Saturday, November 3, 2012

சுய தர்மத்தை கை விட்ட "அவாள்"

"பர தர்மம் எவ்வளவு உயர்ந்ததானாலும் சுதர்மமே சிறந்தது"ன்னு கீதை சொல்லுது. இங்கன தர்மம் என்ற வார்த்தைக்கு மதம்னு ஒரு பொருள் கொடுத்து இந்துத்வா வாதிகள் அலப்பறை செய்வது தனி கதை. ஆனா  கீதை சொல்ற "தர்மம்"ங்கற வார்த்தைக்கு "இயல்பு"ன்னு பொருள் கொள்ளலாம்.

வேதங்கள்,புராணங்கள்,மற்றும் இவற்றின் சாரமாய் பிரசாரம் செய்யப்படும் கீதை இத்யாதிக்கு ஹோல்சேல் உரிமை கொண்டாடும் பிராமணர்களை சு தர்மத்தை விட்டு பர தர்மத்தை கை கொள்ளும்படி செய்தது நம்ம சூப்பற ஸ்டாரு ரஜினியின்  நண்பரான மோகன் பாபு தான்.

தெலுங்கு ஹீரோ மோகன்பாபுவை பற்றி உங்களுக்கு என்ன தெரியுமோ என்னமோ? ரஜினியின் சகவாச தோஷமோ என்ன இழவோ வருசத்துக்கொருதாட்டியாச்சும் எதையாவது அச்சானியமா  பேசி /யாரையாவது சந்தித்து எப்பவும் நியூஸ்லயே இருப்பாரு. லேட்டஸ்டா "தேனிகைனா ரெடி "னு ஒரு படம் எடுத்தாரு. (மகன் விஷ்ணு தான் ஹீரோ) .

இந்த படத்துல பிராமணர்களை இழிவு படுத்தறாப்ல காட்சிகள் இருப்பதாக பிராமண சங்கங்கள் போர்க்கொடி உயர்த்தின .( இந்த போர்க்கொடி என்னா கலரு பாஸு?)  மோகன்பாபு வீட்டின் மீது தாக்குதல் நடந்தது. விஷ்ணுவும்,பிராமண சங்க தரப்பும் பரஸ்பரம் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் மனித உரிமைகள் கமிஷனில் புகார் கொடுத்துக்கிட்டாய்ங்க. புகார் கொடுக்க வந்த விஷ்ணுவின் கார் மீது செருப்பு வீச்சு -கல் வீச்சு வைபவங்கள் கூட  நடந்தாச்சு.

முகமதியர் படையெடுப்பு காலத்துலருந்தே பிராமணர்கள் தங்கள் இயல்பை இழப்பது ஆரம்பித்துவிட்டது. சர்வைவல் காரணமாக  கொஞ்சம் கொஞ்சமா வேதம் - புராணம் -ஜோதிஷம் எல்லாத்தையும் மூட்டை கட்டி "ராஜ பாஷை"யை கற்பதும் - ஆட்சியாளர்கள் அன்னியர்/சுதேசி என்ற வித்யாசம் இல்லாது அவர்களுக்கு காட்டி கொடுத்து -கூட்டி கொடுத்து வருவதை சரித்திரம் பேசுகிறது.

இவிகளோட ப்ளஸ் பாய்ண்டே என்னடான்னா "புதுமையை" கேள்வி கேட்காது ஏற்பது. எல்லா குதிரை மேலயும் காலணா கட்டி வைக்கிறது. முதல்வர்கள்,மந்திரிகள்  மாறலாம்.ஆனால் செயலாளர்கள், ஐ.ஏ.எஸ்கள் மாற மாட்டார்கள்.ஆடிட்டர்,டாக்டர்,லாயர்கள் மாற மாட்டார்கள்.

அரசியல் அதிகாரம் ஆரு கையில இருந்தாலும் அதை அனுபவிக்கிறது மட்டும் இவா தான்.இந்த ஆட்டிட்யூடால  இழந்தவன் அதிலயும் விழிப்பு கண்டவன் கண்டதையும் எழுதி ,பேசி புலம்பினாலும் இவா எதையும் கண்டுக்கிடமாட்டாய்ங்க.

இழந்தவர்கள் கூட்டத்துலயே விழிப்பு பெறாத  வர்கம் "அட என்னப்பா சொம்மா அவாளை போட்டு கிளிச்சுக்கிட்டு"ன்னு வக்காலத்து வாங்கறாப்ல இருக்கும்.

நம்மாளுங்க எப்பமோ அண்டர் கிரவுண்ட்ல கண்ணிவெடி வச்சிட்டிருப்பாய்ங்க.  நேரம் வரும் போது அதுவா வெடிச்சு வைக்கும். அல்லது சூத்திர பயலுவ வர்ஜியா வர்ஜியமில்லாம எவள் கையையாவது இழுத்து வைக்கிறதோ .. கடிக்க கூடாத வஸ்துக்களை கடிச்சு வைக்கிறதோ  நடந்தா அப்பம் நம்மாளுங்களோட லாபி வேலை செய்ய ஆரம்பிக்கும்.அடி எங்கருந்து விழுதோ தெரியாத அளவுக்கு அடி விழூம்.

அட நம்ம நித்தி -ஜெயேந்திரர் மேட்டரை எடுத்துக்கங்களேன். லாபி இருந்தா ஜெயேந்திரர் கணக்கா பம்மலாம். லாபி இல்லின்னா நித்திக்கு அடிச்சாப்ல பம்படிச்சுருவாய்ங்க.

அவ்ளதானே தவிர ஆரு என்ன கிளிச்சாலும் ரோட்டுக்கு வர்ரது - கோசம் போடறது -கல் வீச்சு -செருப்பு வீச்செல்லாம் அவிக ஸ்கூல் கிடையாது,. ரெம்ப வலிச்சுருச்சு போலன்னு என்ஜாய் பண்ணிக்கிட்டு   திருடனுக்கு தேள் கொட்டின கணக்கா அமுக்கமா -கமுக்கமா இருந்திருவாய்ங்க.

ஒரு முருகேசன் வலிக்குது வலிக்குதுன்னு கத்தினா பத்து ரஜினி காந்தை வளைச்சு போடற வேலையில பிசியா இருப்பாய்ங்களே தவிர முருகேசன் மேல புகார் கொடுக்கிறது -புகாரி ஓட்டல் பிரியாணி அனுப்பறதெல்லாம் இருக்காது நடக்காது.

இன்னொரு முக்கிய மேட்டர் அவிகளுக்குள்ள சரியான புரிதல் இருக்கு அல்லது கம்யூனிகேஷன் இருக்கு.
எதுக்கு ரெஸ்பாண்ட் ஆகனும் எதுக்கு ரெஸ்பான்ட் ஆகக்கூடாதுன்னு ஒரு விதியே இருக்கு.அதை பரிமாறிக்கிறாய்ங்க.

கமிஷ்னருக்கு புகார் கொடுத்த அம்மணிக்காகட்டும் -ஆந்திரத்துல சாலைக்கு வந்து கல்லெறி -செருப்பு வீச்சு
சம்பவத்துல ஈடுபட்டவுகளுக்காகட்டும் இந்த புரிதல் இல்லைன்னு கன்ஃபார்ம் ஆகுது.ஆல்லது "அந்த வட்டத்தோட இவிகளுக்கு " கம்யூனிகேஷன் இல்லேன்னு தெரியுது .

ஒரு கட்டத்துல ஓம்கார் ஸ்வாமிகளை நான் கிளிச்சப்போ ஆருமே கிர்க்கா மர்க்காங்கலை. வெட்டிக்கு வக்காலத்து வாங்கற சோ ராமசாமி , டோன்டு ராகவன்லாம் கூட தொடர்பு எல்லைக்கு வெளிய இருக்கிறதாதான் கணக்கு.

இதை ஏன் கன்ஃபார்மா சொல்றேன்னா ..  நாளைக்கு சொல்றேனே ..