Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Monday, March 28, 2016

முரசொலிக்கு ஒரு ஃபேக்ஸ்

அண்ணே வணக்கம்ணே !
இந்த ப்ளாக்ல நேரடி பதிவு போட்டு மாமாங்கமாச்சு.ஒரு அவசரத்துக்கு இங்கே இந்த பதிவை போடறேன். இந்த கன்டென்ட் முழுக்க முரசொலிக்கு இன்னைக்கு  அனுப்பிய ஃபேக்ஸ் தான்.

மத்தபடி நம்ம ஜோதிட பதிவுகள் அனுபவஜோதிடம் வலைதளத்துல தொடர்ந்து பப்ளிஷ் ஆயிட்டு தான் இருக்கு .உடுங்க ஜூட்டு .

________________

ஐயா !
ஜெயா ஆட்சியின் அவலங்கள் விலகி நின்ற திமுகவினரையும்,அனுதாபிகளையும் ,ஏன் நடு  நிலையாளர்களையும் கட்சியின் பால் சற்றே திரும்பிப்பார்க்க செய்திருக்கிறது . என்னை பொருத்தவரை கடந்த திமுக ஆட்சிகாலத்தை கடுமையாக விமர்சித்தவன் நான்.

ஆனாலும் இன்றைக்கிருக்கும் நிலையில் கலைஞர் தலைமையிலான ஆட்சியும் அவர் அனுபவமுமே தமிழகத்தை மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன்.  திமுக தன்னை அப்டேட் செய்து கொண்டு  வரும் தேர்தலில் பெரிய வெற்றியை பெற என் சிற்றறிவுக்கு எட்டிய யோசனைகளை   கடந்த பிப் 22 ஆம் தேதி தலைவர்  கலைஞருக்கும்  -பொருளாளர் ஸ்டாலினுக்கும் தபால் வழியாக அனுப்பியுள்ளேன்.

மேற்படி யோசனைகள்  இங்கு  உள்ளன. கழக நலன் கருதி .தமிழக நலன் கருதி இந்த யோசனைகள் கலைஞர் அ ஸ்டாலின் பார்வைக்கு செல்ல உதவுங்கள்.

Tuesday, November 6, 2012

அண்ணாவின் மரணத்துக்கு வழி வகுத்த கருணாநிதி

இந்த பதிவுக்கு  " அரசியல்: ஹிப்பாக்ரட்டுகளின் உலகம்"னு தலைப்பு வச்சாலே போதும்.ஆனால் என்ன பண்றது ? காந்தியை பத்தி படம் எடுத்தாலும் கஸ்தூரிபாவின் இரவுகள்னு தான் பேர் வச்சாகனும்.அப்பத்தேன் உலகம் அதை சீந்தும்.அதனாலதேன் இந்த வில்லங்க தலைப்பு.

பெரியார் Vs அண்ணா:
பெரியார் அண்ணா இடையிலான உறவு எப்படிப்பட்டதுன்னு இன்றைய கீச்சர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? அண்ணா "அண்ணன் (பெரியார்)  எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்"னு காத்திருந்தார்.திடீர்னு பெரியார் மணியம்மைய கண்ணாலம் கட்டிக்கறதா சொன்னதும் இர்ரிட்டேட் ஆயிட்டாரு. தனிக்கட்சி துவக்கம் -ஆட்சி பிடிப்பு எல்லாம் நடந்தாச்சு.

அண்ணா -பெரியார் மைண்ட் செட் ரெம்ப டிஃப்ரன்ட். அண்ணாவுக்கு ஆங்கில இலக்கணம் முக்கிய.பெரியாருக்கு அது இரண்டாம் பட்சம் சிக்கனம் தான் முக்கியம். ஏற்கெனவே பேசியிருக்கம்னு தந்தி கொடுக்கனும். அண்ணா தந்தி மேட்டரை விஸ்தாரமா எழுதி கொண்டு வர பெரியார் "டோல்டட்"னு எழுதிருங்கறாரு. பெரியாருக்கு சினிமான்னாலே கடுப்பு.அண்ணாவுக்கு சினிமா மேல ஈர்ப்பு . இப்படி ஆயிரம் வித்யாசங்கள். ரெண்டு பேரும் ரெண்டு துருவம்.

பெரியார் அண்ணா எதிர்காலத்துக்கே ஆப்படிச்ச பார்ட்டி.அண்ணா பெரியாரோட நிகழ்காலத்துக்கே ஆப்படிச்ச பார்ட்டி.ஆனா அண்ணாவின் பேச்சு ,பெரியார் கொள்கைகளை  சட்டமாக்கினது ,அனுதினம் பெரியார் பேரை மந்திரமா ஜெபிச்சது எல்லாத்தையும் பார்த்தா நமக்கு புரியும் .அரசியல்: ஹிப்பாக்ரட்டுகளின் உலகம்


அண்ணா Vs கலைஞர்:




அண்ணாவுக்கு எம்.ஜி.ஆர் மேல ஈர்ப்பு .கலைஞருக்கு எம்.ஜி.ஆர் தான் போட்டி. சினிமா மேல கவர்ச்சி,எழுத்து,பேச்சுன்னு அண்ணாவுக்கும் கலைஞருக்கும் ஆயிரம் ஒற்றுமை இருந்தாலும் குடும்பம்ங்கற மேட்டர்ல ரெண்டு பேரும் ரெண்டு துருவம். அதுலயும் ஊழல் விஷயத்துல இந்த கருணா நிதி நெருப்பு மாதிரின்னு தாத்தா ஊத்திவிடறாரே அதுக்கு தகுதியான நபர்  அண்ணா . அவருக்கு தொண்டையில  கான்சர்னு தெரிஞ்சு  அவர்  ரெஸ்ட்ல இருந்தாகனும்னு தெரிஞ்சும் அவரை வச்சு கூட்டம் போட்டு அவர் மரணத்துக்கே கலைஞர் வழிவகுத்ததா கூட பேச்சு உண்டு. ஆனாலும் பாருங்க கலைஞருக்கு அண்ணா தான் கடவுள் .அவர் பேர் தான் மந்திரம்.


நல்ல வேளை எம்.ஜி.ஆர் ப்ரூக்ளின் மருத்துவமனையில இருந்தப்போ தாத்தா விட்ட 40 ஆண்டுகால நண்பர் அஸ்திரம் எடுபடலை.இல்லின்னா கலைஞருக்கு எம்.ஜி.ஆர் கடவுளாவும் அவர் பேர் மந்திரமாவும் மாறியிருக்கும்.

எம்.ஜி.ஆர் Vs ஜெயலலிதா:

"ஜெ" வுக்கும் எம்.ஜி ஆருக்கும் இருந்த உறவை  பத்தி  சொல்ல தி.மு க பேச்சாளர்களின் மேடை பேச்சை ஆதாரமா காட்டினா அது கயவாளித்தனம்.ஆனால் ஜெ வே குமுதத்துல ஒரு தொடர் எழுத ஆரம்பிச்சு பாதியில டீல்ல விட்டுட்டாய்ங்க.அது ஜெ வின் சொந்தக்கதைனு பிரச்சாரம் கூட நடந்தது. அவிக ரெண்டுபேருக்கும் எப்பம் சண்டை வரும் -எப்பம் கூடிக்குவாய்ங்கன்னு ஆருக்கும் தெரியாது. வாத்யாரு கடேசியா "ஜெவுக்கு கட்டம் கட்டி அவிகளோட யாரும் பேசப்படாது .அன்னந்தண்ணி புழங்கப்படாது"ன்னுல்லாம் சொன்னதா செய்திகள்.

ஆனால் ஜெவுக்கு எம்.ஜி.ஆர் கடவுள் -அவர் பெயர் தான் மந்திரம் .( நல்ல வேளையா எலீக்சன் வரும்போது மட்டும்)

சந்திரபாபு Vs என்.டி.ஆர்:


என்.டி.ஆருக்கு ஆப்படிச்சு - கட்சியை  பதவியை பறிச்சுக்கிட்டு -அவரோட மரணத்துக்கே காரணமான சந்திரபாபுவுக்கு இப்பவும் என்.டி.ஆர் தான் கடவுள் - அவர் பேர் தான் மந்திரம்.

ஒய்.எஸ்.ஆர் Vs ஜகன்:


ஒய்.எஸ்.ஆர் உயிரோட இருந்தவரை ஜகன் பெங்களூர்லயே இருக்கனும். ஹைதராபாத் பக்கம் வரப்படாது.இதுதான் ஒய்.எஸ்.ஆர் வச்ச ரூல். ஊழல்  நடக்கக்கூடாதுங்கறது எவ்ள முக்கியமோ ஊழல் நடக்கலைங்கற - நடக்க வாய்ப்பில்லைங்கற "சீன்" கூட ரெம்ப முக்கியம்.இதான் ஒய்.எஸ்.ஆர் கான்செப்ட்.

அப்பா சி.எம்மா இருக்கிற ஸ்டேட்டுக்குள்ள வரப்படாதுங்கறது ஒரு மகனை எந்தளவுக்கு கடுப்பாக்கியிருக்கும்னு நீங்களே ரோசிங்க. ஆனா இன்னைக்கு?  ஜகனுக்கு ஒய்.எஸ்.ஆர் தான் கடவுள். ஒய்.எஸ்.ஆர் பெயர்தான் மந்திரம்..

மொதத்ததுல அரசியலே ஹிப்பாக்கிரட்டுகளின் உலகமப்பா..

Tuesday, October 11, 2011

இரட்டை வெடி


இந்த 2011 ,அக்டோபர் மாதம் 11 ,12 தேதிகளில் அனுபவஜோதிடம் வலைப்பூ/தளத்தில் வெளியான பதிவுகளுக்கான தொடுப்பு இது.

நிர்வாண உண்மைகளை மட்டும் படிப்பவர்களின் வசதிக்காக இந்த தொடுப்பு சமாசாரம்.

கலைஞர் ஐயா போதும் விட்டுருங்க!

ஓ பக்கங்களும் ஞானியின் உளறல்களும்

Saturday, March 19, 2011

திமுக தேர்தல் அறிக்கை : ஒரு ஜோதிட ஆய்வு

அண்ணே வணக்கம்ணே,
நமக்கும் கலைஞருக்கும் வாய்க்கா தகராறு எதுவும் கிடையாது. இன்னம் சொல்லப்போனா அவரோட எமர்ஜென்சி எதிர்ப்பு, ஒரு காலத்து ஈழத்தமிழர் ஆதரவு நிலை மேட்டர்ல ஹீரோ ஒர்ஷிப்பே உண்டு.

அம்மா மேல நமக்கேதும் அன்பு,பண்பு,பாசம்லாம் கிடையாது . இன்னம் சொல்லப்போனா அவிக குழந்தைதனத்து மேல கடுப்பே உண்டு. Read More

Sunday, February 27, 2011

ஜெ -கலைஞர் - ஒரு ஜோதிட ஒப்பீடு



அண்ணா வணக்கம்ணா,
வழக்கமா பேர்பாதி போஸ்டை இங்கே போட்டு மீதிக்கு சைட்டுக்கு லிங்க் கொடுப்பேன். இன்னைக்கு ஐட்டத்துல தொடுப்புகள் அதிகம் . வெறுமனே கட் பேஸ்ட் பண்ணமுடியாது .அதனால அங்கயே ஆரம்பிச்சுருவம். அதுக்கு இங்க அழுத்துங்க.

Saturday, February 26, 2011

ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்


அண்ணே வணக்கம்ணே!
தி.மு.க வட்டாரத்துக்கு குலை நடுக்கத்தை தரப்போற இந்த பதிவை வருத்தத்தோடதான் போடறேன். ஆனை படுத்தாலும் குதிரை மட்டங்கற மாதிரி கலைஞர் என்னதான் நொந்து கிடந்தாலும் , நோகடிச்சாலும் தாத்தா மேட்டர்ல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கத்தான் செய்யுது. இன்னைக்கு ராத்திரி தாளி மஞ்ச துண்டை உதறிட்டு கருப்பு சால்வைய போட்டுக்கிட்டு பெட்டிப்படுக்கையோட "வீடு வரை உறவு - வீதி வரை மனைவி - காடு வரை பிள்ளை -கடைசி வரை மக்கள்"னு பாடிக்கிட்டே அறிவாலயத்துக்கு வந்து தங்கிட்டாருனு வைங்க.ஸ்டாலினா அழகிரியா தொண்டன் முடிவு செய்யட்டும்னு கட்சிக்குள்ள ஓட்டிங் அறிவிச்சுட்டாருனு வைங்க. இனி பெரியார் அண்ணா கொள்கைய பிரச்சாரம் பண்றதுதான் என் முழு நேர வேலைனு அறிவிச்சிட்டாருனு வைங்க.

சேப்பாக்கத்துலருந்து ஒண்டியா கெலிச்சாரே அந்த மாதிரி தோத்தாலும் அது வெற்றிதான்.வெற்றியை தவிர வேறில்லை. அதை விட்டுட்டு மானம்,மரியாதை எல்லாத்தயும் சோனியா ,ராகுல் காலடியில போட்டுட்டு எத்தீனி தகிடு தத்தம் பண்ணாலும் பல்பு வாங்கறது வாங்கறதுதான்.இங்கனதான் கிரகங்கள் நின்னு விளையாடுதுங்கோ.

ஏற்கெனவே ஜெயலலிதாம்மாவோட ஜாதகத்தை அனலைஸ் பண்ணி சக்ஸஸ்ஃபுல்லா அவிக வெற்றிய ப்ரிடிக்ட் பண்ணி அவிக கிட்டருந்து தேங்க்ஸ் கார்டு கூட (ராமர் கோவில்ல சுண்டல் கொடுத்தாப்ல - கும்பல்ல கோவிந்தா) வாங்கியிருக்கிற தைரியத்துல ஏற்கெனவே போட்ட இந்த பதிவை திருத்திய பதிவா இன்னைக்கு போடறேன்.

அம்மாவோட ஜாதகத்தையும், அவிக வாழ்க்கையையும் எந்தளவுக்கு அனலைஸ் பண்ணியிருக்கேனு அதை படிச்சா புரியும்.அதனால இந்த பதிவை சுருக்கமாவே போடறேன்.

அம்மாவோட ஜாதகம் :
மிதுனலக்னம், மக நட்சத்திரம்,சிம்மராசி. லக்னத்துக்கு ரெண்டாவது வீட்ல சனி, 3ல சந்திரன் செவ், அஞ்சுல கேது, 7ல குரு,9ல சூரிய,புதன், பத்துல சுக்கிரன், 11ல ராகு.

2011-ஃபிப்ரவரி 3 முதல்2012/8/3 வரை நடக்க உள்ள ராகு தசையிலான சந்திர புக்தி என்ன மாதிரியான பலனை தரும்னு இப்போ பார்ப்போம். தசா நாதனான ராகுவுக்கும், புக்தி நாதனான சந்திரனுக்கும் பகை கிடையாது. இவர் மிதுனத்துக்கு தன,வாக்கு,குடும்ப நேத்திரஸ்தானாதிபதி. இதனால அம்மாவோட லைஃபே ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு கணக்கா மாறிரும்.

சந்திரன் 3 ல நின்னு வளர்பிறைல பயத்தையும், தேய் பிறைல தைரியத்தையும் மாத்தி மாத்தி கொடுப்பாரு. மேலும் சந்திரன் கூட செவ்வாயும் சேர்ந்திருக்கிறதால அம்மாவோட பேச்சுல பொறி பறக்கும். (கருணா நிதி அண்ட் கோவுடைய மானமும் தான்)

செவ்வாய் 6,11 க்கு அதிபதியாகி வாக்குல நின்னதால தொண்டையே ரணமாகிற அளவுக்கு பேசுவாய்ங்க.

அவிக வாக்கு வளர்பிறைல சௌம்யமாவும், தேய்பிறைல ரௌத்ரமாவும் வரும். சில சமயம் தேவைக்கு குறைச்சலாவும், சில சமயம் தேவைக்கு அதிகமாவும் பேசுவாய்ங்க. டெசிபல்ஸும் இதே மாதிரி மாறும். மிமிக்ரி எல்லாம் பண்ணுவாய்ங்க பாருங்களேன்.

ஜாதகத்துல வாக்குல உள்ள சனி மிதுனத்துக்கு 8 க்கு அதிபதிங்கறதால அம்மாவோட வாக்கு கல்லடி,வக்கீல் நோட்டீஸ், சிறைவாசத்தை கூட பெற்றுத்தரலாம். அதே நேரம் அதே சனிக்கு பாக்யாதிபத்யமும் இருக்கிறதால ராஜயோகத்தையும் பெற்றுத்தரும்.

இப்படி பார்த்தா அவிக ராசியான சிம்மத்துக்கு வாக்குல சனி. ( 2011, டிசம்பர் 12 வரை) வாக்கு ஸ்தானத்துல (கோசாரம்) உள்ள சனி எதிரிகளை எப்படியெல்லாம் கொல்லாம கொல்லப்போகுதோ நினைச்சாலே குலை நடுங்குது.

அதே நேரம் கைக்கெட்டினது வாய்க்கெட்டலை கதையா போகவும் வாய்ப்பிருக்கு. அதனாலதான் கூட்டணி ஆட்சினு சேஃப் சைடாயிட்டன்.

சந்திரன் ஜல கிரகம். ஜலத்தோட நேச்சர் என்ன பள்ளத்தை நோக்கிபாயறது. அது மாதிரி அம்மா இறங்கி வந்து கூட்டணி எல்லாம் வைக்கப்போறாய்ங்க. அதே நேரம் சந்திரன் இன்ஸ்டெபிளிட்டிக்கு காரகர்ங்கறதால நிறைய இழு பறிகளுக்கு பிறவு அம்மா தலைமையில கூட்டணி மந்திரி சபையே அமையும். அதுவும் நித்ய கண்டம் பூர்ணாயுசா தான் இருக்கும்.

2012 ஆகஸ்டு, 3க்கு மேல ( ராகு தசை செவ் புக்தி, செவ் 3ல இருக்காரு) கவர்ன்மென்ட் ஓரளவு ஸ்டெடியாயிரும்.ஆனால் 2013 ஆகஸ்ட்,21 க்குள்ள அம்மா தன்னோட அதீத தைரியத்தால இடைத்தேர்தலுக்கு போனாலும் ஆச்சரிய பட மாட்டேன்.

அம்மாவுக்கு ஒரு வேண்டு கோள்:
போன தாட்டி கூரியர்ல அனுப்பினேன். தேங்க்ஸ் கார்ட் அனுப்பினிங்க. இந்த தாட்டி சொந்த சைட்ல போஸ்ட் பண்ணியிருக்கேன். சொன்னது ஒர்க் அவுட் ஆகி உங்க தலைமைல கூட்டணி ஆட்சி அமைஞ்சா நம்ம ஃபீஸை மட்டும் செட்டில் பண்ணிருங்க தாயீ..( 25000 பைசா - அதாங்க ரூ 250)

Thursday, February 24, 2011

கலைஞர் ஒரு விதவை


இன்னாடா இது அக்குறும்பா கீது. ஆம்பளை போய் விதவையாக முடியுமான்னு கேப்பிக. சொல்றேன்.மனைவியை இழந்த ஆணை விதவன் என்று சொல்லும் சம்பிரதாயம் இங்கில்லே.(மேல் சேவனிஸ்ட் சொசைட்டிப்பா). ஆனால் மனைவியை இழந்தவர்களை குறிப்பிட ஒரு வார்த்தை இல்லேன்னாலும் இழந்தது இழந்ததுதானே.

"அவர் ஏங்க கல்யாணம் கட்டிக்கலை?"
"அவர் தன் லட்சியத்தை கண்ணாலம் கட்டிக்கிட்டாருப்பா"

"ஹும்.. உங்களுக்கு மொதல் பெண்டாட்டி உங்க ஆஃபீஸ் - நான் ரெண்டாவதுதான்"

இந்த வசனம்லாம் கேட்டிருப்பிக. கலைஞரும் அப்படித்தான் லட்சியத்தை மணந்து அரசியல் வாழ்க்கைய துவக்கினாரு. ஆனால் அவரோட ஜாதக மகிமை லட்சியம் செத்துப்போச்சு. ஆமாங்கண்ணா அவர் ஜாதகம் கீழே:

கடக லக்னம் -லக்னாதிபதி உச்சம் -இது சந்திரங்கறதாலதான் ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு கணக்கா லைஃப் போகுது. 14 வருஷம் வனவாசத்துக்கும் இதான் காரணம். (வளர்பிறை -தேய் பிறை)

தன,வாக்கு ,குடும்பஸ்தானாதிபதியோட சேர்க்கை - இதனால தான் அவரு குடும்பத்தை பிரிய , அட்லீஸ்ட் விட்டுக்கொடுக்க மறுக்கறாரு. ரெண்டு எட்டுல ராகு கேது ( இதைத்தான் மாங்கலிய தோஷம்ங்கறாய்ங்க- இந்த அமைப்பாலதான் கலைஞரோட லட்சியம் செத்துப்போயி அவரு விதவையாயிட்டாரு)

7,8 க்கு அதிபதியான சனி 4 ஆவது இடத்துல உச்சம். 8ங்கறது மரணத்தை காட்டற இடம் - 4ங்கறது "வீட் மற்றும் தன்னவரை" காட்டற இடம் . கணக்கு டாலி ஆயிருச்சா. ராசா ஒரு தலித். அவரை தன்னவருன்னு சேர்த்ததால சிறைக்குள் பூத்த சின்ன சின்ன மலர்கள் பார்ட் டூ எழுத வச்சிர்ராப்ல இருக்கு. ( சிறைப்படலுக்கு சனியே காரகன்)

6,9க்கு அதிபதியான குரு அஞ்சுல கீறாரு. அஞ்சுன்னா புத்திஸ்தானம், பெயர் புகழை காட்டற இடம். 6ன்னா சத்ரு ரோக ருணங்களை காட்டற இடம். குரு ரோகாதிபதியா வேலை செய்தா "இந்திராவுக்கு பென்ஷன் தரோம்" பாணில வார்த்தைய விட்டு ஆப்பு. அவரு பாக்யாதிபதியா வேலை செய்தா எம்.ஜி.ஆர் உடல் நலம் பாதித்து ப்ரூக்ளின்ல இருந்தா உருக்கமா உடன் பிறப்புக்கு கடிதம்.

ஒரு சமயம் டாப்பு. ஒரு சமயம் பயங்கர ஆப்பு.ரெண்டுத்துக்குமே தலைவரோட புத்தி தான் காரணமாகுது. குருன்னா அவாள். அவிக மேல பாசம்,துவேசம் மாறி மாறி வரவும் இதான் காரணம்.

ஏழுல செவ் உச்சம்.7ங்கறது ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃபை காட்டற இடம். செவ்வாய்னா எதிரி. பாவம் தலீவரு ஆரை நண்பர்னு நினைக்கிறாய்ங்களோ அவிகளே ஆப்பு வைக்க இதான் காரணம். அதே போல ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் எல்லாருமே குழி தோண்டவும் இதான் காரணம்.

இவர் 7லருந்து ஜன்மத்தை பார்க்கிறதால சட்டுனு கோவம் வந்துருது. ஆருனா ரிப்போர்ட்டர் வில்லங்கமா கேள்வி கேட்டா " எந்த பேப்பரு"ன்னு சீறவு இதான் காரணம்.

இந்த ஜாதகத்துக்கு செவ்வாய் தான் யோககாரகன்.இவர் 7ல உட்கார்ந்து உச்சம் பெற்றார். அதனால பெரியா(ரோட)ளுங்களோட சகவாசம் ஏற்பட்டுது. செவ்வாய் சகோதர காரகர் (அண்ணா தம்பி) அதனாலதான் அண்ணா ஒரு லைஃப் கொடுத்தார். உடன்பிறப்புங்க கொடுத்துக்கிட்டே இருக்காய்ங்க. இவர் தான் ஒன்னும் கொடுக்கமாட்டேங்கறாரு.

4/11 க்கு அதிபதி விரயத்துல உட்கார்ந்தாரு. அதாவது வீடு வாசல் எல்லாம் விரயமா போயிரனும். இந்த பாய்ண்டை ஆரோ கிட்னி உள்ள ஜோசியர் கேட்ச் பண்ணி சொன்னதால வீட்டை "தானம்" பண்ணிட்டாரு போல.

தானம்னா என்ன ? தாரை வார்த்து கொடுத்துட்டு துண்டை உதறி தோள்ள போட்டுக்கிட்டு இறங்கிரனும்.அதான் தானம். அதை விட்டுட்டு................( வேணம்பா பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கெதுக்கு -சென்னை டு சித்தூர் எவ்ள நேரம் ஆயிரப்போவுது)

அப்பாறம் பாருங்க சோதரஸ்தானாதிபதியான புதன் விரயத்துல போய் பவர் ஃபுல்லா இருக்காரு. எம்.ஜி.ஆரையும் சகோதரர்னு தானே விளிச்சிட்டிருந்தார் ( பேச்சு -எழுத்துல) புதனுக்குரிய கடவுள் விஷ்ணு. ராம -சந்திரன்னா அது வைஷ்ணவ நாமம்தானே. அதான் பாவம் வாத்யாருகிட்டே செமர்த்தியா வாங்கி கட்டிக்கினாரு.

கம்யூனிகேஷன்ஸுக்கு அதிபதியான புதன் பலம் பெற்றார். இதனால தான் ஒரு பக்க வசன காலம் முதல் ஒரு வார்த்தை வசனம் வரை குப்பை கொட்டறாரு.அந்த புதன் விரயத்துல உள்ளதால தன் பக்க வாதத்தை எடுத்து வைக்கிறப்ப மாத்திரம் மொக்கையாயிருது. (லேட்டஸ்ட் உதாரணம்: ஸ்பெக்ட்ரம் ஜி).
அதே போல டாக்டர்கள், எழுத்தாளர்கள்,கவிஞர்கள் யாராலயும் உபயோகமில்லாம போக இதான் காரணம்.


அது சரிங்கண்ணா ஏன் சோனியா அம்மா இப்படி இம்சை பண்றாய்ங்கனு கேப்பிக.சொல்றேன். கடகலக்னத்துக்கு வுமன் தான் எமன். (ஜெயலலிதா கதை ஆச்சு.இப்ப சோனியா ) ராகுன்னா விதவைய காட்டற கிரகம்.

நம்ம தலீவருக்கு ராகு கேது பாப கத்திரி யோகத்தை தந்திருக்காய்ங்க. அதாவது ஒரு விதவையால தனம்,சொல் வாக்கு,செல்வாக்கு, குடும்பம் எல்லாமே பறிபோகனும். ராகு எட்டை பார்க்கிறதால (வேணாங்கண்ணா ஓவரா போயிரும்) அதுவும் போகனும்.

ஆடு ஆரை நம்புது? கசாப்புக்காரனைத்தானே நம்புது. சரி இந்த கேது தசையில தாத்தாவுக்கு ஆப்புதானான்னு கேப்பிக சொல்றேன்.

இன் ஜெனரல் கேது தசை/புக்தி யாருக்குமே ஒர்க் அவுட் ஆவதில்லை. காரணம் கேது ஞான காரகன். இவர் ஞானத்தை தான் தருவார். துன்பங்கள் மூலம் தான் ஞானம் பாசிபிள். ஒரு வேளை நீங்கள் ஆராய்ச்சி துறையிலோ , தியானம், சன்னியாச வாழ்விலோ இருந்தாலன்றி கேது கொஞ்சமேனும் தீய பலனை தராது விட மாட்டார். தினசரி ஒரு மணி நேரமேனும் காவி வேட்டி அணியவும். மாதம் ஒரு கோவிலில் ரா தங்கவும்னு சொல்லலாம். ஆனால் தலீவர் கோச்சுக்குவார்.

வேணம்னா ஒன்னு பண்ணலாம் கேது ராகு சமசப்தகத்துல இருக்கிறதால மஞ்ச சால்வைய தூக்கிப்போட்டுட்டு மேற்சொன்ன ஒரு மணி நேரம் கருப்பு சால்வை அணியலாம். பெரியார் சம்பந்தப்பட்ட இடத்துல ராத்தங்கலாம்..

என்னைக்கேட்டா அல்டிமேட் பரிகாரம்:

அந்த காலத்து வானப்ரஸ்தம் மாதிரி தாளி என் சொச்ச வாழ்க்கைய பெரியார் கொள்கைய பரப்ப உபயோகிக்கப்போறேன்னுட்டு கருப்பு சால்வையோட ரோட்ல இறங்கிர்ரதான். அழகிரியா ஸ்டாலினாங்கறதை தொண்டர்கள் முடிவு செய்யட்டுமே.

ஜாதக உதவி: வகுப்பறை

Tuesday, February 22, 2011

கலைஞருக்கு ஒரு டாப் பரிகாரம் « Anubavajothidam.com


கலைஞருக்கு டாப் பரிகாரத்தை சொல்றதுக்கு முந்தி இன்னொரு ரகசியத்தை உடைக்கிறேன். இந்த பதிவு நேற்றைய போலி ஜோதிடரை கண்டறிய பதிவோட 2 ஆவது பகுதிதான். (இப்ப மேட்டருக்கு போயிருவம்)

ஒனக்கு இன்னாத்துக்குப்பா இந்த ஆள்காட்டி வேலை. ஏதோ நாலு விஷயத்தை பத்தி எழுதினே. சனம் படிச்சாய்ங்க. இன்ஸ்பைர் ஆயிட்டாய்ங்க. ஏதோ வாரத்துக்கு பத்துபேரு அக்கவுண்ட்ல காசு போட்டு பலன் கேட்டுக்கறாய்ங்க. இப்ப எதுக்கு இந்த லொள்ளுனு கேப்பிக. சொல்றேன்.

நான் அப்பப்ப வில்லங்கமா ஒரு வசனம் விடுவேன். தாளி ஜோசியம் பொய்யாவே இருந்தாலும் சம்பவம்லாம் ஜோசியப்படி தான் நடக்கும்.ஏன்னா நாட்டை, மானிலத்தை வழி நடத்தறவுகளை வழி நடத்தறதே ஜோசியம் தான்.ஜோசியர்கள் தான்.

ஜஸ்ட் ! உங்க கலைஞர்,ஜெயலலிதா,விஜயகாந்துக்கு சரியான ஜோசியர் கிடைச்சு ...........

அந்தாளு ஜோதிஷத்துல உள்ள அசலான மேட்டரை ( அஸ்ட்ராலஜி மீன்ஸ் ஆப்ஷன்ஸ் துரை! ) போட்டு உடைச்சா ..........

ங்கொய்யால உங்களுக்கு என்ன வேணுங்கறிங்களோ அது எந்த கிரகத்தோட காரகத்வம்னு பார்த்து அந்த கிரகத்தோட இதர காரகத்வங்கள்ள அதுக்கு சமமானதை விட்டுத்தொலைச்சா நினைச்சதை பெறலாம்னு சொன்னா.. இதை அவிக ஏத்துக்கிட்டு செயல்பட்டா ஸ்டேட்டே உருப்படும்.

அப்படி ஆரும் அமைவாங்கனு நினைக்காததால கலைஞருக்கு நானே ஒரு டாப் பரிகாரம் சொல்லியிருக்கேன். அதை படிக்க சிரமம் பார்க்காம இங்கே க்ளிக் பண்ணுங்க

Monday, April 5, 2010

அசத்த போவது யாரு..? - ஒரு விமரிசனம்

தமிழ் உச்சரிப்பில் ஒரு புதிய ஸ்டைலை (இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில நிமிடங்களே ஆன புத்தம் புதிய திரைப்படம்)அறிமுகப்படுத்தி இம்சை பண்ணும் சன் டிவி ( பாருங்க தமிழ்ல பேர் வச்சா மட்டும் சலுகை கொடுப்பாங்க இவிக மட்டும் சன், டாடினு பேர் வைப்பாங்க. கலைஞர் இதன் மூலம் தமிழ் பெருங்குடி மக்களுக்கு கூறும் செய்தி என்னன்னா என் சின்னம் சன். எனக்கு முக்கியம்  என் சன்(ஸ்)( மகன்கள்).

சரி நம்மை இந்தி படிக்காதிங்கனு சொல்லிட்டு ஹிந்தி தெரிஞ்ச பேரனை தில்லி அனுப்பின சரித்திரத்தை சாரி தரித்திரத்தை எத்தனை தடவை தான் சொல்லறது. அதைவிடுங்க. இந்த அசத்த போவது............யாரு நிகழ்ச்சிய பார்ப்போம்.

இதுல முதற்கண் வெளிப்படையா தெரியறது தற்புகழ்ச்சிதான் ( செல்ஃப் டப்பா) சிட்டி பாபு ,மதன்  முகங்களில்  தெரியும் விஸ்கி  களை . இதை  மதன் முகத்திலாவது ஜீரணிக்க முடிகிறது. சிட்டிபாபு முகத்தில் அப்பட்டம்.

அடுத்து வெறுப்பேற்றுவது தொகுப்பாளரின் ஸ்டீரியோ தனமான சிரிப்பும் (இளிப்புனு கூட சொல்லலாம்) பாடி லேங்குவேஜும்.  இதில் செத்துப்போன பிரபலங்களை , ஊனமுற்றவர்களை, கிராமத்தவர்களை,டாக்டர்களை, டீச்சர்களை,மாணவர்களை அழகற்றவர்களை,மனைவியரை  நக்கலடித்து கேவலப்படுத்தி அசத்தும்  நபர்களே அதிகம். இதில் அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரங்களும் யதேஷ்டம்

அசத்த வருபவர்கள் அனைவரையுமே தூள் பண்ணிட்டிங்க அசத்திட்டிங்க என்று புகழ்வது ரொம்பவே செயற்கையாக இருக்கிறது. அதிலும் வந்த (வந்து மாட்டிய ) அசத்தியவர்களை(?) சிட்டிபாபுவும், மதனும் சகட்டுமேனிக்கு புகழ்ந்து விட்டு  விருந்தினரை " இவங்க ப்ரோக்ராமை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்கனு சாஸ்திரத்துக்கு கேட்கிறது " மவனே அசத்திட்டாங்கனு சொல்லு இல்லே டின்னுதான்"ங்கற மாதிரி இருக்கு.

ஒரே செட், ஒரே முகங்கள்னு கடுப்பேத்தறத விட புதுசா யோசிக்கலாமே. இதே நிகழ்ச்சி சன் டிவி தவிர வேறு ஏதாவது அரசியல்,பொருளாதார பின்னணி இல்லாத டிவில ஆரம்பிச்சிருந்தா எப்பவோ ஊத்தி மூடியிருப்பாங்க.சன் டிவிலங்கறதால இன்னமும் இழுத்துக்கிட்டு கிடக்குனு நினைக்கிறேன்.

பி.கு: வடிவேலு, விவேக் காமெடிகளை மாற்றி மாற்றி போடுவதால் ஒரு விஷயம் மட்டும் ரொம்பவே குழப்புது. இவரை பார்த்து அவர் காப்பியடிச்சாரா? அவரை பார்த்து இவர் காப்பியடிச்சாரா?