Monday, September 29, 2008

இன்றைய பத்திரிக்கையாளர்கள் ஜஸ்ட் ப்ளாக் மெயிலர்கள்

இன்றைய பத்திரிக்கையாளர்கள் ஜஸ்ட் ப்ளாக் மெயிலர்களாக மாறிவருகின்றனர். கல்வி தகுதியை பக்கம் வைத்தால் பத்திரிக்கையியல் தொடர்பான தகுதிகளும் சூனியமாக உள்ளன. போலீஸ் கேஸ் இல்லாத பத்திரிக்கையாளன் கிடையாது. குடிப்பழக்கம் இல்லாத பத்திரிக்கையாளர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஓ.சி. என்றால் காசி வரை பாயும் பத்திரிக்கையாளர்கள் யதேஷ்டம்.

சமீபத்தில் நான் அறிந்த விசயம் சொன்னால் மானக்கேடு. ஆம் பார்களில் பத்திரிக்கையாளர்களுக்கு 10 ச‌தம் தள்ளுபடியாம். எனக்கு தெரிந்த ஒரு பத்திரிக்கையாளன் 2 பெண்டாட்டிக்காரன். அந்த இருவரில் ஒருவளே மேற்படி பத்திரிக்கையாளனை ஜெயிலில் போட வைத்ததும் உண்டு. பத்திரிக்கை விளம்பர பணத்தை ஏப்பம் விட்டு விட வேண்டியது. கலெக்ஷனுக்கு வந்த விளம்பர மேலாளர் மீது போலீஸ் கம்ப்ளெயிண்டு கொடுக்க வேண்டியது.(என் மனைவியை க‌ற்ப‌ழிக்க‌ முய‌ன்றார் என்று. அட‌ப்பாவிங்க‌ளா? இதில் ப‌த்திரிக்கை எஜ‌மான‌ர்க‌ளுக்கும் ப‌ங்குண்டு. விர‌ல் விட்டு எண்ணிவிட‌க்கூடிய‌ பத்திரிக்கைக‌ள் ம‌ட்டுமே ச‌ம்ப‌ள‌ம் த‌ருகின்ற‌ன‌. ம‌ற்ற‌வை ஊரை ஏமாற்றி பிழைத்துக்கொள் என்று விட்டு விடுகின்றன‌. மேற்ப‌டி பத்திரிக்கையாளனின் ம‌ற்றொரு சாத‌னை சொந்த‌ பெரிய‌ம்மா பெண் வ‌ர‌த‌ட்சிணை கொடுமைக்கு ஆளான‌ போது போலீஸ் கம்ப்ளெயிண்டு கொடுக்க‌ ,ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ செய்ய‌ ம‌ட்டும் ரூ.4 ல‌ட்ச‌ம் வ‌ரை ப‌ண‌ம் ப‌றித்த‌து.

நானும் ஒரு பத்திரிக்கையாள‌ன் தான் இருந்தாலும் யாரோ ஒருவ‌ர் வெளியிட்டுத்தானே ஆக‌வேண்டும் உண்மைக‌ளை.அன்னாரின் லேட்ட‌ஸ்ட் சாதனை என்ன‌வென்றால் பிர‌ஸ் க்ள‌ப் மாடிக்கு இர‌வு ராணி ஒருத்தியை அழைத்து சென்ற‌து. ஏதோ லாலா போடப்போறானு பார்த்தா த‌ள்ளிக்கிட்டு போறான் பா என்று ச‌க‌ ப‌த்திரிக்கையாள‌ர்க‌ளே லாட‌ம் க‌ட்டியிருக்கிறார்க‌ள்.