Sunday, January 9, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்: 4

வணக்கம் தலை! இந்த தொடரோட மொத சாப்டர் முன்னுரை - ரெண்டாவது சாப்டர் ஆண் மேல் முறை -மூணாவது சாப்டர் பெண் மேல் முறை. இதை படிக்காதவுக ( நேத்து ஞா கிழமையாச்சே) இங்கேஅழுத்தி ஒரு ஓட்டு ஓட்டிருங்க.

இருக்கிறதையெல்லாம் விட்டுட்டு கிழவியை தூக்கி மணையில வையிங்கற கதையா நாட்ல பத்தி எரியற மேட்டரை எல்லாம் விட்டுட்டு இந்த கில்மா மேட்டர் தேவையானு கேப்பிக.

என் பாய்ண்ட் என்னடான்னா மரணம் - மைதுனம்- பணம் எல்லாம் ஒன்னுதேன். சனம் செத்துக்கிட்டிருக்காய்ங்கப்பு. சைக்காலஜிப்படி சனம் செய்யவேண்டியது ரெண்டைதான். ஒன்னு கொல்லனும் அ கொல்லப்படனும். இவிக என்ன செய்தாலும் அதுக்கு இவிகளை உந்தி தள்றது மேற்படி ரெண்டு உணர்வுகள்தான்.

இந்த ரெண்டு உணர்வுகளையும் தியானத்தின் மூலமா ஒர்க் அவுட் பண்ணிக்கமுடியும். மனிதன் தன்னை தன் அகந்தையாவே ஐடென்டிஃபை பண்ணிக்கிறான். தியானம் அகந்தைய கொல்லுது. தன்னை உலகின் மையமா கருதி (மயங்கி) வாழ்ந்த மன்சன் " இத்தரை கொய்யாப்பிஞ்சு நாமிதிற் சிற்றெறும்பு"ங்கற கன் க்ளூஷனுக்கு வந்துர்ரான். ஈகோ டமால்.

இது இவிகளுக்கு கைவராததால தான் தங்களையே இந்த படைப்பின் மையங்களா கொண்டு அகந்தையை வளர்த்துக்கிட்டு அதுக்கு சின்ன உரசல் வந்தாலும் கொலை தற்கொலையில இறங்கிர்ராய்ங்க. அழிஞ்சுபோயிர்ராய்ங்க.

தற்கொலை:

"தென்னிந்தியாவிற்கு தற்போது `தற்கொலை தலைநகரம்` என்ற பெயர் உலக அளவில் கிடைத்திருக்கிறது. உலக அளவில் ஒரு லட்சம் பேரில் 15 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தென்னிந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 60 ஆண்களும், 150 பெண்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்." மேலும் படிக்க இங்கே அழுத்துங்க

கொலை:
ஜஸ்ட் தில்லில மட்டும் கொலை விவரங்களை காண இங்கே அழுத்துங்க

இந்த லிஸ்டுல சாலை விபத்துக்களையும் சேர்த்தாகனும். விபத்துல சிக்க்றது நிறைய சந்தர்ப்பத்துல தற்கொலையா தான் இருக்கு (மப்புல ஓட்டறது - ராக்கண் முழிச்சு ஓட்டறது - அதிவேகத்துல ஓட்டறதுல்லாம் தற்கொலை தானே பாஸ்)

இப்படி ஓட்டி அவன் செத்தா தற்கொலை. எதிர்ல வந்தவனோ, கூட இருந்தவனோ செத்தா அதுவும் கொலைதான்.

பணம்:
திருட்டு,கொள்ளை,ஊழல் பத்தியெல்லாம் புதுசா சொல்ல தேவையில்லை. அதான் தில்லிலருந்து நாறுதே.

மன்சனு பொறந்துட்டா மரணம்-மைதுனம்-பணம் இது மூணுல ஒன்னை செலக்ட் பண்ணியே ஆகனும். அல்லது தியானம் பண்ணனும்.

ஆனால் காமி கானி வாடு மோட்ச காமி காலேடு. அதனாலதான் இந்த காமத்துப்பால்.
மரணத்தை சிபாரிசு செய்யலாம்னா அப்பாறம் நம்ம ப்ளாகை படிக்க சனமே இல்லாமயே போயிரும்.பணம்ங்கற மேட்டருக்கு சனத்தை என்கரேஜ் பண்ணா எல்லாருமே "ராசா"வாட்டம் வாழனும்னு முடிவு பண்ணிட்டா நாஸ்தி.

அதனாலதான் இந்த காமத்துப்பால்.

மேற்சொன்ன கொலை,தற்கொலை,விபத்து,ஊழல் எல்லாத்துக்கும் பின்னாடி செக்சுவல் காஸஸ் மறைஞ்சிருக்கு.

நிறைவேறாத செக்ஸ் விருப்பங்கள்தான் மேற்சொன்ன ரூட்டுக்கு டைவர்ட் பண்ணிருது. உதாரணமா கொலைகள்,குற்றங்கள்ள பாதிக்கு மேல செக்சுவல் காஸஸாலதான் நடக்குது. இதுக்கு மின்னாடியெல்லாம் கள்ளக்காதல்தான் கொலையா தற்கொலையா எதிரொலிக்கும். இப்ப நிறைய கிரைம்ஸுக்கு காதல்,கண்ணாலம்,விவாகரத்து காரணமா இருக்காம்.

விவாகரத்து வாங்கற விசயத்துலஆந்திரா ஆல் இண்டியா லெவல்ல ரெண்டாவது இடமுங்கோ. கடந்த 5 வருசத்துல இது 100 சதவீதம் அதிகரிச்சுருக்கு.

ஒரு வகையில ஆந்திராகாரவுக கூல் பார்ட்டிங்க. இங்கனயே இந்த ரேஞ்சுன்னா ஷார்ப்பா இருக்கக்கூடிய கேரளா, தமிழகத்துல நிலைமை எவ்ள தீவிரமா இருக்கும்னு பாருங்க.

அதனாலத்தான் காமத்துப்பால். "எரியறத பிடுங்கினா கொதிக்கிறது அடங்கும்னுவாய்ங்களே அதை மாதிரி மனித மனங்களைல் நிறைவேறாமல் கொதிப்பை தந்துகிட்டிருக்கிற செக்ஸ் விருப்பங்கள் நிறைவேறினா கூல் ஆயிரும்.

அதுக்காகத்தான் முறைகள்,சைக்காலஜினு ஜல்லியடிச்சுக்கிட்டு தொடர்பதிவை தொடர்ந்துக்கிட்டிருக்கேன். நம்ம தொடரோட நோக்கம் வேணாம் தலை அடிக்காதிங்க .விட்டுருங்க.. (மொக்கை போதும்..அவ்ளதானே. இதோ முடிச்சுட்டன் )

நேத்து படிக்காத விட்ட அத்யாயத்தை இன்னைக்காச்சும் இங்கன அழுத்தி படிங்க