புலி மேல் ஏறி புவனமெலாம்
ஆளும் அன்னை புவனேசி ( மதில் மேல்)
பூனை என்னை வெருட்டுதலோ. ?
பழிச்சொல் பலவும் உருட்டுதலோ?
உன் இடம் விட்டு எதிர்புறம் வந்து
என் பகையொடு சேர்ந்து வெருட்டதலால்
உன் புறம் குதிப்பேன் என்றல்லோ
ஏழை என்னை வெருட்டுகின்றாய்.
நின் பாசம் அறிவேன் பராசக்தி !
நின் அருளின்றேல் நான் வெறும் சகதி
உன் அருளாலே உன் அருள் வேண்டி
என் மருள் யாவும் நான் தாண்டி
மதில்வரை வந்தேன் காணலியே
மாதா உந்தன் நகையொலி தான் அவ்வப்போது கேட்கிறது.
கொலுசொலி சற்று கசிகிறது. நம்பிக்கை மட்டும் நசிகிறது
திருமுகம் ஆயிரம் நான் வரைந்தும் - நின்
திருமுகம் காட்ட மறுக்கின்றாய்.
வந்த வழியென் சொந்தவழி
காற்றில் பஞ்சு போன வழி
நின் நுதல் வீசும் ஒளியாலே
மதில் வரை வந்தேன் தாயே கேள்
அவ்வப்போது மயங்கிடினும்
நானோ என்று தயங்கிடினும்
முற்றும் உணந்தேன் உமையவளே
மூடன் நானோ இமயவளே
விரல் அது இங்கு எனதெனினும்
குரல் அது என்றும் உனதன்றோ?
என் நலம் நாடி நிர்மலம் எய்த
ஊர் மலம் யாவும் சொரிவித்தாய்
அறிவேன் அறிவேன் நானிங்கே
தருமம் ,மருமம் யாவும் தான்
தாயே எனக்கு புரிவித்தாய்
கருமம் ஒழிக்கும் வித்தையைத்தான்
விளக்கமாக தெரிவித்தாய்
என் நாவில் நின்று நடம் புரிந்தாய்
வாக்கினூடே பயணித்தாய்.
காவியம் செய்ய நான் முனைந்து
பட்டபாடு நீயறிவாய்.
நின் அவைக்கே அதனை அனுப்பி வைத்தும்
அடை காத்தல் ஒன்றே செய்திட்டார்
உரையில் என்றால் மேய்ந்திடுவார் -
உரையில் உன்னத சிகரம் தொட முனைந்தால்
உரை நடை கூட உறைக்கா உலகில்
கவி மழை பெய்து பயன் என்ன?
உரை நடை தானே என்றெண்ணி
என்னை பேச பதறிடுவார்
உன்னை பேச உதறிடுவார்
என் வாக்கில் நின்ற உனக்கே தான் வேலை தந்திட
நான் நினைந்து வரும் பொருள் உரைக்க முனைந்திட்டேன்.
பற்பல வழக்கில் முன்னுரைக்கே
பாரோர் நல்ல தீர்ப்பு வழங்கிட்டார்
யாவும் உன்னருள் நானறிவேன்
இது ஒரு வழக்கில் மட்டும் தான்
சிக்கல் என்பது உருவாச்சு.
என் அகந்தை துடைக்க அம்மாவே
அதிரடி செய்ய இறங்கிவிட்டாய்.
என் நாவில் சற்றே உறங்கிவிட்டாய்.
காஞ்சனம் கையால் தொட்டபின்னே
கருமம் தொலைக்காதிருந்திட்டால்
பாவம் என்னை சூழாதோ?
பாவி உலகம் இகழாதோ?
காசும் பணமும் வந்திவனே நீர்த்தான் என்று நினைந்தாயோ?
புது நாடகம் ஒன்றை புனைந்தாயோ?
தாங்காதம்மா தாங்காது
இழி சொல்லை என் மனம் தாங்காது.
மக்கள் கூட்டம் எனை சூழ வரும் பொருள் என்பது
என் வியூகம்.
கூட்டம் பெருத்து எனை தொடர லட்சியம் சொல்வேன் சரியாகும்.
தொழில் என்றெண்ணி விலகினையோ - மனத்
தழல் தணிந்த தென்றே தவிர்த்தனையோ
பாரத நாட்டில் பசியதுவே ஒழிந்தாலன்றி தணியாது
என் நெஞ்சம் வாழும் அத்தழலே
அருள்வாய் அம்மா அருள்வாயே
என் வாக்கில் வந்து அமர்வாயே.
ஓம் சக்தி.
Showing posts with label Amman andhadhi. Show all posts
Showing posts with label Amman andhadhi. Show all posts
Wednesday, September 1, 2010
Tuesday, June 22, 2010
"அம்மாவின் அழகை"
அண்ணே வணக்கம்ணே,
நேத்து உனக்கென்ன நித்ய யவ்வனம்ங்கற தலைப்புல துவக்கின காவியத்தோட (?) இரண்டாம் பகுதியை "அம்மாவின் அழகை" என்ற வில்லங்க தலைப்போடு கொடுத்திருக்கேன். மேலும்
"பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் :8
"மழை" , "கனவு" என்ற தலைப்புகளில் இரண்டு கவிதைகள்,
அந்த கால கலைஞர் வசனம் போன்ற நடைல
"அம்மாவுக்கு ஒரு கடிதம்"
எல்லாம் போட்டிருக்கேன். முடிஞ்சவரை எல்லாத்தையும் படிச்சுப்பாருங்க இல்லாட்டி முடிஞ்சதை படிங்க. உங்க கருத்தை சொல்ல மறக்காதிங்க
அம்மாவின் அழகை
உனக்கென்ன அம்ருத சேவனம்
நித்ய யவ்வனம்
போதாதற்கு வாக்தேவியும் நீதான்
என் வாக்கில் நீ நின்றாய்.
என் அழகை பாடு என்றாய்.
நானோ விதிப்போக்கில் சென்றேன்.
இன்று என்னைப்பார்.. உன் அருள் போல் ஊறி, சீறிகிளம்பிய
கவிதை ஊற்றை கண்டவளுக்காகவெல்லாம்
விரயமாக்கிவிட்டு உலர்ந்து போய்
கட்டுரைக்கே வார்த்தைகள் சிக்காது திகைக்கிறேன்.
அம்மாவின் அழகை ரசிக்க கூடாதென்பது சட்டமா?
கணேசன் உனை ரசிக்காமலேயா உன் போல்
மனைவி வேண்டும் என்று ஆற்றங்கரையோரம்
அரசமரத்தடியில் உட்கார்ந்திருக்கிறான்.
அம்மா !
உனக்குத்தான் எத்தனை பெயர். எத்தனை வடிவம்.
வேசியர்க்கு நித்யகல்யாணி என்று ஒரு பெயர் உண்டாம்.
இதை சஹஸ்ர நாமத்தில் படித்து பதைத்தேன்.
வேசியர் கனவில் வந்தால் நீ வந்ததாய் பொருளாம்.
அந்த கனவே உன் அருளாம்.
பெண்வடிவில் தானா நீ.
இல்லை ஒவ்வொரு ஆணுடலிலும் இட பாகத்து அமர்ந்தவளாயிற்றே.
மகாவெடிப்புக்கு பின், ஜலமயமாய் கிடந்த பூமிபந்தின் மேல் ஏதோ நட்சத்திரத்திலிருந்து ஏதோ ஒரு ஒளி பாய்ந்து முதல் உயிர் உயிர் தரித்திருக்கலாம்
என்று விஞ்ஞானிகள் அனுமானித்திருக்கிறார்கள்.
நட்சத்திரம் என்பதை நின் மூக்குத்தியாக நான் கற்பித்துக்கொள்வதை
மூட நம்பிக்கை என்று சிலர் சொல்லட்டும்.
என் மூல நம்பிக்கை அது என்று சொல்லிவிட்டுபோகிறேன்.
என் நம்பிக்கை செக்கோ சிவலிங்கமோ அல்ல
அதன் மீது மூட நம்பிக்கை சிலந்திகள் வலை பின்ன முடியாது
அதில் என் மனதை சிக்க வைக்க முடியாது
என் நம்பிக்கை அக்னி ஊற்று.
அதில் என் அகந்தை அகர்பத்தியாக எரிந்து ஞான மணம் வீசுகிறது.
வெறும் சாம்பலாய் இந்த கவிதை
(தொடரும்)
நேத்து உனக்கென்ன நித்ய யவ்வனம்ங்கற தலைப்புல துவக்கின காவியத்தோட (?) இரண்டாம் பகுதியை "அம்மாவின் அழகை" என்ற வில்லங்க தலைப்போடு கொடுத்திருக்கேன். மேலும்
"பாபாவும் பாபா ப்ளாக் ஷீப்பும் :8
"மழை" , "கனவு" என்ற தலைப்புகளில் இரண்டு கவிதைகள்,
அந்த கால கலைஞர் வசனம் போன்ற நடைல
"அம்மாவுக்கு ஒரு கடிதம்"
எல்லாம் போட்டிருக்கேன். முடிஞ்சவரை எல்லாத்தையும் படிச்சுப்பாருங்க இல்லாட்டி முடிஞ்சதை படிங்க. உங்க கருத்தை சொல்ல மறக்காதிங்க
அம்மாவின் அழகை
உனக்கென்ன அம்ருத சேவனம்
நித்ய யவ்வனம்
போதாதற்கு வாக்தேவியும் நீதான்
என் வாக்கில் நீ நின்றாய்.
என் அழகை பாடு என்றாய்.
நானோ விதிப்போக்கில் சென்றேன்.
இன்று என்னைப்பார்.. உன் அருள் போல் ஊறி, சீறிகிளம்பிய
கவிதை ஊற்றை கண்டவளுக்காகவெல்லாம்
விரயமாக்கிவிட்டு உலர்ந்து போய்
கட்டுரைக்கே வார்த்தைகள் சிக்காது திகைக்கிறேன்.
அம்மாவின் அழகை ரசிக்க கூடாதென்பது சட்டமா?
கணேசன் உனை ரசிக்காமலேயா உன் போல்
மனைவி வேண்டும் என்று ஆற்றங்கரையோரம்
அரசமரத்தடியில் உட்கார்ந்திருக்கிறான்.
அம்மா !
உனக்குத்தான் எத்தனை பெயர். எத்தனை வடிவம்.
வேசியர்க்கு நித்யகல்யாணி என்று ஒரு பெயர் உண்டாம்.
இதை சஹஸ்ர நாமத்தில் படித்து பதைத்தேன்.
வேசியர் கனவில் வந்தால் நீ வந்ததாய் பொருளாம்.
அந்த கனவே உன் அருளாம்.
பெண்வடிவில் தானா நீ.
இல்லை ஒவ்வொரு ஆணுடலிலும் இட பாகத்து அமர்ந்தவளாயிற்றே.
மகாவெடிப்புக்கு பின், ஜலமயமாய் கிடந்த பூமிபந்தின் மேல் ஏதோ நட்சத்திரத்திலிருந்து ஏதோ ஒரு ஒளி பாய்ந்து முதல் உயிர் உயிர் தரித்திருக்கலாம்
என்று விஞ்ஞானிகள் அனுமானித்திருக்கிறார்கள்.
நட்சத்திரம் என்பதை நின் மூக்குத்தியாக நான் கற்பித்துக்கொள்வதை
மூட நம்பிக்கை என்று சிலர் சொல்லட்டும்.
என் மூல நம்பிக்கை அது என்று சொல்லிவிட்டுபோகிறேன்.
என் நம்பிக்கை செக்கோ சிவலிங்கமோ அல்ல
அதன் மீது மூட நம்பிக்கை சிலந்திகள் வலை பின்ன முடியாது
அதில் என் மனதை சிக்க வைக்க முடியாது
என் நம்பிக்கை அக்னி ஊற்று.
அதில் என் அகந்தை அகர்பத்தியாக எரிந்து ஞான மணம் வீசுகிறது.
வெறும் சாம்பலாய் இந்த கவிதை
(தொடரும்)
Friday, February 12, 2010
ஒரு அந்தரங்க உரையாடல்
"வணக்கம் சாமி"
"வாப்பா .. என்னாச்சு வேலை விசயம்?"
" நீங்க சொன்ன மாதிரியே ஆச்சு சாமி.சக்ஸஸ் தான்"
" நான் சொன்ன மாதிரினு மொட்டையா சொல்லகூடாது. எனக்கு நடக்க இருந்ததை நீங்க கெஸ் பண்ணி சொன்னது நடந்ததுன்னு வேணும்னா சொல்லலாம். ஓகேவா"
" நீங்க சொன்னதெல்லாம் நடக்குதே சாமி"
"முண்டம் ! நான் சொன்னதெல்லாம் நடந்துர்ர மாதிரி இருந்தா ரஜினி காந்த் அரசியல்ல குதிச்சு விஜயகாந்தை விட செமர்த்தியா மொக்கையாகனும் இத்தனை நாள் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் புல்க் காட்டினதுக்கு புலி வருது கதை கணக்கா அவரோட கதை முடியனும்னு சொல்லிருவனே ..."
"ஆங்க்..இப்ப புரியுது சாமி ! நீங்க சொன்னது செரி சாமி!"
"சாமி இன்னொரு விசயம்?"
"தபாரு.. ஜோசியர்கிட்டே அடிக்கடி வரக்கூடாது. எதுனா முக்கிய முடிவு எடுக்கறப்ப,தசா புக்தி மார்ரப்ப, முக்கிய கிரகம் ஏதாவது மார்ரப்பதான் வரணும் புரியுதா?"
"சரி சாமி. இப்போ நீங்க சொன்னாப்ல ஒரு முக்கிய முடிவு எடுக்கனும்..அதான் வந்தேன்"
"சரி சொல்லு"
"சாமி.. நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன். அவிக வேற சாதி."
'சாதி என்னப்பா சாதி. நல்ல குடும்பம்தானா"
"அதெல்லாம் ஒன்னும் தப்பா இல்ல சாமி பக்காவா இருக்கு"
"பின்னே என்ன பிரச்சினை?"
"எங்கப்பாதான்.. சொந்தத்துல தான் கட்டனும்னு இம்சை பண்றார்"
"உங்கப்பா வந்திருக்காரா?"
"உம்.."
"அவரை வரச்சொல்லுப்பா"
***
"வணக்கம் சாமி !"
"வணக்கம் வாங்க.! உட்காருங்க"
"சாமீ.. நீங்களே நியாயத்த சொல்லுங்க..தங்கச்சி மக காத்திருக்கா அவளை விட்டுட்டு இவன் வேற எவளையோ கட்டறேன்னு ஒத்தகால்ல நிக்கறான்"
"அப்படியா .. அடப்பாவமே ! இதுல நான் என்ன செய்யறது?"
" நீங்க எடுத்துச்சொல்லுங்க சாமி.."
"நான் ஏதோ வயித்து பொழப்புக்கு பஞ்சாங்கம் சொல்றவன்பா எனக்கென்ன தெரியும்.?"
"ஹ.. அப்படி சொல்ட்டா எப்டி சாமி.. உங்களை பத்தி தான் பேப்பர்ல நிறைய்ய படிக்கிறமே..இந்தியாவையே பணக்கார நாடா மாத்த போறிங்களாம்..10 கோடி பசங்களுக்கு வேலை தரப்போறிங்களாம்.."
"கிழிஞ்சது கிஸ்னகிரி.. இப்டிதான் போய் சொல்லிரு.. யோவ் அதெல்லாம் வெறும் ப்ரபோசலுய்யா செய்யவேண்டியது அரசாங்கம்யா"
"எதோ ஒன்னு அவ்ளோ அறிவிருக்கிற சாமி ..இந்த சின்ன விசயத்துல புத்தி சொல்ல கூடாதா?"
"சரி அப்டியே சொல்ட்டா போவுது.. சொல்றேன். போன வாரம் உங்க வீட்டு பசுமாடை ஓட்டிக்கிட்டு போயிட்டிருந்தே"
"அட! ஆமா சாமி.. நீங்க எங்கே பார்த்திங்க..?"
"எங்கயோ பார்த்தேன்யா.. நீ பசுமாட்டை ஓட்டிக்கிட்டு எங்கே போயிட்டிருந்தே?"
"வெட்டினரி ஹாஸ்பிடலுக்கு"
"எதுக்கு?"
"பசு மாட்டுக்கு ஊசி போட"
"மாட்டுக்கு ஜுரமா?"
"அட என்னங்க நீங்க விவரம் புரியாத ஆளா இருக்கிங்க.. மாட்டை சினைப்படுத்தறதுக்குங்க"
"இதென்னய்யா லொள்ளு உங்க கிராமத்துல இல்லாத காளை மாடா?"
"அடடா என்ன நீங்க இப்படி விவரமில்லாம கேட்கிறிங்க.. நம்ம கிராமத்து காளைமாடுங்களோட விட்டா அரை படி பால் கறக்கற கன்னுதான் கிடைக்கும். ஆஸ்பத்திரில ஸ்விட்ஜர்லாந்து காளை கிட்டருந்து சேர்த்த வீரியத்தை ஊசி மூலமா ஏத்தி விட்டா பத்து படி பால்கறக்கற கன்னு பொறக்கும் சாமி"
"ஏன்யா .. கேவலம் மாட்டுக்கு நல்ல கன்னு பிறக்கனும்னு எந்த ஜாதி, எந்த நாடுனு தெரியாத காளை மாட்டோட வீரியத்தை ஊசி மூலம் செலுத்துவிக .. நீ பெத்த புள்ளைக்கு நல்ல அறிவு,உடல் வலிமை உள்ள குழந்தை பிறக்க சாதிவிட்டு சாதி கல்யாணம் பண்ணமாட்டே.. ஒன்னுக்குள்ள ஒன்னு ஒன்னுக்குள்ள ஒன்னு நெருங்கிய சொந்தங்கள்ள கல்யாணம் பண்ணி உங்க வமிசாவளியினருடைய நோய்கள் உங்க வமிசத்தை விட்டுடாம இருக்க எந்தளவுக்கு கஷ்டப்படறிங்கய்யா சூப்பர் லாஜிக் இது"
"இன்னா சாமி சொல்றே?"
" ஆ சொல்றேன் சொரைக்காய்க்கு உப்பில்லேனு.. போய் அந்த பொண்ணை பத்தி, பொண்ணு வீட்டுக்காரவுக பத்தி நாலு தெருவுல விசாரி. கல்யாணத்த பேசி முடி.அப்பத்தான் உண்மையான வம்ச விளக்கு பிறக்கும். இல்லேன்னா தேஞ்சு போன விளக்குமாறுதான் பிறக்கும் .போ போ ..போய் வேலைய பாரு"
விட்டுக்கொடு
விட்டுக்கொடு நின் பிடிவாதம் என்றேன்
நீயோ விட்டுக்கொடுத்தாய் என்னை என் எதிரிகளிடம்
என் வறுமையை எரி என்றேன்
நீ என்னை எரிக்க முனைந்தாயோ?
உன் திட்டப்படி பிரளயம் என்றோ வரும்
என் திட்டப்படி சுபிட்சம் நாளையே வரும்
பிரளயம் உறுதி எனும்போது
இந்த கட்டத்திலேனும் ஒரு நல்லாட்சி வழங்கிடக்கூடாதா?
மரண தண்டனை கைதிக்கு தரப்படும் வென்னீர் குளியல் போல்,புத்தாடை போல், நல்லுணவு போல், இனிப்பு போல் நல்லாட்சி தருவாய் தாயே
ஒரு மாற்றம் கொண்டுவர ஏற்றம் கண்டிடவே
காற்றை உணவாக்கி என்னுள் ஊற்றை உருவாக்கினேன்
என்னில் தடுமாற்றம் வரலாமோ?
உனை குறித்த மருமமெல்லாம் விளக்கி
அந்தணர் பிற்சேர்க்கை தமை விலக்கி
தருமமே நின் வடிவென்று நீயே தருமமென்று
தர்கம் செய்து வந்தேன்
சீட்டு மாளிகை போல் சின்ன சித்தாந்தம் செய்துவைத்தேன்
மனிதமே மதம்
இயற்கையே இறை என்று
மக்கள் சேவையே மறையென்று
முறை செய்துவைத்தேன்
நான் பிறையே ஆனாலும்
நின் மகுடத்தில் பிறை என்றேன்
என்னை பிணவறையின் பிறை செய்தாய்
முறையாமோ சொல்லம்மா !
மக்கள் உயிர் குடித்தோர் உல்லாசமாய் வாழ்ந்திருக்க
அதற்கோர் விளக்கம் சொன்னேன்
விட்டுப்பிடிப்பதுவே உன் பழக்கம்
என்றிட்டேன்
எமை கைவிட்டு போவதுவே உன் வழக்கமாமோ
சொல்லாது சொல்லுகின்றாய் சூத்திர சுருக்கங்களை
பௌலிங்கும் நீயே
பேட்டிங்கும் நீயே
ஃபீல்டிங்கும் நீயே
அம்பயரும் நீயே
அம்பிகை நான் என்று அலட்டல் அதிகமாச்சு
ஜன நாயகம் வந்துற்று பல காலம் ஆனதடி
மக்கள் கருத்தையும் மாதா நீ மனதில் கொண்டு
நல்லாட்சி பிறந்திடவே
மீனாட்சி அருள் புரிவாய்
நல்லாட்சி அமைந்திடவே நாவலன் நான் குரல் கொடுத்தேன்
அம்மா நின் விரலசைந்தால்
என் சொல்லே வில்லாகும்
பாடு பொருள் அம்பாகும்
அல்லவை எரிந்து போகும்
நல்லவை செழித்தோங்கும்
இவ்வுலகே நாய் கூட்டம்
என்னை பிடுங்க பார்க்குதடி
மெய் நடுங்க வைக்குதடி
பை நிறைய எலும்பிருந்தால்
ஓரிரண்டை வீசி விட்டால்
வால் வீசி வந்திடுமே
அம்மா நீ அருள் புரிவாய்
மனமருள் சிதைத்திடுவாய்
"வாப்பா .. என்னாச்சு வேலை விசயம்?"
" நீங்க சொன்ன மாதிரியே ஆச்சு சாமி.சக்ஸஸ் தான்"
" நான் சொன்ன மாதிரினு மொட்டையா சொல்லகூடாது. எனக்கு நடக்க இருந்ததை நீங்க கெஸ் பண்ணி சொன்னது நடந்ததுன்னு வேணும்னா சொல்லலாம். ஓகேவா"
" நீங்க சொன்னதெல்லாம் நடக்குதே சாமி"
"முண்டம் ! நான் சொன்னதெல்லாம் நடந்துர்ர மாதிரி இருந்தா ரஜினி காந்த் அரசியல்ல குதிச்சு விஜயகாந்தை விட செமர்த்தியா மொக்கையாகனும் இத்தனை நாள் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் புல்க் காட்டினதுக்கு புலி வருது கதை கணக்கா அவரோட கதை முடியனும்னு சொல்லிருவனே ..."
"ஆங்க்..இப்ப புரியுது சாமி ! நீங்க சொன்னது செரி சாமி!"
"சாமி இன்னொரு விசயம்?"
"தபாரு.. ஜோசியர்கிட்டே அடிக்கடி வரக்கூடாது. எதுனா முக்கிய முடிவு எடுக்கறப்ப,தசா புக்தி மார்ரப்ப, முக்கிய கிரகம் ஏதாவது மார்ரப்பதான் வரணும் புரியுதா?"
"சரி சாமி. இப்போ நீங்க சொன்னாப்ல ஒரு முக்கிய முடிவு எடுக்கனும்..அதான் வந்தேன்"
"சரி சொல்லு"
"சாமி.. நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன். அவிக வேற சாதி."
'சாதி என்னப்பா சாதி. நல்ல குடும்பம்தானா"
"அதெல்லாம் ஒன்னும் தப்பா இல்ல சாமி பக்காவா இருக்கு"
"பின்னே என்ன பிரச்சினை?"
"எங்கப்பாதான்.. சொந்தத்துல தான் கட்டனும்னு இம்சை பண்றார்"
"உங்கப்பா வந்திருக்காரா?"
"உம்.."
"அவரை வரச்சொல்லுப்பா"
***
"வணக்கம் சாமி !"
"வணக்கம் வாங்க.! உட்காருங்க"
"சாமீ.. நீங்களே நியாயத்த சொல்லுங்க..தங்கச்சி மக காத்திருக்கா அவளை விட்டுட்டு இவன் வேற எவளையோ கட்டறேன்னு ஒத்தகால்ல நிக்கறான்"
"அப்படியா .. அடப்பாவமே ! இதுல நான் என்ன செய்யறது?"
" நீங்க எடுத்துச்சொல்லுங்க சாமி.."
"நான் ஏதோ வயித்து பொழப்புக்கு பஞ்சாங்கம் சொல்றவன்பா எனக்கென்ன தெரியும்.?"
"ஹ.. அப்படி சொல்ட்டா எப்டி சாமி.. உங்களை பத்தி தான் பேப்பர்ல நிறைய்ய படிக்கிறமே..இந்தியாவையே பணக்கார நாடா மாத்த போறிங்களாம்..10 கோடி பசங்களுக்கு வேலை தரப்போறிங்களாம்.."
"கிழிஞ்சது கிஸ்னகிரி.. இப்டிதான் போய் சொல்லிரு.. யோவ் அதெல்லாம் வெறும் ப்ரபோசலுய்யா செய்யவேண்டியது அரசாங்கம்யா"
"எதோ ஒன்னு அவ்ளோ அறிவிருக்கிற சாமி ..இந்த சின்ன விசயத்துல புத்தி சொல்ல கூடாதா?"
"சரி அப்டியே சொல்ட்டா போவுது.. சொல்றேன். போன வாரம் உங்க வீட்டு பசுமாடை ஓட்டிக்கிட்டு போயிட்டிருந்தே"
"அட! ஆமா சாமி.. நீங்க எங்கே பார்த்திங்க..?"
"எங்கயோ பார்த்தேன்யா.. நீ பசுமாட்டை ஓட்டிக்கிட்டு எங்கே போயிட்டிருந்தே?"
"வெட்டினரி ஹாஸ்பிடலுக்கு"
"எதுக்கு?"
"பசு மாட்டுக்கு ஊசி போட"
"மாட்டுக்கு ஜுரமா?"
"அட என்னங்க நீங்க விவரம் புரியாத ஆளா இருக்கிங்க.. மாட்டை சினைப்படுத்தறதுக்குங்க"
"இதென்னய்யா லொள்ளு உங்க கிராமத்துல இல்லாத காளை மாடா?"
"அடடா என்ன நீங்க இப்படி விவரமில்லாம கேட்கிறிங்க.. நம்ம கிராமத்து காளைமாடுங்களோட விட்டா அரை படி பால் கறக்கற கன்னுதான் கிடைக்கும். ஆஸ்பத்திரில ஸ்விட்ஜர்லாந்து காளை கிட்டருந்து சேர்த்த வீரியத்தை ஊசி மூலமா ஏத்தி விட்டா பத்து படி பால்கறக்கற கன்னு பொறக்கும் சாமி"
"ஏன்யா .. கேவலம் மாட்டுக்கு நல்ல கன்னு பிறக்கனும்னு எந்த ஜாதி, எந்த நாடுனு தெரியாத காளை மாட்டோட வீரியத்தை ஊசி மூலம் செலுத்துவிக .. நீ பெத்த புள்ளைக்கு நல்ல அறிவு,உடல் வலிமை உள்ள குழந்தை பிறக்க சாதிவிட்டு சாதி கல்யாணம் பண்ணமாட்டே.. ஒன்னுக்குள்ள ஒன்னு ஒன்னுக்குள்ள ஒன்னு நெருங்கிய சொந்தங்கள்ள கல்யாணம் பண்ணி உங்க வமிசாவளியினருடைய நோய்கள் உங்க வமிசத்தை விட்டுடாம இருக்க எந்தளவுக்கு கஷ்டப்படறிங்கய்யா சூப்பர் லாஜிக் இது"
"இன்னா சாமி சொல்றே?"
" ஆ சொல்றேன் சொரைக்காய்க்கு உப்பில்லேனு.. போய் அந்த பொண்ணை பத்தி, பொண்ணு வீட்டுக்காரவுக பத்தி நாலு தெருவுல விசாரி. கல்யாணத்த பேசி முடி.அப்பத்தான் உண்மையான வம்ச விளக்கு பிறக்கும். இல்லேன்னா தேஞ்சு போன விளக்குமாறுதான் பிறக்கும் .போ போ ..போய் வேலைய பாரு"
விட்டுக்கொடு
விட்டுக்கொடு நின் பிடிவாதம் என்றேன்
நீயோ விட்டுக்கொடுத்தாய் என்னை என் எதிரிகளிடம்
என் வறுமையை எரி என்றேன்
நீ என்னை எரிக்க முனைந்தாயோ?
உன் திட்டப்படி பிரளயம் என்றோ வரும்
என் திட்டப்படி சுபிட்சம் நாளையே வரும்
பிரளயம் உறுதி எனும்போது
இந்த கட்டத்திலேனும் ஒரு நல்லாட்சி வழங்கிடக்கூடாதா?
மரண தண்டனை கைதிக்கு தரப்படும் வென்னீர் குளியல் போல்,புத்தாடை போல், நல்லுணவு போல், இனிப்பு போல் நல்லாட்சி தருவாய் தாயே
ஒரு மாற்றம் கொண்டுவர ஏற்றம் கண்டிடவே
காற்றை உணவாக்கி என்னுள் ஊற்றை உருவாக்கினேன்
என்னில் தடுமாற்றம் வரலாமோ?
உனை குறித்த மருமமெல்லாம் விளக்கி
அந்தணர் பிற்சேர்க்கை தமை விலக்கி
தருமமே நின் வடிவென்று நீயே தருமமென்று
தர்கம் செய்து வந்தேன்
சீட்டு மாளிகை போல் சின்ன சித்தாந்தம் செய்துவைத்தேன்
மனிதமே மதம்
இயற்கையே இறை என்று
மக்கள் சேவையே மறையென்று
முறை செய்துவைத்தேன்
நான் பிறையே ஆனாலும்
நின் மகுடத்தில் பிறை என்றேன்
என்னை பிணவறையின் பிறை செய்தாய்
முறையாமோ சொல்லம்மா !
மக்கள் உயிர் குடித்தோர் உல்லாசமாய் வாழ்ந்திருக்க
அதற்கோர் விளக்கம் சொன்னேன்
விட்டுப்பிடிப்பதுவே உன் பழக்கம்
என்றிட்டேன்
எமை கைவிட்டு போவதுவே உன் வழக்கமாமோ
சொல்லாது சொல்லுகின்றாய் சூத்திர சுருக்கங்களை
பௌலிங்கும் நீயே
பேட்டிங்கும் நீயே
ஃபீல்டிங்கும் நீயே
அம்பயரும் நீயே
அம்பிகை நான் என்று அலட்டல் அதிகமாச்சு
ஜன நாயகம் வந்துற்று பல காலம் ஆனதடி
மக்கள் கருத்தையும் மாதா நீ மனதில் கொண்டு
நல்லாட்சி பிறந்திடவே
மீனாட்சி அருள் புரிவாய்
நல்லாட்சி அமைந்திடவே நாவலன் நான் குரல் கொடுத்தேன்
அம்மா நின் விரலசைந்தால்
என் சொல்லே வில்லாகும்
பாடு பொருள் அம்பாகும்
அல்லவை எரிந்து போகும்
நல்லவை செழித்தோங்கும்
இவ்வுலகே நாய் கூட்டம்
என்னை பிடுங்க பார்க்குதடி
மெய் நடுங்க வைக்குதடி
பை நிறைய எலும்பிருந்தால்
ஓரிரண்டை வீசி விட்டால்
வால் வீசி வந்திடுமே
அம்மா நீ அருள் புரிவாய்
மனமருள் சிதைத்திடுவாய்
Subscribe to:
Posts (Atom)