Friday, August 26, 2011

நம்ம கம்ப்யூட்டர் திருடு போயிருச்சுங்கோ..


அவன் -அவள்-அது : 22
அண்ணே !
இந்த தொடரை எழுதும்போது என்னடா இது எல்லாம் பழைய சம்பவமா எழுதிக்கிட்டிருக்கம். சனம் ஆருன்னா ஒன்னோட ஆத்தா இப்பம் என்னடா கிழிச்சான்னு கேட்டுரப்போறாய்ங்கன்னு ஒரு குறுகுறு இருந்துக்கிட்டே இருந்தது. ஆனால் ஆத்தாவோட திருவிளையாடல் ஆரம்பமாயிருச்சுங்கோ... நம்ம கம்ப்யூட்டர் திருடு போயிருச்சு..

என்னடா இது எல்லாம் புலம்பலா இருக்குமோன்னு பக்கத்தை மூடிராதிங்க. பால பாடம் இன்னைக்கும் தொடருது. இங்கே அழுத்தி படிங்க.

கருத்து கந்தசாமி கணக்கா சமகால நேஷ்னல் டெவலப்மெண்ட்ஸ் பத்தியும் ஒரு ஐட்டம் தட்டி விட்டிருக்கேன். அதை இங்கே அழுத்தி படிங்க

இனி அவன் அவள் அது ..................


கடந்த பதிவு ஒன்றில் ஆத்தாளுக்காவ தெலுங்குல நான் எழுதின தெலுங்கு கவிதைகளை வலையேற்ற ஒரு ஜகத் சோம்பேறிக்கு பிளாக் அண்ட் வைட் மானிட்டரோட ஒரு கம்ப்யூட்டரை கொடுத்துட்டு வந்தது ஞா இருக்கலாம்.

இன் கம் சர்ட்டிஃபிகேட் வைக்காததால காலேஜ்ல அவன் பையனுக்கு ரூ.31 ஆயிரம் அடிஷ்னலா கட்டவேண்டி வந்துருச்சு. அதை சாக்கா வச்சு வலையேற்றத்தை அவாய்ட் பண்ணிக்கிட்டு வந்தான். ஆத்தா அருளால காலேஜ் கண்டம் மலையேறிப்போச்சு.

இது நடந்து ஒரு வாரம் போல ஆனாலும் பார்ட்டி வலையேற்றத்தை கண்டுக்கற மாதிரி இல்லை. இத்தனைக்கும் அவனுக்கு எத்தனையோ ஆசையெல்லாம் காட்டினேன். மாசத்துக்கு இவ்ளன்னு காசுதரேன். எலக்ட்ரிசிட்டி போர்ட் ஆஃபீஸுக்கு போற வழியில தான் அவனோட மருந்து கடை . தாளி ஒரு டாட் மேட்ரிக்ஸ் ப்ரிண்டர் வாங்கித்தரேன். ஒரு மனு அடிச்சு கொடுத்தாலும் இருபது ரூபா வரும் இப்படி நிறைய.

ஆனால் பார்ட்டி எதையும் கண்டு்க்கலை. நேத்து ராத்திரி கடை பூட்டை உடைச்சு எல்லாத்தையும் வாரிக்கினு பூட்டானுங்களாம் ( நம்ம கம்ப்யூட்டர் உட்பட)

இதை எப்படி புரிஞ்சிக்கிறது புரியலை. காலையில 7 மணி அளவுல ஃபோன் வந்தது. இப்பம் 11.10 இதுவரை நாம என்ன ஏதுன்னு கண்டுக்கலை. இந்த சம்பவம் ஏன் நடந்தது? வலையேற்றத்தை நிரந்தரமா முடக்கவா? அது ஆத்தாளால கூட முடியாத வேலை.

வாழ்க்கையில லட்சியம்னு ஒன்னை வச்சுக்கிட்டு அதை தவிர மத்த எல்லாத்தையும் திராட்டுல விட்டுட்டு ஃபைட் பண்றவுக மேட்டர்ல கிரகங்கள் தோத்துப்போயிரனும்னு ஆத்தாளே ஒரு சாபம் விட்டு வச்சிருக்காளாமே தெரிமா?

இந்த சம்பவத்தால அசமஞ்சமா இருந்தா நம்மாளோட மைண்ட் உசுப்பப்பட்டு / இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் / கில்ட்டியால முழு வேகத்துல வலையேற்றம் நடக்குமோ?

அல்லது இதையே ஒரு சாக்கா வச்சு திராட்டுல விட்டுருவானோ? நமக்கு கம்ப்யூட்டர் திருடு போனதை பற்றி எள்ளளவும் கவலையில்லை.

எதுனா பூட்சின்னா கர்மம் தொலைஞ்சதுனு நினைக்கிற சாடிஸ்ட் நாம. எதுனா வந்தாதேன் பயப்படுவோம். இதும்பின்னாடி எந்த கருமம் வந்திருக்கோன்னு சிந்திப்பம்.