Monday, August 1, 2011

ரஜினி வாயில் "நாதாரி" என்ற வார்த்தை


ஆமாங்ணா ரஜினி ஒரு படத்துல நாதாரிங்கற வார்த்தைய பஞ்ச்சாவே உபயோகிச்சிருக்காரு. என்ன படம் என்ன படம்னு கேப்பிக. (ட்விட்டர்ல என்னை ஃபாலோ பண்ற பார்ட்டிகளுக்கு பதில் தெரிஞ்சிருக்கலாம்) சொல்றேன்.

அதுக்கு மிந்தி நாதாரிங்கறதுக்கு என்ன அருத்தம்? ஆருனா சொல்லுங்கப்பு. ப்டையப்பாவுல என்ன பஞ்ச்? "என் வழி தனி வழி" இதை தெலுங்குல டப் பண்ணப்ப " நா தாரி ரஹதாரி"ன்னு வச்சிருந்தாய்ங்க. நா = என்னோட தாரி = வழி .

ரஹதாரின்னா = ராஜ பாட்டை /ஹைவே இப்படி அருத்தம்.

நம்ம ஜோலிக்கு வந்தா கோலி காலினு ஜா.ராவுக்கு சொல்லத்தேன் இந்த பதிவு. இது நாலு பேரை போய் சேரனும்ல அதுக்குத்தேன் வில்லங்க தலைப்பு+ லீடு. பதிவுக்கு போயிரலாமா?

நான் விரும்பி பார்க்கும் ஒரே சேனல் ஆதித்யா.எப்படியும் தாத்தா அழவைக்கிறாரு. நாமளாச்சும் சனத்தை கொஞ்சமா சிரிக்க வைப்போம்னு வச்சாய்ங்க போல. வாழ்க. அதுல (குழந்தைகள் கூட விரும்பி பார்க்கிறதை கவனிச்சிருக்கேன்) ஆம்பளை சோடா வேணமா பொம்பள சோடா வேணமா - பல்பு ஃப்யூஸ் ஆயிருச்சு - கோழி மிதிச்சு குஞ்சு சாகிறது மாதிரி காட்சியெல்லாம் கச்சா முச்சான்னு வருது.

குழந்தைங்களும் பார்க்கிற சானலே கோலி ஆடும்போது நிர்வாண உண்மைகள்னு பேரை வ்ச்சிருக்கிற ப்ளாக்ல கோலி மேட்டர் வரலாம் தான்.

நம்ம ஜோலிக்கு வந்த பிக்காலிகளுக்கு கோலி எப்படி காலியாச்சுங்கற கேள்விக்கு பதிலா இந்த பதிவு. ஆண் பெண் வித்யாசம் தொடர் ஞா இருக்குங்ணா. ஆன்லைன் கன்சல்ட்டன்சில 30 நாளுக்கு மேல வயசான ஜாதகம்லாம் பெண்டிங் இருக்கிறதால - அடுத்து எழுத வேண்டிய 10 ஆம் பாவம் சிக்கலான சப்ஜெக்டுங்கறதால இந்த பைபாஸ்.

நம்ம ராசா வேற இந்த மேட்டரை எழுதினா நல்லாருக்குமேன்னு கேட்டிருந்தாரு. அதான் இப்படி டைவர்ட் ஆயிட்டன்.

மார்க்கெட் சவுக்ல ஆஃபீஸ் ஓப்பன் பண்ணின புதுசு. எவனோ குடிகார நாயி செத்தான். அதுக்கு எவ்னோ ஒரு கு.நா போதையில நம்ம ஆஃபீஸ் பக்கம் வந்து " இன்னா.. சாமீ.. க.....டையெல்லாம் திறக்க ப்படாது.ஒடனே .மூடு"ன்னான் அம்புட்டுதேன். வேற ஒன்னும் பண்ணலை.

போலி பேர்ல வந்து கமெண்ட் போடலை. நம்ம பேர்ல போலி ஐடி கிரியேட் பண்ணலை. வேற ஒன்னும்.. ஒன்னும் பண்ணலை. ஜஸ்ட் போதையில என்ன பேசறோம் ஆருகிட்டே பேசறோம்ங்கற சொரணையில்லாம வாயு வெளியேறின கணக்கா வந்த பேச்சு இது.

அது இன்னா வருசம்? 1998 . இன்னி வரைக்கும் பாவம் தலை தூக்கலை. அண்ணன் தம்பி வெட்டி மடிஞ்சானுக. நாமதேன் பஞ்சாயத்து. அம்மா ஒரு தாட்டி கோச்சிக்கினு பூட்சி. நாமதேன் ப்ரஸ்னம். அண்ணன் காரன் கவுரதையா ஆட்டோ ஓட்டறான். இவன் கண்னெல்லாம் பஞ்சடைச்சுப்போய் -தாடி மீசையோட - சாயம் போன லுங்கி - ஹவாய் செருப்போட மாசம் ஒரு தாட்டி கிராஸ் ஆகிறான். அவ்ளதேன். நானும் எத்தனையோ தாட்டி ஆத்தா கிட்டே அப்பீல் பண்ணி பார்த்தேன். ஒன்னம் பேரலை.

இதுவாச்சும் பரவால்லை. இன்னொரு கேஸை சொன்னா நம்ம ஜா.ரா நொந்து நூடுல்ஸாயிருவாரு. ஒரு ஆசாமி. இவனோட குணச்சித்திரத்தை விவரிக்க ஒரே வரி போதும். எங்க ஏரியா வடிவேலுன்னு வச்சுக்கங்களேன்,

பெரிய டான் மாதிரி பயங்கர பந்தா பண்ணுவான். எவனாச்சும் வேர்க்குதே வேர்வையில சட்டைகாலர் நனையுதேன்னு கைய கழுத்துக்கு பின் புறமா விட்டா போதும் நம்மாளு ஒன் பாத்ரூம்தேன். ஒரு நாள் வேற ஒரு நண்பரோட வண்டிய பிச்சை எடுத்து எங்கயோ போகவேண்டி வந்தது ( நாம இல்லை.அந்த நாதாரி - அந்த வேலையில நமக்குதேன் கீ ரோல் )

அந்த வண்டிக்காரன் வீடு ஒரு காம்ப்ளெக்ஸ்ல இருக்கு. தலைவாசல்ல பெரிய கேட்டு. நம்மாளு கேட்டை திறந்துக்கிட்டு போய் வண்டிய தள்ளி ஸ்டார்ட் பண்ணிட்டான். கேட் சாத்தியிருக்கு. நம்ம பக்கம் பார்த்தான் . அந்த பார்வைக்கு அர்த்தம் "கேட்டை திற"ங்கறது.

நமக்கு தான் இந்த போலி கமெண்டு மாதிரியே போலி கவுரதையும் பிடிக்காதே. ஒழிஞ்சு போனுட்டு கேட்டை திறந்துவிட்டேன். அம்புட்டுதேன்.

என்னாச்சுங்கறிங்க? நாம போன வேலை பத்து நிமிச வேலை . கழண்டுகிட்டோம். பார்ட்டி ஆரோ பார்ட்டி தராய்ங்க - ஓசில குடிச்சு கூத்தடிக்கலாம்னு இன்னொரு வில்லங்க பேர்வழியை சோடி போட்டுக்கிட்டு போயிருக்கான்.

திரும்பி வர்ர வழியில ஆக்சிடெண்ட். கூடப்போனவனுக்கு தாடை நகர்ந்து போச்சு. சவுக்குல என்னடா பேச்சாயிருச்சுன்னா கூட போன வில்லங்க பேர் வழி ஊரெல்லாம் கடன். நம்மாளா சரியான ஆள் காட்டி. இவன் எங்கயோ ஆள் காட்டிட்டான்யா.ப்ளான் போட்டு கூட்டுப்போய் மாட்டிவிட்டுட்டானு அகுடாயிருச்சு. அவன் பொயப்பை பார்க்கனுமே. நா.........றிருச்சு. ஃபைனான்ஸ் கொடுத்துக்கிட்டிருந்த பார்ட்டி ஃபைனான்ஸ் வாங்க வேண்டிய நிலைக்கு வந்துட்டான். இதுல டீஃபால்ட்டர் வேற.

ஆடி அமாவாசை ஸ்பெசலா ஒரு சில கவிதைகளை பதிவா போட்டிருந்தோம். ஒரு பார்ட்டி அம்மன் பக்தர்னு எஸ்டாப்ளிஷ் ஆன கிராக்கி. சரி இவ்ளோ பணம் விரயமாக்கறானே. பார்ஷியலா ஸ்பான்ஸர் பண்ணா இன்னம் ரெண்டு பார்ட்டிகளை பிக் அப் பண்ணி அம்மன் கவிதைகளை மலிவு பதிப்பா போட்டு சனத்துக்கு இலவசமா வினியோகிப்போம்னு ஒரு போஸ்ட் கார்டை தட்டிவிட்டேன். லோக்கல் பார்ட்டிதேன்.

பார்ட்டி கண்டுக்கிடலை. போடாங்கொய்யால ஒனக்கு கொடுத்துவைக்கலைன்னு விட்டுட்டன். ஆனால் காலப்போக்குல என்னாச்சுடான்னா சாவற வரை நாம இஷ்யூ போட்டப்ப எல்லாம் ரூ.500 மொழி எழுத வேண்டி வந்துருச்சு.இப்பம் அந்தாளு இல்லை.ஆனாலும் மகன் எழுதிக்கிட்டுதான் இருக்காப்ல.

நாம இன்டர் காஸ்ட் பண்ணிக்கிட்டு வெளிய வந்துட்டம். பெரிய அண்ணன், தம்பி எல்லாம் வெளி ஊரு. சின்ன அண்ணன் தான் வீட்ல .அவன் பொஞ்சாதி இம்சைக்கு அப்பா ஒரு ஓட்டல்ல சாப்பிடறதை வழக்கமா வச்சிருந்தாரு.

அந்த முதலாளிக்கு பெரியபெரிய பின்னணில்லாம் உண்டு. ஆனால் நமக்கு அதெல்லாம் கணக்கில்லை. நாம புள்ளையா இருந்தும் நம்ம அப்பனுகு இவன் சோறு போட்டானேங்கற ஃபீலிங் /கில்ட்டி நமக்கு. அந்த பக்கம் போறச்சல்லாம் இது ஞா வந்துரும்.

என்னாச்சுங்கறிங்க? அந்தாளுக்கு திடீர்னு பாடி பீடி மாதிரி ஆயிருச்சு. அந்தாளுக்குள்ள பெரிய பின்னணியில நாமளும் ஒரு அங்கம். அதனால நம்மை கேர் டேக்கரா போட்டு ஒரு நர்சிங் ஹோம்ல அட்மிட் பண்ணிட்டாய்ங்க. அங்கன நாமதான் பார்ட்டிக்கு சோறாக்கி போட்டோம்.

நானே நினைச்சுக்கறது " ஆத்தா.. இது இன்னா நியாயம்? ஆக்சுவலா அந்தாளு நல்லதை தான் செய்தான். அப்பனுக்கு சோறு போடவேண்டியது மகனா என் கடமை.அதை செய்யமுடியாத நிலைமையில காசு வாங்கிக்கிட்டு தான் போட்டான்னாலும் சோறு போட்டான். எனக்கு லேசா கில்ட்டி. இதுக்குப்போயி அவன் பாடியை ஏன் பீடியாக்கனும்.அவன் ஏன் அட்மிட் ஆகனும்.அவனுக்கு நானே ஏன் கேர் டேக்கரா போகனும். சோறாக்கி போடனும்னு ஆத்தாவை பல தாட்டி கேட்டிருக்கேன். பதில்தான் இல்லை.

இப்படியாகொத்த இன்சிடென்டுங்க நூத்துக்கணக்குல இருக்கு. 1986 ல தேன் ராம நாம ஜெபம் ஆரம்பிச்சோம். 2000 டிசம்பர் 23க்கு அப்பாறம்தேன் ஹ்ரீங்கார பீஜ ஜபம் ஆரம்பிச்சோம். ஆனால் விவரம் தெரியறதுக்கு மிந்தியே.. ரெம்ப சின்ன வயசுலருந்தே நம்மை ஆருனா சீண்டினா - தங்களோட
கண்ட்ரோல்ல கொண்டு வரனும்னு நினைச்சாலே பல்புதேன்.

இதுக்கு ஜோதிட ரீதியா என்ன காரணம்னு அப்பாறம் சொல்றேன். நான் நினைக்கிறது என்னன்னா நம்ம மைண்ட் க்றிஸ்டல் க்ளியரா இருக்கு. நேத்து இன்னைக்குல்ல அம்புலி மாமா,ரத்னபிரபா படிக்கிற காலத்துலருந்தே நம்ம கான்செப்ட் ஒன்னுதேன். கொய்யால .. சரித்திரத்துல நின்னுரனும். அதுக்கு எதுனா செய்துரனும்.

நாளைக்கு பரீட்சைன்னா இன்னைக்கு நோட்ஸ் இரவல் கேட்டாலும் தந்துருவன். இப்படி ஒரு எண்ணம் இருந்ததால இப்படி ஒரு பவர் ஏற்பட்டுதாங்கற சந்தேகமும் நமக்குண்டு. காமம் தலைக்கேறி இருந்த காலத்துல அட .. நாலணா தேவடியாளா இருந்தாலும் நம்ம மொத கேள்வி "சாப்டியா? ஹோட்டல் போலாமா வரவச்சுரலாமா"

ஒரு பன்னாடைன்னா பல்பு வாங்கி வாங்கி நொந்து நோக்காடா போயி - எத்தனை நாளு மனசுல வச்சு குமைஞ்சுதோ - வந்து கேட்டுருச்சு - நீ என்னமோ பண்றே - இந்த கேள்விய கேட்க தில் வர்ரதுக்கு ஒரு ஃபுல் அடிக்க வேண்டி வந்துருச்சாம்.

இந்த மாதிரி ஆயிரக்கணக்கான அனுபவங்கள். இதை வச்சுத்தேன் ஆடி அமாவாசை ஸ்பெசல்ல ஆத்தாளுக்கு

" உன் தாள் பிடித்தவர்களையெல்லாம் தள்ளி வைத்து
உனக்கெதிராய் வாள் பிடித்த என்னை அள்ளி அணைத்த கையை காட்டு"ன்னுட்டு கவிதை எழுதினோம்.