Thursday, November 22, 2012

ராகு கேது பெயர்ச்சி பலன்: சிம்மம் ,கன்னி

அண்ணே வணக்கம்ணே !
நேயர் விருப்பம் கணக்கா இந்த ராகு கேது பெயர்ச்சி பலனை தந்துக்கிட்டிருக்கேன். இந்த கோசார பலன்கள் பற்றிய நம்ம கருத்தை தெரிஞ்சுக்க இங்கன அழுத்துங்க.

நேத்திக்கு மிதுனம்,கடக ராசிகளுக்கான பலனை பார்த்தோம். இன்னைக்கு சிம்மம் கன்னி. பதிவுக்கு போறதுக்கு மிந்தி ஒரு வார்த்தை நம்ம சைட்டே ஒரு ஜோதிட கலைக்களஞ்சியம் மாதிரி ஆயிருச்சு. அதனால மொதல்ல சைட்ல ராகு ,கேது,சர்ப்பதோஷம்னு தேடிப்பிடிச்சு பழைய பதிவுகளை படிச்சுருங்க. அப்பத்தேன் ஒரு ஐடியா வரும்.

5.சிம்மம்: (3-9)
கடந்த 1.5 வருசமா 4-10 ல இருந்த ராகு கேது இப்பம்  3-9 க்கு வர்ராய்ங்க. 3ங்கறது தைரிய ஸ்தானம். இங்கன பாப கிரகம் அதுவும் சர்ப்ப கிரகம் வர்ரது நெல்லதுதேன். இதனால தில்லு துரையா மாறிருவிங்க. நேருக்கு நேரா மோதலின்னாலும் உள்ளடியாவது அடிச்சு எதிரியை கிறுகிறுக்க வச்சிருவிங்க. பயணத்துக்கு அஞ்சமாட்டிங்க. சகோதர வர்கத்துல உங்க கை மேல் கையா மாறும். எல்லாம் ஓகே .ஆனால் சவுண்ட் பாக்ஸ் ரிப்பேர் ஆயிர சான்ஸ் இருக்கு.சாக்கிரதை.

தெலுங்குல தைர்யே சாஹசே லக்ஷ்மீம்பாய்ங்க. அதாவது தகிரியமும்- சாகசமும் தான் மன்சனுக்கு லெச்சுமின்னு அருத்தம். ஆனால் டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் இல்லியா. இடம் தெரியாம -ஆள் தெரியாம மோதிட்டு சொத்து,சுகத்தை எல்லாம் விட்டு ஸ்டேட் விட்டே ஓடவேண்டி கூடவரலாம் . சிலர் வெளி நாட்டுக்கே கூட போயிரலாம்.

சனி+ராகு:
சனி 6-7 பாவங்களுக்கு அதிபதி. ஆறுக்கதிபதிங்கறதால சகோதர வர்கம் நோய் வாய்ப்படலாம். அவிகளோட உங்களுக்கு வழக்கு வில்லங்கம் ஏற்படலாம். லாவா தேவி நடக்கலாம். அதே சமயம் உங்க  சத்ருக்கள் இருட்டுக்கு போயிருவாய்ங்க. கடன்கள் மீதான ப்ரஷர் குறையலாம். ஏழுக்கதிபதியா சனி  3 க்கு வர்ரது நெல்லதில்லை. இதனால மனைவிக்கு அல்லல் அலைச்சல் அதிகரிக்கும். ராகு காரக நோய்கள் ஏற்படலாம். அவர் உப்பு ஊறுகாய்க்கு ஒதகாத மேட்டர்ல  ரகசியம் காக்க நீங்க சிண்டை பிய்ச்சுக்கலாம்.
பரிகாரம்:
சொத்து,முதலீடு ,சேமிப்பு தொடர்பான டாக்குமென்டுகளை போட்டு வைக்கிற ஃபைல்ல வினாயகர் படத்தை ஒட்டி வைங்க. அல்லது மல்ட்டி கலர் ஃபைல் யூஸ் பண்ணுங்க (க்யூப் கணக்கா) தூர பிரயாணம் செய்யும் போது பிற மத பிரார்த்தனை ஸ்தலங்களுக்கு போய் வழிபடுங்க. மனைவியை பாம்பு வடிவ மோதிரம் அணிந்து துர்கையை வழிபடச்சொல்லுங்க.

6.கன்னி:(2-8)
ரெண்டுங்கறது நீங்க சாப்பிடற சாப்பாட்டை காட்டுது. கேது,ராகுன்னா தெரியுமில்லே .விஷம். ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அதான் தலையெழுத்து.
பெண் ஜாதகத்தில் இது மாங்கல்ய தோஷம் எனப்படுகிறது. கணவன் ஜாதகத்தில் ஆயுள் பங்கமிருந்தால் அவர் உயிரே கூட போகலாம் என்பது இதன் பொருள். ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.
இவருக்கு பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம்.ஒவ்வொரு விஷயத்துக்கும்  எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல் ஆகிய குணமிருக்கலாம். குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம். பிக் பாக்கெட் போகலாம், கொள்ளை போகலாம், எவருக்கேனும் கொடுத்து ஏமாறலாம் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம்.
பரிகாரம்:
இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம்  எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (வட்டிக்கு ஆசைப்பட்டு) கழுத்தில் ஒரு புறம்  துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை  வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.
ராகு பரிகாரம்:
உலக மகா கொள்ளைகள், கொள்ளைக்காரர்கள் போன்ற புத்தகங்கள் படித்தல். மேஜிக் கற்றுகொள்ளுதல், அன்னிய மொழி கற்றல்
கேது பரிகாரம்:
அன்னிய மொழி கற்றல், தியானம் யோகம் பயிலுதல், யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படித்தல்
சனி+ராகு:
சனி 5-6 க்கு அதிபதி. 6க்குஅதிபதியான இவர் 2 ல் நிற்கிறதால கடன் ,வாக்கால் விரோதம், குடும்ப கலகம்,கண் நோய் ஏற்படலாம். அதே நேரம் இவர் அஞ்சுக்கும் அதிபதியா இருக்கிறதால திடீர்னு லாட்டரி தனமா ஒரு தொகை கைக்கு வரலாம். அதே நேரம் கூட ராகு இருக்கிறதால வந்ததும்  தெரியாம போனதும் தெரியாம போயிரலாம். நிராசை, அவமானங்கள்,அவப்பேர்,வாரிசுகள் விஷயத்துல மனோவியாகூலம்,அதிர்ஷ்டத்தை நம்பி செய்யற வேலைகளில் ஆப்பை எதிர்ப்பார்க்கலாம்.

பரிகாரம்:
பிள்ளைகளை பிரிந்திருங்கள் .அல்லது டிடாச்டா இருங்க. அவிக மம்மி கிட்ட கண்ட்ரோலை விட்டுருங்க. பெயர்புகழுக்கு ஆசைப்படாதிங்க. கும்பல்ல கோவிந்தா போடுங்க. அதிர்ஷ்டத்தை நம்பி எதையும் செய்யாதிங்க.திருமலை வராகஸ்வாமியை தியானம் பண்ணுங்க , துர்கையின் உருவத்தை மனதில்  நிறுத்துங்க.