Showing posts with label கல்யாணம். Show all posts
Showing posts with label கல்யாணம். Show all posts

Saturday, October 23, 2010

சேர்ந்து வாழ சுப்ரீம் கோர்ட் நிபந்தனை

கண்ணாலம் கட்டாமயே சேர்ந்து வாழனும்னா அதுக்கு நீங்க சுப்ரீம் கோர்ட் நிபந்தனைகளை பின்பற்றனும்

1.ரெண்டு பேருக்கும் திருமண வயது வந்திருக்கனும் ( மைனர் பெண்ணோட வாழ்ந்தா களிதான்)
2.ரெண்டு பேருக்கும் வேற பார்ட்டியோட கண்ணாலமாகியிருக்க கூடாது ( அப்போ அது அடல்ட்ரி)

3.ச்சொம்மா வீக் எண்ட்ல மட்டும் கட்டிக்கிட்டு படுத்தா போதாது குறிப்பிட்ட காலம் சேர்ந்து வாழ்ந்திருக்கனும்.

4.கணவன் ,மனைவிங்கற ஃபீலிங் வந்திருக்கனும்

5.ஊர் உலகமும் உங்களை கணவன் மனைவியா அங்கீகரிச்சிருக்கனும்

( என் பாலிசி என்னன்னா கண்ணாலமானவங்க எல்லாம் கண்ணாலமே நடக்கலைன்னு  நினைச்சு சேர்ந்து வாழறது பெட்டர். அதுலயும் இன்னொருத்தன் கிட்டே விவாகரத்து வாங்கிட்டு வந்த பார்ட்டினு நினைச்சா இன்னம் த்ரில்லா இருக்கும் )

பட்டா இல்லாத நிலத்துல எவ்ளதான் உழுதாலும் வெள்ளாமை வீட்டுக்கு வந்து சேருமா?

முக்கியமா நிலத்துக்கு சொந்தக்காரவுக ரோட்ல போறவனை எல்லாம் நிலத்துல இறக்கி விட்டுட்டா ..பஞ்சாயத்துக்காரன் தானே மண்டைய பிச்சிக்கனும் . ரோசிங்கப்பா..

விலங்கு வேணாம்னு தானே விலங்கா வாழறது. அப்பாறம் என்னத்தை ஜீவனாம்சம் கேட்டு கோர்ட்டுக்கு போறதும் - கேஸு நடத்தறதும் - ஜட்ஜுங்க பாவம் .. அயோத்தி பஞ்சாயத்து மாதிரி நடுவாந்தரமா தீர்ப்பு கொடுக்க எந்த அளவு மண்டைய உடைச்சிக்கிட்டாய்ங்களோ?