Thursday, June 4, 2009

இந்த விதி சுய இன்பத்துக்கு மட்டுமல்ல, உடலுறவுக்கும் பொருந்தும்.

அது அவரவர் உடல் நலத்தை ,வலிமையை பொறுத்த விஷயம். வெயில் காலத்தில் ஆற்றோரம் குழி பறித்து அதிலிருந்து ஆற்று (ஊற்று) நீரை முகர்வார்கள். அப்போது மேலோட்டமாக ,தண்ணீர் கலங்கி விடாது எச்சரிக்கையுடன் சிறிய பாத்திரத்தில் எடுப்பார்கள். சுய இன்பமும் அப்படித்தான் அனுபவிக்கப்படவேண்டும். இந்த விதி சுய இன்பத்துக்கு மட்டுமல்ல, உடலுறவுக்கும் பொருந்தும்.
இதனை பொழுது போக்காகவோ,வேலையற்றதுகளின் வேலையாகவோ செய்தால் வம்புதான். உறுப்பே சில்க்கின் இடுப்பு போல் பல வளைவுகளுக்கு உட்பட்டு விடும்.
அதே நேரத்தில் இதேதோ பஞ்சமா பாதகம் என்றெண்ணி ஈர கோவணம் உடுத்தி கட்டுப்படுத்தினால் வேறு வகையான தொல்லைகள் ஏற்பட்டுவிடும். பஸ் நெரிசலில் கைபோட்டு உதை வாங்குவது. பப்ளிக்கில் லங்கோட்டா நனைவது முதலானவை

உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத நிலை வரும் (இது சாதாரணமாக ஆரோக்கியமான இளைஞனுக்கு வாரம்,பத்து நாளைக்கொருமுறை ஏற்படும். அந்த சமயத்தில் சுய இன்பம் அனுபவிப்பது நலமே. (எமர்ஜென்சி கேட் மாதிரி)

முக்கியமான விஷயம் என்னன்னா ... இது குற்றமல்ல ,கெட்டப்பழக்கமல்ல ,மேலும் சொல்லப்போனால் ஒரு தற்காப்பு நடவடிக்கை (அளவுடனிருக்கும்போது)