Sunday, September 14, 2008

இருபுறம் ஒளிகொண்ட மெழுகென

படைத்துவிட்டாய் எனை
அடுத்துவிட்டேன் உனை
விதியின் கைகளுக்கே கொடுப்பதுவோ முறை
ஈதென்ன புதிய சிறை
சுடர் மிகு அறிவெல்லாம் வாழ்வினிடர் நீக்க ஒழிவதுவோ
இருபுறம் ஒளிகொண்ட மெழுகென நான் கரைவதுவோ
அம்மா உனை நினைந்தே பாமாலை பல புனைந்தே
இருவிழியது நனைந்தே நின் பிள்ளைகள் அல்லல் தீர்க்க‌

களம் இறங்கி உளம் நொந்தேன்

வேதனையில் நிதம் வெந்தேன்


நின் அருள் தானின்றி
என் மருள் தீராது
கருமம் தொலைக்க வந்தேன்
த‌ரும‌ம் காத்து நின்றேன்
த‌ரும‌த்தால் ஒழிந்த‌துவே நான் பெற்ற‌ செல்வ‌மெல்லாம்
செல்வ‌ம் வேண்டுமென்று த‌ரும‌ம் ஒழிக்கின்றேன்
என்ன‌ தீர்ப்பிதுவோ சூனிய‌ம் தான் இத‌ன் முடிவோ?


பிற‌ந்து விட்டேன், அக‌ண்ட‌ பாத்திர‌த்து அமுத‌ம் க‌ர‌ந்துவிட்டேன்
பாலாக்கி சுர‌ந்திட்டேன் ஆலால‌ம் என்றெண்ணி ஓதுதிந்த‌ மூட‌ ச‌ன‌ம்
என் செய்வேன் எவ‌ர் சிர‌ம் நான் கொய்வேன்

த‌ற்கொலைக்கு த‌டையாச்சு த‌ன்மான‌ம்
கொலைக்கு த‌டையாச்சு நான் பெற்ற‌ நெஞ்சு

அம்ம‌வோ..வேண்டா இனி இந்த‌ வாழ்வே

வேத‌னை வ‌ண்டு துளைக்க‌ ஆறாய் பெருகுது க‌ண்ணீர்
என் ம‌க்க‌ள் ந‌ல‌ம் காக்க‌ க‌ள‌ம் நின்று போர் செய்கையிலே
ஒரு குண்டு போதும‌டி என் பிறவி முழுமை பெறும்