Friday, November 30, 2012

ராகு கேது பெயர்ச்சி : தனுசு மகரம்

அண்ணே வணக்கம்ணே !

நாலாங்கிளாஸ்லயே எட்டணா விலையில பலான புஸ்தவம் படிச்சு தொலைச்சுட்டதாலயோ என்னமோ இந்த 45 வயசுக்கே அபேத பாவம் , ஸ்தித ப்ரக்ஞத்வம் ,சூன்ய வாதம்னு என்னென்ன இழவோ மனசுல அலையடிக்குது.

கடவுள்,கிரகங்கள் இப்படி எல்லாமே நம்மை கழட்டி விட்டுட்ட மாதிரியே ஒரு ஃபீலிங்.  மைண்ட் ப்ளாங்கா இருக்கிறதால சனங்களோட எண்ணங்கள் எல்லாம் டெலிபதியில வந்து மோதறதை உணரமுடியுது. எது ஆரோடதுன்னு தெரியலின்னாலும் அந்த எண்ணங்களுக்கு ரெஸ்பான்ட் ஆக முடியுது.

மனித குல பிரச்சினைகளுக்கான தீர்வெல்லாம் நமக்குள்ளயே இருக்குன்னு புரிஞ்சாலும் - கை பம்புல தண்ணி இறைக்கிறதுக்கு மிந்தி கனெக்டிவிட்டிக்காக ஒரு செம்பு தண்ணி ஊத்திட்டு அடிக்கிறாப்ல வெளிய இருந்து சில  தீர்வுகளை தந்தே ஆகனும்.

மத்த தேசங்களை பத்தி  நமுக்கு பெருசா தெரியாதுங்ணா. இந்தியாவுலயே - அட ஆந்திராவுலயே -அட சித்தூர் ஜில்லாவுலயே - அட சொன்னா வெட்க கேடு சித்தூர் டவுன்லயே நம்ம கால் படாத பிரதேசங்கள் மஸ்தா கீது.

நாம  ஆராய்ச்சிக்கு எடுத்துக்கிட்டதெல்லாம் ராண்டம்  ஸ்பெசிமன் தான்.இப்பம் சனம் ஃபேஸ் பண்ற பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் வெளிய இருந்தாலும் தீர்வு மட்டும் உள்ளதேன் இருக்குது. அதை வெளிய கொண்டுவர கொஞ்சம் ஸ்தூல பிரச்சினைகளுக்கு தீர்வு தந்தே ஆகனும் பாஸூ..! பிருஷ்டம் எட்டற வரை தூக்கி விட்டுட்டா  அவனே ஏறிருவான்.

வெறுமனே சங்கல்ப்ப பலத்தை வச்சே  ஆப்பரேஷன் இந்தியா 2000  ஐ அமலாக்கிரமுடியும்னு தோனுது. நம்ம அதிஸ்டமோ துரதிஸ்டமோ நம்முது கடக லக்னமாச்சா இன்னைக்கு இருக்கிற வில் நாளைக்கு இருந்து தொலைய மாட்டேங்குது.

அடுத்து இவனுக மேல நமக்கு சுத்தமா நம்பிக்கை கிடையாது ரிப்பேரே பண்ண முடியாத அளவுக்கு அரசு இயந்திரத்தை ரிப்பேர் பண்ணிருவாய்ங்களோன்னு ஒரு பதைப்பு வேற இருக்கு.

சரி சரி இவன் புலம்ப ஆரம்பிச்சுட்டான்யான்னு பக்கத்தை மூடிட்டு போயிரப்போறிங்க. ஒரே ஒரு ஆந்திரா மசாலாவ பார்த்துட்டு உடனே  ராகு கேது பெயர்ச்சி பலனுக்கு போயிரலாம்.

ஆந்திரால எஸ்.சி.எஸ் டி சப் ப்ளான் கொண்டு வந்திருக்காய்ங்க. ரயில்வேக்கு தனி பட்ஜெட் போடறாப்ல . எஸ்.சி.எஸ்.டிக்கு தனி பட்ஜெட் போடப்போறாய்ங்களாம். இது 10 வருசத்துக்கு தொடரும். (இதே அரசு இயந்திரத்தை வச்சுத்தானே செலவழிக்க போறாய்ங்க -பேசாம உலகத்துலயே லஞ்ச ஊழல் ரேட் குறைவா இருக்கிற  ஜப்பான் போன்ற   நாடுகளோட இணைந்து எதையாச்சும் செய்யலாம்)

தனுசு: ( 5-11)

உங்களுக்கு கேது அஞ்சுக்கும் - ராகு 11 க்கும் வர்ராய்ங்க.  கடந்த ஒன்னரை வருசமா 6-12  ல  இருந்ததோட ஒப்பிட்டா இது ரெம்பவே பிரதிகூலம் தான். அஞ்சுங்கறது ரெம்ப சென்சிட்டிவான பாவம். (புத்திபாவம்)

புத்திமான் பலவான்.

KNOWLEDGE IS POWER

இந்த கான்செப்ட்ல ஆயிரத்தெட்டு கொட்டேஷன் எடுத்து விடலாம்.  இப்படியா கொத்த புத்திஸ்தானத்துல கேதுவர்ரச்ச நீங்க வேதாந்தம் , தியானம்,யோகம்னு டைவர்ட் ஆயிட்டா ஓகே. அப்படியல்லாது லவ்ஸ்,கண்ணாலம், பார்ட்டின்னு இருந்திங்கனா ஆப்புதேன்.

தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் - மாவு விக்க போனா காத்தடிக்குது கணக்கா கடுப்படிக்கும்.

இது புத்ர ஸ்தானம். உங்க வாரிசுகள் வேதாந்தம் , தியானம்,யோகம்னு டைவர்ட் ஆயிட்டா ஓகே. அப்படியல்லாது லவ்ஸ்,கண்ணாலம், பார்ட்டின்னு இருந்தாங்கனா  நாறிரும்.

தென்னைய பெத்தா இள நீரு
பிள்ளைய பெத்தா கண்ணீருன்னு அவதிபடவேண்டி வரும்.

தோன்றிற்புகழோடு தோன்றுகன்னாய்ங்க. ( நிருபர் பசங்களுக்கு கவர்ல காசு கொடுத்துல்லாம் பெயர் புகழை வாங்க முடியாதுன்னு அந்த காலத்துல நம்பியிருக்காய்ங்க )

இந்த உலகமே பரிசா கிடைக்கிறதா இருந்தாலும் அவப்பேர் தரக்கூடிய வேலைய செய்யமாட்டோம்னு ஒரு பாட்டு கூட இருக்கு.

இப்பல்லாம் 40''x60" மனை கிடைச்சா போறும்.பொஞ்சாதிய விட்டுர்ரதுக்கு ரெடி சனம். கலி முத்திப்போச்சு.

நிற்க .. அஞ்சுல கேது புத்திய மாத்தி, புத்திரர்களோட மோத வச்சு, அடாத செயல் எல்லாம் செய்யவச்சு படாத பாடு படுத்திருவாரு. சாக்கிரதை.

அதே நேரம் இவர் எந்தளவுக்கு ஆப்படிக்கிறாரோ -ஆப்படிச்சு முடிக்கிறாரோ அந்தளவுக்கு 11 ல ராகு ரிலீஃப் கொடுப்பாரு. நல்லது திடீர்னு நடக்கும். ஸ்பெக்குலேஷன்,வின்ட் ஃபால் கெயின்ஸ் இத்யாதிய எதிர்பார்க்கலாம்.

வேறு மொழி பேசுவோர், வெளி நாட்டில் உள்ள இந்தியர்கள் உதவலாம்.சினிமா,லாட்டரி,வைன்ஸ் ,இம்போர்ட்,எக்ஸ்போர்ட் மாதிரியான ராகு காரகங்கள் அனுகூலம் தரலாம்.

11 ல் சனி ராகு:

2-3 க்கு அதிபதியான சனியோட ராகு சேர்ரதால பணம் திருடு போகலாம்,கொடுத்து ஏமாறலாம். ஃபுட் பாய்சன், மெடிக்கல் ரியாக்சன் நடக்கலாம். விஷ பீதி ஏற்படலாம். வாக்கு தவற நேரலாம்.கொடுத்த வாக்கை நிறைவேற்ற ரெம்பவே லாஸ் ஆக நேரலாம். குடும்பத்துல குழப்பம் வரலாம்.(விதவை பெண்களிடம் - ஓரப்பார்வை பார்க்கும் பெண்களிடம் எச்சரிக்கை ) கண் பார்வை கூட பாதிக்கப்படலாம்.

சகோதரர்கள் நிலை கவலைக்கிடமாகலாம்.ஆனால் இதனாலயே அவிக வழிக்கு வந்து சொத்து பிரச்சினை தீரலாம். அதே சமயம் உங்க கைக்கு வந்ததை எவன்னா லவுட்டிக்கிட்டும் போயிரலாம் டேக் கேர்.

பரிகாரம்:

நீங்களும் உங்க வாரிசும் தினசரி 1 மணி நேரம் - வாரத்துல ஒரு நாள் காவி உடை தரித்து வினாயகர் துர்கையை தியானம் செய்யவும் (அவிக உருவத்தை கற்பனை செய்தா போதும்)

மகரம்:(4-10)
உங்க ராசிக்கு  4 ல் கேதுவும் 10 ல் ராகுவும் வர்ராய்ங்க. தாய்  தினசரி 1 மணி நேரம் - வாரத்துல ஒரு நாள் காவி உடை தரித்து வினாயகர் பூஜை செய்துவந்தால் நோ ப்ராப்ளம். இல்லின்னா உடல் நலம் பாதிக்கலாம் (ஜெனரல் வீக்னெஸ்),வீடு ஒரு ஆசிரமம் போல மாறனும்.இல்லின்னா பிரச்சினை வரலாம். வாகன மேட்டர்ல வாரத்துல ஒரு நாள் சர்ச் அ தர்கா போய்வரவும்.இல்லின்னா அதுலயும் பிரச்சினை வரலாம்.

4 =வித்யா ஸ்தானம் ,கேது = ஆத்ம ஞான காரகன் .ஆகவே ஆன்மீகம் -தியானம் தொடர்பான நூல்களை படிக்கவும். ஏற்கெனவே இதயம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் அவை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்குது.

பத்தில் ராகு வரும்போது செய்யும் தொழில்ல புதுமைகளை புகுத்தி ஆரம்பத்துல சில சல சலப்புகளை எதிர்கொள்விங்க.

சனி+ராகு:

சனி உங்களுக்கு லக்ன+தனபாவாதிபதி. இவரோட ராகு சேர்ரதால சனி பலமிழக்கும் வாய்ப்பிருக்கு. எனவே  உடல்,உள்ள நலம் பாதிக்கலாம். (சந்தேக புத்தி சாஸ்தியாயிரும் அல்லது உங்களை சனம் சந்தேகிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க) . பாடி துவைச்சு போட்டாப்லயே இருக்கும். அதே போல பணம் ,பொருள் திருடு போறது,கொடுத்து ஏமாந்துர்ரது,வாக்கு தவறுவது, வாக்கை காப்பாத்த அதிக அளவுல நஷ்டபோறது,குடும்பத்துல குழப்பம் வரலாம்.(விதவை பெண்களிடம் - ஓரப்பார்வை பார்க்கும் பெண்களிடம் எச்சரிக்கை ) கண் பார்வை கூட பாதிக்கப்படலாம்.

பரிகாரம்:
பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வீட்டு ஹாலில் அந்த கால க்யூப் தனமான வால் பேப்பர் அ போஸ்டர் வைக்கவும்.

அடுத்த பதிவுல கும்பம்,மீன ராசிகளுக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்களை பார்ப்போம்.