Wednesday, August 31, 2011

இளமையில் வரும் சுக்கிரதசை+கில்மா


பால்யத்தில் வரும் சுக்கிர தசை ஏன் பலன் தராது:
இந்த காலகடத்தில் பெற்றோர்,குடும்பத்தினர் செலவுகள் செய்து வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு வாழ்க்கைய அனுபவிக்க துடிப்பார். டூர்,பிக்னிக்,பார்ட்டிகள்,சுப காரியங்கள் தூள் பரத்தும். இவையாவும் ஜாதகரின் மென்டாலிட்டியையே மாற்றி படிப்பில் பின் தங்க வைத்து,பிஞ்சில் பழுக்க செய்துவிடும்

இதற்கு தீர்வுகள்:
1.ஜாதகர் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி இருந்தாலும் கண்டு கொள்ளாது (பெரும் பிரச்சினைகளில் சிக்காது) விட்டு விட்டு 30 வயதுக்கு பிறகு இவர் ஜாதகத்துக்கு ஏற்ற பெண்ணை திருமணம் செய்தல்.
2. இவருக்கு 18 வயது நிறைவடைந்ததும் இவர் ஜாதகத்துக்கு ஏற்ற பெண்ணை தேடி மணமுடித்து வைத்துவிடுவது. மணவாழ்வின் ஆரம்பத்தில் ஏற்படும் சிக்கல்களை பெரியவர்கள் பொறுப்பாய் கண்காணித்து தீர்த்துவைப்பது .

30 வயதுக்கு முன் ஏன் பலன் தராது:
முப்பது வயதுக்கு மிந்தி ஆணுக்கு பெண் என்பவள் ஒரு அதிசயம். தன்னை கண்டு அதிசயிப்பவனை பெண் அலட்சியம் செய்வாள். தப்பித்தவறி அவளும் அவனை விரும்பினால் அவர்களுக்கிடையில் இளமை வேகத்தால் என்ன நிகழும்? கில்மாதான்.

30 வ்யதுக்கு பின் எப்படி பலன் தரும்:
இவனுக்கு பெண் குறித்த பிரமைகள் விலகியிருக்கும். " பொயப்பை பார்க்கனும்டா சாமி"ங்கற தெளிவு வந்திருக்கும். ஆனாலும் இவனோட சுக்ர சை பெண்களை இவனை நோக்கி இழுக்கும். இவன் மனமோ விலகியிருக்கும். அப்பம் அந்த பெண் இவனை வேறு வழிகளில் சரிக்கட்ட இவனுக்கு லாபங்களை அள்ளித்தருவாள். நெஜமாலுமே சுக்ரதசை அடிக்கும். ( ஐ மீன் தோட்டம்,துறவு,வீடு ,வாசல் ,ஷேர்ஸ் இப்படி அவள் மூலம் லாபமடைவான்)

ஹி ஹி.. இந்த பதிவு ஜோதிட பால பாடத்தோட 12 ஆவது அத்யாயந்தான். கொஞ்சம் கேரா இருக்கட்டுமேன்னு இந்த பாடத்தை மேல போட்டேன். இப்பம் பாடம் தொடருது.
அஷ்டம சனிக்கு பரிகாரம்:
ஹனுமான் டாலர் அணிவிக்கவும். ( டி.வியி வரும் விளம்பர டாலர் அல்ல. கடைகளில் விற்கும் சாதாரண டாலர்) நிரந்தரமாக ராம நாமம் ஜெபிக்கவும். ராம நாமம் ஒலிக்குமிடத்தில் அனுமனுடைய சான்னித்தியம் ஏற்படும்.குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து ரத்ததானம் செய்யவும்.

5க்கு அதிபதி விரயம்:
இதனால் ஜாதகர் அதிர்ஷ்டத்தை அதிகம் நம்புவார்.இல்லாத பொல்லாத சகுன பைத்தியம்,சென்டிமென்ட்ஸ் இருக்கும். மன நிலையில் திடீர் மாற்றங்கள் இருக்கும்.சொந்த புத்தி இருக்காது.எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பார்.
உங்க ஜாதகத்துல களத்ர புத்ர தோஷங்கள் இருந்தால்:
தங்கள் முன்னோர் வகையில் ஒருவருக்கு இரண்டு திருமணங்கள் ந்டைபெறுவது,திருமணத்துக்கு முன்பே இறப்பது, அகால மரணங்கள்,துர்மரணங்கள், வாரிசின்றி அல்லது ஆண் வாரிசின்றி இறப்பது, போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதுவேயல்லாது வாரிசில்லாத சொத்து ஏதோ முன்னோர் காலத்தில் குடும்பத்துக்கு வந்துள்ளது என்று பொருள்.

முக்கிய விதி:
ஜோதிஷத்தில் மரணம், பிரிவு, தீராத வறுமை எல்லாம் சமமே.


கோசாரத்தில் ஆறுல சனி ( தற்சமயம் ரிஷபராசிக்கு இந்த பலன் பொருந்தும்-சனி தரும் முன் கூட்டிய பலனால்)
இரண்டரை வருடங்களுக்கு ஜாதகர் வெற்றிவீரராக வலம் வர வாய்ப்புள்ளது. ஆனால் சமீப காலமாய் ஜாதகர் மனதில் எதிராளிகளை பற்றிய ஒரு அலட்சிய பாவம்/தான் சொன்னதே சரி என்ற எண்ணம் ஏற்பட்டு வருகிறது. இது ஓவராகாமல் பார்த்துக்கொள்ளவும்.
மகர லக்னம்/கும்ப லக்னத்துக்கு லக்னாதிபதி சனி எட்டில்
இறந்தவர்கள் கனவில் வருதல், அ அவர்கள் குறித்த நினைவுகளோ ஓரளவு மைண்ட் டிஸ்டர்பன்ஸ் தரலாம். சதா ஒரு வித களைப்பு,ஆயாசம், தனிமை உணர்வு,தோற்றுப்போனது போன்ற ஃபீலிங் இருக்கலாம். நரம்பு,ஆசனம் தொடர்பான தொல்லைகள் வரலாம். நெகட்டிவ் தாட்ஸ், பெரிய,பெரிய ஆசைகள் அதே நேரம் அவற்றை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிகளை தொடர முடியாத மானசிக பலவீனம். நெருங்கிய உறவினர் மரணத்தால் லாபம் ஏற்படும். ( நஷ்ட ஈடு,எல்.ஐ.சி பணம் வரலாம்) உயில் மூலம் ஒரு சொத்து கிடைக்கலாம்.
தங்களுக்கு கேடு தரும் துறைகள்;
யூனிஃபார்ம் அணியும் தொழில், இரும்பு, ஆயில், சுரங்கம், குவாரி, செகண்ட் ஹேண்ட் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள்,விவசாயத்தொழில், கருப்பு நிற பொருட்கள் ,வில்லங்க சொத்து, ஜப்தியான சொத்து, கஷ்டத்தில் விற்பவன் சொத்து, மேற்கு திசை, எஸ்.சி.பிரிவினர், 8.17.26 தேதிகளும்,சனிக்கிழைமை.
பரிகாரம்:
பிரதி சனிக்கிழமை காகத்துக்கு சோறு வைத்து வரவும். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை தரவும். ( சனி தசா புக்தி காலங்களில் கட்டாயம் செய்யவும்)

கடேசி வரை படிச்ச உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி நம்ம சைட்/ப்ளாக்ல எல்லாம் வந்து சாக்கடை கமெண்டுகள் போட்டுக்கிட்டிருந்த சிவயசிவ புகழ் ஜானகிராமனின்  நீச  செயலுக்கு காரணங்களை காட்டும் அவரது   கண்ணீர் கடிதங்களை இங்க அழுத்தி படிக்கலாம் ( நமக்கு எழுதினதுதேன்)