Saturday, August 27, 2011

ஜோதிட பால பாடம்:9 & குரு வக்ர பலன்




அண்ணே வணக்கம்ணே !
ஜோதிட பால பாடம் இன்னைக்கும் தொடருது.இதை வரிசையா தரமுடியலை. படிச்சுட்டு நீங்க கேட்கிற கேள்விகளுக்கு பதில் தர முடியலை.(ஏற்கெனவே கேட்டு வச்சிருக்கிறவுக மன்னிக்கனும். கேட்க நினைக்கிறவுக ரோசிக்கனும்).

டோன்டுவின் பதில்கள் மாதிரி கேஸில்லை இது. டோண்டு சார் மொதல்ல பதிலை ரெடி பண்ணிக்கிட்டு அப்பாறம் கேள்வி கேட்டுக்குவாரோ அ டோன்டு சார் இப்படியா கொத்த கேள்விகளுக்குத்தான் பதிலளிப்பாருன்னு சனம் கேள்வி கேட்குதோ தெரியாது..

நீங்க கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் நாளா பொழுதா உட்கார்ந்து அடிச்சாலும் முழு பதில் தரமுடியாது. சோசியம் ஒரு சமுத்திரம் ( ஏழு சமுத்திரம்னு சொல்றாய்ங்க - நாம பாஆஆஆஆஆஅர்த்தது ஒரு சமுத்திரம்தானு வச்சிக்கங்க).

அதிலயும் நாம பதில் சொல்லனும்னா கால காலமா இருந்து வர்ர அப்செஷனையும் சொல்லனும். அதுல எதெல்லாம் இன்னைக்கும் பொருந்துது எதெல்லாம் பொருந்தாது ஏன் பொருந்தாதுன்னும் சொல்லனும்.
பார்ப்போம்.வாக்குல கீற சனி கழண்டுகிடட்டும் . குரல் பதிவானா போட்டு அசத்திருவம்ல. நெஜமாலுமே நேரம் இல்லிங்ணா.

வேலை செய்யறது எவ்வளவு முக்கியமோ அந்த வேலைக்கு தொடர்பில்லாம வெட்டியா கொஞ்ச நாழியாவது இருக்கிறதும் அவ்வளவே முக்கியம். இது நம்ம செயல் திறனை இரட்டிப்பாக்கும். அதனால வெட்டியாவும் கொஞ்ச நாழி அலையவேண்டியதா இருக்கு. மேலும் ..........

நாம லோக்கலா நடத்திட்டு வர்ர பத்திரிக்கை ரம்ஜான்+ வினாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் தயாராகிவருது ப்ளஸ் ஆன்லைன் ஜோதிட ஆலோசனை எல்லாம் சேர்ந்து கழுத்தை நெறிக்குது. நம்ம சுகுமார்ஜி மணி,போன்றவர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வாய்ங்கன்னு ஒரு நம்பிக்கை.பார்ப்போம்.

ஹசாரே செயிச்சுட்டாரு. வாழ்க்கையில ஒரு குரூரமான விதி என்னன்னா சிலர் வெற்றியின் போது புத்தி சாலியா காட்சி தந்து தோத்துட்ட பிற்காடு மகாமடையர்களா எக்ஸ்போஸ் ஆயிருவாய்ங்க. ( மதுரை வீரர்களை பார்க்கிறிங்கல்ல)

சிலர் தோல்வியில மகா புத்திசாலிகளா ,உத்தமர்களா காட்சி கொடுத்து வெற்றியின் போது முட்டாள்களா, மகா கெட்டவுகளா எஸ்டாப்ளிஷ் ஆயிருவாய்ங்க. (அம்மா சம்ச்சீர் கல்வியில மாட்னாய்ங்களே- எமபுரத்து கதவை தட்டறவனுக்கு இதயத்துக்குள்ளாற நேரடியா இறக்கின ஊசி மருந்து அது)

வெற்றி தோல்வி ரெண்டுலயும் ஒரே மாதிரி காட்சி தரக்கூடிய பார்ட்டி உலகத்துல நாம ஒருத்தந்தேன்.
( மடையனா). நாம மக்கள் பார்வையில மடையனா இருக்க காரணம் இப்டி இருந்தாதான் ஆத்தா டொக்கா வந்து சி(ரி)க்கறா.

நம்ம சைட்ல திடீர்னு ரெட்டிங்கல்லாம் வந்து கமெண்ட் போட ஆரம்பிச்சுட்டாய்ங்க. (ரெம்ப சந்தோசப்படாதிங்க) இதுவும் நம்ம ஜா.ராவோட லீலைகள்தான். அவரு ஹாரம்னு ஒரு மல்ட்டி லிங்குவல் அக்ரகேட்டர்ல மெம்பரு.அங்கன தெலுங்கு பிரிவுல பிடிச்ச பேரை வச்சுக்கிட்டு புல்க்கு காட்டறாரு.

நேற்றைய பதிவுல கம்ப்யூட்டர் திருடு போச்சுன்னு சொல்லியிருந்தேன். நமக்கு வந்த தகவலை வச்சுத்தேன் பதிவெழுதினன். மேட்டர் இன்னாடான்னா மானிட்டரை மட்டும் லபக்கிக்குனு பூட்டுக்கிறானுவோ. சிபியுவை கவுத்து போட்டுட்டு போய்க்கிறானுவோ. அதுக்கு பவர் ப்ளக் எல்லாம் போயி ஒரு வண்டி இன்சுலேஷன் டேப் போட்டு ஒப்பேத்தி வச்சிருந்தம். இதுல அப்பப்போ டிம் அண்ட் டிப் அடிக்கும். இது நம்ம கிட்டே இருக்கிறப்பவே பார்த்துட்டு ..........

நம்ம ஃப்ரண்ட் ஒருத்தரு ( ஹார்ட் வேர் கம் சாஃப்ட்வேர் சர்வீஸ்) "யப்பா.. பெரிய சைஸ் ப்ளாக் அண்ட் வைட் மானிட்டருங்க கேப்பார் மேப்பார் இல்லாம நம்ம கிட்ட டஜன் கணக்கா விழுந்து கிடக்கு ஒன்னை கொண்டு போயி வச்சுக்க. நான் என்ன காசு பணமா கேட்கறேன்" னு ரெம்ப நாளா சொல்லிக்கினு இருந்தாரு. நாம தேன் சொம்மா வந்தா கருமமும் சேர்ந்து வரும்னு ப்ரேக் பண்ணி வச்சிருந்தம். நாளைக்கு மானிட்டர் ரெடி நாமினலா நூறோ இரு நூறோ கொடுத்துட்டு கொண்டு வைக்கனும். ஆத்தா புகழ்பாடும் தெலுங்கு கவிதைகளை வலையேற்றியே தீர்ரதுன்னு ஒரு கெட்ட முடிவு எடுத்திருக்கமில்லை.

வர்ர நவராத்திரிக்குள்ள ஏதோ ஒரு அற்புதம் நடந்தே தீரனும். அதேன் டார்கெட்டு.

அப்பாறம் ரெம்ப முக்கியமான சமாசாரம் 2011 ,ஆகஸ்ட் 30 முதல் டிசம்பர் 25 வரையிலான குரு வக்ரகாலம் பத்தி சில வரியாச்சும் சொல்லனும்.

திருடு போன கடைக்கு சொந்தக்காரனோட ராசி ரிஷப ராசி. குரு இப்பம் மேஷத்துல இருக்காரு. ஆகஸ்ட் 30 முதல் வக்ரம்.. இந்த் எஃபெக்ட் ஒரு மாசம் முந்தியே வந்திருச்சு. ( மகனோட ஃபீஸ் மேட்டர் கடந்த ப்திவுலயே சொல்லியிருக்கன்) குரு அஷ்டமாதிபதி இவரு 12ல மறைஞ்சா யோகத்தை தானே தரனும். ஏன் ஆப்படிச்சுட்டாரு? அதான் வக்ரத்தோட ஸ்பெஷாலிட்டி .

நல்லது செய்யற இடத்துல இருந்து கிரகம் வக்ரமானா கெட்டதை செய்யும். கெட்டது செய்ற இடத்துல வக்ரமானா நல்லதை செய்யும்.

ஆனால் அந்த கிரகம் லக்னாதிபதின்னா மட்டும் எங்கன வக்ரமானாலும் நாஸ்திதேன். இதுலயும் ஒரு ப்ளஸ் இருக்கு.

நாம கடந்த சிலகாலமா சிங்கிள் டீக்கு சிங்கியடிச்சுக்கினு கீறோம்னு வைங்க. அப்பம் பார்த்து நம்மலக்னாதிபதி வக்கிரமானா அந்த வக்கிர காலம்வரை ஏக் தின் கா சுல்தான் கணக்கா இருக்க சான்ஸ் இருக்கு. இதுவே நாம க்ளாக் வைஸ் லைஃப்ல இருக்கிறச்ச லக்னாதிபதி வக்ரமானா டப்பா டான்ஸ் ஆடிரும். இதே விதியை உறவு -பிரிவு , நோய் -உடல் நலம்னு அப்ளை பண்ணிக்கிடுங்க.

குரு தனுசு மீனங்களுக்கு அதிபதிங்கறதால இந்த ரெண்டு ராசிக்காரவுக 2011 மே 8 க்கு அப்பாறம் இருந்த நிலைக்கு மாறான நிலை இப்பம் ஏற்படும்ங்கறதை புரிஞ்சிக்கிட்டு உசாரய்யா உசாரு.

மத்த ராசிக்காரவுகளை பொருத்தவரை குரு நல்லது பண்ற இடத்துல இருந்து வக்ரமானா கெட்டது .கெட்டது பண்ற இடத்துல இருந்து வக்ரமானா நல்லது. அடிபப்டை விதி இது . இதை வச்சு 12 ராசிக்கும் ஆருனா வக்ரகால பலன் எழுதினா பிரசுரிக்க காத்திருக்கம்.

ஆரும் எழுதலைன்னாலும் டோன்ட் ஒர்ரி இங்கே அழுத்தி உங்க ராசிக்கான 2011 குரு பெயர்ச்சி பலனை ஒரு க்லான்ஸ் பார்த்துருங்க. அந்த பலனுக்கு நேர் எதிரிடை பலன் தான் நடக்கும். உடுங்க ஜூட்..

இனி ஜோதிட பால பாடம் ...........
7ஆமிடம் கெட்டால்:
ஜாதகருக்கு காதல்திருமணம் அ பெரியோரில் சிலருக்கேனும் விருப்பமில்லா திருமணம் நடக்கவும் வாய்ப்புள்ளது. அதே சமயம் அனைவரையும் எதிர்த்து மணந்தாலும் மனைவி வகையிலும் இவருக்கு நிம்மதி கேள்விக்குறியே.
லக்னத்தில்/ஐந்தில் சூரியன் பகை நீசம் பெற்றால் /சனி -ராகு-கேதுவுடன் சேர்ந்தால் :
தலை,பல்,எலும்பு,முதுகெலும்பு தொடர்பான தொல்லைகள் ஏற்படலாம்.வலது கண்ணில் பிரச்சினை வரலாம். ஜாதகரை மறதி வாட்டும். அகந்தை மிக்கவராக இருந்து பின் கண்டவனுக்கும் சலாம் போடுபவராக மாறுவதோ , அல்லது ஆரம்பத்தில் கண்டவனுக்கும் சலாம் போடுபவராக இருந்து அகந்தை மிக்கவராகவோ ஆவார். ஆனால் இரண்டுமே ஜாதகருக்கு நலம் பயக்காது. சலாம் போட்டால் சட்ட விரோத சக்திகளுடன் உறவு ஏற்பட்டு விசாரணக்குட்பட வேண்டி வரும். அகந்தை மிக்கவராக இருந்தால் மேற்படி சட்ட விரோத சக்திகளால் தொல்லைகள் ஏற்படும்.
விரய பாவம் கெட்டால்:
ஜாதகருக்கு டீப் ஸ்லீப் இருக்காது. விழிப்பும்,தூக்கமும் மாறி மாறித்தொடரும்.இதனால் கனவுகள் அதிகம், சில நேரம் வாய்விட்டு உளறவும் கூடும்.
பரிகாரம்
மார்னிங்க்,ஈவினிங்க் வாக் செய்யவும்.( சூரிய ஒளி பாடி மேல படனும்) தந்தை வழி முன்னோர்களை நினைத்து தலை தொடர்பான பிரச்சினகள் உள்ளவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்யவும்.
சந்திர வீடு:
வீடு அமைந்திருக்கும் பகுதி நீர் நிலையை ஒட்டியதாகவோ, பள்ளமான பகுதியாகவோ இருக்கலாம். யார் எவ்ள நேரம் இருப்பாய்ங்கனு தெரியாத கட்டிடத்தை ஒட்டி இருக்கலாம். உ.ம் திருமண மண்டபம் -காய் கறி மார்க்கெட்
செவ்வாய் தொழில்:
போலீஸ் ,மிலிட்டரி,ரயில்வே, எலகட்ரானிக்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங், ஹோட்டல் ,நெருப்பு ,மின்சாரம் தொடர்பானவை
குரு தொழில்:
கோல்ட்,ஃபைனான்ஸ், டீச்சிங், பாலிடிக்ஸ், கோர்ட், சேவை நிறுவனங்கள், கோவில்,மத நிறுவனங்களில் வேலை.
சூரிய தொழில்:
தந்தையின் தொழிலை தொடர்ந்து செய்தல் அத்யாவசிய பொருட்கள், விளம்பரத்துறை, விற்பனை துறை (அட் டோர் ஸ்டெப்ஸ்)
சந்திர தொழில்:
ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் தொடர்பான சினிஃப்ளெக்ஸ்,ஏர் போர்ட்,பஸ் ஸ்டேஷன், ரயில்வே ஸ்டேஷன்,திருமண மண்டபம், லாட்ஜு போன்ற துறைகள் , அழுகும் பொருட்கள் ,திரவ வடிவிலானவை, ரெண்டே கால் நாட்களுக்குள் முடிந்து விடக்கூடிய டீலிங்குகள், தினசரி செய்தித்தாள் விற்பனை/ஏஜென்சி
கடக குரு:
வாழ்வின் முற்பகுதியில் பயங்கர கடன் காரராகவும்,குடும்பத்துடன் ஒத்து போகாதவராகவும், தொண்டை ,கண் பகுதியில் நோய் உள்ளவராகவும் இருப்பார். ஆனால் பிற்பகுதியில் பெரும்பணக்காரராகவும், சொத்துக்கள் சேர்ப்பவராகவும், தர்ம காரியங்கள் செய்பவராகவும் இருப்பார். வயதான (பழுத்த) ஒரு தம்பதியை பராமரிப்பார்.( தாய்,தந்தையராகவும் இருக்கலாம்).
ராகு தொழில்:
லாட்டரி, சினிமா , சாராயம், லைசென்ஸ் இல்லா(வாங்காத) தொழில்கள் அனுகூலம். ஏற்றுமதி இறக்குமதி தொழில் . இருட்டில், இரவில் செய்யும் தொழில்
சனி மனைவி:
99.9 சதவீதம் காதல்+கலப்பு திருமணம் நடக்கலாம். பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணமானால் தம்பதிகள் பிரிவர். அ மனைவி நோய்வாய்படுவார். மனைவி ஏழை குடும்பத்தில் பிறந்திருப்பார். ஜாதகரை காட்டிலும்மூத்தவராக இருக்கலாம் அ தோன்றலாம். சாலையில் மனைவியுடன் சென்றால் அக்காவா வீட்டு வேலைக்காரியா என்று பார்த்தவர்கள் நினைப்பர்.மேற்கு திசையில் இருந்து அல்லயன்ஸ் வரும். புதிய உறவில் தான் அமையும். ஒரு வேளை ஜாதகர் தமது ஊழியர் எவரையாவது மணக்கவும் வாய்ப்பிருக்கிறது.