Showing posts with label மரணத்தின் நிழல்கள். Show all posts
Showing posts with label மரணத்தின் நிழல்கள். Show all posts

Wednesday, July 20, 2011

ஆண் பெண் வித்யாசம் : 8 ஆம் பாவம் (5)



வாழ்க்கைங்கற நாடகத்துல ஒவ்வொரு காட்சியும் மரணம்ங்கற க்ளைமேக்ஸை நோக்கித்தேன் நகர்ந்து போகுது. எவ்ள நல்ல கதையா இருந்தாலும் அதுக்கு ஒரு க்ளைமேக்ஸ் இருக்கனும். க்ளைமேக்ஸ் இல்லாத கதை ஆர்காசம் இல்லாத உடலுறவு மாதிரி.

ஜாதகத்துல எட்டாம் பாவம் மரணத்தை காட்டுதுனு சொல்லியிருக்கேன்.மரணத்தை ரத்து பண்ண முடியாதுதேன்.

ஆனால் கண்டதையும் மரணத்தோட முடிச்சு போட்டு - அதுக விரட்ட விரட்ட ( ஏழ்மை -தனிமை இருட்டு நிராகரிப்பு) மரணத்தை நோக்கி பிடி உஷா கணக்கா ஓடறது பை.தனமில்லியா?

அட வர்ரச்ச வரட்டுமே . நாம எதுக்கு லவ் சப்ஜெக்ட் சினிமாவுல க்ளைமேக்ஸ்ல ஹீரோவை நோக்கி ஓடற ஹீரோயின் மாதிரி ஓடனும்?

இது ஏதோ இந்த ஜென்மத்துல மட்டும் இப்படினு நினைக்காதிங்க. பழக்க தோஷம் காரணமா இதையேதான் எல்லா ஜென்மத்துலயும் செய்துக்கிட்டு இருக்கம்.

ஒன்னு மரணத்தை துரத்த வேண்டியது இல்லையா மரணத்தின் மறுவடிவான பெண்ணை துரத்த வேண்டியது.பெண்ணுக்காகவோ அ பெண்ணை கவரவோ அ பெண்ணை மறக்கவோ பணத்தை/பதவியை/பெயர் புகழை /ஞானத்தை ஏதோ ஒரு இழவை துரத்த வேண்டியது . இதுதான் வாழ்க்கையா?

ஏன் மரணம் நம்மை விரட்டுது? ஏன் மரணத்தை நாம விரட்டறோம்/ மரணத்தின் மறுவடிவான பெண்ணை அவளுக்காக அ அவளின் கவனம் வர அ அவளிலிருந்து விலகி ஓட ஏதோ ஒரு Etc Etc இழவை துரத்தறோம்.

பெண்ணை அடைந்தவன் அந்த பெண்ணிலிருந்து ஓடறான். அ இன்னொரு பெண்ணை நோக்கி அடையாதவன் பெண்ணுக்காக ஓடறான். அந்த பெண்ணுக்காக எதையெதையோ தேடி ஓடறான்.ஆயுளை இழக்கிறான்.

பெண்ணே மரணத்தின் மறுவடிவம்னு சொன்னேன். ( பெண்ணுக்கு ஆண் மரணத்தின் மறுவடிவம்) .ஒரு பெண்ணுடன் தன் வாழ்வை பிணைத்துக்கொண்ட ஆண் அந்த பிணைப்பு வெற்றியடைஞ்சாலும் சரி /தோத்தாலும் சரி தன்னை இழந்துர்ரான். அதுவும் ஒரு மரணம்தானே.

நம்மை இல்லாம பண்றது மரணம்னா பெண்ணும் இதே வேலையத்தான் செய்யறா. நாம இருந்தா நமக்கு எங்கே வலிக்குது?

நாம ஈகோ நிறைஞ்சு இருக்கும்போது நம்மை நம்மாலயே சகிச்சுக்க முடியறதில்லை. ஏன்னா அது பொய். பொய்யை அதை கிரியேட் பண்ணவனால கூட சகிச்சுக்க முடியறதில்லை. ஏன்னா உள்ளூற அவன் ஆன்ம வடிவா இருக்கான்.அது ஒளிமயமானது. எந்த காரிருளும் அதும் மின்னாடி நிக்கற தாக்கத் கிடையாது.கேமராவை பார்த்த ஐட்டம் நடிகையோட ஆடைகள் மாதிரி பொய் எல்லாம் உதிர்ந்து போகுது.

மரணத்தை வெல்ல ஒரே வழி அது மரணம் இல்லேங்கறதை உணர்ந்துக்கறதுதான். கரும்பு பாகா மாறுது.பாகு வெல்லமா மாறுது .வெல்லம் சர்க்கரையா மாறுது.அதைப்போல நாம ஏதோ ஒரு ஸ்டேட்டுக்கு மாறிர்ரம்.அதான் மரணம்.

மரணத்துக்கு பின்னாடி என்ன மிஞ்சும்னு ரோசிச்சா மரணத்துக்கு மிந்தி நாம என்னவா இருந்தோம்ங்கறதை கெஸ் பண்ணிரலாம்.

நாம என்னவா இருக்கோம்னு ஸ்மெல் பண்ண முடிஞ்சா மரணம்ங்கறதே இல்லேனு புரிஞ்சுரும்.
(ஒரு குன்ஸாவாச்சும்)

மரணம்ங்கறது தொடர்ச்சியை வெட்டிருதுன்னு நாம நினைக்கிறோம். அதனாலதேன் மரணத்துக்கு பயப்படறோம். ஆனால் அதுதான் உண்மையான தொடர்ச்சியை தருது.

இந்த இயற்கை/படைப்பின் மையம் நீங்கள் கிடையாது - இந்த படைப்பின் பிரிக்க முடியாத அங்கம் நீங்கனு உணர்ந்துட்டாலே பாதி வெற்றி. அப்பத்தேன் வாழ்வின் தொடர்ச்சி மரணத்துக்கு பின்னும் தொடர்ரதை உணர முடியும்.

நீங்க எதையெல்லாம் சப்கான்ஷியஸா மரணம்னு நினைச்சு பேதியாக்கிறிங்களோ அதெல்லாம் உங்களை உங்களுக்கு உணர்விப்பதை உணரமுடிஞ்சதானு ஃப்ளாஷ் பேக்குக்கு போய் ரோசிங்க.

ஒரு நிராகரிப்பு - இருள் - ஏழ்மை - இதெல்லாம் தான் உங்களை உங்களுக்கு நெருக்கமா கொண்டுவருது. உங்களுக்குள்ள உள்ளே இருக்கிற எதுவோ இயற்கையை நோக்கி திரும்புது. இயற்கை உங்களுக்கு ஆறுதலை உண்டாக்குது.

ஒரு அங்கீகாரம் / ஒரு வெளிச்சம் / கொஞ்சம் சில்லறை உங்களை இந்த மக்களோட போலியா இணைக்குது. உங்கள நீங்க மறந்துர ஆரம்பிக்கிறிங்க.

தன்னில் தான் நிலைத்திருப்பவனை - தான் இந்த படைப்பின் பிரிக்க முடியாத அங்கம் என்பதை அறிந்தவனை - போன்சாய்க் ட்ரீ மாதிரி தான் ஒரு மினி படைப்பு என்பதை உணர்ந்து தெளிந்தவனை எட்டாம் பாவத்து தோஷங்கள் ஒன்னும் பண்றதில்லை.

இந்த தெளிவு இல்லாதவுக தேன் மரணத்துக்கும் -மரணத்தின் நிழல்களுக்கும் சப்கான்ஷியசா டர்ராகி மரணத்தை நோக்கி ஓடறாய்ங்க.

இந்த புரிதல் இல்லாதவரை நான் அடுத்த பதிவுல எட்டுல சூரியன் இருந்தா என்ன ஆகும் -அதுக்கென்ன பரிகாரம், சந்திரன் இருந்தா, செவ் இருந்தானுட்டு சுக்கிரன் வரை வரிசையா தரப்போற பலன்கள் நடக்கலாமே தவிர அந்த துர்பலன்களை தவிர்க்க நான் தரப்போற பரிகாரங்கள் மட்டும் சமச்சீர் கல்விக்கான புஸ்தவங்க மாதிரி மக்கித்தான் போயிட்டு இருக்கும்.

ஓகே எட்டாம் பாவத்துல எந்த கிரகம் நின்றால் என்ன பலன்? எந்த பாவாதிபதி நின்னா என்ன பலன்? ஒரு வேளை துர்பலனா இருந்தா என்ன பரிகாரம்ங்கறதை பார்ப்போம்.

அதுமட்டுமில்லிங்கண்ணா.. ஜாதகம் இல்லாதவுக தங்களோட வாழ்க்கை நிலைய வச்சு தங்கள் ஜாதகத்துல எந்த கிரகம் இந்த லீலைய செய்யுதுனு கெஸ் பண்ணி உரிய பரிகாரங்களை செய்துக்கலாம்.

பஸ் ஸ்டாண்டு கக்கூஸு மாதிரி இந்த பரிகார பேக்கேஜிலும் ஆண்கள் ,பெண்கள் தனித்தனி வரிசையில் மட்டும் வரனும்.

உடு ஜூட்..

Monday, July 18, 2011

ஆண் பெண் வித்யாசங்கள்: 8 ஆம் பாவம் (3)


எட்டாம் பாவம் விபத்துகளையும் காட்டும். விபத்துல ரத்த சேதம் சகஜம். ஆனால் பெண்களுக்கு மாதவாரி ரத்த சேதம் நடக்கிறதால விபத்தும் தவிர்க்கப்படுது. (அதே நேரத்துல செவ் தோஷம் லேசா இருந்தாலும் - ஐ மீன் பரிகாரமே ஆகியிருந்தாலும் - "அந்த" விஷயத்துல இஷ்டாஆஆத்துக்குலொள்ளு பண்ணி குழந்தை பிறப்புல பிரச்சினை கொடுக்கிறதோட கருப்பை வாய்ல / கருப்பையில கேன்சர் வரை கொண்டு போயிருது. அது வேற மேட்டரு)

என்ன அண்ணே ! இப்படி ஊத்தறிங்க. விபத்துல பொம்பள சாகிறதே இல்லியா? ரத்த சேதம் நடக்கிறதே இல்லியானு கேப்பிக. சொல்றேன். பெண்ணுக்கு வீடுங்கறது சிறை. சிறையில இருக்கிறச்ச அவள் அடிமை. எட்டாம் பாவ எஃபெக்டே வேலை செய்யாது. விபத்து பிரயாணத்துலதானே நடக்குது. பிரயாணத்துல கால் காசு சுதந்திரத்தையாவது அனுபவிக்கிறாளே. அதனாலதேன் விபத்துங்கற ஆப்பு.

அஸ்குபுஸ்கு அப்ப வீட்ல விபத்து நடக்கிறதில்லையானு கேப்பிக. சொல்றேன்.எட்டாமிடம் அனானி கமெண்ட் /என் பேர்ல கமெண்ட் போடற இழவாட்டம் கெட்டு குட்டி சுவராகியிருந்தா வீட்லயும் நடக்குது. ஆனா டிமஸ்டிக் ஆக்சிடெண்ட்ஸ்ல எத்தீனி பர்சண்ட் உண்மையான விபத்துன்னும் ஒரு கேள்வி வருதே.


பெண்ணை பெத்தவனுக்கு கல்யாணத்துக்கு இன்னொரு பெண் இருந்தா / மாப்பிள்ளை வீட்ல ஆராச்சும் எஸ்.பி கிட்டே ட்ரைவரா இருந்தா கம்ப்ளெயிண்டே ஆகாது.

தப்பித்தவறி கம்ப்ளெய்ன் ஆனாலும் மாப்பிள்ளை தரப்புல மாஜி கவுன்சிலர் வந்து சிபாரிசு பண்ணாலே போலீஸ்ல எஃப்.ஐ.ஆரை மாத்திர்ராய்ங்க.

(இது மொதல் பகுதியிலயே வந்திருக்கவேண்டிய / விடுபட்டுப்போன பாய்ண்ட் இது .அதான் பொறுப்பானவர்கள் போடற மறுமொழிகளுக்கிடையில சில பிக்காலிங்க போட மரு மொழியா இருந்தாலும் பரவால்லைனு மொதல்ல சொல்ட்டேன்)

கடந்த பதிவுல என்ன சொல்லிட்டிருந்தோம்?

மனித குலம் பை பர்த் சுதந்திரத்தோட பிறக்குது.போக போக அடிமைப்பட்டு போகுது. கல்யாண் இந்த பதிவு ( ஐ மீன் கடந்த அத்யாயம்) பெண்களையே ஃபோக்கஸ் பண்ணுதுனு சொல்லியிருந்தாரு. பேலன்ஸ் பண்ணிருவம்.

ஆணும் அடிமைதேன். ஆஃபீசருக்கோ -பார்ட்னருக்கோ - ரவுடிக்கோ -தாதாவுக்கோ- கடன் காரனுக்கோ -சொத்துக்கார அப்பனுக்கோ எங்கயோ ஒரு இடத்துல அடிமையாயிர்ரான்.

இயற்கை தனக்கு தந்த சுதந்திரத்தை விலையா கொடுத்து அந்த அடிமைத்தனத்தை வாங்கிக்கிட்டதும் இவன் தேன். ஆனால் அந்த அடிமைத்தனம் தனக்குள் விளைவிக்கிற் ஆற்றாமை -கோபம் - ஆங்காரம் எல்லாத்தையும் பொஞ்சாதி மேல காட்டிர்ரான்.

இவன் வெளியிடத்துல அடிமையா இருந்து தன் ஜாதகத்துல உள்ள எட்டாம் பாவ தோஷங்களுக்கு செய்துக்கிட்ட பரிகாரம்லாம் வீட்டுக்கு வந்ததும் ஃபணால் . ஆயிருது.. ஏன்னா இங்கன இவன் பாஸ் ஆகி -தன் பாஸை விட கோரமா பொஞ்சாதிய டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுர்ரானே.

பொஞ்சாதி தன் புருசன் பண்ண டார்ச்சரையெல்லாம் பசங்க மேல காட்டிர்ரா. ஃபேமிலி போலீஸ் ஸ்டேஷன் மாதிரி ஆயிருது. சி.ஐ எஸ்.ஐயை பிடிச்சு ஏறியிருப்பாரு. எஸ்.ஐ ஏ.எஸ்.ஐ ய ஏறுவாரு. ஏ.எஸ்.ஐ ஏட்டை ஏறுவாரு.ஏட்டு கான்ஸ்டபிளை -கான்ஸ்டபிள் புகார் கொடுக்க வந்த ஏழை பாழைய ஏறுவாரு.

வீடு கோவில் மாதிரி இருக்கனும் - பல்கலை கழகம் மாதிரி இருக்கனும்னு பெரியவுக சொல்றாய்ங்க. (கோவிலா இருந்தா அவா நுழைஞ்சுருவா -பல்கலைகழகமா இருந்தா ஊழல் நுழைஞ்சிரும் அது வேற சங்கதி) ஆனா ஊடு போலீஸ் ஸ்டேஷன் மாதிரி ஆயிட்டா என்ன கதி?

ஒரு இடத்துல நடக்கக்கூடிய நல்லது கெட்டதை அந்த இடத்தோட வாஸ்து மட்டுமில்லை -அங்கே வசிக்கிறவுகளோட எண்ண அலைகளும் நிர்ணயிக்குது.

பத்து வருசத்துக்கு மிந்தி வாஸ்துன்னா இன்னான்னே தெரியாது. அப்பல்லாம் ஊடு கட்னவுங்க வாஸ்து பார்த்தா கட்டினாய்ங்க.இல்லியே. ஆனால் ஓரளவுக்காச்சும் நிம்மதியாதானே வாழ்ந்தாய்ங்க. இப்பம் மட்டும் வாஸ்து ஏன் இப்படி கச்சா முச்சான்னு பாதிக்குது.?

எண்ண அலைகள் மாறிப்போச்சு. இன்னைக்குள்ள அதே பார்லிமெண்ட்ல தான் அரியலூர் ரயில் விபத்துக்காக சாஸ்திரி ராஜினாமா பண்ணாரு. இன்னைக்குள்ள மந்திரிங்களை பிரதமர் விபத்து ஸ்தலத்தை பார்வையிட சொன்னாலே சுணங்குறாய்ங்க.

என்ன ஆச்சு? எண்ண அலைகள் மாறிப்போச்சு. போலீஸ் ஸ்டேஷன்ல கைதி தூக்குப்போட்டு சாவு -லாக்கப் டெத் சம்பவங்கள் நடக்க காரணம் இந்த எண்ண அலைகள் தேன்.

அடிமைங்கறவனோட உடல் வேணம்னா அடிமைப்பட்டிருக்கலாம். ஆனால் அவனோட எண்ணங்கள் அடிமைப்பட்டு கிடக்கிறதில்லையே?

ஸ்கூல்ல படு ஸ்ட்ரிக்டா இருந்து பசங்களை ட்ராயர்லயே ஒன்னுக்கிருக்க வைக்கிற வாத்தியாருங்க பொயப்ப பாருங்க. பிள்ளையே இருக்காது. இருந்தாலும் உருப்படாது.உருப்பட்டாலும் வாத்யாரை திண்ணையில உட்கார வச்சுரும். அ நல்லவயசுல செத்துப்போயிரும். இதுக்கு ஏன் அந்த மாணவர்களோட எண்ண அலைகள் காரணமா இருக்கக்கூடாது?

இங்கன வாத்யாருங்கறதுக்கு பதில் புருசன்னு வச்சு ரோசிங்க. சர்க்கிள்ள பதிவிரதா சிரோன்மணினு பேர் வாங்கின இல்லத்தரசியோட புருசன் எல்லாம் வெளி உலகத்துல டம்மி பீசா இருப்பான்.

பொஞ்சாதிக்கு பயிட்டு தூக்கறவன்லாம் லட்சத்துல புரள்வான். ஆனால் படக்குனுஅவன் பொஞ்சாதி பேஷண்டாயிரும். இவனுக்கு இன்னொரு லட்டு கிடைக்கும்.

இதையெல்லாம் நான் சொல்ல காரணம் அடிமையாதலோ /அடிமைப்படுத்தலோ ஆன்மாவின் இயல்பில்லை.

ஆத்தா சர்வ ஸ்வதந்த்ரி.நாமெல்லாம் அந்த ஆத்தாவோட அம்சம். நாமும் சுதந்திரர்கள் தேன். அதான் நம்ம இயல்பும் கூட. ஆனால் நாம இயல்புக்கு மாறா பிஹேவ் பண்ண காரணம் மரண பயம் அ மரணத்தின் மீதான கவர்ச்சி. ஆன்மாவுக்கு மாதவிலக்கில்லை - ஸ்வப்ன ஸ்கலிதமில்லை - அடச்சீ மரணமில்லைங்கறது மொதல் பாய்ண்டா வந்திருக்கனும்.

ஆனால் நாம ஆன்மாவின் நினைவையே மறந்துர்ரம். ஈகோவை ஆன்மாவா-உசுரா நினைச்சு பிரமிச்சு அதை காப்பாத்த ஆன்மாவை மலினப்படுத்திக்கறோம். ஐ மீன் ஆன்மாவின் இயல்பான சுதந்திரத்தை இழந்துர்ரோம். ( நன்றி:ஓஷோ)

சுதந்திரத்தை அனுபவிக்கிறவனுக்குத்தேன் சுதந்திரத்தோட அருமை பெருமைல்லாம் தெரியும். சுதந்திரத்தை இழந்தவன் படிப்படியா அடிமைத்தனத்தையே ஆதர்ச வாழ்வா நம்ப ஆரம்பிச்சுர்ரான். அதுல அவனுக்கு சுகம் தெரிய ஆரம்பிச்சுருது. அதையே -அடிமைத்தனத்தையே தன்னை சேர்ந்தவங்களுக்கும் பரிசா தர ஆரம்பிச்சுர்ரான்.

சந்தோசத்துல உள்ளவன் சர்வஜகத்தையும் சந்தோசப்படுத்த நினைப்பான். அவனோட சந்தோசத்துக்கு ஒரு மசுரும் தேவையில்லை.

துக்கத்துல உள்ளவன் சகலரையும் துக்கப்படுத்தத்தான் நினைப்பான். அவனோட துக்கத்துக்கு சின்ன காரணம் போதும்.

உ.ம் கடுமையான மலச்சிக்கல் உள்ளவன் பஸ் ஸ்டாண்ட் கக்கூஸு காண்ட்ராக்ட் எடுத்தானு வைங்க. ரெட்டை கட்டணம் வாங்குவான். டப்பாவுல பெரிய ஓட்டையா போட்டுவைபபன், தண்ணியே இல்லாம பண்ணுவான். கதவுக்கு தாழில்லாம ஆக்கிருவான்.

சந்தோசத்தை தர்ரது சுதந்திரம். அது ஆன்மாவின் இயல்பு. இதைத்தேன் கிட்ண பரமாத்மா சுதர்மம்ங்கறாரு.

சுதந்திரத்தை விரும்பறவன் -தன் இயல்பு நிலைய மறக்காதவன் - ஆன்மாவில் நிலை கொண்டிருப்பவன் எதிராளியை அடிமைப்படுத்தனும்னு நினைக்கமாட்டான்.

அடிமைப்படுதலும் -அடிமைப்படுத்துதலும் இல்லாத இடத்துல வாஸ்து மசுருல்லாம் மசுரு கூட வேலை செய்யாது,அடிமைப்படுதலும் -அடிமைப்படுத்துதலும் உள்ள இடத்துல ஆதி சங்கரரே மறுபடி வந்து ஸ்ரீசக்கர ப்ரதிஷ்டை செய்தாலும் உருப்படாது.

அடிமைப்படுதலும் - அடிமைப்படுத்துதலும் செய்பவன் ஆன்மாவோட வாசனைய கூட அறியலைனு அர்த்தம். ஆன்மாவுக்கு ஆண்,பெண் வித்யாசமில்லை - சாதி ,மதமில்லை - ஆன்மா சுதந்திரத்துல தான் பரிமளிக்குது. ஆன்மா பரிமளிக்கும் போது அங்கே அனானி கமெண்டுகளுக்கோ - மண்டையில உள்ள மஷ்டுவையெல்லாம் நரகல் நடையில வெளிபப்டுத்தறதுக்கோ வாய்ப்பே கிடையாது.

ஏதோ படத்துல தமிழ் திரையிலகின் இரு துருவங்களில் ஒரு துருவமான சிவாஜி கொள்ளையடிச்சு கோவில் கட்டற ஆழ்வார் ரோல்ல நடிக்கிறாரு. புதுமுகமான சிவகுமார் பெருமாளா வர்ராரு.

சிவகுமார் -பெண்டாட்டி சகிதமா காட்டுவழியில வர சிவாஜி கொள்ளையடிக்கிறாரு. சிவகுமாரோட கால் விரல்ல ஏதோ ஆபரணம். அதை வாயால கழட்டி எடுக்கனும் .இதான் காட்சி.

சிவாஜி சிவகுமார் காலை நோக்கி குனிஞ்சப்போ ஒரு ஷாட் - நிமிர்ந்தப்போ வாய்ல அந்த ஆபரணத்தோட ஒரு ஷாட் எடுத்துட்டா மேட்டர் ஓவர்.

ஆனால் படத்துல அப்படியா வருது? இல்லையே சிவாஜி சிவகுமாரோட கால் விரல்ல இருந்து அந்த ஆபரணத்தை வாயாலயே கழட்டறாரு.

சிவாஜி தன்னோட ஆத்மாவை கொஞ்சமாச்சும் உணர்ந்திருக்கனும். அப்பத்தேன் ஈகோங்கறது தன் ஆன்மா இல்லை - உசுரு இல்லேங்கற தெளிவு அவருக்குள்ள பிறந்திருக்கும். அந்த தெளிவின் காரணமாத்தான் அதுமாதிரி ஒரு காட்சியில நடிச்சிருக்காரு.

அடிமையோட வாழறது பெரிய ரிஸ்கு .ஏண்டான்னா அடிமை என்னைக்கோ ஒரு நா புரட்சி பண்ணப்போறது நிச்சயம்.

இப்பம் டிசைட் பண்ணுங்க. அடிமைப்படப்போறிங்களா? உங்க எண்ணங்களோ உங்க எஜமானருக்கு ஆப்பாயிரும். உங்க எஜமானர் மேல உங்களுக்கு உண்மையிலயே லவ் இருந்தா - உடனே புரட்சிபண்ணுங்க. அட்லீஸ்ட் இந்த பதிவொட ப்ரிண்டை அவுட்டை படிக்க கொடுங்க. இது ஆன்மாவை நோக்கிய பயணத்துக்கு அவரை திருப்பட்டும்.

இப்பம் டிசைட் பண்ணுங்க அடிமைப்படுத்தப்போறிங்களா? தனிமைப்பட்டு போவிக. தனிமை மரணத்துக்கு ட்ரெய்லர் மாதிரி. அது உங்களை இருட்டுக்கு தள்ளும். இருட்டு மரணத்துக்கு பைலட் பிராஜக்டு.

ஆன்ம நிலையில அடிமைப்படுதலும் இல்லே -அடிமைப்படுத்தலும் இல்லே. இல்லவே இல்லை. பூர்வ கருமங்கள் எதுவும் உங்களை அண்டாது .ஒண்டாது. கிண்டாது.

(ஸ் .. அ..ப் ........பாடா.. இன்னைக்கு என்னாச்சு ? பதிவே நியூஸ் ரீல் மாதிரி ஆயிருச்சு)

Wednesday, May 5, 2010

சாவின் நிழல்கள்

" வாழ்க்கை பற்றிய ஒரு தேடலை உருவாக்கனும்.."
"இந்தியா யுகம் யுகமா செய்துக்கிட்டு வந்தது இதைதானேப்பா?"

"அந்த தேடல்ல ஈடுபட்டது  லிமிட்டட் பாப்புலேஷன்.வர்ணாசிரம த்ர்மம், சாதீயம் காரணமா கல்வி மெஜாரிட்டி வர்கத்துக்கு மறுக்கப்பட்ருச்சு. கல்விய வச்சிருந்த வர்கத்துல கூட யாரோ விட்ட குறை தொட்ட குறையா இருந்தவுக தேடல்ல இறங்கினாங்களே தவிர மெஜாரிட்டி வர்கம் மட்டும் அந்த தேடல்ல இறங்கவே இல்லை.அங்கே ஒரு கண்ணப்பன், இங்கே ஒரு நந்தனார் இருக்கலாமே தவிர மத்தவுக பிரபஞ்ச வாழ்க்கைக்கான போராட்டம் அ காம்ப்ரமைஸ்ட் லைஃப்ல திருப்தியடைஞ்சுட்டாங்க"

" நீ சொல்ற  தேடலால மனித இனத்துக்கு என்ன கிடைச்சுருங்கற?"

"கிடைக்கிறது, கிடைக்காததை பத்தி அப்புறம் சொல்றேன். தேடல் ஆரம்பிச்சுட்டா மனித நிலைல இருந்து மிருக நிலைக்கு இறங்கி வரமாட்டான். அதுவே பெரிய நன்மைதான். இந்த  தேடல் ஆரம்பிக்கனும்னா வாழ்க்கையின் ஸ்தூல பிரச்சினைகள் தீர்ந்தாகனும். இல்லேன்னா  காலணா அரையணா ஸ்தூல பிரச்சினைகளோடவே, எந்த வித தேடலும் இல்லாம, படக்குனு மிருக நிலைக்கு தாழ்ந்து வெறுமனே  வாழ்ந்து செத்துப்போயிருவான் . அவனை வாழ்வாங்கு வாழவைக்கனும் அதான் என் சதிகளோட சாரம்"

"ஸ்தூல பிரச்சினைகள்னு எதை சொல்றே? அப்போ ஸ்தூலபிரச்சினைகளையெல்லாம் தீர்த்துரனுங்கறியா..

"உயிர் பாதுகாப்பு,செக்ஸ், ஃபுட்,க்ளாதிங், ஷெல்டர்,இதையெல்லாம் பெறமனுஷனுக்கு  செல்ஃப்  ரெஸ்பெக்டுக்கு பங்கம் வராத ஒரு தொழில்,வேலை வாய்ப்பு இதெல்லாம் தான் ஸ்தூல தேவைகள்.. இது தீர்ந்தாதான் லைஃப் போர்டம்மா மாறும் ..தேடல் துவங்கும். "

"என்னப்பா இது தேடல் அது இதுன்னு ஆன்மீகமா ஆரம்பிச்சே படக்குனு சோத்து பிரச்சினைக்குவந்துட்ட.."

"சோத்து பிரச்சினைன்னா உங்களுக்கு லேசான விஷயமா படறாப்ல இருக்கு மனுஷன் என்னைக்கு பிறந்தானோ அதே கணத்துல அவனோட இறப்பும் ஆரம்பமாயிருது, இறப்பு பத்தின பயம் அவன் மைண்ட்ல வேலை செய்ய ஆரம்பிச்சுருது. மனுஷன் 40 அ 50 நாள் சாப்பிடாம இருந்தா கூட சாகமாட்டான். ஆனால் ஒரு வேளை/ஒரு நாள் பட்டினிங்கறது அவனை டர்ராக்கிருது ஏன்?  செத்துப்போயிருவமோனு பயம். சாவு பத்தின நினைவுதான்  அவனை டர்ராக்குது. தன் மொத்த சக்தியையும் சாவு பத்தின நினைவுகளை துரத்தவும், சாவோட நிழல்களோட போராடவுமே மனுஷன் செலவழிச்சுர்ரான்"

"அதென்னப்பா சாவோட நிழல்கள்?"

"ம்.. தனிமை, நிராகரிப்பு, அன் ஐடென்டிஃபைட் கண்டிஷன்,இருட்டு,ஏழ்மை கம்யூனிகேஷன் கேப், அறியாமை, தூரம், இப்படி கண்டதையும் சாவா நினைச்சு டர்ராயிர்ரான். அதனால தான் இதுகளை சாவின் நிழல்கள்னு சொன்னேன்."

'சரி .. மனுஷனுடைய மனசுல இருந்துக்கிட்டு அவனை ஆட்டிவைக்கிற  சாவு பத்தின ஞாபகங்களை எப்படி துரத்தறது..?"

"உனக்கு சாவே இல்லைடான்னு ருஜு படுத்தனும். இல்லேன்னா ஏற்கெனவே நீ செத்துக்கிட்டுத்தான் இருக்கே தலைவான்னு ஞா படுத்தனும்"

" நீ தான் சொன்னியே அவன் தன் மொத்த சக்தியையும்  சாவின் நிழல்களை ஜெயிக்கிறதுலயே ஸ்பெண்ட் பண்றான்னு..அவன் எங்கே  சாவுகிட்டே மோதறது?"

"சரியான கேள்வி.. பேய் ,பிசாசை பார்த்து பயப்படறவன் கிட்டே போய் சைன்ஸ் பேசி  அதெல்லாம் ஒன்னுமில்லேடான்னா அவன்  நம்ப மாட்டான். அப்படியா.. இதுக்கு ஆஞ்சனேயர் டாலர் ஒன்னு போட்டுக்க அதெல்லாம் ஒன்னும் பண்ணாதுன்னுதான் வழிக்கு கொண்டுவரனும்.."

"அப்போ மனிதன் மேற்கொள்ற சாவின்  நிழல்களுடனான யுத்தத்துல அவனுக்கு உதவனுங்கறே"

"ய்யாஆஆஆஆ.. அதுக்குத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000. எல்லாருக்கும் கல்வி மாதிரி எல்லாருக்கும் செல்வம். தகுதி படைத்தோருக்கெல்லாம் கலவி"

"சரிப்பா ..அவன் செய்ற நிழல் யுத்தத்துல அவனுக்கு உதவி பண்ணனுங்கறே.. வஸ்துவோட மோதினா ஜெயிக்கலாம். நிழலோட எப்படி மோதி எப்படி ஜெயிக்கறது?"

"அதை நாம அவனே அனுபவ பூர்வமா உணர்ர மாதிரி செய்யனும். அதுக்கு அவனோட ஸ்தூல தேவைகள் நிறைவேறியாகனும்"