Showing posts with label சனி. Show all posts
Showing posts with label சனி. Show all posts

Tuesday, November 27, 2012

ஜோதிடர்களுக்கு ஒரு சவால் !

அண்ணே வணக்கம்ணே !
காசு பணம் -காரிய ஜெயம் ரெண்டுக்கும் என்ன வித்யாசம் . இதுல எதுக்கு கிரக பலம் தேவைன்னு இந்த பதிவுல சொல்லப்போறேன்.

இதை அப்ஜெக்ட் பண்ண  முடிஞ்ச  சோசியருங்க அப்ஜெக்ட் பண்ணலாம். (காரண காரியத்தோட) . மேலும் கடேசியில ஒரு சவாலும்  விட்டிருக்கன். இது சோசியர்களுக்கு மட்டுமானதல்ல. சோதிட பிரியர்கள் ,சோதிட மாணவர்களும் ட்ரை பண்ணலாம் . உடுங்க ஜூட்டு .

இந்த பதிவாலே எச்சுமி பாட்டிக்கு கோவம் வந்தாலும் சரி உண்மைய சொல்லிர்ரதா உத்தேசம். அதுக்கு மிந்தி அதெப்படி எச்சுமி ஒனக்கு பாட்டின்னு கேப்பிக சொல்லிர்ரன்.

நாம கலைத்தாயின் இளைய மகன் (யோவ் ! 45 வயசுக்கு இளையமகனான்னு கூவாதிங்க. நான் சொல்றது க்லைத்திறன் & சீனியாரிட்டிய பொருத்து) கலைமகள் ஆரு? பிரம்ம தேவரோட வைஃப். பிரம்மதேவன் ஆரு? லார்ட் விஷ்ணுவோட தொப்புள் கொடியிலருந்து வந்தவரு.(ஆண் கர்பம் தரிக்கிறதெல்லாம் இப்பம் சகஜமாயிருச்சு பாஸு.. ) அவரோட வைஃபுக்கு பிள்ளை நாம.  நமுக்கு  அவரோட அப்பா தாத்தா தானே. அவரோட வைஃபான எச்சுமி பாட்டி தானே.

நம்மில் நெறைய பேருக்கு காசு பணமும் - காரிய ஜெயமும் வேறன்னு உறைக்கறதே இல்லை. மொதல்ல காசு பணம் வந்துரட்டும் பிறவு காரியத்தை நடத்திக்கலாம்னு மயங்கறோம்.மேட்டர் இன்னாடான்னா காசு பணம் வேற காரிய ஜெயம் வேற.

எப்படியா கொத்த தரித்திரம் பிடிச்ச ஜாதகத்துக்கும் 365 நாளும் காசு வர்ரதுக்கு ஒரு ஒத்தையடிப்பாதையாச்சும் நிச்சயம் இருக்கு.ஆனால் நாம என்ன பண்றோம்னா நம்ம ரோட்டீனை -ஈகோவை - காப்பாத்திக்கிறதுலயே ஜாதகத்துல உள்ள கிரகபலத்தை எல்லாம் விரயமாக்கிர்ரம்.

நம்ம நண்பர் ஒருத்தரை பத்தி அப்பப்போ ரெஃபர் பண்ணிட்டு இருப்பம். ( அன்மேரீட் -செட்டியார் - ஞா வருதா). பார்ட்டிக்கு  தனுர் லக்னம்.லக்னத்துல சனி .  . சுக்கிரன் உச்சம்..லக்னத்துல சனி இருந்தா சாக்கடை ஓரம் ,லாக்கப், ஜெயிலு, தரித்திரம் எல்லாத்தையும் பார்க்கனும். சுக்கிரன் உச்சம்ங்கறதால லக்சரியா வாழனும். (கில்மா உட்பட)

மொத இன்னிங்ஸ்ல வாழ்வாங்கு வாழ்ந்தப்பயும் கடையத்தான் டெக்கரெட் பண்ணி அனல் காட்டிக்கிட்டிருந்தாரே தவிர  மாடியில் உள்ள பார்ட்டியோட ரெசிடென்ஸ் சனி காரகம் தேன். 

ரெண்டாவது இன்னிங்ஸ்ல பெட் ரூம், கிச்சன், சாமி அலமாரி வரை சுக்கிர காரகமாக்கிக்கிட்டாரு. செட்டியாருக்கு வெள்ளி தெரியும், தங்கம் தெரியும், கல்லு தெரியும், மரத்தை பத்தி தெரியாதே. கார்ப்பென்டர் அவர் வசதிக்கு என்னென்னமோ அகட விகடம்லாம் செய்துக்கிட்டிருந்தாரு. நாம கண்டுக்கிடலை (பிசி ஆச்சே) உதாரணமா ப்ளைவுட்ல சாமி அலமாரி அடிச்சு அதுக்கு பிரைமர்/பெய்ண்டு எதுவும் அடிக்காம வார்னிஷ் அடிச்சு விட்டிருக்காரு. கதவெல்லாம் கீல் உதிர்ந்து தொங்கிக்கிட்டிருக்கு.  ஹாலை டச் பண்றதுக்குள்ள கார்ப்பென்டர் டிக்கெட் போட்டுட்டாரு. ஜாமான் வாங்கினது -கார்ப்பென்டருக்கு கடனா கொடுத்தது எல்லாம் சேர்த்தா பெரிய ரூவா ரெண்டு ஆயிட்டிருந்தது .

பார்ட்டியோட ராசி மீனம் . ( மீனத்தில் சந்திரன் - தனுர் லக்னத்து அஷ்டமாதிபதி ஆரு? சந்திரன் -இவர் உச்சமான சுக்கிரனோட சேர்ந்து 4 ல் )  சுக்கிரன் = லக்சரி சந்திரன் =மரணம்.

போன வருசம் தீபாவளி லெச்சுமி பூஜைக்கு எச்சுமி சிலை செய்யவச்சதுல சிலை செஞ்சவரு டிக்கெட்டு போட்டுட்டாரு.(சந்திரன் அஷ்டமாதிபதிங்கற பாய்ண்டோட சனி = ப்ரேதாத்மாக்களுக்கு காரகர்)

டெக்கரட்ல விடுபட்டு போன ஹால் எப்படி இருக்கும்னா குப்பை பொறுக்கறவிகல்லாம்  ஒரு மெகா செமினாருக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்துக்கிட்டு -லக்கேஜோட போனா அந்த  கோச் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். போறச்ச வரச்ச மூட்டைய நகர்த்தி வழி பண்ணிக்கிட்டு வரனும் போகனும்.

போன வருசம் செய்த எச்சுமி சிலை மூளியாகி - ஊனமுற்றோர் ஆசிரம் கணக்கா தயாராயிருச்சு. நண்பர் கோவில்ல வச்சுரலாம். ஆத்துல போட்டுரலாம்னு சொன்னாரு. நாம நமக்கு ஒரு சான்ஸ் கொடுக்க சொல்லி வாங்கிட்டு வந்து என்னென்னமோ தகிடு தத்தம்லாம் பண்ணி ஃபில் அப் தி பளாங்ஸ் எல்லாம் செய்து மறுபடி அதை சிலையாக்கி - ஆர்ட்டிஸ்டை கூட்டி வந்து பெய்ண்டிங் எல்லாம் செய்து நம்ம ஊட்லயே வச்சிருந்தம்.

தீபாவளி பூஜை ஏற்பாடு விசயமா மாடிக்கு போயிருந்தப்பத்தேன் ரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்ஃபார்ம் மாதிரி இருந்த ஹாலை பார்த்தோம்.

என்னய்யா இது ரங்க நாதன் தெரு மாதிரி இருக்கு . எலி கிலி செத்து வச்சா தேடவே மாசம் ஆகும் போலன்னு சொன்னம்.

நம்ம வாய் முகூர்த்தம் நெஜமாலுமே ஒரு எலி செத்து வைக்க - அதை கண்டு பிடிச்சு ஒழிச்ச பிறவு  ஹால்ல ஷெல்ஃப் அடிச்சு  மூட்டைகளை அதுக்கு ஷிப்ட் பண்றதா முடிவு பண்ணோம்.

நமுக்கு தேன் ஆணியடிக்க தெரியுமே. செட்டியார் வீட்டு பின்னாடி கொஞ்சம் இடம் வேற வேக்கன்டா இருக்கு.

ஒன்னுக்கு எட்டு ரீப்பர் வாங்கிட்டு வந்து ரெண்டரைக்கு அஞ்சுல ஒரு ஷெல்ஃப் அடிச்சுட்டம்.  தாளி அதை மேலுக்கு தூக்கனுமே .கதவெல்லாம் ரெண்டரை அடி அகலம் கூட இல்லை. என்னங்கடா இதுன்னு நெடுக்க வெட்டி ஒன்னை ரெண்டாக்கிட்டம்.  மறுபடி தூக்கறோம் உச்சி இடிக்குது . மேல் அறை வரை வெட்டி எடுத்து ரெண்டு பெஞ்சாக்கிட்டம்.

ரெண்டு ஷெல்ஃப் -ரெண்டு பெஞ்சை தூக்கி ஹால்ல போட்டு மூட்டை முடிச்சையெல்லாம் சார்ட் அவுட் பண்ணி குப்பைய கழிச்சு எல்லாத்தையும் தூக்கி அடுக்கினதுல ஹாலே லைப்ரரி மாதிரி ஆயிருச்சு.

மொத்தமா என்னடா செலவுன்னு பார்த்தா ரீப்பர் ஒரு ரூ 350 நம்ம அசிஸ்டென்டுக்கு பத்தா ரூ 100 , நெடுக்க வெட்ட மிஷின் வாடகைக்கு எடுத்ததுல ரூ.50 ஆணி ,புஷ், எல் க்ளாம்ப எல்லாம் சேர்த்து ஒரு ரூ.100. ( நம்ம உழைப்பு ? ஆல் ஃப்ரீ - அப்பப்போ செட்டியார் பின்னாடி வந்து டீ  கொடுத்து ஒரு சிகரட் கொடுப்பாரு ) ஆக ரூ.600 செலவுல  ரெண்டு ஷெல்ஃப். ரெண்டு பெஞ்ச்.

செட்டியாருக்கு ஒரே குஜிலி ஆயிருச்சு. நீ இம்மாம் பெரிய வேலை காரன்னா ஒன்னை வச்சே எல்லாத்தையும் முடிச்சுருப்பனேன்னாரு.

அப்பம் நாம சொன்னம்." செட்டியார் ! .. துட்டை  மட்டும் வச்சா வேலை முடிஞ்சுரும்னு  நினைக்காதே. வேலை முடியற நேரம் வந்தா துட்டே இல்லாம கூட வேலை முடிஞ்சுரும். அந்த நேரம் வராத வரைக்கு லெச்சங்க கொட்டினாலும் வேலை  நடக்காது"

உங்க ஜோதிட திறமைக்கு ஒரு சவால் :

அதே செட்டியார் -அதே ஜாதகம் . ஒரு கட்டத்துல ரெண்டு லெச்சம் செலவழிச்சாலும் வேலைக்காகலை . அதே செட்டியார் அதே ஜாதகம் ரூ.600 செலவழிச்சதுல படக்குன்னு வேலை முடியுது. இதெப்படி சாத்தியம்? ஜொல்லுங்க பார்க்கலாம்.










Thursday, December 8, 2011

சனியும் ஆஞ்சனேயரும்

அண்ணே வணக்கம்ணே !
எந்த கிரகம் சரியில்லின்னா எந்த சாமிய கும்பிடனும்னு ஒரு மினி தொடர் ஓடிக்கிட்டிருக்கு.அதுல இன்னைக்கு சனியை பற்றி பார்ப்போம்.

சனி 3,6,10,11 ல் நின்றால் பிரச்சினை இல்லை. இதர இடங்களில் இருந்தால் பிரச்சினை. இப்படி இதர இடங்களில் நின்ற சனியால என்னெல்லாம் பிரச்சினைகள் வரும்னு தெரிஞ்சுக்க இங்கன அழுத்தி 2012 சனிப்பெயர்ச்சி பலன் களை ஒரு க்லான்ஸ் பார்த்துருங்க.

என்ன? உங்க ராசிக்கு இந்த சனி சரியில்லையா? அப்பம் நீங்க ஆஞ்சனேயரை வணங்கனும். ஆஞ்சனேயருக்கும் சனிக்கும் என்ன சம்பந்தமுன்னு கேப்பிக சொல்றேன். சனி வேலைக்காரர்களுக்கு காரகம் வகிக்கும் கிரகம். (அடிமைகள்) ஆஞ்சனேயருக்கு ராம தாஸர்னு இன்னொரு பேரும் உண்டு. தாஸ்னா என்ன அருத்தம்? லாஜிக்கலா பார்த்தா சுக்ரீவனுக்குத்தான் அடிமையா இருந்திருக்கனும்.ஆனால் ஆஞ்சனேயர் ராமனுக்கு அடிமையாக மாறினார். ( பாரதி -பாரதி தாசன் /பெரியார் -பெரியார் தாசன்)

சனிபிடிச்சா நீங்களும் யாரோ ஒருத்தருக்கு அடிமையாக வேண்டி வரும். உலக ரீதியில் அப்படி அடிமையா மாறினா உங்க ரெப்புடேஷன் கோவிந்தா. நீங்க ஒரு அடிமைக்கு அடிமையா மாறினா என்ன ஆகும்? சனியோட வேக்குவம் பாதிக்கு பாதி குறைஞ்சு போயிரும்.

சனி பிதுர்களுக்கு காரகர். ( இறந்து போன மூதாதையர்) கிராம தேவதைகள் ,காவல் தேவதைகள்ளாம் ஆரு.இறந்து போன நம் மூதாதையர்கள் தான்.

சனி பிடிச்சா எள் சோறு , எள் எண்ணெய், காக்காய்க்கு சோறு ,பசுமாட்டுக்கு அகத்திக்கீரைன்னு பரிகாரம் சொல்றதெல்லாம் நம்ம பிதுர்களை திருப்தி படுத்தத்தேன்.

இதுல சின்ன சிக்கல் இருக்கு. சனி ஆயுள் காரகன். ஆயுள் காரகனே நமக்கு பிரதிகூலமா இருக்கும் போது வெறும் பிதுர்களை,கிராம தேவதைகளை மட்டும் ப்ரீதி பண்ணிக்கிட்டிருந்தா அவிகளுக்கு நம்ம மேல கவர்ச்சி ஏற்பட்டு " இன்னாத்துக்கு நைனா இம்மாம் வேதனை படறே இங்க வந்துரு"ன்னு கூப்டுக்க சான்ஸ் இருக்கு.

அதனால ஆஞ்சனேயரையும் சைடுல கவனிச்சுக்கங்க. இவரு சஞ்சீவினி மூலிகைய தேடினா லேட் ஆகும்னு அந்த மூலிகை விளைந்த சஞ்சீவினி பர்வதத்தையே தூக்கிக்கிட்டு வந்து ராம லட்சுமணர்களோட உயிரையே காப்பாத்தின பார்ட்டி.

நான் சம்சாரிங்க. அ நான் கில்மா பார்ட்டிங்க. நான் எங்கன இருந்து ஆஞ்சனேயரை கவனிச்சுக்கறதுன்னு கேப்பிக. சொல்றேன்.

ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர். நீங்க சம்சாரியாவோ /கில்மா பார்ட்டியாவோ இருந்து பிரம்மச்சாரியான ஆஞ்சனேயரை வணங்கறச்ச தான் உங்க ஈகோ சுருங்கும்- ஈகோ இல்லாத பக்திதேன் பலன் தரும். அதனால எந்த வித கில்ட்டியும் இல்லாம ஆஞ்சனேயரை கவனிச்சுக்கோங்க.

ஆஞ்சனேயரை நம்ம இடத்துக்கே வரவழைக்கிற ஒரு டெக்னிக் இருக்கு. அது இன்னாடான்னா ராம நாமம் ஜெபிக்கிறது. ராம காதை வாசிக்கிறது.ராம காதை கேட்கிறது. எங்கெல்லாம் ராம நாமம் ஜெபிக்கப்படுதோ -எங்கெல்லாம் ராம காதை வாசிக்கப்படுதோ /கேட்கப்படுதோ அங்கெல்லாம் ஆஞ்சனேயரு ஆஜராயிருவாராம்.

ராம். இதை மேம்போக்காக பார்க்கும்போது இது ஒரு பெயர் மட்டுமே. சரி மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமன் நாராயணின் அவதாரமான ஸ்ரீ ராமனை குறிப்பதாகவே எடுத்துக் கொண்டாலும் வெறுமனே ராம் ராம் என்று ஜபிப்பதால் எப்படி அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்று நீங்கள் கேட்கலாம் சொல்கிறேன். வெயிட் ப்ளீஸ்.

நீங்க ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கிறிங்கனு வைங்க. என்ன ஆகும்.இது ஜஸ்ட் ஒரு வார்த்தைதான். இதை திரும்ப திரும்ப சொல்றதால என்ன நடந்துரும்?

ஓஷோ சொல்வாரு மேற்கத்திய விஞ்ஞானம் மனதுக்கு வியாதி வரும்னு சொல்லுது. கிழக்கத்திய ஆன்மீகம் சொல்லுது. மனமே வியாதின்னு.

கோயிலுக்கு போறோம். மனசு என்ன சொல்லுது? இங்கே வந்து என்னடா புண்ணியம். பப்புக்கு போயிருந்தா அயனான குட்டியா ஒன்னை தேத்தியிருக்கலாமே.

பப்புக்கு போறோம். அந்த சங்கீத இரைச்சல், புகை, வள வள பேச்சு சத்தம்லாம் பார்த்துட்டு மனசு என்ன நினைக்குது? தத் இதென்னடா நாய் பிழைப்பு பேசாம அம்மாவோட கோயிலுக்கே போயிருக்கலாம்.

இதுல இருந்து என்ன தெரியுது? நீங்க இருக்கிற இடத்துல மனசு நிக்கறதில்லை. மனசு நிக்காத இடத்துல ப்ளெஷர் இல்லே.

இந்த மனசு (இதே பதிவுல பின்னாடி வர்ர இண்டிவியூஜுவல் மைண்டை சொல்றேன். அதாவது யூனிவர்சல் மைண்ட் + ஈகோ)

ரொம்பமுட்டாள் தனமானது. இயற்கைல இருந்து நம்மை வேறுபடுத்துது, மரண பயத்தை தருது. கண்டதையும் பார்த்து மரணத்தை பார்த்தாப்ல பேதியாக்குது. ( தனிமை,இருட்டு,பிரிவு, ஏழ்மை,நிராகரிப்பு இப்படி ஒன்னுல்ல மஸ்தா கீது)

இந்த மனசுங்கறது மிக நீளமான ஆடியோ டேப் மாதிரி. இதுல வர்ஜியா வர்ஜியமில்லாம கண்ட கசடுகள் பதிவாயிருக்கு. எந்த வடிவத்துல பதிவாயிருக்கு? சொல் வடிவத்துல பதிவாயிருக்கு. அந்த கசடுகளை நீக்க என்ன வழி? வேற ஏதாச்சும் பதிவாகனும். மறுபடி கண்டதையும் போட்டு பதிவு பண்ணிட்டா வேஸ்டு. அதுக்கு பதிலா ஒரே சொல்லை, அதுவும் சில விசேஷாம்சம் கொண்ட சொல்லை தொடர்ந்து பதிவு பண்ணிட்டா... பழைய பதிவுகள் எல்லாம் ஃபணாலாயிரும்.

என் மைண்ட்ல நிறைய சினிமா பாட்டுங்க இருந்தது. அதுகளை ஒழிச்சு கட்ட நானா ஒரு டெக்னிக் யூஸ் பண்ணேன்.அது என்னடான்னா பாட்டுகள்ள இருக்கிற வார்த்தைகளை தூக்கிட்டு ராமாங்கற வார்த்தைய மட்டும் போட்டு பாடறது.

விசேஷம் என்னடான்னா அது என்னா ட்யூனா இருந்தாலும் இந்த ராமாங்கற சொல்லு பச்சக்குனு உட்காருது. உ.ம்

"கண்ணோடு காண்பதெல்லாம்"னு துவங்கற பாட்டை ராமாங்கற வார்த்தையை போட்டு நிரவறேன் பாருங்க.

ஸ்ரீராம ராம ஹரே ராமா..
ராம ராம ராம ஹரே..

இப்படி என் மைண்ட்ல இருந்த உதவாக்கரை பாட்டுவரியையெல்லாம் ஒழிச்சுக்கட்டிட்டேன். இது ஒரு வ்யூ.

இப்போ இன்னொரு கோணத்துல பார்க்கலாம். ஸ்ரீமன் நாராயணனே ஆதியந்தமான மெய்ப்பொருள் என்பவர்களும் இருக்கிறார்கள் (வைஷ்ணவர்கள்) மும்மூர்த்திகளில் ஒருவர் என்று அங்கீகரிப்பவர்களும் இருக்கிறார்கள்.

கற்சிலைகள் பேசா , கேளா ,பாரா என்று சொல்பவர்களும் உள்ளனர். (அவர்களை ஓஷோவின் மறைந்து கிடக்கும் உண்மைகள் புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்)

எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படி ஒரு தியரியை முன் வைக்கிறேன். இருப்பதெல்லாம் ஒரே உயிர். (ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் அன்று அமீபாவில் ஆவிர்பவித்த -தோன்றிய உயிர்) . அந்த ஒரே உயிர் (செல்) தன்னை தான் பிரதியெடுத்து ,பிரதியெடுப்பில் எர்ரர் வந்து புது ஜீவராசிகளாக பரிணமித்துத்தான் இன்றைய சனப்பெருக்கம் நிலை பெற்றுள்ளது.

ஒரு மாஸ்டர் சிடியை பிரதியெடுக்கும்போதே ஒவ்வொரு காப்பிக்கும் க்வாலிட்டி வேறுபடுகிறது. ( சிஸ்டத்தின் கான்ஃபிகரேஷனை பொருத்து,அதன் கண்டிஷனை பொருத்து ) .

நிலைமை அப்படியிருக்க எல்லா சி.டியும் ஒரே க்வாலிட்டியில் இருக்காது. சில சமயம் மாஸ்டர் சி.டி.ரேஞ்சுக்கே காப்பீட் சி.டி. இருக்கலாம். சில சமயம் கண்டமாவும் வரலாம். ஒரு வேளை எதுனா விசேஷ சாஃப்ட் வேர் கிடைச்சா மாஸ்டர் சி.டி.ல உள்ள உள்ளீட்டை செமர்த்தியா தீட்டி, எக்ஸலெண்டா ஒரு பிரதியை கூட தயார் பண்ண முடியும்.

ஆஃப்டர் ஆல் ஒரு சிடி கதையே இப்படின்னா உயிர்களின் பெருக்கத்தில் எத்தனையோ ஆச்சரியகர மாற்றங்கள், உச்ச, நீச ஸ்திதிகள் ஏற்பட எத்தனையோ வாய்ப்பிருக்கு. இந்த ப்ராசஸ்ல ஒரு ராமன் தோன்றியிருக்கலாம். ஒரு ராமன் என்ன ஓராயிரம் ராமர்கள் தோன்றியிருக்கலாம்.

என்னைப்பொருத்தவரை இந்த உலகம் , இந்த படைப்பு இல்லாத காலமே கிடையாது.
இங்கே,இப்போ, எனக்கு நடக்கிறதெல்லாம் எங்கயோ,எப்பயோ,எவனுக்கோ நடந்ததுதான். இங்கே புதுசா நடக்க ஒரு இழவும் கிடையாது. இதுல சோகம் என்னடான்னா ஒவ்வொருத்தனும், நடக்கிறத இங்கே,இப்போ, தனக்கு மட்டும் முதல் முறையா நடக்கிறதா நினைச்சு கொ(கு)திக்கிறதுதான்.

எகனாமிக்ஸ்ல தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டினு ஒரு விதியிருக்கு. பேரை பார்த்து பயந்துராட்திங்க. பத்து லட்டிருக்கு. முதல் லட்டு சாப்பிட்டப்ப கிடைச்ச திருப்தி அடுத்தடுத்த லட்டை சாப்பிட குறைஞ்சிக்கிட்டே வருதுல்ல அதான் இந்த விதியோட சாராம்சம்.

ஒரே வாழ்க்கைய, பலமுறை வாழறப்ப உணர்வுகள் மரத்து போகனும்." தாளி .. நான் பார்க்காததா"ன்னு உதறி தள்ளனும். ஆனால் மனுஷனால முடியறதில்லை. இதுக்கு காரணம் என்னடான்னா அவன் ஈகோ. இந்த படைப்புக்கு தன்னை மையமா நினைச்சுக்கிற முட்டாள் தனம்.

இன்டிவீஜுவல் மைண்ட், யூனிவர்சல் மைண்டுனு ரெண்டிருக்கு. (ரெண்டும் தனி தனி உருப்படினு நினைச்சுராதிங்க. ஒரே மூளையோட இரண்டு நிலைதான் இது)

யூனிவர்சல் மைண்டுன்னா அதுல ஈகோ இருக்காது. தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க தெரியாது . தனக்கும் இந்த படைப்புல உள்ள ஒவ்வொரு ஜீவராசி,புல் பூண்டுக்கும் நடந்தது, நடக்கிறது,நடக்க போறது எல்லாமே தெரியும்.

ஒவ்வொரு குழந்தையும் யூனிவர்சல் மைண்டோடதான் இந்த பூமிக்கு வருது .ஆனால் பெற்றோர், உற்றார் ,உறவினர், ஆசிரியர் எல்லாம் சேர்ந்து அந்த மைண்ட்ல ஈகோவை இஞ்செக்ட் பண்றாங்க. அது மெல்ல தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க கத்துக்குது. இந்த படைப்புக்கு தன்னையே மையமா நினைச்சு மயங்க ஆரம்பிக்குது. உடனே அதனோட யூனிவர்சல் மைண்ட் இன்டிவீஜுவல் மைண்டா மாறிடுது.

அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும் . எத்தனை ராமர்கள் வந்தார்கள். எத்தனை முறை சீதையை ராவணன் சிறை பிடித்தான். எத்தனை முறை ராம ராவண யுத்தம் நடந்ததுன்னு அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும்.

ஈகோ இஞ்ஜெக்ட் ஆய்ட்ட இன்டிவீஜுவல் மைண்டுக்கு இதெல்லாம் பை.தனமா இருக்கலாம். அது சகஜம்.

நாம உண்மைன்னு எதை நினைக்கிறோமோ அது உண்மை கிடையாது. கிராமத்து கவிஞனின் கவிதையை உதவாக்கரை உதவி ஆசிரியன் எடிட் பண்ண மாதிரி நம்ப எண்ணத்தை ஈகோ எடிட் பண்ணிருது.அதனாலதான் டீட்டெயில்ஸ் மிஸ் ஆகுது.

ஆக ஒரு ராமன் மட்டுமில்லே கணக்கற்ற ராமர்கள் பிறந்திருக்காங்க. வாழ்ந்திருக்காங்க. அவிக எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே இந்த விசுவத்துக்கப்பால் போக முடியாம ஏதோ ஒரு சூட்சும வடிவத்துல அண்டை வெளில சுத்தி வந்துக்கிட்டே இருக்கு.

இதையே ராவணன் விஷயத்திலயும் பொருத்திப்பாருங்க. ட்யூன் பண்ணப்பட்ட விதத்தை பொருத்து டிவில சேனல்கள் தெரியறாப்ல உங்க மைண்ட் ட்யூனிங்கிற்கு ஏற்ற மாதிரி மேற்படி எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே உங்க மூளைகளோட ட்யூனிங்கிற்கு ஏத்தாப்ல வந்தடையுது.

ஒரொரு வீட்ல காலைல சன் டிவிய வச்சு விட்டுட்டாங்கன்னா நள்ளிரவு வரை அந்த ஒரே சேனல் ஓடிக்கிட்டே கிடக்கும். இதுவாச்சும் பரவால்ல.

கேபிள் கனெக்சன் இல்லாத டிவி மாதிரி வச்சிருக்கிற நம்ம மூளைய நாம ட்யூனிங்கே பண்ணாம ஓட விட்டிருக்கோம். அந்த காலம் மாதிரி தப்பி தவறி ஒலியும் ஒளியும் வந்தாலும் ஒலி வந்தா ஒளி வர்ரதில்லை, ஒளி வந்தா ஒலி வர்ரதில்லை. கொஞ்சம் முயற்சிபண்ணா கேபிள் கனெக்சன் வாங்கலாம் .

இதே மூளைய செமர்த்தியா ட்யூன் பண்ணலாம்.புதுசு புதுசா சேனல்ஸ் பார்க்கலாம். ட்யூன்பண்ண ரிமோட் வேணமேங்கறிங்களா உங்க மைண்ட் வாய்ஸ் ரிகக்னிஷன் வசதி கொண்ட டிவிங்கோ. நீங்க சொம்மா "ராம்""ராம்""ராம்" னு ஜெபிச்சிக்கிட்டிருந்தா போதும். படக்குனு சேனல் தெரிய ஆரம்பிச்சுரும். ஆரம்பத்துல இதை உங்க பக்கத்துல இருக்கிறவர் பார்க்கமுடியாம இருக்கலாம். ஒரு நாளில்லே ஒரு நாள் அவருக்கும் தெரிய ஆரம்பிச்சுரும்.

அன்னையின் (அரவிந்தாஸ்ரம அன்னை இல்லிங்கோ) சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.
*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!

ப‌ஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள்.

சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.

மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போல‌வும் வேலை செய்கின்ற‌ன‌. (உ.ம்) ச‌ர‌ஸ்வ‌தி /இதில் முத‌ல் எழுத்து ச‌/இதோடு "ம்" சேரும்போது அது ச‌ம் எனும் ச‌ர‌ஸ்வ‌தி பீஜ‌மாகிற‌து.

ம‌ற்ற‌ தேவ‌தைக‌ளின் பெய‌ர்க‌ள் வேறாக‌வும், பீஜாக்ஷ‌ர‌ங்க‌ள் வேறாக‌வும் இருக்கும். ஆனால் ராம‌னை பொருத்த‌வ‌ரைஅவ‌ர் பெய‌ரே பீஜாக்ஷ‌ர‌மாக‌ இருக்கிற‌து.(ராம்)

எழுத்தோடு"ம்" சேரும்போது என்ன‌ ந‌ட‌க்கிறது?

வாயும்,ஆச‌ன‌மும் ஒரே குழாயின் ஆர‌ம்ப‌ம் ம‌ற்றும் முடிவாக‌ உள்ள‌ன‌. ஆச‌ன‌த்துக்கு ச‌ற்று மேல் பாக‌த்தில் மூலாதார‌ ச‌க்க‌ர‌ம் இருக்கிற‌து. "ம்" என்று உச்ச‌ரிக்கும் போது குழாயின் ஆர‌ம்ப‌மான‌ வாய் மூடுகிற‌து,இந்த வினைக்கு எதிர்வினை அந்த‌ குழாயின் முடிவான‌ ஆச‌ன‌ ப‌குதியில் நிக‌ழ்கிற‌து. அந்த‌ செய‌லின் விளைவாக‌ ஏற்ப‌டும் ஆழ்ந்த அதிர்வுக‌ள் மூலாதார‌ ச‌க்க‌ர‌த்தை அடைகின்ற‌ன‌.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் ந‌க‌ரும‌ல்லவா? அது போல் மூலாதார சக்கரத்தில் பாம்பு வ‌டிவ‌த்தில் உற‌க்க‌ நிலையில் உள்ள‌தாய் யோக‌ நூல்க‌ள் குறிப்பிடும் குண்டலி எ யோக‌ ச‌க்தியில் அசைவுகள் ஏற்படும். ஜெபத்தை தொடர தொடர மேல் நோக்கி நகர ஆரம்பிக்குது.

குண்ட‌லி மேல் நோக்கி நகர ஆரம்பிதால் என்ன‌ ந‌ட‌க்கும்?

இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/

சுய‌ ந‌ல‌ம் எரிந்து போகும். ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ளுக்கு நாம் க‌ட்டுப் ப‌ட்டிருப்ப‌து காலாவ‌தியாகி அவை ந‌ம‌க்கு க‌ட்டுப்ப‌ட்டிருக்கும். கிரகங்களும் பஞ்ச பூதங்களால் ஆனவைதான். கிரகங்களுக்கு நாம கட்டுப்பட்டிருக்கும் நிலை மாறி ..கிரகங்கள் நமக்கு கட்டுப்படும் நிலை வரும்.

இப்பம் புரியுதா..சனி பிடிச்சா ஆஞ்சனேயரை ஏன் வணங்கனும்னு? நாளைக்கு புதனை பற்றி பார்ப்போம்..

Saturday, February 12, 2011

சனியும் கில்மாவும்


அண்ணா வணக்கம்ணா!
எதையும் எதோட வேணம்னா தொடர்பு படுத்தமுடியும் -கேயாஸ் தியரி . ஆனால் நான் கில்மாவுக்கும் கிரகங்களுக்கு கட்டாய கல்யாணம்லாம் பண்ணி வைக்கலிங்கண்ணா (நேரு இப்படித்தான் தெலுங்கானாவுக்கு கட்டாய கண்ணாலம் கட்டி வச்சுட்டு பூட்டாரு. இப்ப இம்சை தாங்க முடியலை)

சனிக்கு காரி, மந்தன்(ஸ்லோ), முடவன்னு ( நொண்டி) பல பேர் உண்டு. காரியும் காரிகையும் (பெண்) - மந்தனும் மங்கையரும் - முடவனும் மடமாதரும்னெல்லாம் தலைப்பு வைக்கலாம் தான் . ஆனால் தம்பிமாருங்களுக்கு புரியாதோ என்னமோனு வைக்கலிங்கண்ணா.

தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் வேட்டூரி சுந்தர ராமமூர்த்தி தெரியுங்களா? நம்ம வாலி எதுகை மோனைக்காக ரெம்ப சுத்தியடிச்சு இம்சை படுவாரு. ஆனா வேட்டூரி வரிக்கு வரி மட்டுமில்லிங்கண்ணா வார்த்தைக்கு வார்த்தை எதுகை மோனை வராப்ல கூட எழுதுவாருங்கண்ணா.

ஒரு பாட்டு வரிய பார்ப்போம்:

இந்துவதன -குந்தரதன -மந்தகமன -மதுர வசன -ககன ஜகன -சொகசு லலனவே. (தெலுங்கு குட்டிகளை மிரட்ட இதை உபயோகிச்சுக்கலாம் - தாளி இன்னைக்கு கான்வென்ட் படிப்பு படிக்கிற குட்டிகளுக்கு சுட்டுப்போட்டாலும் திருப்பிவராது).

மேற்படி பாட்டுவரில 3 ஆவது வார்த்தைய பாருங்க. ",மந்த கமன" மந்த - ஸ்லோ , கமனா - நடக்கிறது. ( நாம அன்ன நடைங்கறோமே அது மாதிரி)

மேற்படி பாட்டு ஒரு சூப்பர் ஃபிகரை வர்ணிக்குது அதுல இந்த வார்த்தை வருது. சாலு மாலை( பெண்குட்டிதேங் -சுஜாதாவோட வார்த்தை பிரயோகம்)

"மந்த கமனாங்கறாரு. இதே வார்த்தை 100% சனிக்கும் சூட் ஆகுது பாருங்க. மேலும் மந்தன்னு பேரே இருக்கு. ( அவர் ஒரு ராசிய கடக்க ரெண்டரை வருசம் ஆகுதுங்கண்ணா. ரெம்ப ஸ்லோ)


- சிறு விளம்பர இடைவேளைக்கு பிறகு தொடரும் -

அண்ணே!
நம்ம வலைப்பூக்களுக்கு பேராதரவு கொடுத்தவுக நீங்க அப்படியே நம்ம வலை தளத்துலயும் அடியெடுத்து வைக்கனும்னு கேட்டுக்கறேன். அதுக்கும் மேற்படி பதிவை தொடர்ந்து படிக்கவும் இங்கே அழுத்துங்க