Monday, November 5, 2012

உங்கள் அடுத்த தலைமுறையில் எப்படிப்பட்ட ஜாதகர்கள் பிறப்பார்கள்?

அண்ணே வணக்கம்ணே !

யோகம் என்றால் சேர்க்கை என்று அருத்தம். ஆனால் யதார்த்தத்துல  யோகம்ங்கற வார்த்தை அதிர்ஷ்டங்கற அருத்தத்துல தேன் புழங்குது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புங்கோ..

அதனால யோகம்ங்கற வார்த்தைய அதிர்ஷ்டங்கற அருத்தத்துலயே இந்த பதிவுல உபயோகிக்கிறேன். யோகங்கள்னா பலதும் இருக்கு. தற்சமயத்துக்கு பஞ்ச மகா புருஷ யோகங்களை மட்டும் எடுத்துக்குவம்.

செவ்,குரு,சனி,புதன்,சுக்கிரன் ஆகிய 5 கிரகங்கள் உச்சம் அ  ஆட்சி பெறுவதையே பஞ்ச மகாபுருச யோகம்னு சொல்றாய்ங்க.

புதிய வரவுகளுக்கு ரெஃபரன்ஸ்:

செவ் ஆட்சி ,உச்சம் பெற்றால் ருசக யோகம், ,குரு ஆ/உ பெற்றால் ஹம்ச யோகம், சனி ஆ/உ பெற்றால் சச யோகம் , ,புதன் ஆ/உ பெற்றால் பத்ரயோகம் ,சுக்கிரன் ஆ/உ பெற்றால் மாலவ்ய யோகம்.

மேற்படி கிரகங்கள் உச்சம்,ஆட்சி பெற்றால் மட்டும் போதாது. இவை லக்னத்துக்கு சுபராவும் இருக்கனும். மேலும்  கோண்ம், அல்லது கேந்திரம் பெற்றிருக்கனும். கு.பட்சம் 6,8,12 தவிர மற்ற எந்த பாவத்துலயாச்சும் இருக்கனும். ஒரு வேளை இவிக லக்னாத் பாவியா இருந்தா உச்சம் , ஆட்சி  பெறுவது ஆபத்து . இதை ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னதா ஞா.

இன்னைக்கு  சொல்ல வந்த மேட்டர் என்னடான்னா எல்லா நிபந்தனைகளையும் ஃபுல் ஃபில் பண்ணி மேற்படி பஞ்ச மகாபுருச யோகங்கள் பலன் கொடுக்கிறதா இருந்தாலும் சில சைட் எஃபெக்ட்ஸ் இருக்கும்ங்கறது தேன்.

ஆங் அது எப்படின்னு பண்டிதர்கள் கிராஸ் பண்ணுவாய்ங்க. ஒரு டார்ச் லைட்டை ஆன் பண்றிங்க. எதிர்பக்கம் வெளிச்சம் விழுது. பின்பக்கம்? இருட்டு இருக்கா இல்லியா?

அட கண்ணாலத்துல வீடியோ கவரேஜ் எடுக்க ஃபோக்கஸ் லைட் யூஸ் பண்றாய்ங்க. வெளிச்சம் சூப்பருதேன்.ஆனால் அனலும் அடிக்குதில்லை. அப்படித்தேன் இதுவும்.

1.ருசக யோகம்:
கோபம் ,குரூர சுபாவம் இருக்கும். காரியம் பெருசா வீரியம் பெருசான்னா வீரியம்தேன் பெருசுனு முண்டா தட்டுவாய்ங்க. அடி தடி, கத்தி குத்துக்கெல்லாம் கூட இறங்கிருவாய்ங்க. வயசு எவ்ள தான் கூடினாலும் முதிர்ச்சிங்கறது நாட் பாசிபிள். எதிரிகள்,சகோதரர்கள் வகையில பிரச்சினைகள் இருக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கும். எதிர்காலத்துல ரத்தம்,எரிச்சல் தொடர்பான வியாதிகள் வரலாம்.

அடுத்த தலைமுறையில செவ் தோஷமுள்ள ஜாதகர்கள் பிறப்பார்கள்.

2.ஹம்ச யோகம்:
தனக்கு ஆப்படிக்கிறான்னு தெரிஞ்சாலும் ச்சொம்மா எப்டி  சொல்லிர்ரது ஆதாரம் வேணாமாம்பாய்ங்க. ரெம்ப ரோசிப்பாய்ங்க. குட் வில் இருக்கிற அளவுக்கு வருமானம் இருக்காது. வாயு கோளாறுகள் இருக்கலாம். பயந்த சுபாவம் இருக்கும். ஆருக்கோ நல்லது செய்யப்போயி செல்ஃப் ஷேவிங் எல்லாம் சகஜம். எதிர்காலத்துல இதயம் தொடர்பான பிரச்சினைகள் கூட வரலாம்.

அடுத்த தலைமுறையில குரு பலம் இல்லாத  ஜாதகர்கள்  பிறப்பர்.

3.சச யோகம்:
படு கஞ்சர்களாக இருக்கலாம்.  கல் நெஞ்சர்களா இருக்கலாம். அடுத்தவுக பொருளை ஆட்டைய போட பார்ப்பாய்ங்க. ஓட்டை ,உடைசல், குப்பைய கூட வெளிய எறிய மாட்டாய்ங்க. வேலைக்காரவுகளை பிழிஞ்சு எடுப்பாய்ங்க. சிலர் பத்து வட்டி ,கந்து வட்டி கேஸாவும் இருக்கலாம். எதிர்காலத்தில் கால்,நரம்பு,ஆசனம் தொடர்பான வியாதிகள் வரலாம்.

அடுத்த தலைமுறையில்  சனி பலம் இல்லாத ஜாதகர்கள் பிறப்பர்.

4.பத்ரயோகம்:
ஆண்கள் பெண் தன்மையுடனும்,பெண்கள் ஆண் தன்மையுடனும் இருக்கலாம். ஃபேஸ் டு ஃபேஸ் ஒன்னு ரெண்டு வார்த்தையில முடியற சமாசாரத்துக்கு கூட நீட்டி முழக்கி லெட்டர் அனுப்பறது ,லீகல் நோட்டீஸ் அனுப்பறது கூட  நடக்கலாம்.கல்வி,சங்கங்கள்,  ஜோதிடம்,மருத்துவம்,வியாபாரம்னு ஒன்னுக்கொன்னு தொடர்பில்லாத விஷயங்கள்ள இறங்கி எதுலயும் பர்ஃபெக்சன் இல்லாம போயிரலாம். எதிர்காலத்தில் தோல்,கீல்,அண்டம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.

அடுத்த தலைமுறையில் புத பலம் இல்லாத ஜாதகர்கள் பிறப்பர்.

5.மாலவ்ய யோகம்:
வண்டி ,வாகனங்கள், வீடு,இன்டிரியர், காஸ்மெடிக்ஸ்,கலைகள்  இத்யாதியில  அளவு கடந்த ஆர்வம் இருக்கலாம்.காதல்,திருமணம்,தாம்பத்யம் இத்யாதி சீக்கிரமே துவங்கி சீக்கிரமே அலுத்து பொயிரலாம். திரு மண வாழ்க்கை  பாதிக்கலாம்.எதிர்காலத்துல கைனகாலஜிக்கல் பிரச்சினைகள் வரலாம்.

அடுத்த தலைமுறையில் சுக்கிர பலம் இல்லாத ஜாதகர்கள் பிறப்பர்.

21,டிசம்பர் ,2012 : ஒரு ஸ்கான் பார்வை

அண்ணே வணக்கம்ணே ! 21,டிசம்பர் ,2012 அன்னைக்கு பிரளயம் வரும்ங்கறாய்ங்க. எல்லாம் ஃபணால் ஆயிருங்கறாய்ங்க. எங்க என்.டி.ஆர் மாதிரி ஒரு வேனை சைதன்ய ரதமாக்கிக்கிட்டு கு.ப ஆந்திரம்,தமிழ் நாடு மட்டுமாச்சு ஒரு டூர் அடிச்சு ஆ.இ.2000 பத்தி பிரசாரம் பண்ணனும்னு ப்ளான் பண்ணியிருந்தம்.

இப்பம் இவிக சொல்றதை பார்த்தா  எல்லாம் அம்பேல் தானா? சரி அன்னைக்கு  நாள் நட்சத்திரம்லாம் எப்படின்னு பார்ப்போம்.

கிழமை வெள்ளிக்கிழமை ; திதி: சுக்ல பட்ச அவமி (இரவு 12.46 வரை)
நட்சத்திரம்: உத்தராபாத்ரா (உத்திரட்டாதி) பகல் 9.49 வரை அதன் பிறகு ரேவதி சந்திரன் மீனத்துல
துர்முகூர்த்தம்: காலை 8.56 முதல் 9.40 மற்றும் பகல் 12.35 முதல் 1.19 வரை
வர்ஜியம்: இரவு 10.55 முதல் ,12.40 வரை

ஞா கிழமை,கிரகணம் பிடிச்சு ,அன்னைக்கு அமாவாசை ,பவுர்ணமி எதுனா கோ இன்சைட் ஆனா பூகம்பம் இத்யாதிக்கு வாய்ப்புண்டுனு ஒரு விதி இருக்கு.21,டிசம்பர் ,2012 அன்னைக்கு இது எதுவுமே கோ இன்சைட் ஆகலை.உஸ் அப்பாடா ..மினிம கியாரண்டி..

இட்ஸ் ஓகே அன்னைக்கு என்ன கிரகஸ்திதின்னு பார்ப்போம். ரிஷபத்துல  வக்ர குரு +கேது சேர்க்கை (குரு வக்ரம்ங்கறதால அஜீஸ்மென்டு) சனி துலாமில் உச்சம் (ஆயுள் காரகர்) விருச்சிகத்துல புதன்,சுக்கிரன்,ராகு.

புதனோட ராகு சேர்ந்தா யாவாரிங்க,கல்வியாளர்கள், ஆடிட்டர்,டாக்டர்களுக்கு தலைவலி. சுக்கிர ராகு சேர்க்கை பெண்களுக்கு பிரச்சினைய தரும்.  பொதுவாவே வெனிரியல் டிசீஸ் அட்டாக் ஆக வாய்ப்பு அதிகமா இருக்கும். ஹவுசிங்,ஆட்டோ மொபைல் துறைகளுக்கு நல்லதில்லை. சூரியன் தனுசுல, செவ் மகரத்தி உச்சம். சனி சூரியனை பார்க்கிறாரு. ஆட்சியாளர்களுக்கு தலைவலி.

ஒன்னும் அந்தளவுக்கு வில்லங்கமான கிரக நிலையா தோனலை. நம்ம நாட்டோட லக்னம் ரிஷபம்,ராசி கடகம். சுதந்திர இந்தியாவின் ஜாதகம் :

லக்னம் ரிஷபம். 1-7 ல ராகு கேது , ரெண்டுல செவ்( ராணுவ செலவு கழுத்தை நெறிக்க இதுவும் ஒரு காரணம்) 3ஆம் பாவத்துல சுக்கிரன் சூரியன் , சனி ,புதன்,சந்திரன், 6ல குரு,

2012-7-15 முதல் 2013-6-27 வரை சூரியதசையில சனி புக்தி .. சூரியன் 3 ல் ஓகே. சனியோட சேர்ந்து 3 ல் நின்றதுதான் கொஞ்சம் போல வவுத்தை கலக்குது.

ரிஷப லக்னத்துக்கு சனி யோக காரகன். 3 ங்கறது மாரக ஸ்தானம். இதுல சூரிய தசையில சனி புக்தி வேற நடக்குது.

சூரியன் +சனி/ராகு தொடர்பு ஏற்பட்டா ஆட்சியாளர்களுக்கு ஆப்புன்னு அருத்தம்.கோசாரத்துலயும் சனி சூரியனை பார்க்கிறாரு.

ஆக  21,டிசம்பர் ,2012 க்கு முன்னே பின்னே அரசுகள் கவிழலாம்.தலைவர்கள் சாகலாம்னு சொல்ல முடியுதே தவிர புரட்டிப்போடற அளவுக்கு பிரளயம் வரும்னெல்லாம் சொல்ல முடியலை..

நம்ம நாட்டோட ராசியான கடகத்தை வச்சுப்பார்த்தாலும் லக்னாதிபதி  சந்திரன்  பாக்யத்துல , 7/8 க்கு அதிபதியான சனி 4 ல் உச்சம் ( ஆட்சியாளர்கள் நீச சகவாசம் செய்து அதனால நாறலாம் -ஆளுங்கட்சியில உட்கட்சி பூசல் வரலாம் - தொழிலாளர்கள் பெரிய அளவுல வேலை நிறுத்தத்துல ஈடுபடலாம்.

3/12 க்கு அதிபதி 5 ல் . ஆட்சியாளர்கள் மக்களை இவிக எவ்ள அடிச்சாலும் தாங்கறாய்ங்க .ரெம்ப நல்லவுங்கனுட்டு எதுனா உபரியா பளுவை ஏத்த ,மக்கள் திரஸ்கரிச்சு ரோட்டுக்கு வரலாம். ஆட்சியாளர்களுக்கு அவப்பேர் வரலாம். 4,11 க்கு அதிபதியான சுக்கிரன் 5 ல் வருவதால் ஒரு பெண் அரசியல் வாதி (சோனியா தவிர்த்து ) லைம் லைட்டுக்கு வரலாம்.

புத,சுக்கிரர்களோடு ராகு சேர்வதால் அந்த பெண் ஆண் லட்சணங்களுடன் இருக்கலாம் . விதவையா இருக்கலாம். தனித்து வாழ்பவராக இருக்கலாம்.

புதன் =வியாபாரம் ; ராகு =ஊழல் , சுக்கிரன் =ஹவுசிங்,ஆட்டோ மொபைல் ,ராகு =ஊழல் எனவே இது தொடர்பான ஊழல்கள் எதாவது வெடிக்கலாம்.

ரெண்டுக்கதிபதியான சூரியன் 6ல் நிற்பதால் ஷேர்மார்க்கெட் தொபுக்கடீர் ஆகலாம். 5,10 க்கு அதிபதியான செவ் 7 ல் உச்சம் பெற்று லக்னத்தை பார்ப்பதால் சீனத்துடன் (எதிரி) உரசல் அதிகரிக்கலாம். பெரிய தீவிபத்து அ பூகம்பம் நடக்கலாம்.

11ல் வக்ர குரு  நல்லதில்லை.இவரோட கேது சேர்ந்ததால நாடு ஒரு நல்ல பாடத்தை படிக்க வேண்டியிருக்கும்.ஞானோதயம்?

என்னதான் முக்கி முக்கி ரோசிச்சாலும் பிரளயம்ங்கற வாசனை கூட வரலிங்கணா.. ஜோதிடன் பலனை சொல்லத்தான் முடியும்.அந்த பலனை தர்ரது ஆத்தா தானே..


Saturday, November 3, 2012

சுய தர்மத்தை கை விட்ட "அவாள்"

"பர தர்மம் எவ்வளவு உயர்ந்ததானாலும் சுதர்மமே சிறந்தது"ன்னு கீதை சொல்லுது. இங்கன தர்மம் என்ற வார்த்தைக்கு மதம்னு ஒரு பொருள் கொடுத்து இந்துத்வா வாதிகள் அலப்பறை செய்வது தனி கதை. ஆனா  கீதை சொல்ற "தர்மம்"ங்கற வார்த்தைக்கு "இயல்பு"ன்னு பொருள் கொள்ளலாம்.

வேதங்கள்,புராணங்கள்,மற்றும் இவற்றின் சாரமாய் பிரசாரம் செய்யப்படும் கீதை இத்யாதிக்கு ஹோல்சேல் உரிமை கொண்டாடும் பிராமணர்களை சு தர்மத்தை விட்டு பர தர்மத்தை கை கொள்ளும்படி செய்தது நம்ம சூப்பற ஸ்டாரு ரஜினியின்  நண்பரான மோகன் பாபு தான்.

தெலுங்கு ஹீரோ மோகன்பாபுவை பற்றி உங்களுக்கு என்ன தெரியுமோ என்னமோ? ரஜினியின் சகவாச தோஷமோ என்ன இழவோ வருசத்துக்கொருதாட்டியாச்சும் எதையாவது அச்சானியமா  பேசி /யாரையாவது சந்தித்து எப்பவும் நியூஸ்லயே இருப்பாரு. லேட்டஸ்டா "தேனிகைனா ரெடி "னு ஒரு படம் எடுத்தாரு. (மகன் விஷ்ணு தான் ஹீரோ) .

இந்த படத்துல பிராமணர்களை இழிவு படுத்தறாப்ல காட்சிகள் இருப்பதாக பிராமண சங்கங்கள் போர்க்கொடி உயர்த்தின .( இந்த போர்க்கொடி என்னா கலரு பாஸு?)  மோகன்பாபு வீட்டின் மீது தாக்குதல் நடந்தது. விஷ்ணுவும்,பிராமண சங்க தரப்பும் பரஸ்பரம் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் மனித உரிமைகள் கமிஷனில் புகார் கொடுத்துக்கிட்டாய்ங்க. புகார் கொடுக்க வந்த விஷ்ணுவின் கார் மீது செருப்பு வீச்சு -கல் வீச்சு வைபவங்கள் கூட  நடந்தாச்சு.

முகமதியர் படையெடுப்பு காலத்துலருந்தே பிராமணர்கள் தங்கள் இயல்பை இழப்பது ஆரம்பித்துவிட்டது. சர்வைவல் காரணமாக  கொஞ்சம் கொஞ்சமா வேதம் - புராணம் -ஜோதிஷம் எல்லாத்தையும் மூட்டை கட்டி "ராஜ பாஷை"யை கற்பதும் - ஆட்சியாளர்கள் அன்னியர்/சுதேசி என்ற வித்யாசம் இல்லாது அவர்களுக்கு காட்டி கொடுத்து -கூட்டி கொடுத்து வருவதை சரித்திரம் பேசுகிறது.

இவிகளோட ப்ளஸ் பாய்ண்டே என்னடான்னா "புதுமையை" கேள்வி கேட்காது ஏற்பது. எல்லா குதிரை மேலயும் காலணா கட்டி வைக்கிறது. முதல்வர்கள்,மந்திரிகள்  மாறலாம்.ஆனால் செயலாளர்கள், ஐ.ஏ.எஸ்கள் மாற மாட்டார்கள்.ஆடிட்டர்,டாக்டர்,லாயர்கள் மாற மாட்டார்கள்.

அரசியல் அதிகாரம் ஆரு கையில இருந்தாலும் அதை அனுபவிக்கிறது மட்டும் இவா தான்.இந்த ஆட்டிட்யூடால  இழந்தவன் அதிலயும் விழிப்பு கண்டவன் கண்டதையும் எழுதி ,பேசி புலம்பினாலும் இவா எதையும் கண்டுக்கிடமாட்டாய்ங்க.

இழந்தவர்கள் கூட்டத்துலயே விழிப்பு பெறாத  வர்கம் "அட என்னப்பா சொம்மா அவாளை போட்டு கிளிச்சுக்கிட்டு"ன்னு வக்காலத்து வாங்கறாப்ல இருக்கும்.

நம்மாளுங்க எப்பமோ அண்டர் கிரவுண்ட்ல கண்ணிவெடி வச்சிட்டிருப்பாய்ங்க.  நேரம் வரும் போது அதுவா வெடிச்சு வைக்கும். அல்லது சூத்திர பயலுவ வர்ஜியா வர்ஜியமில்லாம எவள் கையையாவது இழுத்து வைக்கிறதோ .. கடிக்க கூடாத வஸ்துக்களை கடிச்சு வைக்கிறதோ  நடந்தா அப்பம் நம்மாளுங்களோட லாபி வேலை செய்ய ஆரம்பிக்கும்.அடி எங்கருந்து விழுதோ தெரியாத அளவுக்கு அடி விழூம்.

அட நம்ம நித்தி -ஜெயேந்திரர் மேட்டரை எடுத்துக்கங்களேன். லாபி இருந்தா ஜெயேந்திரர் கணக்கா பம்மலாம். லாபி இல்லின்னா நித்திக்கு அடிச்சாப்ல பம்படிச்சுருவாய்ங்க.

அவ்ளதானே தவிர ஆரு என்ன கிளிச்சாலும் ரோட்டுக்கு வர்ரது - கோசம் போடறது -கல் வீச்சு -செருப்பு வீச்செல்லாம் அவிக ஸ்கூல் கிடையாது,. ரெம்ப வலிச்சுருச்சு போலன்னு என்ஜாய் பண்ணிக்கிட்டு   திருடனுக்கு தேள் கொட்டின கணக்கா அமுக்கமா -கமுக்கமா இருந்திருவாய்ங்க.

ஒரு முருகேசன் வலிக்குது வலிக்குதுன்னு கத்தினா பத்து ரஜினி காந்தை வளைச்சு போடற வேலையில பிசியா இருப்பாய்ங்களே தவிர முருகேசன் மேல புகார் கொடுக்கிறது -புகாரி ஓட்டல் பிரியாணி அனுப்பறதெல்லாம் இருக்காது நடக்காது.

இன்னொரு முக்கிய மேட்டர் அவிகளுக்குள்ள சரியான புரிதல் இருக்கு அல்லது கம்யூனிகேஷன் இருக்கு.
எதுக்கு ரெஸ்பாண்ட் ஆகனும் எதுக்கு ரெஸ்பான்ட் ஆகக்கூடாதுன்னு ஒரு விதியே இருக்கு.அதை பரிமாறிக்கிறாய்ங்க.

கமிஷ்னருக்கு புகார் கொடுத்த அம்மணிக்காகட்டும் -ஆந்திரத்துல சாலைக்கு வந்து கல்லெறி -செருப்பு வீச்சு
சம்பவத்துல ஈடுபட்டவுகளுக்காகட்டும் இந்த புரிதல் இல்லைன்னு கன்ஃபார்ம் ஆகுது.ஆல்லது "அந்த வட்டத்தோட இவிகளுக்கு " கம்யூனிகேஷன் இல்லேன்னு தெரியுது .

ஒரு கட்டத்துல ஓம்கார் ஸ்வாமிகளை நான் கிளிச்சப்போ ஆருமே கிர்க்கா மர்க்காங்கலை. வெட்டிக்கு வக்காலத்து வாங்கற சோ ராமசாமி , டோன்டு ராகவன்லாம் கூட தொடர்பு எல்லைக்கு வெளிய இருக்கிறதாதான் கணக்கு.

இதை ஏன் கன்ஃபார்மா சொல்றேன்னா ..  நாளைக்கு சொல்றேனே ..

குருவின் மனைவி +சந்திரன்+ " ஒரு தக்ஜம்" = புதன்?

மொதல்ல ஜோதிடம் குறித்த புனைகதைகள்னு தலைப்பு வைக்கத்தான்  நினைச்சம். ஆனா வக்ர குரு புத்தியை திருப்பி விட்டுட்டாரு. அதனால தேன்  அச்சானியமா இப்படி ஒரு  தலைப்பை வச்சிருக்கம்.

தலைப்பு தேன் அச்சானியம்னா மேட்டர் அதைவிட படு கில்மா. குருவோட மனைவியை சந்திரன் கிட்னாப் பண்ணி வச்சுக்கிட்டு அஜால் குஜால் வேலையில படு பிசி. பாவம் குரு வயசான காலத்துல ஏறாத படியெல்லாம் ஏறி மனைவியை மீட்கிறாரு. அதுக்குள்ள சந்திரன் செய்த கெட்ட காரியத்தால புதன் பிறந்து தொலைச்சுட்டாரு. இது நாம இட்டு கட்டின கதை கிடையாதுங்கோ.செலாவணியில இருக்கிற கதைதேன்.

இப்படி ஆயிரம் கதை இருக்கு. இன்னம் ஒரே ஒரு கதைய மட்டும் இங்கன பார்ப்போம்.


"நீங்களும் ஜோதிடராகலாம்"னுட்டு ஒரு  இ புக் நெட்ல ஃப்ரீ ஆஃப் காஸ்ட்  கிடைக்குது அதுல தேன் இந்த  கதை வருது.

ராவணன் தன் மகன் இந்திரஜித் பிறக்கறதுக்கு மிந்தி நவகிரகங்களை கூப்டு "தபாருபா..அல்லாரும் என் மகன் ஜாதகத்துல 11 ஆமிடத்துல நிக்கனும்"னு ஆர்டர் போட்டுட்டாராம். ஒடனே பி.டி  வாத்யாரு ஆர்டர் போட்டதும் பசங்க லைன் கட்டறாப்ல அல்லாரும் 11 ல வந்து நின்னுட்டாய்ங்களாம். இதுல சனி மட்டும் "வேலை" கொடுத்து 12 க்கு வந்துட்டாராம். அதனால ராவணன் சனியோட காலை வெட்டிட்டாராம். எல்லாம் சின்னபிள்ளைத்தனமா இருக்குல்ல.

எல்லா கிரகமும் 11 ல இருக்குமான்னு ரோசிங்க. ராகு -கேதுக்கள் நிழல் கிரகங்கள் ஒருத்தருத்தருக்கொருத்தரு 180 டிகிரிஸ்ல தான் இருக்க முடியும்.ராகு 11ல இருந்தா கேது அஞ்சுல இருந்தாவனும். அல்லது கேது 11 ல இருந்தா ராகு அஞ்சுல இருந்தாவனும்.

சரி மத்த 8 கிரகங்கள் ஒரே ராசியில அதுவும் 11 ல இருக்குன்னு  ஒரு பேச்சுக்கு வச்சுக்குவம்.அந்த எட்டுல லக்னாதிபதியும் அடக்கம்.

லக்னாதிபதியோட 6,8,12 அதிபதிகள் சேர்ந்தா என்ன ஆகும்? இந்திரஜித் சத்ரு ரோக ருண உபாதைகளோட ,இலங்கை கஜானாவை காலி பண்ணிட்டு அல்பாயுசுல போயி சேர்ந்திருப்பான். பீலா விட்டாலும் அதுல ஒரு லாஜிக் இருக்கனுமோல்லியோ?

ராகு கேதுக்களை பற்றி இன்னம் மோசமான கதை இருக்கு. இவிக ராட்சஸாளாம். விஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து மேருமலையை தாங்கி  பாற்கடலை கடைய வச்சுட்டு  மோகினியா வந்து தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் சர்வ் பண்ணும் போது ராமர் கோவில்ல ரெண்டாந்தடவை சுண்டல் வாங்கறாப்ல மேற்படி ராட்சஸாள் வாங்கிட்டாளாம்.ஒருத்தரு வாய் வழியா குடிக்க கழுத்தை வெட்டிட்டாய்ங்களாம். கழுத்துக்கு மேல அலைவ்.

இன்னொருத்தர் "புறக்கடை"வழியா உள்ளாற ஏத்திட்டாராம். அதனால இடுப்புக்கு கீழே அலைவ்.  கேட்கவே மு.கூ தனமா ..மன்னிக்கனும் கூ.மு  தனமா இல்லை?  ஆனால் இப்படிப்பட்ட கதைகள் இன்னம் செலாவணியில இருக்கத்தான் செய்யுது.

இதெல்லாம் ஒரு பக்கம்னா ஸ்ரீ ராமர் ஜாதகம்னு ஒன்னை போட்டு கடுப்பேத்தறாய்ங்க. விட்டா பர்த் சர்ட்டிஃபிக்கேட்டே கொடுத்துருவாய்ங்க போல. சரி ஒழியட்டும் அப்படி ஒரு ஆதர்ச புருசனோட ஜாதகம்னு ஒன்னை ரிலீஸ் பண்றதுக்கு மிந்தி அந்த ஜாதகத்துல உள்ள கிரகஸ்திதிகளை ஒரு க்ளான்ஸாச்சும் பார்க்கனுமில்லியா?

அதை பார்த்தா உருப்படாத ஜாதகம்னு தோனுதே தவிர ராமனோட வீட்டு வேலைக்காரன் ஜாதகமா இருக்குமோங்கற சந்தேகம் கூட வரமாட்டேங்குது.

ஆக ஜோதிடம் குறித்த புனைகதைகளை நம்பாதிங்க. ஜோதிடம் வேறு -ஜோதிடம் தொடர்பான கதைகள் வேறு.  அலார்ட்டாயிக்கோங்க.



Thursday, November 1, 2012

அலிகளின் தேசம்

அண்ணே வணக்கம்ணே !
முக நூல்ங்கறதே வேஸ்ட் ஆஃப் டைம்ங்கற ஃபீலிங் வெளியாட்களுக்கு மட்டுமில்லை. முக நூலை பாவிப்பவர்களுக்கும் இருக்கு.

முக நூலும் ஒரு உலகம் தேன். வெளி உலகத்துல என்னெல்லாம் இருக்கோ அதெல்லாமே முக நூல்லயும் இருக்கு. ஆப்ஷன் ஈஸ் அவர்ஸ்.

நமுக்கு எது தேவையோ அதுவரைக்கும் பாவிச்சுட்டு அம்பேல் ஆயிரவேண்டியதுதேன். நிற்க. சமீப காலத்துல எங்க முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாம 9 வருசம் குப்பை கொட்டியாச்சு.ஒய்.எஸ்.ஆர் ஆட்சி காலம் ஓவர். இப்பம் உள்ள கிரண் ரோசய்யாவை நெல்லவராக்கறதே லட்சியம்னு செயல்பட்டுக்கிட்டிருக்காரு.

இப்பம் கூட நாம கீர் அப் பண்ணலின்னா தாளி 3 ஆமிடம் கியாரண்டின்னுட்டு ஒவ்வொரு பிரிவு மக்களையும் கவர திட்டம் போட்டு ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருக்காரு. எதையும் சனம் நம்பறதாயில்லை. போதாக்குறைக்கு தன் ஆட்சிய தானே கியாபகப்படுத்தி காபரா படுத்திக்கிட்டு வேற இருக்காரு.

ஆமா இங்கன சந்திரபாபு ஏன் வந்தாரு? ஆங் .. இந்திய ஜனத்தொகையில 50 சதம் யூத்தாம். அதனால இந்தியாவுக்கு செமர்த்தியான எதிர்காலம் இருக்காம். அப்படீன்னு பாபு சொன்னாருங்கோ..

நம்ம பரசுராம் சார் முக நூல்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தாரு. அதை படிச்சதுலருந்து ரெம்ப டர்ராயிட்டன். இந்த 45  வயசுக்கே சனத்து  மேல நம்பிக்கை நசிஞ்சு போச்சுங்கறது வேற கதை.

எங்கெங்கு காணினும் சக்தியடான்னு  பாரதியார் பாடினாரு.ஆனால் இன்னைக்கு எங்கெங்கு காணினும் சகதியடான்னு தேன் பாடத்தோனுது. எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்குன்னு புலம்ப வேண்டியதா இருக்கு.

மவனுங்க கியாஸ் சிலிண்டர் மேட்டர்ல கூட அல்ப்பம்ங்க போல விளையாடியிருக்கானுவ. அட உடல் ஊனமுற்றவுகளுக்கு ட்ரை சைக்கிள் தந்தோம்னு பொய்க்கணக்கு எளுதியிருக்கானுவ. பெரிய மனிதர்கள் தான் அப்படின்னா சின்ன மனிதர்கள் அதுக்கு மேல.

ரேஷன் கார்டுல போலி.  கியாஸ் கனெக்சன்ல போலி. வீட்டுமனை? ஊஹூம்.. ஒருத்தனுக்கும் சுயமரியாதையே கிடையாது. சரி ஓழியட்டும் பரசுராம் சார் முக நூல்ல என்னத்தை ஷேர் பண்ணிட்டாரு..மேட்டருங்க வாங்கங்கறிங்க. அப்படித்தானே..வந்தே உட்டேன்.

இந்தியாவின் மக்கள் தொகை: 110 கோடி:

பாரதி முப்பது கோடி முகமுடையாள்னு எளுதினாரு. அப்போ 60 கோடி கைகள் இருந்திருக்கு. இப்பம்? 110X2 =220 கைகள். ஆனால் இந்த கைகள்ள எத்தீனி "உழைக்கும் கை ..உருவாக்கும் கை"ன்னு பார்த்தா வாழ்க்கையே வெறுத்து போகுது.

மொதல்ல குவான்டிட்டிய குறைக்கனும். அப்பத்தேன் குவாலிட்டி அதிகரிக்கும்.சினிமாக்காரன்ல எவனுக்கெல்லாம் ரெப்புட்டேஷன் இருக்கோ -ஃபாலோயிங் இருக்கோ அவன் கிட்டே வருமான வரியை வசூலிக்கிறதை நிப்பாட்டிட்டு கு.க பிரச்சாரத்துக்கு உபயோகிக்கனும்.குடும்ப நலத்துறைக்கு கு.க பிரச்சார மேட்டருக்கு ஒதுக்கற பணத்தை எல்லாம் மடை மாற்றி ஒரு ஸ்பெசல் ட்ரைவ் கண்டக்ட் பண்ணனும்.

வாராந்தர கு.க பிரச்சாரம்+  கேம்புகளுக்கு கு.பட்சம் ரஜினி,கமலாச்சும் வரனும்.அதிக பட்சம் வடிவேலு. ஒரு குழந்தை பிறந்து 25 வயசு வரை அரசுமானியத்தை எல்லாம் எக்ஸாஸ்ட் பண்ணி உருப்படாம போனா அரசுக்கு என்ன நஷ்டமோ அந்த தொகையை கு.க செய்துக்கற  நபருக்கு கொடுத்து ஒழிச்சுரலாம் நஷ்டமே இல்லை.

அரசாங்கம் தன் வெட்டி வேலைகளை எல்லாம் நிப்பாட்டிட்டு ஆந்திராவுல ஒய்.எஸ்.ஆர் ஒரு லட்சம் கோடியில அணைகள் கட்ட ஆரம்பிச்சதை போல நதிகளை இணைக்கும் பணியை போர்க்கால அடிப்படையில துவக்கிரனும்.

மானாவாரியா கெட்ட காரியம் செய்து - சகட்டு மேனிக்கு பெத்துப்போடற மக்கள் வாழும் நாட்டை பற்றிய ப்திவுக்கு   அலிகளின் தேசம்னு தலைப்பு வச்சிருக்கியே ராசான்னு கேப்பிக சொல்றேன்.

வாழறதே உருவாக்கத்தேன். இதுல வாரிசுகளை உருவாக்கிறது ரெம்ப சப்பை மேட்டரு. உண்மையிலயே உருவாக்கனும்னா  உழைக்கனும்.உழைக்கும் நிலையில் இல்லாத மக்கள் நிறைந்த தேசத்தை அலிகளின் தேசம்னுதேன் சொல்லோனம்.


9 கோடி ஓய்வு பெற்றவர்கள் :
இவிகள்ள ரெண்டு கேட்டகிரி.ஒன்னு சரியான வாழ்க்கைய வாழ்ந்து பாசிட்டிவ் வைப்ரேஷன்ஸை ஸ்ப்ரெட் பண்ணியபடி ஆதர்சமா வாழ்ந்துக்கிட்டிருக்கிறவுங்க .ரெண்டாவது .. தங்களோட செக்யூரிட்டிக்கு பென்ஷன் இருக்குன்னு சாடிஸ்டா மாறிப்போனவுக. இதுல மொத கேட்டகிரிய கொண்டு  ரெண்டாவது கேட்டகிரிக்கு உரிய கவுன்சிலிங் கொடுத்து தேச புனர் நிர்மாணத்துக்கு இந்த ரெண்டு கேட்டகிரியையும் நதிகளை இணைக்கும் பணியில் உபயோகிச்சுக்கனும்.

30 கோடி மாநில அரசு பணியாளர்கள்:
என்னைக்கேட்டா சோலார் ,காற்றிலிருந்து மின்சாரம் இத்யாதி மூலம் பவர் கட்டை இல்லாம பண்ணீட்டு அரசு நிர்வாகத்தை கணிணி மயமாக்கிரனும்.  இ கவர்னென்ஸ் கொண்டு வந்து   குறைஞ்ச பட்சம் 50 சதவீதம் ஊழியர்களை நதிகளை இணைக்கும் பணியில் உபயோகிச்சுக்கனும்.

17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்:

இதுலயும் பாதி வெட்டி. 50 சதவீதம் ஊழியர்களை நதிகளை இணைக்கும் பணியில் உபயோகிச்சுக்கனும்.

1 கோடி IT ஆளுங்க:
நதி நீர் இணைப்புக்கு தேவைப்படும் காசு பணத்துக்கு மத்திய அரசு பாண்டுகள் வெளியிடலாம்.  இவிக வெளி நாட்ல இருந்தாலும் சரி ,உள் நாட்ல இருந்தாலும் சரி  இவிகளோட வருமானத்துல 50 சதவீதத்தை  மேற்படி பாண்ட்ஸ்ல இன்வெஸ்ட் பண்ணியே ஆகனும்னு சட்டம் கொண்டு வரலாம்.

இந்தியாவில் இருக்கிறவுகளை கணிணிமயம் மற்றும் இ கவர்னென்ஸுக்கு உபயோகிச்சுக்கலாம்.

25 கோடி பள்ளில படிப்பவர்கள்:
படிப்புன்னா இன்னைக்கும் மனப்பாடம்ங்கற நினைப்புத்தான் இருக்கு. தகவல் தொழில் நுட்ப புரட்சிக்கு பிறகு மனப்பாடம்ங்கறதே தேவையில்லாத மேட்டர் ஆயிருச்சு. மாணவர்களை ஜஸ்ட் ஒரு ரூ.15+10 (ரைட்டிங் சார்ஜுங்ணா) மதிப்புள்ள சி.டியா மாத்தி மார்க்கெட்ல விட்டுர்ர டுபாகூர் வேலையெல்லாம் இனி கூடாது.

முதல்வர் தனிப்பிரிவுக்கு நாம அனுப்பிய யோசனைகளில்  சோலார் பவர் மேட்டரை சுட்டு அறிக்கையா வெளி வந்த  கதை தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அதுலருந்து ரெண்டு யோசனைகளை இங்கே தந்தே ஆகனும்.


//பள்ளிகள்,கல்லூரிகள் அனைத்தும் டைம் ஷேர் முறையில் வேலை செய்யவேண்டும். வேலை நேரமல்லாத நேரத்தில் தனியார் அங்குள்ள இன்ஃப்ரா ஸ்ட் ரக்சரை வாடகை செலுத்தி பயன் படுத்திக்கொள்ள வழிவகை செய்யவேண்டும். (அதிக பட்ச காஷன் டெப்பாசிட்/ பேங்க் கியாரண்டி வசூலித்துக்கொண்டு)

8.அதற்கு முன்பாக பள்ளிகள்/கல்லூரிகளின்   அமைப்பை பொருத்து காலை 6.30 முதல் மதியம் 2.30 வரை போதிய சூரிய வெளிச்சம், காற்று வரும்படி ஆல்ட்டர் செய்யவேண்டும். ஷாபிங்க் காம்ப்ளெக்ஸ், மரம் நடுதல் , காற்றாலை அமைத்தல், சோலார் பவர் யூனிட் ஸ்தாபித்தல் இத்யாதி மார்கங்கள் மூலம் கூடுதல் வருவாய்க்கு வழி செய்யவேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் கூடுதல் தளம் (ஸ்டேர்) அமைக்கலாம். அது ஆடும் பல்லாயிருந்தால் இடித்து தள்ளி புதிய கட்டிடமே கட்டலாம். BOT முறையில் ( Build-Operate-Transfer) புதிய கட்டிடம் கட்டுவதாயின் அண்டர் கிரவுண்டில் பார்க்கிங் ஏற்பாடு செய்யலாம். இந்த ஒப்பந்தம் டைம் பவுண்டடாக இருக்கவேண்டும். காலம் தவறினால் (புயல் மழை தவிர்த்து இதர காரணங்களால் ஒப்பந்த காரரின் சொத்து ஜப்தி செய்யப்படவேண்டும்)//

மேற்படி ப்ராசஸ்ல பெற்றோர் சங்கம் மட்டுமல்லாது மாணவர்களும் டைரக்டா இன்டராக்ட் ஆகறதுக்கு வழி செய்யனும்.

ஒன் டு ஃபைவ் க்ளாஸஸ் கட் பண்ணா நாறீரும்.அதனால அப்பர் ப்ரைமரி ஸ்டடீஸ்லருந்து - இஞ்சினீரிங் இத்யாதி வரை எல்லாம் பள்ளி,கல்லூரி,பல்கலை கழகத்தையும் மூடித்தொலைச்சுட்டு மேற்படி ப்ராசஸை முழு வீச்சில் துவக்கலாம். இடைக்காலத்தில் உலக அளவில் உள்ள க்ல்வியாளர்களை வரவழைச்சு புதிய பாடதிட்டங்களை,போதனா முறைகளை  வகுக்கலாம்.

பையன் படிப்பை முடிச்சு வெளிய வர்ரச்ச சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருக்கனும்.வாழ்க்கை மேக்கப் இல்லாத நடிகை முகம் மாதிரி பயமுறுத்திரப்படாது.

இன்னம் 4 கேட்டகிரி வெற்று மனிதர்கள் இருக்காய்ங்க.அவிகளை என்ன பண்றதுன்னு அடுத்த பதிவுல சொல்றேன்.

டேட்டா உபயம்: முக நூலில் பரசுராம்

பிரபல கதாநாயகன் வீட்டின் மேல் பிராமண சங்கத்தினர் தாக்குதல்

அண்ணே வணக்கம்ணே ! தெலுங்கு சினிமா உலக பிரமுகர் மோகன் பாபுவின் வீட்டின் மீது ஆந்திர பிராமண சங்கத்தினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். மோகன் பாபுவின் மகன்  விஷ்ணு இவர் கதா நாயகராக நடித்து ,தயாரித்து வெளியிட்ட "தேனிகைனா ரெடி" ( எதுக்கும் தயார்) படத்தில் பிராமணர்கள் இழிவு படுத்தியுள்ளதாக பிராமண சங்கத்தினர் குற்றம் சாட்டி மோகன் பாபு  வீட்டின் மீது  தாக்குதல் நடத்தினர்.

பிராமண சங்கத்தினர் கண்ணாடிகளை உடைத்து வெறியாட்டம் போட்டனர். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் தடிகளுடன் வெளி வந்து பிராமண சங்கத்தினரை விரட்டி அடித்தனர்.

இந்நிலையில் மோகன் பாபு தரப்பினரும் -பிராமண சங்கத்தரப்பினரும் பரஸ்பரம் மனித உரிமைகள் கமிஷனிடம் புகார் அளித்துள்ளர்.

நிருபர்களிடம் பேசிய விஷ்ணு "சினிமாக்காரர்கள் என்றால் இளப்பமா? இன்னொரு தடவை தாக்குதல் சம்பவம் நடந்தால் நகரத்தி நடமாட முடியாது என்று எச்சரித்தார்"

"கேமரா மேன் கங்கதோ ராம்பாபு " படத்தில் தெலுங்கானா போராட்டம் இழிவு படுத்தப்பட்டதாக அதன் கதா நாயகன் பவன் கல்யாண் ,மற்றும் இயக்குனர் அலுவலகம் தாக்கப்பட்டது தெரிந்திருக்கலாம்.

Friday, October 26, 2012

அம்மன் சத நாமாவளி இலவச டவுன்லோட்

அண்ணே வணக்கம்ணே !
ஸ்ரீ அம்மன் சத நாமாவளி கையடக்க பதிப்பு ஆட்டோமேஷன்ல நடக்கிற வேலைல்லாம் வேகமா நடந்துருச்சு. மேன்யுவலா நடக்கவேண்டிய வேலை நடந்துக்கிட்டிருக்கு.லேபர் பிராப்ளமுங்கோ..அதுக்குள்ள நம்ம வினோத்ஜீ ஒரு ஐடியா கொடுத்தார். மின் நூலா கொடுங்க. புத்தகம் ரெடியான பிறகு ப்ரின்ட் எடிஷன் கொடுங்கன்னாரு.

இந்த மின் நூல் உங்கள் சொந்த உபயோகத்துக்கு மட்டுமில்லை. நீங்க விரும்பினா ப்ரிண்ட் அவுட் எடுத்து ஜெராக்ஸ் போட்டு உங்க சர்க்கிள்/ ஏரியா மொத்தம்  இலவசமா வினியோகிக்கலாம். அல்லது ப்ரிண்ட் எடிஷன் இலவச பிரதி வேணம்னா கூரியர்/தபால் கட்டணம் அனுப்பி  நம்ம கிட்டருந்து தருவிச்சும் வினியோகிக்கலாம்.

மின் நூலை டவுன் லோட் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்..(2.45 எம்.பி தான்)

Wednesday, October 17, 2012

இலவசம்: அம்மன் சத நாமாவளி (பக்கம்:32)

அண்ணே வணக்கம்ணே !

லோக்கல்ல நாம விளம்பரமே உள்ளடக்கமா ஒரு மல்ட்டி கலர் பத்திரிக்கை நடத்திக்கிட்டு வர்ரது தெரியும். இண்டியன் பொலிட்டிக்கல் க்ளோசப்.  இந்த பத்திரிக்கை சார்பில் தான் அம்மன் சத நாமாவளி (பக்கம்:32) கையடக்க நூலை இலவசமா தரப்போறோம்.

ஆக்சுவலா இதை தெலுங்குல மட்டும் பண்றாப்ல தான் ப்ளான். இந்த மேட்டரை ரொட்டீனா ஃபேஸ்புக்ல அப்டேட் செய்ய நண்பர் திரு.விமலாதித்தன்  என்ன ஏதுன்னு விஜாரிக்காம ரூ.1000 ஐ அனுப்பி இது நம்ம கான்ட் ரிப்யூஷனுன்னு சொல்ட்டாரு.

அவருக்கு ஜிலேபி ஜிலேபியா தெலுங்குல அடிச்சு சத நாமாவளியை கூரியர்ல அனுப்பினால் நல்லாருக்காது.

அதனால துணிஞ்சு இறங்கிட்டன். தமிழ்லயும் போடறோம். இதை படிக்கிற நல்ல உள்ளங்கள் கை கொடுத்தாலும் சரி -கொடுக்கலின்னாலும் சரி உள்ளூர் தமிழ் சனங்க கிட்டே கை ஏந்தியாச்சும் போட்டுரலாம்னு முடிவு பண்ணியிருக்கன்.

ஏன்னா  இந்த பத்திரிக்கை சார்பில் 3 வருசமா மெகா சைஸ்ல மல்ட்டி கலர் காலண்டர் எல்லாம் போட்டு இலவசமா வினியோகம் செய்துக்கிட்டிருக்கம்.( பட்ஜெட்: ரூ13x5000=ரூ.65 ஆயிரம் ரூவா)

செலவு? எல்லாம் ஸ்பான்சர் ஷிப்புதேன்.முக்கியமா சித்தூர் எம்.எல்.ஏ சி.கே.பாபுவோட ஆதரவாளர்கள் பக்கம் பக்கமா ஸ்பான்சர் பண்ணிருவாய்ங்க. காலியிடத்துக்கு கமர்ஷியல்ஸ் பீராய்ஞ்சு போட்டுக்கிட்டு வர்ரம்.

கூகுல்ல போயி அம்மன் சத நாமாவளின்னு அடிச்சா பொல பொலன்னு கொட்டுது. இல்லேங்கலை.ஆனால் அதை ப்ரிண்ட் அவுட் எடுத்து அதை பாக்கெட் சைஸு  புஸ்தவமாக்கி வச்சுக்கிட்டா தான் படிக்க வசதி -பாக்கெட்ல வச்சுக்க வசதியாயிருக்கும்.
( அவசரத்துக்கு ஃபோன் நெம்பர் இத்யாதி கூட கிறுக்கிக்கலாம்).

இதை செய்யனும்னா மேட்டரை வோர்ட்ல காப்பி பண்ணி காலம் வச்சு சினிமா ரீல் மாதிரி வெட்டிக்கனும். ஒரு ஏ3 பேப்பரை எட்டா மடிச்சு -மடிப்புக்குள்ளாறல்லாம் போயி 1,2,3ன்னு பக்கம் போட்டுக்கனும். அதுக்கு ஒரு அட்டை தேடனும். அட்டைக்குள்ள வச்சு ஸ்டாப்பில் அடிச்சு ஓரம்லாம் வெட்டனும்.  இதுக்கு எப்படியும் ஒரு இருவத்தஞ்சு  ரூவாயாச்சும் செலவாயிரும். சுருக்கமா சொன்னா ஆன்லைன்ல உள்ளதை பாக்கெட் புக் ஆக்க  உங்களுக்கு புக் மேக்கிங் தெரியனும். காயிதமா வச்சுக்கலாம்னா நிக்காது.லாமினேட் பண்ணனும்.அதுக்கும் இந்த செலவு தான் ஆகும்.

இதுவே நீங்க இந்த நெல்ல காரியத்துல பங்கெடுக்க உங்களால முடிஞ்ச தொகைய நம்ம அக்கவுண்ட்ல போட்டிங்கனு வைங்க . பள பள வண்ண அட்டையோட பக்கா பாக்கெட் புக் - நீங்க கேட்கிறதை பொருத்து கொரியர் சார்ஜ் ரூ.25 க்குள்ள விழற எடைக்கு புஸ்தவம் அனுப்பி வைப்போம். ( அக்கவுண்ட்ல காசு போட்ட கையோட உங்க தபால் முகவரியை மறக்காம மெயிலுக்கு அனுப்புங்க -மெயில் swamy7867@gmail.com.

இதையடுத்து வர்ர ரெண்டு பாரா லேகியம் விக்கிறவன் கணக்கா இருந்தா அதுக்கு நாம பொறுப்பு கடியாது.

மொத மொதலா ஒரு தசராவுக்கு சித்தூர் துர்கா ஸ்வீட்ஸ் உரிமையாளரை கன்வின்ஸ் பண்ணி அவரோட ஸ்பான்சர் ஷிப்ல டம்மி சைஸுல இந்த சத நாமாவளிய போட்டோம்.
அடுத்த தசராவுக்கு டாப் டு பாட்டம் ப்ளாக் அண்ட் வைட்ல கையடக்க பதிப்பா போட்டு பேப்பர்+ புக் கொடுத்தம்.

இந்த வேலைய (சத நாமாவளி பிரசுரம்)ஆரம்பிச்சப்போ நாம ப்ரெட் ஹன்டர். 3 மாசத்துக்கொரு தரம் வேலைய விட்டுர்ரது - துட்டு துக்காணி இல்லாத வேலைய வருச கணக்கா செய்யறது( ஆந்திரபிரபா) - 3 மாசத்துக்கொருக்கா வீடு மாத்திர்ரது (வாடகை -அதுவும் ரூ500 க்குள்ளத்தேன் -ஒழுங்கா கொடுக்கலின்னா எவன் விடுவான் பாஸு) .
இன்னைக்கு புரவலர் -நாளைக்கு இரவலர்னு வாழ்ந்துக்கிட்டிருந்தம்.

ஆனால் இன்னைக்கு? ஒரு தனி மனிதன்ங்கற ரேஞ்சு போயி -ஒரு நிறுவனமா வளர்ந்து நிக்கிறோம். இத்தனைக்கும் இந்த ப்ராசஸ்ல நாம கொடுத்தது வெறும் உடல் உழைப்பைத்தான். (காசெல்லாம் தயிருதேன்)

இந்த அனுபவத்தை படிச்சுட்டு இடையில ஒரு லண்டன் நண்பர்  ஒரு ஆயிரம் பிரதி அச்சிட சொன்னாரு (பிரச்சினை: திருமண தாமதம் - இன்னைக்கு கண்ணாலமாகி ஆண்குழந்தை)

இந்த அனுபவத்தை கேட்டுட்டு தலைமறைவா இருந்த  தெலுங்கு தயாரிப்பாளர் ஒருத்தர் ஒரு ஆயிரம் பிரதி போட சொன்னாரு. இன்னைக்கு அவிக நிலம் பக்கத்துல மந்திரியோட ஃபேக்டரி வர்ரதால  ஜாதி அபிமானத்துல வங்கிகடனை பைசல் பண்ணி கையிலயும் லம்பா ஒரு அமவுண்டு கொடுத்தாய்ங்க. இப்பம் தலீவரு பழக்கூழ் ,ரியல் எஸ்டேட்டுன்னு புகுந்து விளையாடறாரு..

லேகியம் வித்தது போதும் மேட்டருக்கு வந்துர்ரன். இந்த சத நாமாவளி நம்ம சொந்த தொகுப்பு. கிபி.2000 லருந்து இதைத்தேன் ஜெபிச்சிக்கிட்டிருக்கம் .ஆல்ஃபபடிக்கலா அரேஞ்ச் பண்ணியிருக்கம்.மண்டையில சீக்கிரமா ஏறும்.

அம்மன் சத நாமாவளியின் சக்தி:
(இது கையடக்க பதிப்புல வெளி வர்ரதால நம்ம ஸ்லாங்கை முடிஞ்ச மட்டும் குறைச்சிருக்கன்)

ஸ்ரீகிருஷ்ணர் தம் மீது விழுந்த வீண்பழியை  துடைக்க - ஸ்யமந்தகமணியை மீட்டு வர ஜாம்பவானின் குகைக்குள் நுழைந்தார் . குகை கதவா பெரிய பாறையால் மூடப்பட்டுவிட்டது. உள்ளிருந்து ரத்தம் ஆறாய் பெருகி ஓடிவருகிறது. அவருடன் சென்று பாதுகாப்புக்காக வெளியே  நின்றவர்கள் மூலம் தகவல் துவாரகையை சேர்ந்தது .

பலராமர் உள்ளிட்டோர் என்னவோ ஏதோ என்று பீதியுற்றனர்.   கிருஷ்ணர் நலமாக திரும்பி வர யாகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஜோதிடர்களை வரவழைத்து யாகத்துக்கு  தேதி குறிக்க சொன்னார்கள். அவர்களோ யாகம் நடத்தை தோதான நாள் கிட்டத்தில் இல்லை என்று சொல்லிவிட்டனர். அந்த சமயம்  நாரதர் அங்கே வந்தார்.

"மற்ற தெய்வங்களை -தேவதைகளுக்கான பூஜைகள் -யாகங்கள் நடத்தத்தான் முகூர்த்தங்கள்  நிர்ணயித்தாக வேண்டும். நியம நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். உயிர்களுக்கெல்லாம் தாயாகிய அந்த ஜகன் மாதாவை வழிபட -பூஜிக்க நியமங்கள் ஏதும் பின்பற்ற தேவையில்லை.  குழந்தை தாயை அழைக்க எந்த விதமான நிபந்தனைகளும் கிடையாது. எனவே புவனேசிக்கான யாகங்களை துவங்குங்கள்" என்றார். அவ்வாறே யாகங்கள் நடந்தன. கண்ணனும் பத்திரமாக திரும்பி வந்தான்.

பெயரும் -பெயருக்குடையோரும்: ( நாமா - நாமி)

பெயருக்கும் அப்பெயரை கொண்ட நபருக்கும் இடையில் எந்த வித்யாசமும் இருக்காது. ஒரு மனிதரின் பெயர் அம்மனிதரின் மூளையிலான  ஒவ்வொரு  நியூரானையும் -உடலிலான ஒவ்வொரு செல்லையும் ஒரே மைக்ரோ செகண்டில் உசுப்பி விட வல்லது ( பஜார்ல ஆருனா திடீர்னு  உங்க பேரை சொல்லி கூவினா   என்னாகுது?) 

மனிதர்களின் பெயர்கள் மட்டுமே  அவர்களை பிரதி நிதித்வ படுத்தி விடுகின்றன. மனிதன் தன்னை தன் பெயராகவே உணர்கிறான். ஆக பெயர் -பெயருக்குடையவர் ரெண்டும் சமம் என்றே தோன்றுகிறது.

சாதாரண மனிதர்களின் பெயர்களுக்கே இந்த பவர். ஆஃப்டர் ஆல் 60 -70 வருசம் கேட்ட பெயரே மனிதனை உசுப்புகிறது என்றால் "அவள்" இல்லாத யுகமே இல்லை. ஒவ்வொரு யுகத்தின் முடிவுலும் உலகை படைப்பதாய் சொல்லப்படும்  பிரம்மனையே  அவள் தான் ரீ ப்ளேஸ் செய்து புதிய பிரம்மனை படைக்கிறாள்.  அவளது பெயர்கள் ஒலிக்காத யுகம் இல்லை .கல்ப்பம் இல்லை. என்னா மாதிரி எஃபெக்ட் இருக்கும்னு ரோசிங்க.

சில நேரம் பெயர் -பெயருக்குடையவரையே ஜெயிச்சுருது. ( ராமாங்கற பேர்  -ராமனை செயிச்ச வரலாறு தெரியும்ல)  அதனாலதேன் ஆன்மீகத்துல -அதுவும் பக்தியோகத்துல  நாமாவளிக்கு  இவ்ளோ முக்கியத்துவம். ஆக இந்த   நாமாவளியில் வரும் அம்மனின் 100  பெயர்களும்  சாட்சாத் அம்மன்களே !ஆகவே புரிந்தோ புரியாமலோ படிச்சுட்டு வந்தா கூட ஒவ்வொரு " நாமாவும்" ஆத்தா போலவே  அருள் புரிய வல்லது.


பஞ்ச தசாக்ஷரி:

இந்த சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.  *பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!  ப‌ஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள்.

சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.

மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போல‌வும் வேலை செய்கின்ற‌ன‌. (உ.ம்) ச‌ர‌ஸ்வ‌தி /இதில் முத‌ல் எழுத்து ச‌/இதோடு "ம்" சேரும்போது அது ச‌ம் எனும் ச‌ர‌ஸ்வ‌தி பீஜ‌மாகிற‌து.

எழுத்தோடு"ம்" சேரும்போது என்ன‌ந‌ட‌க்கிறது?

வாயும்,ஆச‌ன‌மும் ஒரே குழாயின் ஆர‌ம்ப‌ம் ம‌ற்றும் முடிவாக‌உள்ள‌ன‌. ஆச‌ன‌த்துக்கு ச‌ற்று மேல் பாக‌த்தில் மூலாதார‌ச‌க்க‌ர‌ம் இருக்கிற‌து. "ம்" என்று உச்ச‌ரிக்கும் போது குழாயின் ஆர‌ம்ப‌மான‌வாய் மூடுகிற‌து,இந்த வினைக்கு எதிர்வினை அந்த‌குழாயின் முடிவான‌ஆச‌ன‌ப‌குதியில் நிக‌ழ்கிற‌து. அந்த‌ செய‌லின் விளைவாக‌ ஏற்ப‌டும் ஆழ்ந்த அதிர்வுக‌ள் அதற்கு 2 அங்குலங்கள் மேலே இருக்கும்  மூலாதார‌ச‌க்க‌ர‌த்தை அடைகின்ற‌ன‌.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் ந‌க‌ரும‌ல்லவா? அது போல் மூலாதார சக்கரத்தில் பாம்பு வ‌டிவ‌த்தில் உற‌க்க‌ நிலையில் உள்ள‌தாய் யோக‌நூல்க‌ள் குறிப்பிடும் குண்டலி என்ற  யோக‌ ச‌க்தியில் சலனம் ஏற்படும். ஜெபத்தை தொடர தொடர மேல் நோக்கி நகர ஆரம்பிக்குது.

ஒரு பிறவி முழுக்க பஞ்சாக்ஷரி ஜெபித்தால் தான்  அடுத்த பிறவியில் ராம நாமம் ஜெபிக்கும் தகுதி ஏற்படுமாம். இரண்டாவது பிறவி முழுக்க ராம நாமம் ஜெபித்தால் தான் சாக்தேயம். கொஞ்சம் போல வில்பவர் கூட்டிக்கிட்டு இந்த சத நாமாவளியை படிங்க. மூன்று பிறவிகளின் ப்ராசஸ் ஒரே பிறவியில முடியவும் வாய்ப்பிருக்கு.

எச்சரிக்கை:
இந்த நாமாவளியில சர்வ ஸ்வதந்த்ராயை நமஹான்னு ஒரு நாமா வருது. அப்பம் பாக்கெட் புக் எல்லாம் போடாத காலம். காயிதம் எங்கனயோ மிஸ் ஆய்ருச்சு. மேட்டர் இன்னாடா ஆச்சுன்னா ரூ.945 மாச சம்பளத்துக்கு இலை எடுக்கவேண்டியதாயிருச்சுங்கோ..

மறுபடி ஞாபகத்துலருந்து மீட்டு எடுத்த பிறவுதேன் "தினத்தந்தி" "வலையுலக வெற்றி"  "ஆன்லைன் ஜோதிட ஆலோசனை"யில காசு புரள்றதுல்லாம் நடந்துக்கிட்டிருக்கு.

இப்படி ஒவ்வொரு நாமாவுக்கு ஒவ்வொரு உபகதை இருக்கு. நேரம் கிடைக்கிறப்ப எல்லாத்தையும் சொல்லாம விடுவனா?
முக்கிய தகவல்:
கான்ட்ரிப்யூட் பண்ணாதவிகளுக்கு புஸ்தவம் இல்லையான்னு கேப்பிக சொல்றேன். கூரியர் சார்ஜுக்கு ரூ.25 மட்டும் அனுப்பினா போதும். அந்த சார்ஜுல எத்தனை பிரதி அனுப்ப முடியுமோ அத்தனை பிரதி அனுப்புவம்ல.
காசோடயே விலாசத்தையும் அனுப்பிருங்ணா. இப்பமே மண்டை காயுது..

கான்ட்ரிப்யூட்  செய்ய விரும்புபவர்க்ள்/ இலவச பிரதிகளுக்கு கூரியர் சார்ஜ் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு க்ளிக் செய்யவும்.




Tuesday, October 9, 2012

வதேராவுக்கு ப்ரியாங்காவ மட்டும் தான் விட்டிருக்கு

அண்ணே வணக்கம்ணே !
நமுக்கு 45 வயசாகுது. எமர்ஜென்சி காலத்துலருந்து நியூஸ் பேப்பர்ஸ் ஃபாலோ பண்றோம். எத்தனை எத்தனையோ ஊழலைபத்தி எல்லாம் படிச்சிருக்கம். ஆனால் சோனியாவோட மருமகன் வதேராவோட ஊழலை படிச்சதும் நம்ம மைண்ட்ல வந்த கேள்வி ஒன்னு தான்"இவனுக்கு ப்ரியாங்காவ மட்டும் தானே விட்டிருக்கு. பாரதமாதாவையே விட்டுட்டமா?"

ஹரியானால அரசு மருத்துவமனைக்கு சொந்தமான நிலம் 200+ ஏக்கர்ஸ் இருக்கு. அதுல தொழிற்பேட்டை அமைக்க டி.எல்.எஃப் ங்கற நிறுவனத்துக்கு அந்த நிலத்தை ஒதுக்கறாய்ங்க. டி.எல்.எஃப்ல நம்மாளுக்கு 50 சதவீத ஷேர் இருக்கு. நிலம் ஒதுக்கினதுமே டி.எல்.எஃப் நிறுவனம் 50 சதவீத ஷேரை வதேராவுக்கு பணம் கொடுத்து தானே வாங்கிக்குது.

என்னங்கடா இது? ஏதோ ஊழல்னா 5 பர்சன்ட் 10 பர்சன்ட் வாங்குவாய்ங்க. இப்பம் அது கூட ஏறிப்போயிட்டாப்ல இருக்கு. அம்பது பர்சென்ட்.

அம்பது பர்சென்டை இந்த தாயோளிக்கு கொடுத்துட்டு அப்பாறம் அந்த நிறுவனம் என்னாத்த தொழிற்பேட்டை அமைச்சு -என்னாத்த தொழிலை வளர்க்கிறது.

இதுல ஹரியான அரசாங்கமே ப்ரோக்கர் வேலை செய்திருக்கு. மக்கள் வரிப்பணத்துல நடக்கிற அரசாங்கம் ஆருக்கு சர்வீஸ் பண்ணுது பார்த்திங்களா?

சோனியாம்மா தயவு செய்து உங்க மாப்பிள்ளைக்கு ஞா படுத்துங்க. அவருக்கு ப்ரியாங்காவ மட்டும் தான் கொடுத்திருக்கு..

Saturday, October 6, 2012

பட்டையை கிளப்பும் புதிய தொழில் வாய்ப்புகள்

அண்ணே வணக்கம்ணே !

மக்கள் சந்தை டாட் காம் - தொழிற்களம் வலை தளத்தில் பணம் பணம் பணம் தொடர்பதிவு போட்டுக்கிட்டிருக்கோம் .( ஹி ஹி நாலஞ்சு நாளா  நோ அப்டேஷன்  )

அதுல மாறி வரும் குடும்ப, சமூக ,  அரசியல்,பொருளாதார  நிலவரங்களை உத்து கவனிச்சா புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறியலாம்னு போற போக்குல குறிப்பிட்டிருந்தேன்.

ஊருக்குத்தான் உபதேசமா  நீ கவனிக்கலியான்னு கேப்பிக.கவனிச்சேன். கவனிச்சதுல புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறிஞ்சிருக்கேன். அதுல சிலதை நாமே துவக்கி செய்யலாம்னும் திட்டம் இருக்கு.

அந்த பட்டியலை இங்கே தரேன். கூடவே எந்த தொழில் எந்த கிரக காரகம்னும் குறிப்பிட்டிருக்கேன். உங்க ஜாதகத்துல குறிப்பிட்ட கிரகம் பெட்டர் பொசிஷன்ல இருந்தா நீங்களும் கலக்கலாம்.

ஓகேவா உடுங்க ஜூட்டு..