Showing posts with label அனுபவஜோதிடம். Show all posts
Showing posts with label அனுபவஜோதிடம். Show all posts

Thursday, December 13, 2012

சந்திரனுடன் பேட்டி: 3

அண்ணே வணக்கம்ணே !
நவகிரகங்களுடன் பேட்டி தொடர்கிறது. சந்திரன் 6 முதல் 10 வரையிலான கேள்விகளுக்கு இன்னைக்கு பதில் சொல்லப்போறாரு

6.உங்களுக்கு எந்த கிரகமும் பகையில்லைங்கறாய்ங்களே அது இன்னா கணக்கு?

எவ்ரி மேன் ஈஸ் எ ப்ளேனட்னு ஒரு விதியிருக்கு தெரியுமோ? உ.ம்  அக்னி முக தொழில் செய்வோர் செவ்வாய்.  எந்த தொழில் எப்படிப்பட்டதுன்னு "அறிவால்" யோசித்தால் இது நல்லது -இது கெட்டதுன்னு சொல்லிரலாம் .அதே போல  "அறிவால்" யோசித்தால் இவன் நெல்லவன் -இவன் கெட்டவன்னு கரீட்டா சொல்லிரலாம்.

ஆனால்   மனசால ரோசிச்சா விபச்சாரத்தை கூட தப்பான தொழில்னு சொல்லிர முடியாது. ஒரு பாலியல் தொழிலாளியை கூட  கெட்டவள்னு சொல்ல முடியாது.

நான் மனோகாரகன். எப்படியா கொத்த மொள்ளமாரி,முடிச்சவிக்கிக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கும்.இந்த ஓலகத்துலாஆரோ ஒருத்தர் மேலயாச்சும் - துக்கிளியூன்டு பாசமாச்சும் வச்சுருப்பான்.

ஆக மனசால ரோசிக்கிற மன்சன் சந்திரன். அதாவது நான்.   நான் ஆரையாவது குற்றம் சொல்ல முடியுமா? அல்லது பகைக்க முடியுமா?

நான் ஜலகாரகன்(தண்ணீர்) . நான் எதனோட வேணம்னா கலந்துருவன். நான் எதோட கலக்கிறேனோ அதனோட குணம் எனக்கு வந்துரும். அப்புறம் பகையேது?

சூரியனோட சேர்ரேன்னு வை அவர் அறிவு (செல்ஃப்) நான் மனசு . இந்த ரெண்டும் ஒரே பாய்ண்ட்ல நிக்கிறது ரெம்ப கஷ்டம் . நின்னா சாதிக்க முடியாதது எதுவுமில்லை.

செவ்வாயோட சேர்ரேனு வை. அவர் நெருப்பு நான் தண்ணி. அவரோட உஷ்ணத்தை தண்ணிப்பேன். ராகுவோட சேர்ரேன்னு வை. அவரு இல்லீகல் ஆக்டிவ்விட்டீஸுக்கு காரகம். நான் ராத்திரி வேளையில பலவான். மேற்படி வேலைகளுக்கு ராப்போதுதானே வசதி. இப்படி சொல்லிட்டே போகலாம்.அதனாலதான் எனக்கு ஆரோடவும் பகையில்லைன்னு ஒரு விதிவச்சிருக்காய்ங்க.

7.பிரமுகர்களின் மனைவிகளுக்கு நீங்க தான் அதிபதியாம் இதுக்கு என்ன காரணம்?
என்னோட நேச்சர் என்ன? எனக்கு சொந்த ஒளி கிடையாது. சூரியனோட ஒளியை பிரதிபலிக்கிறேன். பிரமுகர்களோட மனைவியருக்கு சொந்த புகழ் ஏது? கணவர்களோட புகழை வச்சு வண்டி ஓடும். அதனாலதேன் பிரமுகர்களின் மனைவியருக்கு நான் காரகம்.
மேலும் எல்லா விஐபியும் எவன் எப்ப கவுத்துருவானோன்னு அறிவுப்பூர்வமாவே ரோசிச்சு ரெம்ப ட்ரையா இருப்பான். பெண் பேசிக்கலி கொஞ்சம் சென்டிமென்ட் பார்ட்டி. இதுல புருசங்காரன் இப்படி சதா சர்வ காலம் அறிவுப்பூர்வமாவே இருக்கிறதால - எக்கனாமிக்கல் பொட்டன்ஷியாலிட்டி இருக்கிறதால அவள் கொஞ்சம் ஈவு இரக்கம்லாம் உள்ளவளா இருக்க வாய்ப்புண்டு.
சந்திரபலம் இருந்தாதான் ஈவு இரக்கம்லாம் இருக்கும் . ஆகவே ஒரு பிரமுகரின் மனைவிக்கு இந்த மாதிரி கேரக்டர் மீது ஈர்ப்பு வர வசதியிருக்கு.

8. தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவுக்கெல்லாம் உங்க பலம் அத்யாவசியம்ங்கறாய்ங்க. இதன் பின்னான தர்க்கம் என்ன?
ஏதோ சினிமால ஒரு வசனம் உண்டு "கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்"  தாய்ங்கறவள் மனசால ரோசிப்பா. அப்பன் அறிவால. என்னோட பலம் உள்ள ஜாதகன்மனசாலதான் ரோசிப்பான். இப்படியா கொத்தவனை அப்பன் பெருசா லைக் பண்ண மாட்டான்.ஆனால் தாய்? நிச்சயம் விரும்புவாள்.
சந்திர பலம் உள்ளவன் மனசால யோசிப்பான். தாயும் மனசால யோசிக்கிறவள். அதனால ஒரு ஜாதகத்துல சந்திரபலம் இருந்தா அவன் மனசால ரோசிப்பதோடு - தாயின்  அன்பையும் பெறுகிறான். தாயையும் நேசிக்கிறான். இதனாலதேன் தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவுக்கெல்லாம் சந்திர பலம் தேவைன்னு ஒரு விதி இருக்கு.
9.மனம் , நுரையீரல், சிறு நீரகம் இந்த மூன்றுக்கும்  உங்களூக்கும் இடையிலான தொடர்பு என்ன?
வீசிங் - நுரையீரல் தொடர்பான பிரச்சினை . இது வர மன அழுத்தமும் ஒரு காரணம் ( சந்திரன்= மனோகாரகன்) வீசிங் வர்ர நேரத்துல சிறு நீர் வெளியேறாது. (இதை பெரியார் சொல்லிவைக்க நாமும் அனுபவத்துல உணர்ந்திருக்கம்) .
குழந்தைகள் -வெகு சில டீன் ஏஜர்ஸுக்கு கூட படுக்கைய நனைக்கும் பழக்கம் இருக்கும். ( தூக்கத்துல படுக்கையிலயே  ஒன் பாத்ரூம் போயிர்ரது). அதிகம் உணர்வு வயப்பட கூடிய குழந்தைகளுக்கு - இவிக தூக்கத்துலயே பேசிட்டு இருப்பாய்ங்க  -ரெம்ப சென்சிட்டிவ் ஆக இருப்பாய்ங்க.
மேலும்  சிறு நீர்பை பலவீனமாக உள்ளவர்களுக்கும்  இது நடக்கலாம்.  மனம்,நுரையீரல்,சிறு நீரகம் இது மூன்றும் சிறப்பாக இருக்க சந்திர பலம் தேவை. சந்திர பலம் இல்லின்னா மூன்றுமே பிரச்சினை கொடுக்கும்.
கொளந்தைங்களை தூக்கி போட்டு விளையாடும் போது  உங்க முகம் நாறிரும்.ஏன்னா பயம் -மன உணர்வு. மூச்சுக்கும் -யோசனைகளுக்கும் உள்ள தொடர்பை ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.
10.காதல்ல உங்க ரோல் என்ன?
காதல் பிறப்பது கண்களில்னா ஆண்களில் வலது கண்,பெண்களில் இடது கண்ணுக்கு நான் தான் காரகம். மனசுல பிறக்குதுன்னா நான் தான் மனோகாரகன். காதல்ங்கறது எதிர்பாராவிதமா ஏற்படக்கூடிய ஒரு விபத்து. இதுல ஊடல் -கூடல் , உறவு -பிரிவு எல்லாமே எதிர்பாராவிதமாத்தான்  நடக்கும். எந்த விஷயத்துல எல்லாம்    நிச்சயமற்ற தன்மை ,எதிர்பாராத்தன்மை இருக்கோ அதுக்கெல்லாம் நான் தான் காரகம்.
11 முதலான 16 கேள்விகளுக்கு பதில்  நாளை

Monday, November 7, 2011

பொருளாதார முடக்கத்துக்கு பளிச் பரிகாரங்கள்


அண்ணே வணக்கம்ணே !
இந்த வலைப்பூ/வலைதளத்தில் உள்ள பதிவுகள் ஒரு புஸ்தவமா கிடைச்சா நல்லாருக்குமே - இந்த ஆளு சோசியத்தை எது மாதிரியும் இல்லாம புதுமாதிரியா சொல்றானே இந்தாளுகிட்ட நம்ம ஜாதகத்தை ஒரு தாட்டி காட்டிரனும்பாங்கற எண்ணம் உள்ளவரானால் இந்த பதிவை ஆற அமர படிங்க.

அப்படியல்லாது பொருளாதார முடக்கத்துக்கு பரிகாரம் எங்கய்யானு உணர்ச்சி வசப்படற பார்ட்டியா இருந்தா இந்த பதிவோட கடேசியில ஒரு ப்ளேயர் இருக்கும். அதுல ப்ளே பட்டனை அழுத்தி பரிகாரங்களை கேட்டுக்கிட்டு கழண்டுக்கங்க.

உங்களோட நெட் கனெக்சன் ஸ்லோவா இருக்கும்னா இங்கே அழுத்தி டவுன்லோட் பண்ணி கேட்டுக்கோங்க

சோசியங்கறது கடல். நம்ம கிட்டே இருக்கிறது ஒரு சின்ன டெஸ்ட் ட்யூப் நிறைய அந்த கடல் நீர் மட்டும் தேன் .அதுல கொஞ்சம் லாஜிக்,கொஞ்சம் பகுத்தறிவு,கொஞ்சம் மனிதம்லாம் போட்டு வச்சிருக்கம்.

அப்பப்போ தெரியாத்தனமா கடந்த பிறவிகளில் நாம தேடி வச்ச பூர்வ புண்ணியம் + சமகால எம்.ஜி.ஆர் வேலைகள் காரணமா அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் அந்த டெஸ்ட் ட்யூப்ல தெறிச்சுருதா. சனம் ஆகா ஓகோங்கறாய்ங்க. (அதையெல்லாம் நாம காதுல போட்டுக்கறதில்லை - நாம யாருன்னு நமக்கு தெரியும்ல)

இத்துனூண்டு சரக்கை வச்சுக்கிட்டு புஸ்தவம் போட நினைக்கலாமான்னு ஒரு கில்ட்டி. ஆனால் பலர் " நீங்க எழுதின புஸ்தவங்க எங்கன கிடைக்கும்" " நீங்க ஏன் உங்க ஆராய்ச்சி+அனுபவத்தை புஸ்தவமா எழுதக்கூடாது?" நீங்க ஏன் உங்க பதிவுகளை தொகுத்து புஸ்தவமா போடக்கூடாது" ன்னு மெயில் மூலமா விஜாரிச்சுக்கிட்டே இருக்காய்ங்க.

ரஜினி, கமல் 50 விழாவுல சொன்னாப்ல இன்னைக்கு ஃபீல்டுல இருக்கிற சோதிடப்புலிகள் சோதிடத்துல இதுவரை தொடாததை தொட்டாத்தான் கொஞ்சத்துக்கு கொஞ்சமாச்சும் பேர் சொல்லமுடியும்.அது நமக்கு தெரியும்.

அதனாலதேன் ஜாதகம் இல்லாமயே தங்கள் நிலையை வைத்து -தங்கள் வாழ்வின் போக்கை வைத்து தங்கள் ஜாதகத்துல எந்த கிரகம் வீக் ,அதுக்கு என்ன பரிகாரம்னு தெரிஞ்சிக்க ஒரு புஸ்தவம் எழுதினா என்னன்னு ஒரு ஸ்பார்க்.

காசு போட்டு நம்ம புஸ்தவத்தை வாங்கினவுக தாங்கள் புஸ்தவத்துக்காக செலவழிச்ச காசை போல குறைஞ்சது ஆயிரம் மடங்காவது சம்பாதிக்க தேவையான டிப்ஸை நாம கொடுத்தாகனும். இது ஒரு சவால்.

சமீப காலமா பொருளாதார முடக்கத்துக்கு என்னெல்லாம் காரணமா இருக்கக்கூடும்னு ஒரு பட்டியலை போட்டு ( சாபங்கள்/தோஷங்கள்) பரிகாரங்களை பொளந்து கட்டிக்கிட்டிருக்கம். ஆரம்ப காலத்துல கதிரவன், தேவி,ஆரூடம், ராஜரிஷி, ஜோதிட பூமி ,ஆன்மீகம் போன்ற இதழ்களில் சோதிட உலகிற்கு நம்மோட கான்ட்ரிப்யூஷனான நவகிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்களை டச் பண்ணியிருக்கம்.

உபரியா ஜோதிட பூமியில அனைவருக்கும் தனயோகம்னு (ஜோதிட ரீதியா -ஜாதகத்தை வச்சு மட்டும் ஒர்க் அவுட் பண்றாப்ல ஒரு தொடர்கட்டுரையும் எழுதியிருக்கம்.

மேலும் நம்ம வலைப்பூ,வலைதளங்கள்ள ஜோதிடம் தொடர்பாக நிறைய்ய ஆய்வு கட்டுரைகள் எழுதியிருக்கம்.

எல்லாத்தையும் தொகுத்து - டெலிகிராம் கணக்கா ட்ரிம் பண்ணி "அனுபவ ஜோதிடம்"ங்கற தலைப்புல - ஒரு புஸ்தவம் வெளியிடலாமேனு உத்தேசம்.

ஹார்ட் போர்ட் -மல்ட்டி கலர் ரேப்பர் போட்டு -பத்து ஃபாரம் நல்ல பேப்பர்ல ப்ரிண்ட் பண்ணி -பின்னிங் -பைண்டிங் -கட்டிங் -ட்ரான்ஸ்போர்ட் -கூரியர்-போஸ்டல் செலவெல்லாம் முடிக்கனும்னா ஆயிரம் பிரதிக்கு - இன்னைக்கிருக்கிற விலை வாசிக்கு ரூ.50,000 ஆகும்னு ப்ரஸ்ல உத்தாரா சொன்னாய்ங்க.
அப்போ ஒரு பிரதியோட அடக்க விலை ரூ.50 மட்டுமே.

ஆனால் இப்படி புஸ்தவத்தை ரூ 50 க்கு வித்தா ஜா.ரா மாதிரி ஆளெல்லாம் வாங்கி ஊரை ஏமாத்த ஆரம்பிச்சுருவாய்ங்க. அதனால புஸ்தவத்தோட விலைய குறைஞ்ச பட்சம் ரூ.250 ஆ ஃபிக்ஸ் பண்ணனும்.

அதே நேரம் அம்பது ரூவா அடக்கமுள்ள பொருளை இரு நூற்று அம்பது ரூவாய்க்கு வித்தா நாம ஏற்கெனவே நம்ம பதிவுகள்ள சொல்லியிருக்காப்ல குஷ்டம் தான் வரும். ( விரைவாதம்லாம் உபரி)

அதனால ஆன்லைன் ஜோதிட ஆலோசனையையும் இந்த புஸ்தவத்தையும் மெர்ஜ் பண்ணலாம்னு நினைக்கிறேன். நமக்கு ஆன்லைன் ஜோதிட ஆலோசனை கட்டணமா சனம் ரூ.250 தந்துக்கிட்டிருக்காய்ங்க. ( ஆன்லைன்ல இது டெட் சீப் போல - கூட்டம் அம்முது -ரவுண்ட் தி க்ளாக் வேலை செய்தாலும் முடிய..லை )

ஒரு ஜாதகத்துக்கு பொதுப்பலன் -பரிகாரம் -தசாபுக்தி பலன்னு 3 ஆடியோ ஃபைல் அனுப்பவேண்டியிருக்கு. நம்ம அறிவுப்பு அப்படி.( வாக்குல சனி)

இப்பம் சனி 3 க்கு வந்துட்டதால தில்லுதுரையாக இந்த அறிவிப்பை வெளியிட திட்டம்.

1.ஆன் லைன் ஜோதிட ஆலோசனையில் இனி ஒரு ஜாதகத்துக்கு பத்து கேள்விகளுக்கு (துணைக்கேள்விகள் உட்பட) விரிவான பதில் (மட்டுமே) அளிக்கப்படும். கட்டணம் மட்டும் அதே ரூ.250 தான்.

2.ஆன் லைன் ஜோதிட ஆலோசனை பெறுபவர்களுக்கு "அனுபவஜோதிடம்" நூல் இலவசம். ஆலோசனை கட்டணத்தை வங்கி கணக்கில் செலுத்தும் போதே பதிவு தபால்/கூரியர் செலவை ( நெல்லா விஜாரிச்சு) சேர்த்து கட்டிரனும்.

3.புஸ்தவம் தமிழர் திருநாளான பொங்கலன்று ரிலீஸ்.

நிபந்தனை:
1.பொங்கல் திரு நாளுக்கு முன் தினம் வரை ஆன்லைன் ஜோதிட ஆலோசனைக்காக வங்கிக்கணக்கில் கட்டணம்+கூரியர்/பதிவு தபால் செலவை செலுத்துபவர்களுக்கு மட்டுமே நூல் இலவசமாக அனுப்பப்படும்
( மெயில்ல பர்த் டீட்டெய்ல்ஸ், தபால் முகவரி தெரிவிக்க மறந்துராதிங்க)

2.அப்போதைக்கே ஜாதகங்கள் குவிந்து விட்டிருக்கும் என்பதால் தமிழ் வருடப்பிறப்பு வரை ஆன் லைன் ஜோதிட ஆலோசனை நிறுத்தப்படும்.

(இந்த அறிவிப்பை நவம்பர் 17 முதல் அமல்படுத்த எண்ணம். இது குறித்த உங்கள் கருத்தை உடனே தெரிவிக்கவும்)

Saturday, September 3, 2011

ஜோதிட பாலபாடம்: ஆடியோ (2)


அண்ணே வணக்கம்ணே!
அனுபவஜோதிடம் ஆடியோ பாடம் தொடருது. இந்த பத்துவரிக்கு கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்கலாம்.

ஞாயிற்றுக்கிழமைன்னாலே பதிவு போடலாமா வேணாமாங்கற மாதிரி தயக்கம் வந்துருது. ஏன்னா ஹிட்ஸ்ல ஒன் பை ஃபைவ் உசோ..(போயிரும்)

இதுல ஆடியோ ஃபைல் வேறயான்னு ஒரு தயக்கம். அதுக்கேத்தாப்ல நாம இந்த குரல் பதிவுக்கு உபயோகிக்கிற http://www.archive.org/ சைட்ல பிரச்சினையா நம்ம கனெக்சன்ல பிரச்சினையான்னு தெரியலை. ரெம்பவே வவுத்தெரிச்சலை கொட்டிக்கிச்சு.

அண்ணன் மட்டும் எப்படி ஆடியோ பதிவு போடறாருன்னு மண்டைய உடைச்சுக்கற தம்பிமாருக்கு (ஹி ஹி இணையத்துக்கு புதுசா வர்ரவுகளைத்தானே அப்படி கூப்ட முடியும்) டிப்ஸ்.

மொதல்ல உங்க பேச்சை உங்க மொபைல்ல பதிவு பண்ணிக்கங்க. கேபிள் மூலமாவோ - ப்ளூ டூத் மூலமாவோ அந்த ஆடியோவை சிஸ்டத்துக்கு கொண்டு வந்துருங்க.

அப்பாறம் மேலே சொன்ன சைட்ல சைன் அப் பண்ணிக்கங்க. ரைட் டாப்ல ஷேர்னு ஒரு பட்டன் தெரியும் அதை சொடுக்குங்க. உங்க ஆடியோ ஃபைலை ச்சூ காட்டிவிட்டுட்டிங்கண்ணா அதும்பாட்டுக்கு அப்லோட் ஆகும். அதுக்குள்ளாற கீழே உள்ள விண்ணப்பத்தை நிரப்பிருங்க.

ஃபைல் அப்லோட் ஆனபிற்பாடு ஓகே பண்ணிருங்க. யுவர் பேஜ் க்ரியேட்டட்னு புது விண்டோ தெரியும். அதுல உங்க பேஜ் யு ஆர் எல் -ஐ க்ளிக் பண்ணா ரைட் டாப்ல ஒரு ப்ளேயர் தெரியும். அதுங்கீழே எம்ப்ட் திஸ்னு ஒரு ஆப்ஷன் இருக்கும். அதுங்கீழே உள்ள கோடை காப்பி பண்ணி கொண்டு வந்து உங்க சைட்ல ஒட்டிட்டா ஓவர்.

இதை ரெண்டு விதமா செய்யலாம். ஒன்னு design/add a widget/html னு ஒட்டறது. ரெண்டாவது மெத்தட்ல குரல் பதிவுக்கான விளக்கத்தை ப்ளாகர்ல அடிச்சு முடிச்சுட்டு ரைட் கார்னர்ல கம்போஸுக்கு பக்கத்துல
( ஐமீன் கம்போஸுக்கு லெஃப்ட்லனு நினைக்கிறேன் ) எடிட் ஹெச் டி எம் எல்னு ஒரு ஆப்ஷன் இருக்கும்.அதை சொடுக்கி ப்ளேயர் எங்கே வரனும்னு நினைக்கிறிங்களோ அங்க உங்க கோடை பேஸ்ட் பண்ணிட்டு சேவ் பண்ணிட்டா போதும்.

இதான் குரல் பதிவோட சூட்சுமம்.இனி பாடத்துக்கு போயிரலாம். கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை சொடுக்குங்க