Monday, June 23, 2014

மோடிக்கு சில ரோசனைகள்

அண்ணே வணக்கம்ணே !
முக நூல்ல சில நாட்களுக்கு மிந்தி நான் பிரதமராகியிருந்தாங்கற தலைப்புல சில ஐடியாக்களை அள்ளி விட்டிருந்தம்.

அந்தத பட்டியலை கீழே தந்திருக்கன். கொஞ்சம் போல அப்டேட் பண்ணியிருக்கன். ஆருனா இதை இங்கிலீஷ்ல டப்பிங் பண்ணி போட்டா புண்ணியமா போகும்.

இதை எல்லாம் படிச்சுட்டு அட இதெல்லாம் நமக்கு தோனலியேன்னு சிலருக்கு தோனும்.பலர் அட நாம கூட இப்படி எல்லாம் ஒரு சந்தர்ப்பத்துல நினைச்சிருக்கமேன்னு தோனும்.

நான் கொடுத்திருக்கிற ஐடியா எல்லாம் ஒன்னும் கம்ப சூத்திரம் இல்லை.  இந்த மாதிரி ஐடியால்லாம் வரனும் -தொகுத்து எழுதனும்னா மனசு இருக்கனும். எல்லாரும் நல்லாருக்கனும்ங்கற மனசு இருக்கனும் .அவ்ளதான்.

க்ளோபல் வில்லேஜுங்கறாய்ங்க. உலகமே தெப்பக்குளம் மாதிரி ஆயிருச்சு. எவனோ ஒரு பன்னாடை ஒரு கூழாங்கல்லை தூக்கி போட்டா அலை உங்க படித்துறைக்கும் வரும். டீசல் விலை ஏறினா எனக்கென்ன? ரயில் கட்டணம் ஏறினா எனக்கென்னனு இருக்க முடியாது.

ஒரு முட்டாள் அரசாங்கத்தோட முட்டாள் தனமான முடிவு  நம்ம எல்லாரையும்  நேரிடையா -உடனடியா பாதிக்கும். பெட் ரூம் வரை -கழிவறை வரை வந்து பாதிக்கும்.

இந்த ரோசனைகளை ஆருனா ட்ரான்ஸ்லேட் பண்ணா அதை மோதிஜிக்கு அனுப்பலாம்னு ஒரு கெட்ட எண்ணம்.

பெரீ மன்சங்களுக்கு லெட்டர் போட்டா பதில் வரும்ங்கற தவறான நம்பிக்கையை கொடுத்தது என்.டி.ஆர். ஆப்புமேல ஆப்படிச்சா பதில் வந்தே தீரும்ங்கற நம்பிக்கைய கொடுத்தது சந்திரபாபு.

நீ தலைகீழ நின்னு ரசத்துல மூஞ்சி கழுவினாலும் வராதுன்னு சொல்லாம சொன்னது மம்மி . மோடி என்ன சொல்லப்போறாரு? என்னமாதிரி அனுபவத்தை கொடுக்கப்போறாருன்னு பார்க்கத்தானே போறேன்.

நிர்வாகம்னா அது ஒன்னும் மோடி மஸ்தான் வேலை இல்லை.  கொஞ்சம் தில் வேணம். தில்லுன்னா தகிரியம்னு தெரியும். தில்லுன்னா மனசுன்னு கூட ஒரு அருத்தம் இருக்கு.

சீர் திருத்தம்னு இறங்கிட்டா ஒவ்வொரு அடியையும் சாக்கிரதையா எடுத்து வைக்கனும்.இருக்கிற ஊழியர்களை ஒரு ரேஞ்சுக்கு கொண்டு வரனும்னா மொதல்ல ஆல்ட்டர்னேட்டிவ் அரேஞ்ச் பண்ணிக்கனும்.

காலி இடத்தை எல்லாம் போர்கால அடிப்படையில நிரப்பனும். அவிகளுக்கு உரிய பயிற்சி கொடுக்கனும். புதுசா சேர்ந்தவன் புதுசா இருக்கும் போதே பழைய ஒட்டடைய எல்லாம் தட்டனும்.வேலை நிறுத்தம் அது இதுன்னு இறங்கினாலும் புது வெள்ளத்தை வச்சு சமாளிக்கனும்.

நிர்வாகம்னா பாராளுமன்றமோ -தலைமை செயலகமோ -அங்கன குப்பை தொட்டி வைக்கிறதோ இல்லை. நிர்வாகம்னா மக்கள் பார்வையில  எது நிர்வாகம்னு தெரிஞ்சுக்கனும்.

மக்கள்னா வங்கிக்கடன் வாங்கி லக்சரி டீசல் கார் வச்சிருக்கிறவனும் மக்கள் தான்.ஆனால் அவனை கொஞ்சம் தீர்ப்பாட்டா கவனிக்கலாம்.

டாப் ப்ரியாரிட்டி நடை பாதி வாசி. குடிசை வாசி, ஒண்டு குடித்தனவாசி,

விசிட்டிங் கார்டோ ,பெரீ மன்சங்க லெட்டர் பேடோ ,கார்ப்பரேட் கம்பெனி ஐடியோ இல்லாத அவனை பொருத்தவரை அரசாங்கம்னா லட்டியில தட்டி "யார்ரா நீ"ங்கற போலீஸ் காரர் தான்.

சனத்தை பொருத்தவரை அவன் தினசரி புழங்கற இடம் , வாரம் ஒரு தாட்டி அல்லது மாசம் ஒரு தாட்டி விசிட் அடிக்கிற இடம் பர்ஃபெக்டா இருந்தா போதும் .

அது போலீஸ் ஸ்டேஷனா இருந்தாலும் சரி . தாலுக்காஃபீஸ், கரண்டாஃபீஸ், போஸ்டாஃபீஸ், காய்கறி மார்க்கெட்,அவன் பிள்ளை படிக்கிற ஸ்கூலு .இப்பிடி ஒரு லிஸ்டை போட்டா மொத்தமே இருபது இருபத்தஞ்சு தான் வரும். அந்த இடங்களை ஆசிட் ஊத்தி கழுவி சென்டட் ஃபெனாயில் போட்டு வச்சுட்டா போதும் "சீமான்யா.. என்னமா ஆட்சி நடத்தறான்"னு சொல்ட்டு போயிக்கினே இருப்பாய்ங்க.

இப்பம் " நான் பிரதமாராகியிருந்தா"ங்கற  தலைப்புல கொடுத்திருந்த ஐடியாக்களை பாருங்க.

பாராளுமன்றம்,ஜனாதிபதி மாளிகை,பிரதமர் இல்லம் மூன்றையும் க்ளோபல் டென்டர் மூலம் 99 வருடங்களுக்கு லீசுக்கு விட்டிருப்பன்.
தற்போதைய கரன்சி ரத்து -புதிய கரன்சி அறிமுகம் (கருப்பு பணத்துக்கு காயடிப்பு)

10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் சிறப்பு ராணுவம் கொண்டு நதிகள் இணைப்பு -கூட்டுறவு பண்ணை விவசாயம்

நம் வசம் உள்ள காஷ்மீர் பகுதியை ஐ.நா நடவடிக்கைகளுக்கு ஒதுக்கி அதன் பாதுகாப்பை சர்வதேச ராணுவத்துக்கு ஒப்படைப்பு.( சீனா விஷயத்திலும் இதே ஃபார்முலா) அவர்கள் வசம் உள்ள நிலப்பகுதியையும் ஐ. நா நடவடிக்கைகளுக்கு ஒதுக்க சொல்லி அழுத்தம்.
வழிக்கு வரலின்னா சீனா,பாக்கிஸ்தான்,இலங்கை மீது பொருளாதார தடை,ராஜீய உறவுகள் கட்

ராணுவத்துக்கு நதி நீர் இணைப்பில் பங்கு .நதி நீர் இணைப்பில் முதலீடு செய்யும் அன்னிய நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதி.

இந்த நாட்டின் தொழில் விவசாயம்-நாட்டின் அனைத்து சக்தியும் விவசாய மேம்பாட்டிற்கு திருப்பி விடப்படும்.அடுத்த முக்கியத்துவம் விவசாயம் சார்ந்த தொழில்கள்,விவசாய உற்பத்திகள் ஏற்றுமதி

ஒவ்வொரு குடிமகனுக்கும் உயிர் பாதுகாப்பு,உணவு,உடை,இருப்பிடம் செக்ஸுக்கு உத்திரவாதம்.பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி

அனைத்து மானிலங்களிலும் தலா ஒரு மாதம் பிரதமர்,தலைமை செயலகம் செயல்படும் (டிஜிட்டல் மயமாக்கி விடுவதால் மனிதர்கள் மட்டும் ரயிலை பிடிச்சு போனா போதும்.

பூரண மதுவிலக்கு -போதை பொருட்களுக்கு தடை
ஒரு வருடத்துக்கு மேற்படிப்புகள்,தொழிற்கல்விக்கு தடை - ஆஃப்டர் அப்டேஷன் ஒன்லி ரீ ஸ்டார்ட்.

படிச்சவனுக்கு அவன் படிச்ச நிறுவனமே வேலை கொடுக்க சட்டம்

ஆறுகள் எத்தனை சின்னதாய் இருந்தாலும் ராணுவம் கொண்டு மீட்பு , கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டால் அன்றி நதியில் விட தடை. சட்டத்தை மீறினால் கொலை வழக்கு பதிவு

பள்ளிகள், கல்லூரிகள்,ஹாஸ்டல்கள்,பிரார்த்தனை ஸ்தலங்கள்,அரசு அலுவலகங்களுக்கு தேவையான மின்சாரத்தை அவிகளே ஜெனரேட் பண்ணிக்கனும் . (சோலார்,பயோ கியாஸ்,காற்றாலை)

பெட்ரோலுடன் எத்தனால் கலந்து உபயோகிக்க அனுமதி.லக்சரி கார்களுக்கு மானிய விலை டீசல் கட்.

பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டுக்கு டாப் ப்ரியாரிட்டி.வாரத்துல ஒரு நாள் மாசு எதிர்ப்பு தினம். அன்று பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் தவிர்த்து அனைத்து  வாகனங்களுக்கும் தடை .

அரசு அலுவலகங்களில் காகிதங்களுக்கு தடை. நிருபர்கள்,பொதுமக்களுக்கு தகவல் தர மட்டுமே காகிதம்.மற்றபடி அனைத்தும் டிஜிட்டல் மயம்
பீக் ஹவர்ஸில் ஃபோர் வீலர்களுக்கு தடை .18+ வயதுள்ள வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் அனைவருக்கும் இலவச சைக்கிள்.சைக்கிள்களுக்கு மெயின் ட்ராக்

மத,ஆன்மீக நடவடிக்கைகளுக்கு உடலுறவு போன்று சாத்திய கதவுகளுக்குள் மட்டுமே அனுமதி .

கிராமங்கள் உற்பத்தி மையங்களாய்,நகரங்கள் விற்பனை மையங்களாய்
காவலர் பணியிடங்கள் நிரப்புதல் - அப்டேட்டட் ட்ரெய்னிங். 3 மாதங்களில் மொத்த பணியிடங்கள் போல் மேலும் இரண்டு மடங்கு ஆளெடுப்பு. ஷிஃப்ட் சிஸ்டம். காவல் நிலையங்களில் சிசி கேமரா.

அனைத்து மத்திய,மானில அரசு ஊழியர்களுக்கும் மெடிக்கல் டெஸ்ட். ஃபெய்ல் ஆனவுக வீட்டுக்கு. காலியிடங்கள் அனைத்தும் நிரப்புதல்.
ஒவ்வொரு அரசு ஊழியனையும் அரசே தத்தெடுக்கும். A to Z அரசே வழங்கும். பார்த்துக்கொள்ளும்.

லஞ்சம் வாங்கினால் ரிமூவ்ட் ஃப்ரம் சர்வீஸ்

வருடத்தின் 11 மாதங்கள் உழைத்தவர்களுக்கு மட்டும் 1 மாதம் சுற்றுலா அனுமதி .(ஆன்மீக சுற்றுலாவுக்கும் இதுவே விதி)

நோய் தடுப்பு,குற்ற தடுப்பு,விபத்து தடுப்புக்கு டாப் ப்ரியாரிட்டி .
ஸ்விஸ் வங்கி கணக்காய் வங்கி துவங்கி நாட்டின் கடனை எல்லாம் செட்டில் பண்ணிர்ரது. பஞ்சாயத்து பேசி வட்டில்லாம் எகிறடிச்சுட்டு ஒன் டைம் செட்டில்மென்ட்.

காய்கறி மார்க்கெட்,சந்தையில எல்லாம் எஸ்.டி.டி பூத் கணக்கா வங்கி கவுண்டர்கள். காலையில கடன் கொடுத்து மாலையில வசூல்.

ஒருரெண்டு வருசத்துல எல்லாத்துக்கும் வேலைவெட்டி கொடுத்து அவிகளாகவே எங்களுக்கு நல திட்டங்கள் வேணாம்னு கழண்டுக்கனும் .பிறவு நல திட்டங்கள் கை விடப்பட்ட முதியோர்,பெண்கள்,குழந்தைகள்,உடல் ஊனமுற்றோர்,வயதான திரு நங்கைகளுக்கு மட்டுமேங்கற நிலைய கொண்டு வருவம்

ச்சும்மா பாய்லா காட்டாம -ஹார்ட் ஃபுல்லா -பத்து வருடங்கள் இட ஒதுக்கீடு அமல் செய்தால் போதும். இனி எம் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று அவர்களே எழுதிக் கொடுத்துவிடுவார்கள்

எந்த குடிமகன் எந்த மானிலத்துக்கு பெயர்ந்தாலும் அங்கு அவனுக்கு வேலை தங்குமிடம் தயாராக இருக்கவேண்டும்.

100 சதவீதம் வாக்குப்பதிவு நடக்கும் வரை ஆளில்லா வாக்கு பதிவு மையங்கள் தொடரவேண்டும் .

ஆறு,ஏரி,குளம்,வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியவர்கள் தம் சொந்த செலவில் அவற்றை தம் கட்டிடங்களின் கீழ் புனரமைக்க வேண்டும்.

கடலில் கலக்கும் ஒவ்வொரு டி.எம்.சி தண்ணீரும் அரசின் அனுமதியின் பேரில் மட்டுமே கலக்கவேண்டும்.

தடுப்பணைகள் கல்லணை ஃபார்முலா கொண்டு அமைக்க வேண்டும்.
கம்ப்யூட்டருக்கு புரியும் வகையில் ஒவ்வொரு குடிமகன் குறித்த டேட்டாவையும் அவனே தரும்படி செய்து -அதை அடிப்படையாக வைத்து மைக்ரோ ப்ளானிங்.தவறான தகவல் தந்திருந்தால் ஏழரை வருட கடுங்காவல்    
தண்ணீர் ,ரயில் போக்குவரத்துக்கு டாப் ப்ரியாரிட்டி. ஏற்கெனவே போட்டு தொலைச்ச சாலைகளை அவை பாழ்பட்டு போன பின் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு சாலைகள்
365 நாளும் 16 மணி நேரம் கோர்ட் வேலை செய்யனும். எவனும் 8 மணி நேரத்துக்கு மேல வேலை செய்யக்கூடாது. நிலுவையில் உள்ள கேஸ் எல்லாம் பைசல் ஆயிட்டா படிப்படியா குறைச்சுர்ரது

படிப்படியாக மத நிறுவனங்கள் அனைத்தும் மதம் சார்ந்த நடவடிக்கைகளை சுருக்கி கொண்டு நாட்டு வளர்ச்சியில், எதிர்கால சந்ததிகளின் உடல்,மன,புத்தி நலனுக்கு செயலாற்றும் வகையில் மாற்றப்படும்

இதை எல்லாம் ஒரு ரெண்டு வருசத்துல பைசல் பண்ணிட்டு நேரிடை ஜன நாயகத்துக்காக அரசியல் சாசன திருத்தம். பிரதமருக்கு வீட்டோ பவர். பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க விகிதாச்சார முறை தேர்தல் . நோ இடை தேர்தல் .ஒரு உறுப்பினர் டிக்கெட் போட்டா பட்டியல்ல உள்ள அடுத்த நபர் தேர்வு

படிப்படியாக அதிகாரங்கள் மானிலங்களுக்கு,மானிலங்களிடமிருந்து மாவட்டங்களுக்கு இறுதியில் கிராம சபைகளுக்கு கை மாற்றப்படும்
மத்திய மானில தனியார் நிறுவனங்களில் 52 சதவீதம் இட ஒதுக்கீடு. நாடு சுபிட்சமான பிறவு (என்ன ஒரு 4 வருசத்துல பைசல் ஆயிரும்) இன்னம் என்னெல்லாம் பண்ணலாம்ங்கறதை நாலு வருசத்துக்கு பிறவு சொல்றன்.