Showing posts with label சத நாமாவளி. Show all posts
Showing posts with label சத நாமாவளி. Show all posts

Tuesday, August 25, 2015

சத நாமாவளி விளக்கவுரை: 51-75

அண்ணே வணக்கம்ணே !
என்னடா இந்தாளு ஒரு பக்கம் ஜோதிடம்ங்கறான் -இன்னொரு பக்கம் பெரியார்ங்கறான் -இப்ப பார்த்தா "அவா" கணக்கா உபன்யாசம் ஆரம்பிச்சுட்டான்னு கன்ஃபீஸ் ஆயிராதிங்க. நமக்கு மன்சன் முக்கியம். மன்சனோட பிரச்சினைகளுக்கு சொல்யூஷன் பெரியார்கிட்டே கிடைக்கிறாப்ல இருந்தா பெரியார் ( உ.ம் குரு+ராகு/கேது/சனி சேர்க்கை இருக்குன்னு வைங்க .பெரியார் தான் ஒரே வழி)

ஜோதிடத்துல தீர்வு கிடைக்குதுன்னா ஜோதிடம்.  அதுலயும் தீர்வு கிடைக்கலின்னா ஆத்தா . இதான் நம்ம ஸ்ட்ராட்டஜி. சர்வே ஜனா சுக்கினோ பவந்து .

சொந்த வாழ்க்கைய பொருத்தவரை ஜோதிடத்தை தாண்டி வந்துட்டம். ஆகே பீச்சே மூடிக்கிட்டு நடக்கறத  நடக்க விட்டுட்டா எந்த கிரகத்தாலயும் எந்த பிரச்சினையும் வரதில்லை . ஆத்தா மேட்டர்ல கூட சொந்த மேட்டர்ல -சொந்த வேலை  வரைக்கும் பார்த்துக்கறாப்ல இருந்தா ஹாய் சொல்ட்டு போயிக்கினே இருக்கலாம்.

எங்கே என்ன மிஸ்டேக் ஆயிருச்சோ தெரியல.. நம்ம லட்சியம் சொந்த ஊரு ,மானிலம்,நாடுன்னு எக்ஸ்டென்ட் ஆயிட்டே போயிருச்சு .விட்டா ஐ.நா.சபையில ஒரு நாள் க்ளாஸ் எடுக்கிற சான்ஸ் கிடைச்சா கொய்யால உலகத்தையே மாத்திரலாங்கற அளவுக்கு மதிமயக்கம். தப்பித்தவறி ஆத்தா ஏமாந்தா இந்த உலகத்தையே மாத்திரலாமேன்னு ஒரு நப்பாசை .
இந்த இழவுக்குத்தேன் சத நாமாவளி அது இதுன்னு ஆத்தாவுக்கு சோப் ஃபேக்டரியே இறக்கிக்கிட்டிருக்கன். நிற்க. சத நாமாவளி விளக்கவுரைக்கு போயிரலாமா?

51.மார்க்கண்டேய வரப்ரதாயை
மார்கண்டேயனுக்கு வரம் கொடுத்தவளே -மார்க்கண்டேயன் கதை தெரியுமில்லை? அது சரி மார்க்கண்டேயனுக்கு வரம் கொடுத்தது சிவன் தானே. இதுல ஆத்தாவ மார்கண்டேயனுக்கு வரம் கொடுத்தவளேன்னு எப்படி சொல்றது? இதானே கேள்வி. அய்யா சாமி மாரே.. அர்த நாரீஸ்வரர்னா என்ன? 50-50 .ஐயா கொடுத்தாலும் அது அம்மா கொடுத்தமாதிரி.அம்மா கொடுத்தாலும் அது அய்யா கொடுத்தமாதிரி ஓகேவா உடுங்க ஜூட்டு.

52.மஹா மாயா ஸ்வரூபின்யை
மாயா..ங்கற வார்த்தைக்கு பொருள் சொல்லனும்னா இருக்கிறாப்லயே இருக்கும்.ஆனால் இருக்காது- இருக்காது ஆனால் இருக்கிறாப்லயே ஒரு ஃபீல் ஆகும்னு சொல்லலாம்.. இந்த விதிக்கு சம கால உதாரணம் சொல்லனும்னா தமிழகத்துல நிர்வாகம்.

சாதாரணமா மாயாங்கற வார்த்தைய ஜேஜிக்கும் -பக்தனுக்கும் இடையில் தடையா இருக்கக்கூடிய வஸ்துவா சொல்வாய்ங்க.
இங்கே பார்த்தா அந்த மாயா ரூபத்துல இருக்கிறதே ஆத்தாதான். மாயா ஸ்வரூபினியும் அவளே ! ஞான ஸ்வரூபினியும் அவளே! தெய்வம் என்றால் அது தெய்வம் -வெறும் சிலை என்றால் அது சிலைதான்னு கண்ணதாசன் சொல்வாரே அந்த மோமென்ட்.

மாயான்னு புரிஞ்சுக்கிட்டா அவளே ஞான ரூபிணி . புரிஞ்சுக்கலின்னா மாயா ஸ்வரூபிணி . அவளே அவளை மறைக்கும் மாயாவாகவும் இருக்கிறாள்.அவளே அந்த மாயாவை கிழித்தெறியும் ஞானமாகவும் இருக்கிறாள்.

53.மோஹின்யை
இதன் வேர் சொல் மோகம். மோகிக்க செய்பவள் மோகினி. ஆதி யோகி சிவன். மரணம் கோலோச்சும் இடுகாட்டில் வசிப்பவன். பிணங்களை எரித்த சாம்பலையே பூசி ,பாம்புகளை அணி கலனாய் அணிந்து பேயாட்டம் போடும் பேயாண்டி.அவரையே ஜொள் விடவைக்கனும்னா என்னா மாதிரி கவர்ச்சி இருக்கனும்.

54.மீனாக்ஷ்யை
மீன் போன்ற கண்கள் கொண்டவள் . தூங்காத கண்களை கொண்டது மீன். ஆத்தாவும் BPO கணக்கா நைட் ட்யூட்டி பார்க்கிறவளாச்சே. ( நன்றி: வாரியார்)

55.மஹோதர்யை
பெரிய வயிறு கொண்டவள். அத்தனை உயிர்களையும் பெறுபவளும் அவளே. விழுங்கி முடிப்பவளும் அவளே.

56.மணி த்வீப பாலிகாயை
த்வீபம் = தீவு ,பாலிகா = ஆள்பவள். எல்லாம் சரி மணி த்வீபம் எங்க இருக்கு? மணி பூரக சக்கரமா?

57.மஹிஷாசுர மர்த்தினியை
மஹிஷம் =எருமை எருமை தலை கொண்ட அசுரனை கொன்றவளே.எருமைத்தலைங்கறது உருவகம். எருமை போன்ற அசமஞ்சனா இருந்த பார்ட்டிய போட்டுதள்ளியிருக்கலாம். ( நமக்குள்ளயும் ஒரு எருமை இருக்குங்கோ..அதான் ஈகோ -அதை சம்ஹாரம் பண்ண சொல்லி கேட்போமே)

58.நித்யாயை
புனரபி மரணம் -புனரபி ஜனனம் . உறங்குவது போலும் சாக்காடு -உறங்கி விழிப்பது போலும் பிறப்பு -இதெல்லாம் நமக்குத்தேன்.ஆனால் ஆத்தா ? நெவர் . அதனாலதேன் அவள் நித்யா.

59.ஓம்கார ரூபின்யை
இதை பத்தி எழுதனும்னா ரெம்ப கஷ்டம்.சொம்மா.. ஓஷோ சொன்ன ஒரு வரியை சொல்லி அம்பேல்.“ஓம் உங்களால் உச்சரிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. உங்களில் ஒலிப்பது. கேட்கப்பட வேண்டியது”
அந்த ஓம் என்ற ஒலிக்கு உருவம் கொடுத்தா அதான் ஆத்தா. ஓங்கார நாத ஸ்வரூபினியும் அவளே

60.பாசாங்குச தாரின்யை
பாசம் =(எம) பாசம் , அங்குசம் = ஆனைய ஹேண்டில் பண்றாய்ங்களே அது பாஸூ. இதை எல்லாம் கையில வச்சிருக்கறவள்.

61. பஞ்ச தசாக்ஷர்யை
சமஸ்கிருதத்துல உள்ள அம்பது எழுத்துக்களாவும் இருக்கிறவள்னு அருத்தம். சகலத்திலும் இருப்பவள்,சகலமாக இருப்பவள். (தெலுங்குல சகலம்னா-உடைந்த-முறிந்த- பாகங்கள்னும் ஒரு அர்த்தம் வருது) நாம நம்ம பேட்சுல உள்ள உதவாக்கரைய ஸ்க்ராப் னு சொல்றமே அந்த ஸ்க்ராபும் ஆத்தாவோட உருவம் தான்.

62.பூர்ணாயை
பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை தின்னிருப்பிங்க. அரிசி மாவுல கன்டெய்னர்.அதுக்குள்ளாற ஷுகர் லெவல்ஸை விலைவாசி கணக்கா உயர்த்தக்கூடிய இனிப்பு.அதை கூட பூரணம்னு சொல்றாய்ங்க. அதுவும் சேர்ந்ததுதான் கொழுக்கட்டை.

சகலத்திலும் -சகலமாவும் இருக்கிற ஆத்தா கொழுக்கட்டைக்குள்ள பூரணமா இருக்கமாட்டாளா என்ன?பாய்ண்டுக்கு வந்தா பூரணம்னா முழுமைன்னு அருத்தம். இங்கே உள்ள ஆண்,பெண் எல்லாமே அரைகுறை . ஆணில் பெண்மை குறைவு ,பெண்ணில் ஆண்மை குறைவு .

ஆனால் ஆத்தாவுல டெஃபிஷியன்சிங்கற பேச்சே கிடையாது. முழுமைன்னா சாதா முழுமை இல்லிங்கோ. முழுமைன்னா அதுலருந்து எதையாச்சும் பிச்சுட்டா அது முழுமையா தொடர முடியாது.

ஆனா ஆத்தா அப்டி இல்லை. கச்சா முச்சான்னு அவளோட மகோதரத்துலருந்து கோடி கோடியா உசுருங்க வந்துக்கிட்டே இருந்தாலும் முழுமையாவே தொடரும் முழுமை.

ஓம் | பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே | பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே ||

63. பரமந்த்ர சேதினி
பர = பிறரின்  ; மந்த்ர =மந்திரங்கள் ; சேதினி =அழிப்பவள்.அதாவது பிறரின் மந்திரங்களை தாக்கி அழிப்பவளேனு அருத்தம் சொல்லலாம்.
மந்திரத்துல மாங்கா விழாதும்பாய்ங்க. மனம் ஒன்றானால் மந்திரம் தேவையில்லைம்பாய்ங்க. இது ரெண்டையும் க்ளப் பண்ணி ரோசிங்க. அலைபாயும் மனம் மந்திரம் ஜெபிச்சாலும் மாங்காய் விழாது. அதே நேரத்துல மனம் குவித்து சிந்திப்பவர்கள் மந்திரம் சொல்லாவிட்டாலும் மாங்காய் விழும்.

ஒரு வேளை மனம் குவித்து சிந்திக்கக்கூடியவர்கள் மந்திரமும் ஜெபித்தால் ?
ஆக மந்திரம்ங்கறது ஒரு ஃபோர்ஸ்/சோர்ஸ் . பிறர் நம்மை காரணமே இல்லாம வெறுக்கலாம் – நாம நாசமா போகனும்னு நினைக்கலாம். அட மந்திரமே கூட ஜெபிக்கலாம். அப்ப நம்ம நிலைமை என்ன?
அவிக மந்திரங்களை ஆத்தா அட்டாக் பண்ணி ஒன்னும் இல்லாம பண்ணிருவா. இங்கே ஒரு விஷயத்தை ஞா படுத்தனும்..

நீங்க தப்பான ஆளு – எக்ஸ் பார்ட்டி சரியான ஆளுன்னு வைங்க .ஆத்தா பரமந்த்ர சேதினியா உங்களுக்கு வேலை செய்யாம போகலாம். ஆனால் எக்ஸ்பார்ட்டிக்கு கட்டாயமா ஒர்க் அவுட் பண்ணிருவா. ஆகவே சரியான ஆளா மாற பாருங்க.

64.பரபல விமர்த்தின்யை
பிறருடைய பலத்தை அழிப்பவள் . மேற்படி நாமாவுக்கு கொடுத்த விளக்கமே போதும்னு  நினைக்கிறேன்.

65.பரப்ரம்ஹ ஸ்வரூபினி
பிரம்மனுக்கும் பிரம்மாவுக்கும் வித்யாசம் தெரியுமில்லை.பிரம்மான்னா மும்மூர்த்திகளில் ஒருத்தரு. ப்ரம்ஹம்னா இந்த மும்மூர்த்திக்கெல்லாம் தாத்தா. பிரம்மத்துக்கு உருவம் -நோக்கம் -செயல் இப்படி பலதும் கிடையாது.படைப்பின் மூலம் – அசைவு -முடிவு எல்லாத்துக்கு காரணமான பவரை பிரம்மம்னு சொல்றாய்ங்க. அந்த பரபிரம்மத்தின் உருவாகவும் அவளே இருக்கிறாள்.

66.ராஜ ராஜேஸ்வர்யை
ராஜாவுக்கெல்லாம் ராஜா ஆரோ அந்த ராஜாவுக்கும் ஈ ஸ்வரி  ஆத்தாதான். Eswar(i) ங்கற வார்த்தையில swar ங்கறதை மட்டும் ஆராய்ச்சி பண்ணா பதவி ஏற்றுக்கொள்/பட்டம் சூடிக்கொள்னு அருத்தம் சொல்லனும்.ஆமாவா? இல்லையா?

67.சச்சிதானந்த ஸ்வரூபினி
சத்+சித்+ஆனந்தம். சத் =நல்ல/பாசிட்டிவ் ; சித் =மனம் . நல்ல மனதில்  திகழும்  ஆனந்தமும் அவளே.

68.சூக்ஷ்ம்னா த்வார மத்யாயை
மூக்கோட ரெண்டு துவாரங்கள் தெரியுமில்லையா? இதுல சுவாசம் நடக்கிறதை வலது  புறம்னா சூரிய நாடி -இடது புறம்னா சந்திர நாடின்னு சொல்றாய்ங்க. (இடா,பிங்களான்னும் சொல்வதுண்டு). மனம் எண்ணங்களால் நிறைந்திருக்கும் போது அந்த எண்ணங்களின் தன்மைக்கேற்ப சுவாசம் மாறும் . எண்ணமே இல்லாத நிலையில சுவாசம் நின்னுரும். (டிக்கெட் இல்லிங்கோ)

ஆனால்  முதுகெலும்புக்குள்ளாற ஒரு பாதை இருக்கு. அந்த பாதை வழியா சுவாசம் நடக்கும்னு யோக சாஸ்திரம் சொல்லுது. அந்த பாதைக்கு சூக்ஷ்ம்ணா நாடின்னு பேரு .த்வாரம் =துளைன்னும் சொல்லலாம் , வாசல்னும் சொல்லலாம்.  தலைவாசலை சிம்ஹத்வாரம்னு சொல்லுவாய்ங்க.

இதையே வேறு வார்த்தைகளில் சொல்ல ட்ரை பண்றேன்.
சுவாசம் இது ரெண்டுலயும் மாறி மாறி நடக்கும். மனசு அலைபாய்வது குறைய குறைய சுவாசத்தின் வேகம் குறையும்.மனசு ஒரே பாய்ண்ட்ல “ஜாம்”ஆயிருச்சுன்னு வைங்க. சுவாசமே நின்னுரும். அந்த நேரம் சுவாசம் இன்னொரு வழிக்கு பை பாஸ் ஆயிருது.அதான் சூக்ஷ்ம்னா நாடின்னு சொல்றாய்ங்க.

எட்டுங்கற எண்ணை தலையில தட்டி மல்லாக்க போட்டு ,காலால  லெஃப்டுக்கு ஒரு உதைவிடுங்க. இப்படியே மேல மேல  நிறைய எட்டுக்களை  ஒன்னு மேல ஒன்னா  லேண்ட்  ஆக செய்தாச்சுன்னா அதான் முதுகெலும்பு.
எட்டுல இருக்கிற ரெண்டு பூஜ்ஜியங்கள் வழியா நிறைய கேபிள் கனெக்சன்லாம் இருக்கு. ஒன்னு அவுட் கோயிங் -அடுத்தது இன் கமிங்குனு அனாட்டமி சொல்லுது.

யோக சாஸ்திரத்துல மேற்படி 2 பூஜ்ஜியத்துக்கும் இடையில ரெம்ப மைன்யூடா ஒரு பூஜ்ஜியம் இருக்கிறதாவும் அதுவழியாத்தான் குண்டலி ட்ராவல் பண்ணுதுன்னும் சொல்றாய்ங்க. இதான் சூக்ஷ்ம்னா துவாரம். துவாரம்னா துளைன்னு அருத்தமில்லிங்ணா. கதவுன்னு அருத்தம். மனசிலாயி?

69.சர்வ ஸ்வதந்த்ரா
100% சுதந்திரமானவளேனு அருத்தம்.. காற்றுக்கென்ன வேலி,கடலுக்கென்ன மூடிங்கற மாதிரி இதுவரை பட்டியலிட்ட நாமாக்களோ -இனி விளக்கப்போற நாமாக்களோ அவற்றுக்கான விளக்கங்களோ அவளை பைண்ட் ஓவர்பண்ண முடியாது.

அனாமிகான்னாலும் அவள் தான். நூறு பேரால ,ஆயிரம் பேரால ஸ்தோத்திரம் பண்ணாலும் அவள் தான். (லலிதா சஹஸ்ர நாமம்) கன்யாகாயைன்னாலும் அவள் தான் ,குமார ஜனனி,கணேச ஜனனின்னாலும் அவள் தான்.

70. ஸ்ரீ சக்ர வாசினி.
இந்த சக்கரங்களை பொருத்தவரை பலர் பலவிதமான வியாக்யானங்கள் கொடுத்திருக்கலாம். நானே கூட மாயா பீஜம் ஜெபிக்க ஆரம்பிச்ச புதுசுல ஸ்ரீ சக்ரம்லாம் வச்சு ட்ரை பண்ணியிருக்கன்.

கடைகள்ள கண்ட சக்கரங்களை வச்சு பூஜை பண்ற சனங்களை “கொய்யால இதெல்லாம் எம்ப்டி சிடி மாதிரி . இதுக்குண்டான மந்திரத்தை நீ லட்சம் தடவை ஜெபிச்சா தான் அந்த மந்திரத்தை சொல்றா தகுதி ஏற்படும். அதுக்கு பிறவு லட்சம் தடவை ஜெபிச்சா வேணம்னா இந்த சக்கரம்லாம் ஒர்க் அவுட் ஆகலாம். இல்லின்னா இதுகள வச்ச இடம் வேஸ்ட்,காசு வேஸ்ட், ஊதுவத்தி வேஸ்டுன்னு பெரியார் தனமா பகுத்தறிவு (?) பிரச்சாரம்லாம் செய்திருக்கன்.

எனக்கென்னமோ போக போக இந்த சக்கரம்லாம் ஸ்தூலமான மேட்டர் இல்லை. குண்டலி எழுச்சி பெற்று ஒவ்வொரு சக்கரத்தை டச் பண்ணும் போது இந்த சக்கரம் போன்ற காட்சிகள் கலர் எஃபெக்டோட  சாதகனுக்கு தெரிஞ்சிருக்கலாம். அந்த சமயம் அவனோட உடல் சில பல அதிர்வுகளை உணர்ந்திருக்கலாம்.

ஞாபகத்துக்கோ அல்லது பிறரின் பால் கருணை காரணமாவோ ஞாபகத்துலருந்து இந்த சக்கரங்களை வரைஞ்சிருக்கலாம். தகட்டுல கீறி கொடுத்திருக்கலாம்ங்கற மாதிரி ஹஞ்ச் வந்துருச்சு. எப்படியோ ஸ்ரீ சக்கரம் தான் எல்லா சக்கரங்களுக்கும் தாத்தா. ஒரு வேளை குண்டலி சஹஸ்ராரத்தை தொடும் போது இதன் வடிவம் சாதகர்களுக்கு மனக்கண் முன்னேதோன்றியிருக்கலாம்.

இந்த ஸ்ரீ சக்கரத்துல வசிப்பவள் ஸ்ரீ சக்கர வாசினி. ஓகேவா.

71.ஸ்வயம் ப்ரகாசாயை
சந்திரன் சூரியனோட ஒளிய கடன் வாங்கி பிரகாசிக்கிறாப்ல இல்லாம சுயமாகவே பிரகாசிப்பவள்.

72.சுர பூஜிதாயை
அசுரன்னா தெரியும் இதுக்கு எதிர்பதம் சுரன். தேவர்களால் பூஜிக்கப்படுபவள். கச கசாவை ப்ராசஸ் பண்ணி ஒரு திரவம் தயாரிச்சு அதை அவாள் குடிப்பாளாம்.அதுக்கு சுரபானம்னு பேரு. சுர பானத்தை அருந்துவோர் சுரர்கள்.அருந்தாதவர்கள் அசுரர்கள்னு கூட சொல்லலாம். சுரபானம் அருந்துபவர்களால் பூஜிக்கப்படுபவள்ங்கறது இந்த  நாமாவோட பொருள்.

73.சுந்தர்யை
சுந்தரம்னா அழகுனு அருத்தம். ஆத்தாவ விட அழகான குட்டி வேற ஆரா இருக்க முடியும்? சிவனை ஆதியோகிம்பாய்ங்க. சுடுகாட்ல பிணத்தை எரிச்ச சாம்பலை உடம்பெல்லாம் பூசிக்கிட்டு ,பூத கணங்களோட க்ரூப் டான்ஸ் ஆடற பார்ட்டி ஈஸ்வரன். அந்த ஈஸ்வரனே கவுந்துட்டாருன்னா ஆத்தா எப்பேர்கொத்த பர்சனாலிட்டியா இருக்கனும். ரோசிங்க.

74.சுக தாயின்யை
சுகத்தை தருபவளே.

75.சனகாதி முனி ஸ்துதாயை
 சனகர் முதலான முனிவர்களால் போற்றிப்புகழப்படுபவளேனு அருத்தம்.

Friday, August 21, 2015

ஸ்ரீ அம்மன் சத நாமாவளி :விளக்கம் (1-25)


அண்ணே வணக்கம்ணே !

எச்சரிக்கை:
இந்த விளக்கம் எனக்கு நானே கொடுத்துக்கிட்டது . இதை ஏற்பவர்கள் ஏற்கலாம்.ஏற்காதவர்கள் தங்கள் விளக்கத்தை கமெண்ட்ல தரலாம் .
நோ ப்ராப்ளம் !

1.அம்பிகாபுர வாசின்யை ஸ்வாஹா
சிவாஜி வசித்த சாலை சிவாஜி கணேசன் சாலையாகிறது , ஒய்.எஸ்.ஆர் வாழ்ந்த  மாவட்டம்  ஒய்.எஸ்.ஆர் மாவட்டம் ஆகிறது .அம்பிகை வசிக்குமிடம் அம்பிகாபுரம்.
அம்பரம் = வான். அம்பிகா = வானில் வசிப்பவள்? வான் போல் உயர்ந்த உள்ளங்களில் வசிப்பவள்னும் சொல்லலாமா?  நிலாவை அம்புலின்னு சொல்றம் .அம்பிகாங்கற வார்த்தைக்கு நிலவின் தேவதைன்னு கூகுள் சொல்லுது.
மனித உடலில் சூரிய மண்டலம் சந்திர மண்டலம்னு இருக்கு . இதெல்லாம் பின்னாடி விரிவா வருது அப்ப பார்த்துக்கலாம். இப்ப பாய்ண்டுக்கு வந்துருவம் .அம்பிகை வசிக்குமிடம் அம்பிகாபுரம். அம்பிகாபுரத்தில் வசிப்பவள் அம்பிகாபுர வாசினி .

2.அன்ன பூர்ணேஸ்வர்யை ஸ்வாஹா
கேடு கெட்ட அரசாங்கம், மனிதமற்ற பொருளாதார நிபுணர்கள் கூட உணவுப்பொருள் குறியீடு குறைஞ்சு போச்சுன்னு பதர்ராய்ங்க. உணவுப்பாதுகாப்பு ,இலவச அரிசி .ஏன்னா அன்னம் இல்லின்னா எமன் கன்னம் வச்சு உயிரை ஆட்டைய போட்டுக்கிட்டு போயிருவான்.
காந்தி,சசி பெருமாள் எல்லாம் எத்தனையோ நாள் உண்ணாவிரதம் இருந்தாய்ங்களேம்பிங்க. அந்த சக்திய கொடுத்தது மனோசக்தி. (சக்தி அண்டர்லைன்)
பூரணம் =முழுமை ,அன்ன பூரணம் பூரணமான அன்னம் .அதாங்க முழுமையான சத்துணவுங்கறாய்ங்களே.. அதுக்கு ஈஸ்வரி  ஆத்தா.
ஈஸ்வரன்னா பாஸ். ஈஸ்வரின்னா லேடி பாஸ். காசிருக்கேன்னு  365 நாளும் - 3 வேளையும்  அரிசி சோறு  சாப்டு ஷூகரு,பீசா பர்கரு சாப்டு  நெஞ்சுல எரிச்சல்,பைல்ஸ் வாங்கறதுல்ல. திட்டமிட்ட சரிவிகித சம உணவு . இதுக்கு பேருதான் முழுமையான உணவு . இந்த முழுமையான  உணவுக்கு  தலைவி ஆத்தா.

3.அகிலாண்டேஸ்வரி
அண்டம்னா உலகம், அகிலாண்டம் சகல உலகங்கள். சகல உலகங்களுக்கும் பாஸ்.

4.அம்ருத்தாயை
அம்ருதம் =அமுதம் , சாகாவரம் கொடுக்கிற லிக்விட்.  டீ சாப்பிடறவனோட நட்பு கிடைச்சா டீ கிடைக்கும். சரக்கு பார்ட்டியோட சேர்ந்தா சரக்கு கிடைக்கும்.ஆத்தா கூட டீல் வச்சுக்கிட்டா அமுதம் கிடைக்கும் பாஸ்.
அதுக்காவ 120 பூர்ணாயுசு  இருப்பம், சாவே வராதுன்னெல்லாம் கனவு காணாதிங்க. நொடிக்கு நொடி செத்து பிழைக்கிறோமே அந்த “பாவத்து” இருக்காது.  நம்ம பிறப்புக்கு முன்னே -இறப்புக்கு பின்னே எந்த டைமன்ஷன்ல இருந்தமோ -இருக்கப்போறமோ அந்த டைமன்ஷனை ஒரு தாட்டி அனுபவிச்சுடா சாவாவது இன்னொன்னாவது?

ஆக ஆத்தாள “கவர் பண்ணி “வச்சுக்கிட்டா உங்க எண்ணத்துல அமுதம் இருக்கும், எண்ணமெல்லாம் செயலாகும். உங்க  பேச்சுல அமுதம் இருக்கும், உங்க பேச்சு கவர்ன்மென்ட் ஜீ.ஓ வை விட பக்காவா அமலாகும். பிணத்துக்கு உயிரூட்டும்னு பீலா விட மாட்டேன்.ஆனால் செத்தவன் போல இருந்தவன் கூட துள்ளி எழுவான். வாக்கு பலிதம் உண்டாகும்.

5.ஆர்த்த ஜன ரக்ஷின்யை
ஆர்த்த = உதவி நாடி வந்த சனங்களை சேஃப் பண்றவ. அன்னார்த்துலு = சோத்துக்கு இல்லாதவுக

6.ஆத்யந்த சிவ ரூபாயை
ஆதி =ஆரம்பம், அந்தம் =முடிவு ,டாப் டு பாட்டம் சிவ ரூபமாக இருக்கிறவள். சிவம்னா ஒரு கேரக்டர் மட்டுமில்லிங்ணா. சிவம்னா மங்களம்/சுபம்/பாசிட்டிவ் இப்படி பல அருத்தம் இருக்கு. ஆத்தாவுல நெகட்டிவ்னு எதுனா இருக்குமா? டாப் டு பாட்டம் பாசிட்டிவ் எனர்ஜிதான்.
புருசன் பொஞ்சாதிகளை கவனிச்சு பாருங்க. கண்ணாலமான 6 மாசத்துலயே புருசன் கேரக்டர் பொஞ்சாதிக்கும் -பொஞ்சாதி கேரக்டர் புருசனுக்கும் லேசா ட்ரான்ஸ்ஃபர் ஆக ஆரம்பிச்சிருக்கும்.
அய்யனும் ஆத்தாளும் ஆதி தம்பதிகளாச்சே. அதான் சிவ ரூபமா இருக்கா ஆத்தா.

7.அஷ்டைஸ்வர்ய ப்ரதாயின்யை
ப்ரதாயினின்னா தருபவளேன்னு அருத்தம். எதை தருபவள்? அஷ்ட ஐஸ்வர்யங்களை தருபவள். அஷ்ட லட்சுமின்னு ஒரு கான்செப்ட் இருக்கில்லை. வித்யா லட்சுமி,தன லட்சுமி,வீர லட்சுமி,சந்தான லட்சுமி எட்செட்ரா..( ஷோடச லட்சுமின்னு ஒரு கான்செப்ட் கூட இருக்குப்போ – 16 லட்சுமியாம் -16 ம் பெற்று பெரு வாழ்வு வாழசொல்றாய்ங்களே அதுதான் போல)

லட்சுமியை படைச்சதே ஆத்தா தானே. நிலக்கரித்துறைக்கு அமைச்சரை போட்ட மன்மோகனார் நினைச்சா கோல் ப்ளாக் டைரக்டா அலாட் பண்ணலாம் தானே.

8.அபய வரத ஹஸ்தின்யை
அபயம்னா என்ன பயத்துக்கு எதிர்பதம். பயமில்லா நிலை. பயத்துல உள்ளவனுக்கு அபயம் கொடுத்தா பயமற்ற நிலை ஏற்படும். இப்படி அபயம் கொடுக்கிற கைக்காரி ஆத்தா.
வரதம்னா வரம் கொடுக்கிறன்னு அருத்தம்.

9.அனாமிகா
பெயரற்றவள். கொய்யா.. இந்த சத நாமாவளியிலயே 100 பேர் இருக்கு. இன்னம் சஹஸ்ர  நாமம்னா ஆயிரம் பேரு. ஆனால் அனாமிகான்னு ஒரு நாமம்.  மனித மூளை தர்கத்தின் அடிப்படையில இயங்கும். ஆனால் ஆன்மீகத்துல தர்கத்துக்கு "தாவே" கிடையாதுங்கோ.

10.அங்காள பரமேஸ்வர்யை
அம்=குளிர்ந்த ,காள (மேகம்?) மழைதரும் கரிய மேகங்களுக்கு தலைவி?

11.அனந்தமயீ
அந்தம் =முடிவு ,அனந்தம்= முடிவற்றவள்

12.ஆத்யந்த ரஹிதாயை
ஆரம்பமும் -முடிவும் அற்றவள்.

13.அருணாயை
அருணன் =சூரியன் இதுக்கு இன்னொரு அர்த்தமும் கொடுக்கலாம்.ருணம் =கடன் ,அருணா =எவனுக்கும் ஆத்தா பாக்கி கிடையாதுங்கோ.
நாமெல்லாம் ஆருக்கோ கடன் பட்டுத்தான் – அந்த கடனை தீர்க்கத்தான் பிறந்து வரோம்.  ஆனால் கடனை கூட்டிக்கிட்டே போறோம்.ஆனால் ஆத்தாவுக்கு கடனே கிடையாது. போனா போறதுன்னு பிச்சை போடறா தட்ஸால். ஆத்துக்காரருக்கே பிச்சை போட்ட கிராக்கியாச்சே.

14.பால பீட அதிரோஹின்யை
தச வித்யானு ஒரு சப்ஜெக்ட் இருக்கு.காளி , தாரா ,பகளாமுகி ,கமலாத்மிகா ,சின்னமஸ்தா, தூமாவதி, திரிபுரா, பைரவி ,சுந்தரி ,புவனேஸ்வரினுட்டு  பத்து ரூபங்கள்ள ஆத்தாளை வழிபடறது தான் கான்செப்ட்.
இதுல ஒரு  பெண் குழந்தையை அம்மனா பாவிச்சு வணங்கறதும் ஒரு மெத்தட். ( இந்த டாப்பிக் பத்தி பாலகுமாரன் ரெம்ப டீட்டெய்ல்டா ஒரு நாவல் எழுதியிருக்காரு படிச்சிருக்கிங்களா?) அந்த பெண் குழந்தையை உட்கார வைக்கிற மனைக்கு பெயர் பால பீடம். அதிரோஹணம்னா ஏறுவது. பால பீடத்தின் மீது ஏறுபவளேனு அருத்தம்.

15.பஹளா முக்கே
Net ல ப்ரவுஸ் பண்ணா வேற தகவல் கிடைக்கும். ஆனால் நமக்கு மாயா பீஜத்தை உபதேசம் பண்ண பார்ட்டி ,ஆத்தாவோட இந்த வடிவம் பேங்க்ல டெல்லர் மாதிரி. நாம எந்த சாமியை கும்பிட்டாலும் அதுக்கான பலனை தர்ரது இந்த உருவத்துலதான்னு சொன்னாரு.
பஹளா =பல ,முக்கே =முகங்கள். பல முகங்களை உடையவளே

16.பில்வ வன ப்ரியே
ஆத்தாவோட ஆத்துக்காரரு சிவனார். சிவனாருக்கு ரெம்ப பிடிச்சது வில்வம். மேலும் அர்த்த நாரீஸ்வர தத்துவம் தெரியுமில்லையா? திருவிளையாடல்ல சிவன் தன் பாடியிலயே இடபாகத்தை அலாட் பண்ணி மகளிர் ஒதுக்கீட்டுக்கு பிள்ளையார் சுழி போடறாரே ஞா வல்ல?
இதனால வில்வ மரங்கள் அடர்ந்த வனத்தை விரும்புபவள்னு அருத்தம்.

17.புவனேஸ்வர்யை
புவனம் =உலகம் ஈஸ்வரி =தலைவி

18.பிந்து ஸ்வரூபின்யை
ஆழ்ந்த தியானத்துல ஒரு ஒளி புள்ளி தெரியும் இதை பிந்துன்னு சொல்வாய்ங்க. அந்த பிந்து ஸ்வரூபமானவளே

19.சண்டிகாயை
சண்டன் ங்கற ராட்சனை போட்டு தள்ளியவளே.  நம்ம வீட்ல தாய்க்குலம் குழந்தைகளை "சண்டித்தனம் பண்ணாதே"ம்பாய்ங்களே ஞா வருதா?  ஆத்தாவுக்கு சண்டித்தனம் உண்டு.  ஆத்தா மேட்டர்ல எதுனா கமிட் ஆகி அதை டீல்ல விட்டாச்சுன்னா அது ஞா வர்ர வரை லைனுக்கே வராம சண்டித்தனம் பண்ணுவோ.

20.சாமுண்டேஸ்வர்யை
சாமுண்டன் ங்கற ராட்சனை போட்டு தள்ளியவளே

21.சந்திர மண்டல வாசின்யை
பால்வெளியில உள்ள சந்திரமண்டலத்துல இருப்பவளேன்னா அது ரெம்ப அற்பமா இருக்கும். ஹ்யூமன் பாடியில ஆண்களை பொருத்தவரை வலது பாகம் சூரிய மண்டலம், இடது பாகம் சந்திர மண்டலம். பெண்கள் விஷயத்துல இதுல உல்ட்டா.
ஆக ஒவ்வொரு பாடியில ஒரு பார்ட் ஆஃப் தி பாடியை கேப்சர் பண்ணி வச்சிருக்கிறவன்னு சொல்லலாம்.
ஆண்கள் தம் இடது  நாசியில் சுவாசம் நடக்கும் போது ஆத்தாவ தியானிக்கலாம். சுவாசத்தை அடுத்த பகத்துக்கு மாத்தற டெக்னிக் தெரிஞ்சவுகளுக்கு  பிரச்சினையே இல்லை.தூள் பண்ணுங்க.

22.சதுர் சஷ்டி கலாத்மிகா
சதுர் =4 , சஷ்டி =ஆறு நாலாறு 24 ஆ? 4+6 =10 ஆ? பண்டிதர்கள் ஆராவது க்ளாரிஃபை பண்ண கடவர்.. ஆக 24 /10 கலைகளின் ஆத்மாவாக இருப்பவளே

23.துர்காயை
துர்கா =கோட்டை , கோட்டைக்குள்ள எப்படி சேஃபா இருப்பமோ அப்படி ஆத்தா கஸ்டடிக்கு போய்ட்டா ஜெட் கேட்டகிரி செக்யூரிட்டில்லாம் தேவையே இல்லிங்ணா. பாதுகாப்பை தரும் கோட்டையே

24.தர்ம ரூப்பிண்யை
தர்மத்தின் வடிவானவள். தர்மம்னா நாலணா எட்டணா பிச்சை போடறது தர்மமில்லை. இந்து தர்மம்,புத்த தர்மம்னு வாய்ங்க அதெல்லாம் டுபுக்கு.கீதையில கிருஷ்ணர் சொல்றார் பாருங்க ஸ்வதர்மம்,பரதர்மம்னு அதை கூட என் மதம்,பிற மதம்னு அர்த்தப்படுத்திக்க கூடாது.
தர்மம்னா இயல்புன்னு அருத்தம். பள்ளத்தை நோக்கி பாய்வது ஜல தர்மம் . தலை கீழாய் பிடித்தாலும் மேல் நோக்கியே எரிவது நெருப்பின் தர்மம்.
ஆக உங்கள் இயல்பு எதுவோ அதுவாக இருப்பவளும் ஆத்தா தான்.

25.தேவ்யை
தேவனுக்கு பெண் பால் தேவி.

Saturday, June 7, 2014

எம்.எல்.ஏ சார் நம்ம காதோடு சொன்ன மேட்டரு..


அண்ணே வணக்கம்ணே !
 நம்ம பதிவுகள்ளயும் - முக நூல் நிலை செய்திகளிலும் அப்பப்போ எங்க எம்.எல்.ஏ னு பீத்திக்கிறத கவனிச்சிருப்பிங்க. ஏதோ 2009 எலீக்சன்ல ஏப்ரல் 7 லருந்து 21 வரை ஒரு 14 நாள் டெய்லி பார்த்ததுண்டே தவிர பேசி பழகறது இத்யாதிக்கெல்லாம் சான்ஸே கிடையாது.

நாம போடற லோக்கல் தெலுங்கு பேப்பர் சார்பில் அவரோட ஆதரவாளர்கள் ஸ்பான்சர்ஷிப்போட அப்பப்போ எதையாச்சும் போட்டு சனங்களுக்கு கொடுக்கறது வழக்கம்.

அதுல எதாச்சும் முக்கியமானதா -ஹை பட்ஜெட் ஐட்டமா இருந்தா அவரை பிடிச்சு ஒப்புத்துக்க வச்சு ஓப்பன் பண்ண வைக்கறது உண்டு. அதுக்கும் செமையா கலாய்ப்பாரு "ஏன்யா என் படம் போட்ட காலண்டரை நானே ஓப்பன் பண்ணா நல்லாவா இருக்கும்" அது இதுன்னு எஸ் ஆகவே பார்ப்பாரு. எப்படியோ கோஞ்சாடி வேலை முடிக்கிறது.

நாம அவரை சந்திக்கிற அரிதிலும் அரிதான அந்த மினட்ல நடக்கிற கான்வெர்சேஷனை ஒரு போஸ்டல் ஸ்டாம்ப் பின்னால எழுதிரலாம்.
ஒரு தாட்டி மட்டும் செம கலாய்ப்பு. மேட்டருக்கு வரேன்.
சமீபத்துல ஸ்ரீ அம்மன் சத நாமாவளி பொருள் விளக்கம்னு ஒரு குறுந்தொடரை எழுதினம். ஞா இருக்குல்ல? ஒரு தசராவுக்கு மேற்படி நாமாவளியை பாக்கெட் புக்கா போட்டு சனங்களுக்கு கொடுக்கிறதா ப்ளான் பண்ணி ரெடி பண்ணிட்டம். அவர்ட்ட போயி கொடுத்தம் . ஓப்பன் பண்ணிட்டாரு.

சத நாமாவளி மேட்டர் எல்லாம் ப்ளாக் அண்ட் வைட்லயும் அவரோட ஆதரவாளர்கள் கொடுத்த விளம்பரங்கள் எல்லாம் மல்ட்டிக்கலர்லயும் இருந்தது. இதை பார்த்துட்டு கச்சேரிய ஆரம்பிச்சாரு.

கொஞ்ச தூரத்துல  ரூரல் சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கு சேர் போட்டு வெயிட்டிங்ல வச்சிருக்காய்ங்க. ரேப்பர்ல அம்மன் படம் கீழே சின்னதா பாக்ஸ் போட்டு ஸ்பான்ஸர்ட் பை சி.கே.ஃபேன்ஸ்னு போட்டிருந்தம் டப்பாவுக்குள்ள குட்டியா அவரோட ஃபோட்டோ.

சின்ன பசங்களை கேட்கிறாப்ல அம்மன் படத்தை காட்டி
"இது யாரு"
"அம்மன் சார்"
தன் படத்தை காட்டி "இவன் யாரு?"
"நீங்க சார்"
"இதுல என் ஃபோட்டோ ஏன் வருது?"
"உங்க ஃபேன்ஸ் தான் இந்த பாக்கெட் புக்கை ஸ்பான்சர் பண்ணியிருக்காங்க"
"அப்ப அவங்க படங்களை போட வேண்டியதுதானே"
"சார் ..அவிக மொத்தம் 32 பேர் இருக்காங்க சார். எல்லார் படத்தையும் ரேப்பர்ல போட முடியாதே "
"சரி .. சத நாமாவளி ப்ளாக் அண்ட் வைட்ல வந்திருக்கு .விளம்பரம்லாம் கலர்ல வந்திருக்கு..இது சரியா?"

"சார் .. அவிக காசு கொடுத்து விளம்பரம் போட்டுக்கறாங்க"

"அப்போ ..அம்மன் காசு கொடுத்தாதான் சத  நாமாவளி கலர்ல வருமா?"
இங்கே ஷாட் கட் பண்ணிக்கலாம்.  நம்ம நெடு நாள் க்ளையண்டு விமலாதித்தன். மேற்படி தசரா பிரசுரத்தை பத்தி போற போக்குல நாம ஒரு ஸ்டேட்டஸ் போட படக்கு ரூ.10 ஆயிரத்தை நம்ம அக்கவுண்டுக்கு மாத்தி விட்டுட்டாரு.

நாம அலறியடிச்சு ..அய்யா நான் போட போறது தெலுங்குல -அதையும் எங்க ஊர் சனங்களுக்கு கொடுக்கிறதா தான் ப்ளான். அதுக்கு ஸ்பான்சரர்ஸ் எல்லாம் ரெடி . நான் சும்மா தகவலுக்காக போட்ட ஸ்டேட்டஸ பார்த்துட்டு இப்டி காசை போட்டுட்டிங்களேன்னு பம்மினேன். ஏன் சார் தமிழ்ல போடக்கூடாதா? தமிழ் மக்களும் தெரிஞ்சுக்கலாமில்லையான்னாரு.
விமல் மட்டுமில்லை இன்னும் சிலரும் அப்போ கான்ட்ரிப்யூட் பண்ணாய்ங்க. லண்டன்ல இருக்கிற ஒரு ரெட்டியாரு, திருவாளர்கள் துரை பாண்டியன், மருதப்பன்,அருள்ராஜ்குமார்,கஜபதி ,கோபி நாத் சிதம்பரம் இவிக கொடுத்த காசுக்கெல்லாம் பேப்பர் வாங்கி போட்டு ஓட்டு ஓட்டுன்னு ஓட்டியாச்சு. வீடே ப்ரஸ் மாதிரி ஆயிருச்சு.

அச்சாயிட்டா போதுமா? சனங்களுக்கு போய் சேரனுமே? என்னடா பண்றதுன்னு புலம்பிக்கிட்டிருந்தப்போ நம்ம லோக்கல் நகைக்கடைக்காரர் ஒருத்தரு கிருஷ்ணகிரி வரை போகனும் சும்மா இருந்தா வாய்யான்னாரு. கார் பயணம். ஒடனே நம்ம மேட்டரை சொன்னேன். இவ்ளதானே மூட்டைகளை ஏத்து.பையன் ஒருத்தனை பிக் அப் பண்ணிக்க. போறச்ச நேர கிருஷ்ணகிரி போயிரலாம். வரச்ச எத்தனை ஊரு இருக்கோ எல்லாம் ஊருலயும் நிறுத்த சொல்றேன்.பையன் கொடுக்கட்டும்னுட்டாரு.

இப்படி ரெண்டு தபா போனோம். மேட்டர் ஓவரு. தீர்பாடா உட்கார்ந்து கணக்கு பார்த்தா சனங்க கொடுத்த காசுக்கு இன்னம் 1492 பிரதி போட்டிருக்கனும். சரி அடுத்த மாசம் போட்டுரலாம்னு விட்டன். இதோ வருசங்களே ஓடிருச்சு. இதுக்கு வட்டி போல சொந்த செலவுல ஒரு ரெண்டாயிரம் பிரதி போட்டுரலாம்னு சில வாரங்களாவே ஒரு ஐடியா.

இதுல எம்.எல்.ஏ விட்ட "பொளேர்" வேற ஞாபகத்துல க்ளாஷ் ஆகுது. ஆத்தா காசு கொடுத்தாதான் சத நாமாவளி மல்ட்டி கலர்ல வருமா? ஏன் நாமளே மல்ட்டி கலர்ல போடக்கூடாது? பட்ஜெட் தாங்குமாங்கற சந்தேகம் ஒரு பக்கம். புக் மேக்கிங் மேன்யுவலா பண்றதால காஸ்ட் அதிகம்.இதை விட பெரிய சவால் அதை மக்களுக்கு கொண்டு சேர்க்கறதுதான். இப்படி குழப்பிக்கிட்டிருந்த சமயம்

 ரெண்டு நாளைக்கு மின்னே  விமலாதித்தன் ஃபோன் பண்ணாரு "சார் ! மறுபடி சத நாமாவளி போடற ஐடியா இருக்கா?"

ஏற்கெனவே நீண்ட நெடும்பயணம் போயி டாரா கிளிஞ்சு கிடந்தோமா? கொய்யால மறுபடி பயணமா ஆள விடுங்கற ஃபீல் தான் வந்தது. "இல்லை சார்.. நானே ஒரு 1,492 பிரதி பாக்கி -அதை போடவே ரோசிக்கிறேன். டிஸ்ட் ரிப்யூஷன் தான் பிரச்சினை" என்று கழண்டு கிட்டேன்.
ஒரு நெல்ல காரியத்துக்கு காசு கொடுக்கிறேனு ஒருத்தர் முன்வரதே கஷ்டம்.அதை கூட தடுத்துட்டமேனு ஃபீல் ஆச்சு.

எல்லாத்தையும் பைசல் பண்றாப்ல ஒரு ப்ளான் பண்ணியிருக்கன்.
இந்த சத நாமாவளி மேட்டர்ல பங்கெடுத்தவுக எல்லாருக்குமே ஏதோ ஒரு வகையில ஒரு லிஃப்ட் கிடைச்சிருக்கு. அது தெரியும். ச்சும்மா டிசைன் பண்ண என் மவளுக்கே அஞ்சு வருசமா இழுத்துக்கிட்டிருந்த கண்ணாலம் கால் காசு கடனில்லாம ஆயிருச்சுன்னா பாருங்களேன். ஆகவே இந்த வேலைய செய்றது வெட்டியில்ல. லைன் க்ளியர்.

புக் மேக்கிங் ப்ராசசை அவாய்ட் பண்ணனும்னா ப்ரவுச்சர் மாதிரி போட்டுரலாம். புக் மேக்கிங் ப்ராசஸ் காஸ்டுக்கு மல்ட்டி கலர்லயே போட்டுரலாம்.

2000 பிரதி ப்ளாக் அண்ட் வைட்ல போடறதுக்குண்டான காஸ்ட் என்னவோ அதை நான் கான்ட் ரிப்யூட் பண்ணிர்ரன். இது வரை ஓகே.

அடுத்த கண்டம் வினியோகம். இங்க தான் உங்க உதவி தேவைப்படுது. வெள்ளிக்கிழமைகள்ள ராகு காலத்துல எப்படியும் அம்மன் கோவில்ல கூட்டம் அம்மும். அந்த சமயம் யாராச்சும் பையனுக்கு நூறோ நூத்தம்பதோ கொடுத்து நிப்பாட்டிட்டா பக்தாளுக்கு கொடுத்து தீர்த்துருவான்.

அந்த காசு பிரச்சினை இல்லை. நானே அனுப்பி வச்சுர்ரன். பிரவுச்சர் கணக்கா ப்ரிண்ட் ஆன சத நாமாவளியை கூரியர்ல அனுப்பிரலாம்.
ஆனால் பிரதிகளை வீணடிக்காம, பொறுப்பா,சரியான ஆள பிடிச்சு வினியோகம் பண்ண வைக்கனுமே.அதுக்கு யார் தயார்?
ஜஸ்ட் ஒரு பத்து பேர் நான் ரெடின்னா போதும் வேலைய ஆரம்பிச்சுரலாம். நான் ரெடி . நீங்க ரெடியா?

நீங்க ரெடியான பிற்காடு விமலுக்கு தகவல் சொல்றேன். ஆரும் ரெடியில்லின்னா நான் பாக்கியா இருக்கிற 2000 பிரதிகளை ப்ளாக் அண்ட் வைட்லயே புக்கா போட்டு வச்சுக்கிட்டு வாய்ப்பு கிடைக்கிறப்பல்லாம் -தமிழ் நாடு பக்கம் போறப்பல்லாம் நானே வினியோகம் பண்ணி கடனை கழிச்சுர்ரன். அவ்ள தானே உடுங்க ஜூட்டு.

எச்சரிக்கை:
எம்.எல்.ஏ என் கிட்ட ரகசியம் பேசினதால - அதுவும் சர்க்கிள் இன்ஸ்பெக்டரை வெய்ட்டிங்குல வச்சு பேசினதால ஒரு அபலைக்கு நீதி கிடைச்சது தனி கதை. அதை கேட்டவுகளுக்கு சொல்றேன்.