Thursday, November 15, 2012

நவகிரகங்களுடன் ஒரு பேட்டி

நான்:
வணக்கம்  சூரியன் சார் !

சூரியன்:
வணக்கம். கேள்விகளை எழுதி கொடுத்துருங்களேன்.. பதிலை ஃபேக்ஸ் பண்ண சொல்றேன்

நான்:
பாஸ் ! நீங்க ஒன்னை சொல்ல  நான் ஒன்னை எழுதி சொதப்பிருவன்னு பயப்படறிங்க போல.. உங்களுக்கு அந்த கவலையே வேணாம். ஏன்னா நம்ம மைண்ட் ப்ளாங்கா இருக்கு.

சூரியன்:
இல்லைப்பா.. நான் தான் செல்ஃப் - ஈகோவுக்கெல்லாம் காரகன். நீ இவ்ள கிட்டே வந்திருக்க.  என் ஸ்டேட்மென்டை  உன் ஈகோவும் செல்ஃபும்  நிச்சயம் கர்ரப்ட் ஆக்கிரும்.

நான்:
தலை ! உங்களுக்கு அந்த கவலையே வேணாம்.  நம்ம அடிப்படை கொள்கை மனிதம். அதுக்கு விரோதமா எதுனா இருந்தா அதை அவுட் ஆஃப் ஃபோக்கஸ்ல வச்சு எக்சிபிட் பண்ணுவமே தவிர மத்தபடி எந்த மேனிப்புலேஷனும் இருக்காது.

சூரியன்:
சரிப்பா.. உன் கேள்விகளை கேளு

நான்:
பிரம்மங்காருவோட வாழ்க்கை வரலாறை என்.,டி.ஆர் சினிமாவா எடுத்தாரு.அதுல தீண்டாமைய கண்டிச்சு பிரம்மங்காரு பாடறாப்ல ஒரு பாட்டு வரும்.அந்த பாட்டுல  "ஜகதின வெலிகே சூர்ய சந்த்ருலு நீ கூடான வெலகனன்டாரா"ன்னுட்டு ஒரு வரி வரும். ( இந்த உலகில் ஒளிரும் சூரிய சந்திரர்கள் உங்க சேரில ஒளிர மாட்டாங்கிறாய்ங்களா)

ஆக பாரபட்சமில்லாம எல்லா உயிர்கள், பொருட்கள் மேலயும் உங்க கதிர்கள் விழுது இல்லியா. அப்பாறம் ஏன் மக்கள் உங்க காரகங்களை சமமா அனுபவிக்க முடியாம போயிருது?

சூரியன்:
மழைத்துளி எல்லா இடத்துலயும் விழுது.ஆனால் வாய் திறந்து கிடக்கிற சிப்பியில விழுந்தப்ப தானே முத்தா மாறுது.

நான்:
அது சரி..உங்க கதிரொளி என்ரிச் ஆகாட்டி போகுது. நெகட்டிவ் ரிசல்ட் ஏன் கொடுக்குது?

சூரியன்:
கண்ணா .. மொட்டை மாடியில சின்டெக்ஸ் டேங்க் வைக்கிறிங்க இல்லை. அதை கவிழ்த்து போட்டா என்ன ஆகும்? அப்போ சிரபுஞ்சி கணக்கா அடை மழை பொழிந்தாலும் டேங்கு ரொம்புமா?

நான்:
ரொம்பாட்டி போகுதுங்ணா.. நெகட்டிவ் ரிசல்ட்டு ஏன் வருது? இதான் நம்ம கேள்வி.

சூரியன்:
காந்தியும் -அவரோட நண்பர் ஒருத்தருமா ரெண்டு பேர் அரிச்சந்திரா நாடகம் பார்க்க போனாய்ங்க. காந்தி உண்மையையே பேசனுங்கற மெசேஜை ஆக்செப்ட் பண்ணி இன்ஸ்பைர் ஆயிட்டாரு. காந்தியோட நண்பர் "ஆத்திர அவசரத்துக்கு பொஞ்சாதியை அடகு வைக்கலாம்"ங்கற மெசேஜை ரிசீவ் பண்ணிக்கிட்டாரு.

நாடகம் ஒன்னுதான். கிராஸ்ப் பண்ணிக்கிட்டது ரெண்டுவித மெசேஜ். அட என் ஒளியையே எடுத்துக்கயேன். சோலார் பானல் மேல விழுந்தா சோலார் பவர் .  இதுவே கோல்ட் ஸ்டோரேஜ்ல வைக்கவேண்டிய மெடிசின் மேல விழுந்தா?

நான்:
பல்பு இப்பம் எரியுது..அடுத்த கேள்வி..உங்க ஒளியில விட்டமின்ஸ் இருக்குங்கறாய்ங்க. சுண்ணாம்பு சக்திங்கறாய்ங்க ( கால்ஷியம்) . எங்க விஞ்ஞானிகளும் இதை கன்ஃபர்ம் பண்ணியிருக்காய்ங்க.இது ஓகே.

நீங்க ஜாதகத்துல நெல்ல பொசிஷன்ல இருந்தா தலைமை குணங்கள் வரும்ங்கறாய்ங்க.. அதெப்படி சாத்தியமாகுது?

சூரியன்:
எவ்ரி மேன் ஈஸ் எ ப்ளேனட். நான் நெல்ல பொசிஷன்ல இருந்தா அந்த ஜாதகன் நானா மாறிர்ரான். நான் ஆரு? கிரகக்கூட்டத்தின் தலைவன். அதனால அவனுக்கும் தலைமை குணங்கள் வருது.

நான்:
போங்க பாஸ் .. நீங்க சொம்மா லாஜிக் சொல்ட்டு கழண்டுக்கலாம்னு பார்க்கிறிங்க. நான் கேட்கிறது ப்ராசஸ், தலைமைகுணங்கள் ஜாதகன்ல வர்ரதுக்குண்டான ப்ராசஸ் எப்படி ஆரம்பிக்குது?

சூரியன்:
கொய்யால உன் லக்னத்துல நின்னாலும் நின்னேன். இப்டி நோண்டி நுங்கெடுக்கிறியே.. நாளைக்கு வா பேசிக்கலாம்

நான்:
லக்னத்துல சூரியன் நின்னா சொந்தத்துக்கு செய்ற வேலை எதுவும் உருப்படாதுன்னு ஒரு பலன் சொல்றாய்ங்களே.. இது எப்படி ஒர்க் அவுட் ஆகுது?

சூரியன்:
ஸ்.. என்னை ரெம்ப சூடேத்தறே.. நாளைக்கு சொல்றேன்..

நான்:
ஓகே பாஸ்..   உங்க சூட்டுல காதுல லேசா புகை வராப்ல இருக்கு.  அப்டியே ஆகட்டும் .சீ யு டுமாரோ..