Showing posts with label சாக்தேயம். Show all posts
Showing posts with label சாக்தேயம். Show all posts

Friday, April 25, 2014

காப்பாற்றி ஒப்பேற்றி

தாயே! சாதாரணனாய் இருந்த
என்னை இதயரணனாக்கினாய்

ஒரணியில் நின்று அதுவே வாழ்வென்று
இருந்த  என்னை
அவ்வுறவு உதறும்படி
பதறச்செய்தாய்

நான் உறவே கூடாதென்று
துறவு கொள்ளாது காத்தாய்

ஓருறவில் நின்றாலல்லவா ரணம்
ஓராயிரம் - ஒரு கோடி - ஓரு நூறு கோடி
உறவிருப்பின் ஏதோ ஒரு நெஞ்சம்
எனக்கு தஞ்சமளிக்கும் என்றெண்ணச் செய்து

இந்நாட்டை நேசிக்கச் செய்தாய்.
இங்கு வாழ்ந்து, இன்னமும் வாழ்ந்து வரும்
புனிதர்களை பூசிக்கச் செய்தாய்.

அவர்தம் சரிதங்களை வாசிக்கச் செய்தாய்
ஆன்மத்தில் பிரகாசிக்கச் செய்தாய்

அவர்தம் ஆக்கங்கள் நோக்கங்களை
என்னில் துலங்கச் செய்தாய்.
மறை பொருள் விளங்கச் செய்தாய்

அம்மா நான் கடந்து வந்த பாதையை
திரும்பிப் பார்க்கிறேன்.

உன் கடைக்கண் பார்வை சற்றே
மாறியிருப்பினும்
வாழ்வு நாறியிருக்கும்.

கணமேனும் கை விடாது - விட்டாலும்
என் நன்மைக்கே விட்டு
காப்பாற்றி ஒப்பேற்றி வந்தாய்.

உனக்கு நன்றி சொன்னால்
அது ஆபாசம்.
ஆம் தாய்க்கு மகவு சொல்வதோ
நன்றி
ஓம் சக்தி

Tuesday, January 24, 2012

அவன்-அவள்-அது : 22


அண்ணே வணக்கம்ணே !

நம்ம சாக்தேய அனுபவங்களை மீண்டும் தொடரப்போறதா சொல்லியிருந்தேன்.( கணக்குக்கு இது 22 ஆவது சாப்டர்). இதுக்கு காரணத்தையும் சொல்லியிருந்தேன்.( ஜோதிடம் 360)

ஆத்தா தலைவிரி கோலமா சூலத்தை தூக்கிக்கிட்டு பி.டி உஷா ,ஷைனி ஆபிரகாம் கணக்கா ஓடிவர்ரதை கற்பனை பண்ணா நமக்கும் கொஞ்சம் போல உணர்ச்சி வருது.இல்லேங்கலை.ஆனால் நம்மை பொருத்தவரை அவள் சத்ய ரூபிணி,தர்ம ரூபிணி.

நாம சத்தியத்தை காத்திருந்தா - தருமத்தை பின்பற்றி நடந்தா அவள் பாட்டுக்கு விஜய்கிட்டே ஆட்டோகிராஃப் கேட்க துரத்தற டீன் ஏஜ் பெண் மாதிரி நம்மை ஃபாலோ பண்ணிக்குவாங்கறது நம்ம புரிதல்.

எத்தனையோ தியான முயற்சிகள் - ஜபங்களில் ஏற்படாத உணர்ச்சி ஒரு உதவாக்கரை மசாலா படம் பார்க்கிறச்ச ஏற்பட்டுது. குண்டலி விலைவாசி மாதிரி சர்ருனு ஏறி தலையில குடை ராட்டினம் கணக்கா சுத்துச்சு.

நீங்க தமிழ்ல அம்மன்ங்கற பேர்ல பார்த்திருப்பிங்க. தெலுங்குல அம்மோரு. க்ளைமாக்ஸ் பாட்டு ஃப்ளோர் டிக்கெட் தாய்குலத்தை டார்கெட் பண்ணி போட்ட பாட்டுதேன். ஆனால் அதுல ஒரே வரி.. நம்மை பாடாய் படுத்திருச்சு.

ஈரோயினை வில்லன் ஈரோவை சீரோவாக்கி ரேப்ப ட்ரை பண்றாரு.அப்பம் ஈரோயின் ஈரோவையும் தன் கற்பையும் காப்பாத்திக்க ஆத்தாவை கூப்பிடறாள்.அதேன் சிச்சுவேஷன்.

அதுல ஃப்ளோர் டிக்கெட் சனத்தை உசுப்பேத்தறாப்ல எத்தனையோ வரிகள். ஆனால் நம்மை பரவச நிலைக்கு கொண்டு போன வரிகள் " சண்டிவை ,துர்கவை"னுட்டு ஆரம்பமாகுது அந்த சரணத்தோட கடைசி வரியா " "சத்யமேவஜெயதேனனி சாட்டிம்பக்க ரா"ன்னுட்டு வரும்.

அந்த சரணம் என்னவோ ரொட்டீனாத்தான் ஆரம்பமாகுது. அந்த பில்டப் எல்லாம் நாம அறிஞ்சதுதேன். நம்ம பாடியோ -மைண்டோ பெருசா ரெஸ்பாண்ட் ஆகல்லை. ஆனால் அந்த கடைசி வரி இருக்கே.அங்கனதான் மண்டைக்குள்ள ஒரு "பிக் பாங்கே" நடந்தது.

அந்த வரிக்கு அருத்தம் " சத்தியம் தான் வெல்லும்னு இந்த சகத்துக்கு அறிவிக்க வா"


சத்தியமேவ ஜெயதே ! வாய்மையே வெல்லும்! இதெல்லாம் அரசு லெட்டர் ஹெட்டில் போட்டுக் கொள்ளவோ ,கதா காலட்சேபத்தில் சொல்லிக்கொள்ளவோ (மட்டும்) சொல்லப்பட்டவையல்ல ! நான் ஒன்றும் மகானில்லை. அற்பன். அதிலும் என் இளமையில் பொறாமை,சுய நலம்,பயம்,பீதி,காமப்பித்து இப்படி எத்தனையோ பிசாசுகள் என்னை ஆட்டி வைக்க பிசாசாகவே வாழ்ந்தவன்.

என் லக்னமாகிய கடகத்தில் உச்சம் பெற்ற குருவோ, பாக்ய ஸ்தானத்தில் வக்கிரம் பெற்ற சனியோ அல்லது அவர் மீதான குருவின் பார்வையோ எதனால் என்று ஸ்பஷ்டமாக கூற முடியவில்லை. எப்படியோ மனம் மாறினேன்.

ஏசு கூறியது போல மனம் திரும்பிய எனக்கு பரலோக ராஜ்ஜியம் காத்திருக்கவில்லை. நரகம் காத்திருந்தது. நெருப்பாற்றை நீந்தி வந்தோம் என்று திராவிட பேச்சு வியாபாரிகள் கூறுவார்களே அது என் விஷயத்தில் 100 சதம் நிஜமானது.

கரையேறிய பின்பு சாரி. கரை கண்ணுக்கு தெரிய ஆரம்பித்துவிட்ட பிறகு பார்க்க வேண்டுமே. என் வாழ்வில் நான் காப்பாற்றிய காலணா சத்தியமே என் எதிரிகளை எரித்துப் போட்டதை கண்கூடாக பார்த்து வருகிறேன்.

1986 ல் ஆரம்பித்த இந்த சத்திய சோதனை 2003 அக்டோபர் 2 ஆம் தேதிவரை தொடர்ந்தது. அதற்கு முன் இருந்த மசாக்கிசம் (சத்தியம் காக்க மட்டுமல்ல , அதர்மத்துக்கும் தலைவணங்கி "ஆத்தாளே பார்த்துப்பா.. இத கேட்க நாம யாரு என்று நாறிப்போதல்) 2003க்கு பின் இந்த நிலை மாறியது. கொய்யால.. நான் நாறிட்டா எனக்கு பின்னாடி எவனாச்சும் ஆத்தா - சீத்தான்னா சனம் நக்கலடிச்சே அவனை நோகடிச்சுருவாய்ங்க. நான் நாற கூடாதுங்கற வீம்பு வந்துருச்சு.

ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலுக்காக நான் துவங்கிய சாகும் வரை உண்ணாவிரத சமயத்துல ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களும் -சமூகத்தின் பாராமுகமும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

நான் விவரிக்க போகும் கீழ் காணும் சம்பவம் நடந்தது 2004 உகாதிக்கு பிறகு. அதற்கு முன்பு இருந்த க்றிஸ்டல் க்ளியர் கான்ஷியஸ் இல்லை. இருந்தும் சத்தியம் எரித்தது. எரிக்கிறது. சமயத்தில் என்னை கூட.

என் கான்ஷியஸ் க்றிஸ்டல் க்ளியராக இருந்த கால கட்டத்தில் என் உழைப்பை உறிஞ்சி ,என் ஜனநாயக உரிமையை பறிக்க பார்த்த ஒரு பத்திரிக்கை நிருபனுடன் மோதிய கால கட்டத்தை இந்த பதிவில் எழுதுகிறேன். அவன் எப்படியா கொத்த லக்காடின்னு கடந்த பதிவுல எழுதியிருந்தேன்.

ஈதிப்படியிருக்க அவன் என் க்ளையண்டாகி ஜோதிட ஆலோசனை பெறுவது வழக்க மாயிற்று. ஒரு தினம் தனக்கு வெளிவேலைகள் அதிகம் இருப்பதால் ஆந்திரபிரபா ஆஃபீசில் சும்மா உட்கார ஒரு உதவியாளர் தேவை என்றும், மாதா மாதம் சம்பளம் தான் கொடுப்பதாகவும் கூறினான். எனக்கு ஏற்கெனவே எழுத்தில் ஆர்வம் அதிகம். நானே வருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன்.

கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ நிறைய விஷயங்களை புரிந்து கொண்டேன்.(அந்த நிருபனை பற்றி மட்டுமல்ல பத்திரிக்கையுலக மோசடிகள் குறித்தும் தான்) அவ‌னே என்னை பிர‌ஸ் க்ள‌ப்பில் உறுப்பின‌னாக்கினான். அர‌சு அடையாள‌ அட்டை வாங்கி கொடுத்தான்.ச‌ம்ப‌ள‌ம் தான் கொடுக்க‌ வில்லை. அப்போது நான் ஒரு அன்றாட‌ங்காய்ச்சி .கவுரவமாக பிரெட் ஹண்டர் என்று சொல்லிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் என் கைப்ப‌ண‌த்தை செல‌வ‌ழித்து செய்தி சேக‌ரித்து,ஃபாக்ஸ் செய்து என் அரிப்பை தீர்த்து வ‌ந்தேன்.

ஆரம்பத்துல அவனுக்கு சம்பளம் வர்ரச்ச நமக்கு சம்பளம் கொடுத்துருவான்னு ஒரு பிரமை. மாசத்துல மொதல் வாரம் வருவான். என்னமோ ஸ்கூப் கிடைச்சுட்டாப்ல அவசர அவசரமா புறப்படுவான். நாம பின் பளுவு.

நேர எங்க போவாங்கறிங்க? பார் அண்ட் ரெஸ்டாரண்ட் தேன். போனதும் அவனுக்கு ஆர்டர் பண்ணிக்குவான். நாம வாய்ல விரல் போட்டு பார்த்துக்கிட்டிருப்பன். குடிச்சு முடிச்சுட்டு மிச்சம் மீதி சேவரீஸை பார்சல் பண்ணி கொண்டுவரச்சொல்லி கோவில் பிரசாதம் கணக்கா நம்ம கிட்டே கொடுத்து "ஸவாமி ! இதை உங்க டாட்டருக்கு கொடுங்க"ம்பான்.

நாம அறிமுகம் செய்த யூனியன் சேர்மன் கிட்டே ரூ.5,000 க்கு இன்டென்ட் போட்டான். அவரு ரூ.2000 கொடுத்துட்டு நமக்கு இன்ஃபார்ம் பண்ணாரு. நம்மாளு எம்மாம் பெரிய லக்காடின்னு சுருங்க சொல்லி.. போனது போவட்டும். இனி கொடுக்காதேன்னேன்.

இப்படி ஒன்னு ரெண்டில்லை. ஆயிரம்.

சில மாசங்கள்ள பிர‌ஸ் க்ள‌ப்பில் தேர்த‌ல் வ‌ந்த‌து. நான் யாருக்கு ஓட்டு போட‌ வேண்டும் என்று அவ‌ன் முடிவு செய்ய‌ பார்த்தான். நாமார்க்கும் குடிய‌ல்லோம் ந‌ம‌னை அஞ்சோம் என்ப‌து ந‌ம்ம‌ ஸ்டைலாச்சே! போடாங்.. என்று விட்டு அன்றைய‌ செய்திக‌ளை ஃபாக்ஸ் அனுப்பும்போது ந‌ட‌ந்த‌ க‌தையையும் ஃபாக்ஸ் செய்தேன். என்னை வேலைல‌ வ‌‌ச்ச‌து மேற்படி நிருபன். என‌க்கும் அவனுக்கும் ப‌ல்ப் மாட்டிக்கிச்சு..குட் பை என்ப‌து அத‌ன் சாராம்ச‌ம். நான் இனி நிருப‌னா இல்லையா ..டிசைட் ப‌ண்ணுங்க‌ என்ப‌து முத்தாய்ப்பு.

உட‌னே ஆந்திர‌பிர‌பால‌ருந்து அதே ஃபேக்ஸ் நெம்பருக்கு போன்.." போயா கூமுட்டை! நீ தான் எங்க‌ ரிப்போர்ட்ட‌ர். அவன் ரிப்போர்ட்ட‌ரா இல்லையானு நாங்க‌ வ‌ந்து டிசைட் பண்றொம்" என்றார் மேனேஜ‌ர்.

நான் பிரஸ் க்ளப்பிலிருந்தே ஃபேக்ஸ் மூலம் செய்திகள் அனுப்பிவந்தேன். ஒரு நாள் மேனேஜர் வந்தார்.ஆஃபீசில் இருந்த சகல சாமான் களையும் (கம்ப்யூட்டர், மோடம்,மேசை நாற்காலி இத்யாது வாரிப்போட்டுக்கொண்டு "முருகேசன் ! இனி நமக்கு ஆஃபீசே வேணாம். நீ இருக்கிற இடம் தான் ஆஃபீஸ். தாளி இந்த வெட்டி செலவை நிறுத்திட்டு உனக்கு கு.ப. ஊதியம் ஏற்பாடு பண்றேன் என்று சொல்லிவிட்டு போனார்.

த‌க‌வ‌ல‌றிந்த‌ நிருபன் நான்+ பிரபா மேனேஜர்+ விளம்பர மேனேஜர் ச‌ட்ட‌ விரோத‌மாக‌ பூட்டை உடைத்து,அவ‌ன் ட்ராய‌ரில் வைத்திருந்த‌ த‌ங்க‌ பிஸ்க‌ட்டு,ஆப்ரிக்க‌ வைர‌ங்க‌ளை (உ.ந‌.அணி சார்) கொள்ளைய‌டித்து விட்ட‌தாய் புகார் கொடுத்தான்.


அப்போது தெலுங்கு தேச‌ம் தான் ஆளுங்க‌ட்சி. அக்க‌ட்சி பிர‌முக‌ர்கள் அனைவ‌ரும் அந்த நிருபனுக்கு வேண்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் தான் மாற்றி யோசித்து சித்தூர் எம்.எல்.ஏ. சி.கே.பாபுவின் உத‌வியை நாட‌ முடிவு செய்தேன்.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி என் போன் ஃப்ரண்ட் என்றால் அவரே கூட ஒப்புக்கொள்ளாது போகலாம். ஆனால் இது உண்மை.

வார்த்தா தெலுங்கு தினசரியில் என்னைப்பற்றி அரைப் பக்க அளவில் செய்தி வெளி வந்தது. எல்லாம் ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றித்தான். அப்போது கருணாகர் ரெட்டி ப்ரதேஷ் காங்கிரஸ் காரிய கமிட்டி மெம்பர் . என்னைப்பற்றிய செய்தியை படித்து விட்டு தமது நண்பர்களிடம் என்னைப்பற்றி புகழ்ந்து பேசியது பொது நண்பர்கள் மூலம் என் காதுக்கு வந்தது.

ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் யார் உதவுவார்கள் என்று காத்திருந்த நேரம் அது. எனவே உடனடியாக டெலிபோன் டைரக்டரியில் அவர் விலாசம் போன் நெம்பர்களை பிடித்து கூரியரில் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம், அது குறித்த என் முயற்சிகள் , தெ.தேசம் அரசின் அலட்சியம் யாவற்றையும் விவரித்து அனுப்பி வைத்து லேண்ட் லைனுக்கு போன் போட்டேன். ரொம்ப பாசிட்டிவாக ரெஸ்பாண்ட் ஆனார்.

ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி ஒரு ஜாயிண்ட் பிரஸ் மீட் போடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் சந்திரபாபுவைத் தான் நாம் கார்னர் செய்ய வேண்டும். இதை நான் செய்வதை விட சந்திரபாபுவுக்கு சமமான ஹோதா உள்ள டாக்டர் . ஒய்.எஸ் ரெஸ்பாண்ட் ஆகுமாறு செய்யலாம் என்றெல்லாம் கூறினார்.அதிலிருந்து போன் போட்டால் அவரே லைனுக்கு வருவார். பாத்ரூமில் இருக்கும் போது கூட போன் எடுத்து பேசியதுண்டு. ஹும் ! இதெல்லாம் ஒருகாலம்.

மேற்படி நிருபன் என் மீது புகார் கொடுத்து ஹெட் கான்ஸ்டபிள் வீட்டுக்கு வந்ததும் நான் கருணாகர ரெட்டிக்கு போன் போட்டேன். அவர் "சரி சரி நீ போனை வச்சுரு" என்றார். எனக்கு பக் என்று ஆகிவிட்டது. என்னாடா இது மனுசன் கழட்டி விடறான் என்று நொந்து விட்டேன். பின் சேர்க்கையாக " நீ போனை வச்சுட்டா நான் C.K.பாபுவுக்கு போன் போட்டு என்டார்ஸ் பண்றேன்" என்றார்.

"சார்.. எந்த பாபுவ சொல்றிங்க"
" சி.கே.வைத்தான்பா"
" சார்.. நான் என்.டி.ஆர், ஃபேன். ஒவ்வொரு எலக்சன்லயும் அந்தாளுக்கு விரோதமா வேலை செய்திருக்கேன். .சி.கே.வோட‌ அர‌சிய‌ல் எதிரிக‌ள் எல்லாம் என் ந‌ண்ப‌ர்க‌ள்.. இது ச‌ரியா வ‌ருமா?"

" அட‌ட‌... நீ போனை வைப்பா ..நான் பாபுவுக்கு சொல்றேன் .. நீ பாபுவை போய் பார்"

உள்ளூற‌ உத‌ற‌ல் தான். சி.கே.பாபு அப்போதும் எம்.எல்.ஏ தான், என்ன‌ ஒரு ச‌ங்க‌ட‌ம் என்றால் எதிர்க‌ட்சி, ச‌மீப‌த்தில் தான் கொலை வ‌ழ‌க்கு,க‌ட‌ப்பா சிறை வாச‌ம் எல்லாம் ந‌ட‌ந்திருந்த‌து.. இந்த‌ மாதிரி ச‌ம‌ய‌த்தில் ஊர் விவ‌கார‌த்தில் யாராவ‌து உத‌வுவார்க‌ளா என்றும் ச‌ந்தேக‌ம்.

இருந்தாலும் உட‌னே எங்க‌ள் ஆந்திர‌பிர‌பா மேனேஜ‌ர் மோக‌னுக்கு போன் போட்டு விஷ‌ய‌த்தை சொன்னேன். எங்க‌ள் எம்.டி.யும் காங்கிர‌ஸ் கார‌ர்தான். மேனேஜர் திருப்ப‌தியிலிருந்து ச‌ரியாக‌ ஒன்ன‌ரை ம‌ணி நேர‌த்தில் க‌ட்ட‌ம‌ஞ்சியில் வ‌ந்து இற‌ங்கினார்..

நேரே சி.கே.பாபு வீட்டுக்கு போனோம். சி.கே. வீடு. தோட்டம். தோட்டத்தில் பார்வையாளர்கள் காத்திருக்க கார்டன் ரெஸ்டாரன்ட் பாணியில் குடை,குடையின் கீழ் கிரானைட் கற்களால் ஆன இருக்கை. நாங்கள் உள்ளே நுழைகிறோம். சி.கே.வீட்டிலிருந்து வெளியே வருகிறார். ஸ்டோன் வாஷ் பேண்ட், முழுக்கை காட்டன் சட்டை ( இது நடந்தது 2004 ல் / இப்போது அவருக்கு 60 வயசு.. அப்போ 52 ஆ) .

தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தவர்களுக்கு ஏதோ சொல்கிறார். பிறகு "ஆந்திரபிரபா காரர்கள் யாராவது வந்தாங்களா" என்று கேட்டார். உடனே முன்னேறி.."வந்திருக்கம் சார்!" என்றேன். லோக்கல் ஆசாமி என்ற முறையில் நானே எங்கள் மேனேஜர்களை அறிமுகம் செய்தேன். சிமெண்ட் குடையை நோக்கி நடந்தார். தொடர்ந்தோம். உட்கார சொன்னார். உட்கார்ந்தோம். விஷயத்தை சொன்னோம். பொய்புகார் கொடுத்தவன் பெயரை கேட்டதுமே, அவனது நிக் நேமை குறிப்பிட்டு "அவன் தானே" என்றார்.

அந்த ஆசாமியுடன் 5 வருடம் பழகினேன். அவன் நிக் நேம் எனக்கு கூட தெரியாது. சி.கே. சொல்கிறார். அவர் ஏன் எம்.எல்.ஏ ஆகமாட்டார். பிறகு அவர் சொன்னதை முடிந்தவரை ஜீவன் கெடாது தமிழ்படுத்துகிறேன்.

" கேசப்பா (சி.ஐ) தானே , வீட்டுக்கு கான்ஸ்ட‌பிளை அனுப்பிச்சாரா ..ச‌ரி ச‌ரி.. நீங்க‌ ஒன்னும் பய‌ப்ப‌ட‌ வேணாம். நேரா ஸ்டேஷ‌னுக்கு போங்க‌. சி.கே.பாபுகிட்டே பேசிட்டு வ‌ந்தோம்னு சொல்லுங்க‌. போதும். அந்த‌ ஆளை ப‌த்தி (சி.ஐ) இவ்ளோ இருக்கு.(இர‌ண்டு கைக‌ளை விரித்து) ,எல்லாம் என‌க்கு தெரியும். என‌க்கு தெரியும்னு அந்தாளுக்கு தெரியும். ஒன்னும் ப‌ய‌ப்ப‌டாதீங்க‌. நான் ஸ்டேஷனுக்கு வர்ரது அவசியம்னா என் செல்லுக்கு போன் ப‌ண்ணுங்க‌ ..நானே வ‌ர்ரேன்"

இவ்வ‌ள‌வுதான் பேச்சே.. ! நேரே ஸ்டேஷ‌னுக்கு போனோம். சி.கே.சொன்ன‌தை சொன்ன‌ப‌டி (இவ்ள‌ தெரியும் எட்ஸெட்ரா ப‌குதியை அல்ல‌) சொன்னோம். சீனே மாறிவிட்ட‌து."அய்யய்யோ என்னய்யா இது உன் கூட பெரிய ரோதனையா போச்சு , நான் உன்னை வந்து பேசச்சொல்லி தகவல் சொல்ல சொன்னேன்யா. உன் வீட்டுக்கு யார் வந்தா?""ஹெட் கான்ஸ்டபிள் சார்"உடனே ஏட்டு வரவழைக்கப்பட்டார்.

" உன்னை யாருயா வீட்டாண்ட போச்சொன்னது" அவருக்கு மண்டகப்படி. பிறகு பேச்சு வார்த்தை நடந்தது. சித்தூருக்கு இனி நான் தான் என்றும் வேண்டுமானால் நிருபன் திருப்பதி வந்து பணியில் சேரலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அவன் திருப்பதி போகவில்லை.கொஞ்ச காலம் ஏதோ சொந்த பத்திரிக்கை என்று கதை செய்தான். பின் போண்டா கடை பெண்களை லைனில் வைத்து அவர்களை மொட்டையடித்தான். பின்னொரு நாள் ப்ரஸ் க்ளப் மாடிக்கு ஏதோ உருப்படியை த‌ள்ளிக்கொண்டு போய் கையும் களவுமாய் பிடிப்பட்டு தர்ம அடி வாங்கினான். இன்று ஊரில்/மாவட்டத்திலேயே இருக்கிறானா இல்லையா கூட தெரியாது

இப்பம் இங்கே அழுத்தி மேற்படி பாடல் வரிகளை கேட்டுப்பாருங்க. ரெண்டாவது சரணம் துர்கவை ,சண்டிவைன்னு ஆரம்பமாகும்போது அலார்ட் ஆயிக்கங்க. கடைசி வரியில அந்த பரவச நிலை உங்களுக்கும் ஏற்பட்டுதுன்னா உங்களுக்கும் சத்தியம் குறித்த அனுபவம் இருக்குன்னு அருத்தம்.

Monday, January 23, 2012

அம்மனின் வாகனம் ஆடு


அண்ணே வணக்கம்ணே !

பக்த சனங்க சைக்காலஜி என்னன்னா இவியளுக்கு பிரச்சினை வரும்போதெல்லாம் சாமிய கண்ணில்லையா, கையில்லயா காலில்லியான்னு ஏகத்துக்கும் கிராஸ் பண்ணுவாய்ங்க.ஆனால் இவிகளுக்கு நல்லது நடக்கும் போது டீல்ல விட்டுருவாய்ங்க.

அது என்னமோ நாம தேன் விசித்திரமான கேரக்டராச்சே. பிரச்சினைன்னு வரும்போது "மட்டும்" ஜேஜிக்கு சோப்பு போடறது நமக்கு பிடிக்காது. சனங்களையும் இப்படித்தேன் டீல் பண்றோம். சோத்துக்கில்லாத நாள்ளயே ஆறு மாசத்துக்கு ஒருக்கா வசதி வந்தாலும் மொதல்ல ஃபுல் டாக் டைம் போட்டுக்கிட்டு "ஒன்னுமில்லை பாஸ்.. ச்சொம்மாதேன்.. டச்ல இருக்கனுமில்லையா"ன்னு பேசற கேஸு நாம.ஜேஜிகிட்டயா வேற மாதிரி நடப்போம்.

நம்ம அம்பறாத்துணியில கச்சாமுச்சான்னு அம்புகள் இருக்கு.பிரச்சினைன்னு வரும்போது அல்லாத்தையும் ஒன்னு பின்னாடி ஒன்னு விட்டுட்டு ..அம்புகள் தீர்ந்த பின்னாடி அம்பறாத்துணியை வீசி ,வில்லை எடுத்து வாத்யார் கணக்கா சுழற்றி அப்பயும் வேலைக்காகலின்னாதான் ஆத்தாளை கூப்டுவம். என்னதான் கேடு கெட்ட மன்ச ஜன்மம்னாலும் பெரியார் ,என்.டி.ஆர் ஊட்டிவிட்ட செல்ஃப் ரெஸ்பெக்ட்னு ஒன்னு இருக்கில்லை.

அப்பம்..ஆத்தாளும்.. சே பாவம் என்னைக்கும் கூப்டாத புள்ளை கூப்டுது. நெஜமாலுமே கிரிட்டிக்கல் போலன்னு பட்டுன்னு புலிமேலயோ ,சிங்கத்து மேலயோ ஏறி ஆஜராயிருவா. இந்த தாட்டி ஆட்டுமேல ஏறி வந்திருக்கா.

அஸ்கு புஸ்கு ஆத்தாளுக்கு ஆட்டுக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக. சொல்றேன். ஆத்தா பெத்த அழகான புள்ளை முருகன். முருகனுக்கு ஆரம்பத்துல வாகனம் ஆடுதேன். மயில் எல்லாம் அப்பாறம் பேங்க்ல லோன் போட்டு வாங்கினது.

நம்ம வீட்ல ரெண்டு வண்டி ,ஒரு பழைய சைக்கிள் இருக்கு. ஜா.ரா @ சுந்து சித்தூர் பஸ் ஸ்டாண்ட்லருந்து ஃபோன் போடறாரு.

"அண்ணே.. முருகேசண்ணே .. எப்படி சித்தூர் வந்தேன்னே தெரியலை. ஏதோ ஒரு சக்தி சித்தூர் பஸ் ஸ்டாண்ட் வரை தள்ளிக்கிட்டு வந்துருச்சு.. உங்க வீட்டுக்கு வழி தெரியல்லை. பட படன்னு வருது.. கண்ணை இருட்டுது ..விளுந்துருவன் போல இருக்கு.. சீக்கிரம் வாங்கண்ணே"

இப்படி ஒரு ஃபோன் வந்ததும் .. நமக்குள்ள இருக்கிற முகமது (சல்) சீறி கிளம்பறாரு. ரெண்டு வண்டியையும் கிளப்ப பார்க்கிறோம். குளிருக்கு ஜா.ரா மூளை மாதிரி விறைச்சுக்கிடக்கு. அப்பம் என்ன பண்ணுவோம்.

படக்குன்னு சைக்கிளை எடுத்துக்கிட்டு கிளம்பிருவம். அப்படித்தேன் .. நம்ம சுந்து பண்ண அலப்பறையையும் - அதுக்கு நாம கொடுத்துக்கிட்டிருந்த கவுண்டர்களையும் பார்த்து கடுப்பான ஆத்தா ஷெட்ல மூலையில.. துணி போர்த்தி வச்சிருந்த முருகனோட வாகனமான ஆடு மேல ஏறி வந்துட்டா..
இப்பம் ஒத்துக்கிடறிங்களா? ஆத்தாவோட வாகனம் ஆடுன்னு.

அவன் அவள் அதுங்கற தலைப்புல ஒரு தொடரை ஆரம்பிச்சு டீல்ல விட்டிருந்தம். இப்பம் ஜோதிடம் 360 ஸ்க்ரிப்டை எத்தீனி தபா ட்ரிம் பண்ணி எத்தீனி தபா எடிட் பண்ணாலும் கண்ணைதான் கட்டுதே தவிர அது ஜா.ரா மாதிரியே கிடக்கு.

நம்ம முயற்சியெல்லாம் ஓவர். இனி ஆத்தா கண் பார்த்தாதான் வேலைக்காகும்னு தோனிருச்சு.அதனாலதேன் இந்த பதிவு.

அவன் அவள் அது தொடரோட கடந்த அத்யாயத்தை படிக்காதவுக இங்கன அழுத்தி ஒரு ஓட்டு ஓட்டுங்க. அப்பத்தேன் லிங்க் வரும்.

மேற்படி நிருபர் குல திலகத்தோட பெருமையையெல்லாம் படிச்சிங்கல்ல. இந்த கேரக்டரோட நமக்கு முட்டிக்கிச்சி.அப்பம் ஆத்தா எப்படி நம்மை சேஃப் பண்ணாள்னுட்டு அடுத்த பதிவுல சொல்றேன்.

ஆத்தா ஆடு மேல வந்தாள் சரி ..வந்து என்ன பண்ணாள்னு கேட்கிறவுகளுக்கு சுன்டரேசங்கற பேர்ல வந்து ஜா.ரா பண்ண அழிச்சாட்டியம் தெரியாதுன்னு நினைக்கிறேன்.

மணி அண்ணனோட முத்துச்சிதறல்கள் வலைப்பூவுல இருந்து அண்ணன் மேஷ லக்னத்தை பத்தி மாங்கு மாங்குன்னு எளுதினதை இந்த ஜந்து எளுத்துக்கு எளுத்து காப்பி பண்ணி நம்ம சைட்ல பேஸ்ட் பண்ணிருச்சு. வசம்மா மாட்டி வாங்கி கட்டிக்கிட்டு காணாம போயிருச்சு. இதான் மேட்டர்.

இந்த சந்தர்ப்பம் வரும்னு நமக்கு எப்பமோ தெரியும். இருந்தாலும் இந்த சுந்தரேசன் ஜா.ராவா இல்லாம இருந்தா ஒரு புதிய திறமை வெளிச்சத்துக்கு வர்ரதை தடுத்த பாவம் வந்துருமேன்னு நூல் விட்டுட்டம்.

நம்ம போதைக்கு ( நியாய உணர்வு) மணி அண்ணன் ஊறுகாய் ஆயிட்டாரு. அதனால மணி அண்ணன் கிட்டே இந்த பதிவு மூலமா மன்னிப்பு கேட்டுக்கறோம்

Wednesday, August 17, 2011

அவன் அவள் அது : 16


வாடகைப் பணம்கொடுக்க முடியாம அல்லாடினது - ஆத்தா கூட சமயத்துல உதவ மாட்டேங்கறாளேன்னு மனம் நொந்தது - ஆத்தா பட்டப்பகல்ல - சமய புரம் மாரியம்மனா காட்சி கொடுத்தது இத்யாதியை கடந்த பதிவுல சொல்லியிருந்தேன்.

கண்ணாலமாறதுக்கு மிந்தியே ஆஃபீஸ், ஸ்கூல் ,ட்யுட்டோரியல்ஸ் இத்யாதிக்கு ரென்டட் பில்டிங்ல இருந்ததுண்டு - கண்ணாலத்துக்கப்பாறம் ஏவரேஜா வருசத்துக்கு ரெண்டு வீடு மாறினதும் உண்டு. இதை சொல்ல காரணம் அத்தீனி ஹவுஸ் ஓனரை பார்த்த அனுபவம் நமக்கிருக்குன்னு சொல்லத்தேன்.

ஆனால் இந்த பதிவுல சொல்லப்போற ஓனர் மாதிரி ஒரு ஓனரை அதுக்கு மிந்தியும் பார்க்கலை.அதுக்கப்பாறமும் பார்க்கலை. இந்த கேரக்டரை பற்றியும் அவனுக்கு ஆத்தா கொடுத்த ஷாக் பற்றியும் ஏற்கெனவே எழுதி தொலைச்சுட்டதால ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட் இட். நியூ அட்மிஷன்ஸ் வேணம்னா இங்கே அழுத்தி ஒரு பாட்டம் படிச்சுருங்க.

இன்னாடா இது சித்தூர் முருகேசன் ஃப்ளாஷ் பேக்கா சொல்றாரே கண்டி நேத்து முந்தா நேத்து நடந்தது எதையும் சொல்லமாட்டேங்கறாரு. ஒரு வேளை ஆத்தா கூட கா உட்டுட்டாரா?அல்லது ஆய் பையனாயிட்டாரான்னு சிலர் கேப்பிக சொல்றேன்.

ஆய் பையன்னா ஒரு வகையில கரீட்டுதேன். நம்ம லட்சியங்கள் ரெண்டு. ஒன்னு ஆப்பரேஷன் இந்தியா2000 இதை ஒய்.எஸ்.ஆர் துவக்கிய ஜலயக்னம் மயக்கத்துல டீல்ல விட்டாச்சு. ரெண்டாவது லட்சியம் ஆத்தாளுக்காக தெலுங்குல எழுதின கவிதைகளை வலையேற்றம் செய்யறது. இதையும் டீல்ல விட்டுட்டாப்லதேன். ஏன் தெலுங்கு? தமிழ்ல இல்லியான்னு கேப்பிக. சொல்றேன்.

தமிழ்ல எழுதி வச்சிருந்ததையெல்லாம் மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஈ.ஓக்கு அனுப்பி தலைமுழுகியாச்சு. அந்த காகிதங்கள்ள ஆரெல்லாம் பட்டாணி கடலை சாப்டாய்ங்களோ? அந்த மதுரை வாசிகள்ளாம் ரெம்ப புண்ணியம் பண்ணியிருக்கனும்.

( ஒரு கட்டத்துல பெருமாள் மேல காதல் எக்கு தப்பா எகிறிப்போயி இதே போல ஆசுகவி தீட்டி - அது பெரிய கதை ஒரு சீரியலே எழுதலாம் - இப்பம் அந்த ஸ்க்ரிப்ட் ஆனந்த விகடன் ஆஃபீஸ்ல இருக்கலாம் - அல்லது அவிகளும் டிஸ்போஸ் பண்ணியிருக்கலாம்)

அதனால மிச்சமிருக்கிறது தெலுங்கு சரக்கு தேன். அதையெல்லாம் வலையேற்றம் பண்ண நான் இறங்கினா ஆன்லைன் ஜோதிட ஆலோசனைய ஊத்தி மூடிரவேண்டியதுதேன். அதனால அதுக்குன்னு குறைஞ்ச கன்ஃபிகரேஷன்ல ஒரு கம்ப்யூட்டர் வாங்கி வச்சுக்கிட்டு நம்ம இடத்துக்கு வந்தோ அ அவிக இடத்துல வச்சோ டைப் அடிச்சு தர்ரதுக்கு ஆள் தேடிக்கிட்டிருந்தோம்.

அப்பம் ஒரு பழைய க்ளாஸ் மெட் கிராஸ் ஆனான். அவன் படிக்கிற காலத்துலயே ஜகத் சோம்பேறி. கம்பைண்ட் ஸ்டடிக்கு வந்துட்டு ஊர்கதை எல்லாம் பேசிட்டு 'என்னால ஒன்னும்முடியலை ஒரு அரை மணி நேரம் தூங்கிர்ரன்னு தூங்கிருவான். இடி விழுந்தாலும் எந்திரிக்கமாட்டான். ( 1983 -84)

சரி இப்பம் வாழ்க்கையில நிறைய அடிப்பபட்டு இருக்கானே நாமே மாறியிருக்கம். இவன் மாறாத இருப்பானான்னு மேற்படி கம்ப்யூட்டரை கொண்டு அவன் கஸ்டடியில வச்சோம்.அந்த காலத்து டைப்ரைட்டிங் ஹையர் பாஸ் கேஸு. இப்பம் கண்ணெல்லாம் டப்ஸாகி / கம்ப்யூட்டர்னாலே மைண்ட் ப்ளாக் ஆயிர்ர ஸ்டேஜு. இருந்தாலும் பார்ப்பம்னு கொண்டு வச்சிருக்கம் இன்னைக்கு இது 3 ஆவது நாள் பார்ப்போம்.

சொல்ல வந்த மேட்டர் இது இல்லை. இந்த சங்கதியை நம்ம இன்னொரு க்ளாஸ்மெட்டும் -ஆந்திராவுல உள்ள நமக்கும் தமிழ் கூறு நல்லுலகத்துக்கும் பாலமா செயல்பட்ட கன்னிமரா லெண்டிங் லைப்ரரி கார்த்திகிட்டே சொல்லிக்கிட்டிருந்தம்.

அப்பம் அவரு அட எனக்கும் கொஞ்சமா கொடுப்பா நானும் பண்றேன்னாரு. அதான் சடன் ட்விஸ்ட்.
( இவரும் நம்மை போலவே பன்மொழிப்புலவர்தேன்). ட்ரெய்லர் கணக்கா நாம எழுதின சில தமிழ் கவிதைகளை வலையேற்றியிருக்காரு . ஒரு ஓட்டு ஓட்டிப்பார்த்துரலாமேங்கற தில்லுதுரைகள் மட்டும் இங்கே அழுத்துங்க. தெலுங்கு சரக்கும் சீக்கிரமே ஏறும்னு நினைக்கிறேன்.

அதுக்காவ அம்பபலுக்கு ( அம்பிகையின் சொல் - அம்பிகை சொன்ன சொல் ) ங்கற பேர்ல ஒரு ப்ளாக் கிரியேட் பண்ணி சந்திரமுகி ரேஞ்சுல ஹெடர் இமேஜ் எல்லாம் தயார் பண்ணிவச்சிருக்கம்ல . படம் பார்க்க விரும்புபவர்கள் இங்கே அழுத்தவும்

பல காலமா ஃப்ரீஸ்ல இருந்த ப்ராசஸ் இப்படி ஸ்டார்ட் ஆனதுக்கு பின்னாடியும் ஒரு சென்டிமென்ட்
இருக்கு. நமக்கு ஸ்தூல பூஜைகள் ,விக்கிரக ஆராதனை இத்யாதியில ஆர்வமில்லாட்டாலும் ஒரு சில சமயத்துல ( தேஜஸ் இல்லாம இருக்கிறச்ச - சந்திரன் 6,8,12 ல மாட்டினப்ப - நீசமானப்பல்லாம்) அந்தப்பக்கமா மனசு லேசா ஓரங்கட்டும்.

அப்படி ஒரு சந்தர்ப்பத்துல செட்டியாருங்க வீட்ல வரலட்சுமி விரதம் கொண்டாடற சமயத்துல கலசத்தை கழுத்து +உடலா செட் பண்ணி முகமா வைக்க ஒரு பிரதிமை இருக்கும். அதை தங்கம் முதல் ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ் வரை சகல மெட்டீரியல்ஸ்லயும் செய்து விக்கிறாய்ங்க. ( படத்தை பாருங்க)

அது பார்க்க ரெம்ப க்யூட்டா இருக்கும். தாளி இது மாதிரி ஒன்னை வாங்கி சுவத்துலயாச்சும் மாட்டி வைக்கனும்யான்னு நினைச்சேன். நல்லா கவனிங்க ..நினைச்சேன் தட்ஸால்.

வரலட்சுமி விரதத்துக்கு முந்தின நாள் ஆத்தாளும் மவளும் பெரிய பெரிய பையா ரெண்டை தூக்கிக்கிட்டு புஸ்ஸு புஸ்ஸுன்னிக்கிட்டு வர்ராய்ங்க. ஹோம் டிப்பார்ட்மென்ட்ல வரலட்சுமி விரதம் கொண்டாடறதா முடிவு பண்ணிட்டாய்ங்களாம். ( இதெல்லாம் அவிக கேஸ் ஹிஸ்டரியிலயோ -ஜாதகத்துலயோ இல்லாத விஷயங்கள்)

இப்படி நம்ம எண்ணங்களையெல்லாம் ஆத்தா செயலாக்கிர்ரதால நிகழ்காலத்துல சொல்லிக்கிறாப்ல பெருசா த்ரில்லான சம்பவங்கள் ஏதுமில்லிங்ணா.

அடுத்த பதிவுல சந்திப்போம் ..






Sunday, November 7, 2010

சூ மந்திரக்காளி: 2

"ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா"ன்னு கவிஞர் தோராயமா எதுகை மோனைக்காக எழுதி  வச்சுட்டாரு.

உண்மையில பார்க்க்கப்போனா மூளையில உள்ள  நியூரான்ஸை மணலளவு பெருசாக்கினாலும் அடி முட்டாள் தலைல உள்ள நியூரான்ஸ் கூட ஒரு லோடுக்காகுமாம்.

அப்ப அறிவாளிங்க? ( நாம இந்த கேட்டகிரில இல்லிங்கண்ணா)

என்னடா ஒரு பக்கம் கௌதம புத்தர் ரேஞ்சுல  நீயே உன் ஒளியாய் இருனு  உபதேசிச்சிட்டிருந்த பார்ட்டி திடீர்னு ராம நாராயணன் சினிமா ரேஞ்சுக்கு பீலா விட ஆரம்பிச்சுருச்சுன்னு நினைச்சிருப்பிங்க.

ஆனா என்ன பண்றதுங்கண்ணா ஒரு தெலுங்கு  கவிதையில  நானே எழுதின மாதிரி

"வாழ்க்கை அத்யாயங்களில் தர்கம் தரிசனம் தந்தால்
என் அகந்தை  குளிர்கிறது.

அது தகர்ந்தாலோ என் சிந்தை குளிர்கிறது"

ஓகே மொக்கை போதும் மேட்டருக்கு வந்துர்ரன்.

கடந்த பதிவுல சாக்தேய சாதனைங்கற கேட்டகிரில நான் சொன்னதெல்லாம் ஏதோ ஒரு மந்திரத்தை ஜபிச்சதுதான்.

ஆனா அதுக்கே சில பல அற்புதங்கள் நடந்ததா கடைசி பத்தில கோடி காட்டியிருந்தேன்.

1.நம்ம மந்திர சக்திக்கு (?) வழில உள்ள மரத்து கிளிங்கல்லாம் வராம்பாரு வராம்பாருன்னு தங்களுக்குள்ள கம்யூனிக்கேட் பண்ணிக்கிட்டது,

- இப்ப சொல்லுமா? பார்க்க வரலாமானு சிலர் கேப்பிக. என்ன பண்றது தலை.. என் லைஃபே ஒரு டி.வி. ப்ரோகிராம் மாதிரி.ரிமோட் மட்டும் யார் கையிலயோ? படக்கு படக்குனு சானல் எகிறும்.  வந்ததை பதிவு தான் பண்ணி வைக்கமுடியுமே அதை கூட   நீங்க பார்க்க முடியாது. மேலும்  நினைச்சப்பல்லாம் சானல் மாத்தவும் முடியாது.

ஒவ்வொரு லைன் அப்பும் காதலியின் 1,116 ஆவது முத்தம் மாதிரி உறைக்காம போயிருதா நானும் கண்டுக்கிடாம விட்டுர்ரன். அந்த உணர்வு மையமே மரத்துப்போவுது. இவ்ள ஏன் அதை ரிகலெக்ட் பண்ணி சொல்லலாம்னா கூட சூடு ஆறிப்போவுது.

நூஸ்ஃபியர்ங்கற வார்த்தைய கேள்விப்படிருப்பிங்கனு நினைக்கிறேன்.  பஞ்ச பூதங்களால ஏற்படற சூழலை அட்மாஸ்ஃபியர்ங்கறோம். அது மாதிரி மனிதனோட எண்ணை அலைகளால் ஏற்படும் சூழலுக்கான வார்த்தை இது. இது மாறும்போது அகந்தை நிறைந்த மனிதர்களை வெறுக்கும் அ  நியூட்ரலா இருந்துரக்கூடிய ஜீவராசிகள் குஜிலி ஆகி குதூகலிச்சு குரல் கொடுக்கறதெல்லாம் சகஜம் பாஸ்.
நான் சொல்ற அகந்தைங்கறது ஜஸ்ட் ஈகோ மட்டுமில்லை இந்த படைப்புலருந்து தன்னை வேறா நினைக்கிற "சுயம்" உட்பட. இது ரெண்டும் எகிறிப்போனா அட்லீஸ்ட் சைடு கட்டினாலே அற்புதங்கள் நடக்குது வாத்யாரே.

அஸ்கு புஸ்கு ஆஃப்டர் ஆல் ஒரு மந்திரம் நூஸ்ஃபியரை மாத்திருமானு கேப்பிக.

மந்திரத்தோட சக்தி ஒரு பக்கம்னா நம்ம ஜீவியசரித்திரம் ஒரு பக்கம் ஒர்க் அவுட் பண்ணிருச்சுங்கண்ணா.

மந்திரத்துல கூட அந்த அளவுக்கு சரக்கு இல்லிங்கண்ணா மந்திரங்களுக்கு முந்தி ஆம்,ஹ்ரீம்,க்ரோம் அது இதுன்னு வருதே அதுகளை பீஜாக்ஷரம்ங்கறாய்ங்க. இதை பத்தி சுருக்கமா பார்ப்போம்.

அன்னையின்  சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.
*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!
ப‌ஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவங்கறது இதன் அர்த்தம்

சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.

மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போல‌வும் வேலை செய்யுது.



எழுத்தோடு"ம்" சேரும்போது என்னாத்த அற்புதம் நடந்துரும்னு கேப்பிக

வாயும்,ஆச‌ன‌மும் ஒரே குழாயின் ஆர‌ம்ப‌ம் ம‌ற்றும் முடிவுங்கறது படிக்க அசூயையா இருந்தாலும் உண்மைதானே

ஆச‌ன‌த்துக்கு ச‌ற்று மேல் பாக‌த்தில் மூலாதார‌ ச‌க்க‌ர‌ம் இருக்குங்கறாய்ங்க. வாய் "ம்" என்று உச்ச‌ரிக்கும் போது குழாயின் ஆர‌ம்ப‌மான‌ வாய் மூடுது.இந்த வினைக்கு எதிர்வினை அந்த‌ குழாயின் முடிவான‌ ஆச‌ன‌ ப‌குதியில்  நடக்குது. அந்த‌ செய‌லின் விளைவாக‌ ஏற்ப‌டும் ஆழ்ந்த அதிர்வுக‌ள் மூலாதார‌ ச‌க்க‌ர‌த்தை அடையுது.

அங்கே  பாம்பு வ‌டிவ‌த்துல  உற‌க்க‌ நிலையில் உள்ள‌தா யோக‌ நூல்க‌ள் சொல்ற  குண்டலி எ  யோக‌ ச‌க்தியில் அசைவுகள் ஏற்படும். ஜெபத்தை தொடர தொடர  குண்டலி மேல் நோக்கி  நகர ஆரம்பிக்க வாய்ப்பு ஏற்படுது

குண்ட‌லி  மேல் நோக்கி நகர ஆரம்பிதால் என்ன‌ ந‌ட‌க்கும்னு கேப்பிக? ஏற்கெனவே ஒரு தாட்டி எழுதின மேட்டர்தான். இருந்தாலும் புது பார்ட்டிங்களுக்காக இந்த பார்ட்டை பதிவோட இறுதில தந்திருக்கேன்.

அது சரி குண்டலி யோகால்லாம் பல பிறவிகளுக்கு தொடரக்கூடிய ப்ராசஸாச்சே. அதெப்படி சில மாசங்கள்ளயே நூஸ்ஃபியர் எட்செட்ராவை எல்லாம் க்ரியேட் பண்ற ரேஞ்சுக்கு போயிருச்சுனு கேப்பிக.

மேற்சொன்ன‌ கிடு கிடு முன்னேற்ற‌த்துக்கு பெரிய்ய ஃப்ளாஷ் பேக் இருக்குங்கண்ணா.

பால்யத்துல சுக்கிர தசை வேற மாட்டிக்கிச்சா செம பேஜாராயிருச்சுப்பா .பார்ட்டி துரத்துன துரத்துல ஜெய் ஹனுமான் சீரியல் தனமா சாதனை ஆரம்பம். கொஞ்சம் நின்னு நிதானிச்சு பார்த்தா நம்ம ஆஞ்சனேயருக்கு ஒரு வீக் பாயிண்ட் இருக்கிறது தெரிய வந்தது. அதாவது ராம நாமம் எங்கே சொல்லப்பட்டா அங்கே இவர் ஆஜராம். ஸோ ராம நாம ஜெபம் ஸ்டார்ட். அதுவும் ஆஞ்சனேயர் ஸ்டைல்ல " ராம்" ( இதுவே நாமம் இதுவே பீஜம்னு டூ இன் ஒன்னா ஒர்க் அவுட் ஆயிருச்சு) + கிழவாடிங்க ஸ்டைல்ல "ராமா "

ராமாங்கற வார்த்தைல ஒரு சூட்சுமம். இதிலான முதலெழுத்து (ரா) ஹரா என்ற சிவன் பெயரில் கடைசி எழுத்தாகிறது. இதிலான இரண்டாம் எழுத்து (மா) உமா என்ற அம்மன் பெயரில் கடைசி எழுத்தாகிறது. ( கருத்து உபயம் : ராம கிருஷ்ண பரமஹம்சர்)


இப்படியாக மேற்படி கிடு கிடு முன்னேற்றத்துக்கு  துணை நின்னது  ராம‌ நாம‌ம் தான்.( 1986)

முக்திக்கான ப்ராசஸ்:
ஒரு பிறவி முழுக்க பஞ்சாக்ஷரி ஜபிச்சா தான் அடுத்த ஜன்மத்துல ராம நாமம் ஜெபிக்க தகுதி ஏற்படும். அந்த ஜன்மம் முழுக்க ராம நாமம் ஜெபிச்சா அடுத்த ஜன்மத்துல ஆத்தாளை அணுகற ஆர்வம் ஏற்படுமாம்.

டபுள் ப்ரமோஷன்:
நம்ம ஜாதகத்துல சூரிய,சந்திரர்கள் பக்கத்து பக்கத்து ராசிகளில் இருப்பதோடு பரிவர்த்தனமும் பெற்றதால் இது சிவசக்தியோகம் என்று சில காலம் பஞ்சாக்ஷரி ஜபித்ததுண்டு. அது ராமா என்று ஜபிக்கும் தகுதி தர ராமா ராமா என்ற என் ஜபம் சிவ சக்திகளை மனம் இளக செய்ய 3 ஜன்மங்களுக்கான ப்ராசஸ் 13 வருடங்களில் முடிந்து ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனின் ஹ்ரீங்கார பீஜத்தை ஜெபிக்கும் அதிர்ஷ்டம் ஏற்பட்டது. அதுவும் ப்ரணவம், வித்யா பீஜம், லட்சுமி பீஜம் ,சூரிய பீஜம்/ ஹரி பீஜம், மற்றும் காளி பீஜங்களுடன் ஜெபிக்கவே அது எக்குத்தப்பாக ஒர்க் அவுட் ஆகி ஆத்தா ஆவாஹனம் ஆகி , அந்த பவரை சமாளிக்க முடியாம பாடி காட்பாடி ஆகி ஷீரடி சாய்பாபா கணக்காய் 7 வருடங்களுக்கு பிச்சை எடுக்கவே வைத்துவிட்டது. அதற்கு பின் ப்ளாக் அண்ட் வைட் படமெல்லாம் ஈஸ்ட்மென் கலராகி இப்போ செம கலக்கு கலக்குது.

பதிவின் இடையில் சொன்ன படி குண்டலி விழித்தல் மேலெழுதல் இத்யாதி நடக்கறச்ச ஏற்பட கூடிய மாற்றங்கள்:

இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/

குண்டலி மூலாதாரத்தில் விழிப்படைந்தால்:

சுய‌ ந‌ல‌ம் எரிந்து போகும். ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ளுக்கு நாம் க‌ட்டுப் ப‌ட்டிருப்ப‌து காலாவ‌தியாகி அவை ந‌ம‌க்கு க‌ட்டுப்ப‌ட்டிருக்கும்.

குண்ட‌லி ஸ்வாதிஷ்டான‌த்தை தொட்டால்:
செக்ஸ் மீது க‌ட்டுப்பாடு ஏற்ப‌டும். நாமாக‌ போதும் என்று நினைத்தால‌ன்றி வீரிய‌ம் ந‌ழுவாது. உடலுறவுகளுக்கிடையில் நீண்ட இடைவெளி ஏற்படும்.

குண்ட‌லி ம‌ணிபூர‌க‌த்தை அடைந்தால்:
எல்லையில்லாத‌ ச‌ஞ்ச‌ல‌ம் ஏற்ப‌டும். பந்தாடும்.
அணாஹ‌த‌ ச‌க்க‌ர‌த்தை அடைந்தால்:
அவ‌ர் இவ‌ர் என்ற‌ வேறுபாடு ம‌றைந்து எல்லோர் மீதும் நிப‌ந்த‌னைய‌ற்ற‌ அன்பு ஏற்ப‌டும்.

விஸுத்தி:
வாக் ப‌லித‌ம் ஏற்ப‌டும். பேச்சில் காந்த‌ம் வ‌ரும்.அனைவ‌ரையும் க‌வ‌ரும். பேச்சுக்கு எல்லோரும் கீழ்ப‌டிவ‌ர்.

ஆக்னா:

பேச்சுக்கு அவ‌சிய‌மின்றி வெறும் பார்வையாலேயே ந‌ம் ம‌ன‌தில் உள்ள‌ எண்ண‌ங்க‌ளை ஆணையாக்கி எதிராளியை கீழ்ப‌டிய‌ வைக்க‌லாம்.


ச‌ஹ‌ஸ்ரார‌ம்:
இறைவ‌னுட‌ன் இர‌ண்ட‌ற‌ க‌ல‌க்கலாம்.


(கடைசி ஐட்டம்  மட்டும்  இன்னும் அனுபவமாகலிங்கண்ணா .  குண்டலி மூலாதாரம்,ஸ்வாதிஷ்டானம், மணி பூரகம், அனாஹதம், விசுத்தி எல்லாம் தாண்டி ஆக்னா சக்கரத்துல உட்கார்ந்து உட்கார்ந்த இடத்துல கண்டமேனிக்கு காரியம் நடந்துக்கிட்டிருக்கு. இடையில் தான் பழிக்கு பழி - பைசா பொறுக்கறதுனு கொஞ்சம் பின்னடைவு. அதையும் இன்னொரு ரவுண்ட்ல பிக் அப் பண்ணிருவம்லே)

(தொடரும்)

Saturday, November 6, 2010

ச்சூ மந்திரகாளி : இது நாத்திகர்களுக்கான பதிவல்ல

அண்ணே வணக்கம்ணே,
சில பல காலத்துக்கு முந்தி என்னோட சாக்தேய சாதனைய ஷேர் பண்ணிக்கலாம்னு அவள்ங்கற தலைப்புல ஒரு தொடரை ஆரம்பிச்சு அம்போனு விட்டுட்டன். உங்களுக்கு மேற்படி பதிவோட அவுட் லைன் கூட மறந்தே போயிருக்கும்னு நினைக்கிறேன். அதனால இங்கன அழுத்தி அதை ஒரு ஓட்டு ஓட்டிருங்க.

அதனோட கடைசி பாராவ பாருங்க.

//அந்த ஆளு ஏதும் சாங்கியம் சம்பிரதாயம்லாம் சொல்லலை. நானா சிலது ஏற்படுத்திக்கிட்டேன். சிலது காலப்போக்குல சேர்ந்துக்குச்சு. மந்திரம், மந்திரத்துக்குரிய மகராசி, எல்லா (ரு) மா சேர்ந்து என்னெல்லாம் நடத்தி வச்சாய்ங்கனு வரப்போற பதிவுகள்ள விவரிக்கிறேன். ஒரு ஆன்மீக பயணத்துக்கு தயாராயிருங்க. உடு ஜூட் //

பெருசா ஒன்னுமில்லை சக்தி உபாசனை ஆரம்பிச்சதும் கோபம் கொஞ்சம் அதிகமாயிருச்சு.( ஏற்கெனவே நமக்கு 'மனுஷனுக்கு' வராப்ல வரும்.) "செல்லாவிடத்து சினந்தீது"ன்னு வள்ளுவர் சொல்லியிருக்காரே. தாளி ..காசு பணமில்லாத அந்த காலத்துல கோபப்பட்டா  நம்ம பிழைப்புத்தான் நாறிப்போவும். மேலும் உஷ்ண கோளாறுகள் அதிகமாச்சு .

சரி ஆத்தா சான்னித்தியத்தாலதான் இதெல்லாம் நடக்குதுன்னு நானே ஒரு கணக்கு போட்டு ஆத்தாளை சாந்தப்படுத்த ஒரு கிளாஸ்ல மஞ்சத்தண்ணி வைக்க ஆரம்பிச்சேன்.

இந்த மேட்டர்ல ஆத்தா தன் மொதல்  திருவிளையாடலை காட்டினா. எங்கப்பன் அல்சர் பார்ட்டி எனக்கும் அல்சர் வந்துரும்ங்கற உள்ளுணர்வோ அ ஜன்ம குரு உச்சமாகி பிராமண நாக்கை கொடுத்துட்டாரோ அ செயின் ஸ்மோக்கர்ங்கற காரணத்தால நாக்கு மேல இருந்த கவரேஜ் எல்லாம் போய் காரம் அதிகமா தெரிய ஆரம்பிச்சுட்டதாலயோ காரம்ங்கறதை விலக்க ஆரம்பிச்சு வீரவன்னியத்திருமகளான என் மனைவியே "அய்யராத்து" சமையலுக்கு பழக்கப்பட்டுட்டா.

இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்துல திடீர்னு சாப்பாட்ல காரம் அதிகமாகி நாக்குல மூக்குல தண்ணி கொட்ட ஆரம்பிச்சா என்னனு நினைக்கிறது. எத்தனைதாட்டி தான் பொஞ்சாதிய வார்ன் பண்றது?

ஒரு நாள் ஏதோ ஸ்பார்க் ஆச்சு. ஆத்தாளுக்கு கலக்கி வச்ச மஞ்ச தண்ணிய ஒரு துளி வாய்ல விட்டு பார்த்தேன் சால்னா மாதிரி அப்படி ஒரு காரம் . படுபாவிங்க மிளகாயை அரைச்ச மிஷின்ல ஒடனே மஞ்சளை போட்டு அரைச்சாப்ல இருக்கு.

மஞ்ச தூளை மாத்தினேன். மறு நாள்ள இருந்து சமையல் ஓகே.

அப்பாறம் நம்ம மந்திர சக்திக்கு (?) வழில உள்ள மரத்து கிளிங்கல்லாம் வராம்பாரு வராம்பாருன்னு தங்களுக்குள்ள கம்யூனிக்கேட் பண்ணிக்கிட்டது,

சுக முனிவர் (கிளி மூஞ்சி) கிளி ரூபத்துல வீட்டுக்குள்ளாற வந்து கேம்ப் போட்டது.( புவனேஸ்வரி அம்மனோட அந்தப்புரத்துக்குள்ள போற கப்பாசிட்டி ஒரு ஆஞ்சனேயருக்கு அப்பாறம் சுக மகரிஷிக்குத்தேன் உண்டாம்)

மீடியம் மூலமா ஃப்யூச்சர்ல என்டர் ஆனப்ப ஒரு மியூசியத்துல பெரிய வாள்  அதுமேல நம்ம பேரு பொறிச்சிருந்தது மாதிரி மேட்டர்லாம் அடுத்தடுத்த பதிவுல சொல்றேங்கண்ணா