Sunday, June 28, 2009

ஜோதிடம் பெயரால் மோசடிகள்

ஜோதிடம் பெயரால் நடைபெறும் மோசடிகளை ஒரு தொழில் முறை ஜோதிடனான நானே எடுத்துக்கூற இருப்பது தங்கள் பூர்வ ஜென்ம புண்ணியமென்றே கூற வேண்டும்.
1.பேர் ராசிக்கு பலன் சொல்லி ஜல்லியடிப்பது. இது 100 சதம் போலி. சிலர் ரொம்பவே சாலாக்குடன் 30 வயசுக்கு பிறகு வச்ச பேருதான் வேலை செய்யும் என்பதும் உண்டு. என் கேள்வி : நாய்க்கு டைகர் என்று பெயர் வைத்த மாத்திரத்தில் அது புலியாகிவிடுமா என்ன ?
இதே மாதிரி கல்யாண பொருத்தத்திலும் மோசடிகள் நடைபெறுகின்றன. வச்ச பேரு, வீட்டுல கூப்புடர பேரு, செல்ல பேருக்கெல்லாம் பொருத்தம் பார்க்கிறது வேஸ்ட். ஜாதகம் பொருந்தனும். தோசங்கள் சமமா இருக்கனும். தச வித பொருத்தங்கள்ள ரஜ்ஜு நாடி கரெக்டா இருக்கனும் தட்ஸ் ஆல்
2.ஜன்ம நட்சத்திரம் அல்லது ஜன்ம ராசியை வைத்து பலன் சொல்லிவிட்டு இதுதான் உன் எதிர்காலம் என்பது. இதுவும் மிகப்பெரிய தவறாகும். மோசடி என்றே கூறலாம். வாழ்க்கை எனும் ரயில் ஜாதகப்படி நடைபெறும் தசாபுக்திகள்,தற்கால கிரக சஞ்‌சாரம் எனும் 2 தண்டவாளங்களின் மீது பயணிக்கும். வெறுமனே கோச்சார பலனை சொல்வது ஊரை ஏமாற்றும் செயலாகும்.(பத்திரிக்கைகளில் வெளியாகும் ராசிபலன்கள் கூட மோசடிதான்.
3.உண்மையில் கோச்சாரப்படி சொன்ன நல்லதோ கெட்டதோ நடைபெறுமானால் உங்கள் ஜாதகம் சப்பை,தக்கை ,என்று அர்த்தம்.

4.சூரியன்,சந்திரன்,செவ்வாய்,ராகு,குரு,சனி,புதன்,கேது,சுக்கிரன் என்று 9 கிரகங்கள் இருந்தாலும் ஒவ்வொரு லக்னத்துக்கும் 3 கிரகங்கள் தான் சுபர்.அதாவது நன்மை செய்யும் கிரகங்கள். சர்ப்ப தோஷமில்லையென்றால் ராகுவும் நலம் புரிவார். எனவே அது உச்சம், இது உச்சம் என்று பூ சுற்றினால் நம்பாதீர்கள். லக்னத்துக்கு சுபனாக இருக்கும் கிரகம் உச்சம் பெற வேண்டும் . அது கூட ஸ்தான பலம், அஸ்தமனம்,வக்கிரம் போன்ற லொள்ளுக்கு உள்ளாகாது இருக்க வேண்டும். அப்போதுதான் பஞ்சமகா புருஷ யோகங்கள் (கிரகம் உச்சம் பெற்ற) வேலை செய்யும்.
5.அப்படியே கிரகங்கள் உச்சம் பெற்றிருந்தாலும் நீங்கள் அந்த கிரகம் தொடர்பான கல்வி,தொழிலில் ஈடுபடுவதோடு, மேற்படி கிரகம் தொடர்பான மனிதர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் தான் அந்த கிரகம் தரும் யோகம் வேலை செய்யும்.
6.தனயோகம் என்பது வாயை கட்டி,வயிற்றை கட்டி ஒன்று அல்லது இரண்டு லட்சங்களை சேர்த்துவைத்து ஊர் வாயில் போட்டு முழிப்பதல்ல. எத்தனை லட்சங்களை வீணாக்கினாலும் மீண்டும் மீண்டும் லட்சங்கள் வரவேண்டும் அதுதான் தனயோகம்.

7. சுப கிரகங்கள் தரும் யோகம் ஒரு விதமாக, அசுப கிரகங்கள் தரும் யோகம் வேறு விதமாக பலன் தரும்.

8. வீட்டுக்கு கடைக்கால் எப்படியோ ஜாதகத்துக்கு லக்னம் முக்கியம். லக்னம்,லக்னாதிபதி கெட்டிருந்து எத்தனை யோகங்கள் இருந்தாலும் வேஸ்டுதான்
9.ஒரு ஜாதகனுக்கு பணம் வரக்கூடாது என்று சொல்லக்கூடிய நாள் எதுவும் கிடையாது/எவருக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பணம் வரலாம். (அஷ்டமாதிபதி தசையில் கூட கால் போய்,கை போய் பணம் வந்திருக்கிறது) என்னவொரு பிரச்சினை என்றால் கெட்ட நேரத்தில் வரும் பணம் வீணாகும். நல்ல நேரத்தில் வரும் பணம் உபயோகப்படும்.