Showing posts with label ஜோதிடம்360. Show all posts
Showing posts with label ஜோதிடம்360. Show all posts

Saturday, February 4, 2012

ஜோதிடபுத்தக அட்டையில் பெரியார்

அண்ணே வணக்கம்ணே !

எப்படியோ இன்னைக்கு இப்பத்தேன் "ஜோதிடம் 360 " புத்தகத்துக்கான மேட்டரை ஃபைனலைஸ் பண்ணேன். ஆனால் அட்டையில தான் வில்லங்கமாயிருச்சு. பெரியாரை வச்சுருக்கேன்.

ஏன் வச்சேன் எதுக்கு வச்சேன்னு சிண்டை பிய்ச்சுக்க தோணுதா? அப்பம் நீங்க கில்மா கனவுகளை மறந்துட்டு இந்த பதிவை படிச்சுத்தான் ஆகனும்.

சோசிய புஸ்த்வத்துல பெரியார் புராணம் ஏன்னு கேப்பிக.சொல்றேன். எனக்கு கிடைச்ச ஜோதிட குப்பைகள்ளருந்து கோமேதகங்களை பொறுக்கி எடுக்க உதவினது என் பகுத்தறிவு. அந்த பகுத்தறிவை கொடுத்தவர் பெரியார். அதனாலதேன் அவருக்கு டாங்க்ஸ் சொல்றதுக்குன்னே இந்த அத்யாயத்தை தந்திருக்கேன்.

குணமெனும் குன்றேறி , தியாகமே உருவாக மூத்திரப்பானையை கையில் தூக்கிக்கொண்டு பட்டி தொட்டியெல்லாம் சுற்றி பகுத்தறிவு பிரச்சாரம் செய்த பெரியாரை ஒரு சித்த புருஷராகவே என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

எல்லாம் அவன் செயல், அவனன்றி ஓரணுவும் அசையாது, தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பது போன்ற வாதங்களில் இருப்பது எஸ்கேப்பிசம். இது போன்ற வாதங்களை பிரசாரம் செய்ய பெரிய அளவில் அறிவோ, மன உறுதியோ தேவையில்லை.ஆன்மீகம் என்பது மறைமுகமாக தனி மனிதனின் சமூக பொறுப்பை தட்டிக்கழித்துவிடுகிறது. மனிதனை கை விட்டு விடுகிறது. ( நீ ஏழையா இருந்தா அது உன் பூர்வ கருமம்)

ஆனால் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று தன் வாழ்வின் கடைசி நொடி வரை பிரச்சாரம் செய்ய (அதிலும் விஞ்ஞானம் பெரிய அளவில் வளராத அந்த காலத்தில் ) உலகின் அறிவு பெட்டகத்தோடு மலையளவும் உறுதியும் தேவைப்படும். நாத்திகத்தில் எஸ்கேப்பிசமில்லை. நாத்திகம் கடவுளை கைவிட்டதே தவிர மனிதனை கைவிடவில்லை. தன் சமூக பொறுப்பிலிருந்து நாத்திகம் தப்பி ஓடவில்லை.

மனிதனை கைவிட்டுவிட்ட ஆத்திகம் இன் ஹ்யூமன்.( மனித தன்மையற்றது) கடவுளையே கைவிட்டாலும் பெரியாரின் நாத்திகம் ஹ்யூமன் ( மனிதத்தன்மை வாய்ந்தது).

கடவுளை நம்பி வாழறதுலயோ , அப்படி வாழச்சொல்லி பிரச்சாரம் பண்றதுலயோ பாதி பேருக்கு பெரிசா எந்த பிரச்சினையும் வர்ரதில்லை. ஏன்னா கடவுள நம்பி வாழறதா காட்டிக்கிற எவனும் நம்பறமாதிரி தோணுதே தவிர அந்த நம்பிக்கை அவனது உடலின் மேல் தோலை கூட தாண்டறதில்லை.

ஒருத்தன் உண்மையிலயே கடவுளை நம்பிட்டா அவன் கடவுளா மார்ர வரை கடவுள் அவனை விடறதில்லை.கடவுள்னா அவர் உருவமில்லாதவர். அதனால தன் பக்தனையும் அரூபியா,குரூபியா, வத்தல் தொத்தலா மாத்திருவாரு.

கடவுளுக்கு அப்பா,அம்மா, ஆயா, அண்ணன்,தம்பி எவனும் கிடையாது. பக்தனுக்கு இல்லாம பண்ணிர்ராரு .இப்படி ஆயிரம் இருக்கு.

இதுல ஒன்னு ரெண்டு ஸ்டார்ட் ஆனாலே பக்தன் டர்ராயி ஆள விடு சாமினு கழண்டுக்கறான். இதுக்கெல்லாம் பயப்படாம ஸ்டிக் ஆன் ஆனதனால தான் கடவுள் என்னை மாதிரி அரை மெண்டலை கூட சகிச்சுக்கிட்டு கிடக்காரு

ஆனால் பெரியாரோட வாழ்வையும் வாக்கையும் பார்த்தா எனக்கு தோண்றது ஒன்னுதான். அவரு சதா சர்வ காலம் பொது நலத்தையே நோக்கமா கொண்டு , வாழ்ந்ததாலே ஒரே கொள்கைய மனோ வாக்கு காய அளவில் நம்பி வாழ்நாள் முழுவதும் பிரசாரம் செய்ததால அவருக்கே தெரியாம சில யோக அற்புதங்கள் அவருக்குள்ளே நடந்திருக்கனும்.

இல்லாட்டி அவரோட பேச்சும், எழுத்தும் இந்த அளவுக்கு சனங்களை இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்காது. அவற்றில் பல சட்டமாகவும் ஆகியிருக்காது.

ஆத்திகனா வாழவோ, ஆத்திகத்தை பிரசாரம் செய்யவோ கடவுள் குறித்த புரிதலோ ,கடவுளோட அனுமதியோ தேவையில்லை.

ஆனால் நாத்திகனா வாழ , பிரச்சாரம் செய்ய கடவுள் குறித்த புரிதல், அவர் அனுமதி நிச்சயம் தேவை.

பெரியார் இறையருள் பெற்ற மனிதர். சங்கராச்சாரிகளை விட புனிதர். கடவுளை மிகச்சரியா புரிந்து வைத்திருந்தார். தனி மனிதனை அதிலும் ஒடுக்கப்பட்ட மனிதனுக்காகவே தம் வாழ்வை தொலைத்தார். இறைவனுக்கு மனிதன் செய்திட இதைக்காட்டிலும் நற்பணி வேறேதேனும் உண்டா?

ஆஸ்திகர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு அவர்களையும் அறியாது இறைவனுக்கு தாங்களே பி.எஸ் என்ற எண்ணம் வந்து விடுகிறது. அந்த எண்ணத்தில் பிறக்கிற பேச்சுக்கள் தான் கேலிக்கிடமாகிவிடுகின்றன.

என் குறுகிய அறிவு, அனுபவத்துக்கு எட்டிய வரையில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறது. இருந்தாலும் அதை பரிசீலிப்பதோ, நிர்ணயிப்பதோ மனித யத்தனத்துக்கு மிஞ்சிய செயலாகவே உள்ளது.

கண்டதுக்கும் தியரி சொல்லி டயோரியா வர வைக்கும் எனக்கே ஒவ்வொரு சமயம் குழப்பமாகி மைண்ட் ப்ளாங்க் ஆகிவிடுவதுண்டு. நிற்க.

நமக்கு மோஸ்ட் ஃபேவரட் God மகா கணபதி. நான் கணபதியை எந்த அளவு பக்தியுடன் வணங்குகிறேனோ அதே அளவு பக்தியுடன் வினாயகர் சிலைகளை உடைத்த, பகுத்தறிவு பகலவன் ஈ.வே.ரா அவர்களையும் வணங்குகிறேன். குழப்புகிறேனா?

கணபதி ஊர்வலம் நடத்தி மும்பையிலும், சென்னையிலும் தேவையில்லாத பதட்டத்தை உருவாக்கும் கூட்டத்தைத் தான் நான் நாத்திக கூட்டம் என்பேன்.

ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா..மனுஷ்யர்களுக்காக, அவர்களது மூட நம்பிக்கைகளை ஒழித்து கட்ட வினாயகர் சிலைகளை உடைத்த பெரியார் உண்மையான ஆஸ்திகர்.

சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று தேவையற்ற பதட்டத்தை உருவாக்கி மனுஷ்யர்களுக்கு தொல்லை கொடுக்கும் கூட்டம் தான் நாஸ்திக கூட்டம் என்பது என் கருத்து.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் பெரியாரின் சித்தம் சிவன் போக்கில் செயல்பட்டமைக்கான ஆதாரமாக ஒரே ஒரு சம்பவம்.

பெரியார் ஆட்டோ கிராப் போட காசு வாங்குவாராம். கட்சி நிதி திரட்ட ( அது எதுக்கு பகுத்தறிவு பிரசாரம் செய்யத்தான்) இதுவும் ஒரு வழி. ஒரு ஆட்டோ கிராபுக்கு ஓரணா கட்டணம். ஒரு ஆசாமி அரை அணா கொடுத்து ஆட்டோ கிராப் கேட்டாராம். பெரியார் இனிஷியல் மட்டும் போட்டாராம். ஆசாமி இதுல என்னங்க கஞ்சத்தனம்னு கேட்டார். என் பேனாவுக்கு கட்சி இன்க் போடுதப்பா..கட்சிக்கு எவ்வளவு லாபமோ அவ்வளவு இன்க் தான் செலவழிக்கனும்னாராம்.

ஒரு மனிதன் மாமனிதனாவது கடவுளை ஏற்பதாலோ (அ) மறுப்பதாலோ அல்ல மனிதம்,மனித குலம் காப்பதாலேயே!

தாங்கள் சாதாரண ஆசா பாசங்கள் உள்ள மனிதர்கள்தான் என்பதை உணர்ந்திருந்தாலும், அஜால் குஜால் வேலைகளை செய்து கிட்டே இருந்தாலும் குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்க 24 மணி நேரம் 365 நாள் பீலா விட்டுக்கிட்டு ஏ.சி. கார்ல திரியுற சாமியார்ங்களை துறவிங்கறாங்க.. நான் ஏன் பெரியாரை ஒரு சித்தபுருஷர்னு சொல்ல கூடாது. நான் ஏன் பெரியாரை ஒரு குப்த யோகின்னு சொல்லக்கூடாது.




Friday, November 11, 2011

நான் ஜோதிடனான கதை



அண்ணே வணக்கம்ணே !
நம்ம வலைப்பூவிலும் - வலை தளத்திலும் படித்த அதே பேச்சுத்தமிழை நீங்க இங்கேயும் எதிர்பார்த்தா அது உங்கள் தவறு அல்ல. அடுத்த பத்திய படிச்சுட்டு பயந்துக்காதிங்க . முன்னுரையும் ஒரு சில சமாசாரங்களும் மட்டும்தேன் லேசு பாசான இலக்கண தமிழ் மற்ற படி நூல் முழுக்க பேச்சுத்தமிழ்தேன். உடுங்க ஜூட்!

ஜோதிடம் 360 டிகிரி என்ற இந்த நூலுக்கு பெரிய சரித்திரமே இருக்கிறது. இதுல நாம சோசியரானது எப்படிங்கற கதையும் அடக்கம். ( நம்ம எழுத்துக்களின் நெடு நாள் வாசகர்களுக்கு இது ரெம்ப ஓல்ட் நியூஸுதேன்)

முருகன் என்ற இயற்பெயருக்கிணங்க வள்ளிக்குறத்தி ஒருத்தியை காதலித்ததும் , அவளுடன் ஓடிப்போய் கல்யாணம் கட்டும் முன் ஒரு மரத்தடி ஜோதிடரை சந்தித்ததும், என் காதல் கல்யாண கதை அவர் சொன்னபடியே அல்பாயுசில் முடிந்ததும் சின்ன ஆரம்பம் தான்.

அவர் பெயர் ராமசாமி. அக்மார்க் நடைபாதை ஜோதிடர். வயசான கட்டை. அவர் மேட்டர் புட்டுக்கும்னு சொன்ன போது "அதையும் பார்த்துரலாம்"னு நான் வீம்பா நினைச்சது நிஜம். கடேசி கணம் வரை அவரோட கணிப்பை பொய்யாக்க ட்ரை பண்ணதும் நிஜம் ஆனால் அவரோட கணிப்புத்தான் ஜெயிச்சுது.

பை பர்த் நமக்கு ஈகோ சாஸ்தி. இன்னாங்கடா இது நாம உடம்பெல்லாம் மூளைய வச்சிட்டு இருக்கோம்.சனம் என்னவோ நம்மை ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு தூக்கறாய்ங்க.ஆஃப்டர் ஆல் ஒரு மரத்தடி சோசியனுக்கு நம்ம ஃப்யூச்சர் தெரிஞ்சிருக்கு. நமக்கு தெரியலின்னா எப்டின்னு கேள்வி ஆரம்பிச்சுருச்சு.

அதற்கு பிறகு தான் ஒரிஜினல் கதையே ஆரம்பம். நான் ஜோதிடம் கற்க ஆரம்பித்தபோது சம்மர் லீவுக்கு மாமா ஊருக்கு போய் வீடு திரும்பிய சிறுவன் தன் பெட்டியை குடைந்தது போலிருந்ததே தவிர புதிதாக கற்றேன் என்று கூறமுடியாது. 1989 ,பிப்ரவரியில் முதல் ஜோதிடரை சந்திப்பதென்ன 1990 மார்ச் மாதத்திலேயே ஆஃபீஸ் போட்டு ஜோதிடம் சொல்ல ஆரம்பிப்பதென்ன?

அப்பம் சோசியம் கத்துக்க நமக்கு குருவா இருந்ததும் -ஓரளவு சப்ஜெக்ட் தெரிஞ்ச பிற்காடும் ஹேண்ட் புக் கணக்கா கை கொடுத்ததும் லிஃப்கோ பப்ளிகேஷன்ஸாரின் "குடும்ப ஜோதிடம்"தான். அதுல ஒவ்வொரு பாவாதிபதியும் லக்னாத் துவாதச பாவங்களில் நின்றால் என்ன பலன்னு பத்தி பத்தியா கொடுத்திருந்தாய்ங்க.

மத்தவுக அப்படியே பை ஹார்ட் பண்ணி ஒப்பேத்துவாய்ங்க போல. நமக்கு அது முடியாத காரியம். ஆறாங்கிளாஸ்லயே இங்கிலீஷ் அசைன்மென்ட் கேள்விக்கு கூட சொந்த வார்த்தையிலதான் பதில் எழுதி பழக்கம்.

எனவே இந்த பலனுக்கெல்லாம் இன்னாதான் பேசிக்னு நோண்ட ஆரம்பிச்சேன்.ஸ்பார்க் ஆயிருச்சு. அசலான மேட்டர் வெளிய வந்துருச்சு.ஒரு சில அடிப்படையான விஷயங்களை தவிர மற்ற எந்த விதிகளையும் மனப்பாடம் பண்ற சமாசாரமே கடியாது. எல்லாம் "சொந்த கதைதேன்" "நாட்" பிடிப்பட்டு போனா கதை சொல்றது கஷ்டமா என்ன?

தமாசு என்னடான்னா மேற்படி குடும்பஜோதிடம் வருசா வருசம் ரீ ப்ரிண்ட் ஆகுமே தவிர மறுபதிப்பு/திருத்தப்பட்ட பதிப்புங்கற பாவத்தே கிடையாது.அதை பார்க்கிறப்பல்லாம் ஒன்னாங்கிளாஸ் வாத்யாரை பார்த்தாப்ல பரிதாபமா இருக்கும்,..

ஒரு தாட்டி பாஸ் கொஞ்சமா அப்டேட் பண்ணலாம்ல -வேணம்னா நான் பண்ணித்தர்ரேன்னு லெட்டர் கூட போட்டேன்.அதுக்கு அவிக "ஐயா.. நீங்க அப்டேட் பண்ணலாம். ஆனா அதை சரி பார்க்க அந்த காலம் மாதிரி எங்க கிட்டே ஆள் கிடையாதே"னு பதில் போட்டாய்ங்க. ஹும் கலிகாலம்!

இப்படில்லாம் கு.ஜோ வை நக்கலடிச்சாலும் அதுல முன்னுரையில படிச்ச ஒரு வரி மட்டும் நம்ம மனசுல பச்சக் " ஃபூல்ஸ் ஒபே தி ப்ளேனட்ஸ்.பட் தி க்ளெவர் கண்ட்ரோல் தெம்"

முட்டாள்கள் கிரகங்களுக்கு கீழ் படிகிறார்கள்.அறிவாளிகள் அவற்றை கட்டுப்படுத்துகிறார்கள். தூளா இருக்கா இல்லியா?

பலன் சொன்ன பிரதாபங்கள் ஒருபக்கம் என்றால்..சம்பிரதாய பரிகாரங்களின் அடிப்படையை பிடித்ததும் காலப்போக்கில் கால தேச வர்த்தமான மாற்றங்களால் அவை இன்றைய தேதிக்கு உப்புக்கு சப்பாவாக மாறிவிட்டிருப்பதையும் புரிந்து கொண்டேன்.

ஒரு சில ஜோதிடர்களின் "அஜீஸ்மெண்ட்"களால் அவை யாவும் நீர்த்து அடிப்படையை விட்டு விலகி ஓடிவிட்டிருப்பதையும் அறிந்து நவீன பரிகாரங்களை கண்டு பிடித்ததும் பெரிய கதை.

பாகாலாவில் இருக்கும்போது நண்பன் ஒருவனை வைத்து தெலுங்கில் எழுத ஆரம்பித்ததும், அப்போது வாழ்வில் வீசிய புயலும் இந்த நவீன பரிகாரங்கள் படைப்பின் ரகசியங்கள் என்ற உண்மையை பறை சாற்றின. டர்ராகி எழுதுவித்த அனைத்தையும் தீக்கிரையாக்கிவிட்டேன்.

பின்பு அதே விஷயம் மறுபடி எழுதப்பட்டு ராஜரிஷி என்ற அற்பாயுசு பத்திரிக்கையில் வெளிவ‌ந்ததும், ஆன்மீகம் மாத இதழில் பந்தாவாய் தொடராக ஆரம்பித்து படக்கென்று நிறுத்தப்பட்டதும் தனிக்கதை.
பின்பு ராஜமண்ட்ரி (தமிழில் எழுதப்படுவது போல் ராஜ முந்திரியுமில்லை திராட்சையுமில்லை) கொல்லபூடி வீராசாமி அண்ட் சன்ஸ் இதை பிரசுரிக்க முன் வந்ததும், அதை ஒரு தரம் அவர்களே தட்டச்சி ப்ரூஃப் ரீடிங்கிற்கு அனுப்பியதும், அதை சரிபார்க்க வேண்டிய ஆசாமியே போய் சேர்ந்ததும் மற்றொரு கிளைக்கதை.

2007 ஏப்ரலில் தினத்தந்தியில் சேர்ந்தேன். மேலாளர் நம்ம சப்ஜெக்டை கேட்டுவிட்டு ஆசிரியர் கிட்டே பேசுங்க தொடராவே போட்ருவம் என்று கொம்பு சீவினார். சம்பள தைரியத்தில் அநியாய ரேட்டுக்கு வேலூரில் தட்டச்ச செய்தேன். அது ஜோதிட பூமி மாத இதழில் தான் முழுமையாக வெளிவந்தது பரிகார காண்டம் முடிஞ்சதா?

பாரதியார் சொன்னாரே " சென்றிடுவீர் எட்டுத்திக்கும்"னு அதைப்போல ஒரு ஜாதகத்தை பார்த்து பலன் சொல்ல எத்தனயோ டேட்டா தேவைப்பட்டுது. அதையெல்லாம் நான் குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்துக்கிட்டே வந்தேன். அதெல்லாம் ஆக்சிடென்டலா ஷேப் அப் ஆகி ஒரு "முறை"யே உருவாயிருச்சு.

படக்குன்னு நான் போய் சேர்ந்துட்டன்னு வைங்க அதெல்லாம் காலி. இதுக்கப்பாறம் சோசியம் கத்துக்கறவனும் நம்மை போலவே வாழ்க்கைய தொலைச்சுத்தான் கத்துக்கனும்.குருவி மாதிரி தான் சேர்க்கனும். அப்படியில்லாம நம்ம மைண்ட்ல இருக்கிற டேட்டா பேஸை கேப்ஸ்யூல் வடிவத்துல பத்திரப்படுத்தினா என்னங்கற "நெல்ல" எண்ணம் பலகாலமாவே இருந்தது.

அந்த எண்ணம் செயலாக இணையம் ஒரு கருவியாக உதவியது. சிறுவாடு பணத்தை போல நாளொரு பதிவு ,மாதமொரு மினி தொடர்னு ஒரு பெரிய டேட்டா பேஸ் உருவானது. புதிய பதிவே போடலின்னாலும் பழைய பதிவுகளையே குறைஞ்சது ஆயிரம் பேர் தினசரி படிக்க ஆரம்பிச்சாய்ங்க.

2009 ,மே மாசத்துலருந்து இந்த நூல் வெளிவர்ர 2011 ,ஜனவரிக்குள்ள 5 லட்சம் ஹிட்ஸ் நிச்சயம் கம்ப்ளீட் ஆகியிருக்கும். ( இன்றைய தேதிக்கு டோட்டல் ஹிட்ஸ் : ?????????????) அப்பத்தான் நாம எழுதினதுலயும் விஷயம் இருக்குடி மாப்பிள்ளேன்னு மரமண்டைக்கு உறைச்சது.

அதனாலதான் இந்த புஸ்தவம் வெளிவருது. அதுவும் நம்ம எழுத்துக்களை படிச்சு இன்ஸ்பைர் ஆனவுக முன் கூட்டி காசு கொடுத்து முன்பதிவு செய்துக்கிட்டிருக்காய்ங்க. கைக்காசு பாங்குல இருக்கு. சின்னதா மார்க தர்சியில லட்ச ரூபாய்க்கு ஒரு சீட்டு போட்டிருந்தம். அது கேப்பார் மேய்ப்பார் இல்லாத சந்தர்ப்பத்துல ரூ.87 ஆயிரத்து சில்லறை கைக்கு வந்தது. என்ன ஒரு வில்லங்கம்னா பெத்த கடனிருக்கே. அதை செட்டில் பண்ணனுமே. மகள் கண்ணாலத்துக்கு சேர்த்த பணத்தை வச்சு புஸ்தவம் போட்டு புகழ் தேடறது கேணத்தனமில்லையா?

அதனாலதேன் இந்த முன் பதிவு திட்டம்.