Wednesday, July 13, 2011

ஆண் பெண் அந்தரங்கம்


அண்ணா வணக்கங்ணா !

ஆண் பெண் வித்யாசங்கள் தொடர் எழுதிக்கிட்டிருக்கம். அதுல ஏழாவது பாவத்துல 3 ஆவது தொடர்ச்சி கூட ஆயிருச்சு. இன்னைக்கு நாலுக்கு போகனும். ஞா இருக்குங்ணா. . இந்த பதிவை 4ஆவது தொடர்ச்சியாவும் வச்சுக்கலாம்ணா தனிப்பதிவாவும் வச்சுக்கலாம்ணா. அந்த மயித்துக்கு ஏண்டா கிழவா!.. இந்த வில்லங்கமான தலைப்புன்னு கேப்பிக சொல்றேன். ( இந்த மேட்டரு நடுவுல ஒளிஞ்சிருக்குதுங்னா)

அந்தரங்கம் - வில்லங்கம் அட ரெண்டு வார்த்தையும் சேர்ந்து ஒலிக்கும் போது லக்னமும் 6 ஆம் பாவாதிபதியும் ஒன்னு சேர்ந்தாப்ல ஒரு ஃபீலிங் வருது.

லக்னம்னா நீங்க -உங்க பாடி -உங்க மைண்டை காட்டற இடம்.. 6 ஆம் பாவம் சத்ரு ரோக ருண உபாதைகளை காட்டற இடம். உங்களுக்குள்ள (ஐ மீன் பாடி அண்ட் மைண்ட்ல) எத்த்னையோ அந்தரங்கமான விவகாரங்கள் நடக்கு இதயத்துடிப்புலருந்து சிறு நீர் சேகரிப்பு வரை. உறுப்பு புடைப்புலருந்து அபான வாயு புறப்பாடு வரை. அதனால அந்தரங்கம்னா அது லக்ன பாவம்தேன் . ( அந்தரங்கம்னௌ சொல்லனும்னா நெக்ஸ்ட் ப்ரிஃப்ரன்ஸ் 5 ஆம் பாவம்)

லக்னமே முரண்பாடுகளின் மொத்த உருவம். நல்லவனுக்குள்ள கலிகுலா - கொக்கோக -டெக்காமெரான்-அஜால் குஜால் -தக் ஜம்னு எத்தனையோ கசமுசாக்கள். . சதா சுடிதார் பின்னாடி அலையறவனோட மனசுக்குள்ள தாய் மடி -அது கொடுத்த ஜெட் கேட்டகிரி பாதுகாப்பு குறித்த நினைவுகள்.

இந்த நிலையில லக்னாதிபதியோட 6 க்கு அதிபதி வேற லிங்க் அப் ஆனா நிலைமை எப்படி இருக்குனு ரோசிங்க.

சத்ரு :
தன் சத்ரு ஆருன்னு ஆருனா தெரிஞ்சிக்கிட்டா அதுவே பாதி வெற்றி. ஆனால் ஆப்பு வாய் வரை வந்த பிறவுதேன் "யார் யாரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு"ன்னு சோலோவா பாடறோம். பலர் சத்ராதிகளோடயே பேசி சிரிக்கிறோம். பகையை நெஞ்சுக்குள்ளாறவே வச்சுக்கிடறோம்.

ரோகம்:
எல்லா நோயும் ரஸ்னா பவுடர் மாதிரி நமக்குள்ளவே தூவப்பட்டிருக்கு. இதுவும் ரகசியம்தேன். இந்த நோய்களை அந்தரங்கமா நாம ஏத்துக்கிட்டாதேன் அட்டாக் பண்ணுதுங்கோ.

ருணம்:
சனம் பத்துவட்டிக்கு கடன் வாங்க பல காரணம் இருந்தாலும் கொடுக்கிறவன் ரகசியம் காப்பான்ங்கற நம்பிக்கையும் ஒரு காரணம். மேலும் கடன் பகிரங்கமா வளர்ரதில்லை.அந்தரங்கமாதான் வளருது.

ஏற்கெனவே அந்தரங்கத்தை காட்டும் லக்னாதிபதி - அந்தரங்கமான சத்ரு ரோக ருணாதி விசயங்களை காட்டுற ரோகாதிபதியோட சேர்ரது ரெம்ப டேஞ்சர்.

கொய்யால ஸ்தூலமா இவன் கடன் காரனானாலோ - நோயாளியானாலோ - லிட்டிகன்டா மாறினாலோ கூட பிரச்சினையில்லை .

இது போன்ற அமைப்புள்ள ஜாதகர் தனக்கு தானே எதிரியாயிரவும் வாய்ப்பிருக்கு. தனக்கு தானே நண்பனா இல்லாதவன் காதலிக்கோ -பொஞ்சாதிக்கோ எங்கன இருந்து நண்பனா இருக்கிறது?

வில்லங்க தலைப்பு காரணம்:

ஒரு காலத்துல இன்றைய இன்ட்லி தமிலிஷ்ங்கற பேர்ல இருந்தப்ப நம்ம பதிவுகள் கச்சா முச்சானு பிரபலம் ஆகும். ஒரு வேளை "புரிந்துணர்வு"பார்ட்டிகள் மொதல்ல இவனுக்கு போடுவம்.இவன் நமக்கு போடுவான்னு நினைச்சாய்ங்களோ என்னமோ? அந்த காலத்துல ஐ மீன் 1984 &1985 எசகு பிசகான நேரத்துல குட்டீஸ் பொய்யான ஸ்டேட்மெண்ட் விட்டு நாம ஓ போடனும்னு எதிர்பார்த்தா உடனே படக்குனு .. ற கேஸு நாம. நானே பெரிய பொய்யன். நிர்வாண உண்மைகள்னு வலைப்பூவுக்கு பேரை வச்சுக்கிட்டு காபரே தனமான மேட்டர்தான் எழுதிக்கிட்டிருக்கேன்.

இதுல பொய்யா பிரபலமாகிறதுல்லாம் நமக்கு வேலைக்காகாதுண்ணே.மூணு மாசத்துக்கு முந்தி தமிழ்மணத்துல ரீ என்ட்ரி கிடைச்சப்ப நம்ம ரேங்க் 1098 இன்னைக்கு ? வளர்ச்சிங்கறது தானா வரனும். பேட் கட்டி, விசேஷமான ஐட்டங்களை வச்சு ஆப்பரேட் பண்றதால வர்ரதெல்லாம் பர்ப்பஸை சர்வ் பண்ணுமா? ஊஹூம்.

அதனால நாம பொய் ஓட்டு போடறதில்லை. நமக்கும் ஆரும் பொய்யா ஓட்டு போடறதில்லை ( நெஜமாலுமே உ.வ பட்டு போடற பார்ட்டிகளுக்கு நமீதாவுடன் ப்ரேக் ஃபாஸ்ட் பிராப்திரஸ்து) .விட்டுது சனி. அதனால இப்பல்லாம் தமிழ்வெளியில டாப் 20ல வந்தாலே கதிமோட்சம் கிடைச்சாப்ல ஆயிருச்சு.

தமிழ்வெளியில டாப் 20 ல நம்ம பதிவு வரணும்னா இப்படி ஒரு தலைப்பு கியாரண்டியா வேணம். அந்தரங்கம்னா என்ன? ப்யூர்லி பர்சனல். ஜன்ய பாகங்கள் தான் ப்யூர்லி பர்சனலா/ நம்ம மனசுல எத்தீனி ம்ஷ்டு ஒளிஞ்சிருக்கு தெரியுமா? அந்தரங்கம்னா நாம மைண்டை தான் நினைக்கனும்.. ஆனால் நம்ம எண்ணம் நாலு கால் பாய்ச்சல்ல ரெண்டு கால் நடுவுல பூருது பாருங்க.

காரணம் என்னன்னா இயல்பான சில உணர்வுகள் அனியல்பா, அனியற்கையா அமுக்கி வைக்கப்பட்டிருக்கு. அதும் எப்டிங்கறிங்களா? ஸ்னாக்ஸ் எதுனா தின்னுக்கிட்டே இந்த பக்கத்தை படிக்கிற பார்ட்டியா இருந்தா இந்த பாராவை ஸ்க்ரால் பண்ணிருங்க

ஒரு காலத்துல ( கொய்யா இந்த ஒ.கா வார்த்தை நாலஞ்சு தடவை வந்துருச்சு - ஒனக்கு வயசாயிருச்சுடோ) கல்யாண மண்டபம்னா ஒரு பெரிய கூடம். மத்தியில நாலு கம்பம். டாப்ல ஓப்பன் ஏர். அங்கனதான் வச்சு தாலி கட்டுவாய்ங்க.

தாலி கட்டற சமயம் மும்பை மாதிரி எதுனா வெடிச்சு வச்சுதுன்னா ஓடிவரக்கூட முடியாது. சனம் அப்படி வெல்லத்துல ஈ மாதிரி மொய்ச்சிருக்கும் (புதுமண தம்பதியை) அந்த நேரம் பார்த்து இடுப்புல இருக்கிற புள்ளை கக்கா வருதுன்னா தாய்குலம் ஒடனே அதை ஒரு கைக்குட்டையில சேகரிச்சு முடிஞ்சு வச்சுப்பாய்ங்க. தாலி கட்டி முடிஞ்சு ட்ராஃபிக் க்ளியரான பிற்பாடு டிஸ்போஸ் பண்ணுவாய்ங்க.

அந்த மாதிரி தேன் சமூக கட்டுப்பாடு காரணமா இயல்பான - நம்ம செக்ஸ் உணர்வுகளை முடிஞ்சு வச்சிருக்கம். ஒரு கட்டத்துக்கப்பாறம் பேட் ஸ்மெல் கூட வர்ரதில்லிங்ணா. நம்ம கண், கை,கால் எல்லாமே ஒரு நாலு பேரால (சமூகம்) கட்டுப்படுத்தப்பட்டிருக்கு. (ஈவ் டீசிங்ல போட்டுக்கினு பூர்ராய்ங்களாம்) ஆனா நம்ம எண்ணத்தை எவனாலயும் பார்க்க முடியாது. அது தன் இயல்பான நிலையிலயே இருக்கு. ரெட்டை அர்த்த வசனங்களுக்கு இந்த ரவுசு நிறைஞ்ச மவுசு காலத்துல கூட மவுசு குறையாம இருக்க காரணம் இதுதேன்.

கேவலம் வெண்டைக்காயை முறிச்சு பார்த்து வாங்கற மாமிகள் கூட தங்கள் மகளுக்கு முப்பது வயசுக்கு மேல உள்ள மாப்பிள்ளையை ச்சூஸ் பண்றாய்ங்க.. இது என்ன நியாயம்னே தெரியலை.சரி முத்தலோ தொத்தலோ ஏதோ ஒரு இழவுனு கண்ணாலம் கட்டிவச்சா மண்ணெண்ணெய் ஊத்தி எரிச்சுர்ராய்ங்க.

நான் இந்த பலான உவமைகளை விட காரணமே (என்ன ராசா ஏற்கெனவே உங்க பேரை ரெஃபர் பண்ணி பதிவுல சொல்ட்டனா? ) மூளையில செக்ஸ் மையமும் - அறிவு மையமும் பக்கம் பக்கமா இருக்குதாம். இதுல ஏற்படற அதிர்வு அதை பாதிக்கும்.. அதுல ஏற்படற அதிர்வு இதை பாதிக்கும்.

லக்னம் -ஏழு இந்த ரெண்டு இடமும் வெரி இம்பார்ட்டண்ட் .எக்சாமினேஷன் பாய்ண்ட் ஆஃப் வ்யூல கூட சாய்ஸ்லயோ காஃபிஸ்லயோ விட முடியாது. அட அப்படியே விட்டாலும் நாட்ல பாதி ஆண்,பெண்களுக்கு ரெண்டு ஒன்னு கரீட்டா இருந்திருந்தா குண்டு வெடிப்பு - தண்டவாள பெயர்ப்புக்கெல்லாம் அவசியமே இருந்திருக்காது.

லஞ்ச லாவணியம்லாம் எப்பயோ அவுட் டேட்டட் ஆகியிருக்கும். வன்முறைங்கற முள் மரம் பட்டுப்போயிருக்கும்.

சப் கான்ஷியஸ்ல பணத்தை செக்ஸுக்கு மாற்றாதான் ச்சூஸ் பண்ணோம். ஆனால் பாருங்க இன்னைக்கு செக்ஸே ரெண்டாம் பட்சமாயிருச்சு.

சப் கான்ஷியஸ்ல வன்முறையை செக்ஸுக்கு மாற்றாதான் ச்சூஸ் பண்ணோம். ஆனால் பாருங்க இன்னைக்கு செக்ஸே ரெண்டாம் பட்சமாயிருச்சு.

பலானது கிடைக்கலை அணையே அடிச்சுட்டு போயிர்ராப்ல இருக்கு சுய இன்பம் ஓகே. இது செக்ஸுக்கு மாற்று. ஆனால் ஒரு கட்டத்துல செக்ஸே ரெண்டாம் பட்சமாயிருதுல்ல அப்படித்தேன் இந்த இழவும் ஆயிருச்சு.

ஏழாம் பாவம் நல்லாயிருந்தா.. அட நாறியே போயிருந்தாலும் உரிய பரிகாரங்களை செய்துக்கிட்டு வந்தா
( ஐ மீன் சேஞ்சிங் லைஃப் ஸ்டைல் ) அந்த சோடி உருப்படும் .இப்படி பல்லாயிரம் சோடி உருப்பட்டா நாடே உருப்படும். அதனாலதேன் இந்த 7 ஆம் பாவத்தை பத்தி நை நைன்னு சொல்லிக்கிட்டே போறேன்.

திருவிளையாடல்ல சிவன் (சிவாஜி) சக்தியை ( சாவித்திரி) போகாதேங்கறாரு. சக்தி போறேன்ங்கறாய்ங்க..
முட்டிக்கிறாய்ங்க.

நாம வீட்ல பொஞ்சாதி 'என்னங்க.. என்னங்க .. ஒரே நா போயிட்டு வந்துர்ரங்க"ன்னு ஆரம்பிச்சா.. " தாராளமா போ.. ஒரு வாரம் பத்து நாள் இருந்துட்டு வா"ங்கறோம்.ஒடனே அவளுக்கு 1984 -85 ஃப்ளாஷ் பேக் எல்லாம் ஞா வந்துருது ( கண்ணாலம் என்னவோ 1991 லதேன். ஆனால் நம்ம சல்லாப சரித்திரத்தையே ஒப்புவிச்சாச்சுங்கோ) சரி சரி அடுத்த வாரம் பார்க்கலாம்னு ட்ராப் ஆயிர்ரா. மிஞ்சிப்போனா இன்னைக்கு மதியம் போய் மறு நா மதியம் வந்துர்ரா. (பேரணாம்பட்டு கிட்டக்க )

மிஸ்டர் ஷிவா ஏன் அப்படி இர்ரிடேட் ஆகிறாருன்னா சக்தியம்மா அங்கன தட்சன் கிட்டே யீல்ட் அப் ஆயிருவாய்ங்களோங்கற ஐ.சியா (இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்) இருக்கலாம். ( லக்னாதிபதி விரயத்துல இருந்தா - லக்னாதிபதி விரயாதிபதியோட சேர்ந்தா இது மாதிரி ஒரு மென்டாலிட்டி வந்துருது)

இவரும் கெட்ட ஆட்டம்லாம் போட்டவருதேன். ஹோமோ உட்பட. தாருகாவனத்துல ரிஷிபத்தினிகளையெல்லாம் ஹோல்சேலா சினையாக்கின பார்ட்டிதானே. அதுல சக்தியம்மாவுக்கு எந்தளவுக்கு கம்யூனிக்கேட் பண்ணாரோ என்னமோ ? தட்சன் கசமுசான்னு எதுனா சொல்லி பொஞ்சாதி மனசை கலைச்சுட்டா என்ன பண்றதுன்னு பயந்தாரோ என்னமோ ? (இதெல்லாம் லக்னாதிபதி நீசமானா வர்ர கேரக்டர்)

சரி ஒழிஞ்சு போவட்டும். சாவித்திரியம்மா ஹிப்போ கணக்கா பாடிய வச்சுக்கிட்டு மாங்கு மாங்குனு போயி மொக்கையாகி திரும்பி வர்ராய்ங்க. மன்னாப்பு கூட கேட்கிறாய்ங்க.

ஒடனே இவரு என்ன பண்ணனும். " விட்டு தள்ளு கழுதை.. போயி சீரியல் பாரு"ன்னு ஆறுதலா பேசனும். இவர் என்னடான்னா ருத்ரதாண்டவமெல்லாம் போட்டு எரிச்சு போட்டுர்ராரு. இவருக்கும் வரதட்சிணை கேட்டு பொஞ்சாதிகளை பஸ்மமாக்குற புருச புழுக்களுக்கும் என்ன வித்யாசம்?

7 ஆம் பாவம் 1 - 2 -3 -4 -5 -6 -8-9-10-11-12 ன்னு எல்லா பாவங்களோடயும் இன்டர்லிங் ஆகியிருக்கு. இந்த பாவங்களிலான குறைகளை 7 ஆம் பாவம் ரெக்டிஃபை பண்ணலாம். அல்லது 7 ஆம் பாவமே கெட்டிருந்தா மேற்படி இன்னபிற பாவங்களை மொக்கையும் ஆக்கலாம்.

ஆண் பெண் அந்தரங்கம்னா சைக்காலஜிங்கோ. சைக்காலஜி தெரிஞ்சு இதம் பதமா நடந்துக்கிட்டா சம்சாரங்கற மின்சாரம் ஆட்டோகட் ஸ்டெபிலைசரோட வேலை செய்யும். இல்லின்னா லோ ஓல்ட்டேஜு,ஹை ஓல்ட்டேஜுன்னு உங்க பேட்டரியையே ஸ்மாஷ் பண்ணிரும் சாக்கிரதை.