Showing posts with label மனோதத்துவம். Show all posts
Showing posts with label மனோதத்துவம். Show all posts

Tuesday, January 8, 2013

பாலியல் தொழிலாளியுடன் ஓரிரவு

அண்ணே வணக்கம்ணே !
நவகிரகங்களுடன் பேட்டி தொடரை தொடரலாம்னு பார்த்தா ஊஹூம் .. ஒன்னும் வேலைக்காகற மாதிரியில்லை.
ஏன்னா சனத்தொகையில பாதியா இருந்து அடுத்த பாதியை இன்ஸ்பைர் பண்ற -டாமினேட் பண்ற -கண்ட் ரோல் பண்ற ரேஞ்சுல உள்ள பெண்ணினத்தை உடனடியா  நேரடியா பாதிக்கக்கூடிய சமாசாரத்தை அலசாம செவ் தோஷத்தை பத்தி எழுதிக்கிட்டே போறது துரோகம். அதனால இன்னிக்கு ஒரு நா விட்டுருங்க. நாளையிலருந்து நூல் பிடிச்சாப்ல செவ் தோஷம் ஓகேவா?

தில்லி வன்புணர்வு நிகழ்ச்சிக்கு அப்புறம் ஒட்டு மொத்த இந்தியாவும் ப்ளேடோட அலையறாப்ல இருக்கு. ஆளுக்கு ஆள் இந்த மாதிரி சம்பவங்களை தடுக்க ஐடியா  மேல ஐடியாஅள்ளி விட்டுக்கிட்டிருக்காய்ங்க. எங்கப்பக்கத்துல குண்டூர் எஸ்.பி மாணவிகளுக்கு மிளகாய் தூள் பாக்கெட் கூட சப்ளை பண்ணியிருக்காரு..

வன்புணர்வுகளுக்கு பின்னான மனோதத்துவத்தை இந்த பதிவுல அலசலாம்னு  நினைக்கிறேன்.   இந்த பதிவுக்கு இன்ஸ்பிரேஷனே கேள்வியும் நானே பதிலும் நானே  வலைப்பூவில் வெளியாகியிருக்கிற ஒரு பதிவுதான். அதில் உள்ள சில பாராக்களை இங்கன கோட் பண்ணப்போறேன்.
( நன்றி:புரட்சிமணி)

//வன்புணர்வுகள் சமீபகாலமாக அதிகரிப்பதாக தெரிந்தாலும் அது உண்மையல்ல. ஊடகத்துறை வளர்ச்சி பெற்றுள்ளதால் நமக்கு அவ்வாறு தெரிகின்றது.//

இது 100 சதம் அட்சர சத்தியம். வன்புணர்வுகள் குறித்த புகார்கள் எதேனும் ஒரு நிலையில் குழி தோண்டி புதைக்கப்பட்டுவிடுகின்றன. ஸ்டேஷன் வரை போன புகார்கள் தான்  மீடியாவில் பல்லை இளிக்குது.

//காலம் காலமாக வன்புணர்வுகள் என்பது நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இதற்க்கு என்ன காரணம் என்று பார்த்தால் மனிதர்கள் மிருகங்கள் என்ற ஒரு விடைதான் கிடைக்கும். மிருகத்திலிருந்து பரிணமித்த மனிதர்களுக்கு இன்னும் மிருகக்குணம் குறையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். //

புரட்சிமணி ரெம்ப பெரிய மனசு பண்ணி "மிருக குணம் குறையவில்லை"ங்கறாரு. நம்மை பொருத்தவரை மிருகம் தான்.மிருகம் தான்.மிருகம் தான். மன்சனை மன்சனா நினைச்சு சட்டம் போடறதாலதேன் சட்டம்லாம் தோத்துப்போகுது. மன்சனை மிருகமா நினைச்சு சட்டம் போட்டா தான் வேலைக்காகும்.

பதிவர் வயிற்றுப்பசியையும் -உடல் பசியையும் ஒரே தராசில் நிறுத்து உழைச்சு திங்கறதை  - முறையான திருமண உறவுக்கும், திருடி திங்கறதை காதல்/கள்ளக்காதல் இத்யாதிக்கும் - பிடுங்கி தின்றதை   வன்புணர்வுக்கும் ஒப்பிடறாரு.

//ஒரு மனிதனின் உணவு,உடை, உறைவிட தேவைகளை நிறைவேற்றுவது எப்படி அரசாங்கத்தின் கடமையோ அவ்வாறே ஒரு மனிதனின் உடலுறவு தேவைக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.//னு புரட்சிகரமா ஆரம்பிக்கிற புரட்சிமணி படக்குன்னு யுடர்ன் எடுத்து // அனைவருக்கும் குறிப்பிட்ட காலத்தில் திருமணம் நடைபெறுமாறு அரசாங்கம் பார்த்துக்கொள வேண்டும்.//னு முடிக்கிறாரு.

// மனிதனின் உடலுறவு தேவைக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்//ங்கறதுதேன் நம்ம ஸ்டாண்டு. உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் ஆசைகளே வன்முறையாக வெடிக்கின்றனங்கறது சைக்காலஜி. வன்முறைய தடுக்க வேண்டியது அரசின் கடமை.

காளை மாட்டை அடக்கனும்னா அதனோட மூக்கணாங்கயிறை பிடிச்சு நிப்பாட்டனும்.அதை விட்டுட்டு வாலை பிடிச்சுக்கிட்டு ஓடறது முட்டாத்தனம். அரசு எப்படி பொறுப்பேத்துக்க  முடியும்னு கேப்பிக. சொல்றேன்.

அதுக்கு மிந்தி புரட்சிமணி என்ன சொல்றாருன்னு பார்ப்போம்:
//எனவே திருமண வயதை அரசாங்கம் குறைக்க வேண்டும்.தற்ப்பொழுதைய சூழ்நிலையில் 16 என்பது சரியான வயதாக இருக்கும் என எண்ணுகிறேன். //

மேம்போக்கா பார்த்தா ..ஆஹா இதுதாண்டா தீர்வுன்னு தோனும். அந்தகாலத்துல மருத்துவத்துறை செரியா வளராததால குழந்தை மரணம் அதிகமா இருந்தது. இப்ப என்ன கேடுன்னு கூட தோனும்.

திருமணங்கற  ஏற்பாடே ஆணின் செக்ஸ் பவருக்கு அடிக்கப்பட்ட ஆணி. பழகப்பழக பாலும் புளிக்கும்னு பழமொழியா சொன்னாலும் - தி லா ஆஃப் டிமினிஷிங் மாரிஜினல் யுட்டிலிட்டின்னு எக்கனாமிக்ஸ்ல சொன்னாலும் மேட்டர் ஒன்னுதான். திருமணம் என்பது ஆணின் காமத்தை தின்று விடுகிறது.

மன்சன்ல இருக்கிறது ஒரே சக்தி.அதன் நோக்கம் படைத்தல் - இருத்தல்- பரவுதல்.இதெல்லாம் செக்ஸ்ல பாரிஷியலா அச்சீவ் ஆறதாலதான் மன்சனுக்கு செக்ஸ் மேல ஒரு இது. திருமணம் காரணமா -அவனுக்குள்ள இருந்து பொங்கும் சக்தி ஓய ஆரம்பிச்சுட்டா நாஸ்தி.

அந்த சமயத்துல நம்ம மாதிரி பார்ட்டி யாராவது கிராஸ் ஆகி "  நைனா! படைத்தல் - இருத்தல்- பரவுதலுக்கெல்லாம் இன்னம் நிறைய வழி இருக்கு.. கார்ல்  மார்க்ஸ் டாஸ் காப்பிட்டல் படைச்சாரு .இன்னம் இருக்காரு. உலகமெல்லாம் பரவியிருக்காரு. ஒரு தமிழன் இ மெயில் கண்டுபிடிச்சான். இன்னம் இருக்கான். இருப்பான்.உலகமெல்லாம் பரவியிருக்கான்"னு  கைட் பண்ணா மேட்டர் ஓகே.

இல்லாட்டி மன்சன் பணம் பின்னாடி ஓட ஆரம்பிச்சுருவான்.உலகத்துல முக்கியமா இந்தியாவுல 60 சதவீதம் பேரு பணத்தை துரத்த ஆரம்பிச்சுட்டாய்ங்க. மிச்சம் மீதி உள்ள 40 சதவீதம் தான் பணம் பக்கமா டைவர்ட் ஆகாம இன்னம் செக்ஸையே சுத்தி வந்துக்கிட்டிருக்காய்ங்க. அதனாலதேன் அவிக ஏழைகளா இருக்காய்ங்களோ என்னமோ?

புரட்சிமணி சொல்றாப்ல திருமண வயதை குறைச்சு தொலைச்சா நாறிரும். படைத்தல் - இருத்தல்- பரவுதலுக்கெல்லாம் செக்ஸ் ஒன்றே போதுமானதல்லங்கற யதார்த்தம் புரிஞ்சுரும். அடுத்து பணம் ஒன்றே இதுக்கெல்லாம் வழின்னு ஆயிரும். பணத்துல செயிச்சுட்டா கொய்யால இதுலயும் ஒன்னுமில்லடான்னு தெளிஞ்சுரும்.மறுபடி செக்ஸுக்கு யு டர்ன் எடுப்பாய்ங்க.

இப்பமே லைஃப் டோட்டலா கமர்ஷியலைஸ் ஆயிருச்சு. பின்னே என்னதான் வழின்னா பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம். பாஸ் போர்ட் விசாவுக்கு போனா எப்படி அம்மை குத்தியிருக்கான்னா பார்க்கிறாய்ங்களோ அப்படி ட்ராஃபிக்ல ஓவர் ஸ்பீட்ல மாட்டினா கூட  பாலியல் தொழிலாளியை சந்திச்சிங்களான்னு கேட்கிற நிலை வரனும்.

வெகு சிலர் இந்த வாய்ப்பை கூட பயன்படுத்திக்காம "மடியா' இருக்கலாம். அவிகளுக்காவ எஜாக்குலேட்டர்ஸ் அமைக்கலாம். இதெல்லாம் ஃபிசிக்கல். உடனடியா ஓரளவு பலன் தரலாம்.ஆனால் இங்கே தேவை சைக்கலாஜிக்கல் ரெமிடி.

ஹ்யூமன் பாடி ஒரு கம்ப்யூட்டர் சிபியுன்னா மைண்டுதான் ஹார்ட் டிஸ்க்.  ஹார்ட் டிஸ்கை காப்பாத்தா கம்ப்யூட்டருக்கோ - கீ பேடுக்கோ -மவுசுக்கோ பூட்டுப்போட நினைக்கிற முட்டாத்தனம். கம்ப்யூட்டருன்னு இருந்தா
கண்டவன் கண்டதை செருகுவான் (கார்ட் ரீடரு - பென் ட்ரைவ் -டேட்டா கார்டு  எட்ஸெட்ரா) கண்ட டேட்டா உள்ளாற வரும். ஹார்ட் டிஸ்க் டேட்டா கரப்ட் ஆகும்.  இதுக்கு என்னதான் தீர்வு?

ஹார்ட் டிஸ்க்ல உள்ள ஓ.எஸ் கரீட்டா இன்ஸ்டால் ஆகியிருக்கனும். ஐ மீன் பெண் குறித்த புரிதல் இருக்கனும்.  ஒரு பவர் ஃபுல்  ஒரு ஆன்டிவைரஸ் இருக்கனும். டிஃப்ரீஸ் மூலமா ஓ.எஸ் போட்டிருக்கிற ட்ரைவ் லாக் பண்ணப்பட்டிருக்கனும்.

இது இல்லாத பட்சத்துல எல்லாமே தப்பாத்தான் போகும்.  மீண்டும் புரட்சிமணி:

//உடல்தேவைக்கு மனைவி இருந்தாலும் சிலர் தகாத உறவுகளிலும்,வன்புணர்விலும்  ஈடுபடத்தான் செய்கின்றனர்.
இவர்களை கொலை கொள்ளை செய்பவர்களோடு ஒப்பிடலாம். அதாவது தேவைக்கு  அதிகமான பணம் இருந்தாலும் அதீத ஆசையால் ஊழல், கொள்ளைகளில் ஈடுபடுபவனும் உடல் தேவைக்கு மனைவி இருந்தும் தகாத உறவில், வன்புணர்வில் ஈடுபடுபவன் மனநிலையும் ஒன்றுதான்//

ஏற்கெனவே நான் சொன்னாப்ல திருமணங்கறதே ஆணின் செக்ஸ் பவர் மீது அறையப்படும் ஆணி. இதை கண்டறிந்து கொள்ளும்  அவன் உள்ளுணர்வு வேலி தாண்டச்சொல்கிறது.  "நிழலின் அருமை வெயிலில்". ஒரு பாலியல் தொழிலாளியுடன் ஒரு இரவையாவது கழித்தவனுக்குத்தான் குடித்தனக்காரியின் அருமை புரியும்.  ஒரு ஆண் பாதுகாப்பான திருமண உறவில் சீக்கிரமே சலிப்படைகிறான்.அலுப்படைகிறான்.அவனுக்கு மாற்றம் தேவைப்படுகிறது. பாலியல் தொழிலாளியை அணுகுபவன் திரும்பிவர வாய்ப்பிருக்கிறது. கள்ளக்காதல் இத்யாதிக்கு டைவர்ட் ஆறவன் கதை கோவிந்தா கோவிந்தா..

ஏன்? ஏன்? ஏன் அவன் டைவர்ட் ஆகனும்னு கேப்பிக .. சொல்றேன்.

எல்லா உயிருக்கும் மூலம் அமீபா. ஒரு செல் அங்கஜீவி - அது கொழுத்து செல் காப்பிமூலமா ரெண்டாச்சு - செல் காப்பியிங்ல நடந்த எதிர்பாராத - விபத்து மாதிரியான -தவறு காரணமா புது ஜீவராசிகள் உருவாச்சு - குரங்கு வந்தது - குரங்குலருந்து மனிதன் வந்தான் .

ஒரே உடல் ஒரே உயிரா இருந்த காலத்துல உயிர்களுக்கு தூரம் ,கம்யூனிகேஷன் ட்ரபுள், இன்செக்யூரிட்டி இப்படி எந்த பிரச்சினையும் கிடையாது - ரெண்டாவது உயிர் உருவானதுமே இதெல்லாம் ஸ்டார்ட் ஆயிருச்சு.

ஆனால் ஓருயிர் ஓருடலா இருந்த நினைவுகள் மட்டும் செல் டு செல் காப்பியிங் மூலமா ஒவ்வொரு மனித மூளைலயும் ஃபீட் ஆயிருக்கு. மறுபடி ஓருயிர் ஓருடலாகனும்ங்கற துடிப்பு இருக்கு.

ஆனால் இந்த ஓருயிர் ஓருடலா மாற இந்த உடல்தான் தடைங்கற ஒரு தவறான நம்பிக்கை ஒரு பக்கம் இருக்கு. இன்னொரு பக்கம் இன்னொரு உயிரோட கலக்கனும்னா மறுபடி ஓருயிரா மாறனும்னா அந்த உயிரோட செக்ஸ் வச்சுக்கனும் .அதான் ஒரே வழிங்கற மிக மிக தவறான நம்பிக்கை இன்னொரு பக்கம் இருக்கு.

இந்த உடலை உதிர்க்க கொல்றது ரெண்டு கொல்லப்படறதுங்கற ரெண்டே ரெண்டு வேலைகளை வித விதமான காரிங்கோட செய்றாய்ங்க.

மன்சங்க இன்னா நெல்ல வேலை பண்ணாலும், என்னா கேப்மாரி வேலை பண்ணாலும் அதும்பின்னாடி இருக்கிறது ரெண்டே ரெண்டு ஆசை தானாம்.

ஒன்னு கொல்றது ரெண்டு கொல்லப்படறது. இதை நான் சொல்லலை . சைக்காலஜி சொல்லுது. இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம். அதனால தான் சனங்க செக்ஸுக்கு சரண்டர். மனைவியுடனான செக்ஸில் கொல்லுதல் -கொல்லப்படுதல்ங்கறதெல்லாம் படிப்படியா குறைஞ்சு போயிருது.அதனாலதேன் அலுப்பு -சலிப்பு.

இதனாலதேன் ஆண் -பெண் வேலி தாண்டுகிறார்கள்.

ஒரு பெண் வேண்டுவது தந்தையை . ஒரு ஆண் வேண்டுவது தாயை.  ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் மறுக்கப்பட்டா - ஒடைச்சு சொன்னா முலைக்காம்பு மறுக்கப்பட்டா அவன் செயின் ஸ்மோக்கராகிறான்.  குடிகாரனாகிறான். நிப்பிள் காம்ப்ளெக்ஸ். ஒரு பெண்ணுக்கு தந்தைப்பாசம் மறுக்கப்பட்டால் அவள் காதலிக்கிறாள். அவன் தந்தை அவளது தாயை துன்புறுத்தியிருந்தா இவள் சக ஆண்களை தன் பின்னால் அலைய விட்டு பழிவாங்கறா.

ஓருடல் ஓருயிர் நிலை மாறி பல்லுடல் பல்லுயிரா மாறினாலும் நம்ம உயிர்களெல்லாம் இணைக்கப்பட்டுத்தான் இருக்கு. (செல் ஃபோன்கள் டவர்களால் இணைக்கப்பட்ட மாதிரி) ஆனால் அகந்தை காரணமா பிரிஞ்சிருக்கம். நோக்கமென்னவோ சக உயிர்களோட இணையறது. ஆனால் நாம செய்றதென்ன.. நம்ம இளைஞர்கள் இளைஞியர் செய்வதென்ன?

ஒரே ஒரு நபரோடு இலக்கில்லாம்  அலைய மத்த அனைவரோட உறவுகளையும் நாஸ்தி பண்ணிக்கிறதுதேன். ஏற்கெனவே  தங்களோடு இணைஞ்சிருக்கிற ஒரு சில உயிர்களிடமிருந்தும் பிரிஞ்சுர்ரதுதான். பை.தனமா இல்லே?

இந்த ஒரே ஒரு யதார்த்தத்தை புரிஞ்சிக்கிட்டா போதும். மனிதன் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவோ (சர்வைவல்) - படைக்கவோ - பரவவோ ( குழந்தை பேறு)  செக்ஸ் ஒன்னு மட்டுமே வழியல்ல.

ஓருயிர் ஓருடலாய் இருந்த நிலையை மீண்டும் அடைய உடல்களை உதிர்ப்பதோ - அதற்காக கொல்வதோ கொல்லப்படுவதோ வழியல்ல -

ஓருயிர் ஓருடலாய் இருந்த நிலையை மீண்டும் அடைய உடல்களால் கலப்பது வழியல்ல. அதற்காக உடலுறவின் ஈடுபடுவது மட்டும் வழியல்ல.  ஏற்கெனவே நம் உயிர்கள் இணைக்கப்பட்டிருப்பதை உணரவேண்டும்.

வன்புணர்வுகளை தவிர்க்க புரட்சிமணி தரும் ஆலோசனைகளை பாருங்க:

//மனிதத்தை பற்றிய கல்வியும் அதில் ஒழுக்கத்தின் அவசியத்தையும் மக்களுக்கு எடுத்து கூற  வேண்டும்.பிறந்ததிலிருந்து இவற்றை குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு சிறு வயது முதலே உண்மை,நேர்மை,ஒழுக்கம்,மனித நேயம் போன்றவற்றை பின்பற்றும்படி கலை,கல்வியை அமைக்க வேண்டும்.//

தன் உயிர் உலகின் அனைத்து உயிர்களோடும் பிணைக்கப்பட்டிருப்பதை ஒரு குழந்தை தெ(பு)ரிந்து கொண்டு - அதை அனுபவத்தில் உணர்ந்து கொள்ளவேண்டும்.

ஏற்கெனவே இணைக்கப்பட்டிருக்கும் தான் இன்னொரு உயிருடன் இணைய உடல் உதவாது என்பதையும்  - உடல்களை உதிர்ப்பது தன்னை இவ்வுலகின் பல்லுயிரோடு இணைக்காது என்பதையும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இது மட்டும் சாத்தியமானால்  கவைக்குதவாத சாகசங்கள் , காதல்,கத்திரிக்காய், பணப்பித்து அதிகார பித்து வன்முறை ஆகியவற்றை அக்குழந்தை கனவிலும் விரும்பாது. புரட்சிமணி எதையெல்லாம் குழந்தைகளின் மனதில் செயற்கையாய் விதைக்கவேண்டும் என்று பட்டியலிடுகிறாரோ அவையெல்லாம் இயற்கையாய் முளைத்து - பூத்து குலுங்கி மணம் வீசும்.

புரட்சிமணியாரின் வலைப்பூவில் அவ்வப்போது இந்துத்வா வாடை மூக்கை துளைக்கும். இந்த மேட்டர்லயும்
// ஆபாசமான உடைகளை தவிர்த்தல் நல்லது//ங்கறாரு.

இன்னைக்கு கர்ச்சீஃப் மட்டும் கட்டிக்கிட்டு போடற ஆட்டத்தை எல்லாம் பார்த்தா நமக்கு ஒன்னும் ஆறதில்லை.ஆனால் இந்த முரசு டிவியில 16 முழ புடவைய சுத்திக்கிட்டு வர்ர கருப்பு வெள்ளை சமாசாரங்கதான் பயங்கரமா கலக்குது .இதுக்கு என்ன பண்றதுன்னு புரட்சிமணியார் சொல்லனும்.

வன்புணர்வுங்கறது ஒரு வக்கிர  மனதின் - வக்கிர கணத்து  வெடிப்பு. இதுல ஆடை ,அணிகலன்லாம் ஒரு பொருட்டே இல்லை.  நல்லவேளையா புரட்சிமணியார் அடுத்த பத்தியிலயே ஜகா வாங்கறாரு.

//.மூன்று வயது குழந்தை  முதல் அறுபது வயது கிழவி வரை கற்ப்பழிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு எந்த ஆடை கொடுப்பது?  காம கொடூரர்களுக்கு ஆடை ஒரு தடை அல்ல.//

மன்னிக்கவும்:
இந்த வன்புணர்வு பின்னான மனோதத்துவத்தை அலசவே இந்த பதிவை ஆரம்பித்தேன்.ஆனால் அலசல் காதல்,கல்யாணம் ,கள்ள உறவுகளோடே நிற்கிறது.இன்னொரு சந்தர்ப்பத்துல அலசலை தொடர்வோம்.

Thursday, June 23, 2011

பேரண்ட்ஸ் Vs சில்ட்ரன்

நாம எதையெல்லாம் வளர்ச்சின்னு நினைக்கிறோமோ அதெல்லாம் நமக்கு ஆப்பாவே முடியுது. உ.ம் இந்த சைட். ப்ளாக் என்னமோ வித் அவுட் அப்டேஷன் மினிமம் 700 ஹிட்ஸோட சக்கை போடு போடுது.  சைட் என்னமோ பஸ்ட் ஆன லாரி ட்யூபுக்கு காத்தடிச்ச கணக்கா -க்ளைமேக்ஸுல ஹீரோயின் பல்ஸ் மாதிரி 1000 க்கும் 300க்கும் இடையில ஃப்ளக்சுவேட் ஆயிட்டு  கிடக்கு.

நாம ஏற்கெனவே டிக்ளேர் பண்ண மாதிரி நமக்குள்ள ஆயிரத்தெட்டு திறமைகள் இருக்கு. ஆனால் உலகம் சோசியத்தை மட்டும்தேன் அங்கீகரிச்சிருக்கு. நமக்கும் பைசா தேவைதான். ஆனால் பைசா மட்டும்தேன்னா சாரி.

ஏறக்குறைய உருசு/ திருவிழால ரோபோ வடிவத்துல கம்ப்யூட்டர் (?) சோசியம் சொல்ற பொம்மை மாதிரி ஆயிட்டன்.  என் ப்ரியாரிட்டிஸ் - என் லட்சியங்கள் எல்லாம் சைடு வாங்கி சோசியம் சோசியம்னு சுத்திவர ஆரம்பிச்சதுல ரெம்ப சுஸ்தாயிட்டன்.

அதனால ரூட்டை மாத்தி 360 டிகிரியில வலம் வரலாம்னு ஒரு ப்ளான். அனுபவஜோதிடத்துல ஜோதிட ஆராய்ச்சி தொடரட்டும். அவசியம்னு பட்டா நானும் கலந்துக்கிடறேன். இந்த புதுலைன் அப்ல இன்னைக்கு பேரண்ட்ஸ் வெர்சஸ் சில்ட்ரன்

வாத்தியார் என்னமோ ..( ஷார்ட்ஸ் போடற பார்ட்டிகள் கவனிக்கவும். வாத்யாருன்னா எம்.ஜி.ஆர்)

"தூக்கமருந்தினை போன்றவை பெற்றவர் கூறும் புகழுரைகள் - நோய்
 தீர்க்கும் மருந்தினை போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள்"

என்று பாடி வைத்துவிட்டார். ( பாடல்: புதுமைப்பித்தன்?)

ஆனால் பிராக்டிக்கலா பார்க்கும்போது உலகம்/ குறிப்பா உலகத்திலான சர்வைவல்/ போட்டிகள் /பருவ குழப்பங்கள்/காதல்/கத்திரிக்காய்/ ஈவ் டீசிங்/ சமூகத்தின் ஒரு பக்கம் அம்பானியின் புதுவீடுத்தனமான செழிப்பு மறு பக்கமோ வறுமை வறுமை பத்து ரூபாய்க்கு கைக்குழந்தையை விற்றுவிடும் வறுமை இத்யாதியால் ஏற்படும் தாங்கமுடியாத  வலிக்கு  மார்ஃபின் தனமாகவே இருந்தாலும் பெற்றவர் புகழுரைகள்  அவசியம் தேவைப்படுகின்றன..

அந்த புகழுரைகள் ஆத்மார்த்தமாக இருக்கும்போது நிச்சயம் பலனளிக்கின்றன. அம்மாக்காரி சீட்டு ஏலத்துல, ஊர் பஞ்சாயத்துல பிசியா இருந்துக்கிட்டு உதட்டளவுல - உயிர் இல்லாத  படாடோப வார்த்தைகளில் புகழ்ந்துரைக்கும் போது அவை வேலை செய்வதில்லை.

புகழ்ந்துரைக்கனும்ங்கற அவசியம் கூட இல்லை. ஒரு பார்வை போதும். பையன்/பொண்ணு எதையாவது சாதிச்சு காட்டின சந்தர்ப்பத்துல "சரி சரி.. ஒடம்பை பார்த்துக்க ..கண்ணெல்லாம் உள்வாங்கி டொங்கு விழுந்துக்கிட்டுருக்குன்னு சிடு சிடுத்தா கூட போதும்"

ஆனால் இப்பம் என்ன  நடக்குது? சுஜாதா ஒக்காபிலரில சொன்னா இன்னம் கொஞ்சம் எலக்ட்ரானிக், பிளாஸ்டிக் குப்பைகளுக்காக தங்கள் நேரத்தை விரயமாக்கிக்கொண்டு -  பசங்களுக்கு தங்களோட  நேரத்தை /கவனத்தை தரமுடியாத பெற்றோர் அந்த கில்ட்டிய கொல்ல பணம் கொடுக்கறாய்ங்க.

பசங்களுக்கோ  அ  கல்வி நிறுவனத்துக்கோ? பணம் தர்ராய்ங்க. அந்த பணம் தெண்டப்பணம் (அபராதம்) . தெண்டப்பணம் தெண்டமா போகுது.  அந்த பணத்தை பெறும் கல்வி  நிறுவனம் அந்த பிள்ளைகளை மேலும் கொஞ்சம் இம்சிக்குது.

எங்க ஊர்ல ஒரு தனியார் பள்ளி புது ஸ்கீமை கொண்டுவந்திருக்காய்ங்க. அஞ்சாங்கிளாஸ்ல சேர்ரச்ச ரூ.1 லட்சம் ஸ்கூல்ல டெப்பாசிட் பண்ணிரனும். டிசி வாங்கிட்டு போறச்ச அந்த பணம் திருப்பித்தரப்படும். வட்டி கடியாது.

ங்ககொய்யால  டொனேஷனே வாங்கி வாயில போட்டுக்கிறதை கூட புரிஞ்சிக்கலாம். ஆனால் இது ரெம்ப கடுப்பாக்கிருச்சு.. காரணங்கள் சிலவே.

1.கண்டதுலயும் பெஸ்ட் - நெம்பர் ஒன் -டாப்புனு அலட்டிக்கற இவனுகளுக்கு வங்கிக்கடன் கிடைக்காதா?

2. நூத்துக்கு ரெண்டு வட்டின்னாலும் மாசத்துக்கு ரெண்டாயிரம் ஆகுது -5, 6,7, 8, 9 எல்லா கிளாஸுக்கும்  ஒரே ஃபீஸா?  -ஃப்ளாட் ரேட் -  ஓஹோ ! அஞ்சாம் வகுப்புல ரெட்டியா வாங்கின ஃபீஸ்ல அடிஷ்னல் ஃபீஸை பத்தாவதுல அஜீஸ் பண்ணிர்ராய்ங்களா? அது சரி முன் கூட்டி கட்டின ஃபீசுக்கு வட்டி ஆரு கணக்கு?

3.அந்த ஒரு லட்சம் ஸ்கூல் மேலதான் இன்வெஸ்ட் ஆகுதுன்னு என்ன கியாரண்டி? இவன் ரியல் எஸ்டேட் பண்றதுக்கு பெத்தவுக தாலியறுக்கனுமா?

4.எல்லாத்தயும் விட முக்கியமானது அந்த ஸ்கூல் பி.டி மாஸ்டர் ஒரு சைக்கோ. மரச்சேரை தூக்கி அடிச்சு ஒரு பையனுக்கு கை முறிஞ்சு போச்சு . இதுக்கு என்னப்பா சொல்றேனு கேட்டா கரெஸ்பாண்டென்ட் ஏ.சி ரூம்ல சீமை  சாராய வாசத்தோட விளக்கெண்ணையா பேசறான்.

நம்ம ஜெனரேஷன்ல அப்பா எஸ் .எஸ்.சி - நாம பிகாம். ஏற்கெனவே சொன்னாப்ல அப்பாவுக்கு  ஜில்லா ஜில்லாவா ட்ரான்ஸ்ஃபர். லீவுல வீட்டுக்கு வரும்போது "டே பையா இப்ப என்ன க்ளாஸ் படிக்கிறே" என்று விஜாரிப்பார் .தட்ஸால்.

இப்பம் அப்பன் டாக்டருன்னா -பையனும் டாக்டருக்கு படிக்கிறான் - அப்பன் இஞ்சினீருன்னா பிள்ளையும் இஞ்சினீருக்கு படிக்கிறான். அப்பங்காரன் அவுட் டேட்டட் ஆகியிருந்தாலும் அப்டேட் பண்ணிக்கிறான். பையன்/ பெண்ணை ரேஸ் குதிரை கணக்கா மெயின்டெய்ன் பண்றான். தோத்துப்போனாலோ - கால் முறிஞ்சாலோ துப்பாக்கியால சுடறதில்லைங்கறதுதான் ஒரே ஆறுதல்.

இது பாட்டின்  மொதல்வரிக்கான வியாக்கியானம். அடுத்தவரியை பாருங்க." நோய் தீர்க்கும் மருந்தினை போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள்"

கற்றவர்னா என்ன? தியரியை படிச்சவனை வேலை வாய்ப்பு மார்க்கெட்ல மியூசிய பிறவி மாதிரி பார்க்கிறாய்ங்க. இதெல்லாம் தள்ளு கேஸு. சரித்திரம் போனியாகத கேஸு. தமிழ் தள்ளி வைக்கப்பட்ட கேஸு. சன் நியூஸ்ல வர்ர ஃப்ளாஷ் நியூசை பாருங்க. எழுத்துப்பிழை - பொருட்பிழை சகலமும் இருக்கு.

தியரியை விட்டுத்தள்ளுங்க. டெக்னிக்கல் ஸ்டடீஸ் மட்டும் என்ன வாழுது? பையனுக்கு கத்துக்கொடுக்கிற பார்ட்டி போன வருசம் படிச்சுட்டு வந்தவன். அப்படியே அந்த பார்ட்டி சரக்குள்ள பார்ட்டியா இருந்து ஒழுங்கா கத்துக்கொடுத்தாலும் இந்த பிக்காலி அவன் கிட்டே  படிச்சு முடிச்சு வெளிய வர்ரதுக்குள்ள மொத்தமே மாறிப்போகுது. நோ சான்ஸ் ஃபார் அப்டேஷன்.

அரசியல் பின்னணி உள்ள ப்ரைவேட் காலேஜ்/யூனிவர்சிட்டி  மேனேஜ்மெண்டையெல்லாம் பார்த்தா வா.வெ. ( வாழ்க்கையே வெறுத்துரும்)

எங்க ஊருல ஒரு ப்ரைவேட் காலேஜ் ஃபவுண்டரோட ஃப்ளாஷ் பேக். ஹீரோ மெஜஸ்டிக் டூ வீலர் வந்த புதுசுல அதை வச்சு  பம்பர் லாட்டரி நடத்தினவர். மாசாமாசம் குலுக்கல் .காங்கிரஸ் கட்சியில தில்லிவரை பெட்டி கொடுத்து கச்சா முச்சான்னு சீட் வாங்கி ஒவ்வொரு தாட்டியும் தோத்த பார்ட்டி.அம்பது வயசுல பயாஸ்கோப்புல ஹீரோவா வேசம் கட்டின பார்ட்டி..

இவிக சைக்காலஜிதான் என்ன? இவிகளை நம்பி இவிக காலேஜ்ல சேர்ந்து படிக்கிறவன் சைக்காலஜிதான் என்ன? ஒன்னம் புரியமாட்டேங்குதுங்ணா. தூத்தெறிக்க.

கற்றவர்னா என்ன? ஒரு டெஃபனிஷன் ப்ளீஸ். நான் பார்த்த கற்றவர் எல்லாம் .. பிகில் ரவுடி "இன்னா இன்னா"னுட்டு வந்தாலே கக்கூஸ் பூடற பார்ட்டிங்க. எனக்கு கற்றவர் மேல எல்லாம் மரியாதையே இல்லிங்ணா இதுல அவிக அறிவுரைகள்னா மாணாம் கெட்டவார்த்தையா வருது.


கடேசியா ஒரு முடிவான மனோதத்துவ உண்மை:

பெற்றவர் பேச்சு /செயல்களுக்கு காரணம்:

அய்யய்யோ.. நாம சின்னவயசுல எப்படி இருந்தமோ அப்படியே இருக்கானே.. இவன்/இவள்   நமக்கப்பாறம் இந்த  உலகத்தை எப்படி ஃபேஸ்  பண்ணப்போறான்/ள்

அடுத்த தலைமுறையின் பேச்சு செயல்களுக்கு காரணம்:

இந்த ஆளு/ இந்த பொம்பள பேச்சை கேட்டா இந்த ஆளை/பொம்பளை  போலவே  வாழ்ந்து முடிச்சுர வேண்டியதுதான்

Monday, January 10, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்: 5




மனிதன் நாலுகால்ல நடந்தப்ப பிற்போக்கு வாதியா இருந்தான், ரெண்டு கால்ல நடக்க ஆரம்பிச்ச பிறவு பரிணாம மாற்றத்துல பெண்ணின் கர்ப்பப்பை முகம் ரூட்டை மாத்த ஜஸ்ட் உள்ளுணர்வு காரணமா முற்போக்குவாதியா மாறினான். அதுவும் படுத்த வாக்குலதான் இன்செமினேஷன் சக்ஸஸ்ஃபுல்லா இருந்ததுன்னு பார்த்தோம். உடலுறவு முறைகளோட எண்ணிக்கை கச்சா முச்சானு இருக்கு. இதை மொதல்ல நாலு வகையா பிரிச்சுக்கலாம்.


1.ஆண் மேல் முறைகள்
2.பெண் மேல் முறைகள்
3.நின்றவாக்கிலான முறைகள்
5.படிக்க மட்டும் முடிந்த முறைகள்
(யோகாசனத்துல /சர்க்கஸ் வித்தையில சக்ஸஸ் ஆனவுக மட்டும் ட்ரைபண்ணலாம்)

இதுல ஆண் பெண்ணை அவிக உறுப்புகளோட நீளம்,ஆழத்தை வச்சு வகை பிரிச்சு இதுக்கு அது பொருத்தம் அதுக்கு இது பொருத்தம்னுல்லாம் இருக்கு. ஆனால் கிடைச்சதை வச்சு எப்படி மேனேஜ் பண்றதுங்கறதுதான் நம்ம நோக்கமா இருக்கனும்.ஆமா சொல்டேன்.




பெண்ணோடது ஃப்ரீ சைஸா இருந்தா காலை கொஞ்சம் சேர்த்து வச்சிக்கம்மா. ஆணோடது ஃப்ரீ சைஸா இருந்தா காலை கொஞ்சம் அகட்டி வச்சுக்கம்மா மேட்டர் ஓவர்.



( இந்த மாதிரி ஃபர்னிச்சர் கில்மாவுக்கு நிரந்தர ஆப்பா மாறிரும். அதனால சாய்மானம் உள்ள ஐரன் அ உடன் சேரை மட்டும் யூஸ் பண்ணுங்கண்ணா. புத்தூர் செலவுக்கெல்லாம் சப்சிடி கூட கிடைக்காதுங்கோ)

அப்படியே ஆணுக்கு நீளம் பத்தலைன்னாலும் பிரச்சினை இல்லை. யோனியில உணர்ச்சி நரம்புகள் இருக்கிறதே மூணு அங்குலம் வரைதானாம். மேலும் உணர்ச்சி பிழம்பான க்ளிட்டோரிஸ் இருக்கும்போது நாக்கு,மூக்குல்லாம் இருக்கும்போது ஆர்கன் டெவலப்பர் எல்லாம் வீண் வேலை.


( நோ பிளாஸ்டிக் .. )

ஜஸ்ட் மூணு அங்குல நீளமுள்ள உறுப்பு இருந்தா போதும் விளையாடலாம். பை தி பை இந்த தொடர்ல ஆண் மேல் முறையை தீர விசாரிச்சுட்டோம். (இதிலான உட்பிரிவுகளை அடுத்தடுத்து பார்ப்போம்) .ஆனால் பெண் மேல் முறைய பத்தி விஜாரிக்கறதுக்குள்ள ஒரு சில ஃபோன் கால்ஸ்,பர்சனல் மெயில்ஸ், எனக்குள்ள ஓடற பியூராக்ரட் ரத்த எல்லாமா சேர்ந்து நாலாவது அத்யாயம் "சிந்தன் பைட்டக்" மாதிரி ஆயிருச்சு.

(ஆர்த்தரைட்டிஸ் உள்ளவுக, கீல்வாயு உள்ளவுக அம்பேலாயிர்ரது பெட்டர்)

இந்த தொடரை படிக்கிறச்ச அசூயையா கூட இருக்கலாம். இதுல சொல்லியிருக்கிற, சொல்லப்போற சின்ன சின்ன சூட்சுமம் தெரியாம எத்தீனி பார்ட்டி கொலையாயிருச்சு,தற்கொலையாயிருச்சு, கோர்ட்டுல,மஹிளா ஸ்டேஷன்ல குடியிருக்குன்னெல்லாம் டேட்டா கொடுத்தா ரெம்ப பர்சனலா போயிரும். ஸ்டேஷனுக்கு போயி மூணாவது மன்சன் மின்னாடி "அவரு என்னை பொம்பளையாவே நடத்தலை"ங்கறதும் , "அவள் பொஞ்சாதியாவே நடந்துக்கலை எஜமான்"ங்கறதும் இதவிட அசிங்கமா இருக்கும்.

(இதுக்கு டீக்கடை பெஞ்ச் கணக்கா ஃபர்னிச்சர் வேற ப்ரிப்பேர் பண்ணனும் போல)

ஓகே பஞ்சாயத்து ஓவர் இப்ப பெண் மேல் முறை பத்தி விஜாரிச்சுருவமா? உடு ஜூட்...

இந்த முறைய ப்ரப்போஸ் பண்ற ஆணோட மனோதத்துவம்:
1.தன் முக்கியத்துவத்தின் மேல் எவ்வித சந்தேகமும் இல்லாதவனா இருப்பான்
2.பெண் தன்மை மிகுந்தவனாவும் இருக்கலாம்.
3.பூனை எந்த நிறமா இருந்தா என்ன எலியை பிடிச்சா சரின்னு நினைக்கிற பார்ட்டி ( ப்ரி மெச்சூர்ட் எஜாகுலேஷன்/விந்து முந்துதலை தவிர்த்தா போதும்ங்கற எண்ணம்)
4.பெண்ணுக்கு குறைந்த வயதா இருக்கலாம்.அல்லது அப்படிப்போன்ற தோற்றமிருக்கலாம். இவனுக்குள்ள மனைவியில மகளை பார்க்கிற விருப்பமும் இதுல நிறைவேறுதுல்லயா?)
5.மாற்றத்தை விரும்பற ஜாதி - ஃப்ளெக்சிபிள் பர்சன்
6.இன்டலிஜென்டா இருக்கலாம். இவிகளுக்குத்தான் ரொட்டீன் சீக்கிரம் அலுத்துரும்
7.மனைவியின் பால் குற்ற மனப்பான்மை இருக்கலாம்.
8.சைனஸ் போன்ற சுவாச தொல்லைகள் இல்லாதவனா இருக்கலாம்.
9.பகல்ல பெண்ணை ரெம்ப இன்சல்ட் பண்ற பார்ட்டியா இருக்கலாம்
10.பிற்போக்காளனா இருக்கலாம் ( நம்ம அகராதி பிடிச்ச அகராதிப்படிங்கோ) பின்னழகை தட்டி தடவி கிள்ளி அனுபவிக்கலாம்ல




இதுக்கு அங்கீகரிக்கிற பெண்ணோட மனோதத்துவம்:

1.தன் முக்கியத்துவத்தின் மேல் சந்தேகம் கொண்டவளா இருப்பாள்
2.ஆண் தன்மை மிகுந்தவளா இருக்கலாம்.
3.ஹிப்பாக்ரசி குறைவு
4.குறைந்த வயதா இருக்கலாம்.அல்லது அப்படிப்போன்ற தோற்றமிருக்கலாம். (இவளுக்குள்ள கணவனில் தந்தையை பார்க்கிற விருப்பமும் இதுல நிறைவேறுதுல்லயா?)
5.மாற்றத்தை விரும்பற ஜாதி - ஃப்ளெக்சிபிள் பர்சன்
6.இன்டலிஜென்டா இருக்கலாம். இவிகளுக்குத்தான் ரொட்டீன் சீக்கிரம் அலுத்துரும்
7.கணவனின் பால் பழிவாங்கும் எண்ணம் இருக்கலாம்.
8.பகல்ல கணவனால ரெம்ப இன்சல்ட் ஆன பார்ட்டியா இருக்கலாம்
9.பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பெண்ணா இருக்கலாம். "கங்கை வெள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது?"
10.படிப்பு,அழகு,கவர்ச்சி,பணம் இத்யாதியில் குறைந்தவளா இருக்கலாம். பாவம் இதை கூட செய்யலைன்னா எப்படிங்கற எண்ணத்துல அங்கீகரிக்கலாம்னு சொல்றேன்


(இதுக்கு பேஸ்மென்டும் ஸ்ட்ராங்கா இருக்கனுங்கோ)

பெண் மேல் முறையில் எத்தனை சப்டிவிஷன் இருக்குனு சில படங்களையும் வச்சிருக்கேன். அல்லாரும் பார்த்தாச்சுன்னா படக்கு படக்குனு நீக்கிரலாம். சின்னப்புள்ளைக பார்த்தா கெட்டுருவாய்ங்கல்ல.



தங்கள் கவனத்திற்கு:
அலெக்ஸா தரும் ரிப்போர்ட்டின் படி நம்ம வலைப்பூவை படிக்கிறவுகல்லாம் ஃபார்ட்டி அபவ் தானாம். அப்போ ரெண்டாவது தேனிலவு துவங்கப்போகுதுங்கோ

Friday, January 7, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்: 2




இந்த பதிவுக்கு அம்பது ஓட்டாச்சு விழலைன்னா இந்த தொடர் உங்களுக்கு பிடிக்கலேனு அர்த்தம்.தொடர் அற்பாயுசுல முடிஞ்சுரும். டேக் கேர்

மன்சன் 4 கால்ல நடந்துக்கிட்டிருந்தான். (இப்பயும் சில பேரு ஃபுல் மப்புல அப்படி நடக்கிறதுண்டு. தன்னோட உடல்,மனம்,புத்தி,ஆத்மாக்களை உணராம கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு வாழ்ந்தா 40 வயசுலயே அப்படி நடக்கவேண்டி வந்தாலும் வரலாம்.

இன்னைக்கு சின்னவயசுலருந்தே டிவி,கம்ப்யூட்டர் முன்னாடி தவமா கிடக்க ஆரம்பிச்சா தாளி உடம்பு தேவாங்கா மாறி, தலை வீங்கி கண் எல்லாம் பிதுங்கி 30 வயசுலயே நாலு கால்ல நடந்தா நான் ஆச்சரிய படமாட்டேன்.

மேட்டருக்கு வருவம். மன்சன் 4கால்ல நடந்துக்கிட்டிருந்தான்.(மன்சியும்தான்) . அப்ப பெண்ணோட கருப்பை வாய் அதுக்கேத்த பொசிஷன்ல இருந்தது. அதனால அந்த காலத்துல சகஜமான உடலுறவு முறையே பின்னிருந்து புணரும் முறைதான்.

மன்சன் நிமிர்ந்து நடக்க ஆரம்பிச்சான்.(மன்சியும் தான்) புவியீர்ப்பு காரணமா பரிணாமத்துல கருப்பை வாயோட பொசிஷன் மாறிப்போச்சு.(கீழ் நோக்கி)

எனவே படுக்கப்போட்டுத்தான் காரியத்தை முடிக்கவேண்டிய நிலைமை. அந்த காலத்துல எக்ஸ்ரே,அனாட்டமி க்ளாஸ் எல்லாம் இல்லை பாஸ். ஜஸ்ட் ஒரு உள்ளுணர்வுதேன். அப்பல்லாம் மனுசங்க இயற்கைக்கு நெருக்கமா இயற்கையோட மடியில வாழ்ந்துக்கிட்டிருந்ததால இதெல்லாம் சாத்தியமாச்சு. இப்ப என்னாட்டம் கேடு கெட்ட பார்ட்டி தொடர் எழுதவேண்டியதா இருக்கு. ( இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு பார்க்க: விகடன் உயிர் தொடர்)

ஆனாலும் சிலர் இப்பயும் "அதே மெத்தடை" (பின்னிருந்து புணரும் முறை) ஃபாலோ பண்ண காரணம் என்ன? அவிக சைக்காலஜி என்னனு இந்த அத்யாயத்துல பார்ப்போம்.

இதுலயும் ரெண்டு விதம் ஆனல் ,வெஜினல் ( ஆசன துவாரம், பிறப்புறுப்பு) ஆனல் இண்டர் கோர்ஸ் மேல ஆர்வம் ஏன் பிறக்குதுன்னு நிறையதாட்டி சொல்லியாச்சு. இருந்தாலும் புதுவாசகர்களோட வசதிக்காக ரிப்பீட்டு.

யோக சாஸ்திரப்படி பார்த்தா மனிதனிலான குண்டலி சக்தி ஆசனதுவாரத்துக்கு சற்று மேலே நிலை கொண்டிருக்கு. தன் வாலை தானே கவ்விக்கிட்டிருக்கிற பாம்பு வடிவத்துல (மூலாதார சக்ரம்) சாதனைகள் காரணமா இது விழிப்படைஞ்சு மேனோக்கி நகர ஆரம்பிக்கனும்.

சைக்காலஜிப்படி பார்த்தா எல்லா குழந்தைக்கும் ஆரம்பத்துல தன் ஆசனத்து மேல கவர்ச்சி அதிகமா இருக்கும். இதனாலதான் குழந்தை "கக்கா"போக அதிக சமயம் எடுத்துக்கும். சிலதுக கக்கா கையில எடுத்து பிசையவும் செய்யும்.

காலப்போக்குல இந்த ஆர்வம் தன் இன உறுப்பு மேலுக்கு மாறும். உடனே சனம் "ஆயி" "டர்ட்டி" "ச்சீச்சீ சீசீ" ன்னு கட்டுப்படுத்த ஆரம்பிப்பாய்ங்க. அப்ப அதனோட ஆர்வம் மறுபடி ஆசனதுவாரத்துக்கே மாறிருது. இவிக தான் ஆனல் இண்டர் கோர்ஸ்ல ஆர்வம் கொண்டிருப்பாய்ங்க.

இதுலயே ஓரளவு மெச்சூரிட்டி கொண்ட பார்ட்டிங்க பின் புறமிருந்து பிறப்புறுப்பு வழியிலான உடலுறவை விரும்புவாய்ங்க. இதுல எது ஹெல்த்தின்னா வெஜினல் தான்.

பின்னது ஒன்லி ஃபார் அவுட் கோயிங் இயற்கை படைச்சிருக்கு. எப்பயாச்சும் மண்ணென்னை, ஃபினாயிலுனு குடிக்ககூடாததை குடிச்சிட்டா எனிமா கொடுக்க உபயோகப்படும்.

இது சைலன்சர் மாதிரி. இஞ்சின் கண்டிஷன், போட்ட பெட்ரோலோட குவாலிட்டிய சைலன்சர்ல இருந்து வர்ர புகைய வச்சு மெக்கானிக் கேல்க்குலேட் பண்றாப்ல இதை வச்சு உங்க உணவோட தரம், டைஜஸ்டிங் கப்பாசிட்டி எல்லாத்தயும் கண்டுக்கலாம்.

வெளி மூலம்,உள் மூலம், ஆதி மூலத்துக்கெல்லாம் காரணம் உணவோட தரம் குறையறது , டைஜஸ்டிங் கப்பாசிட்டி குறையறதுதான். ஆக மொத்தத்துல இவ்வழி வெளியேறும் வழி.

குழந்தைகளுக்கு கக்கா வரலைன்னா ஒரு வெத்தலை காம்பை எடுத்து செருகுவாய்ங்க. உடனே அடிச்சிக்கிட்டு வெளிய வரும் . இது ரெம்ப ரிசர்வ்ட் ஸ்பாட். அன்னிய பொருட்களை இது அனுமதிக்கவே அனுமதிக்காது. ஆணுறுப்பாவே இருந்தாலும். மேலும் இங்கன உணர்ச்சி நரம்புகளோ, கருப்பைக்கான பைபாஸோ கிடையாது. எனவே இதுவழியா புணர விரும்பறது அவிங்க சைக்கலாஜிக்கல் டிசைர் தானே தவிர ஒரு ம...........ரும் கிடையாது. இவிக சைக்காலஜி என்னன்னு சொல்லியாச்சு.


இப்ப பின் புற உறவை (வெஜினல்) விரும்பறவுக கதைய பார்ப்போம் :

1.நல்ல ஞா சக்தி கொண்டவுகளா இருக்கனும் ( நாலு கால்ல நடந்த நாள் எல்லாம் ஞா இருக்கும்னா சொம்மாவா?)

2.இயற்கை பிரியர்களா இருக்கலாம்.

3.லைஃப்ல ஹிப்பாக்ரடிக்கா இருந்து இருந்து அலுத்துப்போனவுகளா இருக்கலாம்

4.தாழ்வு மனப்பான்மை கொண்டவுகளா இருக்கலாம்.

5.ஆதிக்க பிரியர்களா இருக்கலாம்.

6.சுய நலமிகளா இருக்கலாம். ஏன்னா இந்த முறையில பெண் உச்சம் பெற வாய்ப்புகள் மிக குறைவு. உணர்வுகள் தூண்டப்படும்போது அல்மட்டி டாமை திறந்துவிட்ட மாதிரி ரத்தம் பிறப்புறுப்புக்கு பாயனும். இந்த முறையில இது சிரமமாயிரும். ( இதயத்துக்கும் பிறப்புறுப்புக்கும் இடையில இடுப்பண்டை ஒரு மடிப்பு விழுதுல்ல) லூப்ரிகண்ட்ஸ் கூட குறையும்.

7.மாற்றத்தை விரும்பாதவுகளா, பழைய நினைவுகளை போற்றி பாதுகாக்கறவுகளா இருக்கலாம்.

8.பார்ஷல் ஹோமோவா இருக்கலாம்.


எச்சரிக்கைகள்:

பெண் தொந்தி பார்ட்டியா இருந்தா பெட்டர் சாய்ஸ். பெண் ஃப்ரீ சைஸ்டா இருந்தா இது ஓரளவு உபயோகப்படலாம். ஆனால் ஃபோர்ப்ளேல்லாம் படுக்கையிலயே நடத்தறது பெட்டர். மேலும் உறவின் போது ஆண் தன்னில் தான் லயிச்சுராம கைக்கு எட்டினதையெல்லாம் வருடுவதும்,தடவறதும், தழுவறதும், பரவறதும், முத்தமழை பொழியறதுமா இருக்கனும். குழந்தைக்காக கூடுறவுக வீரியஸ்கலித சமயம் மறுபடி படுக்கைக்கு வந்துர்ரது பெஸ்ட்.

மனிதர்களில் மிருக நிலையில உள்ளவுகளும் உண்டு, மனித நிலைக்கு உயர்ந்துட்டவுகளும் உண்டு. ஆண் பெண் இருவருமே மிருக நிலையில இருந்தா இந்த முறை பெஸ்ட் சாய்ஸ். ஒரு வேளை பெண்ணுக்கு இதுல விருப்பமில்லைனு வைங்க ரிஜிட் ஆயிருவாய்ங்க. சுரப்பு இருக்காது. உறுப்பு விரிஞ்சு தராது. மேலும் இயற்கையிலயே சைஸ் சின்னதா இருந்தா ரணம் தான் ஆகும். வாழ்க்கை ரணகளாமாயிரும். டேக் கேர். இவிக இன்ன பிற உபாயங்களை பின்பற்றலாம். லேடி டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷனோட செயற்கை லூபிரிகண்ட்ஸ் உபயோகிக்கறது, காலை கொஞ்சம் அகட்டி வச்சுக்கம்மா எட்செட்ரா



Thursday, April 8, 2010

"அந்த" ஐந்து நிமிடத்துக்கான பொய்கள்

அண்ணே வணக்கம்னே,
நமக்குள்ள இருக்கிற மிருகம் நம்மை சந்திக்க வந்தா எப்படியிருக்கும்னு ஒரு கவிதை, தத்துவம் , இத்யாதி கலந்த உரையாடலையும் தனிப்பதிவா போட்டிருக்கேன்.அதை படிக்க  இங்கே    அழுத்துங்க‌

  • "அந்த" ஐந்து நிமிடத்துக்கான பொய்கள்

நாற்பதில் நாய் குணம்?
ஆம்..படைப்பின் பால்
படைப்பாளியின் பால்
பொங்குகிறது நன்றி.
என் தந்தை அதிகப்படி
வரதட்சிணை கேட்டுஎன் தாயை
கொளுத்தியிருந்தால்?
உதவாக்கரை அரசாங்கங்களின்
பேச்சைக் கேட்டுகு.க செய்திருந்தால்?
அவனே மாவா,குட்காவுக்கு பழகி
ஆண்மை இழந்திருப்பின்?
மூன்றாவது வாரிசாக
நான் பிறந்திருக்க முடியுமா என்ன?
ஆம் ..நாற்பதில் நாய் குணம்?
ஆம்..படைப்பின் பால்,படைப்பாளியின் பால்
பொங்குகிறது நன்றி.

பெண்ணாய் பிறந்திருப்பின் மாதவிலக்கு உதிரத்தின்
நாற்றம் முகர்ந்து , அந்த ஐந்து நிமிடத்துக்கான
பொய்களை சீரணித்து
அவன் என்னுள் வருகையில் பூரணித்து
அன்பே பகிர்ந்து,
அன்பை இரந்து,
அது கிட்டாது பன் முறையும்,
சீதைக்கு நிலமகளாய், கியாஸ் ஸ்டவ்
சரண் தர ஒரு முறையும்
எரிந்து போயிருப்பேன்

எவன் வீட்டு கட்டிலிலோ
கசங்கி , சமையலறையில் பொருமி,
குளியலறையில் அழுது
முடிந்திருப்பேன்.
ஆணாய் பிறப்பித்து பெண்மனம் தந்து
அன்பே பகிர்ந்து , அன்பு மறுத்தால்
இரங்கும் கலை தந்த உன்னத நிலை தந்த
படைப்பின் பால்,படைப்பாளியின் பால்
பொங்குகிறது நன்றி.

இதர சகாக்கள் போல் ஹோமோ உணர்வுகளால்
உந்தப்பட்டு அவர்களுடன் சேர்ந்து
மாங்காய் அடிக்கவும்,
நீச்சல் அடிக்கவும் போகாது
இயற்கை வகுத்திட்ட விதி வழி மதி செல்ல
மான் விழி மாதரொடு இணங்கி
உரையாட உறவாட தூண்டிய
படைப்பின் பால்,படைப்பாளியின் பால்
பொங்குகிறது நன்றி.

ஆசன பருவத்தில் நின்றுவிடாது
மலர் கணைகள்  தொடுத்து
மலர் மஞ்சம் குறித்த கனவுகளை
காணும் தீரம் தந்த, பகிர்ந்து மகிழும்
நட்பு தந்த , சூழல் தந்த
படைப்பின் பால்,படைப்பாளியின் பால்
பொங்குகிறது நன்றி. 

காம ஜுரம் தகித்த போதும்
கன்னியர் உறவில் ஊடல் எனும் பெயரில்
அவர் இட்ட நிபந்தனைகள் தமை ஏற்காதே
தன்மானம் தனை இங்கே
உயிராய் காத்திடும் உறுதி தந்த,
தலைவன் உறவு தந்த
படைப்பின் பால்,படைப்பாளியின் பால்
பொங்குகிறது நன்றி.

காமத்திலிருந்து கடவுளுக்காய் பயணம் செய்து
காமம் "கட" பின் அவன் உன் "வுள்"  என்று
இதய வானில் வான வில் வளைத்து
ஞான அம்பெய்திய உள்ளுணர்வு சரிதான் என்று
உறுதி செய்த ஓஷோவின் ஒரு சொல் எனை
சேரச்செய்திட்ட படைப்பின் பால்,படைப்பாளியின் பால்
பொங்குகிறது நன்றி.

ஆம் நாற்பதில் நாய்குணம்.

Tuesday, March 2, 2010

மறுபடி அவள் - தொடர் கதை

முன்  கதை சுருக்கம்
என் பேரு முகேஷு வயசு22.டிகிரி முடிச்சுட்டு 'ச்சும்மா' இருந்த நேரம் அப்பாவோட ஃப்ரெண்ட் ஒருத்தர் தன்னோட டூர் பஸ்ஸுக ரெண்டையும் பார்த்துக்க கூப்டாரு. நல்லாவே டெவலப் ஆச்சு. எனக்கு வெளி வேலைல இருக்கிற ஆர்வம் க்ளரிக்கல் வேலைல இல்லாததை பார்த்த ஓனர் மாயாவ எனக்கு உதவியா அப்பாயிண்ட் பண்ணார்.

மாயா என்னைவிட பத்து வயசு பெரியவ. குஷ்பு தனமான ஃபிசிக். ரொட்டீன் உமன் இல்லே வேலைல எமன். அவளுக்கு 4 அக்கா எல்லாரும் மேரீட். அவியளுக்கு கல்யாணம் பண்றதுக்குள்ளாற அப்பா சலிச்சு போயி செத்துப்போயிட்டாரு. மிச்சம் மீதி நிலத்தையும், எஃப்,டிக்களையும் மாயா பேருக்கு வச்சிட்டார். இதனால அக்கா புருசங்க 4 பேரும் இவளை கவுத்து சொத்து பணம் அடிச்சுரலாம்னு பார்க்க இவ டவுனுக்கு ஜூட்.

போது போறதுக்கு நம்ம டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல வேலை. சபார்டினேட்டா வீக் எண்ட்ல மீட் பண்றதுண்டு. நேரு ஸ்ட்ரீட்ல அறையெடுத்து தங்கியிருக்கா. அறைனு சொன்னது அவ தனியா இருக்காங்கற கான்செப்ட்ல . சின்ன வீடுன்னு சொல்லலாம். ( பாக்யராஜ் படத்துல வர்ர வீடில்லங்கண்ணா). எனக்கு அம்மா 1984லயே டிக்கட்.பாலச்சந்தர் தனமான அப்பா, ரெண்டு அண்ணன் ,ஒரு தம்பி, பொம்பளையிலயே சேர்த்தியில்லாத பாட்டி. ஊர்ல நத்தம்,  நாடோடி,புறம்போக்கு ,ப்ளாக் டிக்கட் எல்லாத்தோடயும் டச். அப்பப்ப ரீஃபில் பண்ணிக்கிறதுக்காக பலான வீடுகள். 

ஒரு நாள் ஞா கிழமை மாயாவோட அறைக்கு போறேன். வாயில் நுரை. பக்கத்துல பூச்சி மருந்து பாட்டில். எப்படியோ ஒரு போலி டாக்டர்,அவர் மூலமா கவர்ன்மென்ட் ஹெட் நர்ஸு மூலமா காப்பாத்தி வுட்டாச்சு. என்னம்மா விசயம்னு கேட்டா பழைய காதலனாம். மாயாவோட அப்பா பார்த்த சம்பந்தம் பெண் பார்க்க வர்ரப்பல்லாம் மொட்டை கடிதாசு போட்டு கெடுக்கிறது வேலை. தங்கச்சிக்கு முடியாம இவர் பண்ணமாட்டாராம்.அதுவரை மாயா வாயாம இருக்கனுமாம். மாயா மாதிரி கேரக்டர் அவனை எப்படி டைஜஸ்ட் பண்ணிக்கும்.தங்கச்சி கல்யாணத்துக்கு செக் கிழிச்சு கொடுத்து  "ஓடிப்போடா"ன்னிருக்கா.

அந்த நாய் வெளில போய் " நீ என்னை வச்சிருக்கிறதாவும் என் மேல ஆசைப்பட்டு செக் கொடுத்ததாவும் ஊரெல்லாம் சொல்லுவேன்னு" சொல்ட்டு போக மாயா தற்கொலை முயற்சி. பாபுரெட்டி ஆட்கள் துணையோட மாயா கிராமத்துக்கு போயி மேற்படி நாயை தூக்க முயற்சி. கிராமத்தாளுங்க எங்களை மரத்துல கட்டி வச்சு செமை காட். மாயா ஜீனும், கார்ட்டூன் போட்ட பஞ்சு மிட்டாய் டீ ஷர்ட் ,சம்மர் கட்டுனு என்னை இம்சிக்க நானும் ஓஞ்சு போன்னு ஈடுகொடுக்க படக்குனு முகத்தை வாரி நெஞ்சுல அணைச்சுக்கிட்டா. நான் பேசாம எங்க அப்பாவ கல்யாணம் பண்ணிக்கயேன். அந்தாளும் விடோயர்தான்னேன்..அவள் உனக்கு அம்மா தானே வேணம் வாடா செல்லம்னு நெஞ்சோட அணைச்சிக்கிட்டா.

மறு நாள் ஓனர் அவர் சம்சாரத்தை மெட்ராஸ் அப்போலோ கூட்டிப்போகனும்னாரு. மாயாவை துணைக்கு கூட்டிப்போறனு சொல்ட்டு மாயாவுக்கு போன் போட்டு விவரம் சொன்னேன்."சரி வரேன்"ன்னா.  ஆஃபீஸ் போய் என்ன மாயா..  நீ ரூமுக்கு போய் பேக்கிங் முடி நான் வந்து பிக்கப் பண்ணிக்கறேன்னேன். " என்ன நினைச்சிருக்கே என்னப்பத்தி .. "ன்னு சீறினாள் மாயா.

அப்புறமா பார்த்தா நீ என்னை ஏன் காப்பாத்தினே மனிதாபிமானம். அது எனக்கு இருக்கா இல்லியானு சந்தேகப்பட்டுத்தானே போன் பண்ணேன் அதான் கோபம்னாள். ஷாட் கட் பண்ணா சென்னை. சொறி பார்ட்டியான என் அண்ணனோட சென்னை ஃப்ரெண்ட்ஸ் உதவியோட ஓனரம்மாவை அப்போலோல  அட்மிட் பண்ணினேன். ஓனர் கொடுத்த தகவலை கேட்டு ஆஸ்பத்திரிக்கு வந்துட்ட சொந்தக்காரவுக  நாங்களே பார்த்துக்கறோம்னிட்டாங்க. ஓனருக்கு   ஃபோன்ல தகவல் சொல்லிட்டு அவர்  சொன்னாப்ல சிக்கன் சென்டருக்கு போனோம்.

மாயாவ மாடில படுக்கச்சொல்லிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தேன். அப்புறம் மாடிக்கு போக மாயா ஏன் லேட்டுன்னு கோச்சுக்கிட்டா. " நீ என்ன பெண்டாட்டியா?" ன்னேன். அவள் என்ன வண்டி ரூட் மாறுதுன்னா. அம்மா மேல இருக்கிற காதலால அப்பனை வெறுக்கற மன நிலையான ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் பத்தி சொன்னேன்.

"சீ சீ .. அம்மாவ போய் எவனாச்சும் காதலிப்பானா?"
"காதலிச்சுருக்கான்.  சரித்திரத்துல மட்டுமில்லே புராணத்துலயும் இதுக்கு உதாரணம் இருக்கு . வினாயகர் தன் தாய் பார்வதி மாதிரி பெண்ணைத்தான் கட்டனும்னு ஆற்றங்கரைல,அரச மரத்தடில  உட்கார்ந்திருக்காராம்..பாவம் அவருக்கு விஷயம் தெரியாம அங்கே உட்கார்ந்திருக்காரு. ஆறு எல்லாம் சாக்கடையாகி பல காலம் ஆச்சு. குட்டிங்கல்லாம் இப்ப ஆத்துக்கே போறதில்ல..ஆனால் வினாயகர் மட்டும் அங்கேயே தங்கிட்டாரு"

"ஏய் கடவுள் மேலயே ஜோக்கா ?"

"கடவுள் வந்து தாய்ப்புலி. மனுஷங்க எல்லாம் குட்டிப்புலி. ஆனா இவிக ஆட்டு மந்தையாயிட்டதால புலி புலின்னு பயந்து சாகறாங்க.. ஆனால் நான் குட்டிப்புலி. கடவுளோட சண்டை போடுவேன், தகராறு பண்ணுவேன்,கோச்சுக்குவேன்.. ஜோக்கடிப்பேன். என் கடவுள் என் இஷ்டம்"

"சரிடா அம்பி ! நீ புலியா இருக்கலாம் நான் மட்டும் .."

"பசுவா  அக்கா ? உன் சைஸுக்கு அதைத்தான் சொல்லனும்"

"த்தூ.. பொம்பளைன்னா வெறும் உடம்புதானா?"

"இல்லைதான். ஆனால் பொம்பளைங்கள்ள நிறைய பேரு  தங்களை அப்படித்தான் , வெறும் உடம்பாத்தான் எக்சிபிட் பண்ணிக்கறாங்க. உடம்பை பத்தி பேசினாதான் ரசிக்கிறாங்க"

"பின்னே உன் பார்வைல  பொம்பளைன்னா என்ன ?"

"ஒரு மனுஷ பிறவி. என்னாட்டம் ஒரு ஜீவன். எனக்கிருக்கிற வலி, மல,ஜல உபாதை எல்லாம் அவளுக்கும் உண்டுதானே "

' யப்பா உனக்கு இன்னா வயசு இருபத்திரெண்டா  ?அறுபத்தி ரெண்டா?"

"பார்த்தயா இதான் பொம்பளை சைக்காலஜி. உங்க கணக்கு பிரகாரம் 22 வயசுல மெச்சூரிட்டியே வராது அப்படித்தானே .. வயசான பார்ட்டியா இருந்தா குண்டு தீர்ந்து போன துப்பாக்கி மாதிரி அப்படித்தானே .. எத்தனை மாமனார் மருமகளை முடிச்சிருக்கான் தெரியுமா?  எத்தனை வாத்தியார் மாணவிகளை முடிச்சிருக்கான் தெரியுமா?  இளமைல காமம்ங்கறது அனலைசிங்க்ல , டெசிஷன் மேக்கிங்க்ல ,  ஒரு டிஸ்டர்பன்ஸ்தான் இல்லைங்கலே.. அதுக்காக அறுபத்தி ரெண்டுலதான் மெச்சூரிட்டின்னா எப்படி ? என்னையே எடுத்துக்க.. அதுக்குன்னு சில பார்ட்டி இருக்கு. அங்கே போய் எல்லாத்தயும் முடிச்சுர்ரேன். ஃப்ரெஷ் மைண்டடா வெளிய வந்துர்ரன்.. என்னை இத்தனை மாசமா பார்க்கிறே.. எப்பயாச்சும்.. உன்னை ஒரு உடம்பாவோ, ஒரு பொம்பளையாவோ பார்த்திருக்கேனா?"

"அஸ்கு புஸ்கு.. ஒன்னும் பேராதுன்னு அடக்கி வாசிக்கிறயோ என்னவோ?"

" உன் கிட்டயா ? பேராதுங்கறயா .. கிழிஞ்சது போ.. பந்தயமா எண்ணி பத்து நாள்ள முடிச்சுருவன்"

"பின்னே ஏன் உன்னை ஒரு உடம்பாவோ, ஒரு பொம்பளையாவோ பார்த்திருக்கேனா?ன்னு நீட்டி முழக்கறே.."

"முதலை ஆடு மாடை கூட அப்படியே மென்னு விழுங்கிருமாம். மாமிச துணுக்குங்க ஈறு சந்துல மாட்டிக்கிட்டு  நாத்தமெடுத்து வீங்கி  அவதிப்படுமாம். அப்போ கரையோரமா வந்து தலைய கரை மேல வச்சு வாயை திறந்து வச்சி படுத்துக்குமாம் ....... அந்த சமயம் சின்ன பறவை ஒன்னு வந்து முதலையோட பலிடுக்குல இருக்கிற சதை துணுக்குகளையெல்லாம் கொத்தி கொத்தி தின்னுமாம்.. அந்த பறவைய விழுங்க முதலைக்கு எவ்ள நேரம் பிடிக்கும் ? ஆனா விழுங்காது.. அதே இழவுதான் உன் சங்கதியும். ஒரு ஆம்பள  எல்லா பொம்பளையையும் பெட் ரூம் பார்வையே பார்த்தா அவன் பலான விஷயத்தை தொட்டுக்கூட பார்க்கலைன்னு அர்த்தம்.. அவன் கூடிய சீக்கிரம் மன நோயாளி ஆயிருவான்"

சொல்லி முடித்து சிகரட்டை எடுத்து பற்ற வைக்க தீப்பெட்டி தேட மாயா எடுத்துக்கொடுத்தாள்.. அவள் பார்வையில் பூஜ்ய பாவம்.. கீதை சொன்ன கண்ணனை பார்த்த அர்ஜுனன் மாதிரி பார்த்துக்கிட்டிருந்த மாயாவ.. " ஹோய் !  என்னா பார்வை இது ரஜினிகாந்தை ரஜினி ரசிகன் பார்த்தமாதிரி.. நான் ஒன்னும் மகானில்லே.. ப்ராக்டிக்கல் மேன்.தட்ஸால்"ன்னிட்டு சீறினேன்.

மாயா பாலகுமாரன் நாவல் கணக்கா என் கையை எடுத்து கண்ல ஒத்திக்கிட்டு "முகேஷ் ! ரியலி யுவார் க்ரேட். 22 வயசுல இப்படி ஒரு கோணத்துல யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்னா .. "

" அறுபத்திரெண்டுல கபாலம் வெடிச்சு கதி மோட்சம் தாங்கறியா.. யம்மாடி .. என் லாப்ல நான் தான் தவளை, நான் தான் குரங்கு  என் ஆராய்ச்சிகளோட இடைக்கால முடிவுதான் இதெல்லாம்.. ஆஃப்தி ரிக்கார்டுன்னு வச்சுக்கயேன்"

அதுவரை நான் சேரிலும் அவள் கட்டிலிலும் உட்கார்ந்திருந்தோம். திடீர் என்று "முகேஷ்!  இங்கே வாயேன் இங்க வந்து உட்காரு"ன்னிட்டு கைய பிடிச்சு இழுத்தா. நான் கேலியா " என்னம்மா கண்ணு பத்து நாள்ள முடிச்சுர்ரதா பந்தயம் போட்டது நான் .. உனக்கென்ன அவசரம்"னேன்.

"ஷிட்.. வாடான்னா "ன்னிட்டு ஒரு இழுப்பு இழுத்தாளா .. நான் ஏதோ அசால்ட்டா தம் போட்டுட்டிருந்ததால ( நம்ம பாடி  வேற காட்பாடியாச்சா) கட்டில்ல போய் விழுந்தேன். "தத்.. சரியான தக்கை நீ.. ஒரு இழுப்புக்கேவா இப்படி விழறது.. சரி ஒழியட்டும் எந்திரிச்சு உட்கார்"ன்னாள். எந்திரிச்சு உட்கார்ந்தேன்.

"என் தலை மேல கைய வை"ன்னா மாயா.. எனக்கு ஒன்னுமே புரியலை. ஒரு கைல சிகரட்டை வச்சுக்கிட்டு மாயா தலைமேல கைய வச்சேன். அந்த கைய எடுத்து அப்படியே தன் முகத்துல வச்சிக்கிட்டா. என் கை கண்ணீரால நனைஞ்சது..

"சனியனே ..நான் என்ன பண்ணேன்.. ஏன் அழறே இப்போ"

"என் அப்பா ஞா வந்துருச்சு.. ஒரு நாள் என்னை பெண் பார்க்க வரதா இருந்தவங்க சொன்ன நேரத்துக்கு வரலை. ஏதோ கன்னா பின்னானு லெட்டர் வந்ததாவும் அதனால வரலைன்னும் தகவல் வந்தது. நான் புழக்கடைல துணி துவைக்கிற கல் மேல உட்கார்ந்து அழுதுக்கிட்டிருந்தேன். என் அப்பா வந்து என் தலை மேல கைய வச்சு யம்மாடி .. அழுவாதடா.. நான் செத்து பிறந்து வரதுக்குள்ள நீ கிழவியாயிருவ..அதனால நான் ஒன்னு பண்றேன் .. உனக்கு முன்னாடி நான் செத்து  எவனாச்சும் நல்ல பையனா பார்த்து அவன் மனசுல பூந்து  உன்னை கல்யாணம் பண்ணி காலமெல்லாம் கண் கலங்காம வச்சு காப்பத்தறாப்ல செய்றேன்னார்.. என் அப்பாதான் உன் மனசுல பூந்து இதெல்லாம் பேசினாரோனு தோணுச்சு.. அதான் "

"மாயா .. உனக்கொரு ரகசியத்தை சொல்லவா.. பிற குட்டிகளோட பழகறப்போ அதுகல்லாம் ஏதோ கவுன் போட்ட அரை டிக்கட் மாதிரி தோனுமே தவிர ஒரு இழவு ஃபீலிங்கும் வராது. என்னமோ நான் கிழடா மாறிட்ட மாதிரி டீலாயிருவன். ஏதோ நீ மதர்லி லுக்கிங்கோட இருக்கறதால என்னை நான் யூத்தா ஃபீல் பண்ண முடிஞ்சது.. இப்ப என்னடான்னா நீயும் என்னை கிழவாடியாக்கிட்டே"

"ஏய் பெண் குழந்தை பிறக்கும் போதே தாயா பிறக்குது. மெஸ்யூர்ட் மேல் தான் தந்தையா மாறமுடியும்னு நீதானே சொன்னே  .. நீ பிஞ்சுல பழுத்த கேஸு உன்னை  எந்த பொண்ணும் தந்தையாதான் ஃபீல் பண்ணுவா?"

"அப்படிங்கறே.. பின்னே பி.ஆர் எதுக்கு உன்னை முத்தல் கோழின்னாரு?"

"என்.........ன முத்தல் கோழியா? நாளைக்கு வச்சிக்கறேன்.."

"யம்மாடி ஆல்ரெடி அவரு மச்சினிய வச்சிருக்காரு. சித்தூர்ல ஒரு டூ டவுன் இருக்கு .. அவரை ஏன் வச்சிக்கறே.. வேணம்னா என்னை  வச்சிக்க"

உடனே மாயா என் பின்னங்கழுத்தை ஒரு பிடி பிடிச்சு முகத்தை நிமிர்த்தி பார்த்துட்டு "ப்ச்.. ஒரு பிடிக்கு தாங்கமாட்டே .. உன்னை வச்சிக்கிட்டு என்ன பண்றது .. அதிலயும் சம்மர் கட் சூப்பர்மா ..  கான்வென்ட்ல கூட கேள்வி கேட்காம சேர்த்துப்பாங்க" ன்னிட்டு அப்படியே கீழே தள்ளினாள்.  சிகரட் எகிறி கீழே விழ .. நான் எழுந்து தரையில் அதை தேடிக்கிட்டே " ராட்சசி.. ஆனை  குட்டி.. இட்லி பாப்பா" ன்னேன், அவ்ளதான் என்னை இழுத்து கட்டில்ல தள்ளி மேலே ஏறி உட்கார்ந்து  மரியாதையா நிறுத்து நிறுத்தலே ..." ன்னிட்டு நாக்கை மடிச்சு முறைச்சு பார்த்தா.. எனக்கு லேசா மூச்சிரைச்சது. இருந்தாலும் தம் கட்டி " பம்ப்ளிமாசு, பன்னி , பிந்து கோசு"  ன்னு வரிசையா கத்தினேன். அப்படியே என் மேல குனிஞ்சு  என் உதட்டை பிடிச்சு நறுக்குனு ஒரு கடி கடிச்சுட்டு  என்னையே பார்த்தாள்.

நான் வலியை பொறுத்துக்கிட்டு " மாயா உனக்கொன்னு சொல்லவா? ஆணும் பெண்ணும் சேர்ந்து ஸ்தூலமா எதை பண்ணாலும் சூட்சுமத்துல பலானதைத்தான் பண்றாங்களாம்" னேன்.

சட்டுனு பக்கவாட்டில உருண்டு " பிசாசே..உன்னை... நாளைக்கு வச்சிக்கிறேன்.. இப்ப தூங்கு" ன்னிட்டு பாத்ரூம் போய் வந்து போர்த்திக்கிட்டு திரும்பி படுத்துக்கிட்டா. எனக்கு தூக்கம் பிடிக்கலை. இருந்தாலும்  நைட் லேம்புக்கான ஸ்விட்சை தேடி போட்டுட்டு  யூப் லைட்ட ஆஃப் பண்ணிட்டு வந்து படுத்தேன்.  நீல நிற லேம்ப் அடக்கமான வெளிச்சத்தை சிந்த மாயா நத்தை மாதிரி சுருண்டு படுத்துக்கிட்டிருக்கா. ரெண்டு கையும் கழுத்தை சுத்தியிருக்க ,கனமான போர்வையால கூட அவளோட உடம்பின் வரி வடிவத்தை மழுப்ப முடியலை. ஏனோ அவள் முகத்தை பார்க்கனும் போல இருந்தது. எந்திரிச்சு வந்து எதிர்ல இருந்த சேர்ல உட்கார்ந்தேன். அவள் முகத்துல  இந்த உலகத்தின் மீதான பரிபூரண நம்பிக்கை தெரிஞ்சது.  தலை முடியோட அடர்த்தி குறைவா இருந்தாலும் அவள் முகத்துக்கு போதுமானதாவே இருந்தது. அந்த சின்ன கண்களுக்குள்ளே கருவிழிகள் வேகமா அசையறது தெரிஞ்சது . ஏதோ கனவு போல. லேசான சிணுங்கல். கண்கள்ள கண்ணீர். பதை பதைச்சு போய் அவள் நெத்தில அலைபாஞ்சுகிட்டிருந்த தலை முடிய ஒதுக்கி விட்டு அவள் உச்சந்தலைல கைய வச்சேன்

" தெய்வமே .. நீ இருக்கயோ இல்லியோ .. ஆனா இருந்தா நல்லாருக்கும்னு இந்த செகண்ட் தோணுது. இவளை எனக்கு அறிமுகப்படுத்தினதுக்கு..ஜஸ்ட் ஒரு தேங்க்ஸ் சொல்ல. நீ இருந்தா நல்லாருக்கும்னு தோணுது இவளுக்கு இவளை புரிஞ்சிக்கிட்டு இவளையும் ஒரு சராசரி பொம்பளையாக்கிராத ஒரு நல்ல கணவனை கொடுன்னு கேட்க" என் மனசுல நன்றியுணர்ச்சியும், வர்ணனாதீதமான உணர்வுகளும் சினிமா விட்ட சனம் போல கிளம்ப  இன்னொரு சிகரட்டை எடுத்து பத்த வச்சேன்.

தொண்டை வறள ஃப்ரிட்ஜை திறந்தேன். தண்ணி பாட்டிலை எடுத்து குடிச்சேன்.. தண்ணி என் தொண்டைக்குள்ள இறங்கற சத்தம் கேட்டோ  என்னவோ " ம் ம் எனக்கும்"ங்கற முனகல் கேட்டது மாயாவிடமிருந்து. பாட்டிலை வாங்கி படுத்துக்கிட்டே குடிக்க முயற்சி பண்ண நான் அவள் பக்கத்துல உட்கார்ந்து அவள் பின் கழுத்தை தாங்கி தூக்கிப்பிடிச்சேன் குடிச்சுட்டு பாட்டிலை  நீட்டினாள். 

ஹை வேல கூட ட்ராஃபிக் குறைஞ்சிருந்தது. மணி என்ன தெரியலை. மறு நாள் சீக்கிரம் கிளம்பனும்ங்கறது ஞா வரவே பாட்டிலை ஃப்ரிட்ஜ்ல வச்சுட்டு வந்து பேண்டை கழட்டி ஹேங்கர்ல மாட்டிட்டு  பேக்ல இருந்து லுங்கிய எடுத்து கட்டிட்டு படுத்தேன். கண்ணை மூடினேன். கொஞ்ச நேரம் ரோட் ரோடா தெரிஞ்சது.  பஸ்ஸும் ,லாரியும்,காருமா கண்ணுக்குள்ள தெரிய.. எப்ப தூங்கினேன்னு தெரியாது.

மாயா "ஏய் முகேஷ்..முகேஷ்"  ன்னு உசுப்பிக்கிட்டிருந்தா. எந்திரிச்சு மலங்க மலங்க விழிக்க .." ச்சீ  எந்திரி சீக்கிரம் உன் அண்ணனோட ஃப்ரெண்ட்ஸ் அசிங்கமா நினைக்க போறாங்க" ன்னா படபடப்பா."  த பார்ரா பிடிவாதமா ஜோடியா தான் தங்குவேன்னு அடம் பிடிச்சது அசிங்கமில்லே ஒரே ரூம்ல ஒரே படுக்கைல படுத்துக்கிட்டது அசிங்கமில்லே . நான் எந்திரிக்க லேட்டானா அசிங்கமா ? சரி சரி நீ கீழே போ பதினைஞ்சு நிமிஷத்துல  நான் ரெடியாயிர்ரன்"னேன். சரி சரி சீக்கிரம் வா. வரப்ப என் பேகையும் எடுத்துட்டு வா"  ன்னிட்டு மாயா கீழே போனா. குளிச்சு ரெடியாயி கீழே வந்தா மாயா கேஷ் கவுண்டர்ல உட்கார்ந்து பணம் வாங்கிக்கிட்டிருந்தா. "ஏய் எங்க அவங்க"ன்னேன். உள்ள டிஃபன் சாப்பிடறாங்க. அசிங்கமா இங்கே வச்சு சாப்பிடறேன்னாங்க நான் தான் நான் பார்த்துக்கறேன்னு அனுப்பினேன்"னா

பி.ஆருக்கும் ஸ்ரீதர் சாருக்கும் சொல்லிக்கிட்டு காரை கிளப்பி அப்போலோ போனோம். வார்ட்ல நர்ஸு "என்னங்க இது பேஷண்டோட யாருமே இல்லாம போயிட்டிங்க"ன்னிட்டு எரிஞ்சு விழுந்தா. நொந்துட்டன்.

ஓனரம்மாவ விசாரிச்சா " எல்லாம் பன்னாடைங்க... பேரம் பேசுதுங்க. நாலு நாள் கூட இருந்து பார்த்துக்கிட்டா அவள் பொண்ணுக்கு நான் கல்யாணம் பண்ணனுமாம். இன்னொருத்தி பொண்ணை என் புள்ளைக்கு கட்டனுமாம்.. தத் போங்கடின்னிட்டன்"ன்னாங்க. எனக்கு ஒன்னுமே புரியலை. மாயா, "இதுல யோசிக்க என்ன இருக்கு. கமிட் ஆகிதான் வந்தோம். இதுவும் நல்லதுக்குதான். நான் இருந்து பார்த்துக்கறேன்.பொம்பளைக்கு பொம்பளதான் கரெக்டு"ங்கறா. சரின்னு சிக்கன் சென்டர் போன் நெம்பரை கொடுத்துட்டு "ஏய் மனசுல என்னை நல்லா  திட்டிக்கப்போற அப்படித்தானே" ன்னேன். " நீ இப்படி இன்னும் கொஞ்ச நேரம் பேசினா
மனசுல இல்லே வெளியவே திட்டுவேன்.. முதல்ல ஊரை போய் சேரு பாவம் ஓனர் டென்ஷன்ல இருப்பாரு. நாலு நாள் தானே. எப்படியும் எங்களை பிக்கப் பண்ண நீதானே வரனும்"ன்னிட்டு துரத்தாத குறையா அனுப்பிட்டா. நான் கவுண்டர்லயும் , அட்மினிஸ்ட்ரேஷன்லயும் எம்.எல்.ஏ ஆளுங்க அது இதுனு பீலா விட்டு, பி.ஆர்,ஸ்ரீதர் கிட்டே போன்ல பேசி விவரம் சொல்லி முடிஞ்சா ஒரு நடை பார்த்துக்கங்கனு ரிக்வெஸ்ட் பண்ணிக்கிட்டு சித்தூர் வந்தேன்.

நாலு நாள் போறது நாலு வருஷம் மாதிரி இருந்தது. மனசுல மாயா மாயானு ஒரு ட்ராக் ஓடிக்கிட்டே இருக்கு. ஓனரே நக்கலடிச்சுட்டாரு ' என்னடா பெண்டாட்டி செத்தவன் மாதிரி"ன்னு.  அஞ்சாவது நாள்  மெட் ராஸ்ல இருந்து போன். ஓனர் "நானும் வரேண்டா"ன்னு கிளம்பிட்டாரு. மாயாவ  முகத்துக்கு  நேரா பார்க்க கூட முடியாத நிலைமை.. எப்படியோ ஊர் வந்து சேர்ந்தோம்.

மாயா இல்லாததால டச் விட்டு போனதால க்ளரிக்கல்  ஒர்க் எல்லாம் அரை குறையாவே  நின்னிருக்க அவள் திட்டிக்கிட்டே எல்லாத்தயும் ஃபினிஷ் பண்ணா. சரி ஈவ்னிங்காவது மாயாவோட ஸ்பெண்ட் பண்ணலாம்னு ப்ளான் பண்ணிக்கிட்டிருந்தா என் அப்பா வந்தார். சின்னப்பசங்களுக்கு ச்சூ காட்டற மாதிரி" ஏம்மா  மாயா ..பஜார்ல எதுனா வேலையிருந்தா பார்த்துக்கிட்டு வா. பொட்டு,ஸ்னோ, பவுடர் எதுனா வாங்க வேண்டியதிருந்தா வாங்கிக்க நான் இவன் கிட்டே தனியா பேசனும்"னாரு.

எனக்கு வயித்த கலக்குது. என் அப்பா ஊர்ல இருக்கிற அப்பனுங்க மாதிரி கிடையாது. தன் வரை உதாரண புருஷரா இருந்தாலும் 'தண்ணி போடறியா தனியா போடு. பொம்பளை கிட்டே போறியா தனியா போ ' எதுக்கு சொல்றேன்னு யோசனை பண்ணு உனக்கே புரியும்.. நீ அறிவாளி உனக்கு விளக்கமா சொல்ல தேவையில்லேம்பார். ராத்திரில 9 க்கெல்லாம் வீடு வந்து சேருன்னு சொல்லிட்டிருந்தார். நானும் 9மணிக்கு வீட்டுக்கு போற மாதிரி போயி மாடியில இருக்கிற என்   ரூம்ல இருந்து வெளியேறி பால்கனி வந்து பால்கனி சன் ஷேட்ல இறங்கி குதிச்சு ஜூட் விடறது வழக்கம். பாதி ராத்திரி பன்னெண்டுக்கோ ரெண்டுக்கோ மறுபடி அதே வழில  ரூம்ல போய் செட்டிலாயிருவன். ஒரு நாள் பீட் கான்ஸ்டபிள் பார்த்துட்டு போட்டுக்கொடுத்துர" யப்பா.. நீ எந்த நேரத்துக்கு வேணம்னா வா , பெல் அடி!   நான் கதவு திறக்கறேன். ஆனா திருடனுக்கு வழி காட்ற வேலை மட்டும் வேணா. பீட் கான்ஸ்டபிள் எனக்கு தெரிஞ்சவங்கறதால சரியா போச்சு. புது ஆளா இருந்திருந்தா.. சந்தேக கேஸ்ல உன்னை கூட்டிப்போயிட்டிருந்தா மறு நாள் எஸ்.ஐ ஸ்டேஷனுக்கு வர வரைக்கும் லாக்கப்ல கிடந்திருப்பே..'ன்னவருதான்.

இருந்தாலும் ஞம ஞமங்குது.தனக்கே உரிய ஸ்டைல்ல தன் ஸ்டீல் பொடி டப்பிய எடுத்து ரெண்டு தட்டு தட்டி ஒரு சிட்டிகைய எடுத்து ஹீரோ அறிமுக காட்சில துப்பாக்கில புல்லெட் போடற ரேஞ்சுல மூக்குல திணிச்சுக்கிட்டு கர்சீஃபா கயிறாக்கி  ஒரு தேய் தேய்ச்சுக்கிட்டு " ஏண்டா முகேஷூ.. இந்த மாயாவ பத்தி என்ன நினைக்கிறே?" ன்னாரு.

க்ளைமேக்ஸ் காட்சில டைம்பாம்ல முள் நகருமே அதுமாதிரி முதுகுதண்டுல பரபரப்பு ஒட்டிக்கிச்சி. எங்கப்பா ஊர்ல இருக்கிற அப்பனுங்க மாதிரி இல்லேதான் அதுக்காக.. ஷைனி ஆப்ரஹாம் கணக்கா பிச்சிக்கிட்டு ஓடற எண்ண்னகளை 144 போட்டு நிறுத்திட்டு
"மொட்டையா கேட்டா எப்படி ..வேலைக்கு சேர்க்க போறியா.. உன் ஃப்ரெண்டு பசங்களுக்கு யாருக்குன்னா அலையன்ஸ் செட் பண்ண போறியா எந்த கோணத்துல கேட்கிறேன்னு தெரியாம நான் என்னத்த சொல்றது"
"ஆமாம் எங்கப்பன் டாட்டா கோடி கோடியா சொத்து சேர்த்து பதினாறு கம்பெனி  வச்சிருக்கான்..அதுல வேலை தரப்போறேன்.. உன் அண்ணனுங்களுக்கு அல்லையன்ஸ் பார்த்து முடிக்கவே வக்கில்லை.இதுல ஃப்ரெண்ட்ஸ் பசங்களுக்கு அலையன்ஸாம் அதெல்லாம் ஒன்னுமில்லடா..பாவம் தனியா ரூம்ல தங்கியிருக்குதாமே.. உங்க ஓனர் தான் சொன்னான் (தனக்கு ஃப்ரெண்டுதானே) "

"ஆமாம்.. அதுக்கென்ன இப்போ ?'

"அதுக்கில்லடா ..பாவம் உங்க ஓனர் சம்சாரம் ஆப்பரேசனுக்காக அட்மிட் ஆனப்ப இந்த பொண்ணுதான் 4 நாள் பக்கத்துல இருந்து பார்த்துக்கிச்சாம்"

"ஆமாம்பா.. பார்த்துக்கிட்டா இப்ப என்னாங்கறே நீ ச்சும்மா சஸ்பென்ஸ் வச்சு கடுப்பேத்தாதே.."

"தத் இந்த அவசரம் தாண்டா உங்கிட்ட எனக்கு பிடிக்காத விஷயம்.. பொண்ணு நல்ல மாதிரியா தெரியுது. எங்கயோ ரூம் எடுத்துக்கிட்டு எதுக்கு தனியா தங்கி அவதிபடனும்.  19 X 64 =1216 ஸ்கொயர் ஃபீட்ல கட்ன அவ்ளோ பெரிய வீட்ல இருக்கிறது  நீ , உன் சின்ன அண்ணன்,தம்பி,பாட்டி நானு மொத்தம் 4 பேர்தான். பாட்டி உள்பட எல்லாரும் ஹால்லதான் படுக்கறோம். உனக்கு மாடில தனி ரூம் கொடுத்திருக்கு. தெரு ரூம் காலியாத்தானே இருக்கு. பெரியவனுக்கு கல்யாணமானா அதுவும் அந்த கம்னாட்டி தனியா போறேன் அது இதுன்னு கிளம்பாம இருந்தா அப்போ அவனுக்கு,அவன் பெண்டாட்டிக்கு கொடுத்தாகனும் .பேசாம இந்த பொண்ணை நம்ம வீட்டுக்கே வந்துரச்சொல்லேன்"

'வாடகைக்கா?"

"தூத்தேறி.. என்னை என்ன அல்பமுன்னு நினைச்சியா..பத்து பைசா வந்தா கூட அது என் கஷ்டமா ,உழைப்பா இருக்கனும்னு நினைச்சி வாழ்ந்தவன் நானு.. என்னடா பெரிய வாடகை வந்துரும்.. ஒரு ஐ நூறு ரூபா வந்துருமா.. ஊர்ல இருக்கிற அப்பன் எல்லாம் ஆண்குழந்தை வேணம்னு கோவில் கோவிலா சுத்தினா பெண் குழந்தை வேணம்னு ராத்திரி பகல் தெய்வத்தை வேண்டினவன்டா நானு. என்னமோ பொண்ணு அடக்கமா இருக்கே.. உன் ஓனரம்மா ஆகா ஓகோன்னு சொல்ட்டாளாம், உன் ஓனர் அந்த பொண்ணுக்கு எதுனா செய்யனும் எதுனா செய்யனும்னு ஒரே நச்சரிப்பு. நான் தான் அடக்கி வச்சேன். பார்த்துரா நல்லா இருக்கப்பட்ட குடும்பம்ங்கறே தப்பா நினைச்சிக்கபோவுதுனு ப்ரேக் போட்டு வச்சிருக்கேன். சரி உன் அபிப்ராயம் என்ன சொல்லு  நம்ம வீட்டுக்கே வந்துர சொல்லலாமா?"

எனக்கு ஒரு கூடை பூவை தலையில் கவிழ்த்தாப்பல ஆயிருச்சு, இருந்தாலும் லேசா சம்சயம். " யப்பா..இதுல உன் சதியெல்லாம் எதுவுமில்லியே அவள் தனியா ரூம்ல இருக்கிறதால தானே இந்த நாயி  பாதிராத்திரி வரை கூத்தடிச்சுட்டு வருது.. வீட்டோட வச்சிட்டா என்னத்த கிழிக்க முடியும்னு ஸ்கெட்ச் போட்டயா?"ன்னு கேட்டேன். " அட போடாங்.. தான் திருடி பிறனை நம்பான், கூத்தி கள்ளன் பெண்டாட்டிய நம்பான்னு ஒரு பழமொழியிருக்கு. உன்னை மாதிரி என்னை நினைச்சியா ..நீ என்ன முட்டாளா.. உன்னை சொல்லி திருத்த முடியுமா? எல்லே அடிச்சி திருத்த நீ என்ன சின்னப்பையனா..உப்பு தின்னா தண்ணி குடிக்கப்போறே" ன்னாரு அப்பா.

"யப்பா நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னுமில்லை .. ஏதோ பேசிக்கிட்டிருப்போம் அவ்ளதான்"

" நீ பேசினா எனக்கின்னா? படுத்துக்கிட்டா எனக்கின்னா? விந்து விட்டான் நொந்து கெட்டான்.. இந்திரியம் தீர்ந்து விட்டா சுந்தரியும் பேய் போலே. டேய்..உடம்பு கொஞ்ச நாள் தான் பேசும்.. உடம்போட இரைச்சல்ல மனசு,புத்தி சொல்றது உறைக்காது.  ஆனால் உன் மேல எனக்கு நம்பிக்கையிருக்குடா. நீ என்னதான் கேப்மாரி ஆட்டம் போட்டாலும் உன் கிட்டே உண்மையிருக்கு. சரி சரி அந்த  மாயா கிட்டே  நீ பேசறியா? நான் பேசட்டா? "

"அய்யயோ நீ வேணாம்பா நீ எதாச்சும் வெகண்டையா பேசிரப்போறே.. நானே பேசிட்டு சொல்றேன்"

அப்பா கிளம்பி போக மாயா வந்தாள்

"என்ன டாப்பிக் என்னை பத்திதானா?"
"எக்ஸாக்ட்லி.. உன்னை வேலைய விட்டு தூக்கப்போறாராம்.ஓனர் அதுக்கு ஒத்துக்கலன்னா நான் வேலைய விட்டு நின்னுரனுமாம் .. நீ என்னை கெடுக்கிறியாம். வயசுல மூத்த பொண்ணை வச்சிக்கிட்டா சீக்கிரம் கிழவனாயிருவனாம் .. ஆயுசு  குறைஞ்சுருமாம்"
"யேய் ..பொய் தானே சொல்றே.. உங்கப்பாவ பார்த்தா நல்ல மாதிரியா தெரியுது. இது மாதிரி பாக்யராஜ் சமாச்சாரம்லாம் அவர் பேசியிருக்கமாட்டார்"
"எனக்கு தெரியாம கேட்கிறேன்.. யார் தான் உன் பார்வைல கெட்டவன்?"
"சூழ் நிலை"
"தபார்ரா..அப்ப சூழ் நிலைதான் வில்லனுன்றே?"
"ஆமாடா கண்ணா... நீ ஏதோ சில்லறை கிராக்கிங்க கிட்ட போய் கூத்தடிச்சுட்டு உன் அவஸ்தையெல்லாம் ஒழிச்சுட்டு வந்துர்ர.. எனக்கா என் அக்காவுங்க கல்யாணம் கட்டிக்கிட்டு  படற நரகவேதனைய பார்த்து பார்த்து வெறுத்து போய் உடம்பெல்லாம் கூம்பி போச்சு.. இதுவே என் அக்காங்க நல்லபடியா வாழ்ந்துக்கிட்டிருந்து எனக்கும் அப்படி ஒரு சந்தோசம் கிடைச்சா எப்படி இருக்கும்னு நான் கனவு கண்டுகிட்டிருந்து, உனக்கு மேற்படி டெக்காமெரான் எபிசோடெல்லாம் இல்லாம இருந்திருந்தா ப்ஞ்சு நெருப்பு ஃபார்முலா ஒர்க் அவுட் ஆகியிருக்கும்லியா.. அப்போ நீ கெட்டவனா ? நான் கெட்டவளா? இல்லே சூழ் நிலைதான் காரணம்"
"ஆத்தாடி.. நீ இதே மாதிரி தத்துவம்லாம் விட ஆரம்பிச்சா உன்னை டெய்லி சீரியல்ல கொண்டாந்துருவாங்க ..  நீ கொஞ்சம் அடங்கு..அர்ஜெண்டா  நீ உன் ரூமை காலி பண்னனுமாம் எங்கப்பன் உத்தரவு.."
"ஏன் வாஸ்து சரியில்லயாமா?"
"இல்லடி செல்லம் .. நம்ம ஓனர் அதான் எங்கப்பன் தோஸ்து உன்னை பத்தி மஸ்தா விட்டிருக்காரு..அதனால நீ எங்க வீட்டோட வந்துரனுமாம்"
"உன் மனைவியாவா? உங்கப்பனுக்கு ரெண்டாவது மனைவியாவா?"
"ஆசைய பார்ரா ஆசை தோசை அப்பளம் வடை..எனக்கு அக்காவா .. என் அப்பனுக்கு மூத்த பொண்ணா எப்படி வந்துர்ரயா"
மாயாவின் கண்களில் கண்ணீர்.

"தபாரு என்ன  நீ சதா சர்வ காலம் டிவி சீரியல் மாதிரி அழுதுக்கிட்டு."

"இல்லடா மனுஷ ஜாதி பாசத்துக்கு எவ்ள ஏங்கி போயிருக்கு பாருன்னு நினைச்சேன். ஜஸ்ட் நாலு நாள் அந்த கிழவிய எங்கம்மாவா நெனைச்சிக்கிட்டு சர்வ் பண்ணதுக்கே அந்த கிழவி ஓனர்கிட்டே புலம்ப அவரு உங்கப்பா கிட்டே புலம்ப ஏண்டா மனுஷங்க இப்படி பாசப்பறவைகளா இருக்காங்க"

"அப்படி சொல்றீ என் ராசாத்தின்னானாம். கிழிஞ்சது போ .. தெலுங்கு சேனல்ல க்ரைம் டைம் பார்க்கறதில்லயா..அப்பனை,புள்ள,புள்ளய அப்பன், பெண்டாட்டிய புருஷன்,புருஷனை பெண்டாட்டி,அண்ணனை தம்பி,தம்பிய அண்ணன் ஆயிரம் வெரைட்டில கொலை பண்ணியிருக்கான்... பாசப்பறவைகளாம் பாசப்பறவைகள்..இப்படியே பிரமைல வாழ்ந்துக்கிட்டிருந்தே எவனாச்சும் தூக்கிட்டு போய் துபாய்ல வித்துருவான்"

"ஷிட்.. ஏண்டா உனக்கு மனுசங்க மேல இவ்ள கோபம்"
"இது கோபமில்லே கண்ணு அக்கறை.. சரி விஷயத்துக்கு வா. என்ன சொல்றே எங்க வீட்டுக்கு வந்துர்ரயா. எங்க வீட்ல இருக்கிற பார்ட்டிங்களை பத்தி விவரமா சொல்லிக்கொடுத்துர்ரன் எப்படி சமாளிக்கிறயோ சமாளி."
'வந்துர்ரண்டா"

மாயா சம்மதம் தெரிவிச்சதை ராத்திரி அப்பாவுக்கு சொன்னேன். உடனே அவருக்கு அத்தனை சந்தோஷம். போவட்டும்டா பொம்பள குழந்தைக்காக நான் வேண்டி புலம்பினதெல்லாம் வீண் போகல. ஏதோ இத்தனை காலத்துக்கப்புறமாவது தெய்வம் கண்ண துறந்ததே அது இதுன்னு புலம்பிக்கிட்டிருந்தாரு.

மறு நாள் காலைல நான் எந்திரிச்சப்ப தெருவுல ஆளுங்க பேச்சுக்குரல் பலமா  கேட்குது. முக்கியமா என் அப்பாவோட குரல். பால்கனிக்கு வந்து பார்த்தா  வீட்டு முன்னாடி செங்கல்,மணல் கொட்டிக்கிடக்க, சிமெண்ட் மூட்டைகள் அடுக்கியிருக்க   அப்பாவோட ஃப்ரெண்டும் ஒரு காலத்துல  மேஸ்திரியுமான  ஏ.செங்கல்ராய நாயக்கர் தன் ஆட்களோட ஆஜராகியிருந்தார். எனக்கு ஒன்னும் புரிய்லை,ஏ.சி.என் அண்ட் கோன்னா ஊர்ல அவ்ளோ பிரபலம். சிமெண்ட்ல அவர் தயார் பண்ணாத பொருளே கிடையாது.தலைவர்களோட  சிலைகள் உள்பட .அவர் வந்து ஆஜராகிற அளவுக்கு அப்படி என்ன பெரிய  வேலைனு புரியலை.

எந்திரிச்சதும் ஒரு சிகரட்ட பத்த வச்சுர்ர செயின் ஸ்மோக்கரான நான் சஸ்பென்ஸ் தாங்காம  லுங்கிய சரியா கட்டிக்கிட்டு  கீழே இறங்கி வந்தேன். அப்பா சொல்லிக்கிட்டிருக்காரு

" யோவ் ! இந்த பயல் பாதி ராத்திரி வந்து கதவை இடிப்பான் . விதிய நொந்துக்கிட்டு நான் போய் திறந்துக்கிட்டிருந்தேன்.இப்ப அந்த பொண்ணு வேற வந்து தங்க போவுது. சட்டுனு அந்த பொண்ணு போய் திறக்க வேண்டியிருக்கும். இந்த கம்னாட்டி சிங்கிளா வ்ரானோ டபுளா வரானோ தெரியாது. எதுக்கு லொள்ளுன்னுதான் வெளிப்பக்கம் மாடிக்கு  படி வச்சுரு. வாஸ்து காரன் இது கிழக்கு பார்த்த வீடு வாயு மூலைல படி வைக்கவே கூடாதுன்னு அடம்பிடிச்சான். நான் தான் அவனுக்கு தைரியம் கொடுத்தேன். என் புள்ள அனுமார் பக்தன் .அவரு வாய் புத்திரன் இவனும் காத்து மாதிரிதான் எந்த பக்கம் திசை திரும்புவானு சொல்லவே முடியாதுன்னு சொன்னேன். ஒத்துக்கிட்டான். அப்படியே அட்டாச்ட் பாத்ரூமும்,  லேவட்ரியும் கட்டிருங்க. ஃப்ளோரிங்குக்கு  மொசைக் தான். ஆனா அந்த பொண்ணு கொஞ்சம் வஞ்சனை இல்லாம வளர்ந்திருக்கு வழுக்கி கிழுக்கி விழுந்து தொலைக்கபோவுது. கொஞ்சம் கூட வழுக்கக்கூடாது .. ஃப்ளோரிங்க் அப்படியிருக்கனும். ஒரு வேளை ராத்திரில டிவி பார்க்கிற பழக்கம் இருந்தா என்ன செய்யறது அதனால டிவி வைக்க ஒரு ஸ்லாபு. அது பொட்ட புள்ள மேக்கப் சாமானே ஒரு வண்டி இருக்கும். அதுனால பவர் கட்ல கூட நல்லா  வெளிச்சம் வரக்கூடிய திசைல சுவர் சைஸுக்கு  சிமெண்ட்ல ரேக் . மத்தில கண்ணாடி வைக்கிற மாதிரி இருக்கட்டும்.மூனு நாள் தான் டைம் தருவேன். எனக்கு நீட்டா ஃபினிஷ் பண்ணி கொடுத்துரனும் "

என் அப்பா இது மாதிரி படபடன்னு ஆர்டர் பாஸ் பண்றத பார்த்து பல காலம் ஆச்சு. ரிட்டையர் ஆனது ஒரு பக்கம்னா , இவரோட சகல பலகீனங்களையும் சகிச்சுக்கிட்டு குடும்பம் நடத்தின அம்மா போனது மறுபக்கம் .. மனுஷன் இருக்கிற இடமே தெரியாம ஆயிட்டிருந்தாரு..

ஏ.சி.நாயக்கருக்கும் அப்பாவுக்கும் இருந்த நட்பு பத்தி சொன்னா நம்பவே மாட்டிங்க. அப்போ அப்பா வெளியூர்ல இருந்தாராம். கல்யாணமாகி குஞ்சும் குளுவானுமா 4 பசங்க. 10 வருசமா குடியிருந்த வாடகை வீட்டை திடீர்னு விக்கப்போறேனு வீட்டு ஓனர் நோட்டீஸ் கொடுத்துட்டானாம்.அப்போ ஏ.சி.நாயக்கர் சீன்ல என்டர் ஆகி அப்பாவுக்கு விஷயமே சொல்லாம   மிச்ச ஃப்ரெண்ட்ஸுக்கு விஷயத்தை சொல்லி ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு இந்த வீட்டை வாங்கி ரெஜிஸ்டர் பண்ண வச்சாராம். வீடு அம்மா பேர்ல் ரெஜிஸ்டர் அக இதான் காரணம். பிற்பாடு விஷயம் தெரிஞ்சு ஊருக்கு வந்து புலி வேஷமெல்லாம் ஆடி ஃப்ரெண்ட்சை கச்சாமுச்சானு திட்டினாலும், எண்ணி ரெண்டு வருஷத்துல அவங்க பணத்தை பாங்க் வட்டியோட திருப்பி கொடுத்தாராம்  நாயக்கருக்கு    தன் நண்பனோட சந்தோஷம் தான் முக்கியம். தான் ஒரு கம்பெனி எம்.டிங்கறத கூட மறந்துட்டு தினமும் வந்து அப்பா கூட இருந்து மேற்பார்வை பார்த்தாரு. மாயாவுக்கு இதையெல்லாம் சொல்ல அவளால நம்பவே முடியலை. மறுபடி கண்ணீர் விட்டா.