இரண்டு கருத்துக்கும் பின்னால் உள்ள லாஜிக் என்ன? இதுல எது கரீட் ? எது தவறு? சொல்ல முடியுமா?

சொல்றேன். ( இன்னாபா ராசிக்கல்லை பத்தி சொல்றேன்னுட்டு நிறத்தை பத்தி சொல்றேன்னு கோச்சுக்காதிங்க. நிறம்ங்கறது ஒரு டம்ளர் ரஸ்னா மாதிரி. ராசிக்கல்லுங்கறது ரஸ்னா பவுடர் பாக்கெட் மாதிரி /கான்சன்ட்ரேட் மாதிரி. வெய்ட் அண்ட் சீ பாய்ண்டுக்கு வந்துருவமில்லை ) .

மற்றவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் (பலர் கிளிப்பிள்ளைகள் தான்) சின்னதா லாஜிக் இருக்கக்கூடும். அது என்னன்னு நமக்கு புரியுது. இருந்தாலும் ஜல்லியடிகளுக்கு நாம ஏன் ஸ்டஃப் தரனும்.அதனால நம்முதை மட்டும் நாம கவனிப்போம்.

ஒரு கிரகம் ஜாதகத்துல காங்கிரஸ் கணக்கா சுயேச்சைய விட மோசமா தேஞ்சு போயிருக்குன்னு வைங்க. உங்க பாடியில சூரிய ஒளியிலான அந்த கிரகத்தோட நிறத்தை கிரகிச்சுக்க கூடிய சக்தி மிக அதிகமா இருக்கும். அதே போல சீக்கிரமா வெளிப்படுத்திடக்கூடிய இயல்பும் இருக்கும்.

உதாரணமா வாயிதா போன செல் ஃபோன் பேட்டரியை சார்ஜ்ல போட்டிங்கன்னா பத்து நிமிசத்துல பேட்டரி ஃபுல்லுன்னு காட்டும். ஆனால் ஒரு கால் பேசிமுடிக்கிறதுக்குள்ள பேட்டரி நில் ஆயிரும்.

ஆனா உருப்படியான பேட்டரி நிதானமாதான் சார்ஜ் வாங்கும் . அதே போல நிதானமாதான் சக்தியை வெளிப்படுத்தும்.

பலமிழந்த கிரகம் - சூரிய ஒளியிலான அதனோட நிறத்தை க்ராஸ்ப் பண்ணிக்கற மேட்டர்ல உங்க பாடியை வாயிதா போன பேட்டரியாக்கிரும்.

உதாரணமா உங்க ஜாதகத்துல சூரியன் பல்பு வாங்கியிருக்காருனு வைங்க .அப்பம் உங்க பாடி சூரிய ஒளியில் உள்ள ஆரஞ்சு நிற ஒளியை கப கபன்னு கிரகிச்சுக்க துவங்கும். இதனால உங்களுக்குள்ளே ஈகோ தலைவிரிச்சாட ஆரம்பிச்சுரும்.

தகுதி உடைய மனிதர்கள் மேட்டர்லயே அவிகளை அவிக ஈகோ குழி தோண்டி புதைச்சுருது. இதுல தகுதியில்லாத ஆசாமி ஈகோயிஸ்டா பிஹேவ் பண்ணா என்ன ஆகும்னு ரோசிங்க.

இதுக்குத்தேன் நாம எந்த கிரகம் ஜாதகத்துல வீக்கா இருந்தா அந்த கிரகத்தோட நிறம் கொண்ட ஆடை அணிகலைனை அதிகமா யூஸ் பண்ண சொல்றோம்.

உ.ம் மேற்படி சூரிய பலமில்லாத மனிதர் ஆரஞ்சு நிற ஆடை அணிகலனை அதிகம் யூஸ் பண்ணா சூரியனில் உள்ள ஆரஞ்சு நிற கதிர்களை அவிக பாடி கிரகிக்காது.ஏன்னா ஆரஞ்சு நிற கதிர்கள் அவிக பாடி மேல விழவே விழாதே. ( அப்படி விழாததாலதான் அதை ஆரஞ்சு நிற ஆடைன்னு நம்மால சொல்ல முடியுது)

இந்த மேட்டர்தான் ராசிக்கற்கள் மேட்டர்லயும் வேலை செய்யுது. ராசிக்கல்லுங்கறது இதுவரை சொன்ன அதே மேட்டரை இன்னம் கொஞ்சம் ஸ்ட் ராங்கா பண்ணுது.

ஒரே கிரகம் நன்மை & தீமை செய்யக்கூடிய நிலையில இருக்கலாம்.

உ.ம் 1
மிதுனத்துக்கு சனி 8 -9 க்கு அதிபதி. இவிக நீலக்கல் அணியலாம்.
உ.ம் 2
கடகத்துக்கு குரு 6 ,9 க்கு அதிபதி இவிக புஷ்பராகம் அணியலாம்

இதே போல நன்மையே செய்யக்கூடிய கிரக்மா இருந்தாலும் கொஞ்சம் தீமையையும் சேர்த்து தரும்.

உ.ம் 1
சனி யோக காரகனாகும்போது ஏழு தலைமுறைக்கு அழியாத செல்வத்தை தருவாரு.ஆனால் கூடவே அதை நீங்க கிழவாடி ஆன பிற்காடு தருவாரு. கூடவே கஞ்சத்தனம், சோம்பல் இதையெல்லாம் சேர்த்து தருவாரு. மேற்படி சைட் எஃபெக்ட்சை குறைக்க நீலம் அணியலாம்.

( என்ன பாஸ் .. மேட்டர் ஓகேவா? தற்கொலை மேட்டருக்கு போயிரலாமா?)

கேள்வி1:

கண்ணாலமானவுகளே ஏன் அதிகமா தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க?

மனிதர்கள் ஸ்தூலமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை உந்துவது இரண்டு இச்சைகளே. ஒன்று : கொல்வது இரண்டு: கொல்லத்துடிப்பது.

இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம் .

ஆண் பார்வையில்:
விந்து வெளியேறும் வரை அவளை கொல்லுவதாய் உணர்கிறான். பற்குறி பதித்தல், தட்டுதல், கிள்ளுதல், உறுப்பை திணித்தல் ,முரட்டுத்தனமாக இயங்குதல் இத்யாதி மூலம் அவனது கொல்லும் வெறி நிறைவேறுகிறது. விந்து வெளியேறும்போது ஆண் தான் செத்து போவதாய் (குட்டி மரணம்) உணர்கிறான். காலச்சக்கரம் நிற்கிறது.

பெண்பார்வையில்:
ஆரம்பத்தில் கொல்லப்படும் இச்சை நிறைவேறுகிறது. க்ளைமேக்சில் (விந்து வெளிப்படும்போது) அவனை தான் கொன்றுவிட்டதாய் உணர்ந்து (அடி மனதில்) திருப்தியடைகிறாள்.அவளது கொல்லும் இச்சை நிறைவேறுகிறது.

உடலுறவு என்பது ஆண் -பெண் இருவரின் கொல்லும் -கொல்லப்படும் இச்சைகளை ஒரு சேர தீர்த்து வைக்கவேண்டும். இதற்கு ஆண் தன் உச்சத்தை சற்றே தாமதித்து பெண் உச்சம் பெறுவதை துரிதப்படுத்த வேண்டும்.ஆனால் இது எந்த அளவுக்கு நடைமுறையில் இருக்கிறது என்பதை அவரவர் மனசாட்சி அறியும்.

ஆக ஆண் பெண்களின் அடிப்படை இச்சைகள் செக்ஸில் நிறைவேறாத சந்தர்ப்பத்தில் உள்ளடக்கி வைக்கப்பட்ட இச்சைகள் வெடித்து தம் சுயரூபத்தில் வெளிப்படுகின்றன.

பெண் உச்சம் பெற்றாலும் பெறாவிட்டாலும் ஆண் உச்சம் பெற்றுவிடுகிறான். நாளடைவில் இது ஆணில் குற்ற உணர்ச்சியையும் -பெண்ணில் வன்முறையையும் தூண்டுகிறது.

திருமணத்துக்கு முன்னாவது ஆண்,பெண்களின் அடிமனதில் தம் அடிப்படை இச்சைகளுக்கு ஒரு வடிகால் கிட்டும் என்ற கனவாவது மிச்சமிருக்கிறது. திருமணத்துக்கு பின்னோ அந்த கனவும் கலைந்துவிடுகிறது.

பெண்ணுக்கு செக்ஸில் ஆர்வம் குறைகிறது - பெண் செக்ஸை தவிர்க்க ஆரம்பிக்கிறாள். ஆண் தவிக்க ஆரம்பிக்கிறான் இருவரிலும் நிறைவேறாத செக்ஸ் இச்சைகள் வன்முறையாக வெடிக்கின்றன. வன்முறையை செயல்படுத்தும் வாய்ப்பு வலிமை இருக்கும்போது அது கொலையில் முடிகிறது.

வன்முறையை செயல்படுத்தும் வாய்ப்பு இல்லாத போது அது தற்கொலையில் முடிகிறது.

கேள்வி:2

பெண்கள் ஏன் உணர்வு பூர்வமான சொந்த பிரச்சினை காரணமா (அதிகபட்சம்) தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க?

பெண்கள் வீக்கர் செக்ஸ். ( உடலளவில்) இதனால் அவள் தன் வட்டத்தை சிறிதாக்கிக்கொள்கிறாள். ( கேமராவை ஜூம் பண்ண மாதிரி) இதனால் சொந்த பிரச்சினை மட்டுமே பூதாகரமாக மாறுகிறது. தற்கொலைக்கு தூண்டுகிறது.

கேள்வி:3

ஆண்கள் ஏன் சமூகம் ,பொருளாதாரம் தொடர்பான காரணங்களுக்காக (அதிகபட்சம்) தற்கொலை பண்ணிக்கிறாய்ங்க.

ஆண் ஸ்ட்ராங்கர் செக்ஸ்.அவனோட வட்டம் பெரிது. அவன் வேட்டையாட வேண்டியிருக்கு.அதற்காக சமூக பொருளாதார அமைப்புகளுடன் உறவாட வேண்டியிருக்கு. அதனால தான் சமூகம் ,பொருளாதாரம் தொடர்பான காரணங்கள் அவனை தற்கொலைக்கு தூண்டுது.