Monday, June 29, 2009

ஓரின சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் ? செக்ஸ் ஒர்க்கர்ஸ் செய்த பாவம் என்ன?

ஓரின சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் ? செக்ஸ் ஒர்க்கர்ஸ் செய்த பாவம் என்ன?
ஓரின சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்குதல் குறித்து வேகமாய் சிந்தித்த இந்திய அரசு "அவசரப்படமாட்டோம்" என்று பின் வாங்கியுள்ளது. மதங்கள் யாவும் ஓரின சேர்க்கைக்கே அல்ல செக்ஸுக்கும் எதிரிகள்தான். மனிதனை தன்னை மறக்கச்செய்யும் எதுவும் இறைவனையும் மறக்க செய்துவிடும் என்பதே மதங்களின் அச்ச்ம். எனவே தான் செக்ஸை ஏறக்குறைய தடை செய்து வைத்துள்ளன.

உலகில் மாறாதது மாற்றம் ஒன்றுதான். மாற்றம் என்பது பழமை வாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் மரணத்துக்கு ஒப்பானதாக உள்ளது. "காமி கானி வாடு மோட்ச காமி கா லேடு " இது தெலுங்கு சொலவடை. அதாவது காமத்தை அனுபவிக்காதவன் மோட்சத்தை விரும்புபவனாய் மாற முடியாது என்பதே. பேரின்பம் முழு சினிமா என்றால் சிற்றின்பம் என்பது சினிமா ஸ்லைடு மாதிரி. ஸ்லைடையே பார்க்காதவனுக்கு சினிமா பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றாது.

அந்த காலத்தில் பால்ய திருமணங்கள் நடைபெற்றன. ஆனால் மருத்துவத்துறை வளராத காலம் என்பதால் இளம் விதவைகள் பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருந்தது. இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம் பிள்ளைக்கு ஒரு பத்தாயிரம், மருமகளுக்கு ஒரு பத்தாயிரம் ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியுமா ? முடியாது.

இளமையை முற்றாய் தொலைத்தாலன்றி படிப்பு முடியாது,வேலை கிடைக்காது.(இப்போதெல்லாம் வேலை கிடைத்தால் மட்டும் போதாதாம். செட்டில் ஆகனுமாம்.அதுக்குள்ற இளமை போயே போச்) ஓரின சேர்க்கை பெருக காரணமே சமூகம் செக்ஸ் மீது விதித்துள்ள தடைதான். ஜெனட்டிக்,மன காரணங்களால் ஹோமோக்கள் ஆனவர்கள் உண்டு என்றாலும் இல்லாத குறைக்கு அந்த கரை பக்கம் ஒதுங்கியவர்களும் உண்டு.

இது இயற்கைக்கு விரோதமானது என்பதோடு, மன கோளாறும் கூட. எயிட்ஸுக்கு முக்கிய காரணமாகவும் கூறப்படுகிறது. இன்னிலையில் ஓரின சேர்க்கை பற்றி பேசுவோர் கூட முப்பது, நாப்பது வயசு வரை செக்ஸ் எண்ணங்களை உள்ளடக்கி வைத்து தலையில் சொட்டை,தொந்தி,வாங்கி மெனோஃபஸ் வயதில் கல்யாணம் செய்து, தனிமைக்கு பழகிப்போய் பெண் ஆணை வைபரேடராகவும், ஆண் பெண்ணை ஸ்பென்ஸர் ப்ளாசா ஸ்பெஷல் பொம்மையாகவும் வாழ்ந்து நாறிப்போவதை காட்டிலும் பாலியல் தொழிலாளிகளுக்கு (ஆண், பெண்) லைசென்ஸ் வழங்குவது நல்லதல்லவா?
எப்படியும் குழந்தை,எயிட்ஸ் பயத்துக்குதான் காண்டோம் இருக்கிறதே. உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்களே வன்முறைக்கு காரணம் என்று மனோதத்துவம் கூறுகிறது

எனவே ஓரின சேர்க்கை பற்றி யோசிக்கும் வேகத்திலேயே (பின்வாங்குவதில் காட்டிய வேகத்தில் அல்ல) விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது குறித்தும் அரசு பரிசீலிப்பது நல்லது.

இந்த‌ ப‌டைப்பே ஒரு விப‌த்து. ம‌னித‌ வாழ்வு அக்மார்க் விப‌த்து. ஒரு எல‌க்ட்ரானிக் உப‌க‌ர‌ண‌த்தில் ஆன்,ஆஃப் ஸ்விட்ச் இருப்ப‌து போல் ஒவ்வொரு உயிரிலும் உயிர் வாழும் இச்சையும்,த‌ற்கொலை இச்சையும் சேர்ந்தே உள்ள‌ன‌. ம‌னித‌ர்க‌ள் வெவ்வேறு போர்வைக‌ளில் செய்வ‌து இர‌ண்டைத்தான். 1.கொல்வ‌து 2.சாவ‌து. இவை இர‌ண்டுமே செக்ஸ்,மற்றும் ப‌ண‌த்தில் கைகூடுவ‌தால் தான் ம‌னிதனுக்கு செக்ஸ் ம‌ற்றும் ப‌ண‌த்தின் மீது இத்த‌னை காத‌ல்.

முக்தி என்ப‌து என்ன? எண்ண‌ங்க‌ள் இற‌த்த‌லே முக்தி. செக்ஸில் ஆர்காச‌ம் அடையும்போது எண்ண‌ங்க‌ள் இற‌க்கின்ற‌ன‌. ஒரு செக‌ண்ட் ப்ளாக் அவுட் ஏற்ப‌டுகிற‌து. இதை மீண்டும் மீண்டும் பெற‌த்தான் ம‌னித‌ன் செக்ஸில் ஈடுப‌டுகிறான்.

உயிர்வாழும் இச்சை ப‌டைப்புக்கு தூண்டுகிற‌து. ப‌டைப்பால் ம‌னித‌ன் பார்ஷிய‌லாக‌ இற‌க்கிறான். டூ இன் வ‌ன். ம‌னித‌ உட‌லில் இருப்ப‌து ஒரே ச‌க்தி தான். அது காம‌ ச‌க்தி. அவ‌ன‌து செய‌ல்பாடுக‌ளை பொருத்து அது யோக‌ ச‌க்தியாக‌ மாறுகிற‌து.

செக்ஸில்,பிள்ளைகள் பெறுவதில் முழுமையாக செல‌வ‌ழித்து விட‌ முடியாத‌ அள‌வுக்கு ஆண்மை உள்ள‌வ‌னே ப‌டைப்பு தொழிலுக்கு வ‌ருகிறான். அங்கும் முழுமையாக செல‌வ‌ழியாத‌ காம‌ ச‌க்தி தான் அவ‌னை முக்திக்கு தூண்டுகிற‌து.


ப‌ண‌ம்,செக்ஸ் உத‌வியால் ஒரு ம‌னிதன் முழுமையாக‌ சாக‌வும் முடியாது ,எதிராளியை முழுமையாக‌ கொல்ல‌வும் முடியாது. தியான‌த்தால் இவைஇர‌ண்டுமே சாத்திய‌ம். இந்த‌ உண்மையை அனைவ‌ரும் அறிய‌ முத‌ற்க‌ண் அவ‌ர்க‌ளுக்கு செக்ஸும்,ப‌ண‌மும் த‌ங்கு த‌டையின்றி கிடைக்க‌ வேண்டும். இவற்றை (ஒரு ஜோதிட ஆய்வாளனாக கிர‌க‌ங்க‌ளின் பாதிப்புகளை, அவை வேலை செய்யும் விதத்தை அறிந்த‌வ‌ன் என்ற‌ முறையில்) ம‌க்கள் முழுமையாக, த‌ங்கு த‌டையின்றி,ச‌ட்ட‌ப்பூர்வ‌மாக‌,த‌ரும‌ வ‌ழியில் பெற‌ உத‌வுவ‌தே என் ப‌திவுக‌ளின் நோக்க‌ம்.

மனித‌னுக்கு ம‌ர‌ண‌ம் என்றால் ப‌ய‌ம். இருட்டு ம‌ர‌ண‌த்துக்கு சிம்ப‌ல். த‌னிமை ம‌ர‌ண‌த்துக்கு சிம்ப‌ல். இதனால் தான் ராத்திரியில் ப‌வ‌ர் க‌ட்டானால் கூட‌ மின் நிலைய‌ங்க‌ளுக்கு போன் மேல் போன். இத‌னால் தான் 6 முத‌ல் 60 வ‌ய‌து வ‌ரை ம‌னித‌ன் காத‌லித்துகொண்டே இருக்கிறான். நீயே உன் ஒளியாக‌ இரு என்றான் புத்த‌ர். எத்த‌னை பேரால் இப்ப‌டி வாழ‌ முடியும். ஏழ்மையும்,த‌னிமையும் ம‌னித‌னை வெருட்ட‌ ஆர‌ம்பிப்ப‌தால் தான் ம‌க்க‌ள் ப‌ண‌ம் ப‌ண‌ம் என்று ப‌ற‌க்கிறார்க‌ள்.ஈவ் டீசிங்,க‌ற்ப‌ழிப்புக‌ள்,க‌ள்ள‌ உற‌வுக‌ள் எல்லாமே இத‌ன் விளைவுதான்.

இத‌ற்காக‌த்தான் ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்தை தீட்டினேன். அத‌ன் அம‌லுக்கு 1986 முத‌லாக‌ உழைத்து வ‌ருகிறேன். பாலிய‌ல் தொழிலுக்கு ச‌ட்ட‌ அங்கீகார‌ம் வ‌ழ‌ங்க‌ வேண்டும் என்று தொட‌ர்ந்து குர‌ல் கொடுத்து வ‌ருகிறேன்.

த‌ன‌து அடிம‌ன‌தில் உள்ள‌ ,அடிப்ப‌டை கோரிக்கைக‌ள் (சாவ‌து,சாவ‌டிப்ப‌து) செக்ஸிலோ,ப‌ண‌த்தாலே நிறைவேறாது, அது தியான‌த்தின் மூல‌ம் ம‌ட்டுமே சாத்திய‌ம் என்று ம‌னித‌ன் அனுபவ பூர்வமாக உண‌ர‌ வேண்டுமானால் ப‌ண‌ம்,செக்ஸ் முழுமையாக, த‌ங்கு த‌டையின்றி,ச‌ட்ட‌ப்பூர்வ‌மாக‌,த‌ரும‌ வ‌ழியில் கிடைத்தாக‌ வேண்டும். என் நாடு சித்த‌ர்க‌ள் சூட்சும‌ வ‌டிவில் இன்றும் வாழும் பொன்னாடு. இந்நாட்டு ம‌க்க‌ள் அனைவ‌ருமே ஞான‌ம் பெற‌வேண்டும். அத‌ற்கு முத‌ல் ப‌டியாக‌
ப‌ணம் மற்றும் செக்ஸை முழுமையாக, த‌ங்கு த‌டையின்றி,ச‌ட்ட‌ப்பூர்வ‌மாக‌,த‌ரும‌ வ‌ழியில் பெற‌வேண்டும்.