Monday, August 8, 2011

அவன் அவள் அது : 11?


அண்ணே வணக்கம்ணே.. ஆத்தாவுக்கும் நமக்கும் எப்படி கனெக்சன் ஆச்சு - ஆத்தாளை நாம எப்படி அப்ரோச் பண்ணோம் -ஆத்தா நம்மை எப்படி அப்ரோச் பண்ணாள்?

நம்ம டீலிங் எப்படியிருந்தது -ஆத்தாவுக்கு நாம என்ன கொடுத்தோம் ஆத்தா நமக்கு என்னெல்லாம் கொடுத்தா கொடுத்துக்கிட்டிருக்காங்கறதை பத்தி ஒரு தொடர்பதிவு போட நினைச்சு ஆரம்பிச்சோம். அது ஏனோ எதுக்கோ எப்படியோ அப்படியே நின்னுப்போச்சு. ஆமை முட்டை வச்ச இடத்தை நினைச்சா அது பொரியுமாமே அதுமாதிரி ஆத்தா எங்கருந்தோ நம்மை ஆப்பரேட் பண்றாள். நாமளும் ஆடிக்கிட்டிருக்கோம்.

தொடரை எந்த லைன் அப்ல ஆரம்பிச்சோம்.எதுவரை வந்ததுனு கூட ஞா இல்லை. நாம என்ன வீக்லியில தொடரா எழுதறோம் சினாப்சிஸ் -வச்சுக்கிட்டு போன வாரம் என்ன எழுதினோம்னு பார்த்துக்கிட்டு எழுத .

பணம் காசு வர மந்திரம் கேட்டோம் - பீஜங்களின் தொகுப்பே தந்துட்டாய்ங்க. ஜெபிக்க ஆரம்பிச்சோம்.ஸ்தூலமா லெமன் - மஞ்ச தண்ணி (அப்பாறம் பட்டை லவுங்கம் சேர்ந்துக்கிச்சு)

உடுப்பி ஹோட்டல் சாப்பாடு கணக்கா இருக்கவேண்டிய சாப்பாட்ல தொடர்ந்து காரம் மஞ்ச தண்ணிய டேஸ்ட் பண்ணி பார்த்தா பயங்கர காரம். அப்பாறம் மஞ்ச தூள் ப்ராண்டை மாத்திட்டம்.

மஞ்ச தண்ணி வைக்க லேட்டானா ரத்த காயம் அ ருத்ர தாண்டவம். மேற்படி மந்திரத்துக்குரிய ஐ மீன் ஹ்ரீம் என்ற பீஜத்துக்குரிய அம்மன் பேரு புவனேஸ்வரி. முன் அனுமதியில்லாம இந்தம்மாவோட அந்தப்புரம் வ்ரை போய் தகவல் சொல்லும் அதிகாரம் படைச்சவுக ரெண்டு பேரு ஒருத்தர் ஆஞ்சனேயர். இன்னொருத்தர் கிளி முகம் கொண்ட ரிஷி (பேர் என்னங்கண்ணா? மறந்து போச்சு)

ஒரு நா ஒரு கிளி நம்ம போர்ஷனுக்குள்ள நுழைஞ்சுருச்சு.ஒரு 9 நாள் தங்கியிருந்துச்சு. நாம தியானம் பண்ணிக்கிட்டிருக்க ( ஐமீன் பீஜ ஜெபம்) பாம்பு வந்துருச்சு. எட்செட்ரா எல்லாம் சொல்லியிருப்பன்.

இந்த செனேரியோல நடந்த ஒரு சம்பவம் மட்டும் ரெம்ப த்ரில்லா இருக்கும். ஒரு இடைவெளிக்கப்புறம் இந்த தொடரை படிக்கிற உங்களுக்கும் ஒரு இன்வால்வ்மென்ட் வரும்.

அப்படியே நம்மை உரசிப்பார்க்கலாம்னு ஆருக்குனா எண்ணம் இருந்தா தயவு செய்து விட்டுரனும்னு தேன் அந்த சம்பவத்தை சொல்றேன். அனானி கமெண்ட் போடற பார்ட்டி என்னமோ அநியாயத்துக்கு "அவாளை" கோர்த்து விடுது.

அவாள்ளாம் ரெம்ப சென்சிட்டிவ் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்ங்கறாப்ல அவிக நம்மை உரசிப்பார்த்து மேட்டர் இன்னான்னு புரிஞ்சுக்கிட்டு ல்லாம் அபவுட் டர்ன் அடிச்சி பல காலம் ஆச்சு. மேலும் இழந்தவந்தேன் தலையில அடிச்சிக்கிட்டு அழுது கூப்பாடு போடுவானே தவிர அடிச்சுக்கிட்டு போனவன் கமுக்கமாதேன் இருப்பான்.இதை ஆருனா அந்த அனானிக்கு புரியறாப்ல சொல்லுங்க.

சரி சரி ஆத்தா மேட்டருக்கு வந்துர்ரன். வருசம் 2000 மாசம் ஜூனுக்கு பிறகான ஏதோ ஒரு மாசம். வாணியம்பாடியில அக்பர் கவுசருக்கு டாட்டா சொல்லிட்டு வந்துட்டம். தியாகய்யருக்கு உஞ்ச விருத்தி மாதிரி நமக்கு சோசியம். ஒரு நாளைக்கு அம்பதோஅறுவதோ கிடைச்சா போதும். ஒழுங்கு மரியாதையா கோட்டையில சேர்த்துட்டு நகர்வலம் ஆரம்பிச்சுருவம். நாட்டு நலன் நாடி சாக்ரடீஸ் கணக்கா இழுத்து வச்சு பேச ஆரம்பிச்சுருவம்.

அப்படி நகர்வலம் வரும்போது அங்கங்கே ஒவ்வொரு க்ரூப்ல டச் ஆயிருவம்.அப்படி ஒரு க்ரூப்ல டச் ஆன பார்ட்டியை பத்தி ஒரு அறிமுகம். நிறம் ரஜினிக்கு சாஸ்தி -வி.காந்துக்கு கம்மி. நடுத்தர உயரம். எப்பவும் இன்செர்ட் பண்ணின சட்டை. புதுசா சொந்த வீட்டை இடிச்சு கட்டவும் ஆரம்பிச்சிருந்தாப்ல. ஜாதகம்னா மிதுனலக்னம் 2 , 8 ல ராகு கேது.

எவனோ ஒரு கிரானைட் காரனுக்கு எதையோ சொல்லப்போக அது எக்குத்தப்பா ஒர்க் அவுட் ஆகி ஃபீஸு பத்தி கேட்டா ரூ500ல் ஆரம்பிச்சு பல ஆயிரம் வரை வாய்க்கு வந்ததை சொல்லுவாப்ல. நாம எதையும் கண்டுக்கறதில்லை. பயங்கர பீலா விடுவான்.இதுல நம்மையும் இழுத்துக்கறது "நாமல்லாம் நினைச்சா"ன்னு ஆரம்பிச்சு எதை எதையோ உளற வேண்டியது.

ஊரு விட்டு ஊருவந்த இளைப்பு களைப்பெல்லாம் தீர்ந்து க்ளாக் வைஸ் லைஃபுக்கு வந்துட்ட தைரியத்துல மார்க்கெட் சவுக்ல மாடியில லிஃப்ட் சைஸுல ஒரு ஆஃபீஸ் ரூம் ஒன்னு அமைய கடை விரிச்சுட்டம்.

அந்த சமயம் பார்த்து நம்ம கணிப்பு உண்மையாகி சி.எம் ஆன புரட்சி தலைவி ரெசிடென்ஸ்லருந்து ஒரு தேங்க்ஸ் கார்டு வந்தது. இந்த தகவல் தீயா பரவலின்னாலும் ஒரு மாதிரியா பரவிருச்சு. மேற்சொன்ன பார்ட்டி நம்ம ஆஃபீஸுக்கு வந்தான்.

வந்தவன் மொத நாள் ஒழுங்கு மரியாதையா ஜெ மேட்டர்ல சோசியம் பலிச்சதுக்கு வாழ்த்து சொல்லிட்டு கிளம்பிட்டான். ஆனா அடிக்கடி வர ஆரம்பிச்சவன் ஏதோ அவருதான் ஜெ ஜாதகத்தை கணிச்சு ஓரலா சொன்னாப்லயும் நாம ஏதோ படியெடுத்து அனுப்பினாப்லயும் உளறி கொட்ட ஆரம்பிச்சுட்டான்.

"கொய்யால ..மூடறா ரெண்டையும்" ங்கறதுக்கு ரெம்ப நேரம் பிடிக்காதுதான். ஆனால் அதென்னமோ ஒரு வித தயக்கம். எங்க பக்கத்துல மூ முலாஜானு சொல்வம்.அதை பார்த்து சகிச்சுக்கிட்டிருந்தன். போக போக அவன் வரவு பேச்செல்லாம் தலை மூசனையாயிருச்சு.

ஆத்தா என்னடி இது சோதனைன்னு புலம்பவே ஆரம்பிச்சுட்டன். ஆத்தா கொடுத்த தீர்ப்பு இருக்கே.யப்பா.. என்ன பிரச்சினையோ என்ன இழவோ விசாக பட்டினம் கடற்கரையில பிணமா ஒதுங்கினான் ஆசாமி.

ஏன்?ஏன்? ஏன்?னு பல ராத்திரி என்னை நானே கேள்வி கேட்டுக்கிட்டேன். உலக வாழ்க்கைங்கறது பத்து வட்டிக்கு வாங்கி செலவழிக்கிறாப்ல. ஆத்தா நேஷ்னலைஸ்ட் பேங்க் மாதிரி. குறைஞ்ச வட்டிக்கு ( என்ன கொஞ்சூண்டு பக்தி -விஸ்வாசம்) தர தான் காத்திருந்தும் -சனம் கொத்து பரோட்டா போடற பத்து வட்டிக்கே
அலை பாயறதை பார்த்து அரண்டு தன்னை அண்டினவுகளை தக்க வச்சுக்க தன் அருமை பெருமைய உணர்த்த எந்த ரேஞ்சுக்கு வேணா போயிர்ராங்கறது புரிஞ்சது.

இப்ப அனானி கமெண்ட் ஆசாமியையே எடுத்துக்கங்க. இப்பத்துக்கே ஆசனத்துலருந்து குடம் குடமா ரத்தம் கொட்டிக்கிட்டிருக்கும்.ஆனால் அந்த மன்சன் வீம்புக்காவ தன் சில்மிசத்தை தொடர்ந்துக்கிட்டே இருக்கான். இந்த கிராக்கியை எல்லாம் ஆஃப் பண்ணனும்னா விஜயகாந்த் மாதிரி ஆஃப் அடிக்கனுங்கற அவசியம் கூட இல்லை.ச்சொம்மா ஜுஜுபி.

கெட்டவனுக்கு நாம கெட்டவனாகி என்னத்த பண்ணிர முடியும்? ஆத்தா நினைச்சாள்னா வாய் வழியா கழியவும் -ஆசனம் வழியா திங்கவும் வச்சிருவா.அதையெல்லாம் நாம பண்ணனும்னா எத்தீனி ஆப்பரேஷன் பண்ணனும்.. அதெல்லாம் நடக்கிற கதையா? அதனாலதேன் ஃப்ரீயா உட்டாச்சு. நம்மால முடிஞ்ச எச்சரிக்கை எல்லாம் பண்ணியாச்சு. இனி நாம அம்பேல். தி பால் ஈஸ் இன் தி கோர்ட் ஆஃப் அம்பாள்.