Tuesday, September 23, 2008

சுஜாதா அரைத்த‌ மாவையே அரைத்தார்

உங்கள் விருப்பம் உங்கள் அச்சகம் உங்கள் பேனா எது வேண்டுமானாலும் எழுதுங்கள்
ஆனால் காலத்தின் விமர்சனம் உங்கள் பிணங்களை கூட தோண்டி எடுத்து தூக்கில் போடும்.


இது கவிஞர் (கவியரசு என்றால் அது ஒரு கண்ணதாசன் மட்டுமே)வைரமுத்துவின் ஆரம்பகால ஆவேசம்.

சுஜாதாவின் ம‌றைவுக்கு பிற‌கு இந்த‌ விம‌ர்ச‌ன‌ம் ஏன்? என்ற‌ கேள்விக்கு இது என் ப‌திலாக‌ அமைய‌ட்டும்.

சுஜாதா அரைத்த‌ மாவையே அரைத்தார் என்ப‌த‌ற்கு ஒரு உதார‌ணம்:


கதை பேர் 24 ரூபாய் தீவு. ஒருகற்றுக்குட்டி நிருபனுக்கு ஒரு டைரி கிடைக்கிறது அது ஒரு தலைவர் ஒரு விலைமகள் மடியில் எழுதிய கவிதை தொகுப்பு. இறுதியில் ஆட்சி க‌விழ்கிற‌து. இதையேதான் ப‌த‌விக்காக‌ என்று நாவ‌லாக‌ எழுதினார். குங்கும‌ம் நிர்வாக‌ம் மான‌ம் கெட்டு இதை வெளியிட்ட‌து. இது எம்.ஜி.ஆர் க‌ருணாநிதி ப‌ற்றிய‌ க‌தை என்று தெரிந்தும் வெளியிட‌ப்ப‌ட்ட‌து. அரைத்த‌ மாவு என்று தெரிந்தும் வெளியிட‌ப்ப‌ட்ட‌து.