Sunday, January 30, 2011

பத்தாம் பாவமும் படுக்கையறை சுகமும்

ஜோதிட விதிகளின் படி பத்தில் (லக்னம் முதல் 10 ஆவது ராசியில்) ஒரு பாவியாவது  இருக்கவேண்டும் அ ஒரு பாம்பாவது இருக்கவேண்டும்ங்கறாய்ங்க. பத்துல பாவி இருந்தா அவன் அகிம்சாவாதியாவா இருப்பான்? நோ. பத்துல பாம்பு இருந்தா அவன் சட்டப்படி வியாபாரம் பண்றவனாவா இருப்பான் ? நோ ஆனாலும் எதுக்கிந்த பாவி,பாம்பு சமாசாரம்? இதுக்கும் படுக்கையறை சுகத்துக்கும் என்ன சம்பந்தம்? கேப்பிக சொல்றேன்.

9ஆவது இடத்தை தர்ம ஸ்தானம்னும் 10 ஆமிடத்தை கர்மஸ்தானம்னு சொல்றாய்ங்க. இதுல பெரிய சூட்சுமம் இருக்கு. 9ங்கறது சொத்தை காட்டற இடம். உங்க கணக்குல தர்மம் இருந்தாதான் சொத்து  இருக்கும். சொத்து இருந்தா நிலையான வருமானம் இருக்கும். கு.ப வருமானவரியை குறைக்கவாச்சும் செய்விக.

பத்துங்கறது கர்ம ஸ்தானம்.அதாவது நீங்க என்.............னா தொழில் செய்தாலும் அது என்ன்ன்னாஆஆஆஆஆ நாணயமான தொழிலா இருந்தாலும் உங்களுக்கு வர்ர ஒவ்வொரு பைசா பின்னாடியும் அதை உங்களுக்கு கொடுத்தவனோட கருமமும் வந்து சேரும்.

இதை பாலன்ஸ் பண்ணா நல்லாருக்குமே - இது ரெண்டும் சேர்ந்திருந்தா நல்லாருக்குமேனுதான் இந்த ரெண்டு பாவாதிபதியும் சேர்ந்தா நல்லது .அது தர்ம கர்மாதிபதியோகம்னு சொல்லியிருக்காய்ங்க. சொத்தும் இருக்கும் -நிலையான வருமானமும் இருக்கும் -கூடவே கருமமும் செய்விக (தொழில்) சாரிட்டியும் அமோகமா நடக்கும் . இது பெட்டருனு நினைச்சாப்ல இருக்கு.


ஆனால் எத்தனையோ வள்ளல்களோட வாரிசுகள் இன்னைக்கு பிச்சையெடுக்கிறதை பார்க்கிறோம் படிக்கறோம். இது எப்டி? எப்டி? எப்டி? 

நீங்க மூதாதையரோட சொத்துல கிடைச்ச பணத்தால சாரிட்டி பண்ணா அந்த மூதாதையர்களோட கருமம்தான் தொலையும், உங்க கருமம் தொலையாது. இன்னம் சொல்லப்போனா அவிக கருமம் வந்து உங்க தலையில உட்காரும்.

சரிங்க .. நான் தொழில் செய்து பொருளீட்டி தர்மம் பண்றேம்பிங்க. தொழிலே கருமம்தேன். வியாபாரம் த்ரோஹ சிந்தஹா.

நாம பாவம்ங்கறது பென்சில் எழுத்து -புண்ணியங்கறது ரப்பர் மாதிரினு நினைக்கிறோம். அது தப்பு. அன்னமாச்சாரி "தெகது பாபமும் -தீரது புண்ணியம்"ங்கறாரு.

பாவம் அறுந்து போகாது. புண்ணியம் தீர்ந்து போகாதுனு அர்த்தம். ரெண்டும் ரெண்டு ட்ராக்ல ஓடிக்கிட்டே இருக்கும். அப்ப நான் தொழிலே செய்ய கூடாதானு கேட்கலாம். செய்யலாம். ஆனால் நான் வானத்தை கீறி வைகுண்டத்தை காட்டறேன், நான் கர்ண மகா பிரபு தானம் பண்றேன் தர்மம் பண்றேன்னெல்லாம் கிளம்ப கூடாது.

நம்ம தேவைக்கு+ எதிர்கால பாதுகாப்புக்கு  பொருளீட்டின பிறவு  ஃப்ரீயா உடுமாமேனு  விட்டுரனும். இன்னைக்கிருக்கிற நிலைமைக்கு ஒழுங்கு மரியாதையா மானம்,ஈனம்,சூடு ,சுரணை எல்லாத்தயும் விட்டுட்டு "பொழப்ப" பார்த்தா ,சிக்கனமா வாழ்ந்து பத்துரூபா எடுத்து வச்சா இந்த மாதிரி ஒரு திட்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிச்சா ஒரு பத்து வருஷம் தொழிலை தொழிலா செய்தா போதும் . அப்பாறம் ரிட்டையர்டு லைஃபுக்கு வந்துரனும்.

உனக்கு பசி . ரோட்டோரம் ஏதோ தோட்டம் இருக்கு. பசிக்கு ரெண்டு பழம் சாப்பிட்டே. ரெண்டை மடில கட்டிக்கினே. போய்க்கினே இரு. நீ என்ன பாடையில போறவரை  கூடையில எடுத்து  கூப்டு கூப்டு தர்மம் பண்றது? தோட்டத்துலயே விட்டுரு.  உனக்கு பின்னாடி பசியோட வர்ரவன் ரெண்டை தின்னுட்டு ரெண்டை மடில கட்டிக்கிட்டு போவட்டும்.

அடடா..பதிவு  ரெம்ப சீரியஸா போயிட்டாப்ல இருக்கு.  பத்து தொழில் ஸ்தானம். இங்கன பாபகிரகமோ,பாம்புகிரகமோ இருந்தாதேன் மனுசன் "எதையோ" ஒன்னை பண்ணி துட்டு சேர்ப்பான். துட்டு சேர்த்தாதேன் பொஞ்சாதி. ( கொண்டு வந்தால் மனைவி).

பணம் சம்பாதிக்கனும்னா நீங்க செய்யவேண்டியதெல்லாம் ரெண்டுதேன். ஒன்னு எதிராளிய  கொல்லனும் (ஃபிசிகலா இல்லிங்க பாஸ்..சைக்காலஜிக்கலா)  இல்லை நீங்க சாகனும். தொழில்ல நீங்க எந்த அளவுக்கு உங்களை சனம் கொல்ல அனுமதிக்கிறிங்களோ அந்த அளவுக்கு கொலைவெறி ஏறும். இது தீர நீங்க செக்ஸ்ல இறங்க வேண்டி வரும்.செக்ஸ் லைஃப் ஓஹோ தான்.

கொல்றதுன்னா எதிராளியோட  ஈகோவை கொல்றது கூட கணக்குதேன். நீங்க கொல்ல ஆரம்பிச்சா பணம் சம்பாதிக்கமுடியாது . உங்க ஈகோவை எதிராளிகள் கொல்ல அனுமதிச்சா சுராங்கனிக்கா சேக்கு ( செமை பணம்)

இதுக்கு சின்னதா ஒரு  உதாரணம்:


கடைக்காரர்: என்னண்ணே .. ஒரே தாட்டியா நாலணா குறைக்க சொன்னா எப்டி? இதுல எனக்கு வர்ரதே அஞ்சு பைசாதேன்

வாங்க வந்தவர்:யோவ் நான் ட்ராயர் போட்ட வயசுலருந்து இப்படி அஞ்சு பைசா அஞ்சுபைசானு சொல்லியே அஞ்சு காம்ப்ளெக்ஸ் கட்டிட்டே.ஏன்யா இப்படி பீலா விடறே.சரி ஒழி ..இந்தா பணம் , சரக்கை அனுப்பி வை

இதுல கடைக்காரரோட செக்ஸ் லைஃப் சூப்பரா இருக்கும். வாங்க வந்தவரோ கொல்லும் இச்சை இங்கேயே நிறைவேறிட்டதால அவரோட செக்ஸ் லைஃப் நியூஸ் ரீல் மாதிரிதேன் இருக்கும்.

தொழில் ஸ்தானத்துல பாவகிரகம்,பாம்புகிரகம் உள்ளவன் எதையோ உருட்டி பிரட்டி, பொய்யோ,புரட்டோ பண்ணி ஒப்பேத்தி பணம் சம்பாதிச்சுருவான் - குடும்பத்துல ,சமூகத்துல அவனோட சர்வைவல் ஓகே ஆயிரும். நேச்சுரலாவே அவனுக்குள்ள தன்னம்பிக்கை பெருகும்.ஆண்மை பெருகும். கில்மால விளையாடுவான்.

பை சான்ஸ்.  பத்துல சுபகிரகம் இருக்குதுனு வைங்க உஞ்ச விருத்திதேன். அவன் ஆன்மீக ரீதியில பெரிய ஆளா வளரலாம்.ஆனால் லோகாயதமா பார்த்தா அதுவும் செக்சுவலா பார்த்தா வீக்குதேன். இதை வீக்குனு சொல்ல முடியாது. சுலபமா தாண்டிருவான்.

சரிங்கண்ணே என் ஜாதகத்துல பத்துல கிரகமே இல்லையேனு ஃபோன் பண்ணிராதிங்க.அந்த பாவம் காலியா இருந்தாலும் அந்த பாவாதிபதி பாபியா சுபனா எங்க நின்னாரு பத்தை ஆரு பார்க்கிறாய்ங்கங்கறத பொருத்து தொழிலும் , கில்மாவும் அமையும். உடு ஜூட்டு..