Sunday, August 7, 2011

கற்பனைக்கும் எட்டாத வக்கிரங்கள்


அண்ணே வணக்கம்ணே !
வக்கிரம்ங்கற வார்த்தைக்கு ஜோதிஷத்துல ரெம்ப இம்பார்ட்டன்ஸ் இருக்கு. கடிகார முள் ரைட் டு லெஃப்ட் சுத்துது.இதை க்ளாக்வைஸுங்கறாய்ங்க. இதுக்கு எதிர்பதமா சுத்தறதை ஆன்டி க்ளாக் வைஸுங்கறாய்ங்க.

ஜோதிஷத்துலயும் ராகு கேதுக்களை தவிர்த்து இதர கிரகங்களோட சுழற்சி க்ளாக் வைஸுதேன். ராகு கேதுக்கள் மட்டும் ஆன்டி க்ளாக் வைஸ். க்ளாக் வைஸுங்கறது ச+க்ரம் அதாவது ச - நல்ல , க்ரம் - மெத்தட் /முறை. இதுக்கு மாறா (ஆன்டிக்லாக்வைஸ்) நடக்கிற சுழற்சியை வ+க்ரம்னு சொல்றாய்ங்க.

கிரகங்கள் வக்ரமாகும் போது தங்கள் இயல்புக்கு எதிர்பதமான பலனை தரும்ங்கறது விதி. உம். நம்ம ஜாதகத்துல 9 ல சனி. அப்பன் கூலிக்காரனா இருக்கனும். ஆனால் அவரு வக்ரம். அதனால அவரு மாவட்ட கருவூல அதிகாரியா இருந்தாரு.

இந்த பதிவு ஜோதிஷத்திலான வக்ரங்களை பற்றியது அல்ல.மனித மனங்களிலான வக்ரங்களை பற்றியது. சமீபத்துல ஒரு கிழவனாரை பார்த்துட்டு வர போயிருந்தம். தொண்டையில ஒட்டை போட்டு ஒரு ட்யூப் செட் பண்ணியிருக்க புனல் வழியா கஞ்சி போகுது.

கூட வந்த பார்ட்டிக்கிட்டே 'இன்னாபா கோராமை இதெல்லாம்"னு ஃபீல் பண்ணேன்.

அதுக்கு அவரு " சாமீ! நீங்களா இப்படி பேசறது . கடவுளென்னா டீ மாஸ்டரா டீ கேட்டவனுக்கு காபியும், காபி கேட்டவனுக்கு டீயும் மாத்தி கொடுத்துர"னு பஞ்ச் பேசற பார்ட்டி நீங்க. இவன் பாஸ்ட் தெரிஞ்சா ஃபீல் பண்ண மாட்டிங்க.

இந்த நாதாரி வேலை வெட்டி இல்லாம சுத்திக்கிட்டிருந்தப்போ ஒரு பெரிய மன்சன் பொஞ்சாதி விதவையானதுக்கு அப்பாறம் இவனுக்கு மாட்டிக்கிச்சு. அவள் அப்பமே பேத்தி எடுத்திருந்தா. கிழவனாரு செமை யூத்தா கீறாரு.

இந்த பிக்காலி ராத்திரி ஆன்டிய வேலை எடுத்துட்டு -ஆன்டி அசந்து தூங்கறச்ச விடியல்ல பேத்திய வேலை எடுக்கும் தெரியுமா உனக்கு"ன்னாரு.

ஓஹோ..மைண்டு வக்கிரமா போகும் போது மைண்டும் அதை ஃபாலோ பண்ணிரும் போல..ஹும் வக்ரங்கள்..

ஒரு லாயரு. கத்திரிக்காய்க்கு கை கால் முளைச்சாப்ல இருப்பான்.பல்லுல்லாம் சோழி. சோடாபுட்டி கண்ணாடிக்குள்ள முட்டை விழி. கையில் சதா புகையும் சிகரட். அஞ்சடி தொலைவுலயே குப்புனு தூக்கற வியர்வை நாற்றம்.

ஒரு நா மதியம் ஃபோன் பண்ணி வரச்சொன்னான். போனேன். ஹால்ல வெய்ட் பண்ணிட்டிருந்தேன்.அவிக சம்சாரம் வந்து "உள்ளே வரச் சொல்றாரு" ன்னு சொல்லுச்சு. சங்கடமாவே போனேன். தரையில பெட். பெட்டை தட்டி உட்கார சொல்றான். நாம தான் 'ஜெய் ஆஞ்சனேயாவாச்சே" ஆளை விடுன்னு தரையில உட்கார்ந்தோம்.

அப்ப அவன் ஒரு வேலை செய்தான். (தாய்குலம் மன்னிக்கனும் -இப்படியா கொத்த வக்ரங்களும் இருக்குன்னு கோடி காட்டத்தேன் இதை சொல்றேன்) அப்பத்தான் வேலை முடிச்ச காண்டமை எடுத்து வாயால ஊதி ரூம்புக்குள்ளாற பறக்க விட்டான். அது ஃபேன்ல பட்டு உவ்..........வே...

இந்த மாதிரி ஆயிரம் வக்ரங்களை வாழ்க்கையில பார்த்திருக்கேன். இதையெல்லாம் எழுத்துல கொண்டுவர பார்த்தா சனம் கல்லாலயே அடிச்சு கொன்னுரும். நான் என்னவோ விபரீதமா எழுதிர்ராப்ல ஒரு சிலருக்கு ஃபீலிங் இருக்கலாம். எழுதாத விஷயங்களோட கம்பேர் பண்ணா இதுவரை எழுதினதெல்லாம் ஜ்ஜுஜுபி.

இந்த மாதிரி நாத்தம் பிடிச்ச மேட்டர் எல்லாம் மண்டையில தேங்கி அகாலத்துல ஞா வந்து இம்சை கொடுக்கிறதால மேலோட்டமா வாச்சும் சுத்தி கரிச்சு வெளிய அனுப்பிர்ரது.

ஆரம்ப காலத்துல நான் ஒரு நாவல் எழுதினேன். சினிமா கதை மாதிரி சொல்றேனே.(காசா ,கால்ஷீட்டா)
பிரகாஷ் ராஜ் -சங்கீதா லவர்ஸ். ரெண்டு பேரும் ஏழைங்க.பிரகாஷ் ராஜுக்கு ஒரு ஆஃபர் வருது .சவுண்ட் ஃபேமிலில வீட்டோட மாப்பிள்ளையா போயிர்ராரு. சங்கீதா முட்டி மோத பிரகாஷ் ராஜ் வில்லத்தனமா பேசி அனுப்பிர்ராரு.சங்கீதாவும் பிரகாஷ் ராஜோட மனைவியும் ஒரே நேரத்துல கர்பம். ஒரே நர்சிங் ஹோம்ல பிரசவம். மனைவிக்கு குழந்தை செத்து பிறக்குது. சங்கீதாவுக்கு லட்டாட்டம் ஆண் குழந்தை .

பிரகாஷ் ராஜ் எத்தனையோ தமிழ்சினிமாக்கள் மாதிரி கையூட்டு கொடுத்து குழந்தையை மாத்திர்ராரு. ஆக சங்கீதாவின் குழந்தை பிரகாஷ் ராஜ் கிட்டே வளருது . பொஞ்சாதியும் செத்துப்போயிர்ரா. பதினெட்டு வருடங்களுக்கு பின்.

சங்கீதா தஸ்லீமா நஸ்ரின். மாதிரி எழுத்தாளராவோ - நம்ம ஹுசைன் மாதிரி ஓவியராவோ பெரும்புகழ் பெற்று ரிட்டர்ன்ஸ் ஃப்ரம் லண்டன். என்ன 18+18 = 36 வயசு முதிர் கன்னியா (?) சங்கீதாவோட மகன் ஒரு ரசிகனா நெருங்கறான்.

பிரகாஷ் ராஜ் பதறித்துடிக்கிறாரு. இது சங்கீதாவுக்கு டைம்பாஸா இருக்க .. வேணம்னே பிரகாஷ் ராஜ் மகனை (தன்) பைத்தியமா அடிக்கிறா. இதான் நாட்டு. க்ளைமேக்ஸ்ல விளக்கை அணைக்கறதுக்கு முந்தி அவன் தன் மகன் தான்னு சங்கீதாவுக்கு தெரியவரும். பைத்தியம் பிடிச்சுரும்.

நான் இந்த நாவலை எழுதின காலத்துல இன்டர் நெட் -ஃபேஸ்புக் -ப்ளாகர்லாம் கிடையாது. இருந்திருந்தா இது அப்பமே வக்கிரங்கள்ங்கறதலைப்புல அரங்கேறி பட்டைய கிளப்பியிருக்கும். இப்பம் இன்னொரு கேஸ் ஸ்டடி.

ஒரு பார்ட்டி . லவஸ் பண்ணி கண்ணாலம் கட்டறாரு.பொஞ்சாதிக்கு ஸ்பைனல் கார்ட்ல பிரச்சினை
( முதுகெலும்பு). இதுல கர்பம் வேற. எனக்கென்னவோ இந்த ஆளு துவைச்சு எடுத்துத்தான் இந்த நோயே வந்திருக்கும்னு தோனுது. ஸ்பைனல் கார்டு தேஞ்ச பொம்பளைய கர்பமாக்கிறாருன்னா என்ன அர்த்தம். இந்த ஆளு நிச்சயம் ஒரு நிம்ஃபோவா இருக்கனும்.

கடனை உடனை வாங்கி வைத்தியம் பார்க்கிறாரு. ( குற்ற மனப்பான்மை )பொஞ்சாதி காலி. விசம் குடிச்சு தற்கொலைக்கு ட்ரை பண்றாரு.(எஸ்கேப்பிசம்) அப்பம் அக்கம் பக்கத்துல உள்ள ஒரு கேரக்டர் வந்து ஆறுதல் சொல்லுது. நம்ம பார்ட்டி அந்த கேரக்டரை பிக் அப் பண்ணிருது.

எனக்கென்னவோ விசம் குடிச்சதே இந்த மாதிரி ஒரு கேஸை பிக் அப் பண்ணவோன்னு தோனுது. இப்பம் நிலைமை என்னடான்னா பார்ட்டி ஏதோ கோவில்ல அர்ச்சனை டிக்கெட் விக்குது.மாசம் பொறந்தா பஸ் சார்ஜி போக ரூ.1000 கைக்கு வருது. பொஞ்சாதி ஏதோ நாலு வீட்ல வேலை செய்து "கும்பம்" கொட்டுது. வீட்டோட மாப்பிள்ளையா இருக்கிற இந்த ஆசாமியோட பாஸ்ட் - நிம்ஃபோ தனம் - என்விரான்மென்ட் -ஏழ்மை -சோம்பல் - பொம்பளை சம்பாத்தியத்துல வவுத்தை ரொப்பறோங்கற தன்னிரக்கம் எல்லாம் சேர்ந்து மன நோயாளியாவே ஆக்கிருச்சு.

தினசரிகள்ள பார்த்தா பூஜாரி,ஃபாதர்,சாமியார்லாம் பொம்பளைங்க கிட்டே எக்கு தப்பா நடந்துக்கிட்டு போலீஸ்ல மாட்டறது தொடர்கதையா இருக்கு. இதுக்கு என்னடா காரணம்னா..

வீடுன்னு இருந்தா அடுப்பிருக்கும்.சமையல் நடக்கும்.புகை வரும். அந்த புகை வெளிய போக புகை கூண்டு இருக்கனும். இல்லாட்டி என்ன ஆகும் வீடெல்லாம் புகை சுத்திக்கும்.அதை அவசரமா வெளியேற்ற ஃபேனை ஹை ஸ்பீட்ல வச்சா சொல்லவே வேணா.நாறிரும்.

மனுஷன்னா அவன் பாடியோட சென்டர் /மைண்டோட சென்டர் எல்லாமே செக்ஸுதேன். இந்த சென்டரை விட்டுட்டு - ஐ மீன் ஜெயிச்சுட்டதா பாவிச்சு - தங்களோட பாடியில இருக்கிற அந்த உறுப்பு வெறுமனே உச்சா போறதுக்குத்தேன்னு ஆட்டோ சஜஷன் கொடுத்துக்கிட்டு வாழ்ந்து கிட்டிருந்தாலும் சமையல் நடக்கும் ( காம நினைவுகள்) புகை வரும் ( பேச்சு /பாடி லேங்குவேஜ்/கனவுகள் / செயல்பாடுகள்) இதையெல்லாம் விரட்ட ஹை ஸ்பீட்ல ஃபேன் போட்ட மாதிரி ஆன்மீகத்தை கொண்டு வந்து குழப்பினா
எதிர்க்க இருக்கிறது கிழவியா -கான்சர் பேஷண்டான்னெல்லாம் உறைக்காது.

ஆஃப்டர் ஆல் கிட்னி தன் செயல்திறனை இழந்தாலே -ஆல்புமின் -யூரிக் ஆசிட் -இத்யாதியெல்லாம் கச்சா முச்சான்னு ரத்தத்துல கலந்துருது.

அப்படியா கொத்தது மூளை /பாடி காமக்கழிவுகளை வெளியேற்றலின்னா டோட்டல் மைண்ட் செட்டும் ஸ்பாயில் ஆயிரும். அப்பாறம் பார்வை- சொல் -செயல் எல்லாமே காமமயமாயிரும்.

வக்கிரங்களை எழுத்தாவோ ஓவியமாவோ வெளிப்படுத்திர்ரது நல்ல உத்தி. இல்லின்னா பைத்தியக்கார ஆஸ்பத்திரிதேன்.நம்ம ப்ளாக் & சைட்ல ஆபாச கமெண்ட் போடற பார்ட்டியை இன்னம் விட்டு வச்சிருக்க காரணம் இதுதேன். மனித நேயம். இந்த பதிவை மாஞ்சு மாஞ்சு அடிக்கிற நேரத்துல சைபர் கிரைமுக்கு ஒரு மனு அடிக்க எவ்ள நேரம் ஆகும்ங்கறிங்க..