Sunday, July 24, 2011

ஆண்கள் X பெண்கள் : ஆன்மீக போக்கு


அண்ணே வணக்கம்ணே !

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் சேறு வாரி இறைக்கட்டும்னு ஒரு வேலைய எடுத்தாச்சு. அதை முடிச்சே தீரனும்னு "ஆண் பெண் வித்யாசங்கள் தொடர்பதிவை தொடர்ந்துக்கிட்டிருக்கோம். சாமி,பூதம்,பெரியாரு, நித்யானந்த பாபா (இவர் வேற பார்ட்டி-பெரியார்+ நித்யானந்த பாபா படம் தேன் நம்ம டெஸ்க் டாப்ல இன்னைக்கும் இருக்கு ) ஆரானாலும் சரி நமக்கு கொஞ்சம் போல பீஸ் ஆஃப் மைண்டை கொடுத்து இந்த தொடரை முடிக்க வச்சா கோடி புண்ணியம். வேற ஆருக்கு? நமக்குத்தேன். ஆண் பெண்கள் ஒரே யுத்தத்தை ஒரே அணியிலிருந்து நடத்தவேண்டிய நிலையில ஒருத்தரை ஒருத்தர் சந்தேகப்பட்டுக்கிட்டு -டார்ச்சர் பண்ணிக்கிட்டு அல்பாயுசா போயிர்ராய்ங்கப்பா.

அனானி கமெண்ட் போடற நாதாரிய கூட சாகனும்னு நான் நினைக்கமாட்டேன். நம்ம எதிரி செத்தா அவன் இத்தீனி நாளு நமக்குள்ள ஒரு அங்கமா இருந்ததால நமக்குள்ளயும் ஏதோ செத்துப்போயிரும். அதனால ஆரும் சாகக்கூடாது. கொய்யால விதி வந்து செத்தா சாகட்டும். சாவை எதிர் நோக்கி போய் வரவேற்கிற பிசினஸ் இருக்கக்கூடாதுங்கறதுதேன் நம்மளோட முக்கிய நோக்கம்.

கடந்த அத்யாயத்துல (9) ஒன்பதாம் பாவ காரகத்வத்துல அப்பாவை பொறுத்தவரை ஆண் பெண் இடையில் என்ன வித்யாசம்னு பார்த்தோம். இப்பம் மதம் - தெய்வம் - குரு -குரு உபதேசம் -புண்யக்ஷேத்திர தரிசனம்- ஆன்மீகம் ஆகிய விசயங்கள்ள ஆண் பெண்ணுக்குள்ள என்ன வித்யாசம்னு பார்த்துருவம்.

ஆன்மீகத்தோட முக்கிய நோக்கமே நம்மை நாம இல்லாம ஆக்கிக்கறதுதேன். இந்த அனானி கமெண்டெல்லாம் பார்க்கிறச்ச பார்த்தாப்லயே கியாபகம் வச்சுக்கறதில்லை. யாரோ காத்துவாக்குல மெசேஜ் கொடுத்தாப்ல நினைச்சுக்கறது.

"அடடே நாம இந்த ஆப்ரிக்கதீவுல வந்து மாட்டிக்கிட்டமே இங்கன கம்ப்யூட்டர் இல்லை இன்டர் நெட் இல்லை. இது நிஜமா பொய்யானு கூட தெரியலை .சரி ஊருக்கு போனபிற்பாடு பார்ப்போம்னு அடுத்த வேலைய பார்க்க ஆரம்பிச்சுர்ரது.

நம்மை நாம இல்லாம ஆக்கிக்க துணியனும்னா நாம நமக்கு சுமக்க முடியாத பாரமாயிருக்கனும். (அதாவது ஆளுமை - அகந்தை - சக்தி எல்லாம் உச்சத்துல இருக்கனும்.) நம்மை நாம இல்லாம ஆக்கிக்கிட்டா அந்த அனுபவம் எப்படி இருக்கும்னு ஆண் ஒவ்வொரு உடலுறவுலயும் ஃபீல் பண்றான். உச்சம் பெறுகிறான்.

அவனோட சாகும் இச்சை அதாவது தன்னைத்தான் இல்லாம ஆக்கிக்கிற கோரிக்கை ப்ளாக் அவுட் மூலம் நிறைவேறுது. (இங்கன நாம குறிப்பிடறது உட்டாலக்கடி உறவை பத்தித்தேன் - நாம ஒரு காலத்துல பொட்ட அஜால் குஜால் டெக்னிக்கை எல்லாம் உபயோகிச்சு " நின்னு விளையாடினா" அதனோட எஃபெக்டே வேற)

வீர்ய ஸ்கலிதத்துக்கு மிந்தி அவனோட கொல்லும் இச்சையும் /வீ.ஸ்கலிதத்த்துக்கு பின் சாகும் இச்சையும் ஒரு சேர நிறைவேறுது. இதனால அவனுள்ளான "எதுவோ" அண்டை வெளியுடன் ஒரு கணமேனும் தொடர்பு கொள்ள முடிகிறது. அவன் மனம் அந்த தொடர்பை நீட்டிக்க துடிக்கிறது.

ஆனால் பெண்ணை பொறுத்தவரை உச்சமென்பது ஒரு கனவாகவே இருக்கு. இதனால அவளோட சாகும் இச்சை முழுக்க நிறைவேர்ரதில்லை. அவனோட ஸ்கலிதத்துக்கு மிந்தி ஓரளவு சேம்பிள் பார்த்தாலும் அடைதல் என்பது இல்லை.

இந்த கடுப்புல அவளுக்குள்ள கொல்லும் இச்சையும் -சாகும் இச்சையும் திரளுது. . அவன் ஸ்கலிதத்துக்கு பின் ஒரு நொடி பிணமாய் மாறும் போது இவளோட கொல்லும் இச்சை ஒரு நொடி நிறைவேறுது. ஒரு நொடிதேன் சாஸ்தி இல்லை. கொல்லப்படும் இச்சை? அதுக்கு ஃபோர் ப்ளே ரெம்ப முக்கியம். நம்மாளுங்க14 ரீல் படத்தையே ஃபாஸ்ட் ஃபார்வார்ட் பண்ணி பார்க்கிற கேசுங்களாச்சே. அதனால அதுவும் ஃபணால்.

ஆக ஆன்மீகம் என்பது " நான்" சாவதற்கான வழி. பெண்ணிலான " நான்" ரெம்ப பூஞ்சை. வீக்கு. அப்பன்,அண்ணன் தம்பி ,ஆத்துக்காரர் பண்ற டார்ச்சர்ல அவளோட ஈகோ /அதாவது நான் என்ற எண்ணம் நிலத்தடி நீரா ஆழத்துக்கு போயிருது.

அதனால அதை ஜஸ்ட் லைக் தட் bear பண்ண முடியுது. அதனோடயே வாழ்ந்துர முடியுது. அதனாலதேன் பெண்ணை தியானம் /யோகம் இத்யாதி பெருசா கவர்ரதில்லை.

ஆனால் ஆணோட நிலை இதற்கு டிஃப்ரண்டா இருக்கு. அவன் தியானம் யோகம்னு ஓடறான். ஏற்கெனவே எட்டாம் பாவத்துல சொன்னாப்ல பெண் படைப்பின் சக்தியா -படைப்பின் உச்சத்துல இருக்கா. அவளை மரணம் பெருசா கவர்ரதில்லை. உண்மையான தியானம் யோகத்துக்கும் மரணத்துக்கு வித்யாசமில்லிங்கோ.

இதனால பெண் ச்சொம்மா மேம்போக்கான பூசை ,புனஸ்காரம் ,மங்கல வாத்திய ஓசை ,சங்கீதம், நடனம்னு பின் தங்கிர்ரா.

ஒரு குழந்தைக்கு ஆதி குரு தந்தை. அந்த பார்ட்டி சரியானவனா அமைஞ்சிருந்தா "குருக்கள்" பற்றிய தெளிவு இருக்கும். இல்லின்னா கண்டவனையும் குருனு ஏமாந்துர்ரதோ அ அப்பனை "சோப் போட்டு மேனேஜ் பண்ணாப்ல" குருவையும் கவர் பண்ண பார்க்கிறதும் நடக்க ஆரம்பிச்சுருது.

குரு ஒரு காட்டாற்று வெள்ளம் கரையோரமா நின்னு பார்க்கவும் செய்யலாம். புடவை கொசுவத்தை காலிடுக்குல செருகிக்க்ட்டு குனிஞ்சு நாலே நாலு சொட்டு தண்ணிய எடுத்து தலையில தெளிச்சுக்கிட்டும் வந்துரலாம்.

அல்லது அந்த காட்டாற்றின் இசைக்கு நம்ம மனம் தலையசைக்க துவங்கினா "முக்தி" மோட்சம்லாம் கூரியர் பாய் மாதிரி நம்மை தேடிவரும்.

பெண்ணுக்கு சமூகம்/சமூகத்து பெரிய மனிதர்கள்/ மத குருக்கள் மேல எல்லாம் ஒரு ஊமைக்கோபம் இருக்கு. தன்னோட அடிமைத்தனத்துக்கு இவிகதான் காரணம்ங்கற சப்கான்ஷியல் தாட் இருக்கு. ரஞ்சிதா மேட்டரை நான் அப்படித்தேன் பார்க்கிறேன். நித்யானந்தாவுக்கு வெடிவைக்கவே அந்த நடிகை கில்மாவுக்கு சம்மதிச்சிருக்கலாம்.

பெண் தான் சிக்கியிருக்கும் அடிமை வலையை உணர்ந்தவளா இருக்கா. சக பெண்ணையே நம்பாதவ ஒரு குருவை ஆணை எப்படி நம்புவா?

அட கடவுளாவே இருந்தாலும் எந்த கடவுளாச்சும் அட்லீஸ்ட் தன் பொஞ்சாதிக்கு ஜஸ்டிஸ் பண்னியிருக்கா? நோ..

ரிவர்ஸ் எஃபெக்ட்:

ஆனால் பாருங்க மனம் ஒரு விசித்திரமான கருவி. உங்கள் அனுபவம் என்னவோ நோக்கம் என்னவோ இலக்கு எதுவோ அதுக்கு சம்பந்தமே இல்லாத ரூட்ல உங்களை இழுக்கும். தள்ளிக்கிட்டு போகும். அல்லாம் கொஞ்ச நாளுதேன். அப்பாறம் தன்னோட இயற்கை வழிக்கே திரும்பிரும்.

உ.ம் கண்ணாலமான புதுசுல அல்லா புருசன் மாரும் சோடியா கோவிலுக்கு போயிருப்பிங்க . கண்ணாலமான புதுசுல அல்லா மனைவி மாரும் ஒரு கட்டத்துல புருசன் இன்ஃப்ளுயன்ஸ்ல தியானத்தை ட்ரை பண்ணியிருப்பிங்க. அது உங்க இயற்கைக்கு விரோதமானது. அதனால கொஞ்ச நாள்ளயே மாயை விலகிரும்.

அவரு மெடிட்டேஷனுக்கும் நீங்க கோவில் குளத்துக்கும் திரும்பிருவிங்க..

Saturday, July 23, 2011

வாய் விட்டு சிரிங்க !


டாப்: 5
*தெலுங்கானா எம்.எல்.ஏக்களோட ராஜினாமாவ ஸ்பீக்கர் ரெஃப்யூஸ் பண்ணிட்டாரு. உ.வ பட்டு பண்ணிட்டாய்ங்களாம்?

*திமுக பொதுக்குழுவுல என்னதான் நடந்தது? அப்டேட்ஸே காணோமே. அப்ப நம்ம சனம் பேப்பரை படிச்ச கையோட தேன் டிவிட்டறாய்ங்களோ?

*மதுரை ட்ராஃபிக் பிரச்சினையை அம்மா இன்னா மேரி க்ளியர் பண்ணிக்கிறாங்க பார்த்திங்களா? - திமுக அடிப்பொடிகளோட வாகன ஊர்வலத்தை காணமுடியாதே

*ஆ.வில ரஜினி ரசிகன் - கண்ணீர் கதைய படிச்ச பிறகாச்சும் ரஜினி சார் "அவாளோட" சைக்காலஜிய புரிஞ்சி தெளிஞ்சி தன்னவர்கள் ஆருனு தெரிஞ்சிக்கிடனும்.

*தமிழ் நாட்ல நில அபகரிப்பு ஸ்பெஷல் விங் வந்த பிறகு நெறய போலீஸ்காரவுக ஸ்லிம் ஆயிட்டாய்ங்களாமே ? தொப்பைல்லாம் போச்?
ஒரு காலத்துல அப்பால்லாம் வெளிய கிளம்பறதாயிருந்தா கையில பையோட போவாய்ங்க.திரும்பி வர்ரச்ச அம்மாவோட மொத வேலை அந்த பைய வாங்கி ஆணியில மாட்டறதுதேன். இப்பம் ? போறச்ச எந்த அப்பனும் பையோட போறதில்லை. திரும்பி வரும்போது புது ஷாப்பரோட வர்ராய்ங்க. அம்மாவுக்காக குரல் கொடுக்கறதில்லை. நேர ஃபரிட்ஜுக்கு போய் வாங்கியாந்ததை அடுக்கறாய்ங்க

காலம் மாறிப்போச்சு

ஒரு காலத்துல எங்க பாட்டி காலையில 4 மணிக்கு எந்திரிச்சுரும். அம்மா 6 மணிக்கு எந்திரிக்க ஆரம்பிச்சாய்ங்க. அண்ணி 7 மணிக்கு எந்திரிக்கும். பொஞ்சாதி 9 மணிக்கு எந்திரிக்கிறா. நாளைக்கு பொண்ணு?

காலம் மாறிப்போச்சு


ஒரு காலத்துல குடிகாரன்னா அவன் கூலிக்காரனாவோ - தலித்தாவோ -வன்னியனாவோ தான் இருப்பான். இப்பம்? பார்ப்பான்லாம் குடிக்கான்.பொம்பளைல்லாம் குடிக்கு.

காலம் மாறிப்போச்சு

ஒரு காலத்துல என்.டி.ஆர் வர்ராருன்னா அவனவன் கிராமத்துலயே சித்திரான்னம் செய்து அன்னக்கூடையில போட்டு ட்ராக்டர் ஏத்திக்கிட்டு வந்து நடைபாதையில வச்சு திம்பான்.இப்பம் கையில நூறு,பிரியாணி கூட ஒரு குவார்ட்டர்.

காலம் மாறிப்போச்சு

ஒரு காலத்துல எங்கயோ நடந்த ரயில் விபத்துக்கு (அரியலூர்) ரயில்வே மந்திரி ராஜினாமா பண்ணுவார். இப்பம் பிரதமர் விபத்து நடந்த ஸ்பாட்டுக்கு போப்பான்னா ரயில் மந்திரி போடாங்கொய்யாலங்க்றாரு.

காலம் மாறிப்போச்சு

ஒரு காலத்துல நம்ம ஊரு ஆத்துல அய்யரு குளிச்சுட்டு கோவிலுக்கு வருவாராம். இப்பம்? குடிச்சுட்டு மட்டையானவன் கூட ஆத்தோரம் போறச்ச மூக்கை பொத்திக்கினு போறான்.

காலம் மாறிப்போச்சு

ஒரு காலத்துல லவ்வர்ஸ்னா சந்து திருப்பத்துல நகராட்சி விளக்கு எரியாத சமயம் ரெண்டு செகண்டு பேசுவாய்ங்க. இப்பம் உம்.. உம் ..உம்னுக்கிட்டே அப்பா அம்மா முன்னாடியே மணிக்கணக்குல பேசுதுங்க. செல்லு ஃபோன்ல.

காலம் மாறிப்போச்சு

ஒரு காலத்துல 1985ல நான் டிகிரி படிக்கிறச்ச எங்கப்பன் ரெண்டு ரூபா பிள்ளையார் மனை கீழ வச்சிருப்பாரு. அதை எடுத்துக்கிட்டு போய் டவுன் பஸ்ஸு, டீ,சிகரட்டுல்லாம் சமாளிக்கனும். இப்பம் கான்வென்ட் படிக்கிற பையனுக்கு மம்மி டாடி பத்து ரூவா கொடுத்தா முகத்தை சுளிக்கிறான்.

காலம் மாறிப்போச்சு

ஒரு காலத்துல காரியம் நடக்கனும்னா நான் எவ்ளோ நெல்லவன் தெரீமானுட்டு மாய்ஞ்சு மாய்ஞ்சு சொல்லோனம். இப்ப என்னடான்னா நான் எவ்ளோ கெட்டவன் தெரீமா? எனக்கு எத்தீனி கொலைகாரன் தெரியும் தெரியுமா? ரேஞ்சுல பேசவேண்டியதா கீது.

காலம் மாறிப்போச்சு

ஒரு காலத்துல எவன் நெல்லா படிக்கானோ எவன் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டில பரிசெல்லாம் வாங்கறானோ அவனை தான் குட்டிங்க ஜொள்ளும். இப்பம் எவனெல்லாம் மாவா போடறானோ -கஞ்சா அடிக்கானோ அவனைத்தான் ஜொள்ளுதுங்கோ

காலம் மாறிப்போச்சு


ஒரு காலத்துல சித்தப்பா பெரியப்பா பையனை கூட எங்க அண்ணன் /எங்க தம்பினு அறிமுகப்படுத்துவாய்ங்க. இப்பம் என்னடான்னா சொந்த அண்ணன் தம்பியை ப்ரதர்ங்கறாய்ங்க

காலம் மாறிப்போச்சு


( ஹய்யா முருகேசன் கூட கிழவாடியாயிட்டாருன்னு துள்ளி குதிக்காதிங்க பாஸ். அடுத்த பதிவுல காலமாற்றம் கொண்டு வந்த முன்னேற்றத்தையும் டச் பண்ணுவமில்லை )

துன்பம் வருகையிலே சிரிங்கம்பாய்ங்களே அப்படி வேலை அழுத்தம் - ஒரு நாதாரி பண்ற அலப்பறைல்லாம் கடுப்பாக்கினாலும் நான் சிரிக்க ஒரு சில ஜோக்ஸ் எழுதினேன் அது உங்க பார்வைக்கு:

ஜோக்ஸ் டு டே

நாம பொயக்கற பொயப்புக்கு ஜோக்கு கூட ஸ்பார்க் ஆகுதுன்னா அது ஆச்சரியம் தேன். நம்முது கடகலக்னம். அதிபதி சந்திரன். சந்திரன் எப்டி சூரியனோட ஒளியை வாங்கி பிரதிபலிக்கிறாரோ அப்படி நாமும் எங்கருந்தோ கிடைச்சதைதேன் ப்ராசஸ் பண்ணி தர்ரோம்.

ஜோக் கூட இப்டிதேன். ஒரு ஜோக் படிக்கிறச்ச ..அட இதை இப்படி கூட எழுதியிருக்கலாமேனு நமக்கு தோனும். சுஜாதா சொலவடையில சொல்லனும்னா எட்டு இடமும் குளிர்ந்திருக்கிற நேரத்துல எழுதியும் வைப்பொம்ல.

இப்ப ஜோக்ஸ் டுடேக்கு போயிரலாமா/

* * *

அவன்: நமீதா எந்த மெயிலை உபயோகிப்பாய்ங்க?

இவன் : ஹாட் மெயில்

* * *


".தலைவரோட மகளை கட்சி பத்திரிக்கையில ஆட்டோபயாகிரஃபி எழுத சொன்னதுக்கு கோவிச்சுக்கிட்டாய்ங்க"

"ஏன்?"

"என் ரேஞ்சுக்கு ஆட்டோ பயாகிரஃபியெல்லாம் எழுதனுமா? ஃப்ளைட்டோ கிரஃபி வேணம்னா ட்ரை பண்றேன்னாங்க


* * *


ஆசிரியர்: கி.மு ன்னா என்ன?

மாணவன்: ஈமு மாதிரி ஒரு பறவை சார்


* * *

அவன்: நம்ம கணேஷ் கதை க்ளோஸ்

இவன்: கொலையா? தற்கொலையா?

அவன்: தற்கொலைதான். லவ் மேரேஜு தாம்பா


* * *

அவன்: பில் கேட்ஸ் மார்ல நாய்கள் ஜாக்கிரதை போர்டு மாட்டனுமா? ஏன் ?

இவன்: அவர் தான் பில் 'கேட்' ஆச்சே


* * *

Friday, July 22, 2011

ஆண் பெண் வித்யாசம்: 9 ஆம் பாவம்


அப்பா: அப்பா சொத்து:அப்பாவழி உறவு:சேமிப்பு: தூரதேச தொடர்புகள்:தீர்த்தயாத்திரை: இப்படி பல விஷயங்களை காட்டற பாவம் 9 ஆம் பாவம். இதை தர்மஸ்தானம்/பித்ரு பாக்யஸ்தானம்னெல்லாம் சொல்வாய்ங்க. இது கோணஸ்தானம். இங்கன சுபர்கள் இருந்தா சூப்பர். பாவர்கள் இருந்தா பெட்டர். துஸ்தானாதிபதிகள் இருந்தா பாப்பர்.

மேற்படி 9 ஆம் பாவ காரகத்வத்துல ஆண் பெண்ணுக்கிடையில் நிறைய வித்யாசம் இருக்கு. அட ஒரு டாடி கதைய மட்டும் எடுத்துக்கங்க. 9 ஆம் இடம் சுபபலமா இருந்தாலும் பெண் குழந்தைக்கு /அதனோட வளர்ச்சிக்கு /சுதந்திரத்துக்கு ஆப்புதேன்.

அதே சமயம் 9 ஆமிடம் கெட்டிருந்தாலும் ஆண்குழந்தைக்கு..அதனோட வளர்ச்சிக்கு /சுதந்திரத்துக்கு தூள் தேன். அதுக்கு மிந்தி மனவியல் படி அப்பா -மகள்/அப்பா மகன் உறவை கொஞ்சம் பார்த்துருவம்.

அப்பா - மகள்:

மகள் ? அம்மாவின் நகல். அதாவது இவன் பொஞ்சாதியோட திருத்தப்பட்ட( புதிய தவறுகள் கூட இருக்கலாம்) பதிப்பு. அதனால கொஞ்சம் போல ஆர்வம் அக்கறை ஏற்படுது.

அவன் கொஞ்சமாச்சும் மாத்தி யோசிக்கிற/ தாய் மற்றும் மனைவியால் சுகப்பட்ட பார்ட்டியா இருந்தா பரவால்லை. இவன் இளமையிலருந்து பார்த்த பெண்கள்ள ஒரு சிலராச்சும் இவன் மைண்ட் மேல பாசிட்டிவ் இம்பாக்டை ஏற்படுத்தியிருந்தா பரவால்லை.

இவன் பார்த்த பெண்ணெல்லாம் லோலாயி ,ராட்சசி, குழந்தைய கட்டில் கீழ விட்டு "மிண்ட காரனோட" அஜால் குஜால் பண்ற பொம்பளையா இருந்திருந்தா நாஸ்திதேன்.

பொண்ணு வயசுக்கு வர்ர வரைக்கும் எந்த அப்பனும் அவளை முழுப்பெண்ணா வளர்க்க விரும்பறதில்லை. இவனை இவனே ஏமாத்திக்க அந்த குழந்தைய பாய் கட் பண்ணி -பேண்ட் சட்டை போட்டு வளர்க்கிறான்.

இந்த சுகமான பொய்கள் கூட அவள் வயசுக்கு வந்ததும் பொசுங்கி போயிருது. அந்த பெண் ஒரு சில பிரத்யேக காரணங்களால் அம்மா கூட மூவ் பண்றதையே விரும்பறதும் - பெண்கள் கூட்டத்துல ஐக்கியமாறதும் அப்பன் - மகள் உறவுல ஒரு இடைவெளிய ஏற்படுத்திருது.

மகளை பொருத்தவரை அப்பன் தன் அம்மாக்காரிக்கு தேன் சொந்தம்னு கொஞ்ச காலத்துலயே ஸ்ட்ரைக் ஆயிருது. அம்மாக்காரி அப்பனை எப்படியெல்லாம் ஹேண்டில் பண்றாள்னு ( கோச்சுக்கிறது - திங்காம இருக்கிறது -செருப்படி வாங்கினாலும் - புருசங்காரனை விட்டுக்கொடுக்காம பேசறது) அந்த குழந்தை வாட்ச் பண்ணுது.

கொஞ்ச காலம் அதே ஸ்டைல்ல அப்பனை ஹேண்டில் பண்ணுது. இது அம்மாக்காரிய இர்ரிடேட் பண்ண ஆரம்பிக்குது.

இங்கே அம்மாக்காரி பெண்ணுக்கும் அப்பனுக்கும் இடையில கட்டைய போட ஆரம்பிக்கிறாள் .

" தா..ஒனக்கொன்னும் தெரியாது..பொட்டை புள்ளைய வளர்க்கிற விதம் இது கிடையாது. என் கிட்டே விடு"

"தபர்ரீ .. நீ ஒன்னும் குழந்தை கிடையாது.. ச்சொம்மா சொம்மா அப்பன் மேல உரசிக்கினு "

அந்த குழந்தை அப்பங்காரனை போல தனக்கும் ஒரு "ஆள்"வேணம் /தனக்கே தனக்குன்னு வேணம்னு கனவு காண ஆரம்பிச்சுருது.

இந்த இடத்துல பெண்குழந்தைகளோட சிந்தனை ரெண்டு ரூட்ல பிரியுது. மெச்சூர்ட் மைண்டட் ஃபீமேல் பேபி அம்மாக்காரியோட"பரிதாப நிலையை " "அடிமை வாழ்வை" ஸ்மெல் பண்ணிட்டு தாளி நம்ம அப்பன் மாதிரி பையன் புருசனா வந்தா நம்ம பொயப்பும் அம்மா மாதிரியே விடியும். அதனால கைக்கு அடக்கமா பார்த்துக்கனும். நம்ம பிடிக்குள்ள இருக்கிறவனா பார்க்கனும்னு டிசைட் ஆயிருது.

அன் மெச்சூர்ட் ஃபீமேல் மைண்ட் இன்னொரு அப்பனுக்காகவும் - மெச்சூர்ட் ஃபீமேல் மைண்ட் ஒரு குழந்தைக்காகவும் ஏங்க ஆரம்பிக்குது.


9 ஆமிடம் சுபபலமா இருந்து அப்பங்காரன் எந்த அளவுக்கு ஆதர்ச புருசனா இருந்தா /சவுண்ட் பார்ட்டியா இருந்தா அந்த அளவுக்கு அந்த பெண்குழந்தையோட அடிமைத்தனமும் சாஸ்தியாகுது. இவளுக்கு சிறகு முளைக்க முளைக்க வெட்டப்படுது.

தாளி அந்த இடம் கெட்டு அப்பங்காரன் ஐ.பி கேஸா, குடிகார நாயா, கூத்திக்கள்ளனா இருந்தா அந்த அளவுக்கு அந்த குழந்தைக்கு சிறகு முளைக்கிறது . அம்மா,சொந்தம் பந்தமும் அது சரி அப்பங்காரன் ஜாத்தியா இருந்தா இந்த குழந்தை ஏன் படிய விட்டு இறங்குதுனு சால்ஜாப்பு சொல்வாய்ங்க.

அப்பா -மகன் ரிலேஷனை பத்தி அடுத்த பதிவுல பார்ப்போம்.

Thursday, July 21, 2011

மரணம் குறித்த பார்வை :ஆண் -பெண் வித்யாசம்


மரணம் என்னவோ .. ஆண்,பெண்ணை பொருத்தவரை ஒன்னுதேன். ஆனால் மரணம் குறித்த நினைவுகள் -அவை அவர்கள் மூளையில் ஏற்படு்த்தும் முடிச்சுக்கள் -அந்த முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சிகளை பொருத்தவரை ஆண்,பெண்ணுக்கிடையில் நிறையவே வித்யாசம் இருக்கு.

மரணங்கறது என்ன? குறுகலான சரீர எல்லைகளை கடந்து /தகர்த்து பரந்த இயற்கையோடு இரண்டற கலப்பது.

பெண் இயற்கையின் பிரதியா - நிதியா - பிரதி நிதியா இருக்கிறதாலயோ என்னமோ இந்த வித்தையில கை தேர்ந்தவளா இருக்கா.

ஒரு பெண் ஒரு ஃபங்சனுக்கு போனா - அது இவளோட பீரியட் டைமா இல்லாத பட்சத்துல - அவள்/இவள்ங்கற வித்யாசமில்லாம எதிர்படும் எல்லோருக்கும் ஒரு சிறு புன்னகையையாவது பரிசளிச்சுக்கிட்டே போவாள். ( இவள் புருசனை வச்சிருக்கிறவ/வச்சிருக்கிறதா சந்தேகமுள்ளவ உட்பட - சின்னவயசுல இவ மேல பாலியல் பலாத்காரம் ரேஞ்சுல செய்த கிழவனாருக்கு கூட இதே பரிசு )

பெண்கள் எந்த பொசிஷன்ல இருந்தாலும் அடிமைகள் தாங்கற கான்செப்டாலயோ என்னவோ பெண்கள் இடையில (அதுவும் ஃபங்சன்ஸ்ல) பெருசா வித்யாசங்கள் வெளிப்படுத்தப்படறதில்லை. ஆனால் ஆண்கள் அப்படியில்லை .. தன் குழு - அ தன் நண்பன் ரேஞ்சுலயே நின்னுர்ராய்ங்க.

பெண்களோட ரிலேஷன்ஸ் ஹிப்பாக்கிரடிக்கா இருந்தாலும் - நாடகமா இருந்தாலும் அவிக ஆல்வேஸ் ரஷிங் டுவார்ட்ஸ் மேக்ரோ ஃப்ரம் மைக்ரோ.

மரணமும் ஏறக்குறைய ரஷிங் டுவோர்ட்ஸ் மேக்ரோ ஃப்ரம் மைக்ரோங்கறதால மரணத்தை நேருக்கு நேரா சந்திக்க பயப்படறதில்லை.

ஆனால் ஆண் தான் மரணத்துக்கு ஆல்ட்டர்நேட்டிவ்ஸ் தேடிப்பறக்கறான். உ.ம் செக்ஸ், பணம்,பதவி,வன்முறை .

மரணங்கறது ஒரு சின்ன மாற்றம்தேன். இருப்பு நிலையில் மாற்றம். மேட்டரா உள்ளது பவரா மாறுது தட்ஸால்.

ஆண் ,பெண் இருவர் வாழ்விலும் மாற்றம் என்பது கட்டாயம். தாய் மடியிலருந்து -பாட்டி மடி - அப்பாறம் அப்பாவோட தோள் - பக்கத்து வீட்டு ஆன்டி - பள்ளி ஆசிரியை - கல்லூரி -வேலைன்னு மாறித்தான் ஆகனும்.

ஆண் குழந்தை ஒவ்வொரு மாற்றத்தையும் கண் மூடித்தனமா எதிர்க்கும். பெண் குழந்தை ரெசிப்டிவ். ஃப்ளெக்சிபிள். ஆண் குழந்தை ரெஜிட்டா இருக்கு.

ஆண் குழந்தை தன் சரீர பலத்தை வச்சு மாற்றத்தை எதிர்க்குது அது தன் சர்வைவலுக்கு தேவைன்னு போராடுது.

பெண் குழந்தை தன் சரீர பலகீனம் காரணமா மாற்றத்தை ஏத்துக்கறதே தன் சர்வைவலுக்கு நல்லதுன்னு நினைச்சு அஜீஸ் ஆயிருது.

ஸ்கூலுக்கு போக அடம்பிடிக்கிற குழந்தைகள்ள ஆண் குழந்தைகள் தான் அதிகம். அட இவ்ள எதுக்கு ஏழு கழுதை வயசாகி ட்ரான்ஸ்ஃபர் ஆர்டரை எதிர்த்து கோர்ட்டுக்கு போற பார்ட்டிங்க இல்லையா என்ன?

வீட்டோட மாப்பிள்ளைகளை விரல் விட்டு எண்ணிரலாம். அதே போல புகுந்த வீட்ல செட் ஆகாம தவிக்கிற பெண்களையும் விரல் விட்டு எண்ணிரலாம்.

ம்ரணங்கறது ஒரு மாற்றம். பெண் அதை தன் பலகீனத்தின் காரணமா ஏத்துக்கிட்டு பலப்படறாள். ஆண் அதை எதிர்த்து பலகீனப்படறான்.

மாற்றம் விசித்திரமானது. அதை ஏத்துக்க தயாராயிட்டா அது ஒரு மாற்றம் அவ்ளதான். ஆனால் அதை எதிர்க்கும் போது அந்த மாற்றம் மரணத்தை விட கொடுமையா இருக்குது.

(ஜோதிட டிப்: சர ராசிக்காரவுக மாற்றத்துக்கு தயாரா இருப்பாய்ங்க -ஸ்திர ராசிக்காரவுக ஊஹூம்)

மன்சன்ல இருக்கிறது ஒரே பவர் அது செக்ஸ் பவர். அது வெளிப்பட்டே ஆகனும். வாய்ப்பிருந்தா செக்ஸ் பவராவே வெளிப்படுது - அதுக்கான வாய்ப்பில்லாத சந்தர்ப்பத்துல முதிர்ச்சி கொண்ட மனம் இருந்தா படைப்பாற்றலா வெளிப்படுது - முதிர்ச்சியற்ற மனம் வன்முறையா வெளிப்படுத்துது . இது உயிரியல் -மனோவியல் விதி.

மன முதிர்ச்சியை பொருத்தவரை பெண் குழந்தைக்கு அது சீக்கிரமே சித்திக்குது. 40 வயசு ஆணுக்குள்ள மனமுதிர்ச்சி 12 வயசு பெண்குழந்தைக்கு இருக்கிறதை எத்தனையோ தாட்டி நானே வாட்ச் பண்ணியிருக்கேன்.

இந்த மனமுதிர்ச்சிக்கு காரணம்? சரீர பலகீனமா இருக்கலாம் .. சர்வைவல் அவசியங்கள் அவளை சீக்கிரமா மெச்சூராக்குது. ஆண் இந்த விஷயத்துல துரதிர்ஷ்ட சாலி.

முதிச்சி பெற்ற மனம் செக்ஸ் பவரை கிரியேட்டிவ் பவரா வெளிப்படுத்துதுன்னு சொன்னேன். பெண்ணுக்கு உள்ள சரீர பலகீனம் , அவளுக்கு எதிரா உள்ள சமூக,பொருளாதார,அரசியல் அமைப்புகள் காரணமா அவளோட கிரியேட்டிவ் பவர் ஸ்தூலமா வெளிப்பட இயலாத ஒரு நிலை இருக்கு. அதனால அவளோட கிரியேட்டிவ் பவர் சூட்சுமமான வடிவத்துல வெளிப்படுது . அ சமூக,பொருளாதார ,அரசியல் அமைப்புகள் அனுமதித்த அளவில் மட்டுமே வெளிப்படுது.

இதனாலதான் பெண்ணுக்கு செக்ஸ் மேல ஆர்வம் ஏற்படறதில்லை. ( மனம் சார்ந்த் ஆர்வம் ) உடலை பொருத்தவரை அது புரட்சி செய்யலாம் அதுவேற சங்கதி - அதையும் அவள் தன் மனமுதிச்சியை கொண்டு மேனேஜ் பண்ணிர்ரா)

ஆனால் ஆணை பொருத்தவரை அவனோட படைப்பார்வம் ஸ்தூலமாவே படைக்க விரும்புது .( ஃபிசிக்கல் அண்ட் என்விரான்மென்டல் எபிலிட்டி) . பிரச்சினை என்னன்னா ஸ்தூலமான படைப்பில் தடைகளுக்கு நெம்பர் ஆஃப் சான்ஸஸ் இருக்கு. இந்த தடை அவன் மனதை செக்ஸ் அல்லது வன்முறைக்கு திருப்பி விட்டுருது.

மேலும் செக்ஸை பொருத்தவரை ஆணுக்கு அது அனுமதிக்கப்பட்டிருக்கு. ஹி மே பி மேரீட் ஆர் அன் மேரிட். வித் வைஃப் ஆர் அனதர் பர்சன். " ஒரு கால் கட்டு போட்டா சரியாயிரும் - இவள் சரியில்லை -அவனை சொல்லி என்ன? மாதிரி டயலாக்ஸ் எல்லாம் கேட்டிருப்பிங்க.

இதனால ஆணோட செக்ஸ் பவர் செக்ஸாவே செலவழிஞ்சு போயிருது - மிச்சம் மீதி இருந்தா அதையும் அவன் ஸ்தூலமான படைப்புக்கே திருப்பி விடறான்.

பெண்ணை பொருத்தவரை 45 வயசு கிழவியாவே ஆயிட்டாலும் அச்சம், நாணம்,மடம் அது என்னாது பயிர்ப்புல்லாம் மெயின்டெய்ன் பண்ணவேண்டி இருக்கு. அதனால அவளோட படைப்பு சக்தி மனம் சார்ந்து ,மனவெளியில் இயங்குது. அங்கே தங்கு தடையில்லாம..

"காற்றுக்கென்ன வேலி - கடலுக்கென்ன மூடி -கங்கை வெள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது" ரேஞ்சுல அவிக கிரியேட்டிவ் பவர் வேலை செய்யுது. ( சிலர் அந்த மன வெளி படைப்புக்கு உயிர் கொடுக்க நினைக்கும்போது கணவன் - வீடு - ஊர் -உலகம் அதிர்ச்சியில் நொறுங்கி போகுது.

பெண்ணுக்கு இயற்கை கொடுத்த இன்னொரு வரம் ப்ரக்னன்சி. படைப்பின் உச்சம் இது. (இதுக்கப்பறம் பெண்ணுக்கு ஏற்பட உடல்,மன சிதைவுகள் அவளுக்கு செக்ஸ் மீது இருந்த ஓரளவு ஆர்வத்தையும் ஆஃப் பண்ணிர்ரதால - அதை ஒரு ஆயுதமா வச்சு பேரம் பேசற அவலமும் நடக்குது.

ஆணை பொருத்தவரை ஒவ்வொரு உடலுறவிலும் உச்சத்தை தொடுகிறான். குட்டி மரணத்தை தரிசிக்கிறான்.அனுபவிக்கிறான். மரணத்தோட சின்ன அறிமுகமாச்சும் இருக்கு. அதனால டிப் ஆஃப் தி ஐஸ் பர்க் மாதிரி மரணம் அவனை கவருது.

அதனாலதேன் ஆண்களை பொருத்தவரை லைஃப்ல ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடற மாதிரி இருக்கு. ஆனால் பெண்ணுக்கு அந்த பாக்கியமில்லை.

அதனால அவளுக்கு மரணத்தை மரணமா சந்திக்கிறதே பிடிச்சிருக்கு. ம்ரணத்தோட நிழல்களுக்கு அவள் பெருசா அதிர்ந்து போறதில்லை. இருட்டு /ஏழ்மை/தனிமை/ நிராகரிப்பு

அதனாலதேன் பெண்கள் பார்ஷியலா சாகனும்னு வேகமா ட்ரைவ் பண்றதில்லை /ஆயுதத்தை தூக்கிட்டு அலையறதில்லை - இன்னும் என்னென்னமோ இல்லை.

பெண் செக்ஸுக்கு இன்னொரு மாற்றான படைப்பின் உச்சத்துல இருக்கிறதால அவள் மரணத்தின் நிழல்கள்ள / தவணை மரணங்கள்ள திருப்தி அடையறதில்லை. அவளோட அடிமனசு மரணத்தையே எதிர்பார்க்குது.

புருசன் காரன் லேசா ரெண்டு தட்டு தட்டினா உடனே "கொல்லு ..கொன்னுருன்னு ஹிஸ்டீரிக்கா அலற இதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.


மரணத்தின் நிழல்கள் அவளுக்கு திருப்தியையோ பயத்தையோ தர்ரதில்லை. ஆனால் மரணமே அவளை நெருங்கும்போது அதுவும் ஒரு மாற்றம்ங்கற முதிர்ச்சியோட ஏத்துக்க தயாராயிர்ரா. எத்தனையோ பெண்கள் தங்களுக்கு வந்த உயிர்கொல்லியான வியாதிகளை கூட ஜஸ்ட் லைக் தட் ஏத்துக்கிட்டு புருசனுக்கு கூட சொல்லிக்காம செத்துப்போயிர்ராய்ங்க.

மேலுக்கு பார்க்கும் போது ஆண்கள் மரணத்துக்காக ஆலா பறக்கிறதா தோனும்.

பெண்கள் மரணத்தை கனவிலும் நினைக்காதவர்கள் போல தோனும்.

மேட்டர் இன்னாடான்னா ஆண் செக்ஸில் தன் மரண தாகத்தை தீர்த்துக்கறான். அவனுக்கு உள்ள மரண தாகம் குளிர்காலத்து தாகம்.

பெண்ணுக்கு செக்ஸ்ல மரண தாகம் தீரும் வாய்ப்பு மறுக்கப்படுது அவளுக்கு உள்ள மரண தாகம் நெஜமாலுமே கோடை காலத்து மரண தாகம்..

Wednesday, July 20, 2011

ஆண் பெண் வித்யாசம் : 8 ஆம் பாவம் (5)



வாழ்க்கைங்கற நாடகத்துல ஒவ்வொரு காட்சியும் மரணம்ங்கற க்ளைமேக்ஸை நோக்கித்தேன் நகர்ந்து போகுது. எவ்ள நல்ல கதையா இருந்தாலும் அதுக்கு ஒரு க்ளைமேக்ஸ் இருக்கனும். க்ளைமேக்ஸ் இல்லாத கதை ஆர்காசம் இல்லாத உடலுறவு மாதிரி.

ஜாதகத்துல எட்டாம் பாவம் மரணத்தை காட்டுதுனு சொல்லியிருக்கேன்.மரணத்தை ரத்து பண்ண முடியாதுதேன்.

ஆனால் கண்டதையும் மரணத்தோட முடிச்சு போட்டு - அதுக விரட்ட விரட்ட ( ஏழ்மை -தனிமை இருட்டு நிராகரிப்பு) மரணத்தை நோக்கி பிடி உஷா கணக்கா ஓடறது பை.தனமில்லியா?

அட வர்ரச்ச வரட்டுமே . நாம எதுக்கு லவ் சப்ஜெக்ட் சினிமாவுல க்ளைமேக்ஸ்ல ஹீரோவை நோக்கி ஓடற ஹீரோயின் மாதிரி ஓடனும்?

இது ஏதோ இந்த ஜென்மத்துல மட்டும் இப்படினு நினைக்காதிங்க. பழக்க தோஷம் காரணமா இதையேதான் எல்லா ஜென்மத்துலயும் செய்துக்கிட்டு இருக்கம்.

ஒன்னு மரணத்தை துரத்த வேண்டியது இல்லையா மரணத்தின் மறுவடிவான பெண்ணை துரத்த வேண்டியது.பெண்ணுக்காகவோ அ பெண்ணை கவரவோ அ பெண்ணை மறக்கவோ பணத்தை/பதவியை/பெயர் புகழை /ஞானத்தை ஏதோ ஒரு இழவை துரத்த வேண்டியது . இதுதான் வாழ்க்கையா?

ஏன் மரணம் நம்மை விரட்டுது? ஏன் மரணத்தை நாம விரட்டறோம்/ மரணத்தின் மறுவடிவான பெண்ணை அவளுக்காக அ அவளின் கவனம் வர அ அவளிலிருந்து விலகி ஓட ஏதோ ஒரு Etc Etc இழவை துரத்தறோம்.

பெண்ணை அடைந்தவன் அந்த பெண்ணிலிருந்து ஓடறான். அ இன்னொரு பெண்ணை நோக்கி அடையாதவன் பெண்ணுக்காக ஓடறான். அந்த பெண்ணுக்காக எதையெதையோ தேடி ஓடறான்.ஆயுளை இழக்கிறான்.

பெண்ணே மரணத்தின் மறுவடிவம்னு சொன்னேன். ( பெண்ணுக்கு ஆண் மரணத்தின் மறுவடிவம்) .ஒரு பெண்ணுடன் தன் வாழ்வை பிணைத்துக்கொண்ட ஆண் அந்த பிணைப்பு வெற்றியடைஞ்சாலும் சரி /தோத்தாலும் சரி தன்னை இழந்துர்ரான். அதுவும் ஒரு மரணம்தானே.

நம்மை இல்லாம பண்றது மரணம்னா பெண்ணும் இதே வேலையத்தான் செய்யறா. நாம இருந்தா நமக்கு எங்கே வலிக்குது?

நாம ஈகோ நிறைஞ்சு இருக்கும்போது நம்மை நம்மாலயே சகிச்சுக்க முடியறதில்லை. ஏன்னா அது பொய். பொய்யை அதை கிரியேட் பண்ணவனால கூட சகிச்சுக்க முடியறதில்லை. ஏன்னா உள்ளூற அவன் ஆன்ம வடிவா இருக்கான்.அது ஒளிமயமானது. எந்த காரிருளும் அதும் மின்னாடி நிக்கற தாக்கத் கிடையாது.கேமராவை பார்த்த ஐட்டம் நடிகையோட ஆடைகள் மாதிரி பொய் எல்லாம் உதிர்ந்து போகுது.

மரணத்தை வெல்ல ஒரே வழி அது மரணம் இல்லேங்கறதை உணர்ந்துக்கறதுதான். கரும்பு பாகா மாறுது.பாகு வெல்லமா மாறுது .வெல்லம் சர்க்கரையா மாறுது.அதைப்போல நாம ஏதோ ஒரு ஸ்டேட்டுக்கு மாறிர்ரம்.அதான் மரணம்.

மரணத்துக்கு பின்னாடி என்ன மிஞ்சும்னு ரோசிச்சா மரணத்துக்கு மிந்தி நாம என்னவா இருந்தோம்ங்கறதை கெஸ் பண்ணிரலாம்.

நாம என்னவா இருக்கோம்னு ஸ்மெல் பண்ண முடிஞ்சா மரணம்ங்கறதே இல்லேனு புரிஞ்சுரும்.
(ஒரு குன்ஸாவாச்சும்)

மரணம்ங்கறது தொடர்ச்சியை வெட்டிருதுன்னு நாம நினைக்கிறோம். அதனாலதேன் மரணத்துக்கு பயப்படறோம். ஆனால் அதுதான் உண்மையான தொடர்ச்சியை தருது.

இந்த இயற்கை/படைப்பின் மையம் நீங்கள் கிடையாது - இந்த படைப்பின் பிரிக்க முடியாத அங்கம் நீங்கனு உணர்ந்துட்டாலே பாதி வெற்றி. அப்பத்தேன் வாழ்வின் தொடர்ச்சி மரணத்துக்கு பின்னும் தொடர்ரதை உணர முடியும்.

நீங்க எதையெல்லாம் சப்கான்ஷியஸா மரணம்னு நினைச்சு பேதியாக்கிறிங்களோ அதெல்லாம் உங்களை உங்களுக்கு உணர்விப்பதை உணரமுடிஞ்சதானு ஃப்ளாஷ் பேக்குக்கு போய் ரோசிங்க.

ஒரு நிராகரிப்பு - இருள் - ஏழ்மை - இதெல்லாம் தான் உங்களை உங்களுக்கு நெருக்கமா கொண்டுவருது. உங்களுக்குள்ள உள்ளே இருக்கிற எதுவோ இயற்கையை நோக்கி திரும்புது. இயற்கை உங்களுக்கு ஆறுதலை உண்டாக்குது.

ஒரு அங்கீகாரம் / ஒரு வெளிச்சம் / கொஞ்சம் சில்லறை உங்களை இந்த மக்களோட போலியா இணைக்குது. உங்கள நீங்க மறந்துர ஆரம்பிக்கிறிங்க.

தன்னில் தான் நிலைத்திருப்பவனை - தான் இந்த படைப்பின் பிரிக்க முடியாத அங்கம் என்பதை அறிந்தவனை - போன்சாய்க் ட்ரீ மாதிரி தான் ஒரு மினி படைப்பு என்பதை உணர்ந்து தெளிந்தவனை எட்டாம் பாவத்து தோஷங்கள் ஒன்னும் பண்றதில்லை.

இந்த தெளிவு இல்லாதவுக தேன் மரணத்துக்கும் -மரணத்தின் நிழல்களுக்கும் சப்கான்ஷியசா டர்ராகி மரணத்தை நோக்கி ஓடறாய்ங்க.

இந்த புரிதல் இல்லாதவரை நான் அடுத்த பதிவுல எட்டுல சூரியன் இருந்தா என்ன ஆகும் -அதுக்கென்ன பரிகாரம், சந்திரன் இருந்தா, செவ் இருந்தானுட்டு சுக்கிரன் வரை வரிசையா தரப்போற பலன்கள் நடக்கலாமே தவிர அந்த துர்பலன்களை தவிர்க்க நான் தரப்போற பரிகாரங்கள் மட்டும் சமச்சீர் கல்விக்கான புஸ்தவங்க மாதிரி மக்கித்தான் போயிட்டு இருக்கும்.

ஓகே எட்டாம் பாவத்துல எந்த கிரகம் நின்றால் என்ன பலன்? எந்த பாவாதிபதி நின்னா என்ன பலன்? ஒரு வேளை துர்பலனா இருந்தா என்ன பரிகாரம்ங்கறதை பார்ப்போம்.

அதுமட்டுமில்லிங்கண்ணா.. ஜாதகம் இல்லாதவுக தங்களோட வாழ்க்கை நிலைய வச்சு தங்கள் ஜாதகத்துல எந்த கிரகம் இந்த லீலைய செய்யுதுனு கெஸ் பண்ணி உரிய பரிகாரங்களை செய்துக்கலாம்.

பஸ் ஸ்டாண்டு கக்கூஸு மாதிரி இந்த பரிகார பேக்கேஜிலும் ஆண்கள் ,பெண்கள் தனித்தனி வரிசையில் மட்டும் வரனும்.

உடு ஜூட்..

Tuesday, July 19, 2011

ஆண் பெண் வித்யாசம்: பாவம் 8 பகுதி: 4


எட்டாம் பாவத்தை பொருத்தவரை ஆண் பெண்களுக்கிடையிலான வித்யாசங்களை திகட்டும் அளவுக்கு பார்த்தாச்சு. ஆணோ பெண்ணோ எட்டாம் பாவம் தொடர்பான தீயபலனை குறைத்துக்கொள்ள என்னெல்லாம் செய்யலாம்னு இந்த பதிவுல பார்ப்போம் ?

எட்டாம் பாவம் கெட்டா என்னெல்லாம் நடக்கும்? பெண் சீக்கிரம் விதவையாவாள் (இது பொது விதிங்கண்ணா - நம்ம அனுபவத்துல நாம கண்டது என்னன்னா இது ஹார்ட்ஃபுல்லா கணவனே வாழ்க்கைன்னு வாழற ஹவுஸ் வைஃபுக்கு மட்டும்தேன் ஒர்க் அவுட் ஆகுது )

மற்றபடி ஆண் பெண்கள் இருபாலாருமே எட்டாம் பாவம் கெட்டால் ஆயுள் பங்கம் , தீராக்கடன், மஞ்ச கடிதாசு தருதல் , விபத்து ,வீண் பழி விழுதல் ,சிறைப்படுதல் ,தீர்க ரோகங்கள், தீராக்கடன், உயிரச்சம் தரும் எதிரிகள்,அடிமையாதல்,அறுவை சிகிச்சை ,கொலை முயற்சி , தனிமைப்பட்டு போதல், நிராகரிக்கப்படுதல் , மர்ம ஸ்தானம் தொடர்பான பிரச்சினைகளுக்கு இலக்காயிருவாய்ங்க. எட்டுங்கறது மறைவு ஸ்தானம் அதனால மரணத்துல மர்மம் கூட நிலவலாம்.

இந்த பட்டியல்ல உள்ள எல்லா தீய பலனையும் தவிர்க்க முடியாதுங்னா. நாம வந்து எலக்ட் ரிக்கல் இஞ்சினீர் மாதிரி. எவ்ளோ கரண்ட் கீது. அதை எப்படி எதுக்கு உபயோகிக்கலாம்னு மட்டும் தேன் சொல்லுவம்.

புதுசா பவர் வேணம்னா புதுசா பவர் கிடைக்கனும். அப்பம் நம்ம புரட்சி தலைவி மாதிரி மன்மோகனாருக்கு உபரி மின்சாரம் கேட்டு ப்ரஷர் கொடுக்கலாம். உபரி மின்சாரம் கிடைக்கனும்னா அதுக்கு கச்சா முச்சான்னு வழி இருக்கு.

இப்பம் நம்மையே எடுத்துககங்க.ராசிக்கு ரெண்டுல சனி .ஆனால் நாளிதுவரை அடி உதை வாங்காம பதிவு போட்டுக்கிட்டே தான் இருக்கோம்.

நமக்கு உபரி பவர் எப்படி கிடைச்சதுங்கற சீக்ரெட்டை போட்டு உடைக்கத்தேன் அவன் அவள் அதுன்னு ஒரு தொடரை ஆரம்பிச்சோம். ஆனால் நம்மாளூங்கள்ளயே அனானி /போலி கமெண்ட் போடற பார்ட்டி இருக்கு - அது இருக்கிற பவரையே என்ன பண்றதுனு தெரியாம தவிக்குது. இதுக்கெல்லாம் உபரி பவர் கொடுத்து எதுக்கு சனத்தை இம்சை பண்றதுன்னு ஆத்தா நம்மை ஆஃப் பண்ணிட்டா.

பவர் போனதும் ஜெனரேட்டர் ஆன் பண்ற பார்ட்டி நாம இல்லை. ஆத்தா சொன்னா கேட்டுக்கனும்னு விட்டுட்டம். சில மாதங்களுக்கு மிந்தி நல்ல கோடையில இந்த ஈபி காரவுக லந்து தாங்க முடியாம இர்ரிட்டேட் ஆகி யுபிஎஸ் ஏற்பாடு பண்ணிட்டன். ஒரு வாரம்தேன். படக்குனு ரியலைஸ் ஆகி அதை நம்ம பாப்பா வேலை செய்யற ஃபோட்டோ ஸ்டுடியோவுக்கு கொடுத்தனுப்பிட்டன்.

அடிஷ்னல் பவர் -சோலார் பவர் - சைக்கிக் பவர் பத்தியெல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம். இப்பம் பவர் மேனேஜ்மென்ட் மட்டும்தேன்.

மேற்சொன்ன தீயபலன்ல எதையெல்லாம் உங்களால தாங்கிக்கமுடியும் -எதை தாங்கவே முடியாதுன்னு ரெண்டு பிரிவா பிரிச்சு ஒரு லிஸ்ட் பிரிப்பேர் பண்ணிக்கங்க.

தாங்கிக்கமுடியாத ஐட்டங்களை தவிர்க்க தாங்கக்கூடிய ஐட்டங்களை நீங்களே வாலன்டியரா ஒபே பண்ணுங்க.

உ.ம் சிறை வாசத்தை தவிர்க்கனுமா? உங்க அறையே சிறையாகட்டும்.

ஆனால் நான் மட்டும் இந்த பதிவுல எல்லா தீயபலன் களையும் தவிர்க்க பரிகாரங்களை தந்துர்ரன். எல்லாத்தையும் கலந்து கட்டியா பண்ணா பெருசா பலன் கிடைக்காது. குவாலிட்டி ஏறனும்னா குவான்டிட்டிய குறைச்சுத்தேன் ஆகனும். பாக்கெட் தயிர்ல பக்கெட் மோர் வருமா பாஸ்? .

அல்ட்டிமேட் சொல்யூஷன்:

உதிரி உதிரியா அதுக்கு இதுக்குன்னு தனித்தனியே பரிகாரம் செய்து அல்லாடாம எதுனா சுருக்கமான குறுக்குவழி இருக்கான்னு கேப்பிக. சொல்றேன்.

எட்டாமிடத்து தோஷம் மேக்சிமம் என்ன செய்துரும்? மரணத்தை தரும். மரணத்தை தவிர்க்க ஒரே வழி மரணமடைஞ்சுரனும்.

ம ...........ர..................ண...............மா?

ம்ரணத்துல எத்தனையோ வகை இருக்கு தெரியுமோ? எக்கனாமிக்கல்,சோஷியல்,பொலிட்டிக்கல், சைக்கலாஜிக்கல்னுட்டு பல வகை மரணங்கள் இருக்கு. .

மேலும் உங்க மரணத்தால என்ன நடந்துரப்போகுது? நீங்க பதிவ்ரா இருந்தா அடுத்த பதிவு வெளிவராது அம்புட்டுதேன்.

அதை நீங்க உசுரோட இருக்கிறப்பயே செய்து தொலைச்சா பதிவரா நீங்க செத்துப்போயிட்டிங்க தானே? மரணம்னா நீங்க இருக்கமாட்டிங்க தட்ஸால் . நீங்கன்னா ஆரு? உங்க ஈகோ.

இந்த பூமி உருண்டை மேல பூமத்திய ரேகை ,கடக ரேகை அதுஇதுன்னு கோடெல்லாம் இருக்கும். அது இயற்கையிலயே உள்ள கோடா ? இல்லை . புவியியல் நிபுணர்கள் தங்கள் வசதிக்காக போட்ட கோடு.
உங்க ஈகோவும் இதே இழவுதேன்.

ஈகோன்னா என்ன? தன்னை மையமா கொண்டு இந்த படைப்பை பார்க்கிறது. இந்த படைப்புக்கு மையம் எது? எதுவா வேணா இருக்கலாம். ஆனால் நீங்களோ நானோ சைட் மெம்பர்ஸ் மட்டும்தான் கமெண்ட் போடனும்னு என்னை செட்டிங்சை மாத்த வச்ச அந்த அராத்தோ மட்டும் இல்லை.

அந்த அராத்து தன்னை மையமாவே வச்சு ரோசிக்குது. நானும் ஆன்மீகம் எழுதறேன். இந்த பயலும் எழுதறான் ( அடியேன்) ஆனால் நான் எழுதறத 40 பேர் படிக்கமாட்டேங்கறான். இந்த பயல் எழுதினா ஆயிரத்து சில்லரை பேர் படிக்கிறாய்ங்களே..

நான் கைக்காசை மாசம் எண்பது ரூபா செலவழிச்சு பிரவுஸ் பண்றேன். இந்த பயல் கொத்து கொத்தா ஜாதகம் பார்த்து பைசா பார்த்து பிராட்பேண்ட் வச்சுட்டு தாளிக்கிறானே.

பிரச்சினை எங்க வருது? தன்னை மையமா வச்சு யோசிக்கிறப்பதேன். பேசிக்கலா நான் வாசகன் . நான் எழுதவந்ததே எனக்கான எழுத்து கிடைககாம போனதாலதான்.

நான் இன்னைக்கு எழுதற மேட்டரை ஒரு ஜானகிராமனோ, தனிக்காட்டு ராசாவொ எழுதிக்கிட்டிருந்தா நான் பேசாம படிச்சுட்டு ஓட்டுப்போட்டுட்டு போயிருப்பேன்.

நான் யாரோ ஒருத்தரு மையமா இருந்துட்டு போகட்டும்னு தான் பார்க்கேன். எங்க ஸ்டேட்ல ஒய்.எஸ்.ஆர் ஒரு லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்ல அணைகள் கட்ட ஆரம்பிச்சாரு. ஒட்னே நான் ஆ.இ 2000 ஐ ஏறக்கட்டி வச்சுட்டு மைக்கும் கையுமா அலைஞ்சேன்.

இப்பம் சூட்சுமம் புரியுதுங்களா? இந்த படைப்புக்கு நாம மையம் கிடையாது. அப்படி மையம்னு நினைச்சு வாழ்ந்தா நிறைய ஏமாற்றங்களை தாங்க வேண்டி வரும். நானும் எட்டாம்பு படிக்கிற காலத்துல இருந்து டிகிரி செகண்ட் இயர் வரை அப்படி ஒரு பிரமையில தான் வாழ்ந்தேன்.

யாதார்த்தம் படக்குனு என்ட்ரி கொடுத்து பளார்னு ஒரு அறைவிட்டுது. ரோசிக்க ஆரம்பிச்சுட்டன். கவனிக்க ஆரம்பிச்சுட்டன். அதனோட பலன் தான் இந்த பதிவுகள்.

நான் யார்? இந்த படைப்பின் ஒரு அங்கம். பிரிக்கவே முடியாத அங்கம். இரண்டற கலந்துவிட்ட ஒரு அங்கம். இந்த இயற்கைக்கு எங்கே எது நடந்தாலும் அது என்னையும் பாதிக்கும். உ.ம் அல்மட்டி டேம்ல தண்ணி திறந்து விட்டாய்ங்கன்னா அது தத்தி தத்தி எங்க ஊர் என்.டி.ஆர் நீர் தேக்கம் வரை வரும். தெலுங்கு கங்கை கால்வாய் வழியா சென்னைக்கும் வரும்.

இன்னும் ஒரு படி மேல போனா எனக்கு என்ன நடந்தாலும் /எனக்குள்ளே என்ன நடந்தாலும் இந்த இயற்கையும் அதனால மெருகூட்டப்படும் அ மொக்கையாகும்.

இப்படி ஒரு மன நிலை ( ஜஸ்ட் ஃபீடட் நாலெட்ஜா இல்லாம - உரிய அவதானிப்பு -ஆராய்ச்சி - அனுபவத்தோட ) ஒரு மன்சனுக்கு ஏற்பட்டுருச்சுன்னா எட்டாம் பாவம் என்ன? எந்த பாவமும் ஒன்னும் பண்ணமுடியாது.

மரணம் உங்களை பாதிக்காம இருக்கனும்னா மரணத்தோட கை குலுக்கிரனும். மரணம்னா உடல் ரீதியான மரணமாவே இருக்கனுங்கற அவசியமில்லை. நீங்க உங்க ஆன்மாவாவே நினைச்சு பில்டப் பண்ணி வச்சிருக்கிற ஈகோவோட மரணம் கூட போதுமானது.

ஒரு வேளை நீங்களும் என்னாட்டம் மென்மையான மனம் கொண்டவரா இருந்தா ஒரு பிரிவு கூட மரணம் தேன். ஒரு நிராகரிப்பு கூட மரணம்தேன்.

ஒவ்வொரு பிரிவையும்/ நிராகரிப்பையும் டாலரேட் பண்ணிக்கிட்டு -உங்களை நீங்க ம்ராமத்து பண்ணிக்கிட்டு மீண்டு வர்ரிங்க பாருங்க அது உங்களோட மறு பிறவி. உங்க மரணம் ஏற்கெனவே நடந்தி போச்சு . எட்டாம் பாவத்து தோஷம் ஃபணால். நீங்க புதுசா பிறந்துருவிங்க. உங்க ஆயுள் இரட்டிப்பாகும். உங்கள்ள இருந்த மலினத்துல ஒரு 10% ஆச்சும் எரிக்கப்பட்டிருக்கும்.

அப்படியல்லாது எருமைத்தோலோட , மூக்கடியில வந்துட்டானேங்கற பதைப்பு கூட இல்லாம தொடர்ந்து அனானி கமெண்ட் போடற பிக்காலிங்க எத்தீனி தாட்டி உடல் ரீதியாவே செத்து மறுபடி மறுபடி பிறந்து வந்தாலும் அந்த பிறப்பும் ஒரு மரணம்தேன்.

இயற்கை அவனை பார்த்து வடிவேலு கணக்கா " இவன் அவனா"ன்னு ஐடென்டிஃபை பண்ணிரும்.

(தொடரும்)

Monday, July 18, 2011

ஆண் பெண் வித்யாசங்கள்: 8 ஆம் பாவம் (3)


எட்டாம் பாவம் விபத்துகளையும் காட்டும். விபத்துல ரத்த சேதம் சகஜம். ஆனால் பெண்களுக்கு மாதவாரி ரத்த சேதம் நடக்கிறதால விபத்தும் தவிர்க்கப்படுது. (அதே நேரத்துல செவ் தோஷம் லேசா இருந்தாலும் - ஐ மீன் பரிகாரமே ஆகியிருந்தாலும் - "அந்த" விஷயத்துல இஷ்டாஆஆத்துக்குலொள்ளு பண்ணி குழந்தை பிறப்புல பிரச்சினை கொடுக்கிறதோட கருப்பை வாய்ல / கருப்பையில கேன்சர் வரை கொண்டு போயிருது. அது வேற மேட்டரு)

என்ன அண்ணே ! இப்படி ஊத்தறிங்க. விபத்துல பொம்பள சாகிறதே இல்லியா? ரத்த சேதம் நடக்கிறதே இல்லியானு கேப்பிக. சொல்றேன். பெண்ணுக்கு வீடுங்கறது சிறை. சிறையில இருக்கிறச்ச அவள் அடிமை. எட்டாம் பாவ எஃபெக்டே வேலை செய்யாது. விபத்து பிரயாணத்துலதானே நடக்குது. பிரயாணத்துல கால் காசு சுதந்திரத்தையாவது அனுபவிக்கிறாளே. அதனாலதேன் விபத்துங்கற ஆப்பு.

அஸ்குபுஸ்கு அப்ப வீட்ல விபத்து நடக்கிறதில்லையானு கேப்பிக. சொல்றேன்.எட்டாமிடம் அனானி கமெண்ட் /என் பேர்ல கமெண்ட் போடற இழவாட்டம் கெட்டு குட்டி சுவராகியிருந்தா வீட்லயும் நடக்குது. ஆனா டிமஸ்டிக் ஆக்சிடெண்ட்ஸ்ல எத்தீனி பர்சண்ட் உண்மையான விபத்துன்னும் ஒரு கேள்வி வருதே.


பெண்ணை பெத்தவனுக்கு கல்யாணத்துக்கு இன்னொரு பெண் இருந்தா / மாப்பிள்ளை வீட்ல ஆராச்சும் எஸ்.பி கிட்டே ட்ரைவரா இருந்தா கம்ப்ளெயிண்டே ஆகாது.

தப்பித்தவறி கம்ப்ளெய்ன் ஆனாலும் மாப்பிள்ளை தரப்புல மாஜி கவுன்சிலர் வந்து சிபாரிசு பண்ணாலே போலீஸ்ல எஃப்.ஐ.ஆரை மாத்திர்ராய்ங்க.

(இது மொதல் பகுதியிலயே வந்திருக்கவேண்டிய / விடுபட்டுப்போன பாய்ண்ட் இது .அதான் பொறுப்பானவர்கள் போடற மறுமொழிகளுக்கிடையில சில பிக்காலிங்க போட மரு மொழியா இருந்தாலும் பரவால்லைனு மொதல்ல சொல்ட்டேன்)

கடந்த பதிவுல என்ன சொல்லிட்டிருந்தோம்?

மனித குலம் பை பர்த் சுதந்திரத்தோட பிறக்குது.போக போக அடிமைப்பட்டு போகுது. கல்யாண் இந்த பதிவு ( ஐ மீன் கடந்த அத்யாயம்) பெண்களையே ஃபோக்கஸ் பண்ணுதுனு சொல்லியிருந்தாரு. பேலன்ஸ் பண்ணிருவம்.

ஆணும் அடிமைதேன். ஆஃபீசருக்கோ -பார்ட்னருக்கோ - ரவுடிக்கோ -தாதாவுக்கோ- கடன் காரனுக்கோ -சொத்துக்கார அப்பனுக்கோ எங்கயோ ஒரு இடத்துல அடிமையாயிர்ரான்.

இயற்கை தனக்கு தந்த சுதந்திரத்தை விலையா கொடுத்து அந்த அடிமைத்தனத்தை வாங்கிக்கிட்டதும் இவன் தேன். ஆனால் அந்த அடிமைத்தனம் தனக்குள் விளைவிக்கிற் ஆற்றாமை -கோபம் - ஆங்காரம் எல்லாத்தையும் பொஞ்சாதி மேல காட்டிர்ரான்.

இவன் வெளியிடத்துல அடிமையா இருந்து தன் ஜாதகத்துல உள்ள எட்டாம் பாவ தோஷங்களுக்கு செய்துக்கிட்ட பரிகாரம்லாம் வீட்டுக்கு வந்ததும் ஃபணால் . ஆயிருது.. ஏன்னா இங்கன இவன் பாஸ் ஆகி -தன் பாஸை விட கோரமா பொஞ்சாதிய டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுர்ரானே.

பொஞ்சாதி தன் புருசன் பண்ண டார்ச்சரையெல்லாம் பசங்க மேல காட்டிர்ரா. ஃபேமிலி போலீஸ் ஸ்டேஷன் மாதிரி ஆயிருது. சி.ஐ எஸ்.ஐயை பிடிச்சு ஏறியிருப்பாரு. எஸ்.ஐ ஏ.எஸ்.ஐ ய ஏறுவாரு. ஏ.எஸ்.ஐ ஏட்டை ஏறுவாரு.ஏட்டு கான்ஸ்டபிளை -கான்ஸ்டபிள் புகார் கொடுக்க வந்த ஏழை பாழைய ஏறுவாரு.

வீடு கோவில் மாதிரி இருக்கனும் - பல்கலை கழகம் மாதிரி இருக்கனும்னு பெரியவுக சொல்றாய்ங்க. (கோவிலா இருந்தா அவா நுழைஞ்சுருவா -பல்கலைகழகமா இருந்தா ஊழல் நுழைஞ்சிரும் அது வேற சங்கதி) ஆனா ஊடு போலீஸ் ஸ்டேஷன் மாதிரி ஆயிட்டா என்ன கதி?

ஒரு இடத்துல நடக்கக்கூடிய நல்லது கெட்டதை அந்த இடத்தோட வாஸ்து மட்டுமில்லை -அங்கே வசிக்கிறவுகளோட எண்ண அலைகளும் நிர்ணயிக்குது.

பத்து வருசத்துக்கு மிந்தி வாஸ்துன்னா இன்னான்னே தெரியாது. அப்பல்லாம் ஊடு கட்னவுங்க வாஸ்து பார்த்தா கட்டினாய்ங்க.இல்லியே. ஆனால் ஓரளவுக்காச்சும் நிம்மதியாதானே வாழ்ந்தாய்ங்க. இப்பம் மட்டும் வாஸ்து ஏன் இப்படி கச்சா முச்சான்னு பாதிக்குது.?

எண்ண அலைகள் மாறிப்போச்சு. இன்னைக்குள்ள அதே பார்லிமெண்ட்ல தான் அரியலூர் ரயில் விபத்துக்காக சாஸ்திரி ராஜினாமா பண்ணாரு. இன்னைக்குள்ள மந்திரிங்களை பிரதமர் விபத்து ஸ்தலத்தை பார்வையிட சொன்னாலே சுணங்குறாய்ங்க.

என்ன ஆச்சு? எண்ண அலைகள் மாறிப்போச்சு. போலீஸ் ஸ்டேஷன்ல கைதி தூக்குப்போட்டு சாவு -லாக்கப் டெத் சம்பவங்கள் நடக்க காரணம் இந்த எண்ண அலைகள் தேன்.

அடிமைங்கறவனோட உடல் வேணம்னா அடிமைப்பட்டிருக்கலாம். ஆனால் அவனோட எண்ணங்கள் அடிமைப்பட்டு கிடக்கிறதில்லையே?

ஸ்கூல்ல படு ஸ்ட்ரிக்டா இருந்து பசங்களை ட்ராயர்லயே ஒன்னுக்கிருக்க வைக்கிற வாத்தியாருங்க பொயப்ப பாருங்க. பிள்ளையே இருக்காது. இருந்தாலும் உருப்படாது.உருப்பட்டாலும் வாத்யாரை திண்ணையில உட்கார வச்சுரும். அ நல்லவயசுல செத்துப்போயிரும். இதுக்கு ஏன் அந்த மாணவர்களோட எண்ண அலைகள் காரணமா இருக்கக்கூடாது?

இங்கன வாத்யாருங்கறதுக்கு பதில் புருசன்னு வச்சு ரோசிங்க. சர்க்கிள்ள பதிவிரதா சிரோன்மணினு பேர் வாங்கின இல்லத்தரசியோட புருசன் எல்லாம் வெளி உலகத்துல டம்மி பீசா இருப்பான்.

பொஞ்சாதிக்கு பயிட்டு தூக்கறவன்லாம் லட்சத்துல புரள்வான். ஆனால் படக்குனுஅவன் பொஞ்சாதி பேஷண்டாயிரும். இவனுக்கு இன்னொரு லட்டு கிடைக்கும்.

இதையெல்லாம் நான் சொல்ல காரணம் அடிமையாதலோ /அடிமைப்படுத்தலோ ஆன்மாவின் இயல்பில்லை.

ஆத்தா சர்வ ஸ்வதந்த்ரி.நாமெல்லாம் அந்த ஆத்தாவோட அம்சம். நாமும் சுதந்திரர்கள் தேன். அதான் நம்ம இயல்பும் கூட. ஆனால் நாம இயல்புக்கு மாறா பிஹேவ் பண்ண காரணம் மரண பயம் அ மரணத்தின் மீதான கவர்ச்சி. ஆன்மாவுக்கு மாதவிலக்கில்லை - ஸ்வப்ன ஸ்கலிதமில்லை - அடச்சீ மரணமில்லைங்கறது மொதல் பாய்ண்டா வந்திருக்கனும்.

ஆனால் நாம ஆன்மாவின் நினைவையே மறந்துர்ரம். ஈகோவை ஆன்மாவா-உசுரா நினைச்சு பிரமிச்சு அதை காப்பாத்த ஆன்மாவை மலினப்படுத்திக்கறோம். ஐ மீன் ஆன்மாவின் இயல்பான சுதந்திரத்தை இழந்துர்ரோம். ( நன்றி:ஓஷோ)

சுதந்திரத்தை அனுபவிக்கிறவனுக்குத்தேன் சுதந்திரத்தோட அருமை பெருமைல்லாம் தெரியும். சுதந்திரத்தை இழந்தவன் படிப்படியா அடிமைத்தனத்தையே ஆதர்ச வாழ்வா நம்ப ஆரம்பிச்சுர்ரான். அதுல அவனுக்கு சுகம் தெரிய ஆரம்பிச்சுருது. அதையே -அடிமைத்தனத்தையே தன்னை சேர்ந்தவங்களுக்கும் பரிசா தர ஆரம்பிச்சுர்ரான்.

சந்தோசத்துல உள்ளவன் சர்வஜகத்தையும் சந்தோசப்படுத்த நினைப்பான். அவனோட சந்தோசத்துக்கு ஒரு மசுரும் தேவையில்லை.

துக்கத்துல உள்ளவன் சகலரையும் துக்கப்படுத்தத்தான் நினைப்பான். அவனோட துக்கத்துக்கு சின்ன காரணம் போதும்.

உ.ம் கடுமையான மலச்சிக்கல் உள்ளவன் பஸ் ஸ்டாண்ட் கக்கூஸு காண்ட்ராக்ட் எடுத்தானு வைங்க. ரெட்டை கட்டணம் வாங்குவான். டப்பாவுல பெரிய ஓட்டையா போட்டுவைபபன், தண்ணியே இல்லாம பண்ணுவான். கதவுக்கு தாழில்லாம ஆக்கிருவான்.

சந்தோசத்தை தர்ரது சுதந்திரம். அது ஆன்மாவின் இயல்பு. இதைத்தேன் கிட்ண பரமாத்மா சுதர்மம்ங்கறாரு.

சுதந்திரத்தை விரும்பறவன் -தன் இயல்பு நிலைய மறக்காதவன் - ஆன்மாவில் நிலை கொண்டிருப்பவன் எதிராளியை அடிமைப்படுத்தனும்னு நினைக்கமாட்டான்.

அடிமைப்படுதலும் -அடிமைப்படுத்துதலும் இல்லாத இடத்துல வாஸ்து மசுருல்லாம் மசுரு கூட வேலை செய்யாது,அடிமைப்படுதலும் -அடிமைப்படுத்துதலும் உள்ள இடத்துல ஆதி சங்கரரே மறுபடி வந்து ஸ்ரீசக்கர ப்ரதிஷ்டை செய்தாலும் உருப்படாது.

அடிமைப்படுதலும் - அடிமைப்படுத்துதலும் செய்பவன் ஆன்மாவோட வாசனைய கூட அறியலைனு அர்த்தம். ஆன்மாவுக்கு ஆண்,பெண் வித்யாசமில்லை - சாதி ,மதமில்லை - ஆன்மா சுதந்திரத்துல தான் பரிமளிக்குது. ஆன்மா பரிமளிக்கும் போது அங்கே அனானி கமெண்டுகளுக்கோ - மண்டையில உள்ள மஷ்டுவையெல்லாம் நரகல் நடையில வெளிபப்டுத்தறதுக்கோ வாய்ப்பே கிடையாது.

ஏதோ படத்துல தமிழ் திரையிலகின் இரு துருவங்களில் ஒரு துருவமான சிவாஜி கொள்ளையடிச்சு கோவில் கட்டற ஆழ்வார் ரோல்ல நடிக்கிறாரு. புதுமுகமான சிவகுமார் பெருமாளா வர்ராரு.

சிவகுமார் -பெண்டாட்டி சகிதமா காட்டுவழியில வர சிவாஜி கொள்ளையடிக்கிறாரு. சிவகுமாரோட கால் விரல்ல ஏதோ ஆபரணம். அதை வாயால கழட்டி எடுக்கனும் .இதான் காட்சி.

சிவாஜி சிவகுமார் காலை நோக்கி குனிஞ்சப்போ ஒரு ஷாட் - நிமிர்ந்தப்போ வாய்ல அந்த ஆபரணத்தோட ஒரு ஷாட் எடுத்துட்டா மேட்டர் ஓவர்.

ஆனால் படத்துல அப்படியா வருது? இல்லையே சிவாஜி சிவகுமாரோட கால் விரல்ல இருந்து அந்த ஆபரணத்தை வாயாலயே கழட்டறாரு.

சிவாஜி தன்னோட ஆத்மாவை கொஞ்சமாச்சும் உணர்ந்திருக்கனும். அப்பத்தேன் ஈகோங்கறது தன் ஆன்மா இல்லை - உசுரு இல்லேங்கற தெளிவு அவருக்குள்ள பிறந்திருக்கும். அந்த தெளிவின் காரணமாத்தான் அதுமாதிரி ஒரு காட்சியில நடிச்சிருக்காரு.

அடிமையோட வாழறது பெரிய ரிஸ்கு .ஏண்டான்னா அடிமை என்னைக்கோ ஒரு நா புரட்சி பண்ணப்போறது நிச்சயம்.

இப்பம் டிசைட் பண்ணுங்க. அடிமைப்படப்போறிங்களா? உங்க எண்ணங்களோ உங்க எஜமானருக்கு ஆப்பாயிரும். உங்க எஜமானர் மேல உங்களுக்கு உண்மையிலயே லவ் இருந்தா - உடனே புரட்சிபண்ணுங்க. அட்லீஸ்ட் இந்த பதிவொட ப்ரிண்டை அவுட்டை படிக்க கொடுங்க. இது ஆன்மாவை நோக்கிய பயணத்துக்கு அவரை திருப்பட்டும்.

இப்பம் டிசைட் பண்ணுங்க அடிமைப்படுத்தப்போறிங்களா? தனிமைப்பட்டு போவிக. தனிமை மரணத்துக்கு ட்ரெய்லர் மாதிரி. அது உங்களை இருட்டுக்கு தள்ளும். இருட்டு மரணத்துக்கு பைலட் பிராஜக்டு.

ஆன்ம நிலையில அடிமைப்படுதலும் இல்லே -அடிமைப்படுத்தலும் இல்லே. இல்லவே இல்லை. பூர்வ கருமங்கள் எதுவும் உங்களை அண்டாது .ஒண்டாது. கிண்டாது.

(ஸ் .. அ..ப் ........பாடா.. இன்னைக்கு என்னாச்சு ? பதிவே நியூஸ் ரீல் மாதிரி ஆயிருச்சு)

Sunday, July 17, 2011

ஆண் பெண் வித்யாசம்; 8 ஆம் பாவம் (தொடர்ச்சி)


ஜாதகத்துல எட்டாம் பாவம் அடிமைத்தனததை காட்டுது. அந்த அடிமைத்தனத்தால பல நன்மைகள் கிடைக்குதுன்னு சொல்லியிருந்தேன். ஆணும் ஏதோ ஒருவகையில அடிமையாத்தான் இருக்கான். ஆனால் அவனோட அடிமைத்தனத்துக்கு பிரதிபலன் கிடைக்குது. பெண்ணோட அடிமைத்தனத்துக்கு கிடைக்கும் பிரதி பலன் என்ன? இந்த உலக உருண்டையத்தனை பெரிய பூஜ்ஜியம். அதனால பெண்ணோட ஜாதகத்துல எட்டாமிடம் சுபபலமா இருந்தா கண்ணாலமாகுது அவள் அடிமையாகிறாள். அடிமையானதுக்கு . அவளுக்கு ஒரு மசுரும் கிடைக்கறதில்லை. இதனாலதேன் தாய்குலத்துக்கு ஆயுள் சாஸ்தி. (கம்பேரிட்டிவ்லி)

அவள் அடிமையா இருக்கிறதால எட்டாமிடம் கெட்டால் ஏற்படக்கூடிய பல தீயபலன் அவாய்ட் ஆயிருது. சுதந்திரம்னு இறங்கினாத்தேன் எட்டாம் பாவத்தோட இதர காரகத்வமெல்லாம் ஆப்பு வைக்குது . உ.ம் சீட்டுப்போட்டா /ஐ.பி போட வேண்டி வருது / தலைமறைவாகவேண்டி வருது/காவல் நிலையம் -கோர்ட்டுனு அல்லாட வேண்டி வருது. சுதந்திரம்னு ட்ராஃபிக்ல டூ வீலர்ல பறந்தா உயிர் ஆக்சிடென்ட் நடக்குது. சுதந்திரம்னு ஆளை மாத்தினா அரிவாள் வெட்டு கிடைக்குது. தன்னைத்தான் கேள்வி கேட்டுக்கிட்டா தற்கொலை பண்ண வேண்டி வருது . புருசனை கேள்வி கேட்டா அவன் கொலை பண்ணிர்ரான். இன்னும் கட்டற்ற சுதந்திரம்னு காண்டொம் யூஸ் பண்ணாம திரிஞ்சா இன உறுப்புல நெருப்பு வச்ச கணக்கா எரியற வியாதியெல்லாம் வந்துருது.

இப்ப ஒடனே என் நெம்பரை டயல் பண்ணி "என்னண்ணே சொல்ல வர்ரிங்க? பெண் அடிமையாவே இருந்துட்டா சேஃப். சுதந்திரம்னு கேட்டா ஆஃப்ங்கறிங்களா? "னு கேட்க போறிங்க. அப்டித்தானே?

கூல்! கூல் ! ஹ்யூமன் லைஃப்ல - வாழ்க்கை சக்கரத்துல - இயற்கையோட சட்ட திட்டங்கள்ள ஒரு வினோத விதி இருக்கு. அதுக்கு ரிவர்ஸ் எஃபெக்டுனு பேரு. (ஓஷோ இதுக்கு சிம்பிளா சின்னவயசுல சிறுவர்கள் சிறுவர்களையும் /சிறுமிகள் சிறுமிகளையும் மட்டுமே விரும்பறதை உதாரணமா சொல்வாரு)

பெண் மட்டுமல்ல எந்த உயிரும் விரும்புவது சுதந்திரத்தை தேன். ஏன்னா அதனோட உண்மையான இறுதியான வடிவம் ஆன்மா. அது கட்டற்ற சுதந்திரம் கொண்டது. ஆத்தாளை " சர்வ ஸ்வதந்த்ராயை ஸ்வாஹா"ன்னு போற்றிப்பாடறாய்ங்க.

நாமெல்லாம் அவளோட பிள்ளைகள். தாயை போல பிள்ளைங்கறதை அனானி கமெண்ட் போடறதுல தான் ப்ரூவ் பண்றோம் அது வேற விஷயம். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? ( அனாவசியமா இதுல கலைஞர் -கனிமொழியை போட்டு குழப்பிக்காதிங்க) ஆத்தா சர்வ ஸ்வதந்த்ரின்னா நாமளும் சர்வ சுதந்திரர்களாதானே இருக்கனும். ஏன் இப்படி அடிமைப்பட்டு போனோம்.

பாய்ண்ட் நெம்பர் ஒன் இந்த பாடி. பேபி லைட் மேல கவுத்து போட்ட கோழிக்கூடை மாதிரி கிடக்கு. அடுத்து நம்மளோட பிரமைகள். .

எட்டாமிடம் மரணத்தை காட்டுமிடம். மரணம் விசித்திரமானது . ஒரு வகையில நம்மை கவரவும் செய்யுது.
அதனாலதேன் லவ் பண்றோம். ( லவ்வரோட மாமன் மிலிட்டரி பார்ட்டியா இருந்து பொட்டுன்னு சுட்டுருவானே) இன்னொரு வகையில டர்ராக்கவும் செய்யுது..தூக்குப்போட்டு தற்கொலை செய்துகிட்டவுக கழுத்துல ஒன்னுக்கு மேல தூக்குக் கயிறோட அடையாளம் இருக்கும். ஏன்னா கடைசி நொடியில வாழனுங்கற எண்ணம் வந்திருக்கும். இவன் அதை விலக்க ட்ரை பண்ணியிருப்பான்.

நம்ம டோட்டல் லைஃபையும் மரணம்தேன் வழி நடத்துது. ஒன்னு மரணம் குறித்த அச்சம். இன்னொன்னு மரணத்தின் மீதான கவர்ச்சி. எப்படி பார்த்தாலும் மரணம்தான் " எல்லோர்க்கும் வழி காட்ட நானிருக்கிறேன்"ன்னு ஒவ்வொருத்தர் லைஃப்லயும் சோலோவா பாடுது.

கொய்யால மரணம்னா என்ன? நான் இல்லாத உலகம் . உனக்கு இந்த உலகத்தை முழுசா தெரியாது. உலகத்துக்கு ? உன்னை தெரியவே தெரியாது. சாவை சிந்திக்கிறது வேற ..சந்திக்க துணியறது வேற சந்திக்கிறது வேற.

சந்திக்க துடிக்கிறது - கச்சாமுச்சான்னு டர்ராகி ஒதகாத மேட்டரையெல்லாம் - இருட்டு -தனிமை -ஏழ்மை - நிராகரிப்பு - மரணத்தோட முடிச்சு போட்டு அதோட எல்லாம் போராடி என்னைக்கோ வர்ர சாவை இன்னைக்கே வெத்தலைபாக்கு வச்சு கூப்பிடறது வேற.

இந்த மாரி மரணத்துக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துட்டு தெனாலி கமல் மாதிரி பயம் பயம் பயம் அதுலயும் மரண பயம். மரணத்துக்கும் நம்ம பயத்துக்கும் என்ன சம்பந்தம்னே தெரியாத பயம்.

பயம் பலவீனத்தை தருது .பலவீனம் பிரமைகளை அதிகரிக்குது. சத்தியத்தை மறைக்குது. மன்சன் ஜஸ்ட் மரணத்துக்கு மட்டும் பயந்தா கூட இந்த அளவுக்கு நாறியிருக்க மாட்டான். அல்லாரும் ஆடு,மாடு மாதிரி இலை தழைய தின்னுக்கிட்டு ராம் தேவ்பாபா மாதிரி யோகா பண்ணிக்கிட்டு லுல்லாவை ச்சூ ச்சூ போறதுக்கு மட்டும் உபயோகப்படுத்திக்கிட்டு வாழ்ந்துக்கிட்டிருந்திருப்போம்.

இருட்டு -தனிமை -ஏழ்மை - நிராகரிப்பு -தூரம் -பள்ளம் -திறந்தவெளி - இப்படி ஒன்னுதானில்லை சகலத்துக்கும் மரணத்தோட ஒரு முடிச்சை போட்டு பயந்து சாகிறோம். இந்த மரணத்தோட நிழல்களோட மோதி மோதி சாகிறோம் ( முன் கூட்டி)

குழந்தைக்கு குண்டலி ஆக்னால இருக்குமாம். அது ஆணையிடற பொசிஷன்ல இருக்கும். அது ஆருக்கும் அடிமையில்லை. அது அழ ஆரம்பிச்ச பிறவு தாவுத் இப்ரஹீமே ஃபோன் லைன்ல வந்து "மூச்" னுட்டு ஹை டெசிபல்ஸ்ல கத்தினாலும் அதும்பாட்டுக்கு கத்திக்கினே தான் கடக்கும்.

( பேச/பாட முடிஞ்சா - நான் ஆணையிட்டால்னு ஆரம்பிச்சு டி.எம்.எஸ் மாதிரி சோலோ கூட பாடும். ஆனால் ஸ்டெப் பை ஸ்டெப் சுதந்திரத்தை இழந்துருது. விட்ட குறை தொட்ட குறையா எதுனா வெளிப்புற தூண்டுதல் ஏற்பட்டாலன்றி தின்னு -கழிஞ்சு - மிஞ்சிப்போனா கெட்டகாரியம் பண்ணியே அழிஞ்சு போயிருது.


இப்படி சுதந்திரம்ங்கறது ஆண்குழந்தைக்கு மட்டுமில்லை -பெண்ணுக்கும் பை பர்த் தரப்படுது. அம்மா ஊட்ல அம்மாக்காரி எதுனா நச் அடிச்சா அப்பங்காரன் " அடச்சீ.. அது போற இடத்துல எப்படி இருக்குமோ என்னமோ .. இங்கன கூட ச்சொம்மா கடுப்படிச்சுக்கிட்டு"ன்னு சப்போர்ட் பண்ணுவான்.

அப்பன் காரன் எதுக்குனா சீறிப்பாய்ஞ்சா அம்மாக்காரி " யோவ்.. கைய அடக்கு அது வளர்ந்து அடுத்த வீட்ல வாழப்போற பொண்ணு"ன்னுட்டு ப்ரேக் போடுவாள்.

ஆனால் மனித மனம் விசித்திரமானது அது நிகழ்காலத்தை மதிக்கிறதே இல்லை. எதிர்காலத்தை தேன் கனவு காணுது .அல்லது கடந்த கால நினைவுகள்ள மூழ்கிப்போகுது.

பெண் இயற்கை அவளுக்குள் விதைத்திருக்கும் பொறுப்பின் உந்துதலாலோ பருவம் தரும் துடிப்பாலோ முகம் தெரியாத ஒருத்தனை கனவு காண ஆரம்பிக்கிறாள்.

கனவுக்கு பட்ஜெட் பிரச்சினைல்லாம் கிடையாதே. அந்த கனவு தரும் மதர்மதர்ப்பில் தாய் வீட்டை வெறுக்க ஆரம்பிச்சுர்ரா. எப்பதான் இங்கனருந்து ஒழிவேனோன்னு முனுமுனுக்க ஆரம்பிச்சுர்ரா.

எதையுமே இழந்த பிற்பாடுதேன் அதனோட அருமை தெரியுது. அருமை தெரிஞ்சு அதை பொத்தி வச்சுக்கலாம்னு பார்க்கிற நேரத்துல அது திரும்பி வர்ரதே இல்லை.

அப்படித்தேன் பெண் தாய் வீட்டை இழந்துர்ரா. சரி ஒழிஞ்சு போவட்டும் புகுந்த வீட்லயாவது இது நான் கனவு கண்ட சொர்கம்னு அஜீஸ் ஆயிர்ராளான்னா இல்லை. அக்கரைக்கு இக்கரை பச்சை மாதிரி இப்பம் தாய் வீட்டு சுக போகங்களை (?) எண்ணி ஏங்கறா.

இந்த சிச்சுவேஷனுக்கு நான் ஒரு ஜோக் எழுதினேன்.

மனைவி: எங்க வீடு கோவில் மாதிரிங்க
கணவன்: அப்ப தெருத்திண்ணையில கிடக்கிற உங்கப்பன் பிச்சைக்காரனா?

ஆன்மா கட்டற்ற சுதந்திரம் கொண்டது. ஆனால் நாம ஆன்ம வடிவுல இருந்தப்ப உடல் என்ற சிறையை வேண்டி தவம் இருக்கோம். கொய்யால உடலோட இருக்கும்போது ஆஸ்ட்ரோ ட்ராவல் - காத்துல பறக்கறதுனு ஜல்லியடிக்கிறோம். இதெல்லாம் தேவையா?

இந்த எட்டாம் பாவத்துக்கும் அது தர்ர அடிமைத்தனத்துக்கும் ஒரு வேட்டு வைக்க வழியே இல்லையா? முக்கியமா தாய்க்குலம் - சனத்தொகையில சரி பாதி - அடிமைகளா இருந்தா - எப்படா எஜமானனுக்கு பெரலிசிஸ் ஸ்ட்ரோக் வரும் -எப்படா இவன் ஐ.பி போடுவான்னு புரட்சி பண்ண காத்துக்கிட்டிருந்தா -அந்த குடும்பம் என்ன ஆறது ? அந்த குடும்பத்து பிள்ளைகள் நாளைக்கு ஐ.ஏ.எஸ் ஐபிஎஸ் ஆனா எப்டி? எல்லாத்தையும் அடுத்த பதிவுல பார்ப்போம்.

Saturday, July 16, 2011

ஆண் பெண் வித்யாசம் : 8 ஆம் பாவம்


இந்த தலைப்புல 1 முதல் 7 பாவங்களை அனலைஸ் பண்ணியாச்சு. இன்னைக்கு எட்டாம் பாவம்.இது ஜாதகரோட ஆயுள்,கொலை,தற்கொலை விருப்பம், விபத்துகள்,செயிலுக்கு போறதை ,ஐபி போடறதை இன உறுப்பை காட்டற இடம்.

"தலை ! வசம்மா மாட்டிக்கிட்டிங்களா ..இதெல்லாம் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுதானே. இதுல எல்லாம் ஆண் பெண்ணுக்கு என்ன வித்யாசம் கிடக்கு".ன்னுட்டு ஆருப்பா அது குரல் கொடுக்கறது.

மொத பாரால முக்கியமான மேட்டர் விட்டுப்போச்சு எது இன்னாடன்னா ''அடிமைப்படுதல்".இன்னைக்கு தாய்க்குலம் கலெக்டரா இருந்தாலும் எஸ்பியா இருந்தாலும் - தாளி மத்திய மந்திரி அக்கா மகளாவே இருந்தாலும் அடிமையாதான் வாழ்ந்துக்கிட்டிருக்கா. எதிர்த்து கேள்வி கேட்கப்படும்போது கொல்லப்படறா.
( அல்லது புதுசா பிறக்கிறா)

வாத்யாரு . "அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு"ன்னு பாடி வச்சாலும் அடிமையா கிடக்கிறதுல நிறைய லாபம் இருக்குங்ணா.

ரோச்சிக்க தேவையில்லை - முடிவெடுக்க வேண்டியதில்லை - தாளி மண்டை சூடாகாது - ராஜ கிரகங்களோட எஃபெக்ட் பெருசா இருக்காது. சாஸ்தி பேச வேண்டியிருக்காது -வாக்கு வாதமா? மூச் ! - தைரியம்? தேவையே இல்லை. மிஞ்சிப்போனா எஜமானருக்கு கில்மா தேவைப்படும்போது லூப்ரிக்கேட்டிங் பிரச்சினை இல்லாம இருந்தா பிரச்சினை ஓவர்.

அடிமையா வாழற பெண்ணுக்கு எந்தெந்த பாவம் தொடர்பான ப்ரஷர் குறையுதுன்னு பாருங்க.

அண்ணன் தம்பி ? ஊஹூம்.. என்னக்கா மாமா நல்லபடியா பார்த்துக்கறாரானு கேட்கறச்ச பார்வைய திருப்பி ( அவிக கண்ணை பார்த்து பொய் சொல்லமுடியாதே) அதெல்லாம் ஒன்னும் பிரச்சினையில்லனு கழ்ட்டிவிட்டுரலாம்.


அம்மா பேன் பார்த்து , தலை பின்னி விஜாரிச்சாலும் இதே இழவுதேன். புத்திக்கு அவசியமே இருக்காது.

எதிரி? ஆருமில்லை. எதிர்க்கவேண்டியவனுக்குத்தேன் அடிமையா கிடக்காளே. அப்படியே சுத்துவட்டாரத்துல எவனா எதிரியா இருந்தா எஜமானருக்கு போட்டு கொடுத்துட்டா தீர்ந்தது கதை . சேமிப்பு? ஆஃபீஸ் போக பஸ் டிக்கெட்டுக்கு கொடுத்த காசுல மிச்சம் பிடிக்கனும்னா நடந்துதேன் போகனும்.அப்படியே சேமிச்சாலும் அதுக்கும் எஜமானன் புருசன் தானே.

தொழில்? ஆஃபீஸ்ல அதிகாரம் தூள் பறந்தாலும் வீட்ல மூச். அக்கா அண்ணன் மேட்டரும் லைஃப்ல பெருசா என்ட்ரி ஆவாது .

"ஏங்க அக்கா பெண்ணுக்கு நிச்சயதார்த்தம்.."

"போன மாசம் தானே பெரிய அக்கா பையன் கல்யாணத்துக்கு போய் வந்தே. இது வெறும் நிச்சயம்தானே.கல்யாணத்துக்கு போலாம் விடு "

"சரிங்க"

(இதுவரை சொல்லிட்டு வந்த சீக்வென்ஸஸ் எல்லாம் துவாதச பாவ வரிசையில அமைஞ்சிருக்கிறத கண்டுபிடிச்சவுக பாக்கியசாலிகள் அவிகளுக்கு காத்திருக்கு ஜோதிட கலைமாமணி பட்டம்.

கட்ட கடைசியா வர்ரது விரய பாவம். இது தூக்கம் ,செக்ஸ், காசு பணத்தை செலவழிக்கிற முறையை காட்டும் இடம்.

காட்சி: 1

"ஏய்.."
"ம் ம்ம் "
"ஏய் உன்னைத்தான்"
"ம்ம்.. டயர்டா இருக்குங்க"
"ஏன் பகல்ல எவனா வந்து டூட்டி பார்க்கிறானா?"

காட்சி: 2

"ஏங்க.."

" ..........."

"ஏங்க தூங்கிட்டிங்களா?"

"கொர் கொர் கொர்"

இதுக்கு மேலயும் காட்சிகள் இருக்கு. அதையெல்லாம் போட்டு தொலைச்சா வம்பாயிரும். ( ஏங்க அதுக்குள்ள ஆயிருச்சானு ஆருப்பா கேட்கிறது -இது அவிக டயலாக்)

இது மெஜாரிட்டி தாய்குலத்தோட செக்ஸ் லைஃப்.. தூக்கம் காலி.செக்ஸ் காலி. காசு பணம்? அதான் முன்னாடியே சொல்ட்டனே பஸ்ஸுக்கு சில்லறை வாங்கிட்டு போற இழவை .

ஒரு பெண்ணுக்கு கண்ணாலமாயி தொலைச்சாலே ( எட்டாம் பாவம் ஆக்டிவேட் ஆகி - இதான் மாங்கல்ய ஸ்தானங்கோ) அவளோட ஜாதகத்துல உள்ள 11 பாவங்களும் சுத்தமா ஃப்யூஸ் போயிருது. ஒரு மண்ணு பலனையும் அவள் அனுபவிக்கிறதில்லை இந்த பாவங்கள்ள . எத்தீனி தோஷமிருந்தாலும் அதெல்லாம் ஃபணால் தேன்.

காரணம் அடிமைத்தனம். அடிமையா இருக்கிற பெண் விஷயத்துல ராஜ கிரகங்கள் -லக்னாதிபதி - சனி - ஏன் நவகிரகங்கள் - துவாதசபாவங்களும் வேலை செய்யறதில்லை. இதான் எட்டாம் பாவத்தை பொருத்தவரை ஆண் பெண்களுக்கிடையில் உள்ள வித்யாசம் .

ஒரே ஒரு அடிமைத்தனமே இவ்ளோ பெரிய வித்யாசத்தை ஏற்படுத்திருது.


கடடம் கட்டமா உள்ள ராசி சக்கரத்தை பாருங்க. 12 டப்பா இருக்கு.இதை இதை அப்படியே ரைட் டாப்ல ஒரு டப்பாவை விட்டுட்டு கட் பண்ணி படுக்கப்போடுங்க. படுக்கப்போட்டதை அப்படியே நிமிர்த்துங்க. பக்கத்துல ஒரு மனிதனை நிற்க வைங்க. 12 டப்பாக்களுக்கு நேர மனிதனோட எந்த அங்கம் வருது பாருங்க. இந்த கணக்குல பார்த்தா எட்டாம் பாவம் "பலான" பார்ட்டை காட்டும்.

இன்னாங்கடா இது ஒரே பாவம் லுல்லாவையும் காட்டுது, ஆயுளையும் காட்டுது. இது ரெண்டுத்துக்கும் இன்னா சம்பந்தம் ஒரு வேளை கில்மாவால அல்பாயுசாயிருவமோ? பொட்டுன்னு போயிருவமோனு டர்ராயிராதிங்க.

பிரம்மச்சாரிகளை விட குடும்பிகள் தான் சாஸ்தி நாள் வாழறாய்ங்க. செக்ஸ் நீண்ட ஆயுளையும் -ஆரோக்கியத்தையும் தர்ரதா லேட்டஸ்ட் ஆய்வுகள் உறுதியா சொல்லுது.

இன உறுப்புக்கும் -ஆயுளுக்கும் உள்ள தொடர்பு என்னன்னா நீண்ட ஆயுள் உள்ளவன் "அளவோடு ரசிப்பவனா " இருப்பான். அவனோட கில்மா ப்ராஜெக்டும் நீண்டதா இருக்கும்.

அற்பாயுள் கொண்டவன்" மீனா ரீனா சீதா கீதா ராதா வேதா"ன்னு அலைவான்.அல்பாயுசுல போயிருவான்.

ஒரே வேலையை தொடர்ந்து செய்தா முட்டாளுக்கும் அதுல பர்ஃபெக்சன் வந்துரும். ச்சொம்மா ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்னு இருந்தா கிழிஞ்சுரும்.

எட்டுங்கறது கடுமையான உடல் உழைப்பை காட்டும் இடம். பலான மேட்டர்ல பல நூறு கலோரி செலவழியற அளவுக்கு உழைப்பு இருக்குன்னு செக்ஸாலஜிஸ்டுங்க சொல்றாய்ங்க.

இந்த மேட்டர்ல கூட உழைக்காத சோம்பேறி வாழ்க்கையில எங்கே உழைக்கப்போறான். உபயோகப்படுத்தாத எதுவும் நாளடைவில் பலவீனமாயிரும். அதேபோல ஹ்யூமன் பாடியும் பீடியாயிரும். செத்துப்போயிருவான்.

இந்த மேட்டர்ல இன உறுப்புக்கு முக்கிய ரோல் இருக்கு. காந்தியோட மூணு குரங்கு பொம்மைகளுக்கு ஃபோஸ் கொடுத்த கமல் நாலாவதா ஒரு ஃபோசை சேர்த்தாரு. ஞா இருக்கா?

வள்ளுவர் "யாகாவாராயினும் நா காக்க"ன்னாரு. ( நா - நாக்கு) நாக்கை மட்டுமே இல்லிங்கண்ணா எல்லாத்தையும் காக்க வேண்டியதுதான்.

இப்படி காக்க காக்கன்னா 108 மேட்டர் இருக்கு. கில்மா கூடாதுங்கறது மட்டும் பாதுகாப்பு முறை கிடையாது. அணை நிரம்பினா ஒன்னு சானலை திறந்துவிடனும். இல்லாட்டி அதுவே வழிஞ்சுரும்.

இது ஆணுக்கு இயல்பாவே நிகழ்ந்துருது. சமுதாயமும் அதை அங்கீகரிக்குது. கல்யாணமானா எல்லாம் சரியா போயிரும்னு சால்ஜாப்பு வேற . அதனால மனிதர்களுக்குள் இருப்பதாக சொல்லப்படும் கொலை -தற்கொலை இச்சை ஆண்களுக்குள்ளே பெருசா - நிரந்தரமா தங்கறதில்லை. ( செக்ஸ் - வன்முறை -பணம்லாம் ஸ்தூலமாதான் வேற மனிதனோட உணர்வுகளை பொருத்தவரை ஒன்னுதேன்)

ஆனா ஒரு பெண் விஷயத்துல மட்டும் டாட்டா விண்வெளி ஆராய்ச்சி மையம் கணக்கா ஒரு பைனாகுலரை வச்சு பார்க்குது சமுதாயம்.

மனிதபிறவியா அவளுக்குள்ளயும் கொல்லும் இச்சை இருக்கு ஆனால் சமூக சூழல் அதை அனுமதிக்கிறதில்லை.ஆல்ட்டர்னேட்டிவா தற்கொலைய ச்சூஸ் பண்ணிக்கிறா. அதான் குடும்ப வாழ்க்கை. ஐ மீன் அடிமை வாழ்க்கை.

ஆண் மனதில் உள்ள கொல்லும் இச்சை நிறைவேறினா அதனோட எக்கோவா இவன் எதிரி மைண்ட்லயும் கொல்லும் இச்சை கிளம்புது. ஒரு நாள் இல்லை ஒரு நாள் இவனை அவன் போட்டுத்தள்ளிர்ரான்.( இதனால ஆண்களுக்கு லைஃப் ரிஸ்க் அதிகம்)

ஆனால் பெண் மனதில் உள்ள கொல்லும் இச்சை கொல்லப்படும் இச்சையா கன்வெர்ட் ஆகி நிறைவேறுது. இதுக்கு எக்கோ ஏதும் கிடையாது. ரிஸ்க் குறைவு. ( இதனால லாஞ்சிவிட்டி அதிகம்)

ஒரு த்ரில்லிங் ட்ரூத் என்னன்னா கணவனோட பொசிஷன் வீக் ஆகும்போது கொல்லப்படும் இச்சையா
கன்வெர்ட் ஆன கொல்லும் இச்சை தன் சுயரூபத்துல வெளிப்பட்டுருது. அது வேற விஷயம்.

ஆணாகட்டும் பெண் ஆகட்டும் சிலருக்கு பை பர்த் இன உறுப்புகள் குறித்த புரிதல் விழிப்புணர்வுல்லாம் செல்ஃப் கண்ட்ரோல் வந்துருது. அல்லாரும் அப்டமன் கார்ட் போட்டுக்கிட்டா வெளிய வராய்ங்க.யாருக்கு எட்டாமிடம் வீக்கோ அவிகளுக்கு மட்டும் பல்பு பெருசாயிருது. ராசா,கனி,தயா கைகள் மாதிரி கண்ட இடத்துல நீண்டு தர்ம அடி வாங்கிதந்துருது.

ஆக எல்லா பார்ர்ட்டையும் போல ஜனனேந்திரியத்தையும் காக்கவேண்டிய அவசியம் இருக்கு. காக்க காக்கன்னா அஜால் குஜால் வேலையில இறங்காம இருக்கிறதே இல்லை. சுத்தம்,சுகாதாரம்,காண்டம் எல்லாமே வருது.

பெண்குட்டிகள் மேட்டர்ல (மலையாள பாஷைங்கோ) இது ரெம்ப முக்கியம்.(பேட் உபயோகிக்கிறது - அல்ப சங்கியைக்கு பிறகு கழுவறது - கால் கழுவறச்ச கீழ் நோக்கி கழுவறது -உபயம்: ஆ.வி.ல ஞானி சார்.

ஒரு பையன் ரெம்ப உத்தமன். குளிக்கிறச்ச சாஸ்திரப்படி இடது கையால கூட தொட மாட்டான். ( எட்டாம்பு படிக்கிற சமயம் நடந்தசம்பவம் இது)

திடீர்னு கின்னஸ் சாதனைக்கு போல ஒரு வாரமா தொடர்ந்து கிட்டார் வாசிக்க ஆரம்பிச்சான். "தத் என்னடா இது"ன்னா பயங்கர நமைச்சல் வலி வீக்கம்னான். படக்குனு டாக்டர்(?) பண்டரிக்கிட்ட கூட்டிப்போனோம். அவர் தோரகா பண்ணி உறிச்சு (பிரசவ அலறல்) வென்னீர்ல அலம்ப சொன்னாரு.

செக்ஸ்ல ஈடுபட்ட ஆணுக்கு எண்டார்ஃபின் என்ற இரசாயனம் சுரந்து அடிச்சு போட்டாப்ல ஒரு சூப்பர் தூக்கம் வருதாம். இதனால மறு நாள் வண்டி ஜோரா ஓடும்.

இந்த எண்டார்ஃபின் உச்சம் பெற்ற பின்னாடி தான் சுரக்கும் போல. இல்லின்னா நிறைய வீட்டம்மாவுக காலங்கார்த்தலயே ஏன் பயங்கரமா கடுப்படிக்கிறாய்ங்க. இதை நானே நிறைய கேஸ்ல பார்த்திருக்கேன்.

ஏன்னா அவிகளுக்கு உச்சம்லாம் நை நை. உழைப்புன்னு பார்த்தா கில்மா மேட்டர்ல ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். காம்ப்ளெக்ஸ் இல்லாத புருசன் அமைஞ்சு - அவன் பெண் மேல் முறைய ஊக்குவித்தா இது சாத்தியமாகலாம்.

இதுவரை சொன்ன விஷயங்களோட சுருக்கம்:

எட்டாமிடம் அடிமைத்தனம் , இன உறுப்பு, ஆயுள்,கொலை,தற்கொலை விருப்பம், விபத்துகள்,செயில் ,ஐபி போடறது இத்யாதியை காட்டற இடம்.

இதுல பெண் விஷயத்துல இந்த எட்டாமிடம் ரெண்டு விதமான ஆப்ஷனை கொடுக்குது .ஒன்னு அடிமையா வாழனும் அ செத்துப்போகனும். அடிமையா வாழறதுக்கும் - செத்துப்போறதுக்கு பெரிய வித்யாசமில்லை. அடிமை இறந்தவனோட சமம். பிணம் மறுபடி இறக்குமா?

அடிமைத்தனத்தை கேள்வி கேட்காம ஏத்துக்கிட்டு வாழ்ந்தா ஆயுள் கூடும். தனக்குள்ளயே கேள்விகள் கேட்டுக்கிட்டிருந்தா அது மனம் உடல் ரெண்டையும் பாதிக்கும் ஆயுள் குறையும்.மன நலம் பாதிக்கும்.

பெண்ணிலான கொலை விருப்பம் தற்கொலை விருப்பமா மாறுது. தற்கொலை விருப்பம் நிறைவேறும்போது எதிராளியின் கொல்லும் விருப்பமும் நிறைவேறுவதால் அங்கே ரிஸ்க் குறைவு.
இதனாலயும் ஆயுள் கூடுது.

ஆனால் ஒன்னு கேள்வியே கேட்காம புருசங்காரனோட கொலை விருப்பத்தை நிறைவேத்திக்கிட்டிருந்தா "பெருசா அடிச்சிட்டதா பீத்திக்காத .. நீ அடிச்சது எனக்கு வலிக்கவே இல்லை . நல்ல டாக்டரா பாரு"னு வடிவேலு சொல்ற மாதிரி புருசன் ஃபீல் ஆயிட்டா நாஸ்தி.

கொஞ்சமா வலிச்சாலும் நிறையவே வலிச்ச மாதிரி ஃபிலிம் காட்டினா இந்த மெத்தட்ல லாபம் சாஸ்தி. இல்லின்னா உனக்கு எப்படி அடிச்சா வலிக்கும்னு கண்டுபிடிக்கிறேண்டின்னுட்டு அவன் சாடிஸ்டாவே மாறிருவான்.

பெண் கடுமையான உழைப்பை குடும்பத்துக்கு தர்ரதாலயும் அவளோட ஆயுள் கூடுது. அடிமைத்தனம் நிறைய தோஷங்களுக்கு பரிகாரமாயிருது. ஒரு கட்டத்துல புருசன் பொசிஷன் வீக்கானா கொலை விருப்பமாவும் மாறுது. இந்த ஸ்டேஜுல திடீர்னு சொந்தமா ரோசிக்க ஆரம்பிக்கிறதால பழக்கமில்லாத பழக்கம்ங்கறதால இவள் அவனை கொல்லப்போடற் திட்டம் உட்கார்ந்திருக்கிற கிளைய வெட்டின கதையா போயிருது.

இவள் வாழ்க்கையே சிறையா இருக்கிறதால சிறை செல்லும் வாய்ப்பு குறையுது. பல பெண்கள் விசயத்துல திருமணமே ஒரு கொடுமையான விபத்துங்கறதால விபத்துகள் நடக்க இருக்கும் வாய்ப்பும் குறையுது.

ஐபிங்கறிங்களா? (இன்சால்வென்ட் பெட்டிஷன்) திருமணங்கற கம்பெனியே ஃபேக். இதுல அந்த கம்பெனியோட எம்.டி பிக்காலியா இருந்தா சொல்லவே தேவையில்லை. அதுல போட்ட முதல் எல்லாம்
வீண் தான். அதனால திருமணமான ஒவ்வொரு பெண்ணும் ஐ.பி கேஸ் தான்.

அதனாலதான் இந்தியாவுல சராசரியா ஆண்களை விட பெண்கள் நீண்ட நெடுங்காலம் வாழறாய்ங்க
( கண்டிஷன்: அடிமைத்தனத்தை கேள்வி கேட்க கூடாது. கேள்வி கேட்டா கதி மோட்சம்தேன் )

மரணங்கறது இன உறுப்பு வழியா வரும்ங்கறது பெண்கள் விஷயத்துலயும் கரீட்டுதேன். ( ஆண்கள் விஷயத்துல இது நோய்களாவும் - பெண்ணோட மாமன்/ப்ருசன் இத்யாதி போட்டு தள்ளிர்ரதாவும் அமையுது.

பெண்கள் விஷயத்துல ஃபெல்விக் போன்ல வர்ர கேன்சர்,கருப்பையில வர்ர கேன்சருக்கெல்லாம் இன உறுப்பு தேன் வாசல்.

பெண்களுக்கு இன்னொரு வரபிரசாதம் பிரசவம். அதும் அவள் ஏழையாவும் இருந்தா நெஜமாலுமே செத்துப்பிழைக்கிறாள்.இதனாலயும் கண்டம் கிண்டம் இருந்தாலும் கழிஞ்சு போயிருது.

மேலோட்டமா பார்த்தா "த பார்ரா அடிமைத்தனத்துல இத்தீனி லாபமிருக்கா. விட்டா 120 வருசம் பூர்ணாயுசா வாழ்ந்துரலாம் போலிருக்கேன்னு தோனும்.

ஆனா அடிமைத்தனத்துக்கு இன்னொரு பக்கம் இருக்கு இது அந்த பெண்ணை மட்டுமில்லை -அவிக புருசன் மாரை (ஆமா புருசனுக்கு ஏது மாரு) குடும்பத்தை - பிள்ளை குட்டிகளை - அந்த சாதியை -மதத்தை - நாட்டை ஏன் உலகத்தையே அழிச்சுரும் . அது . எப்படிங்கறதை அடுத்தடுத்த பதிவுகள்ள பார்ப்போம்.


(வித்யாசங்கள் அடுத்த பதிவுலயும் தொடரும்)

Friday, July 15, 2011

ஆண் பெண் வித்யாசம் : 7 ஆம் பாவம் முடிவுரை

அண்ணே ! வணக்கம்ணே ..
சுகுமார்ஜி 'என்ன நீங்க நான் பேச நினைப்பதையெல்லாம் நீ(ங்கள்) பேச வேண்டும்னு நான் கேட்கவே இல்லை. நீங்க பாட்டுக்கு பேசிட்டே இருந்தா எப்டினு கோச்சுக்கறாரு.அதனால இந்த பதிவோட 7 ஆம் பாவத்துக்கு டாட்டா.

ஏற்கெனவே பல தடவை சொன்னாப்ல ஒரு ஜாதகத்துல 1 அ 7 ஆம் பாவம் கரீட்டா அமைஞ்சுட்டா ஜாதகத்துல எத்தீனி ஓட்டை இருந்தாலும் ஒரு குன்ஸா காலத்தை ஓட்டிரலாம். இதைத்தேன் சுய புத்தி சொல் புத்தின்னு சொல்டாப்ல கீது.

அட 1- 7 கரீட்டா இருந்தாலும் இல்லாட்டாலும் ஒரு சின்ன புரிதலை வளர்த்துக்கிட்டா சரியாயிரும். இல்லாட்டி மொக்கைதேன்.

தமிழ்ல ரெம்ப சின்னவயசுல சின்ன பையனை கண்ணாலம் கட்டின ஒரு பாட்டியம்மா 7 ஆம் பாவ மேட்டருக்கு சிறப்பு நிகழ்ச்சி நடத்தறாய்ங்களே அதைப்போல தெலுங்குல சுமலதா ஒரு ப்ரோக்ராம் பண்றாய்ங்க. அதை இன்னைக்கு சொம்மா வேடிக்கை பார்த்தேன்.

புருசன் பொஞ்சாதி தகறாலுக்கு பஞ்சாயத்து பண்ற ப்ரோக்ராம்தேன். புருசன் கன்னங்கரேல்னு பொந்துக்குள்ள கண்ணை ஒளிச்சு வச்சுக்கிட்டிருக்கான். அந்த அந்தம்மா கல்யாண ராமன் கமல் கணக்கா பல்லை வச்சுக்கிட்டு கீது.

ஒரு கட்டத்துல பிரிஞ்சு வாழற சமயம் பொஞ்சாதிய கிட்னாப் பண்ணி கொண்டு போய் ரேப் கூட பண்ணியிருக்கான் அந்தாளு. கொய்யால .. அந்தளவு காஞ்சான்னு பார்த்தாலே தெரியுது. ( ச்சொம்மா ஜோக்குதேன்)

பார்ட்டி கான்ஸ்டபிள். இந்த பொஞ்சாதிக்கப்பாறம் 3 கண்ணாலம் கட்டியிருக்கான். அந்த பொம்பளை ஏறக்குறைய ஒரு லாயர் ரேஞ்சுக்கு அடிப்பட்டு -உதைப்ப்பட்டு -கதை பாடியிருக்கு. இந்த அழகுல ஒரு பையன் வேற இருக்கான்.

அப்பங்காரனை பார்த்ததுமே சைரன் ஆன் பண்ணிர்ரான்.என்னதேன் நக்கலா எழுதி என் பீதியை குறைச்சுக்க பார்த்தாலும் பயம்மா கீதுபா..

இவிகளை விடுங்க. கொழுப்பு -ஈகோ - திமிர்னு ஏதோ ஒரு பேரை வச்சுரலாம். அந்த பையன் என்ன ஆவான்? அதை ரோசிச்சா பீதியில பேதியாகுது.

ஏற்கெனவே அவனுக்குள்ள கான்ஸ்டபிள் ஜீன்ஸ் இருக்கு. இதுல இந்த கொடுமை வேற சேர்ந்து வாண்டாண்டா சாமி..

இங்கன ( அதாவது நம்ம சமுதாயத்துல ) பெண்ணுக்கு ஆணைபற்றி பெரிய ஆர்வம் இருக்கிறதில்லை. அவள் பார்க்கிற மொதல் ஆண் அப்பங்காரன். அவன் ஏதோ கொஞ்சமாச்சும் பெரியமன்சத்தனமா -மேன்லியா இருந்திருந்தா ஓகே இல்லின்னா அவளை பொருத்தவரை ஆணை சகிச்சுக்க சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆயிர்ரா. அப்படி ஆகாம இருக்க பொருளாதார சுதந்திரமும் ஒரு காரணமா இருக்கலாம்.அது வேற விஷயம்.

ஆனால் ஒவ்வொரு ஆணுக்கு பெண்ணை பத்தி தெரிஞ்சுக்கறதுல மட்டும் கொள்ளை ஆர்வம். சரோஜாதேவி கதைகள்ளருந்து இன்னைக்கு நெட்ல கிடைக்கிற புன்னகை மட்டும் அணிந்த ( நன்றி:சுஜாதா) போர்னோ படங்கள் / வீட்யோஸ் வரை ஆணுக்கு இருக்கிற ஆர்வத்துக்கு முக்கிய காரணம் பெண்ணை தெரிஞ்சுக்கனுங்கற ஆர்வம் தேன்.

அவன் மைண்ட் க்ளீன் ஸ்லேட்டா இருக்கு. எந்த அப்பனும் புள்ளைய உட்கார வச்சு மவனே ..பொட்டச்சி ஃபிசிக்கலா இப்படி சைக்கலாஜிக்கலா இப்படின்னு எஜுக்கேட் பண்றதே இல்லை.

ஆனால் பெண் விஷயத்துல அவிக கொஞ்சம் லக்கி . அம்மா -அடுத்தாத்து அம்புஜங்களோட பேசறச்ச - புலம்பறச்ச -சண்டைக்கு நிக்கிறச்ச - (இவள் வயசுக்கு வந்த பிற்பாடு) கொஞ்சம் கொஞ்சமா பெண்கள் உலகத்துல இடம் கிடைச்சுருது.

ஆனால் பசங்க தேன் அலலாடறாய்ங்க. இவன் கூட பழகறவனுக்கும் ஒரு மண்ணும் தெரியாது. இவிகளுக்கு ஸ்தூலமா தெரியறது பெண் உடல் தேன். அதனால பெண் மீதான ஆர்வம் வெறுமனே பெண் உடலோட நின்னுருது. (உடலை தாண்டினாத்தானே மனசு -மசுருல்லாம்)

இதனால நாம ஒவ்வொரு நாளும் அப்சர்வ் பண்ணி இத்தீனி வருசமா சேகரிச்ச மேட்டரையெல்லாம் கொட்டி கவிழ்த்துக்கிட்டிருக்கம். இந்த மேட்டருங்கள அன்னைக்கு எவனா சொல்லியிருந்தான்னா தாளி இடையில இத்தீனி அல்லாட்டம் இருந்திருக்காதுல்ல.

நேத்திக்கு மட்டும் 24 மணி நேரத்துல நம்ம நிர்வாண உண்மைகள் வலைப்பூவை 1,085 பேர் படிச்சிருக்காய்ங்க. இதுல 90 சதவீதத்துக்கு மேல ஆண்கள் தான் (அலெக்ஸா) ஏன்னா இவனுக்குத்தான் பெண்கள் மேல நிலத்துல கால் பாவாதா இம்ப்ராக்டிக்கல் ஆர்வம். பெண் ஆணை ப்ராக்டிக்கலா அணுகறா. அதுக்கு காரணம் ஃபிசிக்கல் வீக்னெஸ் -முன்னெச்சரிக்கை இத்யாதி.

ஒரு காலத்துல ஜோதிடத்தை மிக்ஸ் பண்ணியோ பண்ணாமயோ மோகம் 30 நாள் ஆசை 60 நாள் தானா? ங்கற தலைப்புல ஒரு தொடரை போட்டதா ஞா வந்து அந்த அத்யாயங்களுக்கான தொடுப்புகளை பீராய்ஞ்சு தந்திருக்கேன். இன்னைக்கு இதை வச்சு அஜீஸ் பண்ணிக்கங்க . இந்த தொடர் வெளியான காலத்துல நம்ம வலைப்பூவுக்கான வருகைகள் 420 க்குள்ளதான்.

அப்பம் படிக்க முடியாம போன பார்ட்டிங்களும் இப்பம் படிச்சு பயன் பெறட்டும்ங்கற நல்லெண்ணத்துல இந்த எம்.ஜி.ஆர் வேலைய செய்திருக்கேன். வழக்கம் போல படிச்சுட்டு (ஒரு சிலரை தவிர) கமெண்ட் போட்ராதிங்க.

கடேசியில பெண்களை புரிஞ்சிக்க உதவும்னு நான் நம்பின ரெண்டு பதிவுகளுக்கான தொடுப்பையும் தந்திருக்கேன். ஓவர் டு தொடுப்புகள். அதுக்கு மிந்தி ஊரார் சைட்ல எல்லாம் போய் நம்ம பேர்ல போலியா கமெண்ட் போடறது - வண்டை வண்டையா நம்மையும் , நம்ம மேல அன்பு வச்சிருக்கிறவுகளையும் திட்டி தீர்க்கிறதுன்னு டுபாகூர் வேலை பார்த்துக்கிட்டு அலம்பல் பண்ண பார்ட்டிக்கு வேண்டுகோள்:

அய்யா .. உங்க இ மெயில் ஐடி - செல் நெம்பர் எல்லாத்தையும் நம்ம அய்யர் தி கிரேட் ட்ரேஸ் பண்ணி ஒரு தனிப்பதிவே போட்டிருக்காரு. அதே பதிவுல உங்க சிம் கார்டுல ரிமோட்ல ஆக்சஸ் ஆகி ஐ.எஸ் டி போட்டு பேசற திகில் பார்ட்டிகளை பத்தியும் அவிக அட்டாக்லருந்து தப்பிக்க சில வழிகள் பத்தியும்
போலி கமெண்ட் புகழ் டுபுக்கு பார்ட்டி பற்றி அய்யர் தந்திருக்கிற க்ளூவையும் இங்கே அழுத்தி படிச்சுட்டு திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி கப் சிப்னு இருந்துருங்க. இல்லாட்டி சரத்குமார் -வடிவேலு கணக்கா பப்ளிசிட்டி கிடைச்சுரும். நாறிரும். ஓகேவா?

இப்ப மேற்படி ஜில் தொடரின் அத்யாயங்களுக்கான தொடுப்புகள் கீழே..


மோகம் 30 நாள் ஆசை 60 நாள் தானா? : பாகம் 1
http://kavithai07.blogspot.com/2010/08/60-30.html

மோகம் 30 நாள் ஆசை 60 நாள் தானா? : பாகம் 2
http://kavithai07.blogspot.com/2010/08/60-30-2.html


மோகம் 30 நாள் ஆசை 60 நாள் தானா? : பாகம் 3
http://kavithai07.blogspot.com/2010/08/60-30-3.html

மோகம் 30 நாள் ஆசை 60 நாள் தானா? : பாகம் 4
http://kavithai07.blogspot.com/2010/08/4_28.html


பெண்களின் மனோதத்துவத்தை புரிந்து கொள்ள உதவும் இன்னபிற பத்வுகள்
இரண்டு பெண்கள்
http://kavithai07.blogspot.com/2010/09/blog-post_25.html


பெண்ணுக்குள் இரண்டு பெண்கள்
http://kavithai07.blogspot.com/2010/09/blog-post_25.html

பெண்கள் 9 வகை

http://kavithai07.blogspot.com/2010/05/9.html