Sunday, October 31, 2010

நம் தலைவர்களின் பெண் குறித்த பார்வை

வணக்கம்ணே,
இந்த பதிவுக்கு முந்தி சுகுமார்ஜீ " காதலிக்க தோதான இடம்"னு ஒரு பதிவை போட்டிருக்காரு .அதை மிஸ் பண்ணிராம கீழே போய் ஓல்டர் போஸ்ட் லிங்கை க்ளிக்கி  படிச்சுருங்க

இப்போ தலைவர்கள் மேட்டருக்கு போயிரலாமா? (இதான் கடைசி பதிவோனு பட்சி சொல்லுது -  நிர்வாண உண்மைகள்னு பேரை வச்சிக்கிட்டு காபரேத்தனமான உண்மைகளை கூட சொல்லலைன்னா எப்படிங்கற நினைப்புல போட்ட இந்த பதிவு பிழைப்ப கெடுத்துருமோ என்னவோ? நீங்க படிங்க ராசா..)

தலைவன் இளமையில இருக்கனும். பெண்ணை புரிஞ்சிருக்கனும். செக்ஸை தர்மப்படி, நியாயமா, விழிப்புணர்ச்சியோட ஆழமா அனுபவிச்சிருக்கனும்.  கண்ணாலம், சீமந்தம்,குழந்த பேறு மாதிரி மேட்டர்லாம் ஆத்மார்த்தமான திருப்தியை அவனுக்கு கொடுத்திருக்கனும்.

உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் கோரிக்கைகள் இருக்கக்கூடாது. அது வன்முறை வேட்கையாவோ, பண தாகமாகவோ, அதிகார தாகமாகவோ மாறியிருக்கக்கூடாது.  அவன் ஆட்சி புரியும் நேரத்துல அவனுக்கு மேற்படி ஆத்ம திருப்தி தொடரனும். (கிழவாடியாயிரக்கூடாது - பெண்டாட்டி செத்துப்போயிருக்க கூடாது - விவாகரத்து வாங்கியிருக்க கூடாது).

எவன் பெண் இன்பத்தை எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாம , விழிப்புணர்ச்சியோட ஆழமா அனுபவிக்கிறானோ அவனுக்கு பெண் மேலும், இயற்கையின் மேலும் நன்றி உணர்வு அலையடிக்கும். மனசுல நன்றி உணர்வு பொங்கும்.

பெண் குறித்த அவன் பார்வை பிரகாசமா இருக்கும். (காம்ப்ளெக்ஸுங்க இருக்காது)  பெண் குறித்த பார்வைகள் மூன்று. காமினி -ஜனனி -சகி . இதுல மொத ரெண்டு பார்வை உள்ளவுக ரெண்டு விதமான விலங்குகளை கையில வச்சிருந்து படக்குனு பெண்ணுக்கு மாட்டி விட்டுருவாய்ங்க.

காமினி:
பெண்ணை காமினியா பார்க்கிறவுக பிரம்மச்சரியத்தை போதிப்பாய்ங்க. இவிகளை இவிக கட்டுப்படுத்திக்க துப்பில்லாம பெண்களுக்கு அடிமை விலங்கை மாட்டி தூர வைப்பாய்ங்க

ஜனனி:
இவிக ஜனனிங்கற பட்டம்  (தாய்)  கொடுத்து கற்புங்கற சங்கிலி போட்டு இவிக தயாரிச்ச ஃப்ரேமுக்குள்ள பெண்ண சிறைவைப்பாய்ங்க


மூன்றாவது பார்வை சகி. விரிச்சு சொன்னா வாழ்க்கை போராட்டத்துல சக போராளி. இந்த பார்வை தான் ஆரோக்கியமான பார்வை.இதுலதான் பெண் விலங்காவும் ஆக்கப்பட மாட்டா. விலங்குக்கும் ஆட்பட மாட்டாள்.

பதிவின் முதல் பாரால சொன்ன தகுதிகள் உள்ள  பார்ட்டி தடுக்கி தடுக்கி பெண் குறித்த 3 ஆம் கோணத்தை கை கொள்ள வாய்ப்பு அதிகம். அதை பிடிச்சுட்டானு வைங்க..

தன் அதிகாரத்தை பெண்ணை காக்கவும் ,மண்ணை காக்கவும் உபயோகிப்பான்.

இல்லைனு வைங்க அந்த ஆட்சில பெண்கள் நரக வேதனை அனுபவிப்பாய்ங்க. இயற்கை சூறையாடப்படும். (மணல் கொள்ளைலருந்து குவாரி வரை)

இந்த நிபந்தனைகளை அடிப்படையா கொண்டு இந்தியாவை ஆண்ட தலைவர்களை ஜஸ்ட் ஒரு க்ளான்ஸ் பார்ப்போம்.

காந்தி:
பிரதமரா இல்லைன்னாலும் சகலத்தையும் தன் கையில வச்சிருந்த ஆசாமி. பாவம் கடேசி வரை தன்னோட ( காமத்தோட)  போராடியே போய் சேர்ந்துட்டாரு. சின்ன நேக் "பிரம்மச்சரியம் செக்ஸுக்கு தயார்படுத்தும் -செக்ஸ் பிரம்மச்சரியத்துக்கு வழி வகுக்கும்" (ஓஷோ) .

இதை தாத்தா புரிஞ்சிகிட்டிருந்தா நம்ம நாட்டோட தலையெழுத்தே வேறயா இருந்திருக்கும்.

நேரு :
 இவரோட தாம்பத்ய வாழ்க்கை பரிதாபத்துக்குரியது. ( பொஞ்சாதி நித்ய ரோகி) இவருக்கும் மகளுக்கு இருந்த உறவே கேள்விக்குரியதுனு எங்கனயோ படிச்சேன். மேலும் இவர் ஹோமோ செக்சுவல்னும் ஒரு தகவல்

இந்திரா:
கணவனை பிரிந்து வாழ்ந்தவர். ஆண்கள் உலகத்துல தன்னை ஆணா காட்டிகவே/ மாத்திக்கவே தன் அத்தனை சக்தியையும் செலவிழிச்சுட்டார். செக்ஸாவது,இயற்கையின் பால் நன்றியாவது

ராஜீவ்: நல்லாவே ஆரம்பிச்சாரு (காதல்,திருமணம்,பிள்ளைப்பேறு) கிச்சன் கேபினட்,டூன் ஸ்கூல் கொலிக்ஸ் எல்லாருமா சேர்ந்து சொதப்பிட்டாய்ங்க

வி.பி.சிங்: இவர் மேலயும் நல்ல நம்பிக்கை வச்சிருந்தேன். ஆனால் பாரத் மாதா கீ ஜெய்னுட்டு ( ஜனனி கோணம்) அலைஞ்ச கூட்டம் ஆப்பு வச்சிருச்சு

சந்திர சேகர் - நரசிம்மராவ் - இன்னைக்குள்ள மன்மோகன் - அவருக்கு பின்னாடி இருந்து இயக்கும் சோனியா பத்தியெல்லாம் சொல்லனுமா என்ன?

தலைவருங்க எந்த ஆத்துலன்னா அடிச்சுட்டு போவட்டும் நீங்க சொல்லுங்க பாஸ் பெண் குறித்த உங்க பார்வை எது..

காமினி? ஜனனி? சக போராளி ?

காதல் பிறக்க சரியான இடம்

மனம் என்றொரு வெங்காயம் - இரண்டு 

 காதல் பிறக்க சரியான இடம்...   இந்த பிரபஞ்சம் முழுவதும் எண்ணங்கள் நிரம்பியிருகின்றன என்றும்  பார்த்தோம். கடற்கரை, கல்யாண மண்டபம், பக்கத்துக்கு வீடு, மொட்டை மாடி, நிறுவனத்தில் இருக்கிற லிப்ட்,  சாலையில் வேகமாக இரு சக்கர வாகனம் நாம் மேலாக இடித்தபிறகு... பேருந்து, இப்படி நிறைய இருக்கிறது. இடம் முக்கியமானால் , அப்படி ஒரு இடம் இருந்தால் எல்லோருமே அங்கே போய் நின்று விடுவோம். (இப்பொழுது கூட)

மனத்தில் இருக்கிற காதல் முக்கியம்.  கடற்கரைக்கு உங்கள் மனைவியை அழைத்துசெல்லுங்கள்... புதிதாக காதலிக்க தோன்றும். வானில் முழு நிலவை பார்த்துக்கொண்டே இருங்கள்... காதலின் புது விஷயங்கள் தோன்றும். நீங்கள் பார்க்கும் அதே வேளையில் எத்தனை ஆயிரம் காதலர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். அவர்களின் எண்ணங்களை வான் நிலவு உங்களிடம் பாய்ச்சலாம் அல்லவா?

 அடுத்த முறை காதலை சொல்லும் பொது சரியான நபரை மட்டுமல்ல, இடத்தையும் தேர்ந்து எடுங்கள் .

நாம் சுவாசிக்கிற காற்று போல, எங்கெங்கும் மனதின் எண்ண அலைகள் மிதக்கின்றன. நமக்குள் ஏற்படுகிற வெற்று  இடத்தில்  தானாகவே வந்து அமர்கின்றது. தனக்குள்ளே பிறந்த ஓன்று வெளிச்சென்று மீண்டும் நமக்குள்ளே வலிமையோடு வந்து அமரும்.

கீழே கிடந்த காசை ஏன்டா எடுத்தேன் என்று எப்போதாவது நினைத்து இருகிறீர்களா?
கண்டிப்பா யாராவது வந்து காப்பாதுவங்கன்னு  நினைச்சேன் அதே நடந்தது....

நல்லவருக்கு நல்லவன் உதவுவதும், கெட்டவனுக்கு கேட்டவன்  உதவுவதும் இதன் அடிப்படைதான்.  அந்த அடிப்படை நீங்கள்தான்.  வெங்காயத்தை உறிக்க, உறிக்க வெங்காயம் தான் வெளித்தெரியும்... உங்கள் மனதை உறிக்க, உறிக்க நீங்கள்தான் வெளிவருவீர்கள்... யாரேனும் ஒருவரோடு பேசிகொண்டிருக்கையில் முதல் 10 நிமிடம் பொது   விசயமாகவே   பேசப்படும்,  அப்படியே காலம் கடக்க ஒரே விஷயத்தை  இருவருமே   பேசிக்கொண்டிருப்பதை   காண முடியும்.

அதோடு நீண்ட பேச்சின் உடே சில போது விஷயங்கள், பேசிக்கொண்டிருக்கிற அந்த இடத்தின் பொதுவான தன்மை கலந்த விஷயங்கள் வரும். சில வெட்டு குத்துக்கள் அதே இடங்களில் நடப்பதை உணர முடியும். சில நட்பு அதே இடங்களில் உருவாக கூடும். சில காதல் திடீரென அந்த இடத்தில் மட்டும் பிறக்க கூடும். சில கல்யாண நடவடிக்கைகள் அங்கே முடிவு செய்யப்படும்.

சில சேவல் பண்ணைகளில் ஒரே நேரத்தில் உற்சாக விழாவும், பெண்கள் ஹாஸ்டல்களில் ஒரு சேர விலக்கம் ஆவதும் இப்படித்தான். சில எதிர்பாரத விஷயங்கள் நடக்கும் போது " எப்படி இது தோணிச்சுன்னு தெரியல்ல, எல்லாம் சுமுகமா நடந்தது" என்பதெல்லாம் நம்மை சுற்றி இருக்கிற எண்ணங்கள் தன் இயக்கத்தை உணர வைக்கின்றன.

மனிதனின் இயக்கம் மனம், மனதின் இயக்கம் எண்ணம், எண்ணத்தின் இயக்கம் மனிதனின் செயல்பாடு. இப்பொழுது ஒரு வட்டம் வந்து விட்டது. 


ஒவ்வொரு மனிதனுடைய எண்ணம், சொல், செயல் எல்லாமே மனதிலே அடக்கம். மனமே மனிதனின் அகமும் புறமும்.  அவனின் தோற்றம் மட்டுமே அவனை சொல்லுவதில்லை. ஒருவனை பற்றி, அவனை உரித்து பார்க்கவேண்டுமானால் அவனின் சில சொல், செயல் கவனித்தால் போதும்.

ஆக, நாம் சரியான  அலை வரிசையில் இயங்க வேண்டுமானால் நாம், நம்மை செம்மை படுத்தியாக வேண்டும்.

ரொம்ப சீரிஸ் பேசிட்டோம்... கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுவோம்...

மருத்துவமனையில்
செவிலி: ஒரு அரை மணி நேரம் தாமதமா வந்திருந்தா  நோயாளியை பொழைக்க வச்சிருக்கலாம்...
ஒருவர்: எப்படி சொல்றிங்க?
செவிலி : டாக்டர் வீட்டுக்கு போயிருப்பார்


கடற்கரையில்
காதலன்: டியர்... எனக்கு ஆச்சரியமா இருக்கு, எனக்கு வேலை  இல்லன்னு தெரிஞ்சும் எப்படி உங்க வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க?
காதலி: பையன் என்ன பன்றாணு கேட்டாங்க... வயித்தில எட்டி ஒதைக்கிரான்னு  சொன்னேன்

:)

மனம் என்றொரு வெங்காயம்

மனம் என்றொரு வெங்காயம்

நமது உடலுறுப்பு அனைத்தையும் பெயரிட்டு, அதைக்கண்டும், சரி செய்தும் வருகிறோம். ஆனால் மனம் என்ற ஒன்றை எப்படி குறிப்பிட முடியும்? மனதை பறிக்கிறாள் என்று சொல்லுகிறோமே... அல்லது சொன்னோமே ;)அப்படியாக பறிக்க கூடியதா, கசக்கி பிழியக்கூடியதா? அல்லது இல்லாத ஒன்றா? இருக்கிற ஒன்றா?

எனக்குத் தெரிந்ததெல்லாம் மனம் ஒரு வெங்காயம்... அவ்வளவுதான்...

என்னடா...வெங்காயம்? என கேள்வி பிறக்கிறதா?

ஆமாங்க... வெங்காயம் தான்... வெங்காயத்தை உறிக்க, உறிக்க வெங்காயம் தான் வெளித்தெரியும்... உங்கள் மனதை உறிக்க, உறிக்க நீங்கள்தான் வெளிவருவீர்கள்...

நமக்குள் ஏற்பட்ட, ஏற்றப்பட்ட அடுக்கடுக்கான நினைவுத் தொகுப்புகள்... அது தன்னாலும், பிறராலும் செய்யப்படலாம். காலம் கடந்தோ, இந்த கணத்திலோ, தற்காலிகமாகவோ நிகழ்த்தப்படலாம்... இந்த நிகழ்வின் காரணகர்த்தாவே மனம் என்று அழைக்கப்படுகிறது.

நீதான் செய்கிறாய் என்று சொன்னால் நான் (நான்தாங்க... நீங்க இல்லை) தன்முனைப்பாக செயல்பட்டு விடுவேன் என்பதனாலேயே மனம் என்ற ஒரு குழுஉரிச்ச சொல்... மூலமாக நமக்கு உணர்த்தப்பட்டு வருகிறது...

நாம் செம்மையானால், மனமும் செம்மையாகும்.

திரு. முருகேசன் தனது பதிவில் சொல்லியிருக்கிறபடியே இந்த பிரபஞ்சம் முழுவதும் எண்ணங்கள் நிரம்பியிருகின்றன. நாம் புதிதாக யோசிக்க ஏதுமில்லை... இருப்பதை வானொலி போல ஒத்த அலை பெற்று செயல்படுகிறோம்...

ஒரு பரிசோதனை..... அப்படியே ஒரு நிமிடம் யோசியுங்கள்... இதை படித்த பிறகு...
இப்பொழுது கவிதை07 படித்துக்கொண்டிருப்பதை சற்று விலக்கி...

1) இப்பொழுது நான் என்ன விரும்புகிறேன்?
2) எனக்குள் என்ன யோசனை ஓடிக்கொண்டிருக்கிறது?
3) எதன் பொருட்டு இந்த யோசனை?
4) காரணம் என்ன?
5) இது, இந்த யோசனை என்னால் இயக்கப்பட்டதா?


சரியான பதிலை பின்னூட்டத்தில் தரவும்...

Saturday, October 30, 2010

விகடன் நிருபர் என்னை பேட்டி கண்டாரோச்!

என்னங்கடா இது நம்ம முருகேசனோட கொசுத்தொல்லை தாங்கமுடியாம விகடன்லருந்து நிருபரை அனுப்பிட்டாய்ங்களானு நினைச்சு இந்த பதிவை காண (அதாங்க படிக்க) வந்த உங்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தரமாட்டேன். விகடன் நிறுவனம் நிருபரை என்னிடம் அனுப்பியது நிஜம்.அவர் பேட்டிகண்டது நிஜம். அதைப்பற்றித்தான் இந்தபதிவே

பீடிக்கட்டு,சிகரட் பாயிட்டு மேல வெளியிடறமாதிரி தமிழ் பத்திரிக்கைகள் மேலயும் எச்சரிக்கை வாசகம் வெளியிட வேண்டியது எத்தனை அவசியம்னு இந்த பதிவு சுட்டிக்காட்டும் .

பதிவுக்கு போகலாமா அதாங்க பதிவுக்கான மேட்டருக்கு ..

(மற்ற பத்திரிக்கைகள் எல்லாம் ஓக்கியம் ஒரு குளத்து நண்டு என்று கூறவில்லை. அவற்றையும் உப்பு மிளகாயை போட்டு கிண்டுவது விரைவில் நடை பெறும் . )

எந்த கதாநாயகன் எங்கே எந்த கதாநாயகியை எப்படி,எங்கே வைத்து  கவிழ்த்தான் என்ற அரிய செய்திகளை தரவே ஒரு தொடர் வருகிறது. (நல்ல காலம் எந்த ப்ராண்டு காண்டோம் உபயோகித்தான் போன்ற விவரங்களை தருவதில்லை. இன்னும் கொஞ்ச காலம் போனால் அவற்றையும் வெளியிடுவாய்ங்க போல .

தற்போது 43 வயது காரனாகிய நான் என் இளமையில் இது போன்ற பலான விஷயங்களை படிக்க சித்தூர் பஸ் ஸ்டாண்டின் இருட்டு மூலைகளிலான பங்க் கடைகளில் தேடுதல் வேட்டை நடத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்போ விகடன் குழுமம் இன்றைய தலைமுறைக்கு அந்த சிரமத்தை எல்லாம் கொடுக்கிறதில்லை.  அந்த தொடரில் வெளி வரும் அஜால் குஜால் வார்த்தைகளை எந்த பலான புத்தகத்திலும் நான் படித்ததில்லை. ரிப்போர்ட்டர்/உங்கள் ஹீரோ இப்படி தோடர் தலைப்பு வேறாக இருந்தாலும் உள்ளடக்கம் மட்டும் ஒன்னுதான்.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல ஓராண்டு இதழ்களை என் முன் வைத்தால் ஆயிரம் விஷயங்களை முன் வைக்க நான் தயார். பதில் தர விகடன் குழுமம் தயாரா ?

அய்யய்யோ இம்சை தாங்கமுடியலை. மேட்டருக்கு வாங்க முருகேசன் .. என்ன பேட்டி எதைப்பத்தி பேட்டி இதானே உங்க ஃபீலிங் வந்தே உட்டேன்

என் ப்ளாகை படிப்பவர்களுக்கு இந்தியாவை வல்லரசாக்க நான் தீட்டியுள்ள ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி தெரிந்திருக்கலாம்.

இந்த திட்டத்தின் முழுவடிவத்தை ஒரு ஆடியோ கேசட்டில் பதிவு செய்து 1999 வாக்கில் ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். ஏதோ 10 கோடி வாலிபர்களாம்/சிறப்பு ராணுவமாம்/கங்கை காவிரி இணைப்பாம்.. ஆ..மா நாட்டுக்கு ரெம்ப  தேவைன்னுட்டு  கிடப்புல போட்டுட்டாய்ங்க

நான் அந்த கேசட்டிருந்தால் வேறு யாருக்காவது அனுப்பலாமேஎன்ற உத்தேசத்தில் கேசட்டை திருப்பியாவது அனுப்பும்படி தபால் செலவுக்கு ரூ.10 எம்.ஓ அனுப்பினேன்.

இந்த சமயத்தில் அன்றைய என் பொருளாதார நிலைமையையும் சொல்லிரனும். அந்த கம்பெனி கேசட்டோட விலை 31 ரூபானு ஞா. ஏதோ பூர்வீக வீட்டை வித்து லட்ச ரூபா காசு வந்த தைரியத்துல ஆப்பரேஷன் இந்தியா2000 ஐ நாடறிய செய்ய என்னென்னமோ பண்ணி தொலைச்சுட்டு சோத்துக்கே ததிங்கணத்தோம் போடற நேரம் அது.

மறுபடி ஒரு வாக்மேன் வாங்கி மறுபடி ஒரு கம்பெனி கேசட் வாங்கி பதிவு பண்ணி இன்னொரு பத்திரிக்கைக்கு அனுப்பற அளவுக்கு வசதியில்லாத ஒரே காரணத்தால கேசட்டை திருப்பி அனுப்பசொல்லி எம்.ஓ அனுப்பினேன்.

ஆனாலும் விகடன் தரப்பிலிருந்து பதிலில்லை. இவிக அரசு இயந்திரத்தோட மெத்தனத்தை கிழிக்கிறாய்ங்க. கடுப்பாகி  காட்டமாக ஒரு போஸ்டு கார்டு எழுதினேன் . அது அந்த நாள்ள  ஆசிரியராக இருந்த திரு பாலசுப்பிரமணியன் கண்கள்ள  பட்டிருக்கு.

உடனே அவர் ஜே.வி.நாதன் என்ற நிருபரை என்னிடம் அனுப்பினார். வந்த ஜே.வி.நாதன் கேசட்டு ஓஞ்சு போனதை பற்றியும் அதை எப்படி காம்பன்சேட் பண்ணுவது என்பதை பற்றித்தான் பேசினார். அதில் என்ன பதிவாகியிருந்தது. அதற்கும் இந்த நாட்டிற்கும் என்ன சம்பந்தம் இதெல்லாம் டாபிக்ல வரவே இல்லை.

நான் காந்தி தாத்தா  டைப்ல  (மொக்கை பென்சில் ஞா இருக்கா) என் கேசட்டை எனக்கு கொடுக்கிற வழியப்பாருங்கப்பானு பேசிட்டிருந்தேன்.

வெளிய போய் யாரோடவோ ஃபோன்ல பேசினாரு. அப்புறம் பந்தாவாய் ஆப்பரேஷன் இந்தியா 2000  பத்தி பேட்டியெல்லாம் எடுத்தார் .

அப்புறம் என்னாச்சு ? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! விகடன் க்ரூப் பத்திரிக்கைகளுக்கு தலா ஒரு இதழோட விற்பனை அதிகரிச்சிருக்கும்.

நான் தான் மடையன் மாதிரி வாங்கி வாங்கி பார்த்துக்கிட்டிருந்தேனே.. வருசம் 1999ங்கோ. அப்பாறம் எப்பனா என் பேட்டியை  கேப் ஃபில்லிங்ல போட்டு விட்டுட்டாய்ங்களா தெரியாது.

உங்கள்ள யாருக்காச்சும் தெரிஞ்சிருந்தா சொல்லுங்கண்ணா..

Friday, October 29, 2010

டோண்டுவின் பத்தினி (?) கூச்சல்

ஒரு ஏரியாவுல ஒரு பலான பார்ட்டி வந்து சேர்ந்ததுனு வைங்க.  அதும்பாட்டுக்கு தொழில் பண்ணிக்கிட்டு போகாது. ஏரியால இருக்கிற  பொம்பளைகளோட நடத்தையையெல்லாம் ஓன் மேக்  லென்ஸ் வச்சு பார்க்கும்.  அய்யோ அய்யோ இந்த அ நியாயத்தை பாரேன் இந்த அக்கிரமத்தை பாரேனு கூச்ச போட்டுக்கிட்டே இருக்கும். இதைத்தான் சுருக்கமா பத்தினி கூச்சல்ங்கறது. இப்ப இது மேல பேட்டண்ட் ரைட் எனக்கே எனக்குத்தான்னு டோண்டு சார் கிளம்பியிருக்காரு


பார்ப்பனீயத்தை எதிர்க்கிற மத்தவுகளுக்கும் எனக்கும் ஒரு வித்யாசம் உண்டு. அது இன்னாடான்னா "ஒத்தனை ஜெயிக்க முடியலியா காப்பியடிச்சிரு"ங்கறது என் ஸ்டைல்.

ஜாதகப்படி, வாழ்க்கை முறையின் படி நானே ஒரு பிராமணந்தான். அதனால உங்க பப்பெல்லாம் வேகாது அய்யா!

பெரியார் சொல்வாரு "எங்கயோ குலைக்கிற நாய்க்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன்னு"

நமக்கு அந்த ரேஞ்சில்லையே அதனால பதில் சொல்ல வேண்டியதாயிருக்கு. நீங்க போற போக்குல உச்சா அடிச்சிட்டு போயிட்டிங்க ஓகே. அட்லீஸ்ட் அதனோட லிங்கை எனக்கு அனுப்பியிருக்கலாம்.

மொதல் கடுப்பு இதான். அடுத்த கடுப்பு நீங்கல்லாம் மெத்த படிச்சவுக அறிவாளிங்க. நானெல்லாம் பிக்காலி. குன்ஸுல ( அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்) காலத்த ஒட்டற பார்ட்டி  உங்களுக்கு  தெரியாதது என்ன?

டோன்டு டோன்டு தான் முருகேசன் முருகேசன் தான். நீங்க என்னை மாதிரி ரோசிக்க முடியாது. நான் உங்களை மாதிரி ரோசிக்க முடியாது.

என்னுது பண்ணையாள் மென்டாலிட்டி. "அய்யா வேட்டி கொடுத்தாரு ,சட்டை கொடுத்தாருன்னுட்டு அய்யாவுக்கு எது ஒன்னுன்னாலும் அரிவாள தூக்கிருவன். என்னை இந்த சனம் ஃபீட் பண்ணாய்ங்க. இவிக ரத்தத்தை,உழைப்ப எனக்கு கொடுத்து என் பசியாத்தினாய்ங்க.

உங்களாவா மாதிரி என் பார்ப்பன பாத்திரம் எனக்கு சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸை தரலை. இன்ஃபிரியரா ஃபீல் ஆனேன். என் வயித்த நிரப்பின இவிக வாழ்க்கைய வெளிச்சத்துல நிரப்பனும்னு துடிச்சேன்.

உங்களுது அசலான அய்யர் மென்டாலிட்டி. நீங்க உ.வ படமாட்டிங்க.  இருட்டை சபிப்பிங்க. அப்பாறம் உங்க வேலைய பார்த்துக்கிட்டு போயிருவிக. ஆனால் நான் என் கொழுப்பையெல்லாம் எடுத்து திரி போட்டு ஒரு விளக்கை ஏத்தி வச்சிருக்கேன்.

நான் என்ன சொல்லவரேன்னா உங்களுக்கு புரியாதப்ப - சீரியஸ்னெஸ் உறைக்காதப்ப அம்பேலுன்னுட்டு போயிரனும். அதைவிட்டுட்டு உங்க மேதைமைய ப்ரூவ் பண்ணிக்க என்னை மட்டம் தட்ட வேண்டிய அவசியமே இல்லை.


ஒரு சீனியர் ப்ளாகரா உங்களுக்கு என்னை விமர்சிக்க முழு உரிமை இருக்கு. ஆனால் அதை நேர்மையா செய்யனும். முதுகுல குத்த கூடாது.  உங்க ப்ளாக்ல கீழ்காணும் பத்தியோ அதற்கான லிங்கோ  வெளியிடப்பட்டிருக்கு

சித்தூர் சோசியன் ஒருத்தன் இருக்கான்... அவன்கூட இந்த மாதிரி பல திட்டங்கள் வச்சிருக்கான்னு அப்பப்போ சனாதிபதிக்கு எல்லாம் தந்தி அடிப்பானாம். அதுல எதையாவது படிச்சிட்டு இவன் ஒரு மறை கழண்ட கேஸுன்னு நினைக்காதவங்க கைதூக்குங்க பாப்போம். பொது புத்தி அப்படித்தான் நினைக்கும். அது மாதிரி பலருக்கும் பல நினைப்பு வரத்தான் செய்யும்.. உடனே ஓவரா அதுக்கு செண்டிமெண்ட் பீலிங் கொடுக்காதீங்க.

இது ஒரு பெரிய மன்சன் பண்ற வேலையா?  ஏதோ ஒரு நாய் எங்கயோ குலைச்சிட்டுத்தான் இருக்கும்னு விட்டுர நான் என்ன பெரியாரா? சிறியன்.

//இம்மாதிரி பார்ப்பன குசும்பு என பொதுப்படையாக லேபல் போட்டு என்ன சாதிக்கப் போகிறீர்கள்?//

பாஸ்!
ஓஷோ சொன்ன மாதிரி சாவியையே பூட்டா மாத்திட்டிங்களே அதுக்குண்டான கஜானாவை கண்டுபிடிச்சு கொள்ளையடிச்சு ராபின் ஹுட் மாதிரி என் சகோதரர்களுக்கு வாரி வழங்கபோறேன்.

வைக்கோல் போர் மேல படுத்த நாய் மாதிரி கிடக்கிற உங்க இனத்தை விரட்டி ஞான செல்வத்தை பகிரப்போறேன்.

நாணயஸ்தன் வரான் இரும்பு பெட்டிய பூட்டும்பாய்ங்களே அதே கதைதான். உசாரய்யா உசாரு ஓரம் சாரம் உசாருன்னு உசார் பண்றதுதான் நம்ம சாதனை.
இதுக்கு காரணம் பல யுகத்து வேதனை.

//முன்பு ஒரு முறை பார்ப்பன துபாஷிகள் பற்றி ப்ரூவ் செய்வதாகச் சொன்னீர்கள்.அதன் பிறகு ஒன்றையும் காணோம். //
ஆஹா.. என்னே உங்க ஞா சக்தி. நான் மொத்தம் 1500 பதிவுகளுக்கு மேல எழுதியிருக்கன். அது ராம் மந்திர் விவகாரத்துல உங்களாவாவோட சுய லாபம் மாதிரி எங்கனயோ ஒளீஞ்சிருக்கு.  அதுக்குண்டான லிங்கை தாங்க 24 மணி நேரத்துல ப்ரூவ் பண்றேன்.


//திறமை உண்மையில் இருந்தால் எல்லா எதிர்ப்புகளையும் தாண்டி வருவீர்கள். //

பாஸ் ! எதிர்ப்பெல்லாம் நமக்கு முந்திரி பருப்பு மாதிரி நொறுக்கி தள்ளிருவம். தாளி சனத்தையும் நம்ம எழுத்தையும் சல்லாத்துணி கட்டியில்ல மறைக்கிறானுவ.. ஓப்பனா கேட்கிறேன். என்னோட 1,500 பதிவுகள்ள ஒரு பதிவு கூட உருப்படியானது இல்லியா? ஹிட்ஸ் குறைவா? ரேங்குல குறைவா? ஏன் இதுவரைக்கும் ஒரு தமிழ் பத்திரிக்கை கூட என் ப்ளாகை தொட்டு பார்க்கலை.

(தினமணில பாவம் தெரியாத்தனமா "தத்துவமா புடி"ங்கற ஐட்டத்தை கோட் பண்ணீட்டாய்ங்க. அது எங்க ஆத்தா பண்ண மாயை)

//வரவில்லை என்றாலும் முயற்சி செய்து கொண்டே இருக்கவும். அதுதான் ஒரே அவ்ழி.//

என்ன வச்சி காமெடி கீமிடி பண்ணலையே . கதவிருக்க வேண்டிய இடத்துல சுவத்தை கட்டிவச்சிருக்கானுவ. அடிச்சு தூள் பண்ணி நுழைய வேண்டிய சமாசாரம் தலைவா.. தட்டிக்கிட்டே இருக்க சொல்றியா? - இதைத்தான்  உங்க குசும்புன்னு சொல்றது.

//பார்ப்பனர்களால் என் குடியே கெட்டது என நீங்கள் சொல்வது உங்கள் மனதுக்கு ஆறுதலாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதனால் காலணா பிரயோசனம் இல்லை.//

நான் தனி மனிதனா இருந்திருந்தா - பிழைப்புக்கே பிறந்தவனா இருந்தா ஓகே. நான் என் தாய் நாட்டை தட்டி எழுப்பி வல்லரசாக்க வந்தவன்.

20- - ல் இந்தியாவை  வல்லரசாக்கி காட்டிய  முருகேசன் 1997 லேயே தம் முயற்சியை துவக்கியும் அது தாமதமானதற்கு என்ன காரணம்?

இப்படி ஒரு கேள்வி எழுப்பப்படும். அப்போ இதுக்கு சரித்திரம் பதில் சொல்லும்.

"அச்சு ஊடகம் மற்றும் அரசு தலைமை செயலகங்களில் நிலவிய பார்ப்பன ஆதிக்கம்"னுட்டு.

பாஸ்!
கடவுளே உங்க இனத்தை கை விட்டுட்டாரு.  நீங்க எதுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டிருக்கிங்க வீணா..

எச்சரிக்கை:
"என் வழியில நான் போறேன். உங்க வழில நீங்க போங்க. உங்க வழிக்கு நான் வரலை. என் வழிக்கு நீங்க வராதிங்க"

வந்தாலும் புல்டோசரோட வாங்க சார்.. இதென்ன சார்  சாணி நாத்தம் அடிக்கிற புல்லுக்கட்டெல்லாம் கொண்டாந்து போட்டுக்கிட்டு ..

ரஜினி சொல்வது அச்சத்தால் நான் சொல்வது தங்கள் நலம் கருதி, தங்கள் இனத்தின் நலம் கருதி..

Thursday, October 28, 2010

செம்மொழி பாலியல் கல்வி .....( -18)



 















அன்பு மாணவச்  செல்வங்களே ....

தெரு வோர தண்ணீர் குழாயடி
சண்டையின் போதும் ....

பொது கழிவறை ,ரயில்வே
கழிவறை செந்தமிழ் கிறுக்கல்களிலும்....

மானாட மயிலாட தொலை காட்சி நிகழ்சிகளிலும் ....

திரையுல குத்து பாடல்களிலும்,
இரட்டை  அர்த்த வசனங்களிலும் ....

நாகரிக மங்கைகளின் டீ -சர்ட்  வாசகங்களிலும் ...

தள்ளு வண்டி புத்தக கடைகளில்
கிடைக்கும் கில்மா கதை புத்தகங்களிலும் ... 

திரையரங்குகளில் ஓடும்
"வயது வந்தோர் மட்டும்" படங்களிலும் ...
கணினி வலை யுலகிலும் ...

கற்று கொள்ளுங்கள்..பாலியல் கல்வி...

வகுப்பறையில் பாலியல் கல்வி
என்பது ஆபாசம் ....புரிந்து கொள்ளுங்கள் ....

பண்பாடு  காப்போம் ...

Wednesday, October 27, 2010

18 (+) "Miss" Understanding

 18 (+) "Miss" Understanding  ஆமா! "மிஸ்" அண்டர்ஸ்டான்டிங் தான் :)
 சுகுமார்ஜிக்கு சும்மா அட்வைஸ் மாதிரி எழுதுறத தவிர வேற ஏதும் தெரியாதா? அப்படின்னு சிலர் நினைக்க கூடாதில்ல , அதனால் தான் ஒரு ஹாட்.... திரு முருகேசன் அவர்களின் அடியொற்றி   கொஞ்சமாவது   வரணுமில்லையா அதான்.

விசயத்திற்கு வரலாம் ...

 சில நேரங்கள், என்னை நான் நிரூபனம் செய்ய முற்படும் போது பலவீனமாக உணர்கிறேன். உணர்ந்துமிருக்கிறேன்.

இது அறிவாளியாக இருப்பதின் அல்லது இருக்கமுயற்சிப்பதின் சாபக்கேடு. இது சில நேரங்களில் ''உன்னைவிட'' என்பதாகக்கூட அமையும். ஆனால் பல ஆண்டுகள் அநுபவங்களுக்குப்பின் நான் முட்டாளாகவும் நடந்து கொள்கிறேன். ''எனக்கு எதுவும் தெரியாதப்பா!'' என்று சொல்லவும் செய்கிறேன்.

அநேகமாக கிராமங்களில்... அவையெல்லாம் இப்போதேங்கே இருக்கின்றன? சிறிய நகரங்களில் நிறைய நபர்கள் ''எனக்கு எதுவும் தெரியாதப்பா!'' என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். இப்படி சொல்லுபவர்களை நான் ஏளனம் செய்திருக்கிறேன். "என்னப்பா இது கூட தெரியாத உனக்கு?" என்று. அது நீண்ட அநுபவங்களுக்குப்பிறகானதாக அப்போது தெரியவில்லை.

சென்னை போன்ற பெரு நகரங்களில் "I don't know" மிக குறைவாகவே ஒலிக்கும்.

நிறைய நபர்கள் பெரும் விடாமுயற்சியோடும், மன அழுத்தத்தோடும் நான் முட்டாளில்லை என நிரூபிக்கவே முயற்சிக்கிறார்கள்.

அதன் மூலமாக அவர்கள் பெறும் சுமை, காலமுழுதுக்கும், காலன் வருமளவும் தொடரும்.

''எனக்கு எதுவும் தெரியாதப்பா!'' என்று சொல்வதற்கு கூச்சமோ, தயக்கமோ தேவையில்லை. ஆனால் வயதாக ஆக தானாகவே இயல்பாக சொல்லக்கூடிய காலம் நிச்சயமாக வரும்.

அப்போதுதான் ''எனக்கு எதுவும் தெரியாதப்பா!'' என்ற வாக்கியங்களின் உண்மை, தன்மை அறிய வரும். அதோடு தனக்கு தானே புரிந்து கொள்ளுதல், அல்லது அறிந்து கொள்ளுதல் வரமா இல்லை சாபமா?

என் வாழ்வு முழுதும் எனக்கு விடை கிடைக்காது போலும். ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு வரத்தையும், சாபத்தையும் தருகின்றன. சாபமாக இருக்கும் போது நான் என்னை முட்டாளாக உணர்கிறேன், வரமாய் இருக்கும் போது என்னை நானே புகழ்ந்து கொள்கிறேன். ஆனால் பொதுவாக என்ன நிலை என்றால் நாயகன் கமல் போல "தெரியலயேப்பா !".

சரி, நீங்கள் எப்படி அறிந்து கொள்கிறீர்கள்? 

தொடக்கத்திலேயே இதை 18 (+) என்று சொல்லி பிரித்திட முடியாது.. நீங்கள் அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது...என்ன, பீடிகை அதிகமாக இருக்கிறதா?

எனக்கு ஒரு நண்பர் மின் அஞ்சலில் அனுப்பிய ஒரு விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

தகவல் தொடர்பியலில் ஒற்றை சொல்லும்போது அதுவாகவே அதை புரிந்து கொள்ளுதல் என்பது இல்லவே இல்லை. நூறு சதம் அப்படி புரிந்துணர்வு ஏற்படுவதே இல்லை.

நமக்கு வாழ்வில் ஏற்பட்ட, ஏற்பட்டுக்கொண்டிருகிற அனுபவங்கள் வாயிலாக நாமே ஒரு கணக்கு போட்டு, " ஆகா!, இப்படி இருக்குமோ, ஆமா, இதுவாகத்தான் இருக்கும் " என்று முடிவு செய்து விடுகிறோம். அப்படி ஒரு நிகழ்வை இப்போது நீங்கள் உணரும் ஒரு வாய்ப்பு.

இல்லை நானா கில்லாடி. எதையும் என்ன சொல்லவருகிரர்களோ, அதை அப்படியே அறிந்து, உணர்ந்து கொள்ளும் சிறப்பு தன்மை என்னிடம் உண்டு என்று சொல்லுபவர்களும் இதை படிக்க முயலுங்கள்.

ஆங்கிலத்தில் இதை தருவதற்கு உணர்த்துதல்தான் காரணம், நல்லது தொடருங்கள்...

இதோ...


A beautiful Madam was having trouble with one of her students in 1st Grade class. Madam asked,'Boy. What is your problem?'

Boy answered, 'I'm too smart for the first-grade. My sister is in the third-grade and I'm smarter than she is! I think I should be in the 4th Grade!'

Madam had enough. She took the Boy to the principal's office. While the Boy waited in the outer office, madam explained to the principal what the situation was. The principal told Madam he would give the boy a test and if he failed to answer any of his
questions he was to go back to the first-grade and behave.She agreed.

The Boy was brought in and the conditions were explained to him and he agreed to take the test.

Principal: 'What is 3 x 3?'

Boy.: '9'.

Principal: 'What is 6 x 6?'

Boy.: '36'.

And so it went with every question the principal thought a 4th grade should know. The principal looks at Madam and tells her, 'I think Boy can go to the 4th grade.'

Madam says to the principal, 'I have some of my own questions.

Can I ask him ?' The principal and Boy both agreed.

Madam asks, 'What does a cow have four of that I have only two of'?

Boy, after a moment 'Legs.'

Madam: 'What is in your pants that you have but I do not have?'

Boy.: 'Pockets.'

Madam: What starts with a C and ends with a T, is hairy, oval, delicious and contains thin whitish liquid?

Boy.: Coconut

Madam: What goes in hard and pink then comes out soft And sticky?

The principal's eyes open really wide and before he could stop the answer, Boy was taking charge.

Boy..: Bubblegum


Madam: What does a man do standing up, a woman does sitting down and a dog does on three legs?

The principal's eyes open really wide and before he could stop the answer...

Boy.: Shake hands

Madam: You stick your poles inside me. You tie me down to get me up. I get wet before you do.

Boy.: Tent

Madam: A finger goes in me. You fiddle with me when you're bored. The best man always has me first.

The Principal was looking restless, a bit tense and took one large Patiala Vodka peg.

Boy.: Wedding Ring

Madam: I come in many sizes. When I'm not well, I drip. When you blow me, you feel good.

Boy.: Nose


Madam: I have a stiff shaft. My tip penetrates. I come with a quiver.
Boy.: Arrow

Madam: What word starts with a 'F' and ends in 'K' that means lot of heat and excitement?

Boy.: Fire truck


Madam: What word starts with a 'F' and ends in 'K' & if u don't get it, u have to use ur hand.

Boy.: Fork


Madam: What is it that all men have one of it's longer on some men than on others, the pope doesn't use his and a man gives it to his wife after they're married?

Boy.: SURNAME.

Madam: What part of the man has no bone but has muscles, has lots of veins, like pumping, & is responsible for making love ?

Boy.: HEART.

The principal breathed a sigh of relief and said to the teacher,

'Send this Boy to
IIM AHMEDABAD, I got the last ten questions wrong myself!'.

கேள்விகள்

அண்டை மாநிலம் ஆந்திராவில் இருக்கும் மக்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்கள் போல, இரண்டு முறை கூகுள் டாக்கில் பேசியதற்கே என்னை சகோதரன் என விளித்து இப்பொழுது தனது வலைப்பதிவிலும் எழுத வாய்ப்புக்கொடுத்துள்ளார் முருகேசன் ஜி. அவர் கொடுத்த அனுமதியுடன் எனது ஜோதிடம் சார்ந்த சந்தேகம் மற்றும் கேள்விகளை இங்கே பதிவு செய்கிறேன். ஆந்திரா மக்கள் உணவில் பச்சை மிளகாய் அதிகம் சேர்த்துக்கொள்வதை பார்த்திருக்கிறேன். இன்று முருகேசன் ஜி பச்சை மிளகாய் சாப்பிட்டிருக்கக்கூடது என ஆசைப்படுகிறேன், ஒரு சில கேள்விகள் எனக்கே ஓவராக தெரிந்தாலும் பலமுறை என் மனதில் தோன்றியதால் இங்கே கேட்டுவிடுகிறேன். தவறாக தெரிந்தால் குறிப்பிட்ட கேள்வியை நீக்கி விடுங்கள் முருகேசன் சார். தனிப்பட்ட கேள்விகள் எதுவும் இல்லை, சந்தேகங்களுக்கு :) போகலாம்,

1. ஒவ்வொரு கிரகங்களின் திசை ஆண்டுகள் (உடுமகாதிசை) எதன் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளன? உதாரணமாக கேதுவிற்கு 7 வருடம் என பயன்படுத்துகிறோம், 7 வருடம் என்பது எதன் அடிப்படையில் வந்தது?

2. ஜோதிடத்தில் லக்னமே பிரதானமானது, லக்னத்துடன் சந்திராலக்னத்தையும் சேர்த்து பார்க்க துல்லியமான பலம் கிடைக்கிறதென்பது அடிப்படை மற்றும் அனுபவம். ஆனால் மற்ற கிரகங்களுக்கில்லாத தனித்தன்மை (இரண்டாம்நிலை லக்னம்) சந்திரனுக்கு ஏற்பட காரணமென்ன?

3. திரேக்காணம், சதுர்த்தாம்சம் போன்ற தசவர்க்கங்கள் மற்றும் இன்ன பிற வர்க்கங்களை கணித்து கொண்டு பலன் கூறுவது துல்லியம் தரும் என்பது ஜோதிடவியல், ஆனால் 30 நிமிட, 60 நிமிடங்களில் ஜோதிட பலாபலன் கூறி முடிக்கும் தற்பொழுதைய நிலவரத்தில் இந்த கட்டங்களை அமைக்க மற்றும் பலாபலன் தெரியாத ஜோதிடர்கள் தானே இனி உருவாகமுடியும்? ( நவாம்சம் கூட அமைக்க தெரியாத ஜோதிடர்களை நான் பார்த்திருக்கிறேன், இவர்களால் ஜோதிடத்திற்கு அவமானம் தானே).

4. அபிஜித் என்ற ஒரு நட்சத்திரம் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன் (திருவோணம் அவிட்டம் இடையில் சரிதானே) அதை ஏன் பயன்படுத்துவதில்லை?

5. சுக்கிரன் ஒரு நீர்க்கிரகம், குளுமையானது என்பது ஜோதிடம், ஆனால் சுக்கிரன் 460 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள ஒரு வெப்பக்கிரகம் என்பது விஞ்ஞானம். முரண்பாடுதானே!

6. மாந்தி(TITAN) சனியின் துணைக்கிரகம் எனில் சனிக்கு இருக்கும் 60 க்கு மேற்பட்ட துணைக்கிரகங்கள் என்ன ஆனது? இதுபோல குருவிற்கும் அதிக துணைக்கிரகங்கள் உள்ளதே, இதனையெல்லாம் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை?

7. ராகு, கேதுக்கள் ஆரம்ப கால ஜோதிடங்களில் பயன்படுத்தவில்லை என முன்னோர்களின் நூல்களில் இருந்து தெரிகிறது. எனில், தற்பொழுது கூட ராகு கேதுக்கள் தவிர்த்தால் துல்லியமான் பலன் கிட்டுமா?

8. நடக்கவேண்டியவை நடந்தே தீரும், அதனை நடத்தி வைக்கவே கிரகங்கள் எனில் நாம் ஜாதகம் பார்த்து அதன் படி நடந்து கொள்வதால் ஒன்றும் மாறிவிடாதல்லாவா?

9. பரிகாரம், பல ஜோதிடர்கள் போலி ஜோதிடராக மாற பரிகாரம் மட்டுமே காரணம் என்பது உலகறிந்தது, இதனாலயே ஜோதிடம் பொய் என்கிற மனநிலைக்கு வர வேண்டி இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் கிரகங்கள் தன் வேலைகளை செய்யும்போது அதனை தடுக்க அல்லது சரிசெய்ய பரிகாரம் செய்வது என்பது கிரகங்களுக்கு எதிராக செயல்படுவது என்பதாகத்தானே அர்த்தமாகிறது. நாம் இங்கே இரண்டு வாழைப்பழம் ஒரு தேங்காய் வைத்து வணங்குவதால் பல லட்சம் மைல் தூரத்தில் நம் பூமியை விட பல மடங்கு பெரிய கிரகங்களும் நட்சத்திரங்களும் நம் வழிக்கு வந்து நமக்கு சாதகமாக வேலை செய்யும் என நினைக்கும்போது நகைப்பாக தானே இருக்கிறது.

10. கிரகங்கள் தான் உலக நிகழ்விற்கு காரணமெனில் இறைவன் என்பது கேள்விக்குள்ளாப்படுகிறதே.

11. எண் கணிதம் என்ற ஒரு கொடுமையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? வெறும் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த மொழியின் வரி வடிவங்களை மாற்றுவதன் மூலம் மனித வாழ்வு மாறும் என்பது நினைக்க மடமையாக உள்ளதே. ( எண் கணிதத்திற்கு எந்த ஒரு வரலாறும் இல்லையென நினைக்கிறேன்).

12. ஒரு நாட்டிற்கு ஜாதகம் பார்க்கும் முறை எப்பொழுது வந்தது? இந்தியாவிற்கு சுதந்திரமடைந்த தேதியை ஜாதகமா கணிப்பதை பார்த்திருக்கிறேன். சுதந்திரமடைவதற்கு முன் இந்தியா என்ற ஒரு நாடு இல்லையா? அதற்கு முன் இந்தியாவிற்கு ஜாதகம் பார்க்க எந்த முறை உபயோகப்படுத்தியிருப்பார்கள்?

இன்னும் நிறைய சந்தேகங்கள் இருக்கிறது, இன்னொரு நாள் அதையும் கேட்கிறேன்.

இப்படிக்கு,
ராஜா - திருப்பூர்

Tuesday, October 26, 2010

சோனியா & கோ மீது மைக்ரோ ஃபைனான்ஸ் சேறு

மகளிரை பலி கொண்ட மைக்ரோ      ஃபைனான்ஸ் அழிச்சாட்டியம்
மத்திய அரசு  தலையிடாது - மத்திய நிதி மந்திரி அறிவிப்பு
ஏற்கெனவே டிவிட்டர்ல அரை குறையா சொன்ன விஷயம் தான். மைக்ரோ ஃபைனான்ஸுங்கற பேர்ல தாய்குலத்தை ரீடெய்லாவும், ஹோல்சேலாவும் கடன் காரிகளாக்கி தூக்கு போட்டு சாக ,ஊரை விட்டு ஓட ,ஏன் ஊர் மேல போகக்கூட வச்சிட்டானுவ.இது கடந்த வாரம் பத்திக்கிச்சு.

எங்க ஊரு தாத்தா ரோசய்யா இந்த பேப்பர் காரவுக ரவுச பொறுக்க முடியாம தகிரியமா ஆர்டினென்ஸ் எல்லாம் கொண்டுவந்தாரு. (கட்டாய வசூல் கூடாது அது இதுன்னு) ஏதோ கொஞ்சம் போல லாந்தர் ஜோதி கணக்கா  டப்பு டப்புனு அடிச்சிட்டிருந்த நம்பிக்கையை மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி உஃபுனு ஊதி அணைச்சுட்டாரு. இந்த மேட்டர்ல மத்திய அரசு தலையிடாது. மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களே விதிகளை உருவாக்கி சுயக்கட்டுப்பாடோட செயல்படனும்னு சொல்ட்டாரு. ( நரிக்கு நாட்டாமை கொடுத்தா கிடைக்கு ரெண்டு ஆடு கேட்கும்னு சொல்வாய்ங்களே ஞா வருதா)

போறாததுக்கு தாத்தா கொண்டு வந்த உளுவுளா காட்டி ஆர்டினென்ஸுல கடுமையான நிபந்தனைகள் உள்ளதாவும் அதையெல்லாம் நீக்கனும்னு சொல்லியிருக்காரு.உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணான்னா இதான் போலும்.

அது சரி பாஸ் இந்த பிஸ்கோத்து மேட்டர்ல் மத்திய நிதிமந்திரியே தலையிட வேண்டிய அவசியம் ஏன் வந்தது. மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களோட நாடு தழுவிய நெட் ஒர்க்கின் தலைவருக்கு சோனியா,ராகுலுக்கும் என்ன சம்பந்தம்னு ஃபோட்டோவோட பார்ப்போம்.


அதுக்கு மின்னாடி இந்த மைக்ரோ ஃபைனான்ஸுங்கற விஷ வலைய  பத்தி சின்னதா அறிமுகம். மகளிர் சுய உதவிக்குழுன்னு அமைச்சாய்ங்க. தெரியும்ல. பெண்கள் ஒரு க்ரூப்பா சேர வங்கி க்ரூப்புக்கு கடன் தரும் ( மந்திரி சபை மாதிரி கூட்டு பொறுப்புங்கண்ணா. க்ரூப்ல ஒரு மெம்பர் திவாலாயிட்டாலோ, செத்துப்போனாலோ, காணாம போயிட்டாலோ வங்கிக்கு அதோட லின்க் கிடையாது. மத்த மெம்பர்ஸ் எல்லாம் சேர்ந்து வாங்கின கடனை கட்டித்தான் ஆகனும்.

இந்த ஃபார்முலா வங்கிகளோட பாதுகாப்புக்கு செமர்த்தியா ஒர்க் அவுட் ஆகவே தேசீயமயமாக்கப்பட்ட வங்கிகள் எல்லாம் கஜானாவை திறந்து விட்டுது. க்ரூப் மெம்பர் செத்தா எவளோ செத்தா எனக்கின்னா போச்சுனு பல் குத்திட்டு இருக்கலாம்ல.

இதை பார்த்த சில வட்டி வியாபாரிங்க மைக்ரோ ஃபைனான்ஸுனு ஆரம்பிச்சாய்ங்க. மொதல்ல ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை பதிவு பண்ண வேண்டியது. அதும் பேர்ல கடனை அள்ளிவிட வேண்டியது.   என்ட் ரன்ஸ் ஃபீஸு, சப்ஸ்க்ரிப்ஷன், சங்கம் பதிவு,  வங்கி கணக்கு துவங்க இப்படி பல செலவுகளை மெம்பர்ஸ் தலைமேல போட்டு கடனும் தருவாய்ங்க  (வட்டியெல்லாம் வெண்ணை தடவி விட்டாப்ல  தீட்டிப்புடுவாய்ங்க)

இன்னைக்கு கவர்மென்டு கன்செர்ன்னாலே மோசம்பா. பேசாம ப்ரைவைட்டைஸ் பண்ணிரனும்னு புலம்பறாய்ங்களே அவிகளுக்கு அசலான மேட்டர் தெரியாது. ப்ரைவேட் கன்செர்ன் வந்தா அவனோட நோக்கம் ஜஸ்ட் லாபம்தேன்.

நான் கூட சித்தூர் வேலூர் பஸ்ல செக்கிங்கா செய்திருக்கேன். தினசரி பத்தா பத்து ரூபா. சம்பளம் ரூ 200 (கிம்பளம் பெருசாவரும் அது வேற சங்கதி) ஆனால் அரசு போக்குவரத்து கழகத்துல நடத்துனர்,ஓட்டுனர்க்கு இன்னா சம்பளம்னு பார்க்க மாட்டாய்ங்க. கடேசி சிங்கிள்ளே  ஒரு பல் போன பாட்டி, காலொடிஞ்ச ஆடு, மூக்குல ஒழுகுற குழந்தை மட்டும் ஏறினாலும் அரசு பஸ் போயே ஆகனும்.ப்ரைவேட்டுன்னா சிங்கிள் கேன்சல் நடந்து போன்னிருவான். நிற்க..


மேற்சொன்ன மைக்ரோ ஃபைனான்ஸ் கம்பெனிகளொட கிளைகளை  தெருவுக்கு தெரு ஆரம்பிச்சுட்டாய்ங்க.  இதுக்கெல்லாம் ஒரு நெட் ஒர்க். அதனோட அதிபதி நம்ம இளவரசரோட நெருங்கிய சினேகிதர். மேல் விவரம் மஸ்தா கீது.அதையும் தந்திருக்கேன். தொடர்ந்து படிங்க.


நம்முது மேல் சேவனிஸ்ட் சொசைட்டி. ஏழை குடும்பங்கள்ள வேணம்னா "இன்னா சொம்மா பேசினிக்கினே போற .. நீ டைஃபாய்ட் வந்து நட்டுக்கினி கடந்தியே அப்போ  நானு நாலு ஊட்ல பத்து பாத்திரம் தேச்சு கொண்டாந்த  துட்ல  வவுத்த கழுவனதெல்லாம் மறந்து போச்சானு" கேட்பா

மிடில் க்ளாஸுன்னாலே ரெண்டும் கெட்டான்.இதுல லோயர் மிடில் கிளாஸ் சனத்தோட நிலைம எப்படியிருக்கும்னு ரோசிங்க.லட்சம் சொன்னாலும் தாய்குலத்துக்கு மணி சீக்ரெட்ஸ் தெரியவே தெரியாது.

சித்தாளு 100 ரூக்கு  மூக்குத்தி வாங்கி  கஷ்டத்துக்கு 30 ரூ க்கு விப்பா. மிடில் க்ளாஸு நகைய மாத்தி செய்யனு போய் ஏமாறுவா. .  எப்படியோ தாளி ஒரு பொம்பளையோட கப்பாசிட்டி  10 ஆயிரம்னா அவளுக்கு பத்து கம்பேனிக தலா பத்தாயிரம் கொடுத்து தொலைச்சிட்டானுவ.

தொழில்,முதலீடு,கொள்முதல்னு கணக்கா இருந்தவுக எஸ்கேப். கண்ணாலம், காட்சி,சீமந்தம், புருசனுக்கு டயாலிசிஸுனு கடன் வாங்கினவுக வசம்மா மாட்டினாய்ங்க.

க்ரூப் லீடருனு உள்ளவுகல்லாம் படாடோபத்தோட லீட் பண்ணிக்கிட்டே க்ரூப் மெம்பர்ஸுக்கு தெரியாம கடன் வாங்கி லம்பா அழுத்தி -மேனேஜ் பண்ணிக்கிட்டே வந்து ஒரு கட்டத்துல ஓடிப்போன கதையெல்லாம் மஸ்தா நடந்து கீது.

ஒவ்வொரு பொம்பளையும் ஏழு க்ரூப்ல மெம்பர்.ஏழு க்ரூப்லயும் கடன் வாங்கிருவா. தினசரி தவணை கட்டணும் (ஒவ்வொரு லோனுக்கு) இதில்லாம ஓடிப்போனவ செத்துப்போனவ பங்கை மத்த உறுப்பினர்கள் சேர்ந்து கட்டனும்.

தவணை நின்னா வங்கி கணக்கா ரெஜிஸ்டர் தபால் எல்லாம் வராது (அவிக கூட பழைய தமிழ் சினிமா கணக்கா அடியாட்களை அனுப்பறதா தகவல்.) க்ரூப் மெம்பர்ஸ் மொத்த பேரும் வீட்டாண்டை வந்துருவாய்ங்க. சரோஜா தேவி நாவல் எல்லாம் பிச்சை வாங்கனும்.

"எங்கனா போடி" " நான் அனுப்பறேன் வரியா" " நான் சொல்ற ஆள் கிட்டே படுத்துக்கோ" "பணத்தை நான் வாங்கிக்கறேன்" இதெல்லாம் ச்சொம்மா ஜுஜுபி. நேர்ல கேட்டா வா.வெ.

பாலியல் தொழிலுக்கு நான் எதிரி இல்லை.ஆனால் அது சட்டப்படி நடக்க சட்ட திருத்தம் வரனும்னு கேட்கிற  சட்டத்தை மதிக்ககூடிய பிரஜை. ஆனால் பாருங்க ஒரு பொம்பள அவளுக்கு,அவளோட திருப்பித்தரும் தகுதியை மீறி  திணிக்கப்பட்ட கடனுக்கான தவணைக்காக அட் லீஸ்ட் 200 ரூ 300 ரூ க்காக அவள் விருப்பத்துக்கு எதிரா பாலியல் தொழிலாளியா மாத்தப்படறத ஏத்துக்க நான் தயாரா இல்லை.

இந்த  நாடகங்களையெல்லாம் அரங்கேத்திக்கிட்டிருக்கிற நெட் ஒர்க்கோட சி.இ.ஓ விக்ரம் சமீபகாலத்துல ஏறக்குறைய திவால் பார்ட்டி. ஆனால் இன்னைக்கு பல லட்சம் கோடிகள் புழங்குது எப்படி ? எப்படி? ( மேலதிக விவரங்களுக்கு -ஆங்கிலத்தில் இங்கேஅழுத்துங்க உபயம் வால் ஸ்ட் ரீட் ஜர்னல்)

விக்ரம் சார் இளவரசரோட நண்பர். ராஜ மாதாவுக்கு வேண்டப்பட்டவர். தாளி இந்த மேட்டர்ல தலையிடறதா இல்லைன்னு பிரணப் அறிவிக்கலைன்னா டங்குவார் அறுந்துராதா?

கர்நாடகால ரெட்டி ப்ரதர்ஸ் மேல ஒரே  நேரத்துல 65 இடத்துல இன் கம் டேக்ஸ் ரெய்டு விட்டாய்ங்களே பார்க்கலை. பிரதர்ஸ் உத்தம சீலருங்கனு சொல்ல வரலை.
ஒய்.எஸ் சி.எம்மா இருந்தாரே 5  வருஷம் + 4 மாசம் அப்ப ஏன் ரெய்டு விடலை?

பா.ஜ.க மந்திரி சபைய கவிழ்க்க ஒர்க் அவுட் பண்ணாய்ங்களே அப்ப ஏன் ரெய்டு விடலை. நேத்திக்கு பா.ஜ.க அரசை காப்பாத்தினாய்ங்க.அந்த கடுப்புல கப்புனு
இப்ப ரெய்டு. கப்படிக்குதுப்பா..

தனக்கு வந்தாதான் தலைவலிங்கற ரேஞ்சுல சனம் வாழ்ந்துக்கிட்டிருக்காய்ங்க. ஒரு ஆட்டுமந்தைக்கு ஒரு புலி குறிவச்சதாம். ஒரேயடியா மந்தைல புகுந்தா தேவர் படம் மாதிரி முட்டி தள்ளீரும்னு தனி தனியா பிக் பண்ணி ஒவ்வொரு ஆட்டுக்கும் சொல்லுச்சாம் " நீ ஆடே இல்லை. நீயும் என்னை மாதிரி புலிதான். மத்ததெல்லாம் ஆடுங்கதேன்"

மோட்டிவேஷன் முடிஞ்ச பிற்பாடு தினசரி ஒரு ஆட்டை ஆட்டைய போட்டு தின்னு தீர்த்துருச்சாம் அப்படித்தான் இன்னைக்கு ஒவ்வொரு அமைப்பும் நம்மை தின்னு தீர்த்துக்கிட்டிருக்கு.

ஜெவும் கலைஞரும் பேசி ஒரு அண்டர் ஸ்டாண்டிங்குக்கு வந்து ரெண்டு பார்ட்டியும் காங்கிரஸை கழட்டி விட்டுரனும்பா.. இம்சை தாங்க முடியலை

Monday, October 25, 2010

பரந்த விளை நிலம் ஒரு மகா யோனி

அண்ணே வணக்கம்ணே,
இந்த வில்லங்க பதிவை படிச்சு பதைச்சு வண்டை வண்டையா  கமெண்ட் போடறதுக்கு முந்தி சுகுமார்ஜி  மனிதன் என்பவன் வாழும் மிருகம்ங்கற வித்யாசமான பதிவை  போட்டிருக்காரு. அதை படிச்சு ஒரு வார்த்தை சொல்ட்டு போங்கண்ணா.

இப்போ மேட்டருக்கு வந்துருவமா? பூமியை தாய்ம்பாய்ங்க.மண் மாதாம்பாய்ங்க. ஒரு பாய்ண்ட் ஆஃப் வ்யூல இது நெஜம்தான். ஒரு வகையில நம்மையெல்லாம் பிரசவிச்சது இந்த பூமிதான். ஆனா தாய் மேலயே காதல் கொள்ற ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் மாதிரி மனிதனுக்கு இந்த பூமி மேல அளப்பரியாத காமமும் இருக்கிறாப்ல தோணுது. ( இன்னைக்கு நடக்கிற ஆயிரக்கணக்கான ஏக்கர்  நில ஆக்கிரமிப்புக்கெல்லாம் இதான் காரணமோ என்னமோ?)

பழைய கற்காலம்,புதிய கற்காலத்துலருந்து மிருகபலம் அவனோட சஞ்சார வாழ்க்கையிலயும் தொடர்ந்திருக்கு.  ஆனா கண்ட நேரம் கண்டவளோட கூடி பிரிஞ்ச அதே மன நிலையில தான் இந்த மண் மங்கையையும் கையாண்டிருக்கான்.

ஸ்திர வாசத்துல, ஒரு குழுவா ஏற்பட்டு குழுவுக்குள்ளயே உடலுறவுகளும், குழந்தை பிறப்பும் ஏற்பட்டதால படிப்படியா ஆண்களோட ஆண்மை குறைஞ்சிட்டே வந்திருக்கனும்.

இருந்தாலும் விவசாயம்ங்கறது ஒரு உடலுறவுக்கிணையான இன்பத்தை அவனுக்கு கொடுத்திருக்கு.  ஆண்மையின் சிகரமா இருக்கிற ஆணுக்கு கேவலம் ஒரு பெண்ணின் கையளவு ........ மட்டும் திருப்தியை தரமுடியாது.  அவனுக்கு விசாலமான ...........தேவைப்பட்டிருக்கு அதான் நிலம்.

தன் உயிரைக்கொடுத்தாவது தன் துணையை காத்த மனித குலம், தன் துணையின் மானம், உயிருக்கு ஆபத்து நேரக்கூடும் என்றாலும் நிலத்தை இழக்க துணிந்ததில்லைன்னு பார்க்கும் போது பெண்ணுக்கு இணையா, ஏன் பெண்ணை விட
உசத்தியா நிலத்தை நினைச்சிருக்காய்ங்க.

விவசாயம்ங்கறது  ஒரு உடலுறவு. ஆமாம். மனிதன் இந்த நிலமகளை எப்படியாவது மருவ  பார்க்கிறான்.  அந்த உள்மன எண்ணத்தின் வெளிப்பாடே விவசாயம்.

இந்த எண்ணம் மனித குலத்தின் எண்ணங்களிலேயே தொன்மையானது . சென்னை டீன் ஏஜ் காளைகள் இருட்டிய பின் பீச் மணலில்................வேணாம் பாஸ் தமிழ் மணம் மாதிரி  மிச்ச மீதி சைட் காரவுகளும் தடை  பண்ணிரப்போறாய்ங்க

ஆணில் ஆண்மை பொங்கிய காலத்தில் அவனுக்கு விவசாயம் ஒரு கூடல் போன்ற புளங்காகிதத்தை தந்தது. பெண்ணுடனான மிக குறுகியது . ஆனால் நிலமோ அப்படியில்லை. விரிந்து பரந்து வா வா என்று வரவேற்றது.

அவன் முயங்க இடம் கொடுத்தது. வஞ்சனையின்றி வாரி வழங்கியது. இவனும் தன் ரத்தத்தை வியர்வையாக்கி கொட்டி அவளை சூல் கொள்ள செய்தான். (மகசூல் என்ற வார்த்தையை கவனியுங்கள்)

இதையெல்லாம் வச்சு பார்க்கும் போது இந்த விளை நிலமே  ஒரு மகா யோனியோனு தோணுது. ( ஹும் வக்கிரம் பிடிச்சதுங்களுக்கு இப்படித்தான் தோணும்னு சொல்றது ஆருங்க) இன்னைக்கு வானளாவ எழுந்து நிக்கிற கட்டிடங்கள் எல்லாம் அவள் யோனியை மருவும் சக்தியற்று, செக்கெண்ணை அடங்கிய டப்பா வாய்க்கு மூடியாக உபயோகிக்கப்படும் வாழைத்தண்டுகளோ  என்று தோன்றுகிறது.
அவள் மேல் ஊற்றப்பட்ட தாரும், கான் க்ரீட் கலவைகளும் இதேசேதியைத்தான் எனக்கு தருது பாஸ்.

மனுஷன்ல உள்ளது ஒரே பவர் அது செக்ஸ் பவர். உள்ளதுனு சொல்ல தயக்கமா இருக்கு. ( இளைய தலைமுறை  எல்லாம்  சுய இன்பம், குட்கா, லாலா,மசாலா, டின் ஃபுட் ,ஜங்க் ஃபுட், போதை மருந்துன்னு மூழ்கி கிடக்கிறதை பார்த்தா தயக்கமாதான் இருக்கு.

நாட்ல வன்முறை தலைவிரிச்சாட காரணம் உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்கள் தான். இந்த நிலை மாற பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கனும்னு நானே எழுதியிருக்கேன்.

ஆனால் அந்த நாளோட ஒப்பிட்டா இந்த தேதிக்கு உள்ள  ஆண்மையெல்லாம் ஜுஜுபி. ஆனாலும் ஏன் இத்தனை வக்கிரம்னு யோசிச்சா.. நாம விவசாயத்தை விட்டு விலகி வந்துட்டதுதானோன்னும் தோணுது.

இன்னைக்கும் 70 சதவீதம் மக்கள் விவசாயத்து மேலதான் டிப்பெண்ட் ஆகியிருக்காய்ங்க. இல்லேங்கலை. ஆனால் இன்னைக்கு நடக்கிறது விவசாயமான்னு எனக்கொரு சந்தேகம் உண்டு.

விவசாயம்ங்கறது ஒரு கூடல் மாதிரி நடக்கனும். மண்ணை முகர்ந்து,நக்கி , உதிர்த்து அதனோட பேசி, அதுல விழுந்து ,எழுந்து, படுத்து, உழுது, விதைச்சு பண்ற விவசாயம் எப்படி இருக்கும்.

இன்னைக்கு மண்ணை பரிசோதிக்க மண்பரிசோதனை நிலையம், என்ன விதைக்கலாம்னு சொல்ல ஒரு ஆள், என்ன உரம் போடலாம்னு சொல்ல ஒரு ஆள், உழுது போட ட்ராக்டர், இன்னைக்கு நடக்கிறது ரேப்புங்கண்ணா. அதுவும் கேங் ரேப்பு. அதுவும் ஆள் வச்சு பண்ற ரேப்பு.  அந்த பெண் என்னத்தை வாரி வழங்குவா?

மனிதன்  பசிச்சபோது தின்னு,  வீரியம் புரண்ட போது கூடி உடலளவுல வாழ்ந்த காலத்துல அவன் உடல் இயற்கையோட நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.

எப்போ இவன் மனம்,புத்தி,அகங்காரம்னு அடுத்தடுத்த தளங்களுக்கு தாவினானோ அப்பமே இவனுக்கும் இந்த இயற்கைக்கும்  உள்ள தொடர்பு அறுந்தே போச்சு.

விவசாயத்துல ஈடுபட்டிருந்தப்போ அந்த நிலம் மாதிரியே இவன் மார்பும் ,மனசும் விரிஞ்சிருந்தது, எப்போ இவன் " நிலமெனு நல்லாள் நக"  பட்டணம் பார்க்க போனானோ எல்லாமே சுருங்கி போச்சு ( நீங்க நினைக்கிறதும் தான்).

எப்போ உடலுக்கு உழைப்பு குறையுதோ அப்போ புத்தி மெருகேறுது (அதுவும் குறுக்கு புத்தி) எப்போ மண்டை சூடு அதிகரிக்குதோ உடம்பு உருக ஆரம்பிக்குது. பலவீனம் தான் பாவங்களின் கங்கோத்ரி. தந்திரங்களின் தாய் வீடு.

என்னைக்கேட்டா அளப்பரிய  ஆண்மையுள்ளவன் செய்யக்கூடிய ஒரே தொழில் விவசாயம் . விவசாயத்தை பத்தி சிந்திக்கவோ, அதன் மேம்பாட்டுக்காக திட்டமிடவோ, நிலத்தில் இறங்கி உழைக்கவோ அளப்பரிய ஆண்மை தேவை.

இந்த பாழாய்ப்போன சாதீயத்தால, சாதிகளுக்குள்ளாறயே நடந்த திருமணங்களால, நெருங்கிய  சொந்தங்களில் நடந்த கலப்புகளால மூஞ்சில மீசையும் நெஞ்சுல ஆசையும் தான் இருக்கு. இந்த அழகுல விவசாயமாவது .. மக "சூலாவாது".

இன்னைக்கும் விவசாயம் மேல ஆர்வம் காட்டற பார்ட்டிங்க இருக்காய்ங்கன்னா அவிக தான்யா ஆண்பிள்ளை சிங்கங்கள். உதாரணமா  அகசூல் என்ற  இந்த வலைப்பூவை பாருங்க..

விவசாயம், தோட்டக்கலை,மூலிகைகள்  தொடர்பான  வலைப்பூக்கள் நடத்துபவர்கள் தங்கள் வலைப்பூவின் லிங்கை தந்தால் அவையும் இங்கு வெளியிடப்படும்

மனிதன் என்பவன் வாழும் மிருகம்

நாய் எலும்புக்காக தோண்டி 
தானே புதைந்து போனால்
அப்படித்தான் இருக்கிறது
இப்போதைய பொருளாதாரமும்
மக்களின் வாழ்வும். ....

வரவேண்டியதும் வருவதில்லை, கேட்டாலும் கிடைப்பதில்லை. தவறிய வார்த்தைகள் கிடைப்பதுபோலவே நமது வார்த்தைகளும் தவறுகின்றன. ஒரு நியாயம் ஒரே நியாயமாக இருப்பதில்லை.

என்ன சிக்கல் என்றால், நாணயத்தோடு, நாணயமும் சேர்ந்து கொள்வதால் 'பேரு' தள்ளாட்டம் ஆடுகிறது. இக்கரைக்கு அக்கரை ப(ச்)சை போல, ஒவ்வொரு வாசலும் ப(ச்)சையாகவே தெரிகிறது.

தகவல் தொடர்பியலில் ஒரு வார்த்தை உண்டு, மனிதன் என்பவன் வாழும் மிருகம், (உபயம் சாக்ரெடீஸ்)

வேட்டை அறிந்த, தன் இனத்திற்குள்ளேயே வேட்டையாடும் குணமறிந்தவன். அடேங்கப்பா! எத்தனையாயிரம் வேட்டைகள், இன்னமும் முடிந்தபாடில்லை. இப்போதைய மனிதன் தானே காணச் சகியாத முகமூடி அணிந்திருக்கிறான், வெளியே அல்ல, தனக்குள்ளே.

அது ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்கதையாகிப்போவதுதான் வேதனை.

வேட்டை பைரவர்களுக்கு மத்தியில் வெள்ளாடுக்கு மதிப்பேது? அப்படி இருந்தால்தான் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்கிற நிலைதான் எல்லோரிடமும்.

இது எந்த வயதில் ஆரம்பிக்கிறது?

அது ஒரு பேருந்து நிறுத்தம். நான் கல்லூரி செல்லும் பேருந்துக்காக நிற்கிறேன். என் அருகில் இரு சிறார்கள்.(ஆ இல்லையா என்பதை பிறகு முடிவு செய்தால் சிறப்பு). ஒருவனை விட ஒருவனுக்கு இரண்டு, மூன்று வருட வயது வித்தியாசம், வயது பத்தும், ஏழும் இருக்கலாம். பத்து வயதுடையவனுடைய(!) முகம் சிறுத்(தை)து, அதீத கண்காணிப்பு கொண்ட கண்களோடு கல்லெறிந்த குளத்துநீர் கலக்கத்தோடும் அதிர்வுளோடும் முகத்தில் தகப்பனை(?) உருவகித்திருந்தான். இன்னொருவனுக்கோ கல்லெறியாத குளத்துநீர் போல அமைதியான முகம் (அம்மாவோட முகமோ?.) இவன் எது சொன்னாலும் அவன்...

'அப்படி இல்லடா, ஃபூல்', 'இப்படித்தான்டா ஃபூல்' என்று மறுதலளித்தவாறே வந்தான்.

நான் இருபது நிமிடம் முன்னதாகவே பேருந்து நிறுத்தம் வந்து விடுவதால் இது போல சில நிகழ்வுகள் காணக்கிடைக்கும். (நான் ஏறிச் செல்லுகிற பேருந்துக்கு சரியான நேரமே கிடையாது. முன்னதாகவும், சரியாகவும், தாமதமாகவும் வரலாம், வராமலுமிருக்கலாம்.)

'டேய், தள்ளி நில்லுங்கடா' குரல் கவனம் கலைத்தது.

பேருந்து நிறுத்தம் அருகிலிருந்த பெட்டிகடைக்காரர், நான் நடைபாதையின் மேலே நின்றிருந்தபடியால் அது என்னை குறித்ததல்ல. தினமும் என்னை பார்ப்பதனாலும் இப்படிச் சொல்ல வாய்ப்பில்லை. திறந்த கடையின் வாசல்(?) குப்பையை விலக்கியபடி (ஆமா, விளக்குமாறா, விலக்குமாறா? விளக்கம் வேண்டுமே) சொன்னார்.

அந்த பெரிய சிறுவன்(ர்) முறைத்த பார்வையை பெட்டிகடைக்காரர் கவனித்து விட்டார்.

'டேய், என்னடா பார்க்கிற' பெட்டிகடைக்காரர் கொஞ்சம் இறங்கிவிட்டார் போல.

'வாசல் கூட்றேன்ல, மேல நின்னா என்னடா?'

'ஏன், இது உங்க ரோடா? இது கார்பரேசன் ரோடு'

'டேய், ரொம்ப பேசாத'

'பப்லு, வேணான்டா'

'நீ சும்மாயிருடா, ஃபூல்'

பெட்டிகடைக்காரர் வியந்த முகத்தோடு என்னை பார்த்தார், நான் மெலிதாக புன்னகைத்தேன்.

'பாருங்க சார், எப்படி பேசுறான் பாருங்க'

அந்த பெரிய சிறுவன்(ர்) இப்போது என்னை பார்த்தான்(ர்).

நான் மீண்டும் மெலிதாக புன்னகைத்தேன்.

'ம், ஊரு ரொம்ப கெட்டு போச்சு சார்' வாசலில் நீர் தெளித்தபடி பெட்டிகடைக்காரர்.
அந்த பெரிய சிறுவன்(ர்) உர்ர் என்றிருந்தான்.

தெளிக்கும் நீர் அவன் மேல் பட்டுவிட கூடாது அவரிருக்க, பட்டா தெரியும் சேதி என்று அவனிருந்தான். நல்ல வேளையாக பேருந்து வர, ஏறிக்கொண்டோம். மூன்று நிறுத்தங்கள் வரை 'ஃபூல்' ஒலித்துக்கொண்டிருந்தது ...

Sunday, October 24, 2010

பாராட்டு மழையில் நனைய

வணக்கம் தலைவா!
சுஜாதா கிட்டே எனக்கு பிடிச்சதே தன் எழுத்துக்களில் போகிற போக்கில் அவர் புதுமுகங்களை அறிமுகம் செய்ததே. நம்ம பிராபல்யத்தை மறுபடி மறுபடி சொல்ல சலிப்பா இருக்கு.. இருந்தாலும் இன்னொரு தாட்டி சொல்லி உடறேன். 2009 மே முதல் நாளிதுவரை உள்ள 17 மாதங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஹிட்ஸ் பெற்றிருக்கிறேன்.

என்னதான் வர்ர சனத்தை விரட்டற மாதிரியே எழுதினாலும் தமிழ் 10 ரேங்கில் ஐம்பதுக்குள், உலவு ரேங்கில் பத்துக்குள் நிற்கிறேன்.

இதை தெரி/புரிஞ்சிக்கிட்டவுக தங்களோட பதிவுகளை எனக்கு மெயில் மூலம் அனுப்பறாய்ங்க. நமக்கு வயசு 43. மானிட்டரை ஒரு மணி நேரத்துக்கு மேல பார்க்க முடியறதில்லை. அதுலயும் பிரவுசிங்னா நம்ம கப்பாசிட்டி 45 நிமிஷம் தான்.

அதனால என் பாராட்டை பெற விரும்பறவங்களுக்கு என் ப்ரியாரிட்டி என்னனு சொல்ட்டா அவிகளோட வியய,பிரயாசைகள் வீண் போகாதுன்னு சின்னதா ஒரு அபிப்ராயம்.

என் ப்ரியாரிட்டிஸ்:

1.மனித உயிர்களுக்கு ஆபத்தை சுட்டிக்காட்டும் பதிவுகள், தீர்வுகளை முன் வைக்கும் எழுத்துக்கள்

2.உணவுப்பாதுகாப்புக்கு எழுந்துள்ள சவால்கள் - சத்துக்குறைபாடு, அதனால் எழும் பிரச்சினைகள்  - உணவுப்பொருட்களில் கலப்படம் -பதுக்கல் - ஆன் லைன் ட்ரேடிங்- ரேஷன் கடைகளின் கோல்மால்கள் முதல் அரசின் கொள்கை முடிவுகள் வரை

3. நிற்க நிழலில்லாத ஜீவன்கள், பிளாட்பார வாசிகள்,குடிசை வாசிகள்,ஒண்டு குடித்தன வாசிகள், வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகள்

4.கல்வி துறையின் மாயாஜாலங்கள் தனியாரின் கொள்ளை - அரசியல் சக்திகளின் தனி/கூட்டு கொள்ளைகள் - கல்வித்தரம்

5.வேலையின்மை,  சுய வேலை வாய்ப்பு, சுய தொழில் , குடிசைத்தொழில், சிறு தொழில் அதிபர்களின் பிரச்சினைகள்.

6. காதல் -காமம் -குழந்தை பிறப்பு இத்யாதி தொடர்பான பிரச்சினைகள் -தீர்வுகள்

7.சுற்றுச்சூழல் - பொல்யூஷன் -காரணங்கள் - விளைவுகள்- தீர்வுகள். தனி மனித அக்கறையின்மையிலிருந்து உலகவங்கி வரை எல்லாருக்கும் இதுல பங்கு இருக்கு. இந்த உண்மைய புரிந்த அ புரிய வைக்கிற பதிவுகள்.

8.மக்கள் பிரச்சினைகளை பேசி - தீர்வுகளை முன் வைக்கும் கலை -இலக்கியம்- பண்பாடு - ஹ்யூமன் வேல்யூஸ்

9. மிஸ்டிக் சைன்ஸஸ் - ஜோதிடம் -வாஸ்து -கைரேகை  முதல் டெலிபதி வரை

10. ஆன்மீகம் - தியானம் -யோகா

இதையெல்லாம் ஒர்க் அவுட் பண்ணனும்னா மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் மாற்றம் வரணும். முதல்ல மக்களை சிந்திக்க வைக்கக்கூடிய நம்ம மாதிரி பார்ட்டிகள்ள மாற்றம் வரனும். இந்த மாற்றம் தான் ஒரு மவுன புரட்சிக்கு அடிகோலும்.

இந்த கன காரியங்களை நான் ஒருத்தனே செஞ்சு கிழிச்சுர முடியும்னு நான் நினைக்கலை. அதனால இந்த காரியங்களை யார் செய்தாலும் பாராட்ட, ஊக்கப்படுத்த ப்ரமோட் பண்ண காத்திருக்கிறேன்.

நிபந்தனை:

1.உங்க பதிவு படிக்க வைக்கிறதா இருக்கனும் அதாவது ஜோவியலா , எளிய  நடையில் , நச்சுனு இருக்கனும். (விரட்டறதா இருக்ககூடாது)
2.இந்த பதிவின் கீழே கமெண்ட் ஃபார்மில் சின்ன முன்னோட்டத்தோட உங்க பதிவின் லிங்கை கொடுத்தா போதும்

பாராட்டு மழையில் நனையலாம். ( நாம பாராட்டறதுல பெரிய கஞ்சனுங்கோ.ஏறக்குறைய பெரியார் மாதிரி - நம்ம பாராட்டை பெறுவது வசிஷ்டர் கையால பிரம்ம ரிஷி பட்டம் வாங்கற அளவுக்கு கஷ்டமுங்கோ.

பலன்:
எனது வலைப்பூவின் சைட் பாரில்  தங்கள் வலைப்பூவின் பேனர் வைக்கப்பட்டு உங்க ப்ளாகுக்கு லிங்க் தரப்படும்.  பேனர்களின் எண்ணிக்கை 10 ஐ தாண்டும்போது முதலில் வைக்க ப்பட்ட பேனர் நீக்கப்படும்


ஓகேவா உடு ஜூட்

"சிங்கம்ல " - மீதான எதிர் வினைகள்

நைனா முரசு!
கற்பூர வாசனை தெரியாத ..ன்னு ஆரம்பிச்சிருக்கனும். என்ன பண்ண நாகரீகம் தடுக்குது.

நேத்து சுகுமார்ஜி போட்ட சிங்கம்ல்ல பதிவை படிச்சுட்டு 108 டிகிரி ஜூரம். நான் 1,500 க்கும் மேலான பதிவுகள்ள முயன்றும் பட்டவர்த்தனமா சொல்லமுடியாத மேட்டரை ஒரேபதிவுல போட்டு தொலைச்சுட்டதை நினைச்சு டர்ராயிருச்சு. ஆனால் பாருங்க முரசுன்னு ஒரு பார்ட்டி  மரு மொழி போட்டிருக்கு ( எ.பிழை இல்லிங்கண்ணா மருதான்)

//சார்...எப்படி சார் ....எப்படி!!!!!!!

நீங்களே ஒரு வசூல் ராஜா...ஜோதிடம்...வாஸ்து...பில்லி சூனியம்...ஊரை ஏமாத்தி வசூல் பண்ணறீங்க....//

த பார்ரா முரசு கண்ணா .. நீ கொடுத்த ஸ்டேட்மென்டை நூறே பேர் டிஃபெண்ட் பண்ணட்டும் தொழிலையே விட்டுர்ரன். கண்ணா.. பெரியார் ஜோசியம் சொன்னா எப்படி இருக்குமோ அந்த ரேஞ்சுல பகுத்தறிவோட இருக்கும். .. நைனா நம்ம ப்ரிடிக்சன். உங்க தொழிலை ஏன் எனக்கு லிங்க் பண்ணிவிடறிங்க (பில்லி சூனியம்). நமக்கு தொழில்  நாட்டுக்குழைத்தல். . அப்பாறம் தான் ஜோசியம். டுப்புக்கு !  நீ அடங்கு !!

//இப்போ உங்க நண்பரும் ஏதோ கிராபிக்ஸ்...பேனர்...லோகோ...அது இதுன்னு ஊரை ஏமாத்த கிளம்பிட்டார் ....//

பார்ட்டி! நீ யாருனு உடை. பங்காரு அடிகளார் க்ரூப்பா..இல்லை கலைஞர் தாத்தா ஆளா? இல்லே எந்திரன் இயக்கிற எந்திரமா? ங்கொய்யால நேரா வா பிரதர். உனக்கு எங்க வலிக்குதுன்னு சொன்னா மருந்து போடுவம்ல. அதை விட்டுட்டு பினாத்தறியே. ஜோசியமாச்சும் சந்தேகாஸ்பதமான சமாசாரம் - நான் வாங்கிற காசு அதுக்காக நான் செலவழிக்கிற நேரத்துக்குண்டான  காம்பன்சேஷன் தான்- கிராஃபிக்ஸ் பேனர் லோகோ எல்லாம் கண்ணு எரிய,முதுகு குறுக்கு வலிக்க பண்ற வேலை தம்பி..

//நல்ல சரியான ஜோடிதான் போங்க...//

உன் மருமொழிலயே இதுதான் பக்கா.

//ஏற்கனவே உங்க ப்ளாக் சீந்துவார் யாருமில்லை.//

நைனா உனக்காகவே தான்  ஹிட் கவுண்டர்,ஸ்பெஷல் விட்ஜெட் எல்லாம் வச்சிருக்கு. எந்தெந்த பதிவை எத்தீனி பேர் படிச்சாய்ங்கனு கூகுல் ஸ்டேடிஸ்டிக்ஸோட ஸ்க்ரீன் ஷாட்டை வச்சிருக்கேன் பாரு.

//இதுல இந்த மொக்கை பதிவெல்லாம் போட்டா வர்ற நாலு பேரும் வரமாட்டார்கள்...//

த பார்ரா .. நாலும் தெரிஞ்சவன்னா நாலு பிட்டில்லை வாத்யாரே ..எல்லாம் தெரிஞ்சவனு அர்த்தம். நாலு பேர் வராய்ங்கன்னா நிறைய பேர் வராய்ங்கனு அர்த்தம் - அப்படி அண்டர்ஸ்டாண்டிங் பண்ணிக்கிறேன்.

//சும்மா சொல்ல கூடாது...நீங்க 100 ரூபாய் கொடுத்து போட்ட ஒரு பேனருக்காக உங்க நண்பர் நல்லாவே கூவுறார்...//

அப்பாறம்... வாணாம் பதிவு எழுதறது வேற கை. இது நாற வாய். ஏன்யா ரஜினி எந்திரனுக்கு பைசா வாங்கலேன்னா நம்பற பார்ட்டிங்க.. பேனருக்கு சுகுமார்ஜி காசு வாங்கலைன்னா நம்பவா போறிங்க..தூத்தேரிக்க

//ஏற்கனவே ஒரு வெட்டி ஆபிசர் தொல்லை தாங்க முடியலை.//

வெட்டி ஆஃபீசர்தான் ஞான வெட்டியான் ங்கற பேரை கேள்விப்பட்டிருக்கியா நைனா .. அந்த ரேஞ்சு நம்முது

//அதுல ரெண்டாவது அரை கிறுக்கு வேறையா...........//

உன்னை மாதிரி ஆரோக்கியமான மன்சங்க வாழறதால தானே நாட்ல காவால பாலும் தேனும் ஓடுது .. உங்க ஆரோக்கியம் எங்களுக்கு வேணா சாமி..கிறுக்காவே இருந்துட்டு போறம்.. ஞான கிறுக்கு.

//போங்கசார் போய் எதாவது வேலை வெட்டி இருந்தா பாருங்க//
 நம்ம வேலை நாட்டுக்குழைத்தல்னு சொல்லியாச்சுல்ல. வெட்டின்னா ஆமாம் வெட்டித்தான் ஆகனும் உன்னை மாதிரி பார்ட்டிங்க மைண்டல் செழிச்சு வளர்ந்திருக்கிற மடமைங்கற பார்த்தினீயத்தை. வெட்டினா போறாதுங்கோ எரிக்கனும்..

//அப்படி எந்த வேலையுமே இல்லாட்டி 4-5 மரமாவது வைத்து பராமரியுங்க //
ஏன் பாஸ் நீ தனி தானா? கூட நாலு பேரை சேர்த்துக்க பாஸ்.  நீங்க இருக்கிறச்ச மரம் வேற எதுக்கு தெண்டம்?

//நாடுக்காவது ஒரு பிரயோசம் இருக்கும்....//

ஓ சாலை விரிவாக்கத்தின் போது வெட்டித்தள்ளவா? அல்லது வெட்டி ஓட்டி கொட்டிக்கிட்டு திங்கவா..

மொதல்ல கொஞ்சமாவாச்சும் மாத்தி யோசிங்க. குறைஞ்ச பட்சம் அப்படி யோசிக்கிறவுகளையாச்சும் ஃபாலோ பண்ணுங்க. சுய புத்தியும் இல்லாம சொல்புத்தியுமில்லாம எதுக்குண்ணே லந்து பண்ணி வாங்கி கட்டிக்கிறிங்க.

//உங்க கவிதை 07 ப்ளாக் ஒன்னும் குட்டி சுவர் இல்லை ....கண்ட கண்ட ஜந்து எல்லாம் பதிவு என்ற பெயரில் வந்து சிறுநீர் கழித்து செல்ல...//

கரீட்டுதான் உன்னைதானே சொல்றே.. சின்ன திருத்தம் பதிவு இல்லை . கமெண்ட். அடப்போய்யா .. நீயும் உன் ரசனையும்..

Saturday, October 23, 2010

சிங்கம்ல்ல... On Survival of the fittest

 சுகுமார்ஜி பக்கங்கள் :)


 நம்மை  கூண்டில் இருத்தி நமக்கு நம்மை தெளிவு செய்யும் சுகுமார்ஜியின் அற்புத பதிவு .டோன்ட் மிஸ் இட். ப்ளீஸ் ஷேர் இட் டு யுவர் ஃப்ரெண்ட்ஸ் ‍ 

- சித்தூர் .எஸ்.முருகேசன்
கூண்டுக்குள் இருந்த சிங்கம் சொல்லிக்கொண்டது...

'காட்டுக்குள்ள வந்து கேட்டுப்பாருங்கடா! நான் தான்டா காட்டுல ராஜா...'

சிங்கம் கேனத்தனமாக சொல்லுவதாக இருந்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்களில் பலரும் 'அப்படியா?' என்றனர்

அந்த 'அப்படியா?' வில் இருந்த கிண்டல் அந்த அப்பாவி சிங்கத்திற்கு புரியவில்லை... ஒரு வேளை அதை புரிந்து கொள்ளக்கூடிய பக்குவம் வரவில்லை போலும்...

ஒருவேளை அது இன்னமும் மனிதனாக மாறாது, மிருகமாகவே இருப்பதுதான் காரணமோ!...

சிலர் நெருங்கி வந்து 'அப்போ ஏன் கூண்டுல இருக்க?' என்று கேட்டனர்.

'உண்மைதான் சர்வைவல் ஆஃப் த பிட்டஸ்ட் ல தான் இங்கே வந்து மாட்டிகிட்டேன்' சிங்கம் பதிலளித்தது.

பரிதாபத்துடன் ஒருவர் கேட்டார்

'உன்னை யாராவது கொடுமை படுத்துறாங்களா?'

சிங்கம் முகம் திருப்பிக்கொண்டது... "கொய்யால... கூண்டுக்குள்ள இருக்கேன்... அதே உனக்கு தெரியலையே... சொன்னா புரியுமா?" கொட்டாவி விட்டபடி சிங்கம் தன் நாவால் மூக்கை ஈரப்படுத்திக்கொண்டது.

கேள்வி கேட்ட நபர் ' இந்த சிங்கத்துக்கு கொழுப்பை பாரேன்...மெனக்கெட்டு கேட்டா மூஞ்ச திருப்பிகிச்சு' என்னவாறே கூண்டை கடந்து சென்றான்.

'ஹாய்!'

குதூகல குரல் கேட்டு சிங்கம் தலைதிருப்பியது.

ஒரு சிறுவன் ஓடிவந்து கைக்கெட்டா தூரத்தில் நின்றவாறு...

'ஹாய் சிங்கம், எப்படியிருக்க?' என்றான் சிநேகத்துடன்...

சிங்கம் சட்டென எழுந்து நின்று பதிலுரைக்க விழைந்தது...

சிறுவன் திடுக்கிட்டு பின் தள்ளி நின்றவாறு பின்னால் திரும்பி பார்த்தான். அவனை நோக்கி வந்த ஒருவர், அருகில் வந்த பிறகு...

'பயப்படாதே சன்... நானிருக்கேன்...'

'நோ டாட், இந்த சிங்கம் லெசன்ல இருக்கிற விடவும் பயங்கரமா இருக்கு... ஐ லவ் திஸ் லைன் டாட்'

'ஆமா, அதுனால தான் கூண்டுல இருக்கு'

சிங்கம் அந்த தகப்பனை கண்கள் சுருக்கிக்கொண்டு கவனிக்க ஆரம்பித்தது.

'டாட், அது ஏதோ உங்க கிட்ட பேசுற மாதிரி இருக்கு. அதோட லாங்வேஜ் உங்களுக்கு தெரியுமா?'

'எனக்குத்தெரியாமலிருக்குமா? நானும் இது போல சிங்கமா இருந்தவன் தானே!'

சிறுவன் வியப்போடு பார்த்ததை போலவே சிங்கமும் தன் புருவம் உயர்த்தி வியந்தது.

'சன், இந்த சிங்கத்தை பார்த்தால் உனக்கு என்ன தோன்றுது?'

'சிங்கத்தோட வலிமை, கர்ஜனை, வேகம், ஆளுமை, வேட்டைத்திறன், ஆக்ரோசம் இதெல்லாமே டாட்'

சிங்கம் கண்கள் சுருக்கி புன்னகைத்தது.

'யா சன்... ஆனா இது எதுவுமே சிங்கத்திற்கு உதவாது தெரியுமா?'

சிங்கம் அதிர்ச்சிக்குள்ளாகியது...

'ஆமா, சன்... சர்வைவல் ஆஃப் த பிட்டஸ்ட், சிங்கத்திற்கு தெரியல்ல...'

'எனக்கு புரியல டாட்...'

சிங்கமும் தலை தொடங்கி வால் வரை சிலுப்பிக்கொண்டது.

'நீ குட்டிடா, நீ சிங்கமாகும் பொழுது நான் புரிய வைக்கிறேன்...'

'ஒகே டாட்... ஒரு சந்தேகம்... நீங்க சிங்கமா இருந்ததா சொன்னீங்க... அப்ப நீங்களும் கூண்டுல இருந்தீங்களா?'

'ஆமா, கொஞ்ச நாள்... பிறகு வெளிய வந்துட்டேன்'


சிங்கம் ஒருகண் சுருக்கி எப்படி என்பதாக பார்த்தது.

'இப்போ என்னவா இருக்கீங்க டாட்?'

'நான் இப்போ பாஃக்ஸ்... குள்ளநரி மை சன்...'

சிங்கம் கர்ஜித்தது...

'அப்போ உங்களுக்கு கூண்டு இல்லையா டாட்?'

'குள்ளநரிகள் கூண்டில் இருக்கமுடியாது... அப்படியே கூண்டில் போட்டாலும் தந்திரத்தால் தப்பிவிடும்... பொதுவா குள்ளநரிகள் நாட்டில், சுதந்திரமாத்தான் இருக்கும்.'

சிங்கம் தன் காலை தேய்த்துக்கொண்டு ஆக்ரோசமானது...

'அப்போ இந்த சிங்கமும், குள்ளநரியா மாறிட்டா வெளிய வந்திடுமா டாட்'

'நல்லா புரிஞ்சுகிட்டயே... ஆமா, மை சன்... ஆனா இந்த சிங்கம் கொஞ்சம் அடங்க மறுக்கிற சிங்கமா இருக்கு... இது வாழ்நாளெல்லாம் கூண்டிலேயே கழிக்க வேண்டியதுதான்...'

சிங்கம் இப்பொழுது நிலை கொள்ளாமல் அலைந்தது...

சிறுவன் சொன்னான்...

'என்ன சிங்கம், இது கூட தெரியாதா உனக்கு? உன்னப்போய் காட்டுக்கு ராஜான்னு யாரு சொன்னாங்க?'...

சிங்கம் ஆவேசத்தோடு கூண்டு கம்பியில் அறைந்தது. கூண்டுக்குள்ளிருந்து தப்பும் வகையில் அலைக்கழித்தது...

'வா... சன்... அதுக்கு கோபம் வந்திடுச்சு... நாம் போய்டலாம்...'

சத்தம் கேட்டு மேனேஜிங் டைரக்டர் காரில் வந்து இறங்கியவாறே....

'எவ்வளோ சொன்னாலும் நீ திருந்த மாட்டியா?' சொல்லியபடி தன் கைகளில் வைத்திருந்த பைஃல்களால் சிங்கத்தை அடிக்க முனைந்தார்...

தந்தையோடு போய்க்கொண்டிருந்த சிறுவன் திரும்பி பார்த்தபடி கேட்டான்...

'யாருப்பா அவர்?'

'அவர்தான் டிரைனர்... குள்ளநரியா மாத்தறாரு...'

'நீயும் அடிவாங்கிருக்கியா டாட்'

'இல்லவே இல்லை' குள்ளநரி சொன்னது

'சிங்கம்... பாவம் டாட்... '


பின் குறிப்பு; சிங்கத்திற்கு பதிலாக அவ்விடத்தில் உங்களை பொருத்திக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல...

சேர்ந்து வாழ சுப்ரீம் கோர்ட் நிபந்தனை

கண்ணாலம் கட்டாமயே சேர்ந்து வாழனும்னா அதுக்கு நீங்க சுப்ரீம் கோர்ட் நிபந்தனைகளை பின்பற்றனும்

1.ரெண்டு பேருக்கும் திருமண வயது வந்திருக்கனும் ( மைனர் பெண்ணோட வாழ்ந்தா களிதான்)
2.ரெண்டு பேருக்கும் வேற பார்ட்டியோட கண்ணாலமாகியிருக்க கூடாது ( அப்போ அது அடல்ட்ரி)

3.ச்சொம்மா வீக் எண்ட்ல மட்டும் கட்டிக்கிட்டு படுத்தா போதாது குறிப்பிட்ட காலம் சேர்ந்து வாழ்ந்திருக்கனும்.

4.கணவன் ,மனைவிங்கற ஃபீலிங் வந்திருக்கனும்

5.ஊர் உலகமும் உங்களை கணவன் மனைவியா அங்கீகரிச்சிருக்கனும்

( என் பாலிசி என்னன்னா கண்ணாலமானவங்க எல்லாம் கண்ணாலமே நடக்கலைன்னு  நினைச்சு சேர்ந்து வாழறது பெட்டர். அதுலயும் இன்னொருத்தன் கிட்டே விவாகரத்து வாங்கிட்டு வந்த பார்ட்டினு நினைச்சா இன்னம் த்ரில்லா இருக்கும் )

பட்டா இல்லாத நிலத்துல எவ்ளதான் உழுதாலும் வெள்ளாமை வீட்டுக்கு வந்து சேருமா?

முக்கியமா நிலத்துக்கு சொந்தக்காரவுக ரோட்ல போறவனை எல்லாம் நிலத்துல இறக்கி விட்டுட்டா ..பஞ்சாயத்துக்காரன் தானே மண்டைய பிச்சிக்கனும் . ரோசிங்கப்பா..

விலங்கு வேணாம்னு தானே விலங்கா வாழறது. அப்பாறம் என்னத்தை ஜீவனாம்சம் கேட்டு கோர்ட்டுக்கு போறதும் - கேஸு நடத்தறதும் - ஜட்ஜுங்க பாவம் .. அயோத்தி பஞ்சாயத்து மாதிரி நடுவாந்தரமா தீர்ப்பு கொடுக்க எந்த அளவு மண்டைய உடைச்சிக்கிட்டாய்ங்களோ?

Friday, October 22, 2010

இது கொஞ்சம் மூளையை கசக்கிய விஷயம்...

 சுகுமார்ஜி பக்கங்கள் ( ரொம்ப முக்கியம்...!? )

இது கொஞ்சம் மூளையை கசக்கிய விஷயம்... இல்லாதவர்கள் தள்ளி போகலாம்... (சொந்த மூளையை உபயோகிச்சா உங்களுக்குத்தான் பிடிக்காதே)

ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி விடிவதில்லை, ஒரே ஆற்றில் இரண்டு முறை நீராட முடியாது (ஓஷோ ) ஆனால் மனிதன் படுத்தால் இப்படி, என்ன மனநிலையில் படுத்தானோ அதே நிலையிலேயே எழுகிறான்.

எனக்கொரு எண்ணம் முன்னாட்களில் எழும்...
மனிதன் எப்போது திருந்துவான்? கண்டிப்பாக இறக்கும் தருவாயில் அவன் தான் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து வருந்துவான். ஆனால் மறுநிமிடமோ, மறுநாளோ அவன் இறந்து விட யாருக்கு லாபம்? ஒரு தாத்தா செய்த அதே தவறுகளை மகன் செய்கிறான் (சிலர் விதி விலக்காக) அதே தவறுகளை பேரனும் செய்கிறான்.

ஆனால் மனிதர்கள், அவர்களின் மனநிலையும் வேடிக்கையானது...
தான் பெற்ற கஷ்டம் குழந்தை படக்கூடாது என்று எண்ணி வளர்த்தால் பிள்ளை வேறு மாதிரி வளர்கிறான் ...
கஷ்டங்களை பெற்றே வளரட்டும் என்று தந்தை நினைத்தால், அப்பனையே வெட்டி செய்கிறான் பிள்ளை...
அப்போ தவறு எங்கே?

நாமெல்லாம் வளர்ந்த கில்லாடிகள், குழந்தைகள் வளரும் கில்லாடிகள்! கில்லாடிக்கு  பிறந்தது   கில்லாடியகத்தானே இருக்கும்.

ஆனால் நான் இங்கே சொல்ல தயாரானது வேறு... மனிதன் 6to60 ன்னு   வச்சிக்கோங்க ... எல்லாம் ஸ்பார்க் மாதிரி இருக்காங்க... எதுல ஸ்பார்க்னு கேக்கலியே? அப்படி ஒரு கேள்வி கேக்கவே கூடாது... கொய்யால... எவன்கிட்ட போனாலும், மண்ணெண்ணையை வாயில ஊத்தி பக்னு நெருப்ப ஊதின மாதிரி நம்ம முஞ்சில ஊதுறன்கப்பா...

ஏன்டா இப்படி இருக்கிங்க?
நான் மட்டுமா? நக்கலா எதிர் கேள்வி கேக்குறாங்க...

அலுவலகத்தில் திட்டு வாங்கிட்டு, பொண்டாட்டியை புரட்டுன மாதிரி தொடர் கதையா போய்கிட்டே இருக்கு...

இருக்கிறதிலே எவன் நல்லவன் அப்படின்னு கேட்க  கூடாது? எவன் கொஞ்சமா தப்பு பன்றவன்னுதான் கேட்கணும். ஆனால் ஒருவர் கேட்டார் " என் பிள்ளையை நீ சொல்லுற மாதிரி வளர்த்தா, இந்த உலகத்தில  என் பிள்ளை இளிச்சவாயனா  போயிடுமே?"

கவனிங்க... ஒரு குழந்தைய நல்லவனா வளர்க்கிறது கெட்ட விஷயமா போய்டுச்சு...
துணிகளுக்கு ஒரு வாசிங் மிசின் இருக்கிறப்புல மனுஷன் மூளைக்கு யாராவது  ஒரு வாசிங் மிசின கண்டு பிடிங்களேப்பா...

இப்போதான் எல்லா வகையான தொழில்  நுட்ப வல்லுனர்கள், ஆசிரியர்கள், ஆட்சியாளர்கள், தலைவர்கள், தொண்டர்கள், மாணவர்கள்,  அதித மூளை குழந்தைகள் இருக்கிறார்களே... கொஞ்சம் மூளையை கசக்கினால் கண்டு பிடித்து விடலாம் ....

அட.... யாருப்பா அது " அப்ப மனுசங்களே இல்லையானு கேக்கிறது" கம்முனு கிடங்க ...

Thursday, October 21, 2010

ஓம்சக்தி அடிகளாரின்(?) மகன் புதுக்கட்சி

மேல் மருவத்தூர் ஓம் சக்தி  பங்காரு அடிகளாரின் மகன் அன்பழகன் தமது பிறந்த நாளன்று புதுக்கட்சி ஆரம்பிக்கப்போவதாக கல்கி செய்தி வெளியிட்டுள்ளது. அவிக காலேஜ்ல ரெய்டு நடந்த பிற்பாடு தங்களுக்கும் ஒரு அரசியல் பின்னணி இருக்கனும்னு நினைச்சு இந்த ஏற்பாட்டை செய்யறதா பக்தர்கள் சொல்றாய்ங்களாம்.

(கீழே  உள்ள அடிகளார் படத்தை பாருங்க தலைக்கு பின்னாடி ஆரா என்னா சூப்பரா இருக்கு - அடங்கொய்யால  ஆல் லைட்ஸ் ஆஃப்னுட்டு இன்ஃப்ரா ரெட் கேமரால  பெரியாரை படம் எடுத்திருந்தா ஒளி வெள்ளத்துக்கு நடுவுல தெரிஞ்சிருப்பாரு.  இதை நான் எப்படி கன்ஃபார்மா சொல்றேன்னா எண்ணம் செயலாகனும்னா அளவற்ற ஆத்ம சக்தி இருக்கனும். பெரியார் எண்ணங்கள் நூத்துக்கு நூறு சதவீதம் இல்லைனாலும் எந்த அளவுக்கு செயல் வடிவம் பெற்றிருக்குன்னு சரித்திரத்தை புரட்டிப்பாருங்க..

இந்த பங்காரு அடிகளாரோட  ஃபோட்டோ பின்னாடி இருக்கிற ஆரா ஜஸ்ட் டிஜிட்டல் டச்சுங்கண்ணா)

அரசியல் சாசனப்படி இந்திய குடிமகனா உள்ள , மேஜரான  எவன் வேணம்னா  கட்சி ஆரம்பிக்கலாம். ஆனா கன்ஷிராம் சொன்ன எம்3 ( மணி,மாஃபியா,மீடியா) இருக்கிற பிக்காலி எல்லாம் கட்சி ஆரம்பிச்சுட்டா நாடு தாங்காது பாஸ். 

மணி:(Money)

வெறும் மணி (தெரு நாய் பேரு கிடையாதுப்பா.. பணம்-பைசா-ருப்யா-மால்) பலத்தோட கட்சி ஆரம்பிச்ச பன்னாடையெல்லாம் தாராந்து பூட்டது இந்திய ஜன நாயகத்தோட வலிமைய காட்டுது.

என்னதான் ஜன நாயகம் கெட்டு கீரை வழியாகியிருந்தாலும் வெறும் மணி பலத்தை வச்சிக்கிட்டு கட்சி ஆரம்பிச்சா நாக்கைத்தான்  வழிக்கனும் . இந்த ஃபார்முலா சக்ஸஸ் ஆகியிருந்தா டாட்டா,பிர்லா,அம்பானி,வாடியா எல்லாம் ஆளுக்கு அரை டஜன் கட்சி ஆரம்பிச்சுருப்பாய்ங்க.

மாஃபியா :

இதுவும் மணி மாதிரி தான் வெறுமனே மாஃபியாவை வச்சு எவனும் சக்ஸஸ் ஆக முடியாது. கூடவே மாமா,மச்சான், அக்காவை வச்சிருக்கிறவன் எவனாச்சும் ஏற்கெனவே லாஞ்ச் ஆகியிருந்தா அவன் குண்டி பின்னாடி நின்னு ஒர்க் அவுட் பண்ணி அப்பாறம் தனியா வந்து பேர் சொல்லலாம்.

மீடியா:

சக்ஸஸ் ஆக 00.01% வாய்ப்பிருந்தா கூட விகடன் க்ரூப்ஸ் எம்.டி.விட்டிருப்பாரா? இல்லே  நைனா அதனாலதான் விட்டு வச்சிருக்காய்ங்க. தேவி மாதிரி ஒரு பத்திரிக்கைய வச்சுக்கிட்டு ஒரு மெர்க்கன்டைல் வங்கி விவகாரத்துலயே  ஜெயிச்சு வர முடியலை. கட்சி ஆரம்பிச்சு சக்ஸஸ் ஆறதெல்லாம்  ச்சொம்மா புஸ்ஸு தான்

கன்ஷிராம் போய் சேர்ந்துட்டாரு. அவரு உசுரோட இருந்திருந்தா எம்3 யோட இன்னொன்னை சேர்த்திருப்பாரு. அதென்னாடான்னா மிஸ்டிசம் அதாவது சாமியாருங்க. ராம் தேவ் பாபா கட்சி ஆரம்பிக்கிறேன்னாரு ( ஆரம்பிச்சுட்டாரா தெரியாது.. இப்போ பங்காரு


நான் இன்னா பண்ணட்டும் பாஸ் . சப்ஜெக்ட் தானா வந்து மாட்டுது. ஜோதிஷம்னு குறிப்பிட்டா அதை ஜோதிஷமா ஜோதிடமானு திருத்த சனம் இருக்கு. "சாமி"ன்னா அது வெள்ளை சாம்பார் மாதிரி இருக்கு.ஸ்மாமின்னா ஓனர்னு அர்த்தம். எவனொருத்தன் தனக்கு தானே ஓனரா கீறானோ அவன் தான் உண்மையான ஸ்வாமி/சன்யாசி/காட் மேன் .(God Man ங்கற வார்த்தைய தமிழ்ல படிக்கிறச்ச Cot Manன்னு கூட படிக்கலாம். அதனாலதான் நிறைய God Man Cot Man ஆயிட்டானுவ. Cotன்னா  கட்டில் ( ஞா வருதே ஞா வருதே - நித்யானந்தா..)


சன்னியாசி பூனை வளர்த்த கதை தெரியுமா? தெரியாதவுகளுக்கு சொல்றேன். ஒரு சன்யாசி தன்னோட கோவணத்தை எலி கடிச்சுருச்சுன்னு பூனை வளர்க்க முடிவு செய்தாராம். அதுக்கு பால் வேணுமேன்னு பசு வளர்த்தாராம். அதைபார்த்துக்க ஆள் வேணமேனு ஒரு பொம்பளை ஆளை போட்டாராம்.  கடேசில பார்த்தா ஏதோ கசமுசா நடந்து  சம்சாரியாவா ஆயிட்டாராம். அந்த கதையாத்தான் இருக்கு அடிகளார் கதை.

பொஞ்சாதிக்கு நகராட்சி சேர்மன் பதவி (தேவையா?) காலேஜு தேவையா? இன்னைக்கு அது புதுக்கட்சில கொண்டு வந்து விட்டிருக்கு. பூனை வளர்க்க போயி சம்சாரியான கதைதான்.

எனக்கு ஒரே ஒரு சின்ன மேட்டர் புரியமாட்டேங்குது பாஸ். இந்த மாதிரி காட் மேன் எல்லாம் நம்ம பத்தி என்னதான் நினைச்சிக் கிட்டிருப்பாய்ங்க. கேணைங்கன்னா?  அது நெஜமோ என்னமோ தெரியலை. நான் தான் ஆதிபராசக்திங்கற பார்ட்டி பொஞ்சாதிய நகராட்சி சேர்மனாக்கித்தான் நல்லது பண்ணனுமா என்ன?

சரி ஓஞ்சு போவட்டும் காலேஜ் ஏன் நடத்தனும். நடத்தினா போகுது .கணக்கு வழக்கெலாம் கரீட்டா வச்சுக்க வேண்டியதுதானே. ரெய்ட்ல மாட்டற மாதிரி ஏன் திருட்டு கணக்கு எழுதனும்?

நீ தி.க எழுதினே ரெய்டு உட்டாய்ங்க. நீ காட் மேனோ இல்லையோ அட்லீஸ்ட் மென்டல் மெச்சூரிட்டி இருக்கிற பார்ட்டியா இருந்தா என்ன பண்ணனும் கணக்கு வழக்கையெல்லாம் ஒழுங்கா வச்சிக்கிற வழிய  பார்க்கனும். அதை விட்டுட்டு மகனை விட்டு கட்சி ஆரம்பிக்கசொல்றேன்னா என்ன அர்த்தம்?

உனக்கு ஃப்யூச்சர்ல கூட ஒழுங்கா கணக்கு வச்சுக்கிற ஐடியாவே இல்லை. திருட்டு கணக்கு எழுதற நீ சக்தி அவதாரமா?   நாம ஹார்ட்வேர் வச்சிருக்கலைன்னாலும் எதை எழுதினாலும் "ஆணி"த்தரமா எழுதித்தான் வழக்கம்.

அடிகளாரை பத்தி மேலதிக தகவல் எதாச்சும் பெயருதா பார்ப்போம்னு கூகுல்ல தமிழ்ல அடிச்சு  தேடினா 2 விஷயம் ரிப்பீட்டு. ஒன்னு ரெய்டு,இன்னொன்னு ஒரு கோடி ரூ  நலதிட்ட உதவி. ரெண்டுமே அடிகளாரோட பண வசதியைத்தான் காட்டுது.

மேலும் முக்கி முக்கி தேடினதுல பூகம்பத்துக்கு 25 லட்ச ரூ கொடுத்த மேட்டர் சிக்கி மேற்சொன்ன வசதி பாயிண்டைத்தான் உறுதி படுத்துது.

மேலும் தேடினதுல மங்கையர் உலகம் "அம்மாவின்" புகழ் பாடுது. அப்பாறம் ஒரு விண்டோ சைஸுக்கு "அம்மா" படத்தோட ஒரு ப்ளாக் மாட்டுச்சு. தாளி வரலாறுன்னு அடிச்சி தேடினா ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

சுகுமார்ஜி கரீட்டா சொன்னாரு. இணையமே ஒரு குப்பை. அதுல நாம தேடறது மட்டும் கிடைக்காது.. இப்போ தினமணி சைட்ல  வசம்மா  மாட்டிக்கிச்சு .

அதை ஒரு ஓட்டு ஓட்டுவம்.


//தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், மேல்மருவத்தூர் என்ற சிறிய கிராமத்தில், 3.3.1941}ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தையார் பெயர் கோபால நாயகர், தாயார் பெயர் மீனாம்பிகை அம்மாள். அவருடைய குடும்பம் விவசாயக் குடும்பம். அடிகளார் குடும்பத்தில் இரண்டாவது மகன்.//

நானே கடவுள்ங்கறது ஒரு மனவியாதி. கமல் ஒரு படத்துல சொல்வாரு. கடவுள் இருக்கிறாருங்கறவனை கூட நம்பிரலாம். நான் தான் கடவுள்ங்கறவன் ரெம்ப டேஞ்சர். அவன் மட்டும் நம்பினா அவனுக்கு மட்டும் டேஞ்சர் . ஊரே நம்ப ஆரம்பிச்சுட்டா நாட்டுக்கே டேஞ்சர். இந்த மனவியாதி அடிகளாருக்கு வர மொத காரணம் : அவர் பிறந்தது சின்ன  கிராமத்துல அதுவும் பி.ப குடும்பத்துல அதுலயும் விவசாய குடும்பத்துல.

ஏழ்மை கியாரண்டி. அவமானங்கள்  நிச்சயம், ஃப்ரீ ஹவர்ஸ் அதிகம்.இத்தனை பாயிண்ட் ஒன்னு சேர்ந்தா என்னாகும்? இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் அதுலருந்து வில் டு பவர். அதுலருந்து கலாம் சொன்ன கனவு காணுதல். எல்லாமா சேர்ந்து ஒரு வழியாக்கிருச்சு.

//அருள்திரு அடிகளாரிடம் இளமையிலிருந்தே கல்வியில் அதிக ஆர்வம் இல்லை//

இருந்திருந்தா பாவம் கலெக்டராகி  யாராச்சும் மந்திரி ஆசிரமத்துக்கு போக அவர் செருப்புக்கு காவலா இருந்திருப்பாரு. கல்வியில ஏன் ஆர்வமில்லைன்னா கனவு,கற்பனை.

//உலக வாழ்க்கைக்காக இளநிலை ஆசிரியர் தகுதி பெற்று ஆசிரியராகப் பணியாற்றினார்.//

ஸ்கூல் வாத்தியாருங்களுக்குன்னே ஒரு செனேரியோ இருக்கு தெரியுமா? அதுலயும் இவிக ரிட்டையர் ஆயிட்டாய்ங்கனு வைங்க கொலை பண்ணிருவாய்ங்க. அடிகளார் மூலமா ஆத்தா பேசலை நைனா .அந்த கால ஆசிரியர் தான் பேசறாரு..

//1983-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆசிரியர் பணியைத் துறந்து முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபட்டார். //

வில் டு பவர், ஈகர் டு பவர் ,கனவு கற்பனை உள்ளவன் ப்ராக்டிக்கல் லைஃப்ல சூட் ஆக முடியாது.

//தான் பட்டம் பெறாவிட்டாலும் சமுதாயம் கல்வியில் சிறந்து விளங்க, பிற்காலத்தில் ஆன்மிகத்தோடு கல்விப் பணியை மேம்படச் செய்து மேல்நிலைப் பள்ளி முதல் மருத்துவக் கல்லூரி வரை பன்னிரெண்டு கல்வி நிறுவனங்களை நிறுவினார். ஆன்மிகத்தில் இருந்து கொண்டு கல்விக்கு அடிகளார் ஆற்றும் தொண்டு மிகவும் போற்றுதலுக்குரியது.//

பாவம் தொண்டு ரெம்ப ஓவரா போயிட்டதாலத்தான் ரெய்டு. அடங்கோத்தா கல்விங்கறது லைசென்ஸ்ட் க்ளப், பார் அண்ட் ரெஸ்டாரண்ட் மாதிரி ஒரு வியாபாரமாகி பல யுகமாகிப்போச்சு. இதுல சேவை, கார சேவைல்லாம் எங்க வருது.

அடிகளாருக்கு படிப்பு ஏறலை, வாத்தியார் வேலைல தொடர முடியல. நார்மல் பீயிங்ஸ் எல்லாம் வேற வேலை பார்க்க போயிருக்கும்.ஆனால் அடிகளார் மாதிரி கேரக்டர் எல்லாம் எசன் ட் ரிக்.. தாளி எனக்கா படிப்பு வராது வாத்தியாராகி காட்டறேன். தாளி என்னையா வாத்தியார்  வேலைலருந்து தூக்கறிங்க ( ஓடிப்போக வைக்கிறிங்க) - நானே ஸ்கூல்,காலேஜ் நடத்தறேம்பாருங்கற கேரக்டர் இதெல்லாம்.

இத்தீனி வருஷம் அருள்வாக்கு சொல்லியும் இந்த கேரக்டர் மாறலை பாருங்க. தாளி எனக்கா ரெய்டு விடறிங்க. நான் விடறேன் ரெய்டுங்கற சைக்காலஜி இது. ( ஆமாங்கண்ணா ஜா -ஜெ பீரியட்ல ஜானகி அம்மாவுக்கு ஆசியெல்லாம் வழங்கினாரே அப்பாறம் ஏன் ஜா பாவம் போணியாகாம போயிட்டாய்ங்க.

// அருள்மிகு அடிகளாரின் பேச்சு சாதாரண நடையில்தான் இருக்கும். ஆனால் அவர் அருள்வாக்குக் கூறுமிடத்து நடை மாறிவிடும். //

இதெல்லாம் மனவியாதில, சைக்காலஜில சகஜமப்பா..


//தத்துவங்கள் சரளமாகவும், வேகமாகவும் இருக்கும்//

ஒன்னு ரெண்டையாச்சும் எடுத்துக்கிட்டு கிழிக்காம விடுவமா என்ன? வெய்ட் ப்ளீஸ்

//அருள்வாக்கைப் புரிந்துகொள்வது சற்றுக் கடினம்தான். எல்லோருக்கும் ஓரளவுக்குத்தான் புரியும். மகளிர் அறநிலைக்கு அருள்வாக்கு கூறும்போது மெதுவாகவும், வேகமாகவும் கூறும்போது புரிந்துகொண்டு எழுதுவது சற்றுக் கடினமாக இருக்கும்.//

த பார்ரா இதான் சக்ஸஸ் ஃபார்முலாவா.. இனிமே ஜாதக பலன் எழுதறப்ப இதையே ஃபாலோ பண்ணீர வேண்டியதுதான். மன நிலை பாதிக்கப்பட்டவனோட பேச்சு புரிஞ்சிக்கிற மாதிரியா இருக்கும்

//அருள்மிகு அடிகளார் கடுமையான விரதங்கள் இருப்பதில்லை.//

விரதம்னு போயிட்டா சொந்த ஊர்ல பத்துவட்டிக்கு கடன் வாங்கி, வளையல் மூக்குத்தி அடகு வச்சி மருவத்தூர் வந்து சனங்க  கொட்டிட்டு போறதை எல்லாம் அனுபவிக்கிறது எப்படியாம்?

//விழா நாட்கள், விசேட நாட்கள், அமாவாசை, பெüர்ணமி ஆகிய நாட்களில் மெüன விரதம் இருப்பார். மெüன நாட்களில் அவசியம் ஏற்பட்டால் சுவற்றிலும், கையிலும் வலதுகை ஆட்காட்டி விரலால் எழுதிக் காட்டுவார்.//

த பார்ரா.. உண்மையான மவுன விரதம்னா என்ன?  மைண்ட்ல எண்ணங்களே நின்னு போயி அதனால பேச வேண்டிய அவசியமே இல்லாம போயிர்ரதுதான். இவரு விரல்ல எழுதிக்காட்டுவாராம். இந்த மயித்துக்கு டிவி கேம்பியர்ங்க மாதிரி பேசித்தள்ளவேண்டியதுதானே .என்ன  மயித்துக்கு மவுன விரதம்?

அடிகளார் படம் தனியா கிடைக்கும். ஆனா ஆதிபராசக்தி படம் தனியா கிடைக்காது. ஜூவியும் அடிகளாரும் ஒரு தாட்டி காட்டா குஸ்தில இறங்கின மேட்டர் ஞா வருதா?

சிகப்பாடையோட எஃபெக்ட் என்ன? இவர் ப்ரிஸ்க்ரைப் பண்ற திஷ்டி முதல் தியானம் வரை மக்களுக்கு எந்தளவுக்கு உதவுது  . இந்த க்ரூப்ல சேர்ரவுக நோக்கம் என்ன? அவிக சைக்காலஜி என்ன? ஓம் சக்தி க்ரூப்ல மட்டும் அடல்ட் ரி ஏன் அதிகமா நடக்குது .இது மாதிரி   நிறைய வில்லங்கமான கேள்விகளுக்கெல்லாம் பதில் .....
( அடுத்த பதிவில்

ரஜினியும் (அய்யரும்) ஃபில்ட்டர் காஃபியும்

ரஜினி மேட்டர்ல என்னதான் அடக்கிவாசிக்கனும்னு நினைச்சாலும் ரஜினி பக்தர்கள் விடமாட்டாய்ங்கபோல. இன்னைக்கு "ரஜினி  எனும் அதிசயம்!- விவாதமும் விதண்டாவாதமும்!"  ங்கற பதிவு நம்ம கண்ணுல பட்டுது. ரெம்ப டீப்பா போகாம ஒரு வரி ரெண்டு வரி கமெண்டுல கதைய முடிச்சுர்ரண்ணே.

//என்டிடிவி – இந்துவில் ரஜினி எனும் அதிசயம்: சூப்பர் ஸ்டார் பவரா அல்லது அசுரத்தனமான மார்க்கெட்டிங்கா? //ங்கற தலைப்புல ஒரு டிஸ்கஷன் நடந்திருக்கு. அதை பார்ட்டி கிழிச்சிருக்காரு. இந்த வில்லங்கத்தனமான  டிஸ்கஷனே ஒரு அசுரத்தனமான மார்க்கெட்டிங்க் தான். எத்தனையோ நல்ல படம்லாம் வந்திருக்கு. அதுக்கெல்லாம் இப்படி ஒரு டிஸ்கஷ்ன் நடக்குமா? காது.

//இருக்கும்போது ஒரு விஷயத்தின் அருமை விளங்குவதே இல்லை// இந்த பாய்ண்டை நானே பல தடவை சொல்லியிருக்கேன். இந்த தாட்டி  ஒரே ஒரு வரியை  சேர்த்து சொல்றேன். ஏகத்துக்கு சிலும்பி அலம்பல் பண்ணும் சில தக்கை மேட்டருங்களால தான் //இருக்கும்போது ஒரு விஷயத்தின் அருமை விளங்குவதே இல்லை//. யந்திரனோட இரைச்சலால எத்தனையோ காற்றினிலே வரும் கீதங்கள் ரசிகர்கள் செவிகளை அடைய முடியாதே போயிருச்சுங்கண்ணா.

//எம்ஜிஆர் என்ற மனிதர் பிறப்பால் மலையாளத்தவராக இருந்தாலும், வளர்ப்பால், உணர்வால் ஒரு தமிழராகவே வாழ்ந்தார். தமிழர் திருநாளை மட்டுமே கொண்டாடினார், தமிழிலேயே எம்ஜி ராமச்சந்திரன் என்று கையெழுத்துப் போட்டார். அவரை மக்கள் இதய சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர வைத்துவிட்டனர்.//

எம்.ஜி.ஆர் புலி. அந்த புலியை பார்த்து எத்தினியோ நரிங்க சூடு போட்டுக்குச்சு. ஒரு ம....ரும் பேரலை.ஏண்டான்னா எம்சியாரு ஒன்னு அட்வான்ஸா ப்ளான் பண்ணி செய்துருக்கனும் அ அவருக்குள்ள ஒரு சின்சியாரிட்டி நெஜமாலுமே இருந்திருக்கனும்.

ரஜினி ஆந்திரா போனா என்.டி.ஆர், ஏ.என்.ஆர், கர்னாடகா போனா ராஜ்குமார், இங்கன வந்தா எம்சியார் சிவாஜி, மஹாராஷ்டிரா போனா பால் (பல் போன) தாக்கரேனு  அந்தர் பல்ட்டி அடிக்கிறாருங்களே அதையும் சொல்ல வேண்டியதுதானே..

//ஆனால் அறிவு ஜீவிகள் என்ற மக்கள் விரோத கூட்டமிருக்கிறதே… அது அவரை விமர்சனம் என்ற பெயரில் அவமானப்படுத்தியது கொஞ்சமல்ல. //

விமர்சனங்கற வார்த்தையையும் உபயோகிச்சுட்டு அப்பாறம்  அவமானப்
படுத்தியதுங்கற வார்த்தை எதுக்கு?

நாலு பேர் தூக்கிப்பிடிக்கறதாலயே அவிக விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவுக ஆயிருவாய்ங்களா என்ன?

//ரஜினி படங்களை ரஜினிக்காக மட்டுமே பார்க்கிறார்கள் ரசிகர்கள்//
அப்ப என்ன மயித்துக்கு ஐஸ்வர்யா ராயி, ஏ.ஆர் ரகுமானு ,ஷங்கருனு கூட்டு சேர்ரது, என்ன மயித்துக்கு சன் பிக்சர்ஸ் ஷூவை நக்கறது?

பேசாம ஸ்ரீராகவேந்திரர்,வள்ளினு எடுத்துக்கிட்டே இருக்க வேண்டியதுதானே. சினிமாங்கறதே டீம் ஒர்க் பாஸ்.

ஆனந்த விகடன்ல  நம்ம கண்களை ஐஸ்வர்யாவை விட்டு ரஜினி பக்கம் திருப்பவே முடியலைனு விமர்சனம் எழுதியிருக்காய்ங்களே.. அதுக்கும் ஒரு பதிவு போடுவிங்களாண்ணா

//ஆனால் சாமியே இல்லாமல் வெற்றாக ஒரு கோயிலிருந்தால், விழா எடுத்தால்… யாராவது வருவார்களா?//

மசூதி,சர்ச்லல்லாம் இப்படித்தான் பண்றாங்கண்ணா.

//ஞாநி, சுதாங்கன் வகையறாக்கள் சாமியை விட்டுவிட்டு பூசாரியை பூஜிக்கிற மூடர்களைப் போலவே பேசுகிறார்கள். //

என்னங்கண்ணா படக்குனு ட்ராக் மாறிட்டிங்க ஐஸ்வர்யா ராயி, ஏ.ஆர் ரகுமானு ,ஷங்கரு,சன் பிக்சர்ஸையெல்லாம் ஒயிலாட்டம் ரேஞ்சுக்காச்சும் சொல்லிக்கிட்டிருந்து படக்குனு பூஜாரி ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டிங்க?

//ரஜினிக்கு எதிரான வயிற்றெரிச்சல் கோஷ்டியின் மொத்தப் பிரதிநிதிகளாகவே இந்த இருவரும் வந்திருந்தனர்.//

ரஜினிக்கும் எங்களுக்கும் வரப்பு தகராறு வாய்க்கா தகராறா இருக்கு.வயிறெரிய. மனுஷன்  நாசமா போறாரே, புலி மேல சவாரி பண்றாரே அந்த புலியே தின்னுரப்போகுதுங்கற பரிதாபம் தான் . மேலும் கூவற கழுதை மேயற கழுதைய கெடுத்த கணக்கா ஒரு லீடிங் பர்சனா இருந்துக்கிட்டு தானும் கெட்டு தன் பின்னால வரப்போற ஹீரோக்களையும்  படங்களையும் கெடுக்கறாரேனு ஒரு ஆதங்கம்

//சொந்தக் காசில் போய் யாராவது கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது போன்றவற்றைச் செய்வார்களா? //

நிச்சயமா செய்வாய்ங்க. ( நானே மிட்டாய் இறைச்சிருக்கேன்) எதுவரை? 20 வயசு வரை, மிஞ்சிப்போனா 30 வயசுவரை. அரிசி,பருப்பு விலை தெரிஞ்சவன் தெரிஞ்ச பிற்பாடு செய்வானா? அப்படியும் செய்தா அவனுக்கு ஏதோ ஹிடன் அஜெண்டா இருக்குனு அர்த்தம்.

//பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள்தான் ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக்கிவிட்டனவாம்.//
இல்லையா பின்னே. அன்னைய தேதிக்கு கலைப்புலி இன்டர் நேஷ்னல்ஸ் தான் கார்ப்போரேட் கம்பெனி. கலைப்புலி தாணு கொடுத்ததுதானே சூப்பற ஸ்டார் பட்டம்.

இதைப்பத்தி ஒரு பதிவே போட்டிருக்கேன் படிச்சு பாருங்க "ரஜினிக்கு ஒரு சவால்" ( ச்சொம்மா கூகுல்ல அடிச்சி தேடுங்க வாத்யாரே)


//ஆஹா, ரஜினியையே எதுத்துப் பேசறான் பாருய்யா” என்று பெயர் வாங்க நினைக்கும் அற்ப புத்தி இது.//

அய்யோ அய்யோ .. (வடிவேலு மாடுலேசன்)  இன்னைக்கு எதிர்ப்பு நாளைக்கே வீரலட்சுமிங்கறதெல்லாம் காமெடி பீஸு குரு! அதை போயி எதுக்கவேண்டியிருக்குதேனு வருத்தம் தேன்.

//முத்து, படையப்பாவின் வெற்றிக்கு காரணம் என ஒன்றைச் சொன்னார் பாருங்கள் அந்த ‘அஞ்ஞாநி’… உண்மையாகவே பக்கென்று சிரித்துவிட்டேன். அதுவும் மீனா, ரம்யா கிருஷ்ணனுக்காகத்தான் ஜப்பானின் அந்தப் படங்கள் ஓடின என்கிறாரே… இதைவிட முட்டாள்தனமான வாதம் இருக்க முடியுமா?//

பார்க்க: ஆனந்த விகடன் விமர்சனத்திலிருந்து நான் கொடுத்துள்ள குறிப்பை. ரஜினி என்னைக்காச்சு ஸ்டார் நைட் பண்ணியிருக்காரா? ரஜினியோட வீச்சு ஒரு விதம் .ரம்யா மீனாவோட வீச்சு ஒரு விதம் இதைத்தான் ஞானி சார் அனலைஸ் பண்ணியிருக்காரு

//இந்திய நாட்டின் பிரதமரே, ஜப்பான் நாடாளுமன்றத்தில் ரஜினியை வானளாவப் புகழ்ந்து, ‘இந்திய – ஜப்பானிய கலாச்சார உறவுக்குப் பாலம் எங்கள் நாட்டு ரஜினி’ என்று கூறினாரே, அதெல்லாம் இந்த அசட்டு ஆசாமிகளுக்குத் தெரியுமா..?//

யாரு.. நம்ம பிரதமரா .. கொஞ்சம் இருங்க வாய் விட்டு சிரிச்சிக்கிறேன். ஆந்திராவுல ஜகன் போர்கொடி தூக்கினதுமே சிரஞ்சீவிய கூப்டு சரண்டர் ஆன பார்ட்டிங்கப்பா.. நாளைக்கு என் கையில பத்து எம்.எல்.ஏ இருந்தா அ பத்து பேரை எம்.எல்.ஏ ஆக்கற சரிஸ்மா இருந்தா என்னையும் பாலம் ,ஓவர் பிரிட்ஜுனு சொல்லுவாய்ங்கப்பா. (சோகம் என்னடான்னா ரஜினியால  ஒரே ஒரு கவுன்சிலரை ஜெயிக்க வைக்கமுடியாது.. - அவரு பார்ட்டி வைக்க ஆத்துல ஒத்துக்க மாட்டாய்ங்களே..)

//நீலாம்பரியாக யாரும் நடிக்கலாம்… ஆனால் படையப்பாவாக ரஜினி மட்டுமே நடிக்க முடியும்//

ஆ...........மா படையப்பா தில்லானா மோகனாம்பாள் ஷண்முக சுந்தரம் மாதிரி ஒரு ஜீவனுள்ள படைப்பு. அதுல ரஜினி மட்டுமே நடிக்க முடியும்.

//இதே எந்திரன் ஓடாமல் போயிருந்தால்//

அப்படித்தானே தகவல்

//ஆனால் ரஜினி மட்டுமே 30 ஆண்டுகளுக்கும் மேல் உச்ச நடிகராகவே இருக்கிறார். //

தபார்ரா சில காலம் ராமராஜன் கூட டாப்புல இருந்தாருப்பா

உலக திரையுலகம் இருக்கட்டும்.. லோக்கலை பார்ப்போம்.

//வட இந்தியர்கள் ரஜினிக்கும் ஷங்கருக்கும் தலை வணங்குகிறார்கள்.//

அப்ப ஏங்கண்ணா  எந்திரன் இந்தி பட போஸ்டர்ல ரஜினி  மூஞ்சி என்ன  ,பேரை கூட போடலியாமே சன் பிக்சர்ஸ் காரவுக

//இந்த விவாதத்தின் முடிவில், “ரஜினி என்ற நட்சத்திரத்தின் பவர்தான் இன்றைய வெற்றிகளுக்குக் காரணம் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை!” என்று கூறி எதிர்ப்பாளர்களின் முகத்தில் கரி பூசினார் தொகுப்பாளர் சஞ்சய்.//

இதுக்கு பேர்தாங்கண்ணா அசுரத்தனமான மார்க்கெட்டிங்

//எப்போதெல்லாம் ரஜினி பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறதோ அப்போது டிஆர்பியும் கூடுகிறது.//

அண்ணா .. நான் இதுவரை 1,500 பதிவுகளுக்கு மேல எழுதியிருக்கேன் ஆனா லதாரஜினிகாந்தும் என் எதிரிகளும்ங்கற பதிவு தான் சூப்பர் ஹிட். இதுக்கு என்ன அர்த்தம்னா ரஜினிக்கு அந்த அளவுக்கு எதிர்ப்பு இருக்குனு அர்த்தம்

//அதுதான் ரஜினி சாரின் பவர்//

இல்லிங்கண்ணா ரஜினி சாருக்குள்ள எதிர்ப்புக்கான பவர்

//தமிழ்நாட்டையும் இரண்டு விஷயங்களையும் பிரிக்கவே முடியாது. அவை ஃபில்டர் காபி… ரஜினிகாந்த்!” என்றார் சஞ்சய்.//

ரஜினி காந்து சரிங்கண்ணா ( அவிக மார்க்கெட்டிங் உத்தேசமே அதான்) அதென்னா ஃபில்ட்டர் காபி ? அய்யரம்மாவை மணந்து மகளை மடில உட்கார்த்தி வச்சு தாரை வார்த்து கொடுத்ததால ரஜினியை அய்யராவே ஆக்கிட்டிங்களா?


படிக்கவும்: ரஜினி அய்யராத்து திருமணம்

அப்போ அவரோட குண்டி சூட்டை தாங்கி தூக்கி வச்சு ஆடின சூத்திரனுக்கெல்லாம்  அஸ்கு புஸ்குதானா?

Monday, October 18, 2010

பார்ப்பன குசும்பு : லேட்டஸ்டா டோண்டு சார்

அண்ணே வணக்கம்ணே,
இஸ்லாம்ல கடவுளுக்கு " மாக்கிர்"னு ஒரு பேர் உண்டு. இதுக்கு சதிகாரர்களுக்கு  சதிகாரன்னு அர்த்தம். ராசாதி ராசா மாதிரி வச்சுக்கங்க. நான் புதுப்பதிவே  போடக்கூடாதுன்னு லங்கோடு கட்டிக்கிட்டிருந்தேன். ஆனா பாருங்க மணலுள் புதைந்து வாழ் நுணலும் தன் வாயால் கெடும்ங்கறமாதிரி அவாள் என்னை கிளப்பி விட்டு புதுப்பதிவு போட வச்சிட்டாய்ங்க.அவாளை கிளப்பி விட்டது யாருங்கறிங்க.சாட்சாத் இன்ஷா அல்லாஹ் தான்

நான் பிராமணாள கிழிக்கிறத படிச்சுட்டு மஸ்தா பேரு என்ன முருகேசன் உங்களுக்கு அவிக மேல கோபம்னு கேட்கிறது வழக்கம். அந்த காரணங்களை இன்னொருக்கா இங்கன பட்டியல் போடறதா இல்லை.

நாம எங்கன போனாலும், இருந்தாலும் "கண்ணா! நான் நேத்து வந்தேன் இன்னிக்கிருக்கேன். நாளைக்கு பூடுவேன் ..உங்க பாலிடிக்ஸ் எல்லாம் எனக்கு தேவையில்லே" ங்கறதுதான் நம்ம ஸ்டைல்.

குளிச்சுட்டு பாலத்து மேல நடந்து வர்ர ஆனை மாதிரி பன்னிக்கெல்லாம் சைடு கொடுத்துக்கிட்டு நம்ம ரூட்ல நாம போறோம். ( தனி வழி இல்லிங்கணா.. நமக்கு நிறைய முன்னோடிங்க இருக்காய்ங்க - வெற்றி பெற்ற மனிதரெல்லாம் என்னுள்ளே அடக்கம் வழி காட்டி நிற்கும் முந்தையோர்க்கு சிந்தை குளிர் வணக்கம்"ங்கற வரிகளை சில காலம் ஸ்லோகனா கூட வச்சிருந்தேன்.

எங்கே விட்டேன் ஆங் நம்ம ரூட்ல நாம போறோம். ஆனா போற போக்குல குசும்பை அதுவும் பார்ப்பன குசும்பை காட்டினா செமை கடுப்பாயிர்ரன். முன்னொருக்கா ஓம்கார் ஸ்வாமிகளுக்கு இடைக்காலத்துல ஸ்மார்ட்டுக்கும் பூசை போட்டேன்.

இப்போ டோண்டு.  யாருக்கோ ஆறுதல் சொல்றேன் பேர்வழி நம்மை மொக்கை பண்ணியிருக்கு பார்ட்டி. நமக்கு லாஜிக்கே இல்லாம சில பேர் மேல கொஞ்சூண்டு மருவாதி வந்துருமா அதை கடாசி வரைக்கும் மெயின்டெய்ன் பண்ணத்தான் பார்க்கிறோம். வி.........ட மாட்டேங்கிறாய்ங்களே.

அவரோட வரிகளை அப்படியே தரேன் பாருங்க. ( ரெஃபரன்ஸ் டு தி கான்டெக்ஸ்ட் தேவைன்னா  இங்கே க்ளிக் பண்ணுங்க
"சித்தூர் முருகேசன் என்னும் பதிவரை எனக்கு நினைவூட்டுகிறீர்கள். அவரும் இப்படித்தான் இந்தியாவை முன்னேற்றுவதற்காக சில திட்டங்களை வைத்துக் கொண்டு எல்லோருக்கும் தபால் போட்ட வண்ணம் உள்ளார். "

இவரு நம்மை எந்த ரேஞ்சுக்கு கொண்டுட்டு வந்துட்டாரு பாருங்க. எந்திரன்ல வசீகரன் ரேஞ்சுக்கு கொண்டுட்டு வந்துட்டாரு. அவரு அப்படித்தானே சிட்டியை எப்படியாச்சும் ராணுவத்துக்கு தள்ளிவிட மெடிக்கல் ரெப் கணக்கா பேசுவாரு.

திட்டங்களை வைத்துக்கொண்டு ( பழக்க தோஷத்துல நான் ஏதோ பூட்டி வச்சிருக்கிறாப்ல சொல்றாரு பாருங்க - 1993 லயே ஜன சக்தி பேப்பர்ல பக்காவா கொடுத்தாச்சு ப்ளானை. ஏதோ திட்டமில்லிங்கண்ணா பக்கா பக்காவா இருக்கேன். தாளி மன்மோகன் சிங் இல்லே அவிக தாத்தா சிங் வந்தாலும் மெட்டாஷ் தான்.

"தபால் போட்ட வண்ணம் இருக்கேனாம்" அடங்கொய்யால .. குறுக்கத்தரித்த குறள் மாதிரி 1986லருந்து என் வாழ்க்கைய,உயிரை பணயம் வச்சு 1997 வரை திட்டத்தை மெருகேத்தி டெக்னிக்கல்,தியரிட்டிக்கல் சப்போர்ட் கொடுத்து ஏறக்குறைய கார்ல் மார்க்ஸ் ரேஞ்சுக்கு சென்ட்ரல்  லைப்ரரில குடியிருந்து ஒர்க் பண்ணேங்கண்ணா.

நாரா ( கெட்ட வார்த்தையில்லிங்கண்ணா சர் நேம்) சந்திரபாபுவுக்கு அனுப்பினேன் பாருங்க அங்கன இருந்து பிடிச்சது சனி. டோண்டு சாருக்கு வாயு பக்ஷணம்னா புரியும்னு நினைக்கிறேன்.

இந்த ப்ளான் மேட்டர்ல நம்ம ஸ்ட்ரகிள் எதுவரை போச்சுன்னா சி.எம்மோட பி.ஏ வே ஃபோன் பஞ்சாயத்து பண்ற ரேஞ்சுக்கு ஆயிருச்சு. தாளி போலீஸ் ரிப்போர்ட் வாங்கி தூக்கி உள்ளாற போடுங்கடானு இன்ஸ்ட்ரக்சன்.ஏதோ நாம உஞ்ச விருத்தி பிராமணனா ( சாதியில்லிங்கண்ணா) வாழ்ந்துக்கிட்டிருந்ததால "அய்யோ பாவம்"னு லோக்கல் போலீஸ் அஜீஸ் பண்ணி ரிப்போர்ட் அனுப்புச்சு.

இன்டலிஜென்ஸ் ரிப்போர்ட் எல்லாம் தருவிச்சு பார்த்தும் ஒன்னும் பேரலை. நாரா ( மறுபடி கெ.வார்த்தை இல்லிங்கண்ணா) சந்திரபாபு ஆசனத்துக்கு கீழே (கார் சீட்) க்ளைமோர் பாம் வெடிக்கிறதுக்கு சிலமாசம் முன்னாடி புவனேஸ்வரி அம்மாவுக்கு அஸ்ட்ராலஜிக்கலா அனலைஸ் பண்ணி லெட்டர் போட்டேன் நாம வச்சது வெடிச்சது ( வெடிகுண்டு இல்லிங்கண்ணா - நம்ம ப்ரிடிக்ஷன் ஒர்க் அவுட் ஆனதை என் ஒக்காபுலரில சொன்னேன்) பாபு வீட்டுக்கு பூட்டாரு. தாளி அந்தாளு மட்டும் ஜெயிச்சிருந்தா சங்குதான்.

எதிர்கட்சி ஆனபிற்பாடு  கூட என்.டி.ஆர் பவன்ல இருந்து ( தெலுங்கு தேசம் கட்சி தலைமை அலுவலகம்) கொலைமிரட்டல் எல்லாம் வந்துதுங்கண்ணா. லோக்கல்ல சாஞ்சுக்க ஒரு  சுவர் வேணம்னு எங்க  லோக்கல் எம்.எல்.ஏ வோட புகழ் பாட ஆரம்பிச்சேன்னா மிரட்டல் எந்த ரேஞ்சுல இருந்திருக்கும் கற்பனை பண்ணி பாருங்க

நம்ம ப்ளான் மேட்டரால ஒரு பாடு படலை தாளி ஜில்லா அரசு இயந்திரமே நம்மை ப்ளாக் லிஸ்ட்ல வச்சிருந்தது. ப்ளானுக்காக  ஜாயிண்ட் கலெக்டர்,ஜில்லா ஜட்ஜு, கன்ஸ்யூமர் ஃபோரம் நடுவர்,  ஹ்யூமன் ரைட் கமிஷன் இப்படி ஒருத்தர் கிட்டே இல்லே பல பேர் கிட்டே மோதினேன்.

என்னை பொறுத்தவரை உலகத்துலயே பெரிய்ய அற்புதம் எதுன்னா என்னை என் கவுண்டர்ல போடாம விட்டதுதான். நான் தினசரிகள்ள பாபுவுக்கு எதிரா விட்ட ஸ்டேட்மென்ட்ஸ், என் போராட்டத்தை பத்தி வந்த  க்ளிப்பிங்ஸ் இன்னம் என் கிட்டே பத்திரமா இருக்கு.ஸ்கான் பண்ணி , தெலுங்குல உள்ளதை தமிழ்ல தர்ஜுமா பண்ணீ வச்சேன்னா டோண்டுவுக்கு வினோலேக்ஸே தேவையில்லாம வவுறு கலங்கிரும்.

ஏதோ ஒய்.எஸ்.ஆர் வந்து ஜலயக்னம் ஆரம்பிச்சதால, ஓஞ்சுபோவட்டு ஸ்டேட் லெவல்லயாச்சும் அப்ளை ஆகுதேனு  கொஞ்சம் போல சாஃப்ட் ஆயிட்டேனே தவிர இன்னம் நம்ம நெஞ்சுல மாஞ்சா கீது வாத்யாரே.

அழகிரியின் நண்பர்கள் பதிவை பார்த்திங்கல்ல.  ங்கொய்யால இன்னா நடந்துரும் "உள்ளே போடுவாய்ங்க - சோத்து பிரச்சினை தீரும் , தூக்குல போட்டாய்ங்க வாழ்க்கை பிரச்சினையே தீர்ந்து போயிரும்.

டோண்டு டோன்ட் ப்ளே ட்ரிக்ஸ். ஒவ்வொரு நெஞ்சுலயும் ஒரு ரணம் இருக்கு. அதை டச் பண்ணகூடாது. பண்ணா பிரளயம் தான்.

நான் நோண்ட ஆரம்பிச்சா நாறிரும். டேக் கேர்.

கேளுங்கள் தரப்படும்

அண்ணே வணக்கம்ணே,
இன்னைலருந்து நம்ம வலைப்பூவுல கேளுங்கள் தரப்படும்னு ஒரு ஃபீச்சர் ஆரம்பமாகுது.வித்யாசமான  கான்செப்ட் ஒன்னும்  இல்லிங்கண்ணா நீங்க கேள்வி கேட்கலாம்.

அதுக்கு நான் பதில் தருவேன்.

மத்தவுகளும் பதில் தரலாம். 

கேட்டவுகளுக்கு எது பெட்டரா படுதோ அதை ஃபாலோ பண்ணிக்கட்டும்.

வெறும் ஜோதிஷம்னே இல்லே எதைப்பத்தி வேணம்னா கேட்கலாம். சூரியனுக்கு கீழே, மேலே எது எத பத்தி வேணம்னா கேட்கலாம்.
கச்சா முச்சானு கேட்கலாம். எடக்கு மடக்கா கேட்கலாம்.

ஜோதிஷ பத்தி கேக்கறவுக  தனிப்பட்ட கேள்விகளை  கேட்கவேணாம். அது பெரிய ப்ராசஸ்ணே. மண்டை காஞ்சுரும்.

வேணம்னா உங்க ஜாதகத்துல உள்ள அம்சங்களை தனி தனியா கேளுங்க. நோ ப்ராப்ளம். ரெம்ப பர்சனல்னா என் நண்பருக்குனு ஆரம்பிச்சு கேட்டா போகுது. கமெண்ட் ஃபார்ம்லயே உங்க கேள்விகளை கேளுங்க.

நானும் கமெண்ட் ஃபார்மல்யே பதிலை சொல்றேன்.  ( 500 பேர் சேர்ர வரை புதுசா பதிவுன்னு  போடறதா உத்தேசமே இல்லை. இது கூட வலையுலக  நண்பர் ஒருத்தர் கொடுத்த ஐடியாதான். )

அக்டோபர் இரண்டாம் தேதி முதல் நம்ம வலைப்பூவுல புதிய பதிவுகள் வெளியாகறதில்லை இருந்தாலும் ஹிட்ஸ் மட்டு கூடுதே தவிர குறையலை ( ஆனா இவ்ள ஆர்வமா படிக்கிறவுக ஏன் சைட்ல ஜாய்ன் பண்ணமாட்டேங்கறாய்ங்க புரியலை)  யாரோ ஒரு பார்ட்டி  ஆளில்லாத டீக்கடைன்னிட்டாருங்கறதுக்காக நான் 500  மெம்பர்ஸை கேட்கலிங்கண்ணா.

நாம அன்னைக்கு இன்னைக்கு என்னைக்குமே பெஸ்ட் செல்லர் தான். 1991ல "உங்களை யார் விரும்புவார்கள்"னுட்டு அட்வான்ஸ் புக்கிங்கோட ஒரு பாக்கெட் புக் போட்டவன்  நானு. டார்கெட்டுக்கு அதிகமா காசு வந்துட்டதால ஒன்+ஒன் கொடுத்தவன் நான்.( 1000+1000)

இங்கன மட்டும் ஏன் நொண்டியடிக்குதுனு சின்னதா ஒரு மனக்கசப்பு தட்ஸால்.  நம்ம டாப் டென் போஸ்டுகளுக்கு வந்த ஹிட்ஸை காட்டற ஸ்க்ரீன் ஷாட்டை பாருங்க.( டீட்டெயில்ஸ் தெரியலைன்னா படத்து மேல க்ளிக் பண்ணுங்க அப்பாறம் கண்ட்ரோல் ப்ளஸ் கீஸை அழுத்துங்க படம் டெவலப் ஆகும் .ஓகே. உடுங்க ஜூட்)

இதை பார்த்தாச்சும் சைட்ல ஜாய்ன் பண்ணுங்கண்ணா