Tuesday, March 4, 2008

ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் சினிமா சிவாஜி நடித்த ஹிட்லர் உமாநாத்தின் உல்ட்டா


ஒரே கதையை மீண்டும் மீண்டும் எழுதிய லட்சுமி,ராஜம் கிருஷ்ணன்..


மேற்சொன்ன லட்சுமி,ராஜம் கிருஷ்ணனில் லட்சுமியின் மிதிலா விலாஸ் மட்டும் காவிய ரேஞ்சில் என்னை பாதித்ததை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். ராஜ‌ம் கிருஷ்ண‌னின் க‌தைக‌ள் எப்போதாவ‌து விதியின்றி ப‌டித்த‌வைதான். இதில் நான் க‌ண்டுபிடித்த உண்மை என்னவென்றால் இருவருமே ஒரேகதையை மீண்டும் மீண்டும் எழுதியிருக்கிறார்கள் என்பதே !

லட்சுமியின் ஒரேகதை:
வேலைக்கு செல்லும் பெண், குடும்பம்,அலுவலகம் இரண்டிலும் பல பிரச்சினைகளை சந்திப்பாள்..இறுதியில் சுபம். அல்லது ஒரு பெண் பணக்காரர்களான தூரத்து உறவினர்கள் வீட்டில் மாட்டிக்கொண்டு முழிப்பாள். இதையே தான் அவர் மாற்றி மாற்றி எழுதிவந்திருக்கிறார். வாழ்க !

ராஜம் கிருஷ்ணனின் ஒரே கதை:

கோபக்கார ஆண்,அவன் பெரும் பணக்காரனாக இருப்பான். பெண் ஏழை ஆனாலும் தன்மானம் மிக்கவளாக இருப்பாள். ஏற்கெனவே இருவருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கும். இருந்தாலும் அவ‌ர்க‌ளிடையில் காத‌ல் நீறு பூத்த‌ நெருப்பாக‌ இருக்கும். பிற்ப‌குதியில் புரித‌ல் ஏற்ப‌ட்டு ஒன்று சேர்வார்க‌ள்.


அட‌ த‌லையெழுத்தே !

ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் சினிமா சிவாஜி நடித்த ஹிட்லர் உமாநாத்தின் உல்ட்டா என்பது தெரியுமா?
"ஹிட்லர் உமாநாத்" ல சிவாஜி கோழை, மனைவி ஹிட்லரோட கதையை சொல்லி ஜும் ஏற்றி வீரனாக்கி,பணக்காரனாக்குவார். இதை தெலுங்குல உல்ட்டா அடிச்சு "தர்மாத்முடு" னு ஒரு படம் எடுத்தானுங்க..

அதைத்தான் ரஜினியை போட்டு ஏவிஎம் நலாவனுக்கு நல்லவன் எடுத்தாங்க . மாப்பிள்ளை லொள்ளு பண்ர கான்செப்டைமட்டும் அப்படியே உருவிட்டாங்க..


இதே மாதிரி இன்னொரு கதை.. தெலுங்குல "பஹுதூரபு பாட்டசாரி" னு ஒரு படம் . இதுல ஹீரோவுக்கு கால் போயிரும்..குடும்பம் கைவிட்டுரும். ஹீரோ நின்னு காட்டுவார். இதை ஹீரோவுக்கு கை போயிர்ரதா தமிழ்ல "வாழ்க்கை" நு ஒரு படம் எடுத்தாங்க. அதை மறுபடி தெலுங்குல ரீமேக் பண்ணி "ஓ தன்ட்ரி தீர்ப்பு"ன்னு எடுத்து விட்டானுங்க அடப்பாவிகளா!

இன்னொரு தமாசு சொல்றேன் கேளுங்க.. தெலுங்குல தாசரி நாராயணராவ் பெரிய்ய டைரக்டர். அவர்கிட்ட மொத்தமா 3 கதை தான் இருக்கு. அதையே மாத்தி மாத்தி எடுத்து ஹிட்டும்,ஃபெயில்யூரும் கொடுத்துக்கிட்டே இருக்கார். அவை வருமாறு:

1. இரண்டு நண்பர்கள் கதை
2. அப்பா,அம்மாவுக்கு பச‌ங்க கை கொடுத்துர்ர கதை
3. ஒருத்த‌னுக்கு/ஒருத்திக்கு அநியாய‌த்துக்கு மேல‌ அநியாய‌ம் ந‌ட‌க்கும் உட‌னே அவ‌ள் ஏதோ ஒரு கெட்ட‌ப்ல‌ (பொப்பிலி புலி,மைச‌ம்மா ஐ.பி.எஸ் இப்ப‌டி எத்த‌னையோ ப‌ட‌ம்) வ‌ந்து வில்ல‌னுங்க‌ளை போட்டு த‌ள்ளிருவார்/த‌ள்ளிருவாள்

அட‌ இழ‌வே !