Showing posts with label நவீன பரிகாரம். Show all posts
Showing posts with label நவீன பரிகாரம். Show all posts

Tuesday, November 27, 2012

ஜோதிடர்களுக்கு ஒரு சவால் !

அண்ணே வணக்கம்ணே !
காசு பணம் -காரிய ஜெயம் ரெண்டுக்கும் என்ன வித்யாசம் . இதுல எதுக்கு கிரக பலம் தேவைன்னு இந்த பதிவுல சொல்லப்போறேன்.

இதை அப்ஜெக்ட் பண்ண  முடிஞ்ச  சோசியருங்க அப்ஜெக்ட் பண்ணலாம். (காரண காரியத்தோட) . மேலும் கடேசியில ஒரு சவாலும்  விட்டிருக்கன். இது சோசியர்களுக்கு மட்டுமானதல்ல. சோதிட பிரியர்கள் ,சோதிட மாணவர்களும் ட்ரை பண்ணலாம் . உடுங்க ஜூட்டு .

இந்த பதிவாலே எச்சுமி பாட்டிக்கு கோவம் வந்தாலும் சரி உண்மைய சொல்லிர்ரதா உத்தேசம். அதுக்கு மிந்தி அதெப்படி எச்சுமி ஒனக்கு பாட்டின்னு கேப்பிக சொல்லிர்ரன்.

நாம கலைத்தாயின் இளைய மகன் (யோவ் ! 45 வயசுக்கு இளையமகனான்னு கூவாதிங்க. நான் சொல்றது க்லைத்திறன் & சீனியாரிட்டிய பொருத்து) கலைமகள் ஆரு? பிரம்ம தேவரோட வைஃப். பிரம்மதேவன் ஆரு? லார்ட் விஷ்ணுவோட தொப்புள் கொடியிலருந்து வந்தவரு.(ஆண் கர்பம் தரிக்கிறதெல்லாம் இப்பம் சகஜமாயிருச்சு பாஸு.. ) அவரோட வைஃபுக்கு பிள்ளை நாம.  நமுக்கு  அவரோட அப்பா தாத்தா தானே. அவரோட வைஃபான எச்சுமி பாட்டி தானே.

நம்மில் நெறைய பேருக்கு காசு பணமும் - காரிய ஜெயமும் வேறன்னு உறைக்கறதே இல்லை. மொதல்ல காசு பணம் வந்துரட்டும் பிறவு காரியத்தை நடத்திக்கலாம்னு மயங்கறோம்.மேட்டர் இன்னாடான்னா காசு பணம் வேற காரிய ஜெயம் வேற.

எப்படியா கொத்த தரித்திரம் பிடிச்ச ஜாதகத்துக்கும் 365 நாளும் காசு வர்ரதுக்கு ஒரு ஒத்தையடிப்பாதையாச்சும் நிச்சயம் இருக்கு.ஆனால் நாம என்ன பண்றோம்னா நம்ம ரோட்டீனை -ஈகோவை - காப்பாத்திக்கிறதுலயே ஜாதகத்துல உள்ள கிரகபலத்தை எல்லாம் விரயமாக்கிர்ரம்.

நம்ம நண்பர் ஒருத்தரை பத்தி அப்பப்போ ரெஃபர் பண்ணிட்டு இருப்பம். ( அன்மேரீட் -செட்டியார் - ஞா வருதா). பார்ட்டிக்கு  தனுர் லக்னம்.லக்னத்துல சனி .  . சுக்கிரன் உச்சம்..லக்னத்துல சனி இருந்தா சாக்கடை ஓரம் ,லாக்கப், ஜெயிலு, தரித்திரம் எல்லாத்தையும் பார்க்கனும். சுக்கிரன் உச்சம்ங்கறதால லக்சரியா வாழனும். (கில்மா உட்பட)

மொத இன்னிங்ஸ்ல வாழ்வாங்கு வாழ்ந்தப்பயும் கடையத்தான் டெக்கரெட் பண்ணி அனல் காட்டிக்கிட்டிருந்தாரே தவிர  மாடியில் உள்ள பார்ட்டியோட ரெசிடென்ஸ் சனி காரகம் தேன். 

ரெண்டாவது இன்னிங்ஸ்ல பெட் ரூம், கிச்சன், சாமி அலமாரி வரை சுக்கிர காரகமாக்கிக்கிட்டாரு. செட்டியாருக்கு வெள்ளி தெரியும், தங்கம் தெரியும், கல்லு தெரியும், மரத்தை பத்தி தெரியாதே. கார்ப்பென்டர் அவர் வசதிக்கு என்னென்னமோ அகட விகடம்லாம் செய்துக்கிட்டிருந்தாரு. நாம கண்டுக்கிடலை (பிசி ஆச்சே) உதாரணமா ப்ளைவுட்ல சாமி அலமாரி அடிச்சு அதுக்கு பிரைமர்/பெய்ண்டு எதுவும் அடிக்காம வார்னிஷ் அடிச்சு விட்டிருக்காரு. கதவெல்லாம் கீல் உதிர்ந்து தொங்கிக்கிட்டிருக்கு.  ஹாலை டச் பண்றதுக்குள்ள கார்ப்பென்டர் டிக்கெட் போட்டுட்டாரு. ஜாமான் வாங்கினது -கார்ப்பென்டருக்கு கடனா கொடுத்தது எல்லாம் சேர்த்தா பெரிய ரூவா ரெண்டு ஆயிட்டிருந்தது .

பார்ட்டியோட ராசி மீனம் . ( மீனத்தில் சந்திரன் - தனுர் லக்னத்து அஷ்டமாதிபதி ஆரு? சந்திரன் -இவர் உச்சமான சுக்கிரனோட சேர்ந்து 4 ல் )  சுக்கிரன் = லக்சரி சந்திரன் =மரணம்.

போன வருசம் தீபாவளி லெச்சுமி பூஜைக்கு எச்சுமி சிலை செய்யவச்சதுல சிலை செஞ்சவரு டிக்கெட்டு போட்டுட்டாரு.(சந்திரன் அஷ்டமாதிபதிங்கற பாய்ண்டோட சனி = ப்ரேதாத்மாக்களுக்கு காரகர்)

டெக்கரட்ல விடுபட்டு போன ஹால் எப்படி இருக்கும்னா குப்பை பொறுக்கறவிகல்லாம்  ஒரு மெகா செமினாருக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்துக்கிட்டு -லக்கேஜோட போனா அந்த  கோச் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். போறச்ச வரச்ச மூட்டைய நகர்த்தி வழி பண்ணிக்கிட்டு வரனும் போகனும்.

போன வருசம் செய்த எச்சுமி சிலை மூளியாகி - ஊனமுற்றோர் ஆசிரம் கணக்கா தயாராயிருச்சு. நண்பர் கோவில்ல வச்சுரலாம். ஆத்துல போட்டுரலாம்னு சொன்னாரு. நாம நமக்கு ஒரு சான்ஸ் கொடுக்க சொல்லி வாங்கிட்டு வந்து என்னென்னமோ தகிடு தத்தம்லாம் பண்ணி ஃபில் அப் தி பளாங்ஸ் எல்லாம் செய்து மறுபடி அதை சிலையாக்கி - ஆர்ட்டிஸ்டை கூட்டி வந்து பெய்ண்டிங் எல்லாம் செய்து நம்ம ஊட்லயே வச்சிருந்தம்.

தீபாவளி பூஜை ஏற்பாடு விசயமா மாடிக்கு போயிருந்தப்பத்தேன் ரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்ஃபார்ம் மாதிரி இருந்த ஹாலை பார்த்தோம்.

என்னய்யா இது ரங்க நாதன் தெரு மாதிரி இருக்கு . எலி கிலி செத்து வச்சா தேடவே மாசம் ஆகும் போலன்னு சொன்னம்.

நம்ம வாய் முகூர்த்தம் நெஜமாலுமே ஒரு எலி செத்து வைக்க - அதை கண்டு பிடிச்சு ஒழிச்ச பிறவு  ஹால்ல ஷெல்ஃப் அடிச்சு  மூட்டைகளை அதுக்கு ஷிப்ட் பண்றதா முடிவு பண்ணோம்.

நமுக்கு தேன் ஆணியடிக்க தெரியுமே. செட்டியார் வீட்டு பின்னாடி கொஞ்சம் இடம் வேற வேக்கன்டா இருக்கு.

ஒன்னுக்கு எட்டு ரீப்பர் வாங்கிட்டு வந்து ரெண்டரைக்கு அஞ்சுல ஒரு ஷெல்ஃப் அடிச்சுட்டம்.  தாளி அதை மேலுக்கு தூக்கனுமே .கதவெல்லாம் ரெண்டரை அடி அகலம் கூட இல்லை. என்னங்கடா இதுன்னு நெடுக்க வெட்டி ஒன்னை ரெண்டாக்கிட்டம்.  மறுபடி தூக்கறோம் உச்சி இடிக்குது . மேல் அறை வரை வெட்டி எடுத்து ரெண்டு பெஞ்சாக்கிட்டம்.

ரெண்டு ஷெல்ஃப் -ரெண்டு பெஞ்சை தூக்கி ஹால்ல போட்டு மூட்டை முடிச்சையெல்லாம் சார்ட் அவுட் பண்ணி குப்பைய கழிச்சு எல்லாத்தையும் தூக்கி அடுக்கினதுல ஹாலே லைப்ரரி மாதிரி ஆயிருச்சு.

மொத்தமா என்னடா செலவுன்னு பார்த்தா ரீப்பர் ஒரு ரூ 350 நம்ம அசிஸ்டென்டுக்கு பத்தா ரூ 100 , நெடுக்க வெட்ட மிஷின் வாடகைக்கு எடுத்ததுல ரூ.50 ஆணி ,புஷ், எல் க்ளாம்ப எல்லாம் சேர்த்து ஒரு ரூ.100. ( நம்ம உழைப்பு ? ஆல் ஃப்ரீ - அப்பப்போ செட்டியார் பின்னாடி வந்து டீ  கொடுத்து ஒரு சிகரட் கொடுப்பாரு ) ஆக ரூ.600 செலவுல  ரெண்டு ஷெல்ஃப். ரெண்டு பெஞ்ச்.

செட்டியாருக்கு ஒரே குஜிலி ஆயிருச்சு. நீ இம்மாம் பெரிய வேலை காரன்னா ஒன்னை வச்சே எல்லாத்தையும் முடிச்சுருப்பனேன்னாரு.

அப்பம் நாம சொன்னம்." செட்டியார் ! .. துட்டை  மட்டும் வச்சா வேலை முடிஞ்சுரும்னு  நினைக்காதே. வேலை முடியற நேரம் வந்தா துட்டே இல்லாம கூட வேலை முடிஞ்சுரும். அந்த நேரம் வராத வரைக்கு லெச்சங்க கொட்டினாலும் வேலை  நடக்காது"

உங்க ஜோதிட திறமைக்கு ஒரு சவால் :

அதே செட்டியார் -அதே ஜாதகம் . ஒரு கட்டத்துல ரெண்டு லெச்சம் செலவழிச்சாலும் வேலைக்காகலை . அதே செட்டியார் அதே ஜாதகம் ரூ.600 செலவழிச்சதுல படக்குன்னு வேலை முடியுது. இதெப்படி சாத்தியம்? ஜொல்லுங்க பார்க்கலாம்.










Thursday, September 20, 2012

நச் பரிகாரம்: 6 ஆம் பாவம்

அண்ணே வணக்கம்ணே !
எச்சரிக்கை:
இந்த ஒரு அத்யாயம் மட்டும் இங்கே வெளிவருது.பழைய -நாளைய அத்யாங்களை படிக்க நீங்க கீழே குறிப்பிட்ட வலை தளத்துக்கு தான் வரனும்.


ப்ளாகர் காரன் டாட் காம்னு இருந்ததை டாட் இன் என்று மாத்தின பிறவு அலெக்ஸா ரேங்க் படுத்துக்கிச்சு. அதனாலதேன் இந்த அலைக்கழிப்பு.


அனுபவஜோதிடம் வலை தளத்துல நச் பரிகாரங்கள் வரிசையில தொடர் ஆரம்பிச்ச பிறகு அலெக்ஸா ரேங்க்ல கூட  நல்ல முன்னேற்றம். இந்திய அளவிலான ரேங்கல 25 ஆயிரத்துல இருந்து ஜோதிடம் 360 நூல் வெளியீடு சமயத்து பாராமுகத்தால ஒரு லட்சத்து 48 ஆயிரத்துக்கு போன ரேங்கு இப்பம் 73 ஆயிரத்தை எட்டி பிடிச்சிருக்கு.


ஒரு தாட்டி மேற்படி வலைதளத்துக்கு போனிங்கன்னா இந்த தொடர்ல இதுவரை போட்ட பழைய அத்யாயங்கலை ஒரு தாட்டி ஓட்டிப்பார்த்துரலாம்.

பதிவுகள் போட்டதாலதான் ஆன்லைன் ஜோதிட ஆலோசனை சூடு பிடிச்சது இல்லேங்கல. ஆனால் இன்னைக்கு நிலைமை என்னடான்னா வித் அவுட் அப்டேஷன் வலைப்பூ-வலைதளம் ரெண்டுக்கும் சேர்த்து 1000 ஹிட்ஸ் கியாரண்டி. ஆன்லைன் ஜோதிட ஆலோசனை தொடர்பா தினசரி விசாரிப்புகள், பைசா எல்லாம் வந்துட்டே இருக்கு. கொசுறுக்கு  ஜோதிடம் 360 நூல் விற்பனை மூலமும் பைசா வருது.

இதையெல்லாம் எதுக்கு சொல்றேன்னா எந்த வித பிரதி பலனும் எதிர்ப்பார்க்காம -ஒரு தொழில்முறை ஜோதிடனாக இருந்தாலும் -தொழில் ரகசியம்னு எதையும் மறைச்சு வைக்காம உள்ளது உள்ளபடி எழுதிக்கிட்டு வரேன்.

நாம எழுதின பதிவுகள்ள உள்ள விஷயங்களை ஃபாலோ பண்ணி க்ளிக் ஆனவுக மஸ்தா பேரு கீறாங்க. இதை படிக்கிற உங்களுக்கும் - க்ளிக் ஆன அவிகளுக்கும் நான் சொல்றது ஒரே மேட்டருதான். இந்த வலைதளத்தை பத்து பேருக்கு அறிமுகப்படுத்துங்க. டிவிட்ட,ஃபேஸ்புக் இப்படி எத்தனை வழி இருக்கோ அத்தனை வழியில அறிமுகப்படுத்துங்க.

ஒரு சின்ன சூட்சுமம் தெரியாம தற்கொலை பண்றவுக இருப்பாய்ங்க, வாழ்க்கையையே இழந்தவுக இருப்பாய்ங்க. அவிக நம்ம சைட்டை பார்த்தா -படிச்சா தற்கொலை எண்ணம் மாறலாம்.இழந்த வாழ்க்கைய திரும்ப பெறலாம். எத்தனையோ நன்மைகளை அடையலாம். இதுல எது நடந்தாலும்  பதிவெழுதின என்னை விட இந்த தளத்தை அறிமுகப்படுத்தின உங்களுக்குத்தான் புண்ணியம் சாஸ்தி. சஸ்தாவா புண்ணியம் கிடைக்கிறச்ச ஷேர் பட்டன் மேல  ஒரு க்ளிக் .. பண்றது போயி கஷ்டமா என்ன? நிச்சயம் ஷேர் பண்ணுவிங்கல்ல.

பதிவுக்கு போயிரலாமா?

இந்த ஆறாம் பாவம் இருக்கே.. இது கெட்டு குட்டிச்சுவரா போகனும். அப்பத்தேன் சத்ரு,ரோக,ருண உபாதைகள் இல்லாம வாழ முடியும். இங்கன எட்டுக்கதிபதி,விரயாதிபதி அல்லது சூ,செவ்,ராகு,சனி,கேது போன்ற பாவ கிரகங்கள் நிக்கனும். இதே கிரகங்கள் லக்னாத்தும் பாவியா இருந்தா ஸ்ரேஷ்டம். இந்த பாவாதிபதியும் எட்டு/12ல் இருந்தா இன்னம் நல்லது.

ஒரு சில லக்னங்களுக்கு  ஒரே கிரக்ம்  கிரகம் லக்னாதிபதியாவும்  6 க்கு அதிபதியாவும் இருக்கும். அவிக பாடுதான் இம்சை. இந்த கிரகம் கெட்டாலும் ஆப்பு ,பலம் பெற்றாலும் ஆப்பு. உ.ம் ரிஷபலக்னத்துக்கு சுக்கிரன் ரோகாதிபதி. இவர் பலம் பெற்றாலும் ஆபத்து . முழுக்க பலகீனப்பட்டாலும் ஆபத்து ஏன்னா லக்னாதிபதியும் சுக்கிரன் தானே.

இந்த பாவம் பலம் பெற கூடாது.  அப்படி பலம் தருவது எந்த கிரகமானால் என்ன பலன்னு சொல்ல ஆரம்பிச்சா பரிகாரம் சொல்றதுக்குள்ள பவர் கட் ஆயிரும்.அதனால நேரடியா பரிகாரத்தை மட்டும்  ஷார்ட்டா சொல்லிர்ரன்

1.சூரியன்:
அப்பா இருந்தா அவரோட கொடுக்கல் வாங்கல் செய்ங்க. (வட்டி போட்டு வாங்கனும்/வ.போ தரனும்) அவர் உசுரோட இல்லியா உங்களுக்கு தேவையில்லின்னாலும் அவரோட சொத்துக்கள் பேர்ல கடன் வாங்குங்க. கடன் வாங்கி ரிமோட் வில்லேஜஸ், மலை பிரதேசங்களுக்கு போய் வாங்க.பல்,தலை,எலும்பு,முதுகெலும்பு இத்யாதி நோய்கள் வராம இருக்க டேக் ப்ரிக்காஷன்ஸ். லாஸ் ஆஃப் கால்ஷியம் இருக்கா பாருங்க. கால்ஷியம் அதிகம் உள்ள உணவை உட்கொள்ளவும்.

2.சந்திரன்:
அம்மா  இருந்தா அவிகளோட  கொடுக்கல் வாங்கல் செய்ங்க. (வட்டி போட்டு வாங்கனும்/வ.போ தரனும்) அவிக உசுரோட இல்லியா உங்களுக்கு தேவையில்லின்னாலும் அவிகளொட  சொத்துக்கள் பேர்ல கடன் வாங்குங்க. கடன் வாங்கி பிரபல தீர்த்தங்கள் உள்ள ஊர்களுக்கு போய் வாங்க. மனம் - நுரையீரல் - சிறு நீரகம் தொடர்பான பாதிப்பு இருக்கான்னு செக் பண்ணிக்கங்க. இவை வராம இருக்க டேக் ப்ரிக்காஷன்ஸ்.

3.செவ்வாய்:
உடன் பிறப்புகளோட கொடுக்கல் வாங்கல் செய்ங்க (வட்டி போட்டு வாங்கனும்/வ.போ தரனும்) . பாகப்பிரிவினையில விட்டு கொடுங்க. கடன் வாங்கி மலைமேல் இருக்கிற முருகன் கோவிலுக்கு போய் வாங்க. ரத்தம், எரிச்சல் , கோபம் தொடர்பான நோய்கள் இருந்தா உடனே ட்ரீட்மென்ட் எடுங்க. (மறுபடி) வராம  இருக்க டேக் ப்ரிக்காஷன்ஸ். வீட்டு மனை வாங்கறச்ச வங்கியில கடன் வாங்கி கேஷுக்கு வாங்கிருங்க. தவணை வேண்டாம்.

4.ராகு:
பிறமொழியினரோட கொடுக்கல் வாங்கல் செய்ங்க (வட்டி போட்டு வாங்கனும்/வ.போ தரனும்) . தந்தை வழி தாத்தா,பாட்டி இருந்தா தினசரி 15  நிமிஷமாச்சும் அவிகளோட சண்டை போடுங்க (செல்லமா தான்) கடன் வாங்கின காசுல மூக்குப்பொடி,வெத்திலைபாக்கு ,மருந்து மாத்திரை வாங்கி கொடுங்க.இடுப்புக்கு கீழ் பாகத்துல வீக்கம் ,வலி,கட்டி வந்தா உடனே ட்ரீட்மென்ட் பாருங்க.

5.குரு:
புனைப்பெயர் வச்சுக்கிட்டு அரசியல் வாதிகளை,வங்கிகளை , சேவை நிறுவனங்களை கிழிங்க. பிராமண நண்பர்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்ங்க (வட்டி போட்டு வாங்கனும்/வ.போ தரனும்). உங்க ஆரம்பபள்ளி,ஹை ஸ்கூல் வாத்யாருங்க இருந்தா வீக்லி ஒன்ஸாச்சும் அவிகளை சந்திங்க. கை செலவுக்கு கடன் வாங்கின காசை கொண்டு போங்க. பல் சொத்தை , உள்ளங்கையில எரிச்சல் ,உள்ளங்கால்ல எரிச்சல்,இதயபடபடப்பு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை இருந்தா உடனே ட்ரீட்மென்ட் எடுங்க.

6.சனி:
கட்ன் வாங்கின காசுல ஒரு டூல் பாக்ஸ் வாங்கி வச்சுக்கிட்டு தினசரி அரைமணி நேரமாச்சும் ஜி.டி.நாயுடு வேலைங்க செய்ங்க. தலித் நண்பர்கள் இருந்தா அவிக கிட்டே கொடுக்கல் வாங்கல் செய்ங்க (வட்டி போட்டு வாங்கனும்/வ.போ தரனும்). வேலைக்காரவுகளுக்கு கடன் வாங்கின காசுல பிரியமா எதுனா வாங்கி கொடுங்க. போனஸ் கொடுங்க. கால், நரம்பு,ஆசனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருந்தா உடனே ட்ரீட்மென்ட் எடுங்க.

7.புதன்:
தாய் மாமன், வைசிய நண்பர்களிடன் கொடுக்கல் வாங்கல் செய்ங்க (வட்டி போட்டு வாங்கனும்/வ.போ தரனும்).  தோல்,கீல்,அண்டம் சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்ட பிரச்சினை இருந்தா உடனே ட்ரீட்மென்ட் எடுங்க. ஸ்டேஷ்னரி ஐட்டம் வாங்கும்போது கடன் வாங்கின காசுல வாங்குங்க.

8.கேது:
இடுப்புக்கு மேல்  பாகத்துல வீக்கம் ,வலி,கட்டி வந்தா உடனே ட்ரீட்மென்ட் பாருங்க . பிற பதத்தை சேர்ந்தவர்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்ங்க (வட்டி போட்டு வாங்கனும்/வ.போ தரனும்). தாய் வழி தாத்தா,பாட்டி இருந்தா தினசரி 15  நிமிஷமாச்சும் அவிகளோட சண்டை போடுங்க (செல்லமா தான்) கடன் வாங்கின காசுல மூக்குப்பொடி,வெத்திலைபாக்கு ,மருந்து மாத்திரை வாங்கி கொடுங்க.

9.சுக்கிரன்:
காதலி, மனைவியிடம் கொடுக்கல் வாங்கல் செய்ங்க (வட்டி போட்டு வாங்கனும்/வ.போ தரனும்).கைனகாலஜிக்கல் பிரச்சினைகளை ஏற்படுத்தற காரியங்களை கட்டி வச்சுருங்க. பிரச்சினைன்னு வந்தா உடனே கைனகாலஜிஸ்டை பாருங்க.

Sunday, April 8, 2012

திருமணத்தடை : சோதிட ஆய்வு


அண்ணே வணக்கம்ணே !

லக்னாதிபதி எங்கே இருந்தாலும் திருமணத்தடைக்கு வாய்ப்பிருக்கிறதை ஒரு தொடரா ஆரம்பிச்சு எளுதிக்கிட்டிருந்தம். இடையில எண் கணிதப்படி எட்டாம் மாசம் மாட்டிக்கிச்சா கேப் விளுந்துருச்சு. விட்டதை தொடரப்போறோம். இதுவரை லக்னாதிபதி 1 முதல் 8 ஆமிடங்களில் இருந்தால் என்ன பலன் -அது எப்படி திருமணத்தடையை ஏற்படுத்தும்னு பார்த்துட்டு வந்தோம்.

இன்னைக்கு லக்னாதிபதி 9 ல இருந்தா திருமணத்தடை எப்படி நிகழும்னு பார்ப்போம். Read More

Wednesday, February 29, 2012

திருமண தடை: உடல் ,மனத்தடைகள்


அண்ணே வணக்கம்ணே !
ஒரு படத்துல வடிவேலு "ஒரு மனுசன் வீட்ல இருந்து வெளிய வந்து வீடு சேர்ரதுக்குள்ள எத்தீனி கண்டம்டா சாமீ"ன்னு புலம்புவார். கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து பதிவுக்கு வர்ரதுக்குள்ள எத்தீனி டைவர்சனு?

நேத்திக்கு சொன்னாப்ல ஃபேஸ் புக் காரன் ஆப்படிச்சுட்டான். மொபைலுக்கு கோட் அனுப்பறேங்கறான். கோடும் வரமாட்டேங்குது.. லங்கோடும் வரமாட்டேங்குது. இப்பம் என்னடான்னா கோட் லிமிட் தாண்டி போச்சு ஃபர்ஸ்ட் நேம் - லாஸ்ட் நேம் ஃபோட்டோ -டேட் ஆஃப் பர்த் எல்லாம் இருக்கிறாப்ல ஒரு ஐ டி ப்ரூஃப் அனுப்பனுமாம்.

ஜா.ரா ரேன்ஜுக்கு இல்லின்னாலும் நமக்கும் ரெண்டு மூணு பேரிருக்கு. பேங்க்லயே ரெண்டு பேரு (அஃபிடவிட் கொடுத்திருக்கம்) என்னா இழவு இதெல்லாம்? அல்லாரையும் பிளாட்ஃபார வியாபாரி மாதிரி வாங்க வாங்கன்னு ஃபேஸ் புக்குக்கு கூப்டாச்சு. இப்பம் நாமே போகமுடியாத ஆயிருச்சு ( சுமார் 4,000 பேரை கூப்டிருக்கம் - நம்ம கான்டாக்ட்ஸ் அப்படி) பார்ப்பம் பான் கார்ட்ல முருகன் அலியாஸ் முருகேசன் கொடுத்தாப்ல ஞா. நாளைக்கு த்தேன் இந்த இழவை எடுக்கனும்.

நிற்க திருமண தாமதம் மேட்டரை மேரீட் லைஃபுக்கு அப்ளை பண்ணிக்க சொல்லி சொல்லியிருந்தம்.அது எத்தீனி பேரு கண்ல பட்டதோ தெரியலை.

இதுவரை மேற்படி மேட்டருக்கு அப்பா,அம்மா , உ.பிக்கள் காரணமா லொள்ளு இருந்தா என்னா பண்றதுன்னு பார்த்தோம். இன்னைக்கு அசலான மேட்டரு தன் திருமணத்துக்கு தானே தடையா இருக்கிறது. அஸ்கு புஸ்கு அதெப்படினு கேப்பிக. சொல்றேன். Read More


Saturday, November 19, 2011

பரிகாரங்கள் Vs நவீன பரிகாரங்கள்

ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் சொல்லிவிட்டு அதன் பிறகு பரிகாரங்கள் கூற ஆரம்பிக்கிறேன்.

ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார்.
உதாரணமாக:தங்கம்: குரு, இரும்பு:சனி
உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபபலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் இலாகாவில் நீங்கள் புகுந்து விளையாடலாம். எந்த கிரகம் சுபபலமாக இல்லையோ அந்த கிரகம் உங்கள் வாழ்வில் விளையாடிவிடும். இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.

ஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன். உதாரணமாக:

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க வேண்டுமானால் வருடக்கணக்கில் இழுக்கும். எனவே நான் குறிப்பிட்ட ஜாதருக்கு செவ்வாய் தொடர்பான வியாதிகள் உள்ளதா (பி.பி,ப்ளட் ஷுகர்,கட்டிகள்,கண்கள் சிவத்தல்,அதீத சூட்டால் வரும் வயிற்று வலி), செவ்வாய் கெட்டால் இருக்கக்கூடிய குணநலன் கள் உள்ளனவா?(கோபம்,அடி தடி, என்.சி.சி,ஸ்போர்ட்ஸ் வகையில் ஆர்வம்) என்று பார்க்கிறேன். செவ்வாய் ஏற்படுத்த கூடிய விபத்துகள்,தீ விபத்துகள்,அங்க ஹீனம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டறிகிறேன். இவை நடந்திருந்தால் செவ்வாய் தோஷம் இருப்பதாக நிர்ணயிக்கிறேன்.

மேற்படி தொல்லைகள் கட்டுக்குள் இருந்தால் தோஷ பரிகாரத்துக்கு காரணமான கிரகம் பலமாய் உள்ளதாய் முடிவு செய்கிறேன். மேற்படி தொல்லைகள் தொடர்ந்து நடந்து வருவதாய் ஜாதகர் கூறினால் அவர் ஜாதகம் கடுமையான செவ்வாய் தோஷ ஜாதகம் என்று நிர்ணயிக்கிறேன். இதனால் தான் என் ஜோதிட முறைக்கும் நம்ம வலைப்பூ/வலைதளங்களுக்கும் அனுபவ ஜோதிடம் என்று பெயர் சூட்டியுள்ளேன்.

நவக்கிரகத் தோஷங்கள்:
நவக்கிரகங்களால் விளையும் தீய பலன்களையே ஜோதிட நூல்கள் நவக்கிரகத் தோஷங்கள் என்று கூறுகின்றன. மேற்படி தீயபலன்களைத் தவிர்க்க வேண்டிச் செய்யப்படும் யாகங்கள், விசேஷ பூஜைகளையே பரிகாரங்கள் என்று சொல்கிறோம்.
நாளிதுவரை நீங்கள் கேள்விப்பட்டுள்ள பரிகாரங்களை எல்லாம் 3 வகையில் அடக்கி விடலாம்.
1. எந்தக் கிரகம் தோஷத்தைத் தந்துள்ளதோ அதற்குரிய தேவதைக்கு யாகங்கள், பூஜைகள் செய்வது.
2. குறிப்பிட்ட கிரகத்துக்கான திருத்தலத்துக்குச் சென்று பூசித்து வருவது.
3. தானம் வழங்குவது (பூமி தானம், கோ தானம், அன்னதானம் முதலியவை).

1. தேவதைகளுக்கு யாகங்கள்:
யாகம் என்றால் என்ன? (செவ்வாய் காரகத்வம் வகிக்கும்) நெருப்பை வளர்த்து பல விலையுயர்ந்த பொருட்களை அதில் போட்டு விடுவதே. இதனால் பெருமளவு செவ்வாய்க்குரிய தோஷங்கள் குறையும் (செவ்வாய் நெருப்புக்கு அதிபதி என்பதால்). யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவையோ, அந்தக் கிரகத்தின் தோஷங்களும் குறையும். (உம்) பட்டாடைகளுக்குச் சுக்ரன் அதிபதி.

லக்னம் முதற்கொண்டு எத்தனையாவது வீட்டில் எந்த ராசியில் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும் (உம்) செவ் 5-ல் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்றால் 5 என்பது புத்தி ஸ்தானம், செவ்வாய்க் குரிய கடவுள், சுப்ரமணியர், சுப்ரமணியரைப் புத்தியில் நிறுத்துவதால் (தியானிப்பதால்) தோஷம் குறையுமா? வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா? யோசித்துப்பாருங்கள்!

செவ்வாய் 2–டிலோ, 8-டிலோ, 12-டிலோ இருந்து தோஷத்தைத் தருவதானல் யாகம், தோஷத்தைக் குறைக்கும் என்று நம்பலாம், காரணம் 2-என்பது தனபாவம், செவ்வாய் நெருப்புக்கு அதிபதி, ஜாதகரின் தனம் நெருப்பில் நாசமாக வேண்டும் என்பது பலன், 8-என்பது ஆயுள்பாவம், பெருநஷ்டங்களைக் காட்டும் இடம், 12-என்பது விரய பாவம், நஷ்டங்களைக் காட்டும் இடம், இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் நெருப்பால் நஷ்டங்கள் ஏற்பட வேண்டும் என்பது பலன், யாகம் செய்வதால் செவ்வாய் தன் அதிகாரத்துக்குட்பட்ட நெருப்பால் கண்டதையும் நாசம் செய்து விடுவதற்கு முன்பு நாமே முன்வந்து அக்னிக்குப் பொருட்களைச் சமர்ப்பிக்கிறோம். யாகங்களை நடத்தித்தரும் பிராமணர்களுக்குத் தட்சிணை தருவதால் குருக் கிரகத்தின் தோஷம் குறையும்.

2. கிரகத்தலங்களைத் தரிசிப்பது:
மனிதர்கள் நடமாடும் ரீ-சார்ஜபிள் பேட்டரிகள், பூஜையறை-மின்சார ப்ளக்பாயின்ட், கோவில்கள்-மின்சார ட்ரான்ஸ்பார்மர்கள், புண்ணியத்தலங்கள்-சப்ஸ்டேஷன்கள், நம் ரீ-சார்ஜபிள் பேட்டரி சரியான நிலையிலிருந்தால் பூஜை அறையிலேயே சார்ஜ் ஆகிவிடும். பேட்டரியிலேயே ஏதோ பிரச்சினையிருக்கிறது என்று வையுங்கள்! சப்ஸ்டேஷனுக்கே (புண்ணியத்தலங்கள்) போனாலும் அது எப்படி சார்ஜ் ஆகும்?

3. தானம் வழங்குதல்:
நீங்கள் தானம் வழங்கும் பொருள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டதோ அந்தக் கிரகத்தின் தோஷம் குறையும். எண்ணெய்-சனி, தங்கம்-குரு, இதே போல் நீங்கள் யாருக்குத் தானம் செய்கிறீர்களோ அவரைப் பொறுத்தும் தோஷம் குறையும். ஊனமுற்றோர்-சனி, தீவிபத்தில் சிக்கியவர்-செவ்வாய், பிராமணர்-குரு, ஆக பரிகாரம் என்பது கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதாகும். யோசியுங்கள்! அதே சமயம் கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டமும்-நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டமும் சமமாக இருக்கவேண்டும், அப்போது தான் தோஷம் குறையும்.உதாரணமாக செவ்வாய் ராசிக்கோ, லக்னத்துக்கோ 8-ல் உள்ளார், இது விபத்தோ-தீவிபத்தோ நடக்க வேண்டிய நேரம் என்று வையுங்கள்! இந்த நேரத்தில் நீங்கள் டுவீலரில் (பெட்ரோலுக்கு அதிபதி-செவ்) மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு போகிறீர்கள் (செவ்வாய்க்குரிய கடவுள்-முருகர்) ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வந்து விடுகிறீர்கள், இதனால் விபத்தோ-தீவிபத்தோ தடுக்கப்பட்டுவிடுமா? என்று யோசியுங்கள்!

விபத்து உறுதி, ரத்த சேதம் உறுதி எனும் போது நாமாகவே ரத்ததானம் செய்துவிட்டால் விபத்து தடுக்கப்பட்டு விடுமல்லவா?சம்பிரதாயப் பரிகாரங்களில் உள்ள குறைகள்சம்பிரதாயமாகச் சொல்லப்பட்டு, செய்யப்பட்ட பெரும் பரிகாரங்கள் எல்லாம் உலக்கையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கசாயம் குடித்த கதையாகத்தான் உள்ளது. கற்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு மாங்காய் அடித்த கதையாக உள்ளது. மேலும் வாய்தா வாங்கிக் கொள்ளும் தந்திரமாகவும், சம்பிரதாயப் பரிகாரங்கள் அமைந்துள்ளன.
இப்போது ஒரு ஜாதகத்தில் 7-ல் சனி உள்ளார் என்று வையுங்கள், திருமணம் தாமதமாகும் அவ்வளவு தான், நாம் என்ன செய்கிறோம்? ஊரில் உள்ள ஜோதிடர்களையெல்லாம் பார்த்துப் பரிகாரம் கேட்டுச் சனியிடம் வாய்தா வாங்கிக் கொள்கிறோம், சனியும் சரி ஒழியட்டும் என்று சைடு கொடுக்க, திருமணம் ஆகிவிடுகிறது.

நாம் பரிகாரங்களையும், ஜோதிடர்களையும் மறந்து விடுகிறோம், இந்த மறதி தம்பதிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கோ, பேமிலிக் கோர்ட்டுக்கோ கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறது.பரிகாரம் என்பது கிரகத்தின் தீயபலனைத் தடுத்து (தற்காலிகமாகவேனும்) நிறுத்துவதாய் இருக்கக்கூடாது. இதனால் ஆங்கில மருத்துவ முறையில் நோய்கள் தற்காலிகமாக அமுக்கப்பட்டு சிலகாலம் கழித்து முழுவேகத்துடன் புதிய வடிவில் வெளிப்படுவது போன்ற மோசமான விளைவுகள் தான் ஏற்படும்.

நான் டெவலப் செய்து பிரச்சாரம் செய்துவரும் நவீனப் பரிகாரங்களோ, கிரகங்கள் தரும் தீய பலனைக் குறைந்த பட்ச நஷ்டங்களுடன் எப்படி ஏற்றுக்கொள்வது என்பதை கற்பிக்கும்.

வெள்ளத்திற்கு வளைந்து கொடுக்காத மரம் வேருடன் பிடுங்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டுவிடும், வளைந்து கொடுக்கும் புல்லே வெள்ளம் வடிந்தபின் நிமிர்ந்து நிற்கும்.

Monday, November 14, 2011

உயிரை பறித்த பரிகாரம்: திகீர் அனுபவம்

ஜாதகம் இல்லாதவுக: பிரச்சினையும் தீர்வும்: 2

அண்ணே வணக்கம்ணே .. நேத்து பவர் கட்டோட டக் அஃப் வார் செய்து ஒரு பதிவு போட்டம். மேட்டரு இன்னாடான்னா ஜாதகம் இல்லாமயே நமக்கு வர்ர/வந்த பிரச்சினைகளை வச்சு மேற்படி பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு கண்டுக்கறதுதேன்.

உங்க பிரச்சினைக்கு எந்த கிரகம் காரணம்னு கண்டுக்கினவுங்க இங்கே கொடுத்திருக்கிற பரிகாரங்களை செய்ய ஆரம்பிங்க. நோயை விட சில நேரம் ட்ரீட்மென்டே பயங்கர லொள்ளு பண்ணிரும். அதனால பரிகாரங்களை ஸ்டார்ட் பண்றதுக்கு மிந்தி எப்போ -எப்பூடி ஸ்டார்ட் பண்றதுங்கற டிப்ஸை பதிவின் கடைசியில் கொடுத்திருக்கிற ப்ளேயரோட ப்ளே பட்டனை அழுத்தி முழுசா கேட்டுருங்க.

சகட்டுமேனிக்கு செய்து சீன் ரிவர்ஸ் ஆயிட்டா நாம பொறுப்பு கடியாதுங்கோ

1.உங்க பிரச்சினைக்கு சூரியன் காரணம்னா :

1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க. காலை மாலை வாக் செய்யவும்.
2. காயத்ரி மந்திரம் படிக்கவும்/கேட்கவும் சொல்லும்போது தொப்புள் பகுதியில் இருந்து த்வனி புறப்படனும்.( அப்படி கற்பனை பண்ணுங்க)
3. சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமுள்ள உணவை உட்கொள்ளவும்.
4. சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ, யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச் சிகிச்சையைத் துவக்கவும்.
5. நான் அதிகாரம் செலுத்தும் விசயங்களில் இருந்து வருவாயைத் தவிர்க்கவும். நான் அதிகாரம் செலுத்தும் தொழில்களில் நீங்கள் தற்போது இருந்தால் மெல்ல வேறு தொழிலுக்கு (உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் உள்ள கிரகம் காரகத்வம் வகிக்கும் தொழிலுக்கு) மாறிவிடவும்.
6. வீட்டின் நடுப்பாகத்தில் பள்ளம், உரல் இருந்தால் அப்புறப்படுத்தவும்.
7.படுக்கைக்கு முன் -டேபிள் கண்ணாடியின் கீழ் சூரியோதய காட்சி கொண்ட போஸ்டர் வைத்து அதை இமைக்காது பார்த்து மனதில் பதிக்கவும். தூங்கும் முன் தூங்கி எழுந்தபின் அக்காட்சியை மனதில் கொண்டுவரவும்.
8.காலை மாலை வெயில் உடல் மேல் படும்படி வாக் பண்ணவும்.
குறிப்பு:கிரகங்களின் காரகத்வங்களை அறிய நாளை வரை காத்திருக்கவும்.(ஸ் அப்பாடா நாளைய பதிவுக்கு இப்பமே கர்ச்சீஃப் போட்டாச்சு)
2.உங்கள் பிரச்சினைக்கு காரணம் சந்திரனானால்:

1. அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).ஜாலியா அப்படி நடந்துட்டும் வரலாம்

2. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.

3. நான் அதிகாரம் வகிக்கும் தொழில்களில் ஈடுபட்டிருந்தால் மெல்ல கழண்டு கொள்ளுங்கள்.4. உங்களுக்குத் தூசு, டென்ஷன், புகை, உதவாது. சுத்தமான குடிநீரையே அருந்துங்கள்.

5. ஆயுதம் தரிக்காத, சாந்தமான அம்மனை வணங்குங்கள். முக்கியமாய்க் கன்னியாகுமாரி அம்மன்.6. அருகம்புல் சாறை அருந்துங்கள்.

7. சந்திரபலம் இருக்கும் நாட்களில் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுங்கள்.

8. வாக்குக் கொடுக்காதீர்கள். காமராஜர் மாதிரி "பார்க்கலாம்" “பார்க்கலாம்" என்றே சொல்லிக் கொண்டிருங்கள்.

9. கண்களின் தண்டனைக் காதல்வழி என்ற கவிஞரின் வைர வரிகளை மறக்காதீர்கள். நீச்சல், தலைக்குக் குளிப்பது, அதிக வெயில், அதிகக் குளிர் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.

10. வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது.

11.படுக்கைக்கு முன் -டேபிள் கண்ணாடியின் கடல்+சந்திரன் இணைந்த காட்சி கொண்ட போஸ்டர் வைத்து அதை இமைக்காது பார்த்து மனதில் பதிக்கவும். தூங்கும் முன் தூங்கி எழுந்தபின் அக்காட்சியை மனதில் கொண்டுவரவும்.

உங்கள் பிரச்சினைக்கு காரணம் செவ்வாய் என்றால்:
1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.
8. நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் இருந்து விலகுங்கள். அவற்றிலிருந்து வரும் ஆதாயங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

( மற்ற கிரகங்களுக்கான பரிகாரம்+காரகத்வங்கள் அடுத்த பதிவில்)

இப்பம் ப்ளேயர் -எச்சரிக்கைகள்.உசாரய்யா உசாரு..டோட்டல் சைட்ஸ் உசாரு.

Friday, September 9, 2011

சர்ப்ப தோஷம் : பரிகாரங்கள் ஆடியோ


சர்ப்பதோஷம்னா ராகு கேதுக்கள் லக்னத்துலருந்து 3,6,10,11,4,12 தவிர இதர இடங்களில் இருப்பது. இதற்கான பரிகாரத்தை கேட்க கீழ் காணும் ப்ளேயர்ல ப்ளே பட்டனை சொடுக்குங்க

Monday, September 5, 2011

செவ்வாய் தோஷம் : அசலான பரிகாரம்


அண்ணே வணக்கம்ணே !
முக்கியமா மணி அண்ணன், கிருஷ்ணா ,சுதர்சன் மற்றும் மெயில் அனுப்பின நண்பர் ஆகியோருக்கு சாரி. இன்னைக்கும் குரல் பதிவு தேன்.இதுல உள்ள அனுகூலங்களையும் சொல்லியிருக்கேன். உங்களுக்கும் வேணா எனக்கும் வேணா பேசாம ஓட்டிங் வச்சுருவம்.

நம்ம சைட்டுக்கு கிடைக்கிற ஹிட்ஸ் மேக்சிமம் 1000 இதுல பாதி பேர்..மாணா மாணா அதுல பாதிபேர் (250) அது கூட மாணா பட்டுன்னு 25பேர் குரல் பதிவு வேணான்னு ஓட்டுப்போட்டுட்டா டெக்ஸ்டுக்கு மறிர்ரன்.

நம்ம ஜா.ராவுக்கு இது ஒரு சான்ஸ்.தான் வச்சிருக்கிற டுபாகூர் மெயில் ஐடிங்களை வச்சு டெக்ஸ்டுக்கு ஓட்டுப்போட்டுட்டா நமக்கு டப்பா டான்ஸ் ஆடிரும். இன்னைக்கு செவ் துவாதச பாவங்களில் எந்தெந்த பாவங்களில் நின்னா (அது பிரதிகூலமான பாவமா இருந்தா) என்னமாதிரி பரிகாரங்களை செய்துக்கனும்னு விவரிச்சுருக்கேன். இதை செவ் தோஷம்னு சொன்னா நல்லா புரியும்னு நினைக்கிறேன்.

நேற்றைய கருத்து மழைக்கு கமெண்ட் மழை பொழியலை. இப்பம் டெக்ஸ்ட் பதிவுதான்னு நமக்கு ஆப்படிக்கிற கமெண்ட் மழையாவது பொழியுதா பார்ப்போம்.

கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளேபட்டனை அழுத்தி செவ்வாய்க்கான பரிகாரங்களை கேளுங்க

Tuesday, July 12, 2011

ஜாதகம் இல்லாதவுகளுக்கு கில்மா சோசியம்



களத்ர பாவத்துக்கு அதாங்க கில்மாவுக்கு ஆப்பு வச்ச கிரகத்தை பொறுத்து எஃபெக்ட் எப்படியிருக்கும்னு ஆனா கிரகங்களோட பேரை நானும் சொல்லலை. பதில் சொல்றவுகளுக்கு சோப்பு கவரை பரிசா வச்சதால ஆரும் கூட சொல்லலை.

ஜாதகம் இல்லாதவுகளும் தங்களோட தாம்பத்ய வாழ்க்கையின் நிலையை பொருத்து எந்த கிரகம் லொள்ளு பண்ணுதுனு கண்டுக்கிட வழி சொல்லியிருந்தேன். அதை இன்னைக்கும் (உங்கள் வசதிக்காக) தந்திருக்கேன்.

கீழே குறிப்பிட்ட நிலைகள் உங்க லைஃப்ல இருந்தா ( இருக்குதா பார்த்துக்கங்க) அதுக்குண்டான பரிகார பேக்கேஜையும் சேர்த்து தந்திருக்கேன். 7 ஆம் பாவம் சில ரகசியங்கள் என்ற இன்னொரு பதிவும் போட்டிருக்கேன். அதை இங்கே அழுத்தி படிச்சுருங்க.

1.சூரியன்:

கணவன்/ மனைவிக்கு ஆளுமை ஓவரா இருக்கறது - தேன் நிற விழிகள் - அடர் புருவம் - சோடாபுட்டி கண்ணாடி . தூக்கமின்மை ஜாயிண்ட் பெய்ன்ஸ் - முதுகுவலி . மொட்டை மாடி மாதிரி ஓப்பன் ஏர் தக் ஜம்ல விருப்பம் இருக்கலாம்.

பரிகாரம்:

1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க. காலை மாலை வாக் செய்யவும்.
2. காயத்ரி மந்திரம் படிக்கவும்
3. சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமுள்ள உணவை உட்கொள்ளவும்.
4. சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ, யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச் சிகிச்சையைத் துவக்கவும்.
5. நான் அதிகாரம் செலுத்தும் விசயங்களில் இருந்து வருவாயைத் தவிர்க்கவும். நான் அதிகாரம் செலுத்தும் தொழில்களில் நீங்கள் தற்போது இருந்தால் மெல்ல வேறு தொழிலுக்கு (உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் உள்ள கிரகம் காரகத்வம் வகிக்கும் தொழிலுக்கு) மாறிவிடவும்.
6. வீட்டின் நடுப்பாகத்தில் பள்ளம், உரல் இருந்தால் அப்புறப்படுத்தவும்.


2.சந்திரன்:

மனம் , நுரையீரல் சிறு நீரகம் தொடர்பான தொல்லைகள் - கற்பனை தேரினில் பறந்து செல்லும் தன்மை. ஜலகிரீடையில ஆர்வமிருக்கலாம். வெளியூர் கெஸ்ட் ஹவுஸ்,லாட்ஜுகள்ள தங்கினப்போ மூடு தூள் பறக்கலாம். ( ரகசிய காமிரால்லாம் வச்சிருக்கானுவளாம் யு ட்யூப்ல வந்துரப்போறிங்க )

பரிகாரம்:
1. அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).2. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.3. நான் அதிகாரம் வகிக்கும் தொழில்களில் ஈடுபட்டிருந்தால் மெல்ல கழண்டு கொள்ளுங்கள்.4. உங்களுக்குத் தூசு, டென்ஷன், புகை, உதவாது. சுத்தமான குடிநீரையே அருந்துங்கள்.5. ஆயுதம் தரிக்காத, சாந்தமான அம்மனை வணங்குங்கள். முக்கியமாய்க் கன்னியாகுமாரி அம்மன்.6. அருகம்புல் சாறை அருந்துங்கள்.7. சந்திரபலம் இருக்கும் நாட்களில் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுங்கள்.8. வாக்குக் கொடுக்காதீர்கள். காமராஜர் மாதிரி "பார்க்கலாம்" “பார்க்கலாம்" என்றே சொல்லிக் கொண்டிருங்கள்.9. கண்களின் தண்டனைக் காதல்வழி என்ற கவிஞரின் வைர வரிகளை மறக்காதீர்கள். நீச்சல், தலைக்குக் குளிப்பது, அதிக வெயில், அதிகக் குளிர் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.10. வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது.

3.செவ்வாய்:

ரத்தம் எரிச்சல் கோபம் தொடர்பான வியாதிகள் - வாழ்க்கை துணையை எதிரியா பாவிக்கிறது -படக்குனு கிரோசினை தலை மேல கவுத்துக்கிட்டு தீப்பெட்டிய தேடறது - மணிக்கட்டை அறுத்துக்கறது -ப்ளக்ல கை வைக்க ஓடறது இந்த லட்சணங்கள் இருந்தா தம்பதி பிரியலாம் - செத்தே போகலாம் (தீயில் கருகி /ரத்தவெள்ளத்தில்) இவிக மேல தாக்குதல் கூட நடக்கலாம். அடி தடி - தகராறு -கலகம் இத்யாதிக்கு பிறகு மூடு கிளம்பலாம். மாதவிலக்கின் போதும் கசமுசாவுக்கு ட்ரை பண்ணலாம்.

பரிகாரம்:
1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.


4.ராகு:

-சினிமா லாட்டரி மது கவரும். மேற்கத்திய கலாசாரத்துல ஈடுபாடு. ஃபிசிக்ல டிஃப்ரன்ஸ் இருக்கும் - ஐமீன் ஒல்லி பீச்சானா இருக்கலாம் - அல்லது நீர் உடம்பா இருக்கலாம் - ஃபுட் பாய்சன் , மெடிக்கல் அலர்ஜி , விஷம்னு எழுதின பாட்டிலை க்ளோசப்ல கேமராவுக்கு காட்டி படக்குனு வாய்ல கொட்டிக்கிறது. சட்டவிரோதமாவாச்சும் லட்சக்கணக்கா பணம் வரனும்னு துடிக்கிறது. இவிக ஒன்னு அண்டர் கிரவுண்டுக்கு போயிருவாய்ங்க அ விஷமருந்தி சாகலாம். கும்மிருட்டுலதேன் கில்மான்னு அடம்பிடிக்கலாம். வெறுமனே கட்டிக்கிட்டு இருக்கலாம்னு சொல்லலாம். அ காரியம் முடிஞ்சப்பாறமும் பிரிய அனுமதிக்காம இருக்கலாம்.

பரிகாரம்:
1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் 'ட்ராகன்' (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு 'பெரிசுக்கு' ஒரு 'கட்டிங்' போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.


5. குரு:

ஞா மறதி -அஜீரணம்- வாயு கோளாறு - இதயம் தொடர்பான பிரச்சினைகள் -ஏழை & செல்வாக்கில்லாத குடும்பத்து பெண்/ஆண் வாரிசா இருக்கிறது .கில்மாவை கூட குளிச்சு ப்ரேயர் பண்ண பிறவுதான்னு சொல்லலாம். ரெம்பவே சாங்கியம் பார்க்கலாம்.

பரிகாரம்:

1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள். 3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள். 11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.


6.சனி:

வாழ்க்கைத்துணை நிறம் மட்டா இருக்கலாம் - ஏழையா இருப்பாய்ங்க. கல்வி இருக்காது. நாகரீகம் இல்லாத என்விரான்மென்ட்ல நாட்டுப்புறமா வளர்ந்திருப்பாய்ங்க. .ஊனம் ஏற்படலாம் - முக்கியமா கால் தொடர்பான ஊனம். நரம்பு ,ஆசனம் தொடர்பான பிரச்சினை வரலாம். . பார்க்க கிழவன்/கிழவி போல இருக்கிறது அ கண்ணாலமான சில காலத்துலயே அந்த பர்சனாலிட்டி வந்துர்ரது . நோயாளியா இருக்கலாம் - கஞ்ச பிசினாறியா இருக்கலாம். சோம்பேறி /சுத்த பத்தம் இல்லாத பார்ட்டியா இருக்கலாம்.க்லாஸ் ஃபோர் எம்ப்ளாயி அ யூனிஃபார்ம் போட்டாக வேண்டிய தொழில்ல இருக்கலாம். குதப்புணர்ச்சியை விரும்பலாம்.

பரிகாரம்:
1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.

7.புதன்:

ஊர் வம்புல ஆர்வம் -தெரிஞ்சவன் தெரியாதவன்லாம் ஃபோன் போட்டு மணி கணக்கா பேசுவான். பார்க்க ஆண் பெண் போலவும் -பெண் ஆண் போலவும் தெரிவாய்ங்க. தோல் -கீல் -அண்டம் தொடர்பான வியாதிகள் இருக்கலாம் . வேலி தாண்டலாம் பெண்மேல் முறையை விரும்பலாம்

பரிகாரம்:

1. உங்களுக்குத் தேவையில்லாத விசயங்களைத் தெரிந்து கொள்ளாதீர்கள். பைத்தியத்திற்கு ஆரம்பம் தகவல் குழப்பம்தான்.2. யாருக்காகவும், யாரிடமும் தூது செல்லாதீர்கள்.3. வியாபாரம் வேண்டாம். 4. கூரியர், தபால், மூன்றாவது நபர்கள், தூதர்களை நம்பாதீர்கள், எந்தத் தகவலையும் நேரில் (அ) போனில் தெரிவியுங்கள்.5. க்ளப்புகள், சங்கங்கள், யூனியன்கள், உங்களுக்கு உதவாது. விலகியே இருங்கள்.6. தாய்மாமன்கள், மாமனார்கள் விசயங்களில் எச்சரிக்கை தேவை.7. ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்களை விட்டு விலகி யிருங்கள்.8. கள்ள உறவு உதவாது.9. தோல் வியாதிகள் இருந்தால் ஆங்கில மருத்துவத்தின் மூலம் அவற்றை அமுக்கப்பார்க்காதீர்கள். 10. மாணவர்கள் கணிதம், விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.11. கண்ணனைத் துளசி மாலைப்போட்டு வணங்கவும், மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும்.


8.கேது:

மந்திர தந்திரங்களில் ஆர்வம் - சதா பிரமைகளில் வாழ்வது - அகாரணமா ஆர வேணம்னா எதிரியாக்கிக்கறது - புண்கள் - பாடில அப்பர் பார்ட்ல அடையாளம் தெரியாத வலி - பலகீனம் இருக்கிறது. ( டயக்னசிஸ்ல க்ளீன் ரிப்போர்ட் வரும் -ஆனா பிரச்சினை தொடரும். போலி சாமியாருக்கு சொத்தையே எழுதிக்கொடுத்துர்ர கேஸா இருக்கும். செக்ஸ் மூலம் மிஸ்டிக் பவர்ஸ் பெறமுடியும் அ அது இழக்கப்படும்ங்கற நம்பிக்கை இருக்கலாம்.



1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 180 டிகிரியில் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

9.சுக்கிரன்:

அதி காமம் இருக்கலாம் - இது சில மாசத்துலயே ஃபணால் ஆகி கில்மால ஆர்வமே இல்லாம போயிரும். கைனகாலஜிக்கல் பிரச்சினைகள் வரும். காதல் /கள்ளக்காதல் விவகாரம்லாம் வரும். கிச்சன்ல கில்மா இவிகளை கவரலாம்.

பரிகாரம்:
1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும். 2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும். 6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல). 8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும். 9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும்.

எச்சரிக்கை:
இந்த பதிவு 1989 முதலான என் உழைப்பின் சாரம். இது அவரவர் தனிப்பட்ட உபயோகத்துக்கு மட்டுமே. அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையேன்னு மிஸ் யூஸ் பண்ணா தோல் ,கீல்,அண்ட வியாதிகள் வரும்.

Monday, June 27, 2011

"அவாள் " கூறும் டுபுக்கு பரிகாரங்கள்

1. சூரியன் பேசுகிறேன்
உங்களில் பலருக்கு ஜாதகமேயிருக்காது. உங்களுக்கு ஜாதகம் இல்லாவிட்டலும் பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம் தெரியாவிட்டாலும் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேனா? இல்லையா? என்று தெரிந்து கொண்டு தகுந்த பரிகாரங்களையும் செய்து கொள்ளலாம்.
கடவுள் பிரதமர்! நவக்கிரகங்களே மந்திரிகள்!!ஒரு பிரதமர் எப்படி மந்திரிகளுக்கு இலாகாக்களைப் பிரித்துக் கொடுக்கிறாரோ அதேபோல் கடவுளும் எங்களுக்கு (நவகிரகங்களுக்கு) இலாக்காக்களைப் பிரித்துக் கொடுத்துள்ளார். நாங்கள் எங்கள் இலாகாவின் கீழ் வரும் விஷயங்கள், விவகாரங்களில் அதிகாரம் செலுத்துகிறோம். நாங்கள் உங்கள் ஜாதகத்தில் நன்மை செய்யும் நிலையிலிருந்தால் நன்மை செய்கிறோம், தீமை செய்யும் நிலையிலிருந்தால் தீமை செய்கிறோம்.
நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல இடத்தில் உட்கார்ந்து நன்மை செய்யும் நிலையிலிருந்தால், அதிகாரம் செலுத்தும் விஷயங்களையெல்லாம் வாரி வழங்கிடுவேன். கிழக்குத்திசை, மாணிக்கக்கல், தானம்-கடிகாரம், ஆத்மா-தந்தை, தந்தையுடன் உறவு, தந்தைவழி உறவு, தன்னம்பிக்கை இதற்கெல்லாம் நானே அதிகாரி. பல், எலும்பு, முதுகெலும்பு, வலதுகண், மலைப் பிரதேசங்கள், தலைமைப் பண்புகள், மேற்பார்வை, தாமரைமலர், விளம்பரங்கள், நாளிதழ்கள் இவை யாவும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே! பித்தளை, திட்டமிட்ட தொடர்ச் சுற்றுப்பயணங்கள், உள்ளூர், ஊராட்சி, நகராட்சி மன்றங்கள், ஒளிவு மறைவற்ற பேச்சு, ஒல்லியானவர்கள், கோரைப்புல் போன்ற தலை முடியுடையவர்கள், கூரையில்லாத வீடு, ஏகபுத்திரன், ஒற்றைத்தலைவலி, எலும்பு முறிவு, தூக்கமின்மை இவையாவும் என் அதிகாரத்தின் கீழ்வருபவையே.
ஆதர்ச புருஷரான தந்தை, அவருடன் நல்லஉறவு, தன்னம்பிக்கை, நாலு பேரை வைத்து வேலைவாங்கும் தொழில், இப்படி உங்கள் வாழ்க்கை இருந்தால் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். 
மாறாகப் பல்நோய், எலும்பு முறிவு, தாழ்வு மனப்பான்மை, தந்தையுடன் விரோதம், அடிமைத் தொழில் இப்படியாக உங்கள் வாழ்க்கை நகர்கிறதா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால், நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம்.
நான் மட்டுமே அல்ல. வேறு எந்தக் கிரகம் அளிக்கும் தீயபலனிலிருந்தும் யாரும் தப்பவே முடியாது. எங்கள் தீயபலன் என்பது சீறிக்கிளம்பிவிட்ட துப்பாக்கிக் குண்டு போன்றதாகும். இதை இதயத்தில் வாங்கிக்கொள்வதா? தோளில் தாங்கிக் கொள்வதா என்பது உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்த விஷயம்.
இறைவன் பேரருளாளன். எந்த ஜாதகத்தை எடுத்தாலும் எந்தக் கிரகமும் 100% தீயபலனைத் தரும் நிலையில் இருக்காது. அதே நேரம் எந்தக் கிரகமும் 100% நல்ல பலனைத் தரும் நிலையிலும் இருக்காது. எனவே ஒவ்வொரு ஜாதகரும், நான் ஆதிக்கம் செலுத்தும் விஷயங்களில் ஒரு சிலவற்றிலாவது, கொஞ்சமாவது நற்பலனைப் பெற்றே தீருபவர்கள்.
என் கட்டுப்பாட்டிலிருக்கும் விஷயங்களை முன்பே சொல்லியுள்ளேன். அவற்றில் உங்கள் நிலைக்கு இன்றியமையாதவை எவையோ! அவற்றை மட்டும் தனியே குறித்துக் கொள்ளுங்கள். அவை தவிர மற்ற விஷயங்களை விட்டு விலகியிருங்கள். என்னுடைய தீயபலன் குறைந்து நற்பலன்கள் அதிகரித்துவிடும்.நீங்கள் எதையாவது பெறவேண்டும் என்றால் எதையாவது இழந்துதான் ஆகவேண்டும். 
கால்படி சோறு வேகும் பாத்திரத்தில் அரைப்படி அரிசி வேகவைத்தால் என்ன ஆகுமோ, அதுவேதான் குறைந்த அளவு கிரக பலத்தை வைத்துக்கொண்டு அந்தக் கிரகம் ஆளுமை செய்யும் எல்லா விஷயங்களிலும் பலன் பெற நினைத்தாலும் நிகழும் பாத்திரத்தை (கிரகபலத்தை) மாற்ற முடியாது, என்றாலும் அரிசியைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லவா! அகல உழுவதைக்காட்டிலும் ஆழ உழுவது நன்றல்லவா?
இதுவரை நான் சொன்னதை வைத்து நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் உள்ளேன் என்பதை அறிந்து கொண்டிருப்பீர்கள். நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களை நீங்கள் செய்து கொண்டால் என்னால் விளையக் கூடிய தீயபலன்கள் குறையும். நல்ல பலன்கள் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்:
1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க
2. காயத்ரி மந்திரம் படிக்கவும்
3. சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமுள்ள உணவை உட்கொள்ளவும்.
4. சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ, யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச் சிகிச்சையைத் துவக்கவும்.
5. நான் அதிகாரம் செலுத்தும் விசயங்களில் இருந்து வருவாயைத் தவிர்க்கவும். நான் அதிகாரம் செலுத்தும் தொழில்களில் நீங்கள் தற்போது இருந்தால் மெல்ல வேறு தொழிலுக்கு (உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் உள்ள கிரகம் காரகத்வம் வகிக்கும் தொழிலுக்கு) மாறிவிடவும்.
6. வீட்டின் நடுப்பாகத்தில் பள்ளம், உரல் இருந்தால் அப்புறப்படுத்தவும்.
2. சந்திரன் பேசுகிறேன்
வடமேற்குத் திசை, வெண்முத்து, பிரமுகர்களின் மனைவியர், தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவு, நுரையீரல், சிறு நீரகம், மனம், இரவு நேரம், முழுநிலா நாள், சஞ்சலம், தண்ணீர்த் தொடர்பான இடங்கள், தொழில்கள், யார் எவ்வளவு நேரம் இருப்பார்கள் என்று சொல்ல முடியாத இடங்கள் (உம்) நீச்சல் குளம், கல்யாண மண்டபம், காய்கறி மார்க்கெட், பேருந்து, ரயில் நிலையங்கள் முதலியன. படகு, கப்பல் பயணம், 15 நாட்கள் துள்ளல், 15 நாட்கள் துவளல், திடீர்ப் பயணம், கண்டதும் காதல், சீஸனல் வியாபாரங்கள், மக்களுடன் நேரடித் தொடர்புள்ள வேலைகள், நதி, நதிக்கரை, கடற்கரை, தாய் வயது பெண்கள், இரண்டேகால் நாட்களில் முடிந்து விடக்கூடிய வணிகங்கள் இவற்றிற்கெல்லாம் சந்திரனாகிய நானே அதிபதி.
நீங்கள் புதுமை, என்றும் இளமை, பொதுமக்கள் ஆதரவு, நீண்ட சுவாசம், திடீர் நன்மைகள், திடீர் பணவரவுகளுடன் வெற்றிமேல் வெற்றி பெறுபவரா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.
இதற்கு மாறாக நிலையில்லாத வாழ்க்கை, அடிக்கடி தொழில் மாற்றம், வேதனையுடனான ஊர் மாற்றம், மனச்சோர்வு, நோயாளியான தாய், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சனைகளுடன் நீங்கள் அவதிப் படுகிறீர்கள் என்றால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம்.
நான் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். என்னால் விளையும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்:
1. அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).
2. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.
3. நான் அதிகாரம் வகிக்கும் தொழில்களில் ஈடுபட்டிருந்தால் மெல்ல கழண்டு கொள்ளுங்கள்.
4. உங்களுக்குத் தூசு, டென்ஷன், புகை, உதவாது. சுத்தமான குடிநீரையே அருந்துங்கள்.
5. ஆயுதம் தரிக்காத, சாந்தமான அம்மனை வணங்குங்கள். முக்கியமாய்க் கன்னியாகுமாரி அம்மன்.
6. அருகம்புல் சாறை அருந்துங்கள்.
7. சந்திரபலம் இருக்கும் நாட்களில் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுங்கள்.
8. வாக்குக் கொடுக்காதீர்கள். காமராஜர் மாதிரி "பார்க்கலாம்" “பார்க்கலாம்" என்றே சொல்லிக் கொண்டிருங்கள்.
9. கண்களின் தண்டனைக் காதல்வழி என்ற கவிஞரின் வைர வரிகளை மறக்காதீர்கள். நீச்சல், தலைக்குக் குளிப்பது, அதிக வெயில், அதிகக் குளிர் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.
10. வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது
3. செவ்வாய் பேசுகிறேன்
இதுவரை உங்களிடம் பேசினார்களே சூரியன், சந்திரன், இவர்களுக்கு மட்டுமில்லை, மற்றுமுள்ள ராகு, குரு, சனி, புத, கேது, சுக்ரன் எல்லோருக்குமே சேனாதிபதி நான் தான். மற்ற கிரகங்கள் தீமை செய்யும் நிலையிலிருந்தால் "சூரியன் பலமிழந்துட்டாரு", "கேது கெட்டிருக்காரு" என்று தான் ஜோதிடர்கள் சொல்வார்கள். நான் தீமை செய்யும் நிலையில் இருந்தால் மட்டும் ஜாதகத்தையே தோஷ ஜாதகம் என்று ஓரமாய் வைத்து விடுவார்கள்!
ஏன் தெரியுமா? என் இலாகா அப்படி! நான் அதிகாரம் செலுத்தும் விஷயங்கள் அப்படி!
வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே - நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள், போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின் கீழ் வருபவையே. 
நீங்கள் ஹை, லோ பிபி, ரத்தசோகை, அல்ஸர் போன்ற வியாதிகளால் அவதிப்படுபவரா?
சகோதரர்களே எதிரிகளாகி, பிற எதிரிகளுடன் சேர்ந்து உங்களைத் தொல்லைப்படுத்துகிறார்களா? 
ஏற்கனவே விபத்து, தீவிபத்து எதிலாவது சிக்கியுள்ளீர்களா? 
அறுவை சிகிச்சை நடந்துள்ளதா? காதல் திருமண விசயங்களில் பின்னடைவால் வருந்துபவரா?
"ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம்.மேற்சொன்ன உபாதைகள் ஏதுமின்றி நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் எந்தப் பிரச்சினையுமின்றி தொழில், வியாபாரம் செய்து வருகிறீர்களா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நன்மை செய்யும் நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். 
நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள், என்னால் விளையும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும். 
பரிகாரங்கள்:
1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.
8. நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் இருந்து விலகுங்கள். அவற்றிலிருந்து வரும் ஆதாயங்களைத் தவிர்த்துவிடுங்கள்
4. ராகுபேசுகிறேன்
சமீப காலமாய்த் திரைத்துறைப் பிரமுகர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது, தாதாக்களுடன் ரகசியத் தொடர்பு கொண்டிருப்பது, மாயமாய் மறைவது, பின் திடீர் என வெளிப்படுவது, விஷமருந்திச் செத்துப்போவது போன்ற செய்திகள் தொடர்ந்து வெளிவருவதைப் பர்த்திருப்பீர்கள். இதற்கு காரணம் என்ன தெரியுமா?நான் அவர்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருந்திருப்பேன். 
இருந்தாலும் அவர்கள் வேறு கிரகங்களின் பலத்தால் (சுக்ரன்–அழகு, கலை, நாட்டியம். புதன்–எழுத்து, கம்யூனிகேஷன். செவ்–சண்டைத்திறமை. குரு-பணம்) என் ஆதிக்கத்திற்குட்பட்ட சினிமாத்துறையில் ஓரளவு சாதித்தார்கள். தரை டிக்கட் வாங்கிவிட்டு கேபினில் உட்கார்ந்து படம் பார்த்தால் தியேட்டர்க்காரர்கள் விடுவார்களா என்ன? 
கடவுளின் படைப்பான நான் தியேட்டர்க்காரர்களை விட ஏமாளியா? அதனால் தான் நான் காரகத்வம் வகிக்கும் மது, போதைப்பொருள், மாபியா போன்றவற்றின் மூலம் அவர்கள் கதையை முடித்து விட்டேன். 
நவக்கிரகங்களான எங்கள் செயல் முறையைச் சற்று கூறுகிறேன் கேளுங்கள். நாங்கள் டப்பிங் சினிமாவில் வில்லன் கூட்டம் போல் செயல் படுவோம். அதில் மாநில முதல்வர் ஏர்போர்ட்டில் இறங்கி, ரௌண்டானாவில் திரும்பி, மீட்டிங்கில் பேசி, விருந்தினர் விடுதிக்குப் போய் ஓய்வெடுப்பதாக நிகழ்ச்சி நிரல் இருக்கும். வில்லன்கள் முதல்வரை ஏர்போர்ட்டிலேயே கொல்லத் திட்டமிட்டிருப்பார்கள். எப்படியோ ஹீரோ முதல்வரைக் காப்பாற்றி விடுவார். அடுத்தடுத்து வரும் இடங்களில் முதல்வரைக் கொல்ல வில்லன்கள் கூட்டம் ஏற்பாடுகள் செய்து முடித்திருக்கும்.
சினிமாவில் என்றால் ஹீரோ வென்றுதான் ஆக வேண்டும். எனவே முதல்வர் காப்பாற்றப் பட்டுவிடுவார். மனித வாழ்க்கை என்ன சினிமாவா? கடவுளின் படைப்பான நாங்கள் வெறும் டப்பிங் சினிமா வில்லன் கூட்டமா? இப்போது என்னையே எடுத்துக்கொள்ளுங்களேன்! 
நான் 7-ல் நின்றுள்ளேன் என்று வையுங்கள். நான் முதலில் அழகற்ற பெண்ணை அந்த ஜாதகருக்கு மனைவியாக்கப் பார்ப்பேன், ஜாதகரின் பெற்றோர் இதை நடக்க விடுவார்களா? விட மாட்டார்கள். சல்லடை போட்டு சலித்து, எடுத்து மகாலட்சுமி மாதிரிப் பெண்ணை மனைவியாக்குவார்கள்.
இனி நான் விடுவேனா அந்தப் பெண்ணின் மனதையோ, குணத்தையோ, உடல்நலத்தையோ கெடுத்துத்தான் தீருவேன். ஒருவேளை இதரக் கிரகங்களின் பலத்தால் மேற்படித் தீமைகளை என்னால் செய்ய முடியாவிட்டால் அந்தத் தம்பதிகளைப் பிரித்துவிடுவேன். (நானும் கேதுவும் 3, 6, 10, 11, 4, 12 தவிர இதர இடங்களிலிருந்தால் அது சர்ப்பதோஷம்). இப்போது ஓரளவு எங்கள் செயல்முறை உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். 
சரி! சூரியனைப் போலவே நானும் அதிகம் பேசி விட்டேன் என்று எண்ணுகிறேன், விஷயத்துக்கு வருகிறேன்., என் அதிகாரத்தின் கீழ் சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், சந்தேகம், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்பு, விஷம், ஆங்கில மருந்துகள், பொய் பேசுதல், பாம்புப்புற்று, துர்கை, கருப்பு மார்க்கெட், இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, பிற மொழிகள் ஆகியவை வருகின்றன. 
பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள், மெடிக்கல் ரியாக்ஷன், அலர்ஜி, கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் இவையும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே. இதுவரை உங்களை விஷ ஜந்துகள் கடித்ததில்லையா? மெடிக்கல் ரியாக்ஷன் நடந்ததில்லையா? எதைச் செய்தாலும் சட்டப்படிப் பகலில், பத்துப் பேருக்குச் சொல்லிச் செய்தே சக்ஸஸ் ஆகியிருக்கிறீர்களா? உங்களுக்கு மொழிவெறி கிடையாதா? சினிமா பைத்தியம் (அ) சினிமா மீது வெறுப்பு இல்லையா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.
நீங்கள் ஏற்கனவே மதுப்பழக்கம், புகைப்பழக்கம், சூது, முறையற்ற வருமானங்கள், அதிலும் அவ்வப்போது சட்டத்துக்குள் சிக்கி மீண்டவராய் இருந்தால், நிச்சயம் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் உள்ளேன் என்று அர்த்தம். என்னால் விளைந்த கெடுபலன்கள் குறையப் பரிகாரங்கள் சொல்கிறேன். முடிந்தவற்றை உடனே செய்யுங்கள். முடியாதவற்றை முடிந்தபோது செய்யுங்கள்.
பரிகாரங்கள் :
1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.
2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.
3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.
4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.
5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்
6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.
7. பரமபதம் ஆடுங்கள்.
8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் 'ட்ராகன்' (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.
9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.
10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு 'பெரிசுக்கு' ஒரு 'கட்டிங்' போடக் காசு கொடுத்து ஒழியுங்கள்.
11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.
5. குருபேசுகிறேன்
"புனரபிமரணம், புனரபிஜனனம்" "உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" இதற்கெல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா? மனிதன் மறுபடி மறுபடிப் பிறந்து கொண்டே இருப்பான் என்பதாகும். போன பிறவிகளில் சான்றோரை, அந்தணரைப் பணிந்து, அவர் மனம் குளிர நடந்தவர்கள் மறுபடி பிறக்கும் போது, நான் நல்ல நிலைகளில் நிற்கும் ஜாதகத்தில் பிறக்கிறீர்கள். உங்கள் கடந்த பிறவி முன் சொன்னதற்கு மாறாக இருந்தால் நான் தீமை செய்யும் நிலையில் உள்ள ஜாதகத்தில் பிறப்பீர்கள். 
கடந்த பிறவியில் உங்கள் சிரமபலனை அனுபவித்த என் கட்டுப்பாட்டில் இருக்கும் சான்றோர், அந்தணர் இந்தப் பிறவியில் உங்களை நல்வழிப்படுத்தித் தம் கடன் தீர்த்துக் கொள்வார்கள் என்பது இதன் உட்பொருளாகும்.இதையே நீங்கள் மற்ற கிரகங்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம். 
பிறவி எடுப்பதே கடன் தீர்க்கத்தான். ஆனால் கடன் தீர்க்க வரும் நீங்கள் அதை மறந்து எல்லாவற்றையும் பெறத்துடிக்கிறீர்கள். கடவுளோ உலகப் பொருட்களை 9-ஆகப் பிரித்து நவக்கிரகங்களான எங்கள் பொறுப்பில் விட்டு வைத்துள்ளார். 
சூரியன்-மலைச்சாதியினரையு,ம் சந்திரன்-பிரமுகர்களின் மனைவியர், வைசியரையும், செவ்வாய்–வீரர்கள், சகோதரர்கள், சத்ரியர்களையும், ராகு–பிறமொழியினரை, கேது–பிறமதத்தினரை, சுக்கிரன்–எதிர்பாலினரை, பிராமணக் கர்ப்பிணிப் பெண்கள், சனி–தலித்துக்கள், வேலைக்காரர்களையும் தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 
அதே போல் நான் பிராமணர்கள், மந்திரிகள், சான்றோரை என் கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன். இந்தப் பிறவியில் எந்தக்கிரகம் தொடர்பான தீமைகள் ஏற்படுகின்றனவோ கடந்த பிறவியில் அந்தக் கிரகம் தொடர்பான மனிதர்களுக்கு நீங்கள் கடன் பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். 
சரி! சரி! நிறையவே விசயங்களைப் போட்டு உடைத்துவிட்டேன். பிறகு மந்திரி சபைக் கூட்டத்தில் எடுத்த முடிவுகளை எப்படி தன்னிச்சையாக அறிவிக்கலாம் என்று பிரதமர் (கடவுள்) கோபித்துக் கொள்ளப் போகிறார். கடந்த பிறவிகளில் பட்ட கடனைத் தீர்ப்பது முக்கியம். மொத்தமாகத் தீர்ப்பதோ! தவணையில் தீர்ப்பதோ! அவரவரது விருப்பம். தீர்க்கிறேன்-தீர்க்கிறேன் என்று காலம் கழித்தால் கொடுத்தவன் கழுத்தில் துண்டு போட்டு வசூலித்து விடுவதைப் போலவே நாங்களும் கண்டபடி தீய பலன்களைக்கொடுத்து விடுவோம். 
எங்கள் தீய பலன்களிலிருந்து தப்ப ஒரே வழி நாங்கள் கண்டதையும் பறித்துவிடுமுன்பு நீங்களாகவே 'உங்கள் சாய்ஸ்' படி எங்கள் ஆளுகைக்குட்பட்ட விசயங்களை விட்டுக் கொடுத்து விடுவதே! என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். 
நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே!
உங்கள் கதை எப்படி? என் அதிகாரத்துக்குட்பட்ட தங்கம், முன்யோசனை, செல்வாக்கு (அரசியல்), காலாகாலத்தில் கல்யாணம், குழந்தைப்பாக்கியம் யாவும் ஏற்பட்டுள்ளதா? ஆம் என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில், நன்மை செய்யும் நிலையில் நின்றிருக்கிறேன் என்று அர்த்தம்.
கோர்ட்டு வழக்கு, வட்டிக்குக் கடன் வாங்குதல், லேசான இதயப் படபடப்பு, மறதி, வயிற்றுக்கோளாறுகள், அடிக்கடித் தங்க நகைகள் திருடு போதல், அடகில் முழுகிப்போதல் இவை உங்கள் வாழ்வில் நடந்திருக்கிறதா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் தீமை செய்யும் நிலையில் இருக்கிறேன் என்றுஅர்த்தம். பரிகாரங்கள்நான் எந்த நிலையில் இருந்தாலும் சரி. கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொண்டால் என்னால் விளையக்கூடிய தீமைகள் குறையும்.
பரிகாரங்கள்:
1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.
2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள்.
3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.
4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.
5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.
6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.
7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.
8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.
9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.
10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள்.
11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.
6. சனிபேசுகிறேன்
செவ்வாய்க்கு அடுத்தபடியாக என்னைப்பற்றிய வதந்திகள் தான் அதிகம். நான் ஆயுள்காரகன். என் வேலை உங்கள் ஆயுளை அதிகரிப்பது. ஆயுள் எப்போது அதிகரிக்கும்? நான் பிரதிகூலமாகச் சஞ்சரிக்கும் எல்லா காலத்திலும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறேன். நோய் வராது என்று சொல்வதற்கில்லை. அதே நேரம் நோய் என்பதே மனித உடல் ஆரோக்யமாக உள்ளது என்பதற்கான அறிகுறி என்னும் இயற்கை வைத்திய விதியை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள். 
மனிதன் நான் அனுகூலமாக சஞ்சரிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய சுகங்களை அனுபவித்து அஸிமிலேஷன் (தண்ணீர், காற்று, உணவு உட்கொள்ளுதல்), எலிமினேஷனில் (வியர்த்தல், மல, ஜலம் கழித்தல், கரியமில வாயுவை வெளிவிடுதல்) தடைகளை ஏற்படுத்திக்கொள்கிறான். உடலில் சேர்ந்து போன மலினங்கள் கடும் உடல் உழைப்பினால்தான் உடலால் திரட்டப்படுகிறது. அதை வெளியேற்ற உடல் செய்யும் முயற்சியே நோய். 
19 வருடங்கள் நடைபெறக்கூடிய சனி திசை வரும்போது அதன் முதல் பாதி ஒரு விதமாகவும் மறுபாதி வேறு விதமாகவும் பலன் தரும். நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யமாட்டேன். ஒரு வேளை நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்குப் பாவியாகவோ, மாரகனாகவோ இருந்தால் முதல் பாதியில் நன்மையைத் தந்து பின் பாதியில் தீமையைத் தருவேன். கோசாரத்தில் ஏழரை சனி நடந்து வரும் போதும் இதே விதியைப் பின்பற்ற வேண்டும்.
ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் (ஒவ்வொரு இரண்டரை வருடத்துக்கும்) முதல் பாதி கெடு பலனைத் தந்தால் மறுபாதி அந்த அளவுக்குக் கெடுபலன்களை தரமாட்டேன்.1. உடலுழைப்பு அதிகரிக்கும்போது. 2. உடல் சுத்தம். ஆடைச் சுத்தம், சுற்றுப்புறச் சுத்தம் என்று நேரத்தை வீணாக்காது, ஒழுங்காய் வேலையைப் பார்க்கும் போதுதான் ஆயுள் அதிகரிக்கும். எழரைச் சனி என்று பயமுறுத்துவார்கள். சாதனை படைத்த எல்லோருமே தம் ஏழரைச் சனிக் காலத்தில்தான் அந்த சாதனையைப் படைத்திருப்பார்கள். 
சுகங்களால் உடல் பலவீனம் அடையும். சிரமங்களால் உடல் பலம் பெறும். நான் ராசிச் சக்கரத்தை (12 ராசிகள்) ஒரு தடவை சுற்றிவர 30 வருடங்கள் ஆகின்றன. முப்பது வருடங்களில் 3, 6, 10, 11 என்ற 4 ராசிகளில் சஞ்சரிக்கும் போது தான்-அந்த 4-ல் 2-வது = 10 வருடங்களில் தான் நான் சுகத்தை வழங்குகிறேன். மற்ற 20 வருடங்களில் நான் சிரமங்களை வழங்குகிறேன். 
இதன் மூலம் நீண்ட ஆயுளைத்தருகிறேன். நான் கர்மகாரகன் நான் நல்ல இடத்தில் (3, 6, 10, 11) சஞ்சரிக்கும் போது, மித மிஞ்சிய சுகபோகங்களின் காரணமாக நீங்கள் செய்யும் கர்மங்களுக்கு (பாவங்களுக்கு) நான் மற்ற இடங்களில் சஞ்சரிக்கும்போது தண்டனை தருகிறேன். நான் தன்னிச்சையாக என் தசா காலத்தில் (அ) ஏழரைச் சனிக் காலத்தில் எந்த ஜாதகரையும் கொல்ல மாட்டேன். எனக்கு வேறு ஒரு பாவக்கிரகத்தின் பார்வையோ, சேர்க்கையோ ஏற்படும் போதுதான் மரணங்கள் சம்பவிக்கின்றன. சரி! சரி! சுய தம்பட்டம் போதும், விஷயத்துக்கு வருகிறேன். 
ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. 
சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.என் அதிகாரத்துக்குட்பட்ட விஷயங்களை இதுவரை சொன்னேன். 
இந்த விஷயங்களில் நீங்கள் லாபம், வெற்றி பெற்றிருக்கிறீர்களா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று பொருள். மேற்சொன்ன பட்டியலில் உள்ள விஷயங்களில் உங்களுக்கு நஷ்டம், தோல்விகளே ஏற்பட்டு வருகின்றனவா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள்.
நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொள்ளுங்கள். என்னால் ஏற்படும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்:
1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.
2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.
3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.
4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.
5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.
6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.
7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள்.
8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.
9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.
10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.
11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள்.
12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.
13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.
7. புதன்பேசுகிறேன்:
"பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்குமா" என்பார்கள். இதிலிருந்தே என் பெருமையை அறியலாம். இறைவன் எனக்கு கொடுத்திருக்கும் அதிகாரங்களை கீழே தருகிறேன்.
புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை, மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை, போஸ்டல், எஸ்.டி.டி. கூரியர், ஜோதிடம், ஏஜென்சி, கன்சல்டன்ஸி துறைகளில் வெற்றி ஆகியவற்றை வழங்குவது நானே. மனிதனின் தோல், ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள் ஆரோக்கியமாக இருக்க உதவுவதும் நானே. கணிதத்திறமை, மருத்துவத்தொழில் வியாபாரத்துக்கும் அதிபதி நானே. முன்பின் அறிமுகமில்லாத இருவரைச் சேர்த்து வைக்கும் எந்த தொழிலும் என் அதிகாரத்துக்குட்பட்டதே. 
விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங் ஊழியர்கள், திறமையான பேச்சாளர்கள் என் பலத்தில் ஜொலிப்பார்கள். கூட்டுறவு அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், கூட்டு வியாபாரங்கள், பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் யாவும் என் அளுமைக்குட்பட்டவையே. கருத்தரங்குகள், நாடக அரங்குகள், பூங்காக்கள், கருத்துப்பரிமாற்றத்துக்கு உதவும் தெருமுனைக் கூட்டங்கள் யாவுக்கும் நானே அதிகாரி. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பஜார் தெருக்கள் என் ஆளுமைக்குட்பட்டிருக்கும். 
புத்திக்குழப்பம்- த்தப்பிரமையை தருவதும் நானே. தாய்மாமன், மாமனாருக்கும் காரகன் நானே.மேற்சொன்ன பட்டியலைப் பார்த்தீர்கள் அல்லவா? இதில் உள்ள விசயங்களில் நீங்கள் வெற்றி, லாபம் அடைந்தவரா? 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். மாறாக நீங்கள் மேற்படி விசயங்களில் தோல்வி, நஷ்டம் அடைந்தவரானால், உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம். 
சரி! உங்கள் ஜாதகத்தில் நான் எந்த நிலையில் இருந்தாலும் கீழ் காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். என்னால் விளையக் கூடிய நன்மைகள் அதிகரிக்கும். தீமைகள் குறையும். 
பரிகாரங்கள்:
1. உங்களுக்குத் தேவையில்லாத விசயங்களைத் தெரிந்து கொள்ளாதீர்கள். பைத்தியத்திற்கு ஆரம்பம் தகவல் குழப்பம்தான்.
2. யாருக்காகவும், யாரிடமும் தூது செல்லாதீர்கள்.
3. வியாபாரம் வேண்டாம்.
4. கூரியர், தபால், மூன்றாவது நபர்கள், தூதர்களை நம்பாதீர்கள், எந்தத் தகவலையும் நேரில் (அ) போனில் தெரிவியுங்கள்.
5. க்ளப்புகள், சங்கங்கள், யூனியன்கள், உங்களுக்கு உதவாது. விலகியே இருங்கள்.
6. தாய்மாமன்கள், மாமனார்கள் விசயங்களில் எச்சரிக்கை தேவை.
7. ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்களை விட்டு விலகி யிருங்கள்.
8. கள்ள உறவு உதவாது.
9. தோல் வியாதிகள் இருந்தால் ஆங்கில மருத்துவத்தின் மூலம் அவற்றை அமுக்கப்பார்க்காதீர்கள்.
10. மாணவர்கள் கணிதம், விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
11. கண்ணனைத் துளசி மாலைப்போட்டு வணங்கவும், மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும்
8. கேதுபேசுகிறேன்
கேது போல் கெடுப்பவனில்லை என்பது ஜோதிட பொன்மொழி. ஆம்! நட்பு, உறவு, பந்தம், பாசம் எல்லாவற்றையும் நான் கெடுக்கிறேன். ஏன் தெரியுமா? நான் மோட்சக்காரகன். ஒவ்வொரு ஜாதகனையும் மோட்ச மார்க்கத்துக்குத்திருப்புவது என் கடமை. மனிதன் எப்போது மோட்ச மார்க்கத்துக்குத் திரும்புவான்? அவன் யாரையெல்லாம் 'நம்மவர்' என்று நம்பியிருக்கிறானோ அவர்கள் துரோகம் செய்ய வேண்டும். துரோகத்தால் விரக்தி ஏற்பட வேண்டும், விரக்தியால்தான் மனிதனை மோட்ச மார்க்கத்துக்குத் திருப்ப முடியும். இப்போது தமிழக முதல்வருக்கு எனது திசை நடந்து வருகிறது. 
இனி என் அதிகார எல்லையைப் பார்ப்போம். புண்கள், சீலைப்பேன், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல், சன்யாசம், யோகம், வேதாந்தம், மனதில் இனம் புரியாத பீதி, மந்திர வித்தைகளில் ஈடுபாடு, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவது இவற்றிற்கெல்லாம் நானே காரணம். 
பரிகாரங்கள்:
1. எளிமையான வாழ்வு.
2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.
3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.
4. யோகம் பயிலுதல்.
5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.
6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.
7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.
8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.
(குறிப்பு: ராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 1800-ல் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். )
9. சுக்கிரன்பேசுகிறேன்
யாராவது ஓரளவு வசதி பெற்றுவிட்டால் பிறர் "அவனுக்கென்னப்பா! சுக்கிரதிசை அடிக்குது" என்பது வழக்கம். இதில் உண்மையில்லாமல் இல்லை. 
சுக்கிரனாகிய நான் ஜாதகத்தில் நல்ல நிலையில் உட்கார்ந்து விட்டால், ஜாதகனுக்குப் பெரிய பங்களா, நான்கு சக்கர வாகனம், அழகான மனைவி, படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், நல்ல தூக்கம், அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் எல்லாவற்றையும் வாரி வழங்குகிறேன். காரணம் இவற்றிற்கெல்லாம் நான் தான் அதிபதி. 
தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாவுக்கும் நானே அதிபதி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், தென்கிழக்குத்திசை, எதிர்பாலினர், மர்ம உறுப்புகள், வெள்ளிச்சாமான்களும் என் ஆளுகைக்குட்பட்டவையே. 
ஒரு ஜாதகனின் அந்தரங்க வாழ்வு பாதிக்கப்பட்டால் நான் அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று பொருள். ஒரு ஜாதகத்தில் நான் நீசமாகியிருந்தால் ஆண்மையின்மை, செக்ஸ்வெறி, செக்ஸ் வக்கிரங்கள் ஆகியவை அந்த ஜாதகனுக்கு பாதிப்பு தரும். 
நான் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொண்டால் என் ஆளுகைக்குட்பட்ட விசயங்களில் நன்மை அதிகரிக்கும். தீமைகள் குறையும்.
பரிகாரங்கள் :
1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும்.
2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.
3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.
4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.
5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும்.
6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.
7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல).
8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும்.
9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.
10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும்.

Wednesday, March 16, 2011

நவீன பரிகாரங்களுக்கு அடிப்படை







ஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் சொல்லிவிட்டு அதன் பிறகு சம்பிரதாய பரிகாரங்களின் மூலம் குறித்து கூறி இறுதியாக நவீன பரிகாரங்களின் அடிப்படையை விளக்குகிறேன்.
ஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார். Read More